புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு! Poll_c10சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு! Poll_m10சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு! Poll_c10 
2 Posts - 50%
viyasan
சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு! Poll_c10சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு! Poll_m10சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு! Poll_c10 
1 Post - 25%
வேல்முருகன் காசி
சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு! Poll_c10சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு! Poll_m10சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு! Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு! Poll_c10சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு! Poll_m10சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு! Poll_c10 
199 Posts - 41%
ayyasamy ram
சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு! Poll_c10சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு! Poll_m10சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு! Poll_c10 
192 Posts - 39%
mohamed nizamudeen
சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு! Poll_c10சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு! Poll_m10சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு! Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு! Poll_c10சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு! Poll_m10சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு! Poll_c10 
21 Posts - 4%
prajai
சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு! Poll_c10சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு! Poll_m10சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு! Poll_c10சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு! Poll_m10சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு! Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு! Poll_c10சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு! Poll_m10சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு! Poll_c10 
8 Posts - 2%
Guna.D
சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு! Poll_c10சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு! Poll_m10சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு! Poll_c10சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு! Poll_m10சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு! Poll_c10 
7 Posts - 1%
mruthun
சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு! Poll_c10சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு! Poll_m10சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Jun 18, 2018 11:51 am

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு! Be08f410


ஆயுள் காப்பீடு, வாகனக் காப்பீடு, தனிநபர் விபத்துக் காப்பீடு, மருத்துவக் காப்பீடு உள்ளிட்டவை குறித்து மக்களிடையே ஓரளவுக்கு விழிப்புணர்வு உள்ளது.
ஆனால் நாம் இருக்கும் வீடு, தொழில்புரியும் கடை, விவசாயப் பயிர்கள், கறவை மாடுகள் உள்ளிட்டவற்றையும் காப்பீடு செய்ய முடியும் என்பது பெரும்பாலானோருக்கு தெரிவதில்லை.
ஆனால், வங்கிகளில் கடன் பெற்று கட்டப்படும் வீடுகள், தொழிற்கூடங்கள், கடைகள், கறவை மாடுகள் உள்ளிட்டவற்றுக்கு வங்கிகளே காப்பீடு செய்திருக்கும். இதுகுறித்தும் எந்தளவுக்கு வாடிக்கையாளர்களுக்கு தெரிந்திருக்கும் என்பது தெரியவில்லை.
இதே போன்று, நாம் அன்றாடம் பயன்படுத்தும் வீட்டு உபயோக எரிவாயு உருளைக்கும் (சிலிண்டர்), எண்ணெய் நிறுவனங்களால் காப்பீடு செய்யப்பட்டுள்ளது குறித்து நம்மில் பெரும்பாலானோருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
தமிழகத்தில் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய 3 பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மூலம் சுமார் 2 கோடிக்கும் அதிகமான வீட்டு உபயோக சமையல் எரிவாயு உருளை நுகர்வோர் உள்ளனர்.
அண்மைக்காலமாக மத்திய அரசின் பிரதான் மந்திரி உஜ்வலா யோஜனா திட்டத்தின் கீழ் தொடர்ந்து இலவச எரிவாயு உருளைகள் வழங்கப்பட்டு வருவதால், வீட்டு உபயோக எரிவாயு நுகர்வோர் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால் எரிவாயு உருளைக்கான காப்பீடு குறித்த விழிப்புணர்வு அனைவருக்கும் சென்றடைய வேண்டியது அவசியமாகிறது.
எரிவாயு உருளைகளுக்கு எண்ணெய் நிறுவனங்களால் "எல்பிஜி விபத்து பீமா பாலிசி' எடுக்கப்பட்டுள்ளது. இந்த காப்பீட்டின் மூலம் தனிநபர் விபத்து இறப்பு, காயத்துக்கான மருத்துவச் செலவு, விபத்தால் வீட்டுச் சேதம் உள்ளிட்டவைகளுக்கு இழப்பீடு வழங்கப்படுகிறது.
ஆனால், காப்பீடு குறித்து நுகர்வோருக்கு போதிய விழிப்புணர்வு இல்லாததால், விபத்து ஏற்பட்டாலும் கூட இழப்பீடு கோரப்படாமல், அந்தத் திட்டத்தால் பயன்பெறுவோரின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.
நன்றி
தினமணி

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Jun 18, 2018 11:52 am

இதுதொடர்பாக மத்திய அரசின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் முகவர்கள் கூறியது: எரிவாயு உருளை காப்பீடுக்காக பிரீமியம் தொகை வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கப்படுவது இல்லை. இந்த காப்பீடு திட்டம் குடும்பத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் பொருந்தும். ஆனால் சில நிபந்தனைகளுக்கு உள்பட்டு இழப்பீடு வழங்கப்படுகிறது என்றனர் அவர்கள்.
இழப்பீடு வழங்கும் முறை: விபத்து நடைபெற்றால் வாடிக்கையாளர்கள் நேரடியாக காப்பீட்டு நிறுவனங்களிடம் காப்பீட்டுத் தொகை கோரிக்கையைப் பதிவு செய்ய முடியாது. எனவே, விபத்து நிகழ்ந்தால் வாடிக்கையாளர்கள் உடனடியாக விநியோகஸ்தருக்கு எழுத்துப்பூர்வமாக தகவல் தெரிவிக்க வேண்டும். அவர்கள் பிராந்திய அலுவலகத்துக்கும், பீமா விபத்து காப்பீட்டு நிறுவனத்துக்கும் தகவல் அளிப்பர். அதன்பிறகு வாடிக்கையாளர்கள் இழப்பீட்டுத் தொகை பெறுவதற்கான பணிகள் தொடங்கும்.
முதற்கட்டமாக காப்பீட்டு நிறுவனத்தின் மதிப்பீட்டாளர் சம்பவம் நடைபெற்ற இடத்துக்குச் சென்று விபத்துக்கான காரணத்தை ஆய்வு செய்வார். காப்பீட்டு நிறுவனம் சேத விவரங்களை மதிப்பிட்டு, இழப்பீட்டுத் தொகையை எண்ணெய் நிறுவனங்கள் வழியாக பாதிக்கப்பட்டோருக்கு வழங்கும். சொத்து சேதம் ஏற்பட்டால் நுகர்வோரின் பதிவு செய்யப்பட்ட கட்டடத்தில் மதிப்பீட்டாளரை கொண்டு மதிப்பீடு செய்து இழப்பீடு வழங்கப்படும்.
இழப்பீட்டுத் தொகை: விபத்தின்போது ஏற்படும் உயிரிழப்புக்கு அதிகபட்சம் ஒருவருக்கு ரூ. 6 லட்சம் வரை இழப்பீடு வழங்கப்படும். மருத்துவச் செலவாக ஒரு நபருக்கு அதிகபட்சம் ரூ.2 லட்சம் வழங்கப்படும். பாதிக்கப்படும் ஒவ்வொரு மனிதருக்கும், உடனடி நிவாரணமாக அதிகபட்சம் ரூ.25 ஆயிரம் வழங்கப்படும். உடமை சேதாரங்களுக்கு பதிவு செய்யப்பட்ட இருப்பிடத்தில் வசிக்கும் அங்கீகரிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை நிபந்தனைகளுக்கு உள்பட்டு இழப்பீடு வழங்கப்படுகிறது.
தேவையான ஆவணங்கள்: விபத்தின்போது காயங்கள் ஏற்பட்டால் மருத்துவச் செலவுகளுக்கான அசல் கட்டண ரசீதுகள், மருத்துவரின் மருந்து பரிந்துரைச் சீட்டுகள், விடுவிப்பு அட்டை, மருத்துவமனையில் தங்கி உள்நோயாளியாக சிகிச்சை பெற்றது தொடர்பான அசல் ஆவணங்கள் உள்ளிட்ட தேவையான அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
இறப்பு ஏற்பட்டால் உயிரிழந்தவரின் இறப்புச் சான்றிதழ், பிரேத பரிசோதனை அறிக்கை, காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட எப்ஐஆர் அறிக்கை உள்ளிட்ட தேவையான ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும்.
இதுதவிர, விபத்தின்போது வீடு, கட்டடம் மற்றும் வாகனங்கள் ஆகியவற்றுக்கு சேதம் ஏற்பட்டால், காப்பீட்டு நிறுவனம் சார்பில் நியமிக்கப்பட்ட மதிப்பீட்டாளர் வந்து ஆய்வு செய்து, அவரது ஆய்வறிக்கையின் அடிப்படையில், தேவையான ஆவணங்களை கொண்டு இழப்பீடு கோர முடியும்.
விழிப்புணர்வு தேவை: எரிவாயு உருளைகளுக்கு காப்பீடு உள்ளது என்பது குறித்து வாடிக்கையாளர்களிடம் எரிவாயு நிறுவனங்களின் முகவர்கள் தெளிவுபடுத்த முடிவதில்லை. காரணம் எரிவாயு உருளை வைத்திருப்போர் மத்தியில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்துவது போல இருக்கும் என அவர்கள் கருதுகின்றனர். எனவே, ஆயில் நிறுவனங்கள் தனது வாடிக்கையாளர்கள் நலனை கருத்தில் கொண்டு எடுக்கும் public liability policy குறித்து அரசுதான் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மேலும், இதுகுறித்து முகநூல், கட்செவி அஞ்சலில் வதந்திகள் பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

இழப்பீடு பெற நிபந்தனைகள்...

சம்பந்தப்பட்ட நுகர்வோரின் பதிவு செய்யப்பட்ட முகவரியில் விபத்து நடந்திருந்தால் மட்டுமே இழப்பீடு கோர முடியும்.
வீட்டுக்குப் பயன்படுத்தப்படும் எரிவாயு உருளையை வணிக ரீதியாகப் பயன்படுத்தியிருக்கக்கூடாது.
சமையல் அறை இல்லாத இடங்களில் எரிவாயு உருளையை பயன்படுத்தியிருக்கக் கூடாது.
எரிவாயு அடுப்பை எப்போதும் எரிவாயு உருளையை விட 6 இஞ்ச் அளவுக்கு உயரமாக வைத்திருக்க வேண்டும். எரிவாயு உருளையை எப்போதும் நேராகவே வைத்திருக்க வேண்டும்.
எரிவாயு அடுப்பைத் தவிர மற்ற எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்களை சமையல் அறையில் வைத்திருக்கக் கூடாது.
எரிவாயு உருளை பயன்படுத்தும் இடம் ஓலை கூரை வீடாக இருக்க கூடாது.
விபத்து நடக்கும் இடத்தில் உள்ள எரிவாயு உருளை, குறிப்பிட்ட முகவரியில், பதிவு செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். மாறாக அடுத்தவர் பெயரில் பதிவு செய்யப்பட்ட, வேறு முகவரியில் உள்ள எரிவாயு உருளையை அவசரத்துக்கு கடன் வாங்கி பயன்படுத்தியிருக்கக் கூடாது.
அடுப்பு, லைட்டர், டியூப் போன்ற உதிரி பாகங்கள் வாங்கும்போது ஐஎஸ்ஓ தரச்சான்றிதழ் பெற்றவையாக இருத்தல் வேண்டும். அவ்வாறு ஐஎஸ்ஓ தரச்சான்றிதழ் பெற்றிருந்தாலும், 2ஆண்டுகளுக்கு ஒருமுறை விநியோகஸ்தர்களிடம் கட்டணம் செலுத்தி, அதன் தரத்தை உறுதிப்படுத்தி சான்றிதழ் பெற்றுக் கொள்ள வேண்டும்.






anikuttan
anikuttan
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 09/09/2012

Postanikuttan Tue Jun 19, 2018 7:28 am

இந்த காப்பீட்டு விஷயத்தை அரசும் நிறுவனங்களும் ஏன் மறைக்கிறது ? இவர்களுக்கு ஒவ்வொரு சிலின்டரின் மீதும் இதை பற்றி எழுதிவைக்கலாமில்லையா. அதை பார்த்தாவது மக்கள் புரிந்து கொள்வார்களே . இதில் எதோ கம்பனிகளும் இழப்பீட்டு நிறுவனங்களும் ரகசிய ஒப்பந்தம் இருக்கலாம் நாங்கள் இழப்பீடு ஏதும் கோரமாட்டோம் ஆனால் நீங்கள் எங்களுக்குண்டான கமிஷனை தந்துவிடவேண்டும் என்று .எதோ நடக்கிறது இவர்களுக்குள், மக்களை ஏமாற்றுகிறார்கள் .

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Jun 19, 2018 5:11 pm

மிக நல்ல தகவல் அன்பருக்கு நன்றி.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jun 19, 2018 6:23 pm

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு! 103459460
-
விழிப்புணர்வு ஏற்பட்டால் நல்லது....

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Jun 21, 2018 8:15 pm

anikuttan wrote:இந்த காப்பீட்டு விஷயத்தை அரசும் நிறுவனங்களும் ஏன் மறைக்கிறது ? இவர்களுக்கு  ஒவ்வொரு  சிலின்டரின் மீதும் இதை பற்றி எழுதிவைக்கலாமில்லையா. அதை பார்த்தாவது மக்கள் புரிந்து கொள்வார்களே . இதில் எதோ கம்பனிகளும் இழப்பீட்டு நிறுவனங்களும்  ரகசிய ஒப்பந்தம் இருக்கலாம் நாங்கள் இழப்பீடு ஏதும் கோரமாட்டோம் ஆனால் நீங்கள் எங்களுக்குண்டான  கமிஷனை தந்துவிடவேண்டும் என்று .எதோ  நடக்கிறது  இவர்களுக்குள், மக்களை ஏமாற்றுகிறார்கள் .  
நீங்கள் கூறுவது உண்மையாக கூட இருக்கலாம்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Jun 21, 2018 8:15 pm

சிவனாசான் wrote:மிக நல்ல தகவல் அன்பருக்கு நன்றி.
நன்றி ஐயா

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Jun 21, 2018 8:16 pm

ayyasamy ram wrote:சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு! 103459460
-
விழிப்புணர்வு ஏற்பட்டால் நல்லது....
நன்றி ஐயா

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jun 21, 2018 8:36 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
anikuttan wrote:இந்த காப்பீட்டு விஷயத்தை அரசும் நிறுவனங்களும் ஏன் மறைக்கிறது ? இவர்களுக்கு  ஒவ்வொரு  சிலின்டரின் மீதும் இதை பற்றி எழுதிவைக்கலாமில்லையா. அதை பார்த்தாவது மக்கள் புரிந்து கொள்வார்களே . இதில் எதோ கம்பனிகளும் இழப்பீட்டு நிறுவனங்களும்  ரகசிய ஒப்பந்தம் இருக்கலாம் நாங்கள் இழப்பீடு ஏதும் கோரமாட்டோம் ஆனால் நீங்கள் எங்களுக்குண்டான  கமிஷனை தந்துவிடவேண்டும் என்று .எதோ  நடக்கிறது  இவர்களுக்குள், மக்களை ஏமாற்றுகிறார்கள் .  
நீங்கள் கூறுவது உண்மையாக கூட இருக்கலாம்.

anikuttan அவர்களுக்கு, உங்கள் பதிவு இருமுறை வந்துள்ளதால், பின் பதிவு ( #4 )நீக்கப்படுகிறது.
மேலும் ஒவ்வொரு சிலிண்டர் மேலும்,
எது மாதிரி விவரங்கள் எழுதவேண்டும் என்று விரும்புகிறீர்கள்?
எந்த பாஷையில் எழுதவேண்டும்.?
அங்கீகரிக்கப்பட்ட எல்லா மொழியிலுமா?
அவை எழுதுவதற்கு சிலிண்டரில் இடம் இருக்கிறதா?
தற்போது   ரசீதின் பின்பக்கம் எழுதியுள்ளதை படித்து பார்ப்பதில் கஷ்டமா?

இதில் எதோ கம்பனிகளும் இழப்பீட்டு நிறுவனங்களும்  ரகசிய ஒப்பந்தம் இருக்கலாம் நாங்கள் இழப்பீடு ஏதும் கோரமாட்டோம் ஆனால் நீங்கள் எங்களுக்குண்டான  கமிஷனை தந்துவிடவேண்டும் என்று .எதோ  நடக்கிறது  இவர்களுக்குள், மக்களை ஏமாற்றுகிறார்கள் .  
என்ற உங்கள் கூற்றை என்னால் நம்பமுடியவில்லை  
ஆனால் பழமுத்துராமலிங்கம் நம்பிவிட்டார் போலும்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Jun 22, 2018 11:38 am

T.N.Balasubramanian wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:
anikuttan wrote:இந்த காப்பீட்டு விஷயத்தை அரசும் நிறுவனங்களும் ஏன் மறைக்கிறது ? இவர்களுக்கு  ஒவ்வொரு  சிலின்டரின் மீதும் இதை பற்றி எழுதிவைக்கலாமில்லையா. அதை பார்த்தாவது மக்கள் புரிந்து கொள்வார்களே . இதில் எதோ கம்பனிகளும் இழப்பீட்டு நிறுவனங்களும்  ரகசிய ஒப்பந்தம் இருக்கலாம் நாங்கள் இழப்பீடு ஏதும் கோரமாட்டோம் ஆனால் நீங்கள் எங்களுக்குண்டான  கமிஷனை தந்துவிடவேண்டும் என்று .எதோ  நடக்கிறது  இவர்களுக்குள், மக்களை ஏமாற்றுகிறார்கள் .  
நீங்கள் கூறுவது உண்மையாக கூட இருக்கலாம்.


இதில் எதோ கம்பனிகளும் இழப்பீட்டு நிறுவனங்களும்  ரகசிய ஒப்பந்தம் இருக்கலாம் நாங்கள் இழப்பீடு ஏதும் கோரமாட்டோம் ஆனால் நீங்கள் எங்களுக்குண்டான  கமிஷனை தந்துவிடவேண்டும் என்று .எதோ  நடக்கிறது  இவர்களுக்குள், மக்களை ஏமாற்றுகிறார்கள் .  
என்ற உங்கள் கூற்றை என்னால் நம்பமுடியவில்லை  
ஆனால் பழமுத்துராமலிங்கம் நம்பிவிட்டார் போலும்.

ரமணியன்
முத்துராமலிங்கம் இப்படித்தான்யா எதையும் நம்மி விடுவான்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக