ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கஸ்தூரி மஞ்சள்

Go down

கஸ்தூரி மஞ்சள் Empty கஸ்தூரி மஞ்சள்

Post by தாமு Wed Dec 16, 2009 5:19 am

மஞ்சள் குடும்பத்தைச் சேர்ந்த இத்தாவரம் மிகுந்த வாசனை கொண்டது. இந்தியாவின் பல பகுதிகளிலும் பயிரிடப்படும் மருந்துத் தாவரமாகும். பல்வேறுபட்ட மருத்துவ முறைகளிலும் பயன்படுத்தி வரும் ஓர் உயரிய மருத்துவப் பொருளே கஸ்தூரி.


புற்று நோயின் கடுமையைக் குறைக்கக் கூடியது. மிகுந்த வாசனைமிக்க இதன் பொடி, வாசனைத் திரவியங்கள், அழகு சாதனப் பொருட் தயாரிப்புகளில் பெரும்பங்கு வகிக்கின்றன.

சற்று தூக்கலான மணம் உள்ளதாகும். சற்று பெரிய அளவில் காணப்படும் கஸ்தூரி வாசனைப்யூட்டக்கூடிய தயாரிப்புகளுக்கு பிரதானப் பொருளாக உபயோகிக்கப்படுகிறது. கஸ்தூரி மஞ்சளைக் கொண்டு தயாரிக்கப்படும் குளியல் பொடிகளை வாரம் ஒருமுறை அல்லது இருமுறை தேய்த்துக் குளித்துவந்தால் உடல் மட்டுமல்லாது கண்பார்வையும் ஆரோக்கியமாக இருக்கும்.

கதிர்வீச்சிலிருந்து தோலினைப் பாதுகாக்கும். சருமத்திலுள்ள வேண்டாத ரோமங்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும். கஸ்தூரி மஞ்சள் இலையின் சாறை தலைக்குத் தடவ, தலை சம்பந்தமான நோய்கள் தீரும்.
கஸ்தூரி மஞ்சளுடன் கருந்துளசியைச் சேர்த்து அரைத்து உடலெங்கும் தேய்த்து வைத்திருந்து இளஞ்சூட்டில் குளித்து வந்தால் உடல் கவர்ச்சியுடனும், பளபளப்பாகவும் விளங்கும்.

கஸ்தூரி உடலின் தாதுக்களுக்குத் தேவையான பலத்தையும், உற்சாகத்தையும் கொடுத்து, உடலில் ஏற்படும் பல்வேறுபட்ட நோய்களுக்கும், வலிப்பு, இழுப்பு, உடற்சோர்வு, இளைப்பு, பலவீனம் ஆகியவற்றை நீக்கி முகத்தில் பொலிவையும், அழகையும், முகத்திற்கு ஒருவித ஒளியையும் தரும்.

ஒரு கண்ணாடி தம்ளரில் தண்ணீர் எடுத்துக் கொண்டு அவற்றில் சிறிது கஸ்தூரியை போட்டு பார்த்தால் அது ஊதா நிறத்தோடு கீழிறங்கும். இவையே உண்மையான கஸ்தூரியாகும்.

- விஜயகுமாரி பாஸ்கரன்
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

கஸ்தூரி மஞ்சள் Empty Re: கஸ்தூரி மஞ்சள்

Post by தாமு Wed Dec 16, 2009 5:21 am

மஞ்சள்




இந்தியாவின் மிகப் பழமையான நறுமணப் பொருள். மஞ்சள் ஆண்டுதோறும் வளரும் பூண்டு வகைச்செடி. 60 முதல் 90 செ.மீ. உயரம் வளரும். இலைகள் கொத்தாக இருக்கும். தண்டில் உள்ள முளையிலிருந்து கிளைதது மண்ணுக்குள் செல்லும் நீண்ட வேர்கள்தான் மஞ்சள்.

நன்கு உலர்த்தப்பட்ட மஞ்சள் விரலை ஒடித்தால் உலோக நாதம் உண்டாகும். பச்சை மற்றும் உலர்ந்த கிழங்கிலிருந்து எண்ணெய் வடிக்கப்படுகிறது. மஞ்சளில் இருந்து கிடைக்கும் சத்து எண்ணெய் நச்சுத் தடை செய்யும் தன்மை கொண்டது.

சுத்திகரிக்கப்பட்ட, பளபளப்பூட்டப் பெற்ற வேர்த்தண்டுதான் மஞ்சள். சமையலில் நிறமும், சுவையும் கூட்டும் மஞ்சள் மருத்துவ குணங்கள் மிகக் கொண்டது. இதில் ‘குர்மின்ங்’ என்ற நிறமி இருக்கிறது. இதில் கரிமஞ்சள், நாக மஞ்சள், காஞ்சிரத்தின மஞ்சள், குரங்கு மஞ்சள், குடமஞ்சள், காட்டு மஞ்சள், பலா மஞ்சள், மர மஞ்சள் என்று பல வகைகள் உள்ளன. ‘ஆலப்புழை மஞ்சள்’ தான் உலகிலேயே மிகச் சிறந்ததாகக் கருதப்படுகிறது.

துணிகளுக்கு சாயம் ஏற்றவும், மருந்துகளிலும், ஒப்பனைப் பொருட்களிலும் மஞ்சளுக்கு தனி மகிமையே உண்டு. இந்துக்கள் மஞ்சளை மதச் சடங்குகளின் புனிதப் பொருளாக உபயோகிக்கிறார்கள்.

பதார்த்தங்களுக்கு நிறம் தருவதற்காக மட்டுமின்றி, மசாலாவில் உள்ள காரத்தால் குடலில் புண் தோன்றாது காக்கவும், பருப்பு வகைகளில் உள்ள வாய்வுகளை அகற்றவும், உதவுவதுடன் காய்கள் நிறமிழக்காமல் தூய்மையடையவும், மீன் மாமிச வகைகளிலுள்ள நச்சுத்தன்மை மற்றும் விரும்பத்தகாத நாற்றங்களைப் போக்கவும் மஞ்சள் பயன்படுகிறது.

இன்றும் பருத்தித் துணிகளுக்கு சாயம் கொடுப்பதற்கும் பூச்சு வண்ணங்கள், வார்னிஷ் முதலியவை தயாரிக்கும் தொழில்களுக்கும் மஞ்சள் பயன்படுகிறது.

மஞ்சள் கலந்த நீரை வீட்டு முற்றங்களிலும், வெளிப்பகுதிகளிலும் தெளித்து வைப்பதன் மூலம் தொற்று நோய்க் கிருமிகள் அணுகவொட்டாமல் செய்யலாம். அளவாக மஞ்சள் பூசிக்கொள்வதால் பெண்களின் முகத்திற்கு வசீகரம் உண்டாகும். சருமம் வறட்சியடைவதில்லை. முதுமைக்குரிய குறிகளைக் தோற்றுவிப்பதில்லை. இரத்தக்கட்டை அகற்றுவதில் மஞ்சளுக்கு ஈடான மருந்து வேறில்லை. மஞ்சளை நல்லெண்ணெயிலிட்டு காய்ச்சி தைலத்தை உடம்பில் தேய்த்துக் குளித்து வந்தால் சரும நோய்கள் தோன்றாது. பெண்களுக்கு ஏற்படும் ‘ஹிஸ்டீரியா’ எனும் நோய்க்கு மஞ்சள்புகை நல்ல மருந்து.

மங்கல உணர்வுடன், மஞ்சளிலிருந்து தயாரிக்கப்படும் குங்குமம் போன்ற பொருட்கள் நமது இந்துப் பெண்களுக்கு சிக்கனமான நாட்டு ஒப்பனைச் சாதனங்களாகப் பயன்படுகின்றன. உடல் முழுவதும் மஞ்சள் தேய்த்துக் குளிப்பதால், சருமம் பொலிவடைகிறது.

மஞ்சளில் உடலின் நிறமியை ஊக்குவிக்கும் வைட்டமின்கள் நிறைந்து காணப்படுகின்றன. பல சரும நோய்களுக்கு பச்சை மஞ்சள் கிழங்குளின் சாறு ஓட்டயிர்க் கொல்லியாகப் பயன்படும். பெரியம்மை நோய்க்கு மஞ்சளை, நல்லெண்ணெய், வேப்பிலையுடன் அரைத்து தடவ வடுக்களை அகற்றி, கிருமிகளை அழித்து, உடலுக்கு வனப்பைக் கொடுக்கும்.

இந்திய மருத்துவத் துறையில் மருத்துவத் தைலங்கள், களிம்புகள் தயாரிப்பிலும் மஞ்சள் முக்கிய இடம் பெற்றுள்ளன. தோலின் அதிகப்படியான எண்ணெய்ப் பசையைப் போக்கக் கூடிய திறன் கொண்டது. புண்களை விரைந்து ஆற்றக்கூடியது.

வீக்கங்களைப் போக்குவதில் மஞ்சளுக்கு அதிக சக்தி உள்ளது. தோல் நோய்கள் அனைத்திற்கும் மருந்தாகிறது. மஞ்சளுக்கு ‘கொலஸ்டிரால்’ அளவினைக் குறைக்கும் திறனும் உண்டு.

பருவ வயதில் தோன்றும் முகப்பருக்களைத் தடுப்பதோடு அவற்றுக்கு சிகிச்சையாகவும் மஞ்சளின் நஞ்சடைத் தன்மைகள் பயன்படுகின்றன. பெண்களின் உடலிலுள்ள வேண்டாத ரோமங்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தகிறது.
இது மூன்று அடி வரை தோகையுடன் வளரக் கூடியது. பூமியில் மிருதுவான மணற்பாங்கான இடங்களில் இஞ்சியைப் போன்று பயிராகிறது. வயிற்றில் புண்கள் இருந்தால் அதை ஆற்றும் சக்தி மஞ்சளுக்குண்டு. புண்களில் உள்ள சீழை வெளியேற்றும்.


பித்த வெடிப்பு :

காம்பு நீக்கி சீத்தா இலை 10, 1 முட்டை வெள்ளைக்கரு, 1 அங்குல பச்சை மஞ்சள் மூன்றையும் கலந்து மைய அரைத்துக் கொள்ள வேண்டும். இரவில் படுக்கைக்குப் போகுமுன் கால்களை சுத்தமாக்கி பின் இக்களிம்பை தடவி வெள்ளை துணியால் சுற்றிக் கொண்டு உறங்க வேண்டும். காலையில் வெதுவெதுப்பான நீரில் உப்பு போட்டு பாதங்களைக் கழுவி, ஈரம் போகத் துடைக்க வேண்டும். தொடர்ந்து 4 நாட்கள் செய்ய பித்த வெடிப்பு குணமாகும்.
ஆழமற்ற வடுக்கள் என்றால் மஞ்சள்பொடி, திருநீறு இரண்டையும் சமஅளவு எடுத்துக் கலந்து வைத்துக் கொண்டு பவுடர் போல் பாதிக்கப்பட்ட இடங்களில் பூசினால் குணமாகும்.

மஞ்சளைச் சாதத்துடன் சேர்த்தரைத்துக் கட்டிகளின் மீது வைத்துக்கட்ட அவைகள் எளிதில் பழுத்துடையும். மஞ்சளைக் சுட்டு முகர நீரேற்றம் நீங்கும். மஞ்சளுடன் ஆடாதோடா பாலை இலை சேர்த்து பசுவின் நீரை விட்டரைத்துப் பூச சொறி, சிரங்கு, நமைப்படைகள் ஒழியும். மஞ்சள் நீரை அருந்த காமாலை போகும். மஞ்சளை அரைத்து நீரிற்கலக்கி, வெண்சீலைக்குச் சாயமேற்றி அவ்வாடையை உடுப்பதால் வாதநீர்ச்சுருக்கு, இருமல், ஜுரம், மலக்கட்டு இவை நிங்கும்.

மஞ்சள் நீரில் நனைத்த துணியினை நிழலிலுர்த்தி வைத்துக் கொண்டு கண்நோய் உள்ளவர்கள் கண்களை அப்போதைக்கப்போது துடைத்துவர கண் சிவப்பு, கண்ணருகல், கண்ணில் நீர் கோர்த்தல் போன்றவை தணியும்.

- விஜயகுமாரி பாஸ்கரன்
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum