புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
முக்தி கிடைக்கும் திருவையாறு திருத்தலம் Poll_c10முக்தி கிடைக்கும் திருவையாறு திருத்தலம் Poll_m10முக்தி கிடைக்கும் திருவையாறு திருத்தலம் Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
முக்தி கிடைக்கும் திருவையாறு திருத்தலம் Poll_c10முக்தி கிடைக்கும் திருவையாறு திருத்தலம் Poll_m10முக்தி கிடைக்கும் திருவையாறு திருத்தலம் Poll_c10 
48 Posts - 42%
T.N.Balasubramanian
முக்தி கிடைக்கும் திருவையாறு திருத்தலம் Poll_c10முக்தி கிடைக்கும் திருவையாறு திருத்தலம் Poll_m10முக்தி கிடைக்கும் திருவையாறு திருத்தலம் Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
முக்தி கிடைக்கும் திருவையாறு திருத்தலம் Poll_c10முக்தி கிடைக்கும் திருவையாறு திருத்தலம் Poll_m10முக்தி கிடைக்கும் திருவையாறு திருத்தலம் Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
முக்தி கிடைக்கும் திருவையாறு திருத்தலம் Poll_c10முக்தி கிடைக்கும் திருவையாறு திருத்தலம் Poll_m10முக்தி கிடைக்கும் திருவையாறு திருத்தலம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
முக்தி கிடைக்கும் திருவையாறு திருத்தலம் Poll_c10முக்தி கிடைக்கும் திருவையாறு திருத்தலம் Poll_m10முக்தி கிடைக்கும் திருவையாறு திருத்தலம் Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
முக்தி கிடைக்கும் திருவையாறு திருத்தலம் Poll_c10முக்தி கிடைக்கும் திருவையாறு திருத்தலம் Poll_m10முக்தி கிடைக்கும் திருவையாறு திருத்தலம் Poll_c10 
48 Posts - 42%
T.N.Balasubramanian
முக்தி கிடைக்கும் திருவையாறு திருத்தலம் Poll_c10முக்தி கிடைக்கும் திருவையாறு திருத்தலம் Poll_m10முக்தி கிடைக்கும் திருவையாறு திருத்தலம் Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
முக்தி கிடைக்கும் திருவையாறு திருத்தலம் Poll_c10முக்தி கிடைக்கும் திருவையாறு திருத்தலம் Poll_m10முக்தி கிடைக்கும் திருவையாறு திருத்தலம் Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
முக்தி கிடைக்கும் திருவையாறு திருத்தலம் Poll_c10முக்தி கிடைக்கும் திருவையாறு திருத்தலம் Poll_m10முக்தி கிடைக்கும் திருவையாறு திருத்தலம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முக்தி கிடைக்கும் திருவையாறு திருத்தலம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jun 12, 2018 10:26 am

முக்தி கிடைக்கும் திருவையாறு திருத்தலம் 201707220826123066_tiruvaiyaru-temple_SECVPF
-
திரு+ஐயாறு-திருவையாறு.
ஈசன் அருள் செய்யும் இத்தலத்தின் அருகில் காவிரி, குடமுருட்டி,
வெண்ணாறு, வெட்டாறு, வடவாறு ஆகிய ஐந்து ஆறுகள்
ஓடுகின்றன.

இந்த ஐந்து ஆற்று நீரினால் இறைவனுக்கு அபிஷேகம் நடை
பெற்றதன் காரணமாக இந்த தலத்திற்கு திருவையாறு என்ற
பெயர் வந்தது.

திருவண்ணாமலையை நினைத்தால் முக்தி என்பதைப் போல்,
திருவையாறு மண்ணை மிதித்தால் முக்தி கிடைக்கும் என்பதும்
நம்பிக்கையாக உள்ளது.

சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும்
பாடப்பெற்ற சிறப்பு கொண்டது இந்த திருத்தலம்.

அஸ்தினாபுரம் நகரத்தின் அரசனாக இருந்தவர் சுரதன். இவருக்கு
புத்திர பாக்கியம் இல்லாமல் இருந்தது. புத்திர பாக்கியம் கிடைக்க
திருக்கயிலை மலையை ஒரு மண்டலம் பிரதட்சணம் செய்யும்படி,
சில மகரிஷிகள் தெரிவித்தனர்.

ஆனால் திருக்கயிலை சென்று இந்த பரிகாரத்தை செய்வது
என்பது கடினமாகும். இதனை உணர்ந்திருந்த சுரதன், அந்த
நேரத்தில் திருவையாறில் இருந்த துர்வாச மகரிஷியிடம் தனது
நிலையை எடுத்துரைத்தான்.

துர்வாசர், சுரத மன்னனுக்காக ஈசனிடம் வேண்டினார்.
ஈசன் மனமிரங்கி நந்திதேவரிடம் கூறி திருக் கயிலையை,
திருவையாறுக்கு எடுத்து வரும்படி கூறினார். நந்திதேவரும்
திருக்கயிலை மலையை தூக்கி வந்து இரண்டாகப் பிளந்து,
இந்த தலத்தில் தற்போதுள்ள ஐயாறப்பருக்கு தென்புறம் ஒரு
பகுதியையும், மற்றொரு பகுதியை வடபுறமும் வைத்தார்.

இதனை உணர்த்தும் விதமாக, ஆலயத்தில் வட கயிலாயம்,
தென் கயிலாயம் என இரு தனிக்கோவில்கள் வெளிப்
பிரகாரத்தில் அமைந்துள்ளன.

பூலோக கயிலாயம் என்று அழைக்கப்படும் இத்தல ஈசன்
சுயம்பு லிங்கமாக கிழக்கு பார்த்தவண்ணம் உள்ளார்.
மணலால் ஆன இவருக்கு அபிஷேகம் கிடையாது.

ஆவுடையாருக்கு மட்டும் அபிஷேகம் நடை பெறும்.
லிங்கத்திற்கு புணுகு சாத்தப் படும். இறைவனின் பெயர்
ஐயாறப்பர்.

அம்பாள் திருநாமம் அறம் வளர்த்த நாயகி என்பதாகும்.
அன்னை கிழக்கு பார்த்தவண்ணம் நின்ற திருக்கோலத்தில்
தனிச் சன்னிதியில் அருள்பாலிக்கிறார்.

இத்தல அம்பாள் சிலையின் உருவ அமைப்பைப் பார்த்தால்
அப்படியே திருப்பதி வெங்கடாசலபதியின் வடிவமைப்பைக்
காணலாம்.

————————–

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jun 12, 2018 10:27 am



அதுபோல திருப்பதி வெங்கடாசலபதியின் உருவ அமைப்பில்
நம் திருவையாறு அறம் வளர்த்த நாயகி அம்மனின் வடிவழகைக்
காணலாம். இதனை ‘அரி அல்லால் தேவி இல்லை
ஐயன் ஐயாறனார்க்கே’ என்று இத்தல பதிகத்தில் அப்பர் பதிவு
செய்துள்ளார்.

மேலும் இந்த ஆலயத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும்,
பெருமாள் கோவில்களில் மட்டுமே நடக்கும் ‘மகாலட்சுமி
புறப்பாடு’ இங்கும் நடக்கிறது. வெள்ளிக் கிழமை தோறும்
மாலை நேரத்தில், திருவையாறு சிவத்தலத்தில் இருந்து,
மகாலட்சுமி புறப்பாடாகி, இத்தல அம்பாள் சன்னிதிக்கு
செல்கிறார்.

அதாவது மகாலட்சுமி தன் கணவர் மகாவிஷ்ணுவை காண
வருவதாக ஐதீகம்.

கடலரசன், வாலி, இந்திரன், மகாலட்சுமி ஆகியோர் இங்குள்ள
இறைவனை பூஜித்துள்ளனர். இங்குள்ள தட்சிணாமூர்த்தியின்
காலில் முயலகனுக்கு பதிலாக ஆமை உள்ளது.

சத்குரு தியாகராஜ சுவாமிகள் சித்தி அடைந்த தலம் இதுவாகும்.
இந்த தலம் பல சிறப்புகளை உள்ளடக்கியதாக இருக்கிறது.

ஒருமுறை திருக்காள ஹஸ்தியை தரிசனம் செய்த
திருநாவுக்கரசர், பின்னர் ஸ்ரீசைலம், மாளவம், லாடம் (வங்காளம்),
மத்திம பைதிசம் (மத்திய பிரதேசம்) முதலிய இடங்களைக்
கடந்து காசியை அடைந்தார்.

அங்கிருந்து கயிலை மலைக்குச் சென்று ஈசனை தரிசிக்க
வேண்டும் என்பது அவரது எண்ணமாக இருந்தது.
அந்த எண்ணமே அவரை கயிலை நோக்கி இழுத்துச் சென்றது.

ஆனால் வயோதிகமும், அதனால் ஏற்பட்ட சோர்வும் சேர்ந்து
திருநாவுக்கரசரை மேற்கொண்டு நடக்கவிடாமல் செய்தது.
இருப்பினும் கயிலை சென்றடைவதை நிறுத்தும்
எண்ணமின்றி நடையை தொடர்ந்தார் திருநாவுக்கரசர்.
சில இடங்களில் நடக்க முடியாமல் ஊர்ந்தும் சென்றார்.

அப்போது அவரை சோதிக்க எண்ணிய சிவபெருமான், முனிவர்
வடிவில் திருநாவுக்கரசர் முன்தோன்றி, ‘நீர் இம்மானிட
வடிவில் கயிலை செல்வது இயலாத காரியம். எனவே திரும்பிச்
செல்லும்’ என்றார்.

ஆனால் திருநாவுக்கரசர் அவரது பேச்சை செவிமடுக்காமல்,
தன் பயணத்தைத் தொடர்ந்தார். அவரது பக்தியையும், மன
உறுதியையும் கண்ட சிவபெருமான், ‘திருநாவுக்கரசா!
இங்குள்ள பொய்கையில் மூழ்கி, திருவையாறு திருத்தலத்தை
நீ அடைவாய்.
அங்கு யாம் உனக்கு கயிலைக் காட்சியை தந்தருள்வோம்’
என்று கூறி மறைந்தார்.

ஈசன் அருளியபடி அங்கிருந்த பொய்கையில் மூழ்கிய
திரு நாவுக்கரசர், திருவையாறில் கோவிலுக்கு வடமேற்கே
உள்ள சமுத்திர தீர்த்தக் குளத்தில் எழுந்தார்.

அங்கு திருக்கயிலை காட்சியை ஈசன், திருநாவுக்கரசருக்கு காட்டி
அருளினார். திருநாவுக்கரசருக்கு திருவையாறு திருத்தலத்தில்
ஈசன் திருக்கயிலை திருக்காட்சி காட்டியருளிய தினம்,
ஆடி அமாவாசை ஆகும்.

ஆண்டுதோறும் ஆடி அமாவாசை அன்று இரவில் 9 மணி அளவில்
‘திருநாவுக்கரசர் திருக்கயிலை திருக்காட்சி’ பெருவிழா
லட்சக்கணக்கான பக்தர்கள் சூழ நடைபெறுகிறது.

அன்று காலை முதல் இரவு முழுவதும் ஆலயத்தில் திருமறை
பாராயணம் நடக்கிறது. இரவு முழுவதும் ஆலயம் திறந்திருக்கும்.
ஆடி அமாவாசையில் திருக்கயிலை காட்சி தந்தருளிய ஈசனை
வழிபட்டு, இத்தல பைரவரையும் வழிபட்டால், முன்னோர்கள்
அனைவரும் சிவபதம் பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.

ஆடி அமாவாசை அன்று இரவில், இங்கு அப்பர் கயிலைக்காட்சி
கண்டு வழிபாடு செய்வது திருக்கயிலை தரிசனத்துக்கு ஈடான
பெரும் புண்ணிய திருப்பலனை அளிக்கும்.

திருநாவுக்கரசரின் பொருட்டு அன்று திருக்கயிலை
திருத்தரிசனத்தை திருவையாறு திருத்தலத்தில் காட்டியருளிய
ஈசன், நமக்கும் அருள் செய்வார்.

தஞ்சாவூர் பெரிய கோவிலில் இருந்து சுமார் 11 கிலோமீட்டர்
தூரத்தில் திருவையாறு திருத்தலம் அமைந்துள்ளது.

———————————-
நன்றி- மாலைமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக