ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

VAT என்றால் என்ன ? -இது வணிக வரிக்காக ஏற்பட்ட சட்டம்

Go down

VAT என்றால் என்ன ? -இது வணிக வரிக்காக ஏற்பட்ட சட்டம் Empty VAT என்றால் என்ன ? -இது வணிக வரிக்காக ஏற்பட்ட சட்டம்

Post by kavinele Wed Dec 16, 2009 8:15 am

VAT என்றால்
என்ன
? -

















இது வணிக வரிக்காக
ஏற்பட்ட சட்டம்
. முதல்
தேதியிலிருந்து அமுலுக்கு
வருகிறது
. அதாவது
வியாபாரம் செய்பவர்கள்
அனைவரும் விற்பனை வரிச்
சட்டத்தின் கீழ்வருகின்றார்கள்
அல்லவா
? அவர்கள்
அனைவரும் இந்த
"வாட்"
சட்டத்தின் கீழ்
வருவார்கள்
. ஒரு
வியாபாரி விற்பனை செய்யும்
போது விற்பனைவரியையும்
சேர்த்து வாங்குபவர்களிடம்
வசூல் செய்து அரசாங்கத்திடம்
செலுத்துகின்றார்
. இது
அரசாங்கத்திற்குக் கிடைக்கும்
மிகப் பெரிய வருமானம்
.
சரி! இதை
மத்திய அரசிடம் செலுத்துகின்றார்களா
?
அல்லது மாநில அரசிடம்
செலுத்துகின்றார்களா
?
இது மாநில அரசின்
வருமானம்தான்
. நமது
சட்டம் எந்த வருவாய் மத்திய
அரசுக்குப் போக வேண்டுமென்றும்
,
எந்த வருவாய் மாநில
அரசுக்குப் போக வேண்டுமென்றும்
தெளிவாகக் கூறியிருக்கிறது
.
அரசியல் சட்டப்படி
விற்பனை வரியென்பது மாநில
அரசுக்குப் போய்ச் சேர வேண்டிய
நிதி ஆதாரம்தான்
. இதில்
மத்திய அரசுக்கு எந்தப்
பங்கும் கிடையாது
. விற்பனை
வரியில் இரண்டு பிரிவுகள்
உண்டு
. 1. தமிழ்நாடு
விற்பனை வரிச் சட்டம்
. 2.
மத்திய விற்பனை வரிச்
சட்டம்
. இரண்டுக்கும்
உள்ள வித்தியாசத்தை நாம்
முதலில் தெரிந்து கொள்வோம்
.
தமிழ்நாடு விற்பனை
வரிச் சட்டம்
: இது
1937-38-ம் ஆண்டிலிருந்து
அமுலில் இருக்கிறது
.ஒருவர்
வியாபாரம் செய்ய ஆரம்பிக்கும்
முன் அரசாங்கத்தில் விற்பனை
வரிச் சட்டத்தின் அவர்
கீழ் பதிவு செய்து கொள்ள
வேண்டும்
. அவ்வாறு
பதிவு செய்து கொண்டவர்
Registered Dealer என்றழைக்கப்
படுவார்
. பதிவு
செய்து கொண்டதற்கு அவருக்கு
ஒரு எண் கொடுக்கப் படும்
.
அதை வைத்துக் கொண்டுதான்
அவர் வியாபாரம் செய்ய
வேண்டும்
..சிறு
வியாபாரிகளுக்கு இவ்வாறு
பதிவு செய்வதிலிருந்து விலக்கு
அளிக்கப் படுகிறது
. பதிவு
செய்து கொண்டவர் தமிழ்நாட்டில்
வியாபாரம் தொடங்கலாம்
.
அவர் செய்யும் விற்பனைகள்
தமிழ் நாட்டிற்குள்ளேயே
இருக்குமானால் அது உள்ளூர்
விற்பனை என்றழைக்கப் படும்
.
அதாவது Sale within
Tamilnadu என்றழைப்பார்கள்.
விற்பனை செய்யும்
பொருளுக்கு எவ்வளவு விற்பனை
வரி விதிக்க வேண்டும் என்று
பட்டியல் கொடுக்கப் பட்டு
இருக்கும்
. அதன்படி
வரியை பொருள் வாங்குவோரிடமிருந்து
வசூலித்து அரசாங்கத்திடம்
செலுத்த வேண்டும்
.
ஒருபொருளுக்கு எவ்வளவு
வரி விதிக்க வேண்டு மென்று
மாநில அரசுதான் தீர்மானிக்க
வேண்டும்
. அதில்
மத்திய அரசு தலையிடமுடியாது
.
இது மாநில அரசின் நிதி
அல்லவா
! ஆகவே
இதில் மத்திய அரசு தலையிட
முடியாது
. இந்த
விற்பனை வரியானது மாநிலத்துக்கு
மாநிலம் வேறுபடும்
.
உதாரணமாக நாம்
உபயோகிக்கும் தொலைக்காட்சிப்
பெட்டிக்கு தமிழ் நாட்டில்
10 சதவீதம் விற்பனைவரியானால்
அண்டை மாநிலமான ஆந்திராவில்
இதற்குக் கூடவோ அல்லது குறையவோ
இருக்கலாம்
. இதைப்போல்தான்
மற்றமாநிலங்களும் தன்
வசதிக்கேற்ப விற்பனை வரியை
விதிக்க முடியும்
. ஒரு
பொருளுக்கு ஒரே மாதிரியான
விற்பனை வரி இந்தியா முழுவதும்
கிடையாது
.
தமிழ்நாட்டில் ஒருவர்
தன் தொழிற்சாலையில் ஒரு பொருளை
உற்பத்தி செய்கிறார்
.
அதற்கு 10% விற்பனை
வரி விதித்து மொத்த கொள்முதலாளருக்கு
(Whole sale dealer) விற்பனை
செய்கிறார்
. அவர்
வாங்கி சில்லரை விற்பனையாளருக்கு
( Retail seller) விற்பனை
செய்கிறார்
. இந்த
விற்பனைக்கு
10% விற்பனை
வரி விதிக்க வேண்டுமா வென்றால்
இல்லையெண்ற்றுதான் கூற
வேண்டும்
. இது
Second Sale என்றழைக்கப்
படுகிறது
. அவர்
இதற்கு
1% வசூலித்தால்
போதுமானது
. இதற்கு
re-sale tax என்று பெயர்.
சில்லரை விற்பனையாளர்
பொருள் வாங்கும் பொது மக்களுக்கு
( Consumer) விற்பனை
செய்கிறார்
. அப்போதும்
1% வரி வசூலித்தால்
போதுமானது
. இவ்வாறு
ஒவ்வொரு விற்பனையின் போதும்
வரி வசூல் செய்வதை “
Multi-point
Tax” என்றழைப்பார்கள்.
இவ்வாறு உள்ள தமிழ்
நாடு விற்பனை வரிச் சட்டத்தில்
சில பொருள்களுக்கு விற்பனை
வரி கிடையாது
. சில
பொருள்களுக்கு
1% வரி
இருக்கும்
; இவ்வாறு
பல விதமான வரி விகிதங்கள்
இருக்கும்
. அதன்படி
வரிவிதித்து அரசாங்கத்திடம்
செலுத்த வேண்டும்
.

இதைத் தவிர Surcharge,
Turnover-tax என்ற வரி
விதிப்பும் தமிழ் நாடு விற்பனை
வரிச் சட்டத்தில் உண்டு
.
இதைத் ஆண்டுதோறும்
இந்த விற்பனை வரிச் சட்டத்தின்
கீழ் வணிகர்கள் தங்கள் கணக்குகளை
அரசாங்கத்திடம் தணிக்கை
செய்து தணிக்கை உத்தரவு
பெறவேண்டும்
.

இந்த நிலைதான்
31-12-2006 முடிய இருந்து
வந்தது
. இந்த
ஆண்டுமுதல் தமிழ் நாடு விற்பனை
வரிச் சட்டத்திற்கு பதில்
மதிப்புக் கூட்டு வரி என்ற
V.A.T. நடைமுறைக்கு
வந்திருக்கிறது
. அதை
விளக்குமுன்னர் மத்திய விற்பனை
வரிச் சட்டத்தையும் பற்றி
ஓரளவிற்குத் தெரிந்து கொள்வோம்
.
இந்த விற்பனை வரிச்
சட்டம் இன்னும் அமுலில்
இருக்கிறது
. மாறவில்லை.
மத்திய விற்பனைச்
சட்டம்
.( Central Sales-tax Act):-
ஒருமாநிலத்திலிருந்து
மற்றொறு மாநிலத்திற்குப்
பொருள்கள் வாங்கவும்
,
விற்கவும்போதுதான்
இந்தச் சட்டம் அமுலுக்கு
வருகிறது
. ஒருவியாபாரி
மற்றொறு மாநிலத்திற்குப்
பொருள்களை விற்கும்போது
யாருக்கு விற்கிறார் எனப்
பார்க்க வேண்டும்
. உதாரணமாக
வியாபாரி ஒருவர் சென்னையிலிருந்து
பெங்களூரில் உள்ள வியாபாரிக்கு
விற்பனை செய்கிறார் எனக்
கொள்வோம்
. பெங்களூரில்
உள்ள வியாபாரி அம்மாநிலத்தில்
பதிவு செய்த வியாபாரியாக
(
Registered Dealer) ஆக இருந்தால்
விற்கும் பொருளுக்கு
4%
விற்பனை வரி வசூலித்து
அரசாங்கத்திற்குக் கட்டினால்
போதுமானது
. அவ்வாறு
அவர் பதிவு செய்யாத வியாபாரியாக
இருப்பின் உள்ளூரிலே அந்தப்
பொருளுக்கு என்ன வரி விகிதமோ
அதை வசூலிக்க வேண்டும்
.
உதாரணமாக ஒரு பொருளுக்கு
12% உள்ளூர் வரி எனக்
கொள்வோம்
. அதை
பெங்களூரிலுள்ள பதிவு பெற்ற
வியாபாரிக்கு
4%த்திலும்,
பதிவு பெறாத வியாபாரிக்கு
12%-த்திலும் விற்பனை
செய்ய வேண்டும்
.

அதைப் போன்று
தமிழ்நாட்டில் உள்ள பதிவு
பெற்ற வியாபாரி பெங்களூரில்
இருந்து ஒரு பொருளை வாங்கினால்
4% வரி செலுத்தினால்
போதுமானது
. உதாரணமாக
ஒரு உற்பத்தியாளர் மூலப்
பொருள் களை மற்ற மாநிலங்களிலிருந்து
வாங்குகிறார் எனக் கொள்வோம்
.
அவர் எந்த மூலப் பொருளாக
இருந்தாலும்
4% வரி
விகிதத்தில் அவர் பொருள்களை
வாங்கி உற்பத்தியில் பயன்படுத்திக்
கொள்ளலாம்
.

மத்திய விற்பனை வரிச்
சட்டத்தில் எந்த மாநிலத்திலிருந்து
பொருள்கள் விற்கப் படுகின்றதோ
அந்த மாநிலத்திற்குத்தான்
விற்பனை வரி போய்ச் சேருகிறது
.
இந்த மத்திய விற்பனைவரிச்
சட்டம் இன்னும் அமுலில்தான்
இருக்கிறது
. மாறவில்லை.
சரி! இப்போது
மதிப்புக் கூட்டு வரியைப்
பற்றிப் பார்ப்போம்
.
இது தமிழ்நாடு விற்பனை
வரிச் சட்டத்திற்கு மாற்றாக
வந்திருக்கிறது என ஏற்கனவே
கூறி இருக்கிறோம்
. இதன்
ஷரத்துக்கள் என்ன வென்று
பார்ப்போம்
. இந்த
மதிப்புக் கூட்டு வரி ஏற்கனவே
சுமார்
130 நாடுகளில்
அமுலில் இருக்கிறது
.
இந்தியாவில் உத்திரப்
பிரதேசத்தையும்
, பாண்டிச்சேரியையும்
தவிர மற்ற மாநிலங்கள் ஏற்கனவே
அமுல் செய்து விட்டன
. இந்த
இரண்டு மாநிலங்கள் மட்டும்
இன்னும் அமுல் செய்ய வில்லை
.

இதில் வரி விகிதங்கள்
நான்கு மட்டுமே
.

1. சில பொருள்களுக்கு
விற்பனை வரி கிடையாது
.
அவைகளுக்கு விற்பனை
வரியிலிருந்து விலக்கு
அளிக்கப் பட்டு இருக்கிறது
.
2.
மற்ற பொருள்களுக்கு
1%, 4%, 12.5% வரிவிகிதம்தான்.
இந்த மதிப்புக்
கூட்டு வரியில் தமிழ்நாடு
விற்பனை வரிச் சட்டத்திலிருந்தது
போல்
Surcharge, Additional Tax ஆகியவைகள்
எல்லம் கிடையாது
. சரி!
வரி விதிப்பு எவ்வாறு
இருக்கிறது எனப் பார்ப்போம்
.
உதாரணமாக ஒரு
உற்பத்தியாளர் ஒரு பொருளை
,
மொத்த விற்பனையாளருக்கு
விற்பனை செய்கிறார் எனக்
கொள்ளுங்கள்
. அந்தப்
பொருளின் விலை ரூபாய்
10,000/-
எனவும், அதன்
விற்பனை வரி
4% எனவும்
கொள்ளுங்கள்
. உற்பத்தியாளர்
பொருளின் விலை ரூ
. 10,000+ விற்பனை
வரி ரூ
.400/- ஆக மொத்தம்
ரூ
. 10,400/-க்கு விற்று
விடுகிறார்
. ரூ.400/-
அரசாங்கத்திடம் விற்பனை
வரியாகக் கட்டி விடுகிறார்
.
மொத்த விற்பனையாளைர்
அதைப் ரூ
. 12,000/- க்கு
சில்லரை விற்பனையாளருக்கு
விற்கிறார் எனக் கொள்ளுங்கள்
.
அவர் ரூ.12,000/-க்கு
4% விற்பனை வரி எனக்
கணக்கிட்டு மொத்தம் ரூ
.
12480/- விற்கிறார்.
விற்பனை வரியான ரூ.
480/- ல் தான் கொடுத்த
விற்பனை வரியான ரூ
.400/- க்
கழித்துக்கொண்டு மீதித்
தொகையான ரூ
.80/- அரசாங்கத்திற்குக்
கொடுத்து விடுகிறார்
.

சில்லரை விற்பனையாளர்
பொருள் நுகர்வோருக்கு ரூ
.
15,000/- க்கு விற்பனை
செய்கிறார் எனக்கொள்ளுங்கள்
.
அவர் ரூ. 15,000/- + விற்பனை
வரி
4% ரூ. 600/-
நுகர்வோரிடமிருந்து வாங்கி
தான் வரி செலுத்திய ரூ
.480/-
க் கழித்துக் கொண்டு
மீதித் தொகையான ரூ
. 120/-
அராசாங்கத்திற்குச்
செலுத்தி விடுகிறார்
.
One important aspect in V.A.T is, the material suffers tax at the
same rate at every point of sale whereas under T.N.G.S.T, Act the
material suffers @1% resale tax at every point of sale other than the
first sale.

சரி ! உற்பத்தியாளருக்கு
இது எவ்விதத்தில் பயனளிக்கிறது
?
தற்போது உற்பத்தியாளர்கள்
உற்பத்தி செய்யும் மூலப்
பொருள்களுக்கு
4% வரிகொடுத்து
எல்லா மூலப் பொருள்களையும்
பெற்றுக்கொள்கிறார்கள்
.
தமிழ்நாட்டிலிருந்து
வாங்கும் மூலப் பொருள்களுக்கு
உற்பத்தியாளர்கள்
4% வரி
விகிதத்தில் வாங்கிக்
கொள்ளலாம்
. அயல்
மாநிலத்திலிருந்து வாங்கும்
மூலப் பொருள்களுகளையும்
4%
வரி விகிதத்தில்
வாங்கிக் கொள்ளலாம்
.
ஆனால் விற்கும் போது
தமிழ் நாட்டிலிருந்து வாங்கிய
மூலப்பொருள்களுக்குக் கட்டிய
வரி மட்டுமே விற்பனை செய்யும்
வரியிலிருந்து கழித்துக்
கொண்டு மீதத்தை அரசாங்கத்திற்குக்
கட்டமுடியும்
. உதாரணமாக
ஒரு உற்பத்தியாளர் மூலப்
பொருள்களை ரூ
. 1000/-க்கு
வாங்குகிறார் எனக் கொள்ளுங்கள்
.
அதற்கு 4% வரி
கட்டுகிறார்
. ரூ.
40/- வரித் தொகையா கின்றது.
மொத்த அடக்க விலை
1000+40 = 1040. அதை
ரூ
.1200/-க்கு விற்கிறார்
எனக் கொள்ளுங்கள்
. அதற்கு
வரித்தொகையாக ரூ
. 48/- வசூல்
செய்கிறார்
. அரசிற்குக்
கட்டும்போது ரூ
. 48/-ல்
இருந்து ரூ
. 40/- ஐக்
கழித்துக் கொண்டு ரூ
. 8/-
மட்டும் செலுத்தினால்
போதும்
. அதாவது
அவர் வாங்கிய பொருள்களின்
மீது செலுத்திய வரித் தொகை
அவருக்குத் திருப்பி அளிக்கப்
படுகிறது
. இது
தமிழ்நாட்டிலிருந்து வாங்கிய
பொருள்களின் வரித் தொகையையே
இவ்விதமாகத் திரும்பிப்
பெறமுடியும்
. அயல்
மாநிலத்திலிருந்து வாங்கிய
பொருள்களுக்குக் கட்டிய
வரியினை இவ்விதமாகத் திரும்பிப்
பெறமுடியாது
.

இந்த மதிப்புக்
கூட்டு வரியின் கீழ்
, தமிழ்
நாடு வணிக வரிச் சட்டத்தின்
கீழ் இருப்பதைப்போல் ஆண்டுதோறும்
அதிகாரிகளால்
Assessment Order
பெற வேண்டிய அவசியம்
இல்லை
. வணிகர்களே
தாங்களாகவே சரியாகக் கணக்கு
வைத்துக் கொண்டால் போதும்
.மொத்த
வணிகர்களில் சுமார்
20%
பேர்களைத் தேர்வு
செய்து
Assessment செய்வோம்
எனக் கூறுகிறது வணிக வரித்துறை
.
இந்த மதிப்புக்
கூட்டு வரியை ஆதரிப்பவர்களும்
,
எதிர்ப்பவர்களும்
என்ன சொல்கிறார்கள் என்று
இப்போது நாம் பார்ப்போம்
.

நாம் இப்போது இதில்
உள்ள அனுகூலங்கள்
,
பிரதிகூலங்களைப்
பார்ப்போம்
. முதலில்
அனுகூலங்களைப் பற்றி கூறப்படுவது
என்ன
?
உற்பத்தியாளர்கள்
எந்தப் பொருளாக இருந்தாலும்
உற்பத்திசெய்வதற்காக
4%
வரி விகிதத்தில்
அவைகளை வாங்கி உபயோகப் படுத்திக்
கொள்ளலாம்
. உதாரணமாக
ஒருவர் உற்பத்திக்காக ரூ
.
1000/-க்குப் மூலப்பொருள்களை
வாங்கினால்
4% வரியையும்
சேர்த்து ரூ
. 1040/-க்கு
வாங்குகிறார்
. உற்பத்தி
செய்த பொருளை ரூ
.1200/-க்கு
அதே
4% வரி விகிதத்தில்
விற்றால் அவர் ரூ
. 1248/-க்கு
விற்பனை செய்து விடுகிறார்
.
அரசாங்கத்துக்குச்
சேர வேண்டிய வரியைக் கட்டும்போது
அவர் வசூல் செய்த ரூ
. 48/-ல்
இருந்து அவர் கொடுத்த வரித்
தொகையான ரூ
.40/- ஐக்
கழித்துக் கொண்டு மீதித்
தொகையான ரூ
.8/-ஐக்
கட்டி விடுவார்
. அவர்
கொடுத்த ரூ
. 40/- "Input Credit"
என்றழைக்கப் படுகிறது.
இந்த V.A.T. சட்டத்தில்
அவர் வாங்கிய மூலப் பொருள்களின்
மதிப்பு ரூ
. 1000/- ஆகவே
இருந்து வருகிறது
. ஆனால்
இதற்கு முந்தைய சட்டத்தில்
இவ்வாறு கொடுத்த வரிப் பணத்தை
திரும்பிப் பெறும் வாய்ப்பு
இல்லாததால் அவர் விற்கும்
பொருளை ரூ
. 1200/- விற்றிருக்க
மாட்டார்
. அதற்கு
மேலாக ரூ
. 1240/- க்காவது
விற்றிருப்பார்
. ஆக
பொருள்களின் விலை இதில் குறைய
வாய்ப்பிருக்கிறது என்பது
இவர்களின் வாதம்
.

"Input Credit" என்பது
அந்த மாநிலத்திற்குள்ளேயே
வாங்கும் பொருள்களுக்கு
மட்டுமே கிடைக்குமென்பதால்
உற்பத்தியாளர்கள் அந்த
மாநிலத்திற்குள்ளேயே மூலப்
பொருள்ளை வாங்க முயற்சி
செய்வார்கள்
. உதாரணமாக
ஒரு உற்பத்தியாளர் தன்
உற்பத்திக்கு
Electric Motor -
பெங்களூரிலிருந்து
4% வரி
விகிதத்தில் வாங்குகிறார்
எனக்கொள்ளுங்கள்
. இது
வெளி மாநிலத்திலிருந்து
வாங்கப் படுவதால் இந்தப்
பொருளுக்கு அவர் கொடுக்கும்
வரியை
Input Credit ஆக
எடுத்துக் கொள்ள முடியாது
.
அதே Elecatric Motor-
கோயம்புத்தூரிலிருந்து
வாங்குகிறார் எனக் கொள்ளுங்கள்
;
அந்த வரிப் பணத்தை
Input Credit ஆக எடுத்துக்
கொண்டு அந்த மாதம் அவர்
செலுத்தும் வரியிலிருந்து
கழித்துக் கொள்ளலாம்
.
இவ்வாறு செய்வதால்
உற்பத்தியாளர்கள் அந்த
மாநிலத்திலேயே மூலப் பொருள்களை
வாங்க முயற்சிப்பார்கள்
.
அதனால் அந்த மாநிலத்தின்
வர்த்தகம் பெருகும்
. அதனால்
அரசுக்கு அதிக வரி கிடைக்கும்
.

உள் மாநிலத்திலேயே
பொருள்களை வாங்கி உள்
மாநிலத்திலேயே அவற்றை
வியாபாரிகள் ரூ
. 10,00,000/- வரை
விற்றால் அவர்கள் அரசாங்கத்தில்
தங்களைப் பதிவு செய்து கொள்ள
வேண்டாம்
. அவர்கள்
சிறு வியாபாரிகள் எனக் கருதப்
படுவர்
. அவர்கள்
மாதம் விற்பனை வரி செலுத்துவது
,
Assessmentக்குச் செல்வது
போன்றவைகள் கடையாது
.
V.A.T. வருவதற்கு முன்பு
இந்தச் சலுகை ரூ
. 3,00,000/- வரை
வியாபாரம் செய்பவர்களுக்கே
இருந்து வந்தது
. இப்போது
அது கணிசமாக உயர்த்தப் பட்டு
விட்டது
.
இதில் Resale Tax,
Surcharge, Turn-over- tax போன்றவைகள்
கிடையாது
.

இதுபோன்ற சலுகைகள்
இருப்பதாக ஒரு தரப்புக்
கூறுகின்றது
. சரி!
அடுத்த தரப்பின் வாதம்
என்ன
?
இந்த "Input Credit"
கழித்துக் கொள்ளும் வியாபாரிகள்
அதற்குண்டான
, பில்கள்,
ரிஜிஸ்டர்கள் ஆகியவற்றை
ஜாக்கிரதையாக வைத்துக் கொள்ள
வேண்டும்
. அரசாங்கத்தின்
Assessment கிடையாது
என்று அறிவித்திருந்தாலும்
,
20% வணிகர்கள் தேர்ந்தெடுக்கப்
பட்டு அவர்கள் கணக்குகள்
அதிகாரிகளால் சரிபார்க்கப்படும்
.
ஆகவே எல்லா வணிகர்களும்
சரியான முறையில் கணக்கு
வைத்திருக்க வேண்டும்
.
மாதந்தோரும் வரி
கட்டும் போது மாதாந்திரக்
கணக்குகளையும் சேர்த்துச்
சமர்ப்பிக்க வேண்டும்
.
கணக்குகளை வைத்துக்
கொள்ள கம்ப்யூட்டர் தேவைப்படும்
.
அதை இயக்கத் தெரிந்தவரும்
தேவைப்படும்
. இதெற்கெல்லாம்
அதிகச் செலவாகும்
.
வணிகர்கள் இந்தச்
செலவுகளைத் தாங்கிக் கொள்ள
வேண்டும்
.

உள் மாநிலத்தில்
வாங்கும் பொருள்களுக்குத்தான்
வரியைக் கழித்துக் கொள்ள
இயலும்
. வெளி
மாநிலத்தில் வாங்கும்
பொருள்களுக்குக் கழிக்க
முடியாது
. ஆகவே
பொருள்களின் விலை குறையும்
என்று எதிர்பார்க்க முடியாது
.
மதிப்புக் கூடுதல்
வரி அறிமுகப் படுத்தபோது
இந்தியாவெங்கும் ஒரே சீரான
வரி என்று அறிவிக்கப் பட்டது
.
ஆனால் நடை முறையில்
வரி சீராக இல்லை
; வட
மாநிலங்களில் ஒவ்வொரு
மாநிலத்திலும் ஒவ்வொரு
விதமான வரி விதிக்கப் படுகிறது
.
அறிவிக்கப் பட்டபோது
"எந்தப் பொருளுக்கும்
12.5%க்கு மேல் வரி
விதிக்கப்படமாடடாது
"
எனக் கூறப்பட்டது.
ஆனால் கேரளாவில் பல
பொருள்களுக்கு
16%, 20% என
விதிக்கப்பட்டுள்ளது
.
ஆகவே ஒரே சீரான வரியாக
விதிக்கப் பட வில்லை
.
அடுத்தது இதில் உள்ள
தண்டனைச் சட்டங்கள்
. விதி
எண்
71, 72-ல் கூறப்பட்டுள்
ளவை வணிகர்களுக்குக் கடுமையாக
இருக்கும் எனக் கருதப்படுகிறது
.
மாதந்தோறும்
கணக்குகளைச்
சமர்ப்பிக்கத் தவறினாலோ
,
அல்லது வியாபாரத்தைச்
சட்டப்படிப் பதிவு செய்யா
விட்டாலோ கோர்ட் நடவடிக்கைகளுக்கு
உட்படுத்தப்படும்
.. முதல்
தடவை செய்த தவற்றிற்கு
அபராதத்துடன் போய்விடும்
.
இரண்டாம் முறை அதே
தவற்றைச் செய்தால் சிறைத்
தண்டனைக்கும் சட்டத்தில்
இடமுண்டு
. இதற்கு
முந்தைய
T.N.G.S.T. Act-ல்
சிறைத் தண்டனைக்கு இடமில்லை
.
இப்போது அப்படி இல்லை.
இது வணிகர்களுக்கு
சிறிது கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது
.

(முற்றும்)
kavinele
kavinele
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 946
இணைந்தது : 14/09/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum