ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி

Go down

ஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி Empty ஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Jun 16, 2018 11:59 am

ஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி 0aac8810

Third party image reference
 விளம்பரங்களில், `புஸ்ஸ்ஸ்ஸ்...’ எனப் பொங்கி வரும் பூரியைப் பார்த்தாலே சாப்பிட வேண்டும் என்று நமக்குத் தோன்றும். ஆனால், அதைத் தயாரிப்பதற்குத் தேவைப்படும் எண்ணெயைப் பார்த்தால், உடல் எடை, சர்க்கரை நோய், கொழுப்புச்சத்து போன்ற பல உபாதைகள் நினைவுக்கு வந்து, `எங்களுக்குப் பூரியே வேண்டாம்’ என்று சொல்லத் தோன்றும்.

எண்ணெய்க்குப் பதிலாக தண்ணீரில் ஹெல்த்தியான பூரியைச் சுடலாம் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? நிச்சயம் முடியும். அதிலும் அந்த பூரி நம் உடல் எடையைக் குறைக்க உதவுவது, சர்க்கரைநோயைக் குணப்படுத்துவது எனப் பல நன்மைகளைச் செய்யும்’’ என்கிற சித்த மருத்துவர் இரத்தினம் சக்திவேல், தண்ணீரில் பூரி தயாரிக்கும் முறையையும் அது தரும் பலன்களையும் பட்டியலிடுகிறார்...

தேவையானவை: (நான்கு நபர்களுக்கு):

கோதுமை மாவு / ராகி மாவு / கம்பு மாவு / சத்துமாவு (ஏதேனும் ஒன்று) - 150 கிராம்

 காய்கறிச் சாறு / கீரைச் சாறு / மூலிகைச் சாறு (ஏதேனும் ஒன்று) - 50 கிராம்

 இந்துப்பு / கறுப்பு உப்பு / எலுமிச்சைச் சாறு / நெல்லிப்பொடி (ஏதேனும் ஒன்று) - தேவையான அளவு

 தேங்காய்த் துருவல் - அரை மூடி அல்லது முளைதானியப் பால் - தேவையான அளவு. 

 உலர் பழங்கள் / கரும்பு வெல்லத்தூள் / பனை வெல்லத்தூள் / தேன் / பேரீச்சை துண்டுகள் (ஏதேனும் ஒன்று) - 100 முதல் 150 கிராம் வரை (அல்லது) கூட்டு / பொரியல் / சட்னி வகை / தக்காளி குருமா (ஏதேனும் ஒன்று) - 200 கிராம்5 லிட்டர் கடாய் அல்லது அகன்ற பாத்திரம் - 1

 ஜல்லிக்கரண்டி / கண் கரண்டி - ௧
நன்றி
Dhan Shan

தொடரும்.....
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி Empty Re: ஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Jun 16, 2018 12:03 pm

மாவு பிசையும் முறை :

நம்மில் பலர் சப்பாத்தி, பூரிக்கு மாவு பிசையும்போது சிறிது சமையல் எண்ணெய் கலந்து பாலில், தண்ணீரில் கோதுமை மாவு / அல்லது மைதா மாவு போட்டு தயாரிப்பார்கள். அதற்குப் பதிலாக இங்கு நாம் காய்கறிச்சாறுகளாக வெண்பூசணிச் சாறு / கேரட் சாறு / தக்காளிச் சாறு / பசலைக்கீரைச் சாறு / வெந்தயக்கீரைச் சாறு / அரைக்கீரைச் சாறு / மணத்தக்காளிச் சாறு / பூண்டுச் சாறு / வல்லாரைச் சாறு இவற்றில் ஏதேனும் ஒன்றைக் கலந்து சிறிது நீர்விட்டு நன்றாகப் பிசையவும். அதோடு கெட்டித் தேங்காய்ப் பால் அல்லது முளைதானியப் பாலைவிட்டு பிசைந்துகொள்ளவும். 

கடல் உப்புக்குப் பதிலாக இந்துப்பு / கறுப்பு உப்பு / எலுமிச்சைச் சாறு / நெல்லிப்பொடி இவற்றில் ஏதேனும் ஒன்றைச் சேர்த்துக்கொள்வதால் சோடியத்துக்குப் பதிலாக பொட்டாசியம் கிடைக்கும்.

பிசைந்த மாவை பூரிக்கட்டையில் வட்டமாகத் தேய்க்கவேண்டும்

(மைதாவை இதனுடன் சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும்).

செய்முறை:

பொதுவாக நாம் உருட்டிய மாவை, கொதிநிலையில் இருக்கும் எண்ணெயில் அழுத்திப் பொரித்து எடுப்போம். ஆனால் எண்ணெய்க்குப் பதிலாக இங்கு நாம் தண்ணீரை உபயோகிக்கிறோம்.

5 லிட்டர் கடாய் அல்லது வாய் அகன்ற பாத்திரத்தில் 3/4 பாகம் நீர்விட்டு நன்றாகக் கொதிக்கவிட வேண்டும்.

கரண்டியில் உருட்டித் தேய்த்த மாவை வைத்து கொதிநீரில் ஜல்லிக்கரண்டியுடன் இறக்கி இரண்டு நிமிடம் நீரில் வேகவைத்து அப்படியே, கரண்டியுடன் வெளியே எடுத்துவிட வேண்டும்.

* தண்ணீர் கொதிநிலையில் இருக்கும்போது மட்டுமே மாவு வேகும்; பூரிப் பதத்துக்கு வரும்.

* கேரட் சாறு, தக்காளிச் சாறு ஆகியவற்றில் செய்தால் மாவு சிவப்பாகவும், கீரைச் சாற்றில் செய்தால் மாவு பச்சையாகவும் இருக்கும்.

* தேங்காய்த் துருவலை சமைக்காமல் பயன்படுத்துவதால், கொலஸ்ட்ரால் தொல்லையும் இல்லை.

* இதை தக்காளி தொக்கு, விதவிதமான சட்னி, கூட்டு, பொரியல் ஏதாவது ஒன்றுடன் சாப்பிடலாம். அல்லது உலர் பழங்கள், பனை வெல்லத்தூள், கரும்பு வெல்லத்தூள், பேரீச்சை மற்றும் தேன் தடவியும் சாப்பிடலாம். வாரம் ஒரு முறை அல்லது இரண்டு முறை செய்து சாப்பிடலாம்.

பலன்கள்:

* ஒரு சொட்டு எண்ணெய் இல்லாத இந்த உணவு உடலுக்கு பல வகைகளில் நன்மையளிக்கிறது.

* உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்கள் நீங்கும்.

* தொப்பை மற்றும் எடை குறையும்.

* சர்க்கரை நோயாளிகளுக்குச் சிறந்த உணவு. இதனுடன் இனிப்பான பொருட்களைச் சேர்க்காமல் சாப்பிட முடியும். காய்கறி / கீரை சேர்த்து மாவு பிசைவதால் அதன் சுவையே போதுமானது.

* மற்ற பூரியைவிட தண்ணீர் பூரி அளவான கலோரி உடையது என்பதால், ஒரு வேளைக்கு 5 முதல் 8 பூரி வரை சாப்பிடலாம். ஒரு வேளை முழு உணவாகவும் இதனைச் சாப்பிடலாம். (ஒரு செட் தண்ணீர் பூரியின் கலோரி = 120)

* இந்த உணவில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால், செரிமானக் கோளாறு வராமல் நம்மைப் பாதுகாக்கும். அத்துடன் அல்சர் போன்ற நோயையும் குணப்படுத்தும்.

* தினமும் ஒரு வகையான மாவுடன் ஒரு வகையான கீரைச் சாறு, காய்கறிச் சாறுடன் கலந்து சாப்பிடலாம். உதாரணமாகத் முடக்கத்தான் கலந்து சாப்பிட்டால் மூட்டுவலி, வாயுப் பொருமல் இல்லாமல் இருக்கும். ராகி மாவில் வெண்பூசணிச் சாற்றை கலந்து சாப்பிட்டால் தொப்பை குறையும், சர்க்கரைநோய் நீங்கும்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum