Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
+11
poovizhi
கண்ணன்
சிவா
பிரபாகரன் ஒற்றன்
kram
Dr.S.Soundarapandian
heezulia
T.N.Balasubramanian
aeroboy2000
தமிழ்நேசன்1981
ரா.ரமேஷ்குமார்
15 posters
ஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: கதைகள் :: நாவல்கள்
Page 17 of 19
Page 17 of 19 • 1 ... 10 ... 16, 17, 18, 19
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
First topic message reminder :
ஈகரை வாசர்களுக்கு இனிய வணக்கங்கள்..!
சாகித்திய அகாதெமி விருது பெற்ற "காவல் கோட்டம்" (அரவான் படத்தின் மூலகதை) ஆசிரியர் சு.வெங்கடேசன் அவர்கள் விகடனில் எழுதி வரும் புதிய வரலாற்று தொடரை உங்களுடன் பகிர இந்த திரியை தொடங்குகிறேன்...
"வீரயுக நாயகன் வேள் பாரி" என்ற இந்த வரலாற்று தொடரை எழுதி வரும் சு.வெங்கடேசன், ஓவியர் மணியம் செல்வன் மற்றும் விகடன் பிரசுரத்தார்கள் அனைவருக்கும் ஈகரை நண்பர்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்..
முன்னுரை
இளைப்பாற நிழலின்றித் தவிக்கும் வழிப்போக்கனின் கண்ணில் படும் பெரும் ஆலமரம்போல, மூவேந்தர்களும் மன்னர்கள் பலரும் ஆண்ட தமிழகத்தில், தவித்தலைந்த உயிர்களுக்காகத் தன்னையே தந்தவன் வேள்பாரி.
தன்னலமற்ற கொடை உள்ளத்தாலும், அன்புவழிப்பட்ட வாழ்வியல் மரபாலும் பாரியின் புகழ் தமிழ் நிலம் எங்கும் பரவியது. மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டியர்கள் அவன் புகழ் கண்டு வெதும்பினர். பறம்பு நாட்டின் நிலவளம் அவர்களின் கண்களை உறுத்தியது. பாரிக்கு எதிராகத் தனித்தனியே அவர்கள் மேற்கொண்ட போர் முயற்சிகள் கைகூடவில்லை. இறுதியில் மூவேந்தர்களும் ஒன்றிணைந்தனர். அவர்களின் கூட்டுப்படை பாரியின் பறம்புநாட்டை அனைத்துத் திசைகளில் இருந்தும் ஒருசேரத் தாக்கியது. சின்னஞ்சிறு `டிராய்’ நகரின் மீது மொத்த கிரேக்கப் படையும் போர் தொடுத்ததைப் போலத்தான் இதுவும் நிகழ்ந்தது.
தலையானங்கானத்துப் போர், வெண்ணிலைப் போர், வாகைப் பறந்தலைப் போர், கழுமலப் போர் என சங்ககாலத் தமிழகம், குருதி பெருக்கெடுத்து ஓடிய எண்ணற்ற போர்க்களங்களைக் கண்டது. அங்கெல்லாம் நடைபெற்ற போரில் மூவேந்தர்களில் யாரேனும் ஒருவர் வெற்றிபெற்றார்.
மற்றவர்கள் தோற்றோடினர். ஆனால், `பறம்புமலைப் போரில்’ மட்டுமே மூவேந்தர்களும் ஒருசேர தோல்வியைத் தழுவினர். தமிழக வரலாற்றில் அதற்கு முன்பும் அதற்குப் பின்பும் நிகழாத வீரச்சரித்திரம் இது.
பெரும் நிலப்பரப்பை ஆண்ட மூவேந்தர்களின் கூட்டுப்படை, ஒரு குறுநில மன்னனால் சிதறடிக்கப்பட்டது. அதன் பின் மூவேந்தர்களும் ஒன்றாய் சதிசெய்து, வஞ்சினம் நிகழ்த்தி, பாரியின் உயிர் பறித்தனர். வீரத்தால் சாதிக்க முடியாததை துரோகம் செய்து முடித்தது.
வென்றவர்களின் பெயர்கள் இன்று வரை துலங்கவில்லை. ஆனால் வீழ்த்தப்பட்ட பாரி, வரலாற்றில் ஒளிரும் நட்சத்திரமானான்; வள்ளல் என்ற சொல்லின் வடிவமானான். முல்லைக்கொடிக்குத் தேரைத் தந்தவன் மட்டும் அல்ல... தனது வீரத்தால் என்றும் ஒளிவீசும் வெற்றிக்கொடியை நாட்டிச்சென்றவன் வேள்பாரி.
இயற்கைக்கும் மனிதனின் பேராசைக்கும் இடையில் இன்று நடக்கும் போராட்டத்தின் ஆதிவடிவம்தான் வேள்பாரியின் கதை. திரும்பும் திசையெல்லாம் அருவி கொட்டும் குறிஞ்சி நிலத்தில், அந்த அருவி நீரினும் குழுமையுடை பாரியின் கரம்பற்றி நடக்க வாருங்கள்...
"வீரயுக நாயகன் வேள் பாரி"
ஈகரை வாசர்களுக்கு இனிய வணக்கங்கள்..!
சாகித்திய அகாதெமி விருது பெற்ற "காவல் கோட்டம்" (அரவான் படத்தின் மூலகதை) ஆசிரியர் சு.வெங்கடேசன் அவர்கள் விகடனில் எழுதி வரும் புதிய வரலாற்று தொடரை உங்களுடன் பகிர இந்த திரியை தொடங்குகிறேன்...
"வீரயுக நாயகன் வேள் பாரி" என்ற இந்த வரலாற்று தொடரை எழுதி வரும் சு.வெங்கடேசன், ஓவியர் மணியம் செல்வன் மற்றும் விகடன் பிரசுரத்தார்கள் அனைவருக்கும் ஈகரை நண்பர்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்..
ஆசிரியர் : சு.வெங்கடேசன், ஓவியங்கள்: ம.செ., , விகடன்
முன்னுரை
இளைப்பாற நிழலின்றித் தவிக்கும் வழிப்போக்கனின் கண்ணில் படும் பெரும் ஆலமரம்போல, மூவேந்தர்களும் மன்னர்கள் பலரும் ஆண்ட தமிழகத்தில், தவித்தலைந்த உயிர்களுக்காகத் தன்னையே தந்தவன் வேள்பாரி.
தன்னலமற்ற கொடை உள்ளத்தாலும், அன்புவழிப்பட்ட வாழ்வியல் மரபாலும் பாரியின் புகழ் தமிழ் நிலம் எங்கும் பரவியது. மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டியர்கள் அவன் புகழ் கண்டு வெதும்பினர். பறம்பு நாட்டின் நிலவளம் அவர்களின் கண்களை உறுத்தியது. பாரிக்கு எதிராகத் தனித்தனியே அவர்கள் மேற்கொண்ட போர் முயற்சிகள் கைகூடவில்லை. இறுதியில் மூவேந்தர்களும் ஒன்றிணைந்தனர். அவர்களின் கூட்டுப்படை பாரியின் பறம்புநாட்டை அனைத்துத் திசைகளில் இருந்தும் ஒருசேரத் தாக்கியது. சின்னஞ்சிறு `டிராய்’ நகரின் மீது மொத்த கிரேக்கப் படையும் போர் தொடுத்ததைப் போலத்தான் இதுவும் நிகழ்ந்தது.
தலையானங்கானத்துப் போர், வெண்ணிலைப் போர், வாகைப் பறந்தலைப் போர், கழுமலப் போர் என சங்ககாலத் தமிழகம், குருதி பெருக்கெடுத்து ஓடிய எண்ணற்ற போர்க்களங்களைக் கண்டது. அங்கெல்லாம் நடைபெற்ற போரில் மூவேந்தர்களில் யாரேனும் ஒருவர் வெற்றிபெற்றார்.
மற்றவர்கள் தோற்றோடினர். ஆனால், `பறம்புமலைப் போரில்’ மட்டுமே மூவேந்தர்களும் ஒருசேர தோல்வியைத் தழுவினர். தமிழக வரலாற்றில் அதற்கு முன்பும் அதற்குப் பின்பும் நிகழாத வீரச்சரித்திரம் இது.
பெரும் நிலப்பரப்பை ஆண்ட மூவேந்தர்களின் கூட்டுப்படை, ஒரு குறுநில மன்னனால் சிதறடிக்கப்பட்டது. அதன் பின் மூவேந்தர்களும் ஒன்றாய் சதிசெய்து, வஞ்சினம் நிகழ்த்தி, பாரியின் உயிர் பறித்தனர். வீரத்தால் சாதிக்க முடியாததை துரோகம் செய்து முடித்தது.
வென்றவர்களின் பெயர்கள் இன்று வரை துலங்கவில்லை. ஆனால் வீழ்த்தப்பட்ட பாரி, வரலாற்றில் ஒளிரும் நட்சத்திரமானான்; வள்ளல் என்ற சொல்லின் வடிவமானான். முல்லைக்கொடிக்குத் தேரைத் தந்தவன் மட்டும் அல்ல... தனது வீரத்தால் என்றும் ஒளிவீசும் வெற்றிக்கொடியை நாட்டிச்சென்றவன் வேள்பாரி.
இயற்கைக்கும் மனிதனின் பேராசைக்கும் இடையில் இன்று நடக்கும் போராட்டத்தின் ஆதிவடிவம்தான் வேள்பாரியின் கதை. திரும்பும் திசையெல்லாம் அருவி கொட்டும் குறிஞ்சி நிலத்தில், அந்த அருவி நீரினும் குழுமையுடை பாரியின் கரம்பற்றி நடக்க வாருங்கள்...
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Readre இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
தொடரை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்
கண்ணன்- இளையநிலா
- பதிவுகள் : 306
இணைந்தது : 17/10/2014
Re: வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
நாளை காலை 6 மணி வரை காத்திருக்க வேண்டும் நண்பரே ... காத்திருப்பும் ஒரு சுகம் தான் வேள்பாரிக்கு...
வசீகரிக்கும் ஒரு வரலாற்று தொடர்...#வேள்பாரி
வசீகரிக்கும் ஒரு வரலாற்று தொடர்...#வேள்பாரி
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
வீரயுக நாயகன் வேள்பாரி - 106
சு. வெங்கடேசன் | ஓவியங்கள்: ம.செ.,
வேந்தர் தரப்பினர் நடுங்கி நின்றனர். திசைவேழரின் கூற்று யாரும் எதிர்பார்த்திராத ஒன்று. அதை யாராலும் எதிர்கொள்ள முடியவில்லை. ஆனால், எதிர்கொண்டே ஆகவேண்டும். என்ன செய்வதென்று முடிவெடுக்க முடியாமல் திணறினர்.
அமைச்சன் ஆதிநந்தி பேச முன்வந்தபோது, குலசேகரபாண்டியன் தனது கையசைவில் அதை நிறுத்தினார். அவரது கண் பார்வை மையூர்கிழாரை நோக்கிப் போனது. அவர் எந்த அவையிலும் வலிமையான உரையாடலை முன்வைக்கக்கூடியவர். இப்போது அவர் தளபதியாக இருந்தாலும் திசைவேழரை எதிர்கொள்ள அவரே பொருத்தமானவர் என்று குலசேகரபாண்டியனுக்குத் தோன்றியது.
பேரரசரின் கண்ணசைவில் உத்தரவைப் புரிந்துகொண்டார் மையூர்கிழார். இருக்கும் இடத்திலிருந்து சற்று முன்வந்து பெருங்குரலெடுத்துக் கூறினார், ``திசைவேழரை வணங்குகிறேன். எதன் அடிப்படையில் இந்தக் குற்றச்சாட்டைக் கூறுகிறீர்?”
``போரின் விதி மீறப்பட்டதாக நிலைமான் கோல்சொல்லி கூறிவிட்டால் தண்டனையைத் தாழ்ந்து பெறவேண்டும். அதுதான் விதி.”
``நான் விதியை மீறவில்லை. விளக்கம்தான் கேட்கிறேன்.”
``என்ன விளக்கம் வேண்டும் உனக்கு?”
``அவர்கள் இருவரும் விதியை மீறியதாக நீங்கள் சொல்வதற்கான விளக்கம்?”
``போர் முடிவுறும் முரசின் ஓசை கேட்கும்போது பறம்பின் குதிரைப்படைத் தளபதி இரவாதன் கூடாரத்தினுள் இருந்த நீலனை வெளியில் அழைத்துவந்துவிட்டான். ஆனால், முரசின் ஓசை கேட்டதும் தனது ஆயுதங்களைத் தாழ்த்தி அப்படியே நின்றான். மூஞ்சலை விட்டு வெளியேறாத நிலை என்பதால், நீலனை மீண்டும் கூடாரத்துக்குள் அனுப்பினான். போர் முடிவுற்ற பிறகு மூஞ்சலை விட்டு வெளியேற்றக் கூடாது என்பதால் அப்படிச் செய்தான்.
நீலன் கூடாரத்துக்குள் நுழைவதைப் பார்த்துக்கொண்டே நின்றிருந்த இரவாதனை, பின்புறமிருந்து பொதியவெற்பனும் சோழவேழனும் சரமாரியாக அம்பெய்தித் தாக்கினர். அவர்களுடன் படையணியினரும் சேர்ந்து தாக்கினர். போர் முடிவுற்ற பிறகு ஆயுதங்களைத் தாழ்த்தி நின்றுகொண்டிருந்தவனை விதிகளை மீறிக் கொலைசெய்தனர் இருவரும்.”
சொல்லி முடிக்கும் முன் சினம்கொண்டு கத்தினான் சோழவேழன், ``நாங்கள் அதற்கு முன்பே அம்பெய்திவிட்டோம்.”
``நாங்கள் அம்பெய்திய பிறகுதான் உங்களின் முரசின் ஓசை கேட்டது” என்று உரக்கக் குரல்கொடுத்தான் பொதியவெற்பன்.
திசைவேழரின் உடல் நடுங்கியது. தனது கூற்றை மறுத்து மேலெழும் சொற்களை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இடைவெளியின்றி மையூர்கிழாரின் குரலும் மேலெழுந்து வந்தது, ``அரசப்பெருமக்கள் சொல்லும் விளக்கம் ஏற்புடையதா திசைவேழரே?”
மேலேறிய சினத்தைக் கட்டுப்படுத்தியபடி சொன்னார், ``நிலைமான் கோல்சொல்லி ஒரு பொய்யின் மீது விளக்கம் அளிக்கும் அளவுக்குத் தாழ்ந்துவிடவில்லை.”
மையூர்கிழார் சற்றே அதிர்ச்சியானார். திசைவேழரைக் கைக்கொள்வது எளிதன்று என்பது தெரியும். ஆனாலும் அவரின் குணமறிந்து உரையாடலை வேறு திசைக்குத் திருப்புவதே இப்போதிருக்கும் ஒரே வழி எனத் தோன்றியது. ``நான் பொய்யின் மீது விளக்கம் கேட்கவில்லை திசைவேழரே! அவர்களின் கூற்றுக்குப் பிறகு உங்களின் குற்றச்சாட்டின் மீதான விளக்கத்தைத் தெரிந்துகொள்ளவே கேட்கிறேன்.”
``நான் சொல்வது குற்றச்சாட்டன்று, தீர்ப்பு.”
எந்தச் சொல்லாலும் தான் அதிர்ச்சிக்குள்ளாக வில்லை என்பதைக் காட்டிக்கொள்ள இடைவெளியின்றி மையூர்கிழார் சொன்னார், ``உண்மைதான் திசைவேழரே. நீங்கள் சொல்வது தீர்ப்புதான். நான் கேட்பது அந்தத் தீர்ப்பின் மீதான சிறிய விளக்கம் மட்டுமே.”
``இன்னும் என்ன விளக்கம் தேவை?”
``முரசின் ஓசைக்கு முன்பே அவர்கள் அம்பெய்திவிட்டதாகக் கூறுகின்றனரே?’’
``அவர்கள் இருவரும் இரவாதனின் தாக்குதலைக் கண்டு அதிர்ச்சியாகி நின்றிருந்தனர். கடைசி நாழிகையில் நீண்டநேரம் அவர்கள் அம்பெய்யவில்லை. முரசின் ஓசை கேட்ட பிறகு, இரவாதன் ஆயுதங்களைத் தாழ்த்தி உள்நுழையும் நீலனை ஏக்கத்தோடு பார்த்துக்கொண்டிருக்கும் போதுதான் இவர்கள் பின்னாலிருந்து அம்பெய்தனர். அதாவது, போரிட்டுக்கொண்டி ருக்கையில் இரவாதனை ஒன்றும் செய்ய முடியவில்லை. முரசின் ஓசை கேட்டு அவன் ஆயுதங்களைத் தாழ்த்திய பிறகு கோழைகளைப்போல, பின்னாலிருந்து தாக்கினர்.”
``என் தந்தையை `கோழை’ என்றா சொல்கிறீர்?” எனத் துடித்தெழுந்தான் செங்கனச்சோழன். பாண்டிய இளவரசனை இகழ்வதற்கு எதிராகக் கருங்கைவாணனின் குரல் அதைவிட மேலேறிவந்தது.
எதிர்த் தாக்குதலைப்போல மற்றவர்களை உரத்துக் குரல்கொடுக்க இடம் தந்துவிட்டு, அதே நேரத்தில் தான் பணிந்து கேட்பதைப் போன்ற குரலில் மையூர்கிழார் கேட்டார், ``எம் தரப்பு நிலைமான் கோல்சொல்லி நீங்கள். உங்களிடமிருந்து நான் தெளிவு பெறவே விரும்புகிறேன். எனவே, தவறாகக் கருதவேண்டாம். நீங்கள் நின்றிருக்கும் இந்தப் பரணிலிருந்து வெகுதொலைவில் இருக்கிறது மூஞ்சல். அங்கு போர் நடந்துகொண்டிருந்தது. அம்பெய்தது முரசின் ஓசைக்கு முன்பா... பின்பா... என்பதை இங்கிருந்து கணிப்பது எளிதல்லவே!”
``இங்கிருந்து மூஞ்சல் எவ்வளவு தொலைவில் இருக்கிறது?”
``இரண்டு காதத் தொலைவில் இருக்கிறது.”
``அதோ அந்த விண்மீன் கூட்டம் எவ்வளவு தொலைவில் இருக்கிறது?”
வானத்தில் ஒளிரும் விண்மீன்களைக் காட்டி திசைவேழர் கேட்டதும் சற்றே அதிர்ந்து நின்றார் மையூர்கிழார். சட்டென விடை சொல்லவில்லை. இதற்கு விடை சொன்னால் திசைவேழர் அடுத்து என்ன சொல்வார் என்பதை உணர முடிந்தது. தலைநிமிர்ந்து விரிந்த கண்களால் வானத்தைப் பார்த்தார் மையூர்கிழார்.
இரலிமேட்டின் குகையடிவாரத்துக்குக் கொண்டுவரப்பட்ட சூளூர் வீரர்களின் உடல்கள், வரிசையாக வைக்கப்பட்டுக்கொண்டிருந்தன. இன்னும் சில வீரர்களின் உடல்களே வரவேண்டியிருந்தன. அனைவரையும் புதைப்பதற்கான ஏற்பாடுகள் இன்னொரு பக்கம் நடந்துகொண்டிருந்தன.
போர்க்காலத்தில் இறுதிச்சடங்குகளை விரைவில் முடித்தாகவேண்டும். அப்போதுதான் அந்தத் தாக்கத்திலிருந்து மற்ற வீரர்கள் வேகமாக வெளிவருவர். அதன்பிறகு அவர்கள் தூங்கியெழுந்து மறுநாள் போருக்கு ஆயத்தமாக வேண்டும். உடல்நிலையும் மனநிலையும் போர்க்களத்துக்கான முழுத் தகுதிகொண்டிருக்க வேண்டும். எனவே, மரணத்தை ஒரு வாள்வீச்சுபோல கணப்பொழுதில் கடந்தாக வேண்டும். அதுதான் போர்க்களத்தின் விதி. வீசிச் சென்ற வாள், காற்றில் தனது தடத்தை விட்டுவைப்பதில்லை. அதேபோல்தான் வீரனின் நினைவுகள் போர்க்களத்தில் தங்கக் கூடாது. எல்லாம் உடனடியாக அகற்றப்பட்டாக வேண்டும்.
ஆனால், அங்கு அடுக்கி வைக்கப்பட்டுள்ளவை மாவீரர்களின் உடல்கள். அதனால்தான் உயிரோடு இருக்கும் ஒவ்வொரு வீரரும் அவர்களின் குருதியை எடுத்து மார்பெங்கும் பூசி வஞ்சினம் உரைத்தனர். அவர்கள் பயன்படுத்திய ஆயுதங்களைத் தனதாக்கத் துடித்தனர். அவர்களின் வீரம் தங்களின் உடலெங்கும் நிலைகொள்ள வேண்டும் என வேண்டினர். சூளூர் வீரர்கள் ஒவ்வொருவரின் பெயரையும் சொல்லி, காடு அதிரக் கத்தினர். ஆவேச உணர்வு எங்கும் பீறிட்டுக்கொண்டிருந்தது. காரமலையெங்கும் குரலின் வழியே சினத்தை நிறுத்தினர்.
தனித்திருக்கும் கரும்பாறைப் படுக்கையில் கிடத்தப்பட்டிருந்தது இரவாதனின் உடல். அவன் தலைக்கு மேல் பெருந்தீப்பந்தம் ஒன்று எரிந்துகொண்டிருந்தது. அந்தப் பந்தச்சுடரின் செந்நிற வெளிச்சம் குருதியைப் பீச்சிக்கொண்டிருந்தது. சுடரும் குருதியின் பேரொளி தனது உடலின் மேல் விழ ஒவ்வொரு வீரனும் முண்டியடித்து உள்நுழைந்து கொண்டிருந்தான். நிலைமை இப்படியே போனால் இரவு முழுமையும் கழிந்துவிடும். தூக்கமே இன்றித்தான் நாளை பறம்பு வீரர்கள் போர்க்களத்தில் நிற்கவேண்டிய நிலை ஏற்படும் என்று சிந்தித்த வாரிக்கையன், தேக்கனை அழைத்துவந்து விரைவாக இறுதி நிகழ்வை முடிக்கவேண்டும் எனத் திட்டமிட்டான்.
தேக்கனை உடனே அழைத்துவரச் சொல்லி அவனது குடில் நோக்கி வீரன் ஒருவனை அனுப்பிவைத்தான்.
பள்ளத்தாக்கில் இரவாதனைப் பாரியிடம் ஒப்படைத்த தேக்கன், தனது குடிலுக்கு வந்துசேர்ந்தான். அவனது எண்ண ஓட்டங்கள் நிலைகொள்ளாமலிருந்தன. எவ்வளவு பெரிய நெருக்கடியிலும் இடரிலும் கலங்காது முடிவெடுக்கும் ஆற்றலைப் பறம்புநாட்டுத் தேக்கன்கள் இழப்பதில்லை. ஆனால், தன்னால் தெளிவாக முடிவெடுக்க முடியவில்லையே என்ற பதற்றம் முதன்முறையாகத் தேக்கனுக்கு ஏற்பட்டது.
போர்க்களத்தை, அதன் போக்கை, வேந்தர்படையின் தாக்குதல் உத்திகளை, பறம்புப்படையின் வலிமையை எல்லாம் மீண்டும் மீண்டும் நினைத்துப்பார்த்தபடியே இருந்தான். பறம்புநாட்டுத் தேக்கனாக, தான் இந்தக் கணம் எடுக்கவேண்டிய முடிவென்ன என்ற கேள்வியை எழுப்பி வெவ்வேறு விடைகளை அதற்குப் பொருத்திப் பார்த்தான். ஒவ்வொரு விடைக்கும் ஒவ்வொரு விளைவு இருந்தது. எந்த முடிவு என்ன விளைவை உருவாக்கும் என்பதை ஓரளவு தெளிவாக உணர முடிந்தது. ஆனால், போர்க்களத்தில் எல்லாவற்றையும் துல்லியமாக முன்னுணரவும் முன்திட்டமிடவும் முடியாது. எனவே, கேள்விகளை எல்லாவிதமான வாய்ப்புகளின் வழியேயும் மீண்டும் மீண்டும் கேட்டபடியே இருந்தான்.
குடிலின் படல் திறந்து உள்நுழைந்தான். வெளியில் எரிந்துகொண்டிருந்த பந்தத்திலிருந்து விளக்கை ஏற்றிக் குடிலுக்குள் கொண்டுவந்து வைத்தான். வழக்கமாக தேக்கனுக்குப் பணிவிடை செய்ய அங்கு இருக்கும் வீரர்கள் எல்லோரும் இரலிமேட்டுக்குப் போய்விட்டனர். யாரும் அங்கு இல்லை.
தனது இருக்கையில் அமர்ந்தான். `போர்க்களத்தில் போரிடத் தகுதியின்றி பறம்பு ஆசான் நிற்பது எவ்வளவு பெரிய இழப்புகளை உருவாக்கிக்கொண்டிருக்கிறது. நான் முழு ஆற்றலோடு இன்று களத்தில் நின்றிருந்தால் முடியனோ, நானோ மூஞ்சலை அடைந்திருப்போம். இரவாதனை இழந்திருக்க மாட்டோம். ஆயுதங்களைக் கைக்கொள்ள முடியாத எனது இருப்பு, பறம்பு வீரர்களுக்கான மரண வழித்தடமாக மாறி நிற்கிறது.
நான் இருக்கும் வரை, பாரி பறம்பின் எல்லையை விட்டு வெளிவந்து களமிறங்க முடியாது. பாரி களம் இறங்காதவரை இதுபோன்ற இழப்புகளைத் தவிர்க்க முடியாது. பறம்புநாட்டு மாவீரர்களையும் இணையற்ற போராளிகளையும் இனியும் நாம் போர்க்களத்தில் பலிகொடுக்கக் கூடாது. அதற்கு இருக்கும் ஒரே வழி, பாரி களம் இறங்க நான் வழிவிடுதல் மட்டுமே’ - எண்ணங்களை ஒருங்கிணைத்து முடிவுக்கு வந்தான். இதைவிடச் சிறந்த முடிவெதுவும் அவனுக்குப் புலப்படவில்லை. எனவே, முடிவைச் செயல்படுத்தும் பணியைத் தொடங்கினான்.
கடந்த சில நாள்களாகப் பயன்படுத்தாமல் இருந்த அவனது வில், குடிலின் ஓரத்தில் சாய்த்து வைக்கப்பட்டிருந்தது. எழுந்து போய் அதை எடுத்து வந்தான். இருக்கையில் உட்கார்ந்தபடியே நாணை இறுக்கிக் கட்டினான். அம்பறாத்தூணியைக் கண்கள் தேடின. மேல்மூங்கிலில் அது தொங்கிக்கொண்டிருந்தது.
மீண்டும் எழுந்து போய் அதை எடுக்கவேண்டியிருந்தது. விலாவெலும்பு குத்தி உள்ளிறங்கிக்கொண்டிருந்தாலும் தனக்குப் பிடித்த அம்பை எடுக்க வழக்கம்போல் அவனது கைகள் விரைந்து சென்றன.
போரின் போக்கறிந்து, கடைசி ஐந்து நாழிகை இருக்கும்போது திசைவேழர் இடதுபுறம் இருக்கும் மூன்றாம் பரணுக்கு வந்துசேர்ந்திருந்தார். நடந்தது அனைத்தையும் உன்னிப்பாகக் கவனித்து அறிந்திருந்தார். அவர் சொல்லும் சான்றுகளை மையூர்கிழாரால் மறுக்க முடியவில்லை. சொற்களால் அவருடைய எண்ணங்களைத் திசைதிருப்ப முடியுமா என்று செய்துபார்த்த முயற்சிகளால் எந்தவிதமான பலனும் ஏற்படவில்லை. உரையாடலை இதற்கு மேலும் நீட்டிக்க முடியாத நிலை உருவானது.
அடுத்து என்ன செய்யலாம் என மையூர்கிழார் யோசித்தபடி நின்றிருந்தபோது பாண்டியநாட்டு அமைச்சன் ஆதிநந்தி சொன்னான், ``திசைவேழரை மீண்டும் வணங்குகிறேன். நீங்கள் சொல்லியபடி அவர்கள் முரசின் ஓசை கேட்ட பிறகே அம்பெய்தனர் என வைத்துக்கொள்வோம். போரின் விதிகள் தட்டியங்காட்டுக்குத்தானே பொருந்தும். மூஞ்சல், தட்டியங்காட்டை விட்டு வெளியில்தானே இருக்கிறது.”
திசைவேழரின் சினம் உச்சத்தைத் தொட்டது. கண்களை இறுக மூடி நஞ்சை விழுங்குவதைப்போலக் கேள்வியை விழுங்கினார். ஆனாலும் தனது கடமையிலிருந்து நழுவக் கூடாது என எண்ணியபடி சொன்னார், ``பறம்பு வீரர்கள் நள்ளிரவில் வந்து மூஞ்சலைத் தாக்கியிருந்தால், அவர்கள் போர்விதிகளை மீறிவிட்டார்கள் என்று நீங்கள் சொல்ல மாட்டீர்களா? போர்விதிகள் என்பவை, போரிடும் காலம் முழுவதும் போரிடுபவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நெறிகள். அவை இடத்தோடும் பொழுதோடும் தொடர்புடையவை அல்ல. அந்த நெறிகளைக் கடைப்பிடிக்கும் மனநிலையை நீங்கள் இழந்துவிட்டீர்கள். ஏனென்றால், உங்கள் வீரத்தின் மீது உங்களுக்கு இருந்த நம்பிக்கை பொய்த்துவிட்டது.”
சொல்லின் தாக்குதலால் நிலைகுலைந்து நின்றனர் வேந்தர்கள். திசைவேழர் அதே குரலில் தொடர்ந்தார், ``எனது தண்டனையை ஏற்பதற்கான கடைசி வாய்ப்பை வழங்குகிறேன். பொதியவெற்பனும் சோழவேழனும் இக்கணமே ஆயுதங்களைத் துறந்து போர்க்களம் விட்டு வெளியேறுங்கள்.”
அமைதி அப்படியே நீடித்தது. வேந்தர்களின் முகங்கள் இறுக்கம்கொண்டன. ``கிழவனுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது” என்றான் பொதியவெற்பன். உதியஞ்சேரல் ஏதோ சொல்லவந்தான். அப்போது திசைவேழரின் குரல் முன்னிலும் உரத்து வெளிப்பட்டது.
``போர் விதிமுறைகளை ஏற்று முரசின் ஓசை கேட்டதும் ஆயுதங்களைத் தாழ்த்திய இரவாதனே! உன்னிடம் மன்னிப்பு கோருகிறேன். விதிமுறைகளை மதிக்கத் தெரியாத வேந்தர்படைக்கு நிலைமான் கோல்சொல்லியாக இருந்த நான் இந்தத் தவற்றுக்குப் பொறுப்பேற்று எனக்கு தண்டனை வழங்கிக்கொள்கிறேன்.
வேந்தர் தரப்பினர் நடுங்கி நின்றனர். திசைவேழரின் கூற்று யாரும் எதிர்பார்த்திராத ஒன்று. அதை யாராலும் எதிர்கொள்ள முடியவில்லை. ஆனால், எதிர்கொண்டே ஆகவேண்டும். என்ன செய்வதென்று முடிவெடுக்க முடியாமல் திணறினர்.
அமைச்சன் ஆதிநந்தி பேச முன்வந்தபோது, குலசேகரபாண்டியன் தனது கையசைவில் அதை நிறுத்தினார். அவரது கண் பார்வை மையூர்கிழாரை நோக்கிப் போனது. அவர் எந்த அவையிலும் வலிமையான உரையாடலை முன்வைக்கக்கூடியவர். இப்போது அவர் தளபதியாக இருந்தாலும் திசைவேழரை எதிர்கொள்ள அவரே பொருத்தமானவர் என்று குலசேகரபாண்டியனுக்குத் தோன்றியது.
பேரரசரின் கண்ணசைவில் உத்தரவைப் புரிந்துகொண்டார் மையூர்கிழார். இருக்கும் இடத்திலிருந்து சற்று முன்வந்து பெருங்குரலெடுத்துக் கூறினார், ``திசைவேழரை வணங்குகிறேன். எதன் அடிப்படையில் இந்தக் குற்றச்சாட்டைக் கூறுகிறீர்?”
``போரின் விதி மீறப்பட்டதாக நிலைமான் கோல்சொல்லி கூறிவிட்டால் தண்டனையைத் தாழ்ந்து பெறவேண்டும். அதுதான் விதி.”
``நான் விதியை மீறவில்லை. விளக்கம்தான் கேட்கிறேன்.”
``என்ன விளக்கம் வேண்டும் உனக்கு?”
``அவர்கள் இருவரும் விதியை மீறியதாக நீங்கள் சொல்வதற்கான விளக்கம்?”
``போர் முடிவுறும் முரசின் ஓசை கேட்கும்போது பறம்பின் குதிரைப்படைத் தளபதி இரவாதன் கூடாரத்தினுள் இருந்த நீலனை வெளியில் அழைத்துவந்துவிட்டான். ஆனால், முரசின் ஓசை கேட்டதும் தனது ஆயுதங்களைத் தாழ்த்தி அப்படியே நின்றான். மூஞ்சலை விட்டு வெளியேறாத நிலை என்பதால், நீலனை மீண்டும் கூடாரத்துக்குள் அனுப்பினான். போர் முடிவுற்ற பிறகு மூஞ்சலை விட்டு வெளியேற்றக் கூடாது என்பதால் அப்படிச் செய்தான்.
நீலன் கூடாரத்துக்குள் நுழைவதைப் பார்த்துக்கொண்டே நின்றிருந்த இரவாதனை, பின்புறமிருந்து பொதியவெற்பனும் சோழவேழனும் சரமாரியாக அம்பெய்தித் தாக்கினர். அவர்களுடன் படையணியினரும் சேர்ந்து தாக்கினர். போர் முடிவுற்ற பிறகு ஆயுதங்களைத் தாழ்த்தி நின்றுகொண்டிருந்தவனை விதிகளை மீறிக் கொலைசெய்தனர் இருவரும்.”
சொல்லி முடிக்கும் முன் சினம்கொண்டு கத்தினான் சோழவேழன், ``நாங்கள் அதற்கு முன்பே அம்பெய்திவிட்டோம்.”
``நாங்கள் அம்பெய்திய பிறகுதான் உங்களின் முரசின் ஓசை கேட்டது” என்று உரக்கக் குரல்கொடுத்தான் பொதியவெற்பன்.
திசைவேழரின் உடல் நடுங்கியது. தனது கூற்றை மறுத்து மேலெழும் சொற்களை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இடைவெளியின்றி மையூர்கிழாரின் குரலும் மேலெழுந்து வந்தது, ``அரசப்பெருமக்கள் சொல்லும் விளக்கம் ஏற்புடையதா திசைவேழரே?”
மேலேறிய சினத்தைக் கட்டுப்படுத்தியபடி சொன்னார், ``நிலைமான் கோல்சொல்லி ஒரு பொய்யின் மீது விளக்கம் அளிக்கும் அளவுக்குத் தாழ்ந்துவிடவில்லை.”
மையூர்கிழார் சற்றே அதிர்ச்சியானார். திசைவேழரைக் கைக்கொள்வது எளிதன்று என்பது தெரியும். ஆனாலும் அவரின் குணமறிந்து உரையாடலை வேறு திசைக்குத் திருப்புவதே இப்போதிருக்கும் ஒரே வழி எனத் தோன்றியது. ``நான் பொய்யின் மீது விளக்கம் கேட்கவில்லை திசைவேழரே! அவர்களின் கூற்றுக்குப் பிறகு உங்களின் குற்றச்சாட்டின் மீதான விளக்கத்தைத் தெரிந்துகொள்ளவே கேட்கிறேன்.”
``நான் சொல்வது குற்றச்சாட்டன்று, தீர்ப்பு.”
எந்தச் சொல்லாலும் தான் அதிர்ச்சிக்குள்ளாக வில்லை என்பதைக் காட்டிக்கொள்ள இடைவெளியின்றி மையூர்கிழார் சொன்னார், ``உண்மைதான் திசைவேழரே. நீங்கள் சொல்வது தீர்ப்புதான். நான் கேட்பது அந்தத் தீர்ப்பின் மீதான சிறிய விளக்கம் மட்டுமே.”
``இன்னும் என்ன விளக்கம் தேவை?”
``முரசின் ஓசைக்கு முன்பே அவர்கள் அம்பெய்திவிட்டதாகக் கூறுகின்றனரே?’’
``அவர்கள் இருவரும் இரவாதனின் தாக்குதலைக் கண்டு அதிர்ச்சியாகி நின்றிருந்தனர். கடைசி நாழிகையில் நீண்டநேரம் அவர்கள் அம்பெய்யவில்லை. முரசின் ஓசை கேட்ட பிறகு, இரவாதன் ஆயுதங்களைத் தாழ்த்தி உள்நுழையும் நீலனை ஏக்கத்தோடு பார்த்துக்கொண்டிருக்கும் போதுதான் இவர்கள் பின்னாலிருந்து அம்பெய்தனர். அதாவது, போரிட்டுக்கொண்டி ருக்கையில் இரவாதனை ஒன்றும் செய்ய முடியவில்லை. முரசின் ஓசை கேட்டு அவன் ஆயுதங்களைத் தாழ்த்திய பிறகு கோழைகளைப்போல, பின்னாலிருந்து தாக்கினர்.”
``என் தந்தையை `கோழை’ என்றா சொல்கிறீர்?” எனத் துடித்தெழுந்தான் செங்கனச்சோழன். பாண்டிய இளவரசனை இகழ்வதற்கு எதிராகக் கருங்கைவாணனின் குரல் அதைவிட மேலேறிவந்தது.
எதிர்த் தாக்குதலைப்போல மற்றவர்களை உரத்துக் குரல்கொடுக்க இடம் தந்துவிட்டு, அதே நேரத்தில் தான் பணிந்து கேட்பதைப் போன்ற குரலில் மையூர்கிழார் கேட்டார், ``எம் தரப்பு நிலைமான் கோல்சொல்லி நீங்கள். உங்களிடமிருந்து நான் தெளிவு பெறவே விரும்புகிறேன். எனவே, தவறாகக் கருதவேண்டாம். நீங்கள் நின்றிருக்கும் இந்தப் பரணிலிருந்து வெகுதொலைவில் இருக்கிறது மூஞ்சல். அங்கு போர் நடந்துகொண்டிருந்தது. அம்பெய்தது முரசின் ஓசைக்கு முன்பா... பின்பா... என்பதை இங்கிருந்து கணிப்பது எளிதல்லவே!”
``இங்கிருந்து மூஞ்சல் எவ்வளவு தொலைவில் இருக்கிறது?”
``இரண்டு காதத் தொலைவில் இருக்கிறது.”
``அதோ அந்த விண்மீன் கூட்டம் எவ்வளவு தொலைவில் இருக்கிறது?”
வானத்தில் ஒளிரும் விண்மீன்களைக் காட்டி திசைவேழர் கேட்டதும் சற்றே அதிர்ந்து நின்றார் மையூர்கிழார். சட்டென விடை சொல்லவில்லை. இதற்கு விடை சொன்னால் திசைவேழர் அடுத்து என்ன சொல்வார் என்பதை உணர முடிந்தது. தலைநிமிர்ந்து விரிந்த கண்களால் வானத்தைப் பார்த்தார் மையூர்கிழார்.
இரலிமேட்டின் குகையடிவாரத்துக்குக் கொண்டுவரப்பட்ட சூளூர் வீரர்களின் உடல்கள், வரிசையாக வைக்கப்பட்டுக்கொண்டிருந்தன. இன்னும் சில வீரர்களின் உடல்களே வரவேண்டியிருந்தன. அனைவரையும் புதைப்பதற்கான ஏற்பாடுகள் இன்னொரு பக்கம் நடந்துகொண்டிருந்தன.
போர்க்காலத்தில் இறுதிச்சடங்குகளை விரைவில் முடித்தாகவேண்டும். அப்போதுதான் அந்தத் தாக்கத்திலிருந்து மற்ற வீரர்கள் வேகமாக வெளிவருவர். அதன்பிறகு அவர்கள் தூங்கியெழுந்து மறுநாள் போருக்கு ஆயத்தமாக வேண்டும். உடல்நிலையும் மனநிலையும் போர்க்களத்துக்கான முழுத் தகுதிகொண்டிருக்க வேண்டும். எனவே, மரணத்தை ஒரு வாள்வீச்சுபோல கணப்பொழுதில் கடந்தாக வேண்டும். அதுதான் போர்க்களத்தின் விதி. வீசிச் சென்ற வாள், காற்றில் தனது தடத்தை விட்டுவைப்பதில்லை. அதேபோல்தான் வீரனின் நினைவுகள் போர்க்களத்தில் தங்கக் கூடாது. எல்லாம் உடனடியாக அகற்றப்பட்டாக வேண்டும்.
ஆனால், அங்கு அடுக்கி வைக்கப்பட்டுள்ளவை மாவீரர்களின் உடல்கள். அதனால்தான் உயிரோடு இருக்கும் ஒவ்வொரு வீரரும் அவர்களின் குருதியை எடுத்து மார்பெங்கும் பூசி வஞ்சினம் உரைத்தனர். அவர்கள் பயன்படுத்திய ஆயுதங்களைத் தனதாக்கத் துடித்தனர். அவர்களின் வீரம் தங்களின் உடலெங்கும் நிலைகொள்ள வேண்டும் என வேண்டினர். சூளூர் வீரர்கள் ஒவ்வொருவரின் பெயரையும் சொல்லி, காடு அதிரக் கத்தினர். ஆவேச உணர்வு எங்கும் பீறிட்டுக்கொண்டிருந்தது. காரமலையெங்கும் குரலின் வழியே சினத்தை நிறுத்தினர்.
தனித்திருக்கும் கரும்பாறைப் படுக்கையில் கிடத்தப்பட்டிருந்தது இரவாதனின் உடல். அவன் தலைக்கு மேல் பெருந்தீப்பந்தம் ஒன்று எரிந்துகொண்டிருந்தது. அந்தப் பந்தச்சுடரின் செந்நிற வெளிச்சம் குருதியைப் பீச்சிக்கொண்டிருந்தது. சுடரும் குருதியின் பேரொளி தனது உடலின் மேல் விழ ஒவ்வொரு வீரனும் முண்டியடித்து உள்நுழைந்து கொண்டிருந்தான். நிலைமை இப்படியே போனால் இரவு முழுமையும் கழிந்துவிடும். தூக்கமே இன்றித்தான் நாளை பறம்பு வீரர்கள் போர்க்களத்தில் நிற்கவேண்டிய நிலை ஏற்படும் என்று சிந்தித்த வாரிக்கையன், தேக்கனை அழைத்துவந்து விரைவாக இறுதி நிகழ்வை முடிக்கவேண்டும் எனத் திட்டமிட்டான்.
தேக்கனை உடனே அழைத்துவரச் சொல்லி அவனது குடில் நோக்கி வீரன் ஒருவனை அனுப்பிவைத்தான்.
பள்ளத்தாக்கில் இரவாதனைப் பாரியிடம் ஒப்படைத்த தேக்கன், தனது குடிலுக்கு வந்துசேர்ந்தான். அவனது எண்ண ஓட்டங்கள் நிலைகொள்ளாமலிருந்தன. எவ்வளவு பெரிய நெருக்கடியிலும் இடரிலும் கலங்காது முடிவெடுக்கும் ஆற்றலைப் பறம்புநாட்டுத் தேக்கன்கள் இழப்பதில்லை. ஆனால், தன்னால் தெளிவாக முடிவெடுக்க முடியவில்லையே என்ற பதற்றம் முதன்முறையாகத் தேக்கனுக்கு ஏற்பட்டது.
போர்க்களத்தை, அதன் போக்கை, வேந்தர்படையின் தாக்குதல் உத்திகளை, பறம்புப்படையின் வலிமையை எல்லாம் மீண்டும் மீண்டும் நினைத்துப்பார்த்தபடியே இருந்தான். பறம்புநாட்டுத் தேக்கனாக, தான் இந்தக் கணம் எடுக்கவேண்டிய முடிவென்ன என்ற கேள்வியை எழுப்பி வெவ்வேறு விடைகளை அதற்குப் பொருத்திப் பார்த்தான். ஒவ்வொரு விடைக்கும் ஒவ்வொரு விளைவு இருந்தது. எந்த முடிவு என்ன விளைவை உருவாக்கும் என்பதை ஓரளவு தெளிவாக உணர முடிந்தது. ஆனால், போர்க்களத்தில் எல்லாவற்றையும் துல்லியமாக முன்னுணரவும் முன்திட்டமிடவும் முடியாது. எனவே, கேள்விகளை எல்லாவிதமான வாய்ப்புகளின் வழியேயும் மீண்டும் மீண்டும் கேட்டபடியே இருந்தான்.
குடிலின் படல் திறந்து உள்நுழைந்தான். வெளியில் எரிந்துகொண்டிருந்த பந்தத்திலிருந்து விளக்கை ஏற்றிக் குடிலுக்குள் கொண்டுவந்து வைத்தான். வழக்கமாக தேக்கனுக்குப் பணிவிடை செய்ய அங்கு இருக்கும் வீரர்கள் எல்லோரும் இரலிமேட்டுக்குப் போய்விட்டனர். யாரும் அங்கு இல்லை.
தனது இருக்கையில் அமர்ந்தான். `போர்க்களத்தில் போரிடத் தகுதியின்றி பறம்பு ஆசான் நிற்பது எவ்வளவு பெரிய இழப்புகளை உருவாக்கிக்கொண்டிருக்கிறது. நான் முழு ஆற்றலோடு இன்று களத்தில் நின்றிருந்தால் முடியனோ, நானோ மூஞ்சலை அடைந்திருப்போம். இரவாதனை இழந்திருக்க மாட்டோம். ஆயுதங்களைக் கைக்கொள்ள முடியாத எனது இருப்பு, பறம்பு வீரர்களுக்கான மரண வழித்தடமாக மாறி நிற்கிறது.
நான் இருக்கும் வரை, பாரி பறம்பின் எல்லையை விட்டு வெளிவந்து களமிறங்க முடியாது. பாரி களம் இறங்காதவரை இதுபோன்ற இழப்புகளைத் தவிர்க்க முடியாது. பறம்புநாட்டு மாவீரர்களையும் இணையற்ற போராளிகளையும் இனியும் நாம் போர்க்களத்தில் பலிகொடுக்கக் கூடாது. அதற்கு இருக்கும் ஒரே வழி, பாரி களம் இறங்க நான் வழிவிடுதல் மட்டுமே’ - எண்ணங்களை ஒருங்கிணைத்து முடிவுக்கு வந்தான். இதைவிடச் சிறந்த முடிவெதுவும் அவனுக்குப் புலப்படவில்லை. எனவே, முடிவைச் செயல்படுத்தும் பணியைத் தொடங்கினான்.
கடந்த சில நாள்களாகப் பயன்படுத்தாமல் இருந்த அவனது வில், குடிலின் ஓரத்தில் சாய்த்து வைக்கப்பட்டிருந்தது. எழுந்து போய் அதை எடுத்து வந்தான். இருக்கையில் உட்கார்ந்தபடியே நாணை இறுக்கிக் கட்டினான். அம்பறாத்தூணியைக் கண்கள் தேடின. மேல்மூங்கிலில் அது தொங்கிக்கொண்டிருந்தது.
மீண்டும் எழுந்து போய் அதை எடுக்கவேண்டியிருந்தது. விலாவெலும்பு குத்தி உள்ளிறங்கிக்கொண்டிருந்தாலும் தனக்குப் பிடித்த அம்பை எடுக்க வழக்கம்போல் அவனது கைகள் விரைந்து சென்றன.
போரின் போக்கறிந்து, கடைசி ஐந்து நாழிகை இருக்கும்போது திசைவேழர் இடதுபுறம் இருக்கும் மூன்றாம் பரணுக்கு வந்துசேர்ந்திருந்தார். நடந்தது அனைத்தையும் உன்னிப்பாகக் கவனித்து அறிந்திருந்தார். அவர் சொல்லும் சான்றுகளை மையூர்கிழாரால் மறுக்க முடியவில்லை. சொற்களால் அவருடைய எண்ணங்களைத் திசைதிருப்ப முடியுமா என்று செய்துபார்த்த முயற்சிகளால் எந்தவிதமான பலனும் ஏற்படவில்லை. உரையாடலை இதற்கு மேலும் நீட்டிக்க முடியாத நிலை உருவானது.
அடுத்து என்ன செய்யலாம் என மையூர்கிழார் யோசித்தபடி நின்றிருந்தபோது பாண்டியநாட்டு அமைச்சன் ஆதிநந்தி சொன்னான், ``திசைவேழரை மீண்டும் வணங்குகிறேன். நீங்கள் சொல்லியபடி அவர்கள் முரசின் ஓசை கேட்ட பிறகே அம்பெய்தனர் என வைத்துக்கொள்வோம். போரின் விதிகள் தட்டியங்காட்டுக்குத்தானே பொருந்தும். மூஞ்சல், தட்டியங்காட்டை விட்டு வெளியில்தானே இருக்கிறது.”
திசைவேழரின் சினம் உச்சத்தைத் தொட்டது. கண்களை இறுக மூடி நஞ்சை விழுங்குவதைப்போலக் கேள்வியை விழுங்கினார். ஆனாலும் தனது கடமையிலிருந்து நழுவக் கூடாது என எண்ணியபடி சொன்னார், ``பறம்பு வீரர்கள் நள்ளிரவில் வந்து மூஞ்சலைத் தாக்கியிருந்தால், அவர்கள் போர்விதிகளை மீறிவிட்டார்கள் என்று நீங்கள் சொல்ல மாட்டீர்களா? போர்விதிகள் என்பவை, போரிடும் காலம் முழுவதும் போரிடுபவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நெறிகள். அவை இடத்தோடும் பொழுதோடும் தொடர்புடையவை அல்ல. அந்த நெறிகளைக் கடைப்பிடிக்கும் மனநிலையை நீங்கள் இழந்துவிட்டீர்கள். ஏனென்றால், உங்கள் வீரத்தின் மீது உங்களுக்கு இருந்த நம்பிக்கை பொய்த்துவிட்டது.”
சொல்லின் தாக்குதலால் நிலைகுலைந்து நின்றனர் வேந்தர்கள். திசைவேழர் அதே குரலில் தொடர்ந்தார், ``எனது தண்டனையை ஏற்பதற்கான கடைசி வாய்ப்பை வழங்குகிறேன். பொதியவெற்பனும் சோழவேழனும் இக்கணமே ஆயுதங்களைத் துறந்து போர்க்களம் விட்டு வெளியேறுங்கள்.”
அமைதி அப்படியே நீடித்தது. வேந்தர்களின் முகங்கள் இறுக்கம்கொண்டன. ``கிழவனுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது” என்றான் பொதியவெற்பன். உதியஞ்சேரல் ஏதோ சொல்லவந்தான். அப்போது திசைவேழரின் குரல் முன்னிலும் உரத்து வெளிப்பட்டது.
``போர் விதிமுறைகளை ஏற்று முரசின் ஓசை கேட்டதும் ஆயுதங்களைத் தாழ்த்திய இரவாதனே! உன்னிடம் மன்னிப்பு கோருகிறேன். விதிமுறைகளை மதிக்கத் தெரியாத வேந்தர்படைக்கு நிலைமான் கோல்சொல்லியாக இருந்த நான் இந்தத் தவற்றுக்குப் பொறுப்பேற்று எனக்கு தண்டனை வழங்கிக்கொள்கிறேன்.
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
வீரயுக நாயகன் வேள் பாரி - 106 - தொடர்ச்சி
இதோ, எனது கண்களுக்கு முன்னால் ஒளிவீசும் விண்மீன்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். ஆனாலும் மனதுக்குள் போரொளியாகச் சுடர்விடுவது மூஞ்சலுக்குள் நீ வெளிப்படுத்திய வீரமே. உன்னைப்போன்ற நெறி பிறழாத மாவீரர்கள் என்றென்றும் போற்றப்படுவீர்கள். நீ இரவாப்புகழுடன் வாழ்வாய்! இரவாதன் மரணமற்றவன் என்பதைக் காலம் உணர்த்தும். தட்டியங்காட்டுப் போரின் நினைவிருக்கும் வரை உனது புகழ் இருக்கும்!”
சொல்லியபடி பரணின் முன்புறமிருந்த கம்பங்களை விட்டு, பின்புறமாக வந்து தனது சிற்றிருக்கையில் அமர்ந்தார். உடலெங்கும் இருந்த நடுக்கம் வடிந்து அமைதிகொண்டது.
`என்ன செய்யப்போகிறார் திசைவேழர்?’ என்று பதற்றம்கொண்டார் கபிலர்.
திசைவேழரோ, இருக்கையில் அமர்ந்ததும் தனக்கு எதிரே நாழிகை வட்டிலில் இருந்த நாழிகைக்கோல் இரண்டையும் தன் இரு கைகளிலும் எடுத்து மேலேந்தினார்.
கால்விரல்களால் நாணை அழுத்திக்கொண்டு வலதுகையால் வில்லை இழுத்து மேலே தூக்கினான் தேக்கன். கால்விரல்கள் இரண்டும் அம்பைக் கவ்விப்பிடித்திருந்தன. அம்பின் முனை நடுவயிற்றின் விலாவெலும்புக் குழியில் இருந்தது. கால்விரல்களை அழுத்திக்கொண்டு வலதுகையால் வில்லை மேல்நோக்கி நன்றாக இழுத்து விசையைக் கூட்டினான்.
அண்ணாந்து மேலே பார்த்தார் திசைவேழர். வானில் உள்ள அனைத்து விண்மீன்களும் அவருடைய கண்களையே பார்த்துக்கொண்டி ருந்தன. கருவிழிகள் முழுச் சுற்றுச் சுற்றி வட்டமடித்தன. இரு கைகளிலும் ஏந்திய கூர்முனைகொண்ட நாழிகைக்கோல்களை, தனது குரல்வளையை நோக்கி இறுக உட்செலுத்தினார்.
கால்விரல்கள் விடுவித்த கணத்தில் விசைகொண்ட அம்பின் முனை, விலாவெலும்புக் குழிக்குள் புகுந்து பின்புறமாக எகிறியது.
இரு கைகளாலும் இழுத்துக் குத்தப்பட்ட நாழிகைக்கோல்கள் நெஞ்சுக்குழிக்குள் கீழிறங்கின. குருதி கொப்பளித்து மேல்வர, தேக்கனும் திசைவேழரும் மெள்ள சாய்ந்தனர். கண்களின் ஒளி எளிதில் மங்கிவிடுவதில்லை. நினைவுகள் கடைசியாகச் சுழன்றடித்து மேலேறின.
எவ்வியூர் நாகப்பச்சை வேலியின் மணமே தேக்கனின் நினைவெங்கும் படர்ந்தது. பகரியை வேட்டையாடி, அதன் ஈரலைத் தின்றுவந்த அந்த நாள் நினைவில் மேலெழுந்தது. கொற்றவையின் கூத்துக்களம் நினைவுக்கு வந்தது. அலவனின் கண்களில் நீல வளையம் பூத்து அடங்கியது. திரையர்களை விரட்டிக்கொண்டு இரவு பகலாக ஓடிய ஓட்டம் அறுந்து அறுந்து மேலெழுந்தது. இறுதியில் காலம்பனின் கதை கேட்டு, பாரி கதறி அழுததும், பாரியை அறிந்தவுடன் காலம்பன் கதறி அழுததும் தோன்றிய கணத்தில் கீதானியின் முகம் தோன்றி மறைந்தது.
மலைவேம்பின் ஆறாம் இலை காடெங்கும் நிரம்பியிருக்க, எங்கும் குலநாகினிகளின் குரவையொலி கேட்டபடி இருந்தது. கருவிழிகள் துடித்தபடி இருக்க, இமைகள் மெள்ள கவியத் தொடங்கின.
பொதிகைமலையின் உச்சிப்பாறையில் நின்று அடர்சிவப்பு நிறம்கொண்ட செவ்வாய்க்கோளைப் பார்த்துக்கொண்டிருந்தார் திசைவேழர். தனது நாடியை மேல்நோக்கி நிமிர்த்தி, வானின் ஒளியைக் கைநீட்டிச் சொல்லிக்கொண்டிருந்தார் அவர் தந்தை. குதிரைத்தலைபோல் இருக்கும் ஆறு புரவிகளும் பொற்கால் கட்டில்போல் இருக்கும் கணையும் மனக்கண்ணில் ஒளிவீசியபடி இருந்தன. சிறுபுலியின் கண்போல் அறுவை இருமீன்கள் அவரை உற்றுநோக்கின.
இமைக்கும் தன்மைகொண்ட விண்மீன்களைப் பார்த்துக்கொண்டே இருப்பது வாழ்வின் பேரானந்தம். மனம், இக்கணத்தில் விண்மீன்களை எண்ணிப்பார்க்க நினைத்தது. ஆனால், சட்டென முடத்திருக்கண்ணனின் முகம் நினைவுக்கு வந்தது. தவறிழைத்தவன் தண்டனையின் வழியே காட்டிக்கொடுத்த நிலம் என்று அவர் சொன்ன சொல், அவரை நோக்கித் திரும்பியது. பக்கத்தில் அந்துவன் இருந்து அதைப் பார்த்துக்கொண்டிருந்தான்.
காடறிய அழைத்துச் செல்வதன் குறியீடான சாமப்பூவின் மணத்தை மோந்தபடி தேக்கனின் நினைவு அறுந்தது.
கார்த்திகையின் ஆறாம் ஒளியைச் சுற்றி இளநீல வட்டம் இருப்பதைப் பார்த்தபடியே கண்ணொளி மங்கி அணைந்தது திசைவேழருக்கு.
தேக்கனைப் பார்த்துவர அனுப்பப்பட்ட வீரன், குடிலுக்குள் நுழையும்போது தேக்கன் குருதிவெள்ளத்தில் கிடந்தான். உயிர் பிரிந்துவிட்டதை அறிந்த வீரன் தனது இரு கைகளிலும் பறம்பு ஆசானைத் தூக்கிக்கொண்டு இரலிமேடு நோக்கி ஓடத் தொடங்கினான்.
அவன் கூவல்குடிக்காரன். தேக்கனைத் தூக்கிக்கொண்டு புறப்படும்போதே கூவலாய்க் கதறத் தொடங்கினான். அவனது கூவல்குரல் மலையெங்கும் எதிரொலிக்கக்கூடியது. கண்ணீரைக் காரமலையெங்கும் தூவினான். பறம்பு ஆசானின் மரணம் பச்சைமலையின் ஒவ்வோர் உயிருக்கும் சொல்லப்படவேண்டியது. கூவல்குடி வீரன் அத்தனை ஒலிகளிலும் தேக்கனின் மரணத்தைக் கூவினான்.
ஒவ்வோர் ஒலிக்குறிப்பும் ஒவ்வோர் உயிரினத்தினுடையது. குரலின் தன்மையைக்கொண்டு பறவைகளைப் பத்து இனங்களாகப் பிரித்திருந்தது கூவல்குடி. பத்து இனங்களின் குரல்களுக்கு ஏற்ப தேக்கனின் துயர்மிகு மரணத்தைக் கூவினான். மணி ஒலிக்கும் குறிப்பில் சொன்னான். அது மண்ணுக்குள்ளிருக்கும் உயிரினங்களுக்கு உரியது. உணவைக் கடித்தல், நக்கல், பருகல், விழுங்கல், மெல்லல் என ஐவகையிலும் உண்ணும் விலங்குகள் நிலத்துக்கு அடியில் உண்டு. அனைத்து விலங்குகளின் செவிகளிலும் மணியோசை ஒலிக்குறிப்பே சென்று சேரும். மிகநீண்ட நேரம் தேக்கனின் மரணத்தை மணியோசைக் குறிப்பின் மூலம் சொன்னான். எலி வலையின் அடியாழத்தில் இருக்கக்கூடியது கருங்கற்தலையன். அதன் செவியிலும் விழுந்தது தேக்கனின் மரணம்.
பிறகு குழலொலியில் சொன்னான். மேகத்தின் ஒலியில் சொல்லத் தொடங்கியபோது எங்கும் பாறை உருள்வதுபோல் இருந்தது. பெருவிலங்குகளுக்கான ஓசை அது. தும்பிகளுக்கான ஒலியில் சொல்லியபோது துயரத்தின் பேரலை இருளெங்கும் படர்ந்தது. தூக்கி வந்தவன் கண்ணீரின் வலுத்தாங்காமல் மண்டியிட்டு அமர்ந்தான். ஆனால், எதிரில் இருந்த காரமலை, ``என் மகனை என்னிடம் தா” என்று கைநீட்டி அழைத்தது. மீண்டும் எழுந்து ஓடத் தொடங்கினான். நாகக்கரட்டிலிருந்து பள்ளத்தாக்கில் இறங்கியபோது பேராந்தையின் குரலெடுத்துக் கூவினான். காட்டையே நடுங்கச்செய்யும் குரல் அது. கண்ணீர் தாரைதாரையாக வழிந்தோட, விலங்குகளுக்கும், மரம் செடி கொடிகளுக்கும், எண்ணிலடங்காத உயிரினங்களுக்கும் சொல்லிக்கொண்டே ஓடினான்.
அவனது நாக்கு பாம்பைப்போன்று சுழன்று சுழன்று வளைந்து ஒலி எழுப்பியது. உதடுகள் விதவிதமாய்க் குவிந்து விரிந்து கூர்மைகொண்டு கூவின. ஒருகட்டத்தில் அவனது குரல் கேட்டு எங்கெங்கும் இருக்கும் கூவல்குடியினர் ஒன்றுசேர்ந்து ஓசை எழுப்பத் தொடங்கினர். நாகக்கரடு, இரலிமேடு, காரமலை என இருளெங்கும் நிறைந்தது தேக்கனின் மரணம்.
மூஞ்சலில் சூளூர் வீரர்களின் உடல்கள் அனைத்தும் எடுக்கப்பட்ட பிறகு அங்கிருந்து முடியன் புறப்படும்போது மூன்றாம் பரணின் அடிவாரத்தில் பெருங்கூட்டம் இருப்பதையும், எண்ணற்ற பந்தங்கள் எரிந்துகொண்டி ருப்பதையும் பார்த்தான். அந்த இடம் நோக்கி அவன் போனபோது எல்லாம் முடிந்திருந்தன.
பரண் மீதிருந்து தடுமாறிக் கீழிறங்கிய கபிலரை, தொலைவில் கும்மிருட்டுக்குள் இருந்தபடியே பார்த்துக்கொண்டு நின்றான் முடியன். கபிலர் எப்போது அங்கு வந்தார், அங்கு என்ன நடந்தது என அவனுக்குப் புரியவில்லை. ஆனால், எல்லாவிதத்திலும் தளர்ந்துபோய் இருக்கும் அவரைப் பாதுகாப்பாக அழைத்துச்செல்ல வேண்டும் என எண்ணியபடி நின்றுகொண்டே இருந்தான்.
பரண்விட்டு இறங்கிய கபிலரின் அருகில் சென்ற மையூர்கிழார் கை குவித்தபடி எதையோ கூறினார். ஆனால், குவித்த அவன் கைகளைத் தட்டிவிட்டபடி அந்த இடம்விட்டு வேகமாக அகல முயன்றார் கபிலர். இதைப் பார்த்த முடியன், தன்னுடன் இருந்த வீரர்களை உடனடியாகக் கபிலரிடம் அனுப்பினான்.
பத்துக்கும் மேற்பட்ட குதிரைவீரர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் பாய்ந்துவந்து நின்றனர். பறம்பு வீரர்கள் வந்ததறிந்த கபிலர், உடனடியாக ஒரு குதிரையின் மீது ஏறினார். பரண் அடிவாரத்தில் இருந்த வேந்தர்படைக் கூட்டத்தினர் யாரும் இதை எதிர்பார்க்கவில்லை. பார்த்துக்கொண்டிருக்கும்போதே அத்தனை குதிரைகளும் இருளுக்குள் மறைந்தன.
குருதி படிந்திருந்த திசைவேழரின் மேல்துணியைக் கைகளில் எடுத்துவந்தார் கபிலர். அது என்னவென்று யாருக்கும் தெரியாது. முடியன், கபிலர் எல்லோரும் நாகக்கரட்டை நெருங்கியபோது கூவல்குடியினரின் ஓசை மலையெங்கும் எதிரொலிப்பதைக் கேட்டனர். நள்ளிரவில் மலையெங்கும் இப்படி ஓசை எழுப்பவேண்டிய தேவை என்ன என்று கபிலருக்கு விளங்கவில்லை. உடன் இருந்த கூவல்குடி வீரன், கண்ணீரோடு ஆசானின் மரணத்தைச் சொன்னான்.
குதிரைகள், இரலிமேட்டுக்கு வந்து சேர்ந்தன. வீரர்களை விலக்கியபடி முடியனும் கபிலரும் மற்ற வீரர்களும் மேலேறி வந்தனர்.
தேக்கனின் உடலருகே வாரிக்கையன் உட்கார்ந்திருந்தார்.
முடியன் நேராக தேக்கனின் உடலருகே வந்து அவரது கால்களைத் தொட்டுத் தூக்கி, தனது நெஞ்சிலே வைத்து இறுகப் பற்றிக்கொண்டான். நெஞ்சம் முழுவதும் அடங்காத சினம் உருத்திரண்டு நின்றது. ஆசான் தேக்கனையும் மகன் இரவாதனையும் ஒருசேர இழந்தாலும் பறம்புநாட்டு முடியனாய் கலங்கிடாது எதிர்கொண்டான்.
முடியன் இதைச் செய்துகொண்டிருக்கும்போது கபிலர், இரவாதனின் அருகில் போய் நின்றார். அவன்மீது திசைவேழரின் குருதி படிந்த மேலாடையைப் போர்த்தினார். பரண் மீதிருந்து எடுத்துவரப்பட்ட மேலாடையை ஏன் இரவாதனின் மீது போர்த்துகிறார் என யாருக்கும் புரியவில்லை.
இரவாதனின் காலருகே வந்து உட்கார்ந்து அவனுடைய பாத அடிகளை எடுத்துத் தனது மடிமீது வைத்துக்கொண்டு அந்த மாவீரனின் இறுதிக்கணத்தைப் பற்றிச் சொல்லத் தொடங்கினார் கபிலர். திசைவேழரின் குருதி இரவாதனின் காலுக்கு அடியில் தேங்கியது.
வேந்தர்கள், அடுத்து செய்யவேண்டியது என்ன என்ற ஆலோசனையில் ஈடுபட்டனர். மூஞ்சலில் இருந்து வீரர்களின் உடல்கள் இன்னும் அகற்றி முடிந்தபாடில்லை. எனவே, அங்கு அமர்ந்து பேசும் சூழல் இல்லை. பரணை விட்டு அகன்று போர்க்களத்தின் தனித்ததோர் இடத்தில் பந்தங்கள் ஏற்றப்பட, அங்கு அமர்ந்து பேசத் தொடங்கினர்.
மூஞ்சல், முற்றிலும் சிதைக்கப்பட்டுவிட்டது. பேரரசர் குலசேகரபாண்டியனின் கூடாரத்தையும் நீலன் இருக்கும் கூடாரத்தையும் தவிர மற்ற கூடாரங்கள் அனைத்தும் முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டன. இந்நிலையில் தமது போர் நடவடிக்கைகளை எப்படி அமைத்துக்கொள்வது என்பதைப் பற்றிய பேச்சு நீண்டது.
யாராலும் முழுக்கவனத்தோடு கருத்துகளை முன்வைக்க முடியவில்லை. ஏனெனில், அழிந்தது மூஞ்சல் மட்டுமல்ல; மூவேந்தர்களின் சிறப்புப்படைகளில் பெரும்பகுதி. இப்போதும் மூவேந்தர்களின் படையில் பெரும் எண்ணிக்கையிலான வீரர்கள் இருக்கிறார்கள். ஆனால், அவர்களெல்லாம் படைத்தொகுப்பில் இடம்பெறக்கூடிய வீரர்கள்தாம். நிலைப்படை வீரர்கள் எண்ணிக்கை மிகக்குறைவே. அதுமட்டுமல்ல, திசைவேழரின் மரணம் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பது பெருங்கேள்வியாக இருந்தது.
தளபதிகளின் கருத்துகள் முதலில் கேட்கப்பட்டன. அவர்களோ இன்றைய போரில் பறம்பின் குதிரைப்படைத் தளபதி இரவாதன் கொல்லப்பட்டதையும், பறம்பின் குதிரைகள் பெருமளவு கொல்லப்பட்டதையும் வியந்து ஓதினர். தமது படையில் வலிமையான எண்ணிக்கையில் வீரர்கள் இருக்கிறார்கள். எனவே, வழக்கம்போல் முழுத்திறனோடு மறுநாளைய போரை எதிர்கொள்வோம் என்றனர்.
அமைதியாக நின்றிருந்த கருங்கைவாணனைப் பார்த்தார் குலசேகரபாண்டியன். சற்றுத் தயக்கத்துக்குப் பிறகு அவன் கூறினான், ``மூஞ்சல் அழிக்கப்பட்டதைவிட மிகவும் கவலைக்குரியது, நாம் பாதுகாத்து வைத்திருந்த நஞ்சுகளும் அவை இருந்த கூடாரமும் முழுமையாக அழிந்ததுதான். இந்தப் போரில் இணையற்ற ஆயுதத்தை இன்று நாம் இழந்துவிட்டோம். அதற்கு நிகரானது எதுவுமில்லை” என்றான்.
கருங்கைவாணன் சொல்லியபோதுதான் உதியஞ்சேரலும் செங்கனச்சோழனும் நிலைமையைக் கவனம்கொள்ளத் தொடங்கினர். மூவேந்தர்களுக்கும் நேற்றிரவு பாரியைக் கொல்ல நடத்தப்பட்ட திட்டங்களின் முடிவு முழுமையாக வந்து சேரவில்லை. அந்தக் குழப்பத்திலேயே இன்றைய நாளின் பெரும்பகுதி களத்தில் நின்றனர். களத்தின் கடைசி ஐந்து நாழிகையில் ஏற்பட்ட கடும் தாக்குதலுக்குப் பிறகுதான் மூஞ்சலைக் காக்கப் பெருமுயற்சி செய்தனர். அந்த முயற்சியின் இறுதியில் இரவாதனைக் கொல்ல முடிந்ததே தவிர, மூஞ்சலின் அழிவைத் தடுக்க முடியவில்லை. அதன் தொடர்ச்சியாக திசைவேழரின் குற்றச்சாட்டும் மரணமும் எல்லோரையும் நிலைகுலையவைத்துள்ளன. போர்க்களத்தில் எந்தக் கணத்திலும் தனது இயலாமை வெளிப்பட்டுவிடக் கூடாது எனக் கருதிய குலசேகரபாண்டியன், நாள்தோறும் நிகழும் எண்ணற்ற மரணத்தைப்போலவே திசைவேழரின் மரணத்தையும் கையாண்டார்.
கருங்கைவாணன் தனது பேச்சைத் தொடர இருந்தான். அதற்கு அடுத்தபடியாக மையூர்கிழார் புதிய திட்டங்களைப் பற்றிக் கூற ஆயத்தமாக இருந்தார். இந்நிலையில் சேரநாட்டின் அமைச்சன் வளவன்காரி எழுந்து சொன்னான், ``பெரும் தளபதிகள் பேசும்முன் அமைச்சனாகிய நான் எனது கருத்தைக் கூற, வேந்தர்களின் அவை இடம் தருமா?”
திடீரென சேர அமைச்சன் ஏன் பேச நினைக்கிறான் என்று யாருக்கும் விளங்கவில்லை. குலசேகரபாண்டியன் சரியெனக் கையசைத்தார்.
அவன் சொன்னான், ``இப்போரில் நமக்கான பெரும்பாதுகாப்பு அரண், திசைவேழரும் அவரால் காக்கப்பட்ட போர்விதிகளும்தான். அவற்றை நாம் இழந்துவிட்டோம். நடந்தது அனைத்தையும் கபிலர், பாரியிடம் தெரிவிப்பார். இனி பறம்பின் தாக்குதல் போர்விதிகளுக்கு உட்பட்டு இருக்காது. அவர்களின் இயல்புமுறைகளின்படி தாக்குதலைத் தொடுத்தால் நம்மால் எதிர்கொள்ள முடியாது.”
சொல்லி முடிக்கும்முன் ``ஏன் முடியாது?” என மேலேறி வந்தது மையூர்கிழாரின் குரல். ``திசைவேழரின் மரணம் மிகச்சிறந்த வாய்ப்பை உருவாக்கியுள்ளது. அதைச் சரியாகப் பயன்படுத்துவதே அறிவுடைமை.”
``என்ன செய்ய வேண்டும்?” எனக் கேட்டார் குலசேகரபாண்டியன்.
சொல்ல முன்வந்தார் மையூர்கிழார்.
போர்நெறிகளைக் காக்க திசைவேழர் உயிர்துறந்தது, தேக்கன் உயிரை ஈந்து சொல்லிச்சென்ற செய்தி அனைத்தும் இரலிமேடெங்கும் நிரம்பின. பொழுது நள்ளிரவைத் தொட்டது. இனியும் இந்நிலை நீடிக்கக் கூடாது என நினைத்த வாரிக்கையன், ``சரி, அடக்கத்துக்கான பணியைத் தொடங்குவோம்” என்றான்.
இறுதி வேலைகளைச் செய்ய, பெரியவர்கள் எழுந்தபோது, ``எதுவொன்றும் செய்ய வேண்டாம்” என்றது பாரியின் குரல்.
குரல் கேட்ட திசை நோக்கி எல்லோரும் திரும்பினர். கருந்திட்டுப் பாறையிலிருந்து எழுந்து வந்த பாரி, அடுக்கிவைக்கப்பட்டுள்ள வீரர்களின் முன் நின்றபடி சொன்னான், ``தட்டியங்காடெங்கும் குவிந்து கிடக்கும் எதிரிகளை வென்று, நீலனை மீட்டுவந்த பிறகு இறுதிச்சடங்கை நடத்துவோம். அதுவே இந்த மாவீரர்களுக்குச் செய்யும் மரியாதை.”
- பறம்பின் குரல் ஒலிக்கும்...
சு.வெங்கடேசன்
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
வீரயுக நாயகன் வேள்பாரி - 107
இரவின் பத்தாம் நாழிகை தொடங்கியது. மையூர்கிழார், தனது திட்டத்தை முழுமையாக விளக்கினார். ``கிழக்குப் பக்கம் காட்டாற்றைக் கடந்தால் செவ்வரிமேடு உண்டு. அங்கு புதிய மூஞ்சலை அமைக்க, தளபதிகளுக்கு உடனடியாக உத்தரவிடுங்கள். செவ்வரிமேட்டை விட்டு இன்னும் பின்னால் சில காதத் தொலைவில் எங்களது பழைய கோட்டை ஒன்று உள்ளது. அளவில் மிகச் சிறியது. அந்தக் கோட்டைக்குள் நீலனைச் சிறைவைத்துவிடுவோம்.”
மையூர்கிழார் கூறுகின்ற நிலப்பகுதிகளைத் தளபதிகளும் அறிவர். எனவே, அவர் சொல்வதை உற்றுக்கவனித்தனர். மையூர்கிழார் தொடர்ந்தார். ``உறுமன்கொடியின் தலைமையிலான படை இப்போதிருக்கும் மூஞ்சல் பகுதியில் தடுப்பரணை ஏற்படுத்தி நிற்கட்டும். இவற்றிலிருந்து ஒரு காதத் தொலைவில் துடும்பனின் தலைமையிலான படை நிலைகொள்ளட்டும். அதற்கடுத்து காட்டாற்றைக் கடந்து செவ்வரிமேடு இருக்கிறது. மேட்டில் கருங்கைவாணனும் நானும் நமது படையின் வலிமைகொண்ட பகுதியில் நிற்கிறோம். பறம்புப்படை இங்கிருந்து தாக்குதலைத் தொடங்கும்போது, நமது முன்களத் தளபதிகள் சரியான நேரத்தில் பின்வாங்கி, காட்டாற்றை நோக்கி அவர்களை இழுத்துவர வேண்டும். அவர்கள் நீலனை மீட்க, நமது திசை நோக்கி வந்துதான் ஆகவேண்டும். மிகவும் பள்ளமான நிலப்பகுதியில் ஓடும் காட்டாற்றைக் கடந்து அவர்கள் மேலேறும்போது, நாம் மேட்டு நிலத்திலிருந்து அவர்களின் மீது வலிமையான தாக்குதலை நடத்தி அழித்தொழிக்கலாம்.”
பொதியவெற்பன் உற்சாகமடைந்து கூறினான், ``நாம் முன்னரே திட்டமிட்டபடி மலையை விட்டு நன்கு தள்ளிக் களம் அமைத்துக்கொண்டால், நாகக்கரட்டின் மேலிருந்து வழிகாட்ட முடியாது. அவர்கள் பெருமளவுக்குக் குதிரைகளை இழந்துவிட்டனர். இனி, அவர்களின் தொடர்புகள் முற்றிலும் அறுந்துவிடும். இன்றைய போரில் பெரும் எண்ணிக்கையில் வீரர்களை இழந்துள்ள அவர்களை முழுமையாகக் கொன்றழிக்க இது நல்ல திட்டம்.”
மையூர்கிழார் சொல்லத் தொடங்கும்போதே காரமலையின் உச்சியில் ஒரு சிறு புள்ளியின் அளவுக்கு நெருப்பின் சுடர் தெரிந்தது. பந்தங்களை ஏந்தி ஓரிருவர் நடமாடுகின்றனர் என எண்ணினார். சிறிது நேரத்தில் இங்கொன்றும் அங்கொன்றுமாக மின்னல் வெட்டத் தொடங்கியது. ``மழை வரும் அறிகுறியாதலால் பேசி முடித்து, செயலில் வேகமாக இறங்க வேண்டும்’’ என்றார் சோழவேழன்.
தளபதி உறுமன்கொடி கேட்டான், ``நீலனைச் சிறை வைக்கப்போகும் பழைய கோட்டைக்கான பாதுகாப்பு என்ன?”
``அந்தக் கோட்டை மிகவும் வலிமையானது. அங்கு, எமது வெங்கல்நாட்டின் தேர்ந்த போர்வீரர்கள் இருக்கிறார்கள். அதற்குமேல் வேறெதுவும் தேவையில்லை” என்றார்.
இதைச் சொல்லியபோது அவரின் கண்களுக்கு, காரமலையில் வேறு சில திசைகளிலிருந்து சுடர்விடும் நெருப்புப் பந்தங்கள் சிறு புள்ளிகளாய்க் கீழிறங்கி வருவது தெரிந்தது. `என்ன இது?’ என்று இப்போது சற்றுக் கூர்மையுடன் கவனித்தார்.
அதுவரை பேசாமல் இருந்த கருங்கைவாணன் சொன்னான், ``நீங்கள் சொல்லும் திட்டத்தில் காட்டாற்றுப் பகுதி தாக்குதலே மிக முக்கியமானது. அவர்களைக் கீழ்நிலையில் நிறுத்தி நாம் மேல்நிலையில் நின்று தாக்குதல் தொடுக்க ஏதுவான இடம். மிகப் பொருத்தமான ஆலோசனை” என்று சொன்னவன், சற்று சிந்தித்தபடி தொடர்ந்தான், ``காட்டெருமை களின் தாக்குதலின்போது நமது யானைப்படையின் பின்புறத்தில் நின்றிருந்த ஒரு பகுதி யானைகள், பாதுகாப்பாய்த் திரும்பியுள்ளன. அந்த யானைகள் அனைத்தையும் நீலனைச் சிறைவைக்கும் கோட்டையைச் சுற்றி நிறுத்தலாம்” என்றான்.
குலசேகரபாண்டியன் அதை ஏற்றுக்கொண்டார். அப்போது சோழவேழன் சொன்னார், ``படைவீரர்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டால் இப்போது அதிகம் இருப்பது சோழப்படையில்தான். ஏழு சேனைவரையன்களும், நாற்பதுக்கும் மேற்பட்ட சேனைமுதலிகளும், சுமார் பத்தாயிரம் வீரர்களுக்குமேல் எமது பாசறையில் இரவுணவு அருந்தியுள்ளனர்.”
இதைச் சொல்லும்போது செருக்கின் ஒலி இயல்பாய் மேலெழுந்தது. இந்த எண்ணிக்கையைச் சொல்வதற்குக் காரணமில்லாமலில்லை. ஆனால், காரணத்தை வெளிப்படையாகச் சொல்லவில்லை. சோழவேழன் தொடர்ந்தார், ``நீங்கள் சொன்னபடி உறுமன்கொடியின் தலைமையில் பாண்டியப்படையின் ஒரு பகுதி மூஞ்சலில் நிற்கட்டும். துடும்பனின் தலைமையில் சேரர்படையின் ஒரு பகுதி இரண்டாம் நிலையில் தடுப்பரணை ஏற்படுத்தி நிற்கட்டும். எமது முழுப்படையையும் செவ்வரிமேட்டின் மேற்பகுதியில் ஏற்றி நிறுத்துகிறேன். இதுபோக, மற்ற இரு படைகளின் பகுதிகளும் செவ்வரிமேட்டில் நிற்கட்டும்” என்றார்.
``இதுவரை விற்படை, வாட்படை, தேர்ப்படை என்று படைத் தொகுப்புகளுக்குள் மூவேந்தர்களின் வீரர்களும் இணைந்திருந்து தாக்குதல் நடத்தினர். ஆனால், முதன்முறையாக மூவேந்தர்களின் படைகளும் தனித்தனியாக அணிவகுத்து நிற்போம்” என வலிமையான குரலில் சொன்னார் சோழவேழன். அதற்குக் காரணம், இன்று மூஞ்சலின் மீது நடந்த தாக்குதலில் ஒருங்கிணைப்பு இல்லாததால் ஏற்பட்ட பேரிழப்புதான். குறிப்பாக, பொதியவெற்பனின் உத்தரவுகள் மற்ற படையணிகளுக்குக் குழப்பத்தையே உருவாக்கின. எனவே, அதிக எண்ணிக்கையைக்கொண்ட வீரர்களின் படையணியான தனது அணியை, தேவையில்லாமல் இழப்புக்கு உள்ளாக்கிவிடக் கூடாது என்ற சிந்தனையோடு சோழவேழன் இதைச் சொன்னார்.
இதை வெளிப்படையாக விவாதிக்க முடியாது. இதே காரணம் ஏற்கெனவே குலசேகர பாண்டியனுக்கும் சொல்லப்பட்டுவிட்டது. மூஞ்சலுக்குள் மூன்று சிறப்புப் படைகளையும் ஒரே நேரத்தில் உள்ளே நுழைய ஆணையிட்டதால், தாக்குதலில் ஒருங்கிணைப்பு துளியும் இல்லாமற்போனதை அவர் அறிவார். எனவே, இதை மறுத்து உரையாட அவரோ, மற்ற யாருமோ ஆயத்தமாக இல்லை.
எல்லோரும் திட்டத்தை ஏற்றுக்கொண்டனர். மழை சடசடவென இறங்கத் தொடங்கியது. இடியோசை காரமலையெங்கும் எதிரொலித்தது. வேந்தர்களின் தேர்கள் விரைந்து மூஞ்சலை நோக்கிச் சென்றன. இறந்த வீரர்களின் உடல்களை அப்புறப்படுத்தும் வேலை முடிந்தபாடில்லை. ஆனால், மழை பெய்யத் தொடங்கிவிட்டதால் தங்குவதற்கு அருகில் வேறு இடம் எதுவும் இல்லை. எனவே, பாதிப்படையாமல் இருக்கும் குலசேகரபாண்டியனின் கூடாரத்தில் ஐவரும் நுழைந்தனர். தளபதிகளோ பேசப்பட்ட திட்டத்தின் அடிப்படையில் உடனடியாக வேலையைத் தொடங்கினர்.
இரும்புச் சட்டகத்தால் ஆன கூட்டுவண்டியில் நீலனை ஏற்றினர். வாள்படைத் தளபதி மாகனகனின் தலைமையிலான படை அவனை செவ்வரிமேட்டுக்கு அப்பால் இருக்கும் பழைய கோட்டைக்குக் கொண்டுசென்றது. தொடங்கும்போதே மழையின் வேகம் யாவரையும் மிரட்டியது. காரமலையில் மின்னலும் இடியும் விடாது இறங்கின. நீலனை வெளியேற்றிய பிறகு அவன் இருந்த கூடாரத்துக்குள் தளபதிகள் அனைவரும் வந்து நுழைந்தனர். அவர்களைத் தொடர்ந்து அமைச்சர்களும் உள்ளே நுழைந்தனர். காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் கூடாரங்களின் ஆட்டமும் அதிகமாக இருந்தது. உள்ளே நுழைந்த சிறிது நேரத்தில் கருங்கைவாணன் கேட்டான். ``நீலன் இந்தக் கூடாரத்தில்தான் இருந்தான் என்பதை இரவாதனின் படையினர் எப்படிக் கண்டறிந்தனர்?”
யாரிடமும் பதில் இல்லை. மையூர்கிழார், கூடாரத்தின் வாசல்வழியே வெளியில் எதையோ பார்த்துக்கொண்டிருந்தார். தான் கேட்பது, மழையின் ஓசையால் அவரின் காதில் விழவில்லையோ என எண்ணிய கருங்கைவாணன், அவரின் தோள் தொட்டு மீண்டும் கேட்க முற்பட்டபோது மையூர்கிழார் கையை வெளியில் நீட்டி எதையோ காட்டினார்.
எதைக் காட்டுகிறார் என, தலையை நீட்டி எட்டிப்பார்த்தான் கருங்கைவாணன். அவனுக்கு எதுவும் தெரியவில்லை. ``எதைக் காட்டுகிறீர்கள்?” எனக் கேட்டான்.
``அங்கே பாருங்கள். தீப்பந்தங்களை எடுத்துக்கொண்டு சிலர் மலையை விட்டுக் கீழிறங்கி வந்துகொண்டிருக்கின்றனர்.”
``கொட்டும் மழையில் தீப்பந்தங்களை எப்படி ஏந்தி வர முடியும்?” எனக் கேட்டான்.
``எனக்கும் விளங்கவில்லை. ஆனால், பந்தங்கள் முன்னோக்கி நகர்ந்து வந்துகொண்டிருக்கின்றன” என்று சொன்னவர், ``வாருங்கள், பரண்மீது ஏறி நின்று பார்ப்போம்” என்று கூறி உடனடியாக கூடாரத்தை விட்டு வெளியில் வந்தார். அவரைத் தொடர்ந்து கருங்கைவாணனும் வெளியேறினான். இருவரும் குதிரைகளில் ஏறிப் பாய்ந்து சென்றனர். மற்ற தளபதிகளுக்குத் தலைமைத் தளபதிகளைத் தொடர்வதா அல்லது கூடாரத்துக்குள்ளே இருப்பதா எனத் தெரியவில்லை. `சரி, நாமும் போவோம்’ என உறுமன்கொடியும் துடும்பனும் அவர்களைத் தொடர்ந்தனர். அமைச்சர்கள் மட்டும் கூடாரத்திலேயே இருந்தனர்.
பாண்டிய அமைச்சன் ஆதிநந்திக்கு, கருங்கைவாணன் எழுப்பியது மிக முக்கியமான கேள்வி என்றும், அதைக் கண்டறியவில்லை என்றால் நீலன் இருக்கப்போகும் செவ்வரிமேட்டின் பழைய கோட்டையையும் பறம்பினர் கண்டறிந்துவிடுவர் என்றும் தோன்றியது. ஆனால், இதைப் பற்றி உரையாடத் தளபதிகள் யாரும் இல்லை. எல்லோரும் வெளியில் போய்விட்டனர்.
தளபதிகள், பரண் அடிவாரத்துக்கு வந்து சேர்ந்தனர். காற்றோடு மழை பெய்வதால் பரண் ஆடியபடி இருந்தது. மேலே ஏறுவது பாதுகாப்பானதா என ஒரு கணம் சிந்தித்தார். மூன்று நாள்களுக்கு முன்பு வீசிய பேய்க்காற்றையே தாங்கிய பரண், இந்தக் காற்றுக்கு ஒன்றுமாகிவிடாது எனச் சிந்தித்தபடியே வேகவேகமாக மேலேறினார். அவரைத் தொடர்ந்து கருங்கைவாணன் மேலேறினான். மற்ற இரு தளபதிகளையும் கீழேயே நிற்கச் சொன்னார் மையூர்கிழார்.
பரண்மேல் நாழிகைவட்டில் கவிழ்ந்து கிடந்தது. திசைவேழரின் குருதி முழுவதையும் மாமழை கழுவித் தீர்த்தது. தளபதிகள் மேலேறியபோது அவர்களின் கால்களில் மிதிபட குருதியின் உலர்ந்த தடம்கூட பரண்கட்டைகளில் இல்லை. மேலேறிய இருவரும் மேற்குப் பக்கமாகத் திரும்பிப் பார்த்தபடி நின்றனர்.
கருங்கைவாணனின் கண்களுக்கு முதலில் எதுவும் தெரியவில்லை. மழை உரத்துப் பெய்தது. மையூர்கிழார் கை நீட்டிக் கத்திச் சொன்னார். ஆனாலும் அவனுக்குப் புலப்படவில்லை. இடதுபுறமிருந்து வாள் வீசுவதுபோல மின்னல் ஒன்று நாகக்கரட்டை வெட்டி இறங்கியது. வெளிச்சத்தில் தட்டியங்காடு முழுக்க ஒளியால் பளிச்சிட்டு மறைந்தது. அந்தக் கணத்தில்தான் கருங்கைவாணன் பார்த்தான், நாகக்கரட்டின் மேலிருந்து குதிரைப்படை ஒன்று தட்டியங்காட்டின் வலதுபுறம் நோக்கிக் கீழிறங்கிக்கொண்டிருந்தது.
பரண், இதுவரை இல்லாத அளவுக்கு ஆடியது. கீழே நின்றிருந்த உறுமன்கொடியும் துடும்பனும் வீரர்களை அழைத்து பரணின் கால்களை இறுகப் பற்றிக்கொள்ளச் சொன்னார்கள். ஆனால், மேலே நின்றிருந்த இருவரும் பரண் ஆடுவதையோ, இடியோசையோடு மழை முன்னிலும் அதிகமாகப் பொழிவதையோ கவனம்கொள்ளவில்லை. அவர்களின் கவனமெல்லாம் கொட்டும் பேய்மழையில் தீப்பந்தம் எப்படி எரிந்துகொண்டிருக்கிறது என்பதுதான். `வருவது மிகச்சிறிய படைதான். அதனால் பெரிய தாக்குதலை நடத்திவிட முடியாது. ஆனால், ஏன் அவர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள்? எல்லோர் கைகளிலும் பந்தம் இருக்கிறது. எதை எரியூட்ட வருகிறார்கள்?’ எனச் சிந்தித்தபடி நின்றனர்.
நள்ளிரவு பதினைந்தாம் நாழிகை முடிவுறும் நேரம். எதிரிகளின் செயல்களை உற்றுப்பார்த்தபடி நீண்டநேரம் நின்றுகொண்டிருந்தனர். மனத்துக்குள் பெருங்குழப்பம் நிலவிக்கொண்டிருந்தது. சோழப்படையின் பாசறைதான் அந்தத் திசையில் முதலாவதாக இருக்கிறது. நாகக்கரட்டிலிருந்து கீழிறங்கிய வீரர்கள் நேராக அந்தப் பாசறைகளை நோக்கிப் போகின்றனர். இவ்வளவு சிறிய படையினர், பத்தாயிரம் வீரர்கள் இருக்கும் சோழர்களின் பாசறையைத் தாக்கப்போகிறார்களா? கேள்வியை எழுப்பியபடி நிலைமையை உற்றுக் கவனித்துக்கொண்டிருந்தனர்.
கருங்கைவாணனோ மலைமேலிருந்து கீழிறங்கியுள்ள அந்தச் சிறிய படையைத் தாக்கி அழிக்க உத்தரவிடவேண்டும் எனத் துடித்தான். ``சற்றுப் பொறுப்போம். என்ன நடக்கிறது எனத் தெரிந்துகொள்வோம்” என்றார் மையூர்கிழார்.
அவருக்குச் சுலுந்துக்கம்பின் நினைவு வந்தது. கருங்கைவாணனிடம் சொன்னார், ``காட்டுக்குள் அரியவகையான சுலுந்துக்கம்பு இருக்கிறது. அதைக் கூராக வெட்டித் தீப்பற்றவைத்தால், அது கொழுந்துவிட்டு எரியும். காற்றாலும் மழையாலும் அதை அணைக்க முடியாது. குச்சியைக் கீழே போட்டு மண் அள்ளி அதன் மேல் கொட்டினால் மட்டுமே அணைக்க முடியும்” என்றார்.
கீழிறங்கிய பறம்புநாட்டுக் குதிரைவீரர்கள், பாசறையை நெருங்கிவிட்டனர் என்பது தெளிவாகத் தெரிந்தது. அவர்கள் இரு பிரிவுகளாகப் பிரிந்து பாசறையின் இரு பக்கங்களிலும் சுற்றுவதை பந்தச்சுடர்கள் நகரும் வழிகளிலிருந்து புரிந்துகொள்ள முடிந்தது.
சோழப்படையின் பெரும்பாசறை அதுதான். அங்கு காவல்வீரர்கள் இருப்பர். ஆனாலும் மழை கொட்டும் இந்த நள்ளிரவில் விழிப்போடு இருப்பார்களா என்பது ஐயமே, ``நாம் முரசொலி எழுப்பிக் கவனப்படுத்துவோமா?” எனக் கேட்டான் கருங்கைவாணன்.
``இந்த மழையில் முரசினோசையோ கொம்போசையோ அவ்வளவு தொலைவுக்குக் கேட்காது” என்றார் மையூர்கிழார்.
காற்றின் வேகத்தால் பரண் கடுமையாக ஆடியது. ``கவனமாக இறுகப்பிடித்து நில்லுங்கள்” என்று சொன்ன கருங்கைவாணன், இடதுபுறமாக இருக்கும் கம்பத்தை நன்றாகப் பிடித்து நின்றான். அப்போது வடகோடியில் மின்னல் வெட்டி இறங்கியது. அதை உற்றுப்பார்த்தபடி அப்படியே நின்றான். சிறிது நேரம் இருவரிடமும் பேச்சு ஏதும் இல்லை. பிறகு மையூர்கிழார் கேட்டார், ``அந்தத் தீப்பந்தங்கள் அசையாமல் நின்ற இடத்திலேயே நிற்கின்றன. கவனித்தீர்களா?”
கருங்கைவாணன் இடதுபுறம் இருக்கும் கம்பத்தைப் பிடித்துக்கொண்டு அந்தப் பக்கமாகப் பார்த்துக்கொண்டிருந்ததால் அவர் கேட்பது காதில் விழவில்லை. மையூர்கிழார் மீண்டும் உரத்துக் குரல்கொடுத்தபோதுதான் கருங்கைவாணன் திரும்பினான்.
``என்ன?”
``அவர்கள் ஈட்டியின் மேல்முனையில் பந்தங்களைக் கட்டிக்கொண்டு வந்துள்ளனர். அவற்றை வீசியெறிந்துள்ளனர். ஈட்டி குத்தி நிற்கும் இடமெல்லாம் பந்தங்கள் நின்று எரிகின்றன” என்றார்.
``வந்தவர்கள் எங்கே?”
``அவர்கள் நாகக்கரட்டுக்குத் திரும்புகின்றனர். மின்னல் ஒளியில் பார்த்தேன்.”
``நானும் பார்த்தேன், நாகக்கரட்டிலிருந்து பலர் கீழிறங்குகின்றனர்” என்றான் கருங்கைவாணன்.
``எந்தப் பக்கம்?” எனக் கேட்டார் மையூர்கிழார்.
இடதுபுறமாகக் கை நீட்டிக் காட்டினான் கருங்கைவாணன்.
இருவருக்கும் எதுவும் புரிபடவில்லை. வலதுபுறக் கடைசியில் தீப்பந்தங்களை எறிந்து நட்டுவைத்துவிட்டு ஏன் மலையேற வேண்டும்? இடதுபுறம் தட்டியங்காட்டுப் பக்கமாக மலையை விட்டு ஏன் கீழிறங்கி வரவேண்டும் என்று சிந்தித்தபடி நின்றுகொண்டிருந்தனர். மழையின் சீற்றம் மேலும் கூடியது.
மையூர்கிழார் ஏதேதோ எண்ணியபடி இருந்தார். முதன்முதலில் காரமலையின் உச்சியில் தீப்பந்தம் எந்த இடத்தில் தெரியத் தொடங்கியது என நினைவுகூர்ந