ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சகிப்புத் தன்மையே இந்தியாவின் பலம்: ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் பிரணாப் பேச்சு

4 posters

Go down

சகிப்புத் தன்மையே இந்தியாவின் பலம்: ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் பிரணாப் பேச்சு Empty சகிப்புத் தன்மையே இந்தியாவின் பலம்: ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் பிரணாப் பேச்சு

Post by ayyasamy ram Fri Jun 08, 2018 8:18 am

சகிப்புத் தன்மையே இந்தியாவின் பலம்: ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் பிரணாப் பேச்சு Pranap
-


சகிப்புத் தன்மையே இந்தியாவின் பலம் என்று முன்னாள்
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.
மதம், சகிப்பின்மை ஆகியவைகள் மூலமாக இந்தியாவை
வரையறுக்க (அடையாளப்படுத்த) எத்தகைய முயற்சிகள் ந
டைபெற்றாலும், அது நாட்டை நீர்த்து போகச் செய்துவிடும்
என்றும் அவர் எச்சரித்தார்.

மகாராஷ்டிர மாநிலம், நாகபுரியில் உள்ள ஆர்எஸ்எஸ்
தலைமையகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற
ஆர்எஸ்எஸ் தொண்டர்களின் பயிற்சி முகாம் நிறைவு
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியபோது, இதை அவர்
தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

சகிப்புத்தன்மையே நமது நாட்டின் பலமாகும். நமது நாட்டின்
பன்முகத்தன்மைக்கு மதிப்பு கொடுக்க வேண்டும்.
வேற்றுமையில் நிலவும் ஒற்றுமையை கொண்டாட வேண்டும்.

பிரபஞ்சவாதம், அனைத்தையும் ஏற்றுக் கொள்ளுதல்,
அனைவருடனும் இணக்கம் காட்டுதல் ஆகியவைகளில்
இருந்தே நமது தேசியவாதம் உருவாகியுள்ளது. எனவே,
சகிப்பின்மையானது நமது நாட்டின் அடையாளத்தையும்,
இந்திய தேசியவாதத்தையும் நீர்த்து போகச் செய்துவிடும்.

பாரத் எனப்படும் நமது நாட்டின் மீதான தேசியவாதம், தேசம்,
தேசப்பக்தி குறித்த எனது புரிதலை வெளிப்படுத்தவே, இந்த
நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளேன். பொருளாதார வளர்ச்சி
தொடர்பான புள்ளிவிவரங்கள், நமது நாடு சிறப்பாக செயல்
பட்டிருப்பதாக தெரிவிக்கிறது.

அதேநேரத்தில், மகிழ்ச்சி தொடர்பான புள்ளிவிவரங்களில்
இந்தியா பின்தங்கியுள்ளது. அந்த பட்டியலில் இந்தியா 133ஆவது
இடத்தில் உள்ளது. கௌடில்யர் தனது அறிவுரையில், மக்களின்
மகிழ்ச்சியே ஆட்சியாளரின் மகிழ்ச்சி, மக்கள் நலனே,
ஆட்சியாளரது நலன் எனத் தெரிவித்துள்ளார்.
-
------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82813
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சகிப்புத் தன்மையே இந்தியாவின் பலம்: ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் பிரணாப் பேச்சு Empty Re: சகிப்புத் தன்மையே இந்தியாவின் பலம்: ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் பிரணாப் பேச்சு

Post by ayyasamy ram Fri Jun 08, 2018 8:18 am


மதச்சார்பின்மையும், அனைவரையும் உள்ளடக்கும் பண்பும்,
இந்தியர்களின் நம்பிக்கை தொடர்பான விவகாரங்கள் ஆகும்.

நமது இந்த ஒருங்கிணைந்த கலாசாரம்தான், அனைவரையும்
ஒரே நாட்டினராக இணைத்துள்ளது. இந்திய தேசமானது ஒரு
மொழி, ஒரு மதம், ஒரு எதிரி ஆகியவைகளைக் கொண்டது
கிடையாது.

நாட்டில் உள்ள 130 கோடி மக்கள், 122 மொழிகளைப்
பேசுகின்றனர். இதுதவிர, 1,600 பேச்சு வழக்கு மொழிகளும்
உள்ளன. 7 முக்கிய மதங்கள் பின்பற்றப்படுகின்றன.
ஆனால், ஒரே ஆட்சி நிர்வாகத்தின்கீழும், கொடியின்கீழும்,
பாரதிய அடையாளத்தின் கீழும், யாரையும் எதிரியாக
கருதாமலும் மக்கள் வாழ்கின்றனர்.

ஒவ்வொரு நாளும், நம்மைச் சுற்றி வன்முறை நடப்பதைக்
காண்கிறோம். இந்த வன்முறையின் பின்னால், இருளும்,
அச்சமும், நம்பிக்கையின்மையும் உள்ளன. எனவே, அனைத்து
வகையிலான அச்சம், வன்முறைகள் ஆகியவற்றிலிருந்து
விடுபட்டு, சுதந்திரமாக நமது எண்ணங்களை வெளிப்படுத்த
வேண்டும்.

நமது நாட்டில் எங்கேனும் பெண்ணோ, சிறுமியோ பாலியல்
வன்கொடுமைக்கு ஆளாக்கப்படும்போது, நாடே
காயப்படுகிறது. வன்முறையில்லாத சமூகத்தால் மட்டுமே,
ஜனநாயக வளர்ச்சிக்கான நடவடிக்கையில், அனைத்து தரப்பு
மக்களின் பங்களிப்பையும் உறுதிப்படுத்த முடியும்.

குறிப்பாக, நலிவடைந்த, ஒடுக்கப்பட்ட மக்களின்
பங்களிப்பை உறுதி செய்ய முடியும் என்றார்
பிரணாப் முகர்ஜி.

மறைந்த பிரதமர் ஜவாஹர்லால் நேரு, ரவீந்திரநாத் தாகூர்,
பாலகங்காதர திலகர், சர்தார் வல்லபபாய் படேல்
ஆகியோரின் கருத்துகளையும் பிரணாப் முகர்ஜி தனது
உரையில் சுட்டிக்காட்டினார். ஜவாஹர்லால் நேரு எழுதிய
'டிஸ்வகரி ஆப் இந்தியா' புத்தகத்தில், இந்தியாவுக்கு
பன்முகத்தன்மை மிகவும் அவசியம் என குறிப்பிடப்
பட்டிருப்பதையும் பிரணாப் நினைவுகூர்ந்தார்.

விவாதத்தில் அர்த்தமில்லை- ஆர்எஸ்எஸ் தலைவர்:

பிரணாப் முகர்ஜி பேசுவதற்கு முன்பு ஆர்எஸ்எஸ்
தலைவர் மோகன் பாகவத் பேசினார். அப்போது அவர்
கூறியதாவது:

ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் பிரணாப் கலந்து கொண்டது
குறித்து விவாதங்கள் நடத்தப்படுவதில் எந்த அர்த்தமுமில்லை.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால், பிரணாப் மாறி
விடமாட்டார். அவர் அப்படியேதான் இருப்பார்.

அதேபோல், ஆர்எஸ்எஸ் அமைப்பும் அப்படியேதான்
இருக்கும்.
நமது சமூகத்தை ஒன்றிணைக்க வேண்டும் என்பதே
ஆர்எஸ்எஸ் அமைப்பின் விருப்பமாகும். நாட்டு மக்கள்
யாரையும் வெளிநபர்களாக ஆர்எஸ்எஸ் கருதவில்லை.

மக்கள் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட கருத்துகள் இருக்கும்.
ஆனால் அவர்கள் அனைவரும் இந்திய தாயின்
பிள்ளைகள்தான். ஆண்டுதோறும் ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு
மூத்த தலைவர்கள் அழைக்கப்படுவது வழக்கம்.

அதன்படியே, பிரணாப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது
என்றார் மோகன் பாகவத்.

நிகழ்ச்சியில் மறைந்த பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின்
மகன் சுனில் சாஸ்திரி, நேதாஜி சுபாஷ் சந்திர போஸின்
மருமகன் அர்தேந்து போஸ், அவரது மனைவி, மகன்
ஆகியோரும் கலந்து கொண்டனர்.
-
------------------------------
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82813
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சகிப்புத் தன்மையே இந்தியாவின் பலம்: ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் பிரணாப் பேச்சு Empty Re: சகிப்புத் தன்மையே இந்தியாவின் பலம்: ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் பிரணாப் பேச்சு

Post by T.N.Balasubramanian Fri Jun 08, 2018 9:37 am

சகிப்புத் தன்மையே இந்தியாவின் பலம்: ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் பிரணாப் பேச்சு 1571444738 சகிப்புத் தன்மையே இந்தியாவின் பலம்: ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் பிரணாப் பேச்சு 3838410834 சகிப்புத் தன்மையே இந்தியாவின் பலம்: ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் பிரணாப் பேச்சு 103459460

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35032
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சகிப்புத் தன்மையே இந்தியாவின் பலம்: ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் பிரணாப் பேச்சு Empty Re: சகிப்புத் தன்மையே இந்தியாவின் பலம்: ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் பிரணாப் பேச்சு

Post by SK Fri Jun 08, 2018 2:59 pm

மோடியை பிரதமராக ஏற்று கொண்ட மக்களுக்கு சகிப்பு தன்மை அதிகம் தான்



SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

சகிப்புத் தன்மையே இந்தியாவின் பலம்: ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் பிரணாப் பேச்சு Empty Re: சகிப்புத் தன்மையே இந்தியாவின் பலம்: ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் பிரணாப் பேச்சு

Post by ராஜா Sat Jun 09, 2018 7:14 pm

// சகிப்புத் தன்மையே இந்தியாவின் பலம் என்று முன்னாள்
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார். // 100 % உண்மை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சகிப்புத் தன்மையே இந்தியாவின் பலம்: ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் பிரணாப் பேச்சு Empty Re: சகிப்புத் தன்மையே இந்தியாவின் பலம்: ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் பிரணாப் பேச்சு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
»  ஆர்எஸ்எஸ் கூட்டத்தில் பிரணாப் பங்கேற்கிறார்
» காங்., எதிர்ப்பை மீறி ஆர்எஸ்எஸ் விழாவில் பங்கேற்கிறார் பிரணாப்
» செப்டம்பர் மாதம் ஊட்டச்சத்து மாதமாக கடைப்பிடிக்கப்படும்- மன் கி பாத் நிகழ்ச்சியில் மோடி பேச்சு
» குண்டு மழைக்கு மத்தியில் அமைதிப் பேச்சு சாத்தியமில்லை: பிரணாப் முகர்ஜி
» இந்தியாவின் பொருளாதார-ராணுவ பலம்: கவலையில் சீனா -

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum