புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ராகு, கேது, குருப்பெயர்ச்சி பலன்கள் - 2009
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
மேஷம்:
இந்த விரோதி ஆண்டு, கார்த்திகை மாதம், 1-ஆம் தேதி (17.11.2009) செவ்வாய்க்கிழமை, பகல் 11.57 மணிக்கு ராகு - கேது பகவான்கள் உங்களின் தொழில் சுக ஸ்தான ராசிகளான மகர, கடக ராசிகளிலிருந்து முறையே தனுசு, மிதுன ராசிகளுக்கு திருக்கணிதப் பஞ்சாங்கப்படி பெயர்ச்சி ஆனார்கள். குருபகவான் இந்த ஆண்டு, மார்கழி மாதம், 4ஆம் தேதி (19-12-2009), சனிக்கிழமை நள்ளிரவு 12.16 மணிக்கு (விடிந்தால் ஞாயிற்றுக்கிழமை) மகர ராசியிலிருந்து தொழில் ஸ்தானம் மற்றும் லாப ஸ்தானமான கும்ப ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார்.
இந்தக் காலகட்டத்தில் உங்களின் இளைய சகோதர, சகோதரிகளுக்கு நன்மைகள் உண்டாகும். அவர்களால் எதிர்பார்த்த உதவிகளையும் பெறுவீர்கள். அரசாங்கத்திடமிருந்து சலுகைகள் கிடைக்கும். குடும்பத்தினருடன் தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவீர்கள். அதேநேரம் பாக்ய ஸ்தானத்தில் அமர்ந்துள்ள ராகு பகவான் கோதண்ட ராகுவாக அமர்ந்திருப்பதால் தந்தை, தந்தை வழிப்பாட்டன் ஆகியோருடன் உள்ள உறவில் சிறு தொய்வுகள் ஏற்படும். ஆனாலும் பெரிய பாதிப்புகள் உண்டாகாது. இருந்த போதிலும் அவர்களுக்காகச் சிறிது செலவு செய்ய நேரிடும். அவர்களை நீங்கள் அனுசரித்துச் செல்வது அவசியமாகும்.
மற்றபடி வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். சமுதாயத்தில் உயர்ந்தோரின் நட்பு கிடைக்கும். வெளிநாடுகளுக்குச் செல்ல விசா எதிர்பார்த்திருப்பவர்கள், அது கிடைத்து வெளிநாடுகளுக்குச் சென்று வருவார்கள். விரோதமாக நடந்து கொண்டிருந்த நண்பர்களிடம் இணக்கம் உருவாகும். புதிய முயற்சிகளில் நம்பிக்கையுடன் ஈடுபடுவீர்கள். குருபகவான் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இக்காலத்தில் செய்தொழிலில் நஷ்டங்கள் மாறி, லாபம் கொட்டும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். அவர்கள் வெளியூர், வெளிநாட்டில் சென்று படிக்க வாய்ப்பு கிடைக்கும். பெரியோர்கள் தேடி வந்து உதவிகளைச் செய்வார்கள். வழக்குகளில் சிக்கி வருவாய் வராமல் இருந்த சொத்துக்களில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும். நிரந்தர வருவாய் வரத் தொடங்கும். சுயமதிப்பை விட்டுக் கொடுக்காத வாழ்க்கை அமையும். நற்பெயர் உண்டாகும்.
உத்யோகஸ்தர்களுக்கு விரும்பிய இடமாற்றமும், பதவி உயர்வும் கிடைக்கும். அலுவலக வேலைகளில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள். சக ஊழியர்களும் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். நீண்ட நாட்களாக நீங்கள் விருப்பப்பட்ட பொறுப்பு, உங்கள் கைக்கு வந்து சேரும். வருமானம் நன்றாகவே இருக்கும். அதேசமயம் ஆரம்பத்தில் மேலதிகாரிகள் சிறிது கெடுபிடியாக நடந்துகொண்டு, உங்களை சஞ்சலத்தில் ஆழ்த்துவர். ஆனாலும் அவற்றை நீங்கள் தைரியத்துடன் சமாளிப்பீர்கள். புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கு அலுவலகத்தின் அனுமதியுடன் கடன் கிடைக்கும். இந்தக் காலகட்டத்தில் அனைத்து விஷயங்களிலும் மகிழ்ச்சி ஏற்படும்.
வியாபாரிகளுக்கு எல்லாத் தடைகளும் நீங்கும். கொடுக்கல், வாங்கலில் லாபம் பெருகும். புதிய தொழில் நுட்பங்களைக் கற்பீர்கள். அவற்றை வியாபாரத்தில் புகுத்தி நன்மையடைவீர்கள். உங்கள் நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளிடம் கலந்தாலோசித்து, தக்க முடிவுகளை எடுப்பீர்கள். கடன்கள் குறையும். வியாபாரத்தில் முதலீடு செய்வதற்குத் தடை இராது. மறைமுகப் போட்டி, பொறாமைகள் குறையும். வியாபாரிகள் வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.
விவசாயிகளுக்கு இந்தக் காலகட்டத்தில் மகசூல் நன்றாக இருக்கும். சந்தையில் நிலவும் போட்டிகளுக்குத் தக்கவாறு விலைகளை நிர்ணயித்து விற்பனை செய்வீர்கள். வருமானம் சீராக இருக்கும். கால்நடைகள் மூலமாகவும் வருமானத்தைப் பெருக்க முயற்சி செய்வீர்கள். குறிப்பாகப் பால் வியாபாரம் செய்பவர்கள், எதிர்பார்த்த லாபத்தைப் பெறுவார்கள். சக விவசாயிகள் உங்களை மெச்சத்தக்க வகையில் பணியாற்றுவீர்கள். சிறிய முதலீட்டில் நிலங்களை வாங்கலாம். அதே சமயம், வயல் வரப்புச் சண்டைகளில் சுமுகமாக நடந்து கொள்ளுங்கள்.
இந்த ராசி அரசியல்வாதிகள் வீண் விரோதத்தை வளர்த்துக்கொள்ள வேண்டாம். நேரிடையாக மனம் விட்டுப் பேசி, மனஸ்தாபத்தைப் போக்கிக் கொள்ளுங்கள். மற்றபடி எடுத்த காரியங்கள் அனைத்தையும் எளிதில் வெற்றியுடன் முடித்துவிடுவீர்கள். இதன் மூலம் கட்சி மேலிடத்தின் கவனத்தை ஈர்ப்பீர்கள்; முக்கியப் பொறுப்புகளும் கிடைக்கும். அதேநேரம் கட்சி மேலிடத்திற்குத் தகவல் அனுப்பும்போது எச்சரிக்கையுடன் இருக்கவும். தொண்டர்களை அரவணைத்துச் சென்று, அவர்களின் ஆதரவைத் தக்க வைத்துக் கொள்ளுங்கள். பேச்சில் ஆணவம் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
கலைத்துறையினர் புகழும், பாராட்டும் பெறுவீர்கள். ரசிகர்களின் ஆதரவுடன் பயணங்களைச் செய்து, உங்களின் திறமையை வெளிப்படுத்துவீர்கள். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். சக கலைஞர்களும் உங்களுக்குப் பக்க பலமாக இருப்பார்கள். நன்கு வருமானம் வந்து கொண்டிருக்கும். துறையில் உங்களின் முக்கிய இலக்கை எட்டுவீர்கள். தொழிலில் நன்றாகச் செயல்பட்டு, கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். அதேசமயம் இந்தக் காலகட்டத்தில் கடுமையாக உழைத்தால்தான் நற்பலன்களை அடைய முடியும்.
பெண்மணிகளைப் பொறுத்தவரை குடும்பத்தில் ஒற்றுமையைக் காண்பீர்கள். உற்றார், உறவினர்களை அரவணைத்துச் சென்று, உங்கள் செல்வாக்கை உயர்த்திக்கொள்வீர்கள். கணவர் உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவார். இல்லத்திற்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். பண வரவும் சிறப்பாக இருக்கும். புதிய வீடு வாங்கும் யோகமும் உண்டாகும். வீடு மாற்றம் செய்ய நினைப்பவர்கள் அதை இக்காலகட்டத்தில் செய்யலாம்.
மாணவமணிகள் தங்களின் விடாமுயற்சியால் வெற்றி அடைவீர்கள். உங்களின் விருப்பத்தை பூர்த்தி செய்ய, பெற்றோர்கள் முன் வருவார்கள். ஆசிரியர்களும் உங்களுக்கு அனுகூலமாக இருப்பார்கள். வெளி விளையாட்டுகளில் ஈடுபட்டு வெற்றியடைவீர்கள். அதேநேரம் நண்பர்களிடம் விட்டுக் கொடுத்து, எச்சரிக்கையுடன் பழகுங்கள்.
பரிகாரம்: விநாயகரை முடிந்த போதெல்லாம் அருகம்புல் மாலை சாற்றி வழிபட, நலன்கள் கூடும்.
மேஷம்:
இந்த விரோதி ஆண்டு, கார்த்திகை மாதம், 1-ஆம் தேதி (17.11.2009) செவ்வாய்க்கிழமை, பகல் 11.57 மணிக்கு ராகு - கேது பகவான்கள் உங்களின் தொழில் சுக ஸ்தான ராசிகளான மகர, கடக ராசிகளிலிருந்து முறையே தனுசு, மிதுன ராசிகளுக்கு திருக்கணிதப் பஞ்சாங்கப்படி பெயர்ச்சி ஆனார்கள். குருபகவான் இந்த ஆண்டு, மார்கழி மாதம், 4ஆம் தேதி (19-12-2009), சனிக்கிழமை நள்ளிரவு 12.16 மணிக்கு (விடிந்தால் ஞாயிற்றுக்கிழமை) மகர ராசியிலிருந்து தொழில் ஸ்தானம் மற்றும் லாப ஸ்தானமான கும்ப ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார்.
இந்தக் காலகட்டத்தில் உங்களின் இளைய சகோதர, சகோதரிகளுக்கு நன்மைகள் உண்டாகும். அவர்களால் எதிர்பார்த்த உதவிகளையும் பெறுவீர்கள். அரசாங்கத்திடமிருந்து சலுகைகள் கிடைக்கும். குடும்பத்தினருடன் தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவீர்கள். அதேநேரம் பாக்ய ஸ்தானத்தில் அமர்ந்துள்ள ராகு பகவான் கோதண்ட ராகுவாக அமர்ந்திருப்பதால் தந்தை, தந்தை வழிப்பாட்டன் ஆகியோருடன் உள்ள உறவில் சிறு தொய்வுகள் ஏற்படும். ஆனாலும் பெரிய பாதிப்புகள் உண்டாகாது. இருந்த போதிலும் அவர்களுக்காகச் சிறிது செலவு செய்ய நேரிடும். அவர்களை நீங்கள் அனுசரித்துச் செல்வது அவசியமாகும்.
மற்றபடி வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். சமுதாயத்தில் உயர்ந்தோரின் நட்பு கிடைக்கும். வெளிநாடுகளுக்குச் செல்ல விசா எதிர்பார்த்திருப்பவர்கள், அது கிடைத்து வெளிநாடுகளுக்குச் சென்று வருவார்கள். விரோதமாக நடந்து கொண்டிருந்த நண்பர்களிடம் இணக்கம் உருவாகும். புதிய முயற்சிகளில் நம்பிக்கையுடன் ஈடுபடுவீர்கள். குருபகவான் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இக்காலத்தில் செய்தொழிலில் நஷ்டங்கள் மாறி, லாபம் கொட்டும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். அவர்கள் வெளியூர், வெளிநாட்டில் சென்று படிக்க வாய்ப்பு கிடைக்கும். பெரியோர்கள் தேடி வந்து உதவிகளைச் செய்வார்கள். வழக்குகளில் சிக்கி வருவாய் வராமல் இருந்த சொத்துக்களில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும். நிரந்தர வருவாய் வரத் தொடங்கும். சுயமதிப்பை விட்டுக் கொடுக்காத வாழ்க்கை அமையும். நற்பெயர் உண்டாகும்.
உத்யோகஸ்தர்களுக்கு விரும்பிய இடமாற்றமும், பதவி உயர்வும் கிடைக்கும். அலுவலக வேலைகளில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள். சக ஊழியர்களும் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். நீண்ட நாட்களாக நீங்கள் விருப்பப்பட்ட பொறுப்பு, உங்கள் கைக்கு வந்து சேரும். வருமானம் நன்றாகவே இருக்கும். அதேசமயம் ஆரம்பத்தில் மேலதிகாரிகள் சிறிது கெடுபிடியாக நடந்துகொண்டு, உங்களை சஞ்சலத்தில் ஆழ்த்துவர். ஆனாலும் அவற்றை நீங்கள் தைரியத்துடன் சமாளிப்பீர்கள். புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கு அலுவலகத்தின் அனுமதியுடன் கடன் கிடைக்கும். இந்தக் காலகட்டத்தில் அனைத்து விஷயங்களிலும் மகிழ்ச்சி ஏற்படும்.
வியாபாரிகளுக்கு எல்லாத் தடைகளும் நீங்கும். கொடுக்கல், வாங்கலில் லாபம் பெருகும். புதிய தொழில் நுட்பங்களைக் கற்பீர்கள். அவற்றை வியாபாரத்தில் புகுத்தி நன்மையடைவீர்கள். உங்கள் நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளிடம் கலந்தாலோசித்து, தக்க முடிவுகளை எடுப்பீர்கள். கடன்கள் குறையும். வியாபாரத்தில் முதலீடு செய்வதற்குத் தடை இராது. மறைமுகப் போட்டி, பொறாமைகள் குறையும். வியாபாரிகள் வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.
விவசாயிகளுக்கு இந்தக் காலகட்டத்தில் மகசூல் நன்றாக இருக்கும். சந்தையில் நிலவும் போட்டிகளுக்குத் தக்கவாறு விலைகளை நிர்ணயித்து விற்பனை செய்வீர்கள். வருமானம் சீராக இருக்கும். கால்நடைகள் மூலமாகவும் வருமானத்தைப் பெருக்க முயற்சி செய்வீர்கள். குறிப்பாகப் பால் வியாபாரம் செய்பவர்கள், எதிர்பார்த்த லாபத்தைப் பெறுவார்கள். சக விவசாயிகள் உங்களை மெச்சத்தக்க வகையில் பணியாற்றுவீர்கள். சிறிய முதலீட்டில் நிலங்களை வாங்கலாம். அதே சமயம், வயல் வரப்புச் சண்டைகளில் சுமுகமாக நடந்து கொள்ளுங்கள்.
இந்த ராசி அரசியல்வாதிகள் வீண் விரோதத்தை வளர்த்துக்கொள்ள வேண்டாம். நேரிடையாக மனம் விட்டுப் பேசி, மனஸ்தாபத்தைப் போக்கிக் கொள்ளுங்கள். மற்றபடி எடுத்த காரியங்கள் அனைத்தையும் எளிதில் வெற்றியுடன் முடித்துவிடுவீர்கள். இதன் மூலம் கட்சி மேலிடத்தின் கவனத்தை ஈர்ப்பீர்கள்; முக்கியப் பொறுப்புகளும் கிடைக்கும். அதேநேரம் கட்சி மேலிடத்திற்குத் தகவல் அனுப்பும்போது எச்சரிக்கையுடன் இருக்கவும். தொண்டர்களை அரவணைத்துச் சென்று, அவர்களின் ஆதரவைத் தக்க வைத்துக் கொள்ளுங்கள். பேச்சில் ஆணவம் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
கலைத்துறையினர் புகழும், பாராட்டும் பெறுவீர்கள். ரசிகர்களின் ஆதரவுடன் பயணங்களைச் செய்து, உங்களின் திறமையை வெளிப்படுத்துவீர்கள். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். சக கலைஞர்களும் உங்களுக்குப் பக்க பலமாக இருப்பார்கள். நன்கு வருமானம் வந்து கொண்டிருக்கும். துறையில் உங்களின் முக்கிய இலக்கை எட்டுவீர்கள். தொழிலில் நன்றாகச் செயல்பட்டு, கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். அதேசமயம் இந்தக் காலகட்டத்தில் கடுமையாக உழைத்தால்தான் நற்பலன்களை அடைய முடியும்.
பெண்மணிகளைப் பொறுத்தவரை குடும்பத்தில் ஒற்றுமையைக் காண்பீர்கள். உற்றார், உறவினர்களை அரவணைத்துச் சென்று, உங்கள் செல்வாக்கை உயர்த்திக்கொள்வீர்கள். கணவர் உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவார். இல்லத்திற்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். பண வரவும் சிறப்பாக இருக்கும். புதிய வீடு வாங்கும் யோகமும் உண்டாகும். வீடு மாற்றம் செய்ய நினைப்பவர்கள் அதை இக்காலகட்டத்தில் செய்யலாம்.
மாணவமணிகள் தங்களின் விடாமுயற்சியால் வெற்றி அடைவீர்கள். உங்களின் விருப்பத்தை பூர்த்தி செய்ய, பெற்றோர்கள் முன் வருவார்கள். ஆசிரியர்களும் உங்களுக்கு அனுகூலமாக இருப்பார்கள். வெளி விளையாட்டுகளில் ஈடுபட்டு வெற்றியடைவீர்கள். அதேநேரம் நண்பர்களிடம் விட்டுக் கொடுத்து, எச்சரிக்கையுடன் பழகுங்கள்.
பரிகாரம்: விநாயகரை முடிந்த போதெல்லாம் அருகம்புல் மாலை சாற்றி வழிபட, நலன்கள் கூடும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கும்பம்:
இந்த விரோதி ஆண்டு கார்த்திகை மாதம் 1ஆம் தேதி (17.11.2009) செவ்வாய்க்கிழமை பகல் 11.57 மணிக்கு ராகு-கேது பகவான்கள், உங்கள் விரய (பன்னிரண்டு) மற்றும் சஷ்டம (ஆறு) ராசிகளான மகர, கடக ராசிகளிலிருந்து உங்களின் லாப (பதினொன்று), பூர்வபுண்ய(ஐந்து) ராசிகளான தனுசு, மிதுன ராசிகளுக்கு திருக்கணிதப் பஞ்சாங்கப்படி பெயர்ச்சியானார்கள். குரு பகவான் உங்களின் விரய (பன்னிரெண்டு) ராசியான மகர ராசியிலிருந்து, ஜன்ம (ஒன்று) ராசியான கும்ப ராசிக்கு இந்த மார்கழி மாதம் 4ஆம் தேதி (19.11.2009) சனிக்கிழமை நள்ளிரவு 12.16 மணிக்குப் பெயர்ச்சியாகிறார்.
லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகு பகவான் கோதண்ட ராகுவாக இருப்பதால், மூத்த சகோதர-சகோதரிகளின் உதவியால் பெரிய அளவில் லாபங்களைக் காண்பீர்கள். ஒன்றுக்கு மேற்பட்ட துறைகளில் ஈடுபடும் வாய்ப்பு உண்டாகும். வெளிநாட்டு சம்பந்தத்துடன் தொழிலில் அபிவிருத்தி உண்டாகும். புதிய வீடு, வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். குழந்தைகள் வெளியூர், வெளிநாடு சென்று படிக்க வாய்ப்பு தேடி வரும். ஏழை எளியவர்களுக்கு உங்களால் முடிந்த அளவுக்கு உதவி செய்து மகிழ்வீர்கள். தேக ஆரோக்கியத்தில் குறைவு ஏற்படாது. மனதும், உடலும் உற்சாகத்துடன் இருக்கும்.
பூர்வபுண்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது பகவான், உங்கள் வேலைகளைச் சரியான இலக்கில் செல்ல வைப்பார். பெரியோர்களின் அறிவுரைகளைக் கேட்டு நடப்பீர்கள். உங்களின் தனித்திறமை வெளிப்படும். செல்வந்தர்களின் சேர்க்கையினால் வாழ்க்கை வசதிகள் கூடும். குடும்பத்தில் ஒற்றுமையைக் காண்பீர்கள். உங்கள் தொழிலில் உண்மை, நீதி போன்றவைகளைக் கடைபிடித்து நற்பெயர் வாங்குவீர்கள். அதேநேரம் உங்களை தூற்றுபவர்களைக் கண்டுகொள்ள மாட்டீர்கள். இந்தக் காலத்தில் குரு பகவான் ஜன்ம ராசியில் அமர்ந்திருப்பதால் உங்கள் சிந்தனைகளில் தெளிவுகள் பிறக்கும். பல புண்ணிய காரியங்களைச் செய்வீர்கள். உங்கள் கீழ் வேலை செய்பவர்கள் நன்றி பாராட்டுவார்கள். உங்கள் தோற்றத்தில் பொலிவு கூடும். தந்தைக்குப் புகழ், பெயர் உண்டாகும். மதியூகத்தால் அறிஞர்களிடம் விவாதித்து, நற்பெயர் வாங்குவீர்கள். அதேநேரம் பணம் சம்பாதிக்க அலைந்து திரிய பிரியப்பட மாட்டீர்கள். எனினும் இருக்கும் இடத்திற்கே பணம் வந்து சேரும்!
உத்யோகஸ்தர்களுக்கு வேலைகளில் பளு அதிகரித்தாலும், உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கும். சாதுர்யமாகச் செயல்படுவீர்கள். கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். அதேநேரம் உங்கள் பொறுப்புகளை எவரிடமும் ஒப்படைக்க வேண்டாம். மேலும் எதையும் ஒரு முறைக்கு இரு முறை யோசித்துச் செயல்பட வேண்டும். மற்றபடி அலுவலக ரீதியான பயணங்களால் நன்மைகள் உண்டாகும். மனத் தளர்ச்சிக்கு இடம் தராமல் நடந்து கொண்டால் பிரச்சினையில்லாமல் தப்பிக்கலாம்.
வியாபாரிகள் புதிய முயற்சிகளை மேற்கொண்டு, விற்பனையைப் பெருக்குவார்கள். சிறு தடைகள் ஏற்படினும் அவற்றை நன்கு சமாளித்துவிடுவீர்கள். உங்களைத் தேடி, வர வேண்டிய பணம் வந்து சேரும். மன உறுதியுடன் செயல்பட்டு வருமானத்தை மேலும் பெருக்குவீர்கள். இந்தக் காலகட்டத்தில் பழைய கடன்களை அடைத்துவிடுவீர்கள். அதேநேரம் நன்கு யோசித்து புதிய முதலீடுகளைச் செய்யவும். கூட்டாளிகளிடமும் வெளிப்படையாகப் பழக வேண்டாம். மேலும் வாகனங்களைப் பழுது பார்க்க செலவு செய்ய நேரிடும்.
விவசாயிகளுக்கு மகசூல் மந்தமாக இருக்கும். அதே சமயம் விவசாயப் பணிகள் சுமுகமாக முடியும். தானிய விற்பனையின் மூலம், எதிர்பார்த்த வருமானத்தைப் பெறுவீர்கள். அறுவடை விஷயமாக ஆழ்ந்து திட்டம் தீட்டுவீர்கள். மற்றபடி புதிய நிலம் குத்தகைக்கு வந்து சேரும். நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள்.
அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை பொதுச் சேவையில் அனுகூலமான திருப்பங்களைக் காண்பீர்கள். உங்கள் சொல்லுக்கு நல்ல வரவேற்பு இருக்கும். தொண்டர்களின் ஆதரவு கிடைக்கும். உங்கள் வளர்ச்சிக்கு முட்டுக் கட்டை போட்ட எதிரிகள் விலகிவிடுவார்கள். கட்சி மேலிடத்தின் கரிசனப் பார்வை உங்கள் மீது விழுந்து, புதிய பணிகளைச் செய்வீர்கள். அதேநேரம் எதையும் தீர ஆலோசித்த பின்பே செயல்படுத்தவும்.
கலைத்துறையினருக்கு துறையில் பிரச்சினைகள் தோன்றினாலும், முடிவு சாதகமாகவே இருக்கும். உங்களின் சீரிய முயற்சிகள் வெற்றிக்கு வழி வகுக்கும். விருந்து, கேளிக்கைகளில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். புது ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள்.
அதேசமயம் புதிய திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். மற்றபடி நண்பர்களால் நன்மை அடைவீர்கள். பயணங்கள் மூலம் பண வரவையும் எதிர்பார்க்கலாம்.
பெண்மணிகள் கணவரிடம் ஒற்றுமையோடு பழகுவார்கள். எனினும் இக்கால கட்டத்தில் காரணமில்லாமல் மன அமைதி குறைய வாய்ப்புள்ளது. அதனால் அனைவரிடமும் விட்டுக் கொடுத்து நடந்து கொள்ளவும். பணவரவு நன்றாக இருந்தாலும் தொடர்ந்து அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சில்லறைச் செலவுகள் உண்டாகிக் கொண்டே இருக்கும். தேக ஆரோக்கியத்தில் பெரிய பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை. குழந்தைகளால் சந்தோஷம் அடைவீர்கள்.
மாணவமணிகள் படிப்பில் முன்னேற்றம் அடைவார்கள். சிரத்தையாகப் படித்து நல்ல மதிப்பெண்களை அள்ளுவீர்கள். விளையாட்டில் ஈடுபாட்டைக் குறைத்துக் கொள்ளுங்கள். மனதை ஒரு நிலைப்படுத்தும் தியானங்களைச் செய்து, உங்கள் ஆற்றலைக் கூட்டிக் கொள்ளவும். தேவையில்லாத பிரச்சினைகளில் சிக்கிக் கொள்ளாமல் சாமர்த்தியமாக நடந்து கொள்ளவும்.
பரிகாரம் : பிரதி புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பெருமாளையும், தாயாரையும் வழிபட்டு வாருங்கள்; கஷ்டங்கள் நீங்கும். முடிந்தால் விஷ்ணு சஹஸ்ர நாம ஸ்தோத்திரத்தைப் படித்து வர அல்லது கேஸட்டில் கேட்டும் வர, சிரமங்கள் குறையும்.
இந்த விரோதி ஆண்டு கார்த்திகை மாதம் 1ஆம் தேதி (17.11.2009) செவ்வாய்க்கிழமை பகல் 11.57 மணிக்கு ராகு-கேது பகவான்கள், உங்கள் விரய (பன்னிரண்டு) மற்றும் சஷ்டம (ஆறு) ராசிகளான மகர, கடக ராசிகளிலிருந்து உங்களின் லாப (பதினொன்று), பூர்வபுண்ய(ஐந்து) ராசிகளான தனுசு, மிதுன ராசிகளுக்கு திருக்கணிதப் பஞ்சாங்கப்படி பெயர்ச்சியானார்கள். குரு பகவான் உங்களின் விரய (பன்னிரெண்டு) ராசியான மகர ராசியிலிருந்து, ஜன்ம (ஒன்று) ராசியான கும்ப ராசிக்கு இந்த மார்கழி மாதம் 4ஆம் தேதி (19.11.2009) சனிக்கிழமை நள்ளிரவு 12.16 மணிக்குப் பெயர்ச்சியாகிறார்.
லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகு பகவான் கோதண்ட ராகுவாக இருப்பதால், மூத்த சகோதர-சகோதரிகளின் உதவியால் பெரிய அளவில் லாபங்களைக் காண்பீர்கள். ஒன்றுக்கு மேற்பட்ட துறைகளில் ஈடுபடும் வாய்ப்பு உண்டாகும். வெளிநாட்டு சம்பந்தத்துடன் தொழிலில் அபிவிருத்தி உண்டாகும். புதிய வீடு, வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். குழந்தைகள் வெளியூர், வெளிநாடு சென்று படிக்க வாய்ப்பு தேடி வரும். ஏழை எளியவர்களுக்கு உங்களால் முடிந்த அளவுக்கு உதவி செய்து மகிழ்வீர்கள். தேக ஆரோக்கியத்தில் குறைவு ஏற்படாது. மனதும், உடலும் உற்சாகத்துடன் இருக்கும்.
பூர்வபுண்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது பகவான், உங்கள் வேலைகளைச் சரியான இலக்கில் செல்ல வைப்பார். பெரியோர்களின் அறிவுரைகளைக் கேட்டு நடப்பீர்கள். உங்களின் தனித்திறமை வெளிப்படும். செல்வந்தர்களின் சேர்க்கையினால் வாழ்க்கை வசதிகள் கூடும். குடும்பத்தில் ஒற்றுமையைக் காண்பீர்கள். உங்கள் தொழிலில் உண்மை, நீதி போன்றவைகளைக் கடைபிடித்து நற்பெயர் வாங்குவீர்கள். அதேநேரம் உங்களை தூற்றுபவர்களைக் கண்டுகொள்ள மாட்டீர்கள். இந்தக் காலத்தில் குரு பகவான் ஜன்ம ராசியில் அமர்ந்திருப்பதால் உங்கள் சிந்தனைகளில் தெளிவுகள் பிறக்கும். பல புண்ணிய காரியங்களைச் செய்வீர்கள். உங்கள் கீழ் வேலை செய்பவர்கள் நன்றி பாராட்டுவார்கள். உங்கள் தோற்றத்தில் பொலிவு கூடும். தந்தைக்குப் புகழ், பெயர் உண்டாகும். மதியூகத்தால் அறிஞர்களிடம் விவாதித்து, நற்பெயர் வாங்குவீர்கள். அதேநேரம் பணம் சம்பாதிக்க அலைந்து திரிய பிரியப்பட மாட்டீர்கள். எனினும் இருக்கும் இடத்திற்கே பணம் வந்து சேரும்!
உத்யோகஸ்தர்களுக்கு வேலைகளில் பளு அதிகரித்தாலும், உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கும். சாதுர்யமாகச் செயல்படுவீர்கள். கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். அதேநேரம் உங்கள் பொறுப்புகளை எவரிடமும் ஒப்படைக்க வேண்டாம். மேலும் எதையும் ஒரு முறைக்கு இரு முறை யோசித்துச் செயல்பட வேண்டும். மற்றபடி அலுவலக ரீதியான பயணங்களால் நன்மைகள் உண்டாகும். மனத் தளர்ச்சிக்கு இடம் தராமல் நடந்து கொண்டால் பிரச்சினையில்லாமல் தப்பிக்கலாம்.
வியாபாரிகள் புதிய முயற்சிகளை மேற்கொண்டு, விற்பனையைப் பெருக்குவார்கள். சிறு தடைகள் ஏற்படினும் அவற்றை நன்கு சமாளித்துவிடுவீர்கள். உங்களைத் தேடி, வர வேண்டிய பணம் வந்து சேரும். மன உறுதியுடன் செயல்பட்டு வருமானத்தை மேலும் பெருக்குவீர்கள். இந்தக் காலகட்டத்தில் பழைய கடன்களை அடைத்துவிடுவீர்கள். அதேநேரம் நன்கு யோசித்து புதிய முதலீடுகளைச் செய்யவும். கூட்டாளிகளிடமும் வெளிப்படையாகப் பழக வேண்டாம். மேலும் வாகனங்களைப் பழுது பார்க்க செலவு செய்ய நேரிடும்.
விவசாயிகளுக்கு மகசூல் மந்தமாக இருக்கும். அதே சமயம் விவசாயப் பணிகள் சுமுகமாக முடியும். தானிய விற்பனையின் மூலம், எதிர்பார்த்த வருமானத்தைப் பெறுவீர்கள். அறுவடை விஷயமாக ஆழ்ந்து திட்டம் தீட்டுவீர்கள். மற்றபடி புதிய நிலம் குத்தகைக்கு வந்து சேரும். நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள்.
அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை பொதுச் சேவையில் அனுகூலமான திருப்பங்களைக் காண்பீர்கள். உங்கள் சொல்லுக்கு நல்ல வரவேற்பு இருக்கும். தொண்டர்களின் ஆதரவு கிடைக்கும். உங்கள் வளர்ச்சிக்கு முட்டுக் கட்டை போட்ட எதிரிகள் விலகிவிடுவார்கள். கட்சி மேலிடத்தின் கரிசனப் பார்வை உங்கள் மீது விழுந்து, புதிய பணிகளைச் செய்வீர்கள். அதேநேரம் எதையும் தீர ஆலோசித்த பின்பே செயல்படுத்தவும்.
கலைத்துறையினருக்கு துறையில் பிரச்சினைகள் தோன்றினாலும், முடிவு சாதகமாகவே இருக்கும். உங்களின் சீரிய முயற்சிகள் வெற்றிக்கு வழி வகுக்கும். விருந்து, கேளிக்கைகளில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். புது ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள்.
அதேசமயம் புதிய திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். மற்றபடி நண்பர்களால் நன்மை அடைவீர்கள். பயணங்கள் மூலம் பண வரவையும் எதிர்பார்க்கலாம்.
பெண்மணிகள் கணவரிடம் ஒற்றுமையோடு பழகுவார்கள். எனினும் இக்கால கட்டத்தில் காரணமில்லாமல் மன அமைதி குறைய வாய்ப்புள்ளது. அதனால் அனைவரிடமும் விட்டுக் கொடுத்து நடந்து கொள்ளவும். பணவரவு நன்றாக இருந்தாலும் தொடர்ந்து அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சில்லறைச் செலவுகள் உண்டாகிக் கொண்டே இருக்கும். தேக ஆரோக்கியத்தில் பெரிய பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை. குழந்தைகளால் சந்தோஷம் அடைவீர்கள்.
மாணவமணிகள் படிப்பில் முன்னேற்றம் அடைவார்கள். சிரத்தையாகப் படித்து நல்ல மதிப்பெண்களை அள்ளுவீர்கள். விளையாட்டில் ஈடுபாட்டைக் குறைத்துக் கொள்ளுங்கள். மனதை ஒரு நிலைப்படுத்தும் தியானங்களைச் செய்து, உங்கள் ஆற்றலைக் கூட்டிக் கொள்ளவும். தேவையில்லாத பிரச்சினைகளில் சிக்கிக் கொள்ளாமல் சாமர்த்தியமாக நடந்து கொள்ளவும்.
பரிகாரம் : பிரதி புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பெருமாளையும், தாயாரையும் வழிபட்டு வாருங்கள்; கஷ்டங்கள் நீங்கும். முடிந்தால் விஷ்ணு சஹஸ்ர நாம ஸ்தோத்திரத்தைப் படித்து வர அல்லது கேஸட்டில் கேட்டும் வர, சிரமங்கள் குறையும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மீனம்:
இந்த விரோதி ஆண்டு கார்த்திகை மாதம் 1ஆம் தேதி (17.11.2009) செவ்வாய்க்கிழமை பகல் 11.57 மணிக்கு ராகு-கேது பகவான்கள், உங்களின் லாப (பதினொன்று) மற்றும் பூர்வபுண்ணிய (ஐந்து) ஸ்தான ராசிகளான மகர, கடக ராசிகளிலிருந்து உங்கள் தொழில் (பத்து), சுக (நான்கு) ஸ்தான ராசிகளுக்கு திருக்கணிதப் பஞ்சாங்கப்படி பெயர்ச்சியானார்கள். இந்த ஆண்டு மார்கழி மாதம் 4ஆம் தேதி (19.11.2009) சனிக்கிழமை நள்ளிரவு 12.16 மணிக்கு குருபகவான், உங்கள் லாப (பதினொன்று) ஸ்தான ராசியிலிருந்து விரய (பன்னிரண்டு) ஸ்தான ராசிக்குப் பெயர்ச்சியாகிறார்.
ராகு பகவான் தொழில் ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால், செய்தொழிலில் அபிவிருத்திகளைக் காண்பீர்கள். நல்லவர்களின் நேசமும், நண்பர்களின் உதவியும் கிடைத்து, வெற்றிகரமாக உங்கள் காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். அரசாங்கத்திலிருந்து கெடுபிடிகள் குறையும். பூர்வீகச் சொத்து விஷயங்களில் இருந்து வந்த தடைகள் மறைந்து, சுமுகமான பாகப் பிரிவினை உண்டாகும். மேலும் வெளியில் கொடுத்த கடன்களும் திரும்பக் கைக்கு வந்து சேரும். உங்களுக்குத் தொல்லை கொடுத்தவர்களை உடனுக்குடன் மன்னித்து மறந்துவிடுவீர்கள்.
குருபகவானின் பார்வை பெற்று சுக ஸ்தானத்தில் அமர்ந்துள்ள கேது பகவான், உங்கள் வாழ்க்கையில் சுகங்களை கூட்டிக் கொடுப்பார். இதமாகப் பேசி உங்கள் காரியங்களை எளிதாக முடித்துவிடுவீர்கள். பல நாட்களாக வாட்டி வந்த உடல் உபாதைகளும், மன வருத்தங்களும் விலகிவிடும். விரோத மனப்பான்மையுடன் இருக்கும் உறவினர்களிடம் நேசக்கரம் நீட்டி இணக்கமாவீர்கள். சுற்று வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். கல்வியில் சிறப்பான அபிவிருத்தி உண்டாகும். குடும்பத்தாருடன் மகிழ்ச்சி தரும் பயணங்களை மேற்கொள்வீர்கள்.
இந்தக் காலத்தில் குரு பகவானின் சஞ்சாரத்தினால் எதிர்பார்த்த வருவாய் இல்லையென்றாலும், தேவைக்கேற்றவாறு தொடர்ந்து வந்து கொண்டிருக்கும். சுப காரியங்கள் சீரிய முயற்சிகளுக்குப் பிறகே கைகூடும். உங்கள் காரியங்களை ஒரு முறைக்கு இருமுறை யோசித்துச் செய்ய வேண்டியிருக்கும். மேலும் எவருக்கும் கேட்காமல் அறிவுரை கூற வேண்டாம். பெரியோர்களின் ஆசிகளைப் பெறுவீர்கள். கொடுத்த வாக்கை எப்பாடுபட்டேனும் காப்பாற்றிவிடுவீர்கள். வங்கிகளிடமிருந்து கடன்கள் கிடைக்கும். உடல் நலத்தைப் பேணிக் காக்க யோகா, ப்ராணாயாமம் போன்றவைகளைச் செய்வீர்கள். குடும்பத்தில் குழந்தைகள் படிப்பு, திருமணம் போன்ற காரியங்கள் நடக்கும். வழக்குகளில் வெற்றி உண்டாகும். உங்கள் சுய மரியாதையை இழக்காமல் காரியமாற்றுவீர்கள்.
உத்யோகஸ்தர்கள் அலுவலகத்தில் இருந்த கெடுபிடிகள் குறையக் காண்பார்கள். கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். அவ்வப்போது வேலையில் கூடும் பளுவை சக ஊழியர்களின் துணையோடு குறைத்துக் கொள்வீர்கள். எதிர்பார்த்த ஊதியம், விரும்பிய இடமாற்றத்தைப் பெறுவீர்கள். அதேநேரம் உங்களின் செயல்கள் எதையும், குறுக்கு வழியில் செய்ய முயல வேண்டாம்.
வியாபாரிகளுக்கு வருமானம் திருப்திகரமாக கிடைக்கும். அதோடு மேலும் வளர்ச்சி அடைவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். மக்கள் விரும்பும் பொருட்களை வியாபாரம் செய்து வருமானத்தைப் பெருக்குவீர்கள். வியாபாரத்தில் சிறு இடையூறுகள் தோன்றினாலும், பாதிப்பு எதுவும் இருக்காது. எனினும், நண்பர்களைக் கலந்தாலோசித்த பிறகே புதிய முதலீடுகளில் ஈடுபடவும். மனதில் வீண் ஆசாபாசங்களை வளர்த்துக் கொள்வதைத் தவிர்க்கவும்.
விவசாயிகள் அதிக மகசூலைக் காண்பீர்கள். புதிய சாதனங்கள் மூலம் விவசாயத்தைப் பெருக்குவீர்கள். விவசாயப் பணிகளைச் செய்து முடிப்பதில் சிறிது தாமதம் ஏற்பட்டாலும், இறுதியில் வெற்றியாகவே முடியும். கால்நடைகளால் பலன் அதிகரிக்கும். புது மாற்றுப் பயிர்களையும் உற்பத்தி செய்து லாபத்தைப் பெருக்கலாம். புதிய குத்தகைகளும் உங்களை நாடி வரும். அதே சமயம் தேவையற்ற வரப்பு விவகாரங்களில் மூக்கை நுழைக்க வேண்டாம்.
அரசியல்வாதிகளின் பொதுச் சேவையை அனைவரும் பாராட்டுவார்கள். எனினும் எதிரிகளிடம் எச்சரிக்கையுடன் இருக்கவும். தொண்டர்களின் நலனில் கூடுதல் அக்கறை செலுத்தவும். நண்பர்களால் வாழ்க்கையில் திருப்பங்களைக் காண்பீர்கள். உங்களிடம் கட்சி மேலிடம் புதிய பொறுப்புகளை வழங்கும். அவைகளை நேர்த்தியாகச் செய்து கொடுத்து பதவி உயர்வையும், பாராட்டையும் பெறுவீர்கள்.
கலைத்துறையினர் மனதிற்கினிய புதிய ஒப்பந்தங்களைச் செய்வார்கள். ரசிகர்களை உற்சாகப்படுத்தி அவர்களின் பேராதரவைப் பெறுவீர்கள். பணவரவுக்கும் குறைவு வராது. உங்கள் திறமையும் பளிச்சிடும். வெளியூர் சென்று கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சந்தோஷம் அடைவீர்கள். உங்களின் திட்டங்கள் யாவும் வெற்றி பெறும். புதிய வாகனங்களை வாங்கும் பாக்யமும் கிடைக்கும்.
பெண்மணிகள் ஆடை அணிமணிகளை வாங்கி மகிழ்வார்கள். உங்களுக்கு குடும்பத்தில் மதிப்பு உயரும். கணவரிடம் ஒற்றுமை அதிகரிக்கும். அதேநேரம் பெற்றோருக்கு உடல்நலத்தில் சிறிது பாதிப்பு ஏற்படலாம். எனினும் மனதில் இருப்பதை உறவினர்கள் மற்றும் மூத்த சகோதர-சகோதரிகளிடமும் கொட்டிவிட வேண்டாம். எவரிடமும் வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். மற்றபடி மனதிற்கினிய பயணங்களைச் செய்வீர்கள். பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பற்றி கவனம் செலுத்துவீர்கள்.
மாணவமணிகளின் கோரிக்கைகள் நிறைவேறும். நீண்டகாலத் திட்டங்களைத் தீட்டுவதற்கு இது உகந்த நேரம். படிப்பில் நாட்டம் அதிகரிக்கும். உள்ளரங்கு விளையாட்டுகளில் மட்டுமே ஈடுபடவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். யோகா, ப்ராணாயாமம், சூரிய நமஸ்காரம் ஆகியவைகளைச் செய்யவும். மற்றபடி எதையும் சிந்தித்துப் பார்த்துச் செயலாக்குவீர்கள்.
பரிகாரம் : விநாயகரையும், நந்திகேஸ்வரரையும் அருகம்புல் மாலையிட்டு வழிபட்டு வர, சிறப்புகள் தேடி வரும்.'
இந்த விரோதி ஆண்டு கார்த்திகை மாதம் 1ஆம் தேதி (17.11.2009) செவ்வாய்க்கிழமை பகல் 11.57 மணிக்கு ராகு-கேது பகவான்கள், உங்களின் லாப (பதினொன்று) மற்றும் பூர்வபுண்ணிய (ஐந்து) ஸ்தான ராசிகளான மகர, கடக ராசிகளிலிருந்து உங்கள் தொழில் (பத்து), சுக (நான்கு) ஸ்தான ராசிகளுக்கு திருக்கணிதப் பஞ்சாங்கப்படி பெயர்ச்சியானார்கள். இந்த ஆண்டு மார்கழி மாதம் 4ஆம் தேதி (19.11.2009) சனிக்கிழமை நள்ளிரவு 12.16 மணிக்கு குருபகவான், உங்கள் லாப (பதினொன்று) ஸ்தான ராசியிலிருந்து விரய (பன்னிரண்டு) ஸ்தான ராசிக்குப் பெயர்ச்சியாகிறார்.
ராகு பகவான் தொழில் ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால், செய்தொழிலில் அபிவிருத்திகளைக் காண்பீர்கள். நல்லவர்களின் நேசமும், நண்பர்களின் உதவியும் கிடைத்து, வெற்றிகரமாக உங்கள் காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். அரசாங்கத்திலிருந்து கெடுபிடிகள் குறையும். பூர்வீகச் சொத்து விஷயங்களில் இருந்து வந்த தடைகள் மறைந்து, சுமுகமான பாகப் பிரிவினை உண்டாகும். மேலும் வெளியில் கொடுத்த கடன்களும் திரும்பக் கைக்கு வந்து சேரும். உங்களுக்குத் தொல்லை கொடுத்தவர்களை உடனுக்குடன் மன்னித்து மறந்துவிடுவீர்கள்.
குருபகவானின் பார்வை பெற்று சுக ஸ்தானத்தில் அமர்ந்துள்ள கேது பகவான், உங்கள் வாழ்க்கையில் சுகங்களை கூட்டிக் கொடுப்பார். இதமாகப் பேசி உங்கள் காரியங்களை எளிதாக முடித்துவிடுவீர்கள். பல நாட்களாக வாட்டி வந்த உடல் உபாதைகளும், மன வருத்தங்களும் விலகிவிடும். விரோத மனப்பான்மையுடன் இருக்கும் உறவினர்களிடம் நேசக்கரம் நீட்டி இணக்கமாவீர்கள். சுற்று வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். கல்வியில் சிறப்பான அபிவிருத்தி உண்டாகும். குடும்பத்தாருடன் மகிழ்ச்சி தரும் பயணங்களை மேற்கொள்வீர்கள்.
இந்தக் காலத்தில் குரு பகவானின் சஞ்சாரத்தினால் எதிர்பார்த்த வருவாய் இல்லையென்றாலும், தேவைக்கேற்றவாறு தொடர்ந்து வந்து கொண்டிருக்கும். சுப காரியங்கள் சீரிய முயற்சிகளுக்குப் பிறகே கைகூடும். உங்கள் காரியங்களை ஒரு முறைக்கு இருமுறை யோசித்துச் செய்ய வேண்டியிருக்கும். மேலும் எவருக்கும் கேட்காமல் அறிவுரை கூற வேண்டாம். பெரியோர்களின் ஆசிகளைப் பெறுவீர்கள். கொடுத்த வாக்கை எப்பாடுபட்டேனும் காப்பாற்றிவிடுவீர்கள். வங்கிகளிடமிருந்து கடன்கள் கிடைக்கும். உடல் நலத்தைப் பேணிக் காக்க யோகா, ப்ராணாயாமம் போன்றவைகளைச் செய்வீர்கள். குடும்பத்தில் குழந்தைகள் படிப்பு, திருமணம் போன்ற காரியங்கள் நடக்கும். வழக்குகளில் வெற்றி உண்டாகும். உங்கள் சுய மரியாதையை இழக்காமல் காரியமாற்றுவீர்கள்.
உத்யோகஸ்தர்கள் அலுவலகத்தில் இருந்த கெடுபிடிகள் குறையக் காண்பார்கள். கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். அவ்வப்போது வேலையில் கூடும் பளுவை சக ஊழியர்களின் துணையோடு குறைத்துக் கொள்வீர்கள். எதிர்பார்த்த ஊதியம், விரும்பிய இடமாற்றத்தைப் பெறுவீர்கள். அதேநேரம் உங்களின் செயல்கள் எதையும், குறுக்கு வழியில் செய்ய முயல வேண்டாம்.
வியாபாரிகளுக்கு வருமானம் திருப்திகரமாக கிடைக்கும். அதோடு மேலும் வளர்ச்சி அடைவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். மக்கள் விரும்பும் பொருட்களை வியாபாரம் செய்து வருமானத்தைப் பெருக்குவீர்கள். வியாபாரத்தில் சிறு இடையூறுகள் தோன்றினாலும், பாதிப்பு எதுவும் இருக்காது. எனினும், நண்பர்களைக் கலந்தாலோசித்த பிறகே புதிய முதலீடுகளில் ஈடுபடவும். மனதில் வீண் ஆசாபாசங்களை வளர்த்துக் கொள்வதைத் தவிர்க்கவும்.
விவசாயிகள் அதிக மகசூலைக் காண்பீர்கள். புதிய சாதனங்கள் மூலம் விவசாயத்தைப் பெருக்குவீர்கள். விவசாயப் பணிகளைச் செய்து முடிப்பதில் சிறிது தாமதம் ஏற்பட்டாலும், இறுதியில் வெற்றியாகவே முடியும். கால்நடைகளால் பலன் அதிகரிக்கும். புது மாற்றுப் பயிர்களையும் உற்பத்தி செய்து லாபத்தைப் பெருக்கலாம். புதிய குத்தகைகளும் உங்களை நாடி வரும். அதே சமயம் தேவையற்ற வரப்பு விவகாரங்களில் மூக்கை நுழைக்க வேண்டாம்.
அரசியல்வாதிகளின் பொதுச் சேவையை அனைவரும் பாராட்டுவார்கள். எனினும் எதிரிகளிடம் எச்சரிக்கையுடன் இருக்கவும். தொண்டர்களின் நலனில் கூடுதல் அக்கறை செலுத்தவும். நண்பர்களால் வாழ்க்கையில் திருப்பங்களைக் காண்பீர்கள். உங்களிடம் கட்சி மேலிடம் புதிய பொறுப்புகளை வழங்கும். அவைகளை நேர்த்தியாகச் செய்து கொடுத்து பதவி உயர்வையும், பாராட்டையும் பெறுவீர்கள்.
கலைத்துறையினர் மனதிற்கினிய புதிய ஒப்பந்தங்களைச் செய்வார்கள். ரசிகர்களை உற்சாகப்படுத்தி அவர்களின் பேராதரவைப் பெறுவீர்கள். பணவரவுக்கும் குறைவு வராது. உங்கள் திறமையும் பளிச்சிடும். வெளியூர் சென்று கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சந்தோஷம் அடைவீர்கள். உங்களின் திட்டங்கள் யாவும் வெற்றி பெறும். புதிய வாகனங்களை வாங்கும் பாக்யமும் கிடைக்கும்.
பெண்மணிகள் ஆடை அணிமணிகளை வாங்கி மகிழ்வார்கள். உங்களுக்கு குடும்பத்தில் மதிப்பு உயரும். கணவரிடம் ஒற்றுமை அதிகரிக்கும். அதேநேரம் பெற்றோருக்கு உடல்நலத்தில் சிறிது பாதிப்பு ஏற்படலாம். எனினும் மனதில் இருப்பதை உறவினர்கள் மற்றும் மூத்த சகோதர-சகோதரிகளிடமும் கொட்டிவிட வேண்டாம். எவரிடமும் வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். மற்றபடி மனதிற்கினிய பயணங்களைச் செய்வீர்கள். பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பற்றி கவனம் செலுத்துவீர்கள்.
மாணவமணிகளின் கோரிக்கைகள் நிறைவேறும். நீண்டகாலத் திட்டங்களைத் தீட்டுவதற்கு இது உகந்த நேரம். படிப்பில் நாட்டம் அதிகரிக்கும். உள்ளரங்கு விளையாட்டுகளில் மட்டுமே ஈடுபடவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். யோகா, ப்ராணாயாமம், சூரிய நமஸ்காரம் ஆகியவைகளைச் செய்யவும். மற்றபடி எதையும் சிந்தித்துப் பார்த்துச் செயலாக்குவீர்கள்.
பரிகாரம் : விநாயகரையும், நந்திகேஸ்வரரையும் அருகம்புல் மாலையிட்டு வழிபட்டு வர, சிறப்புகள் தேடி வரும்.'
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|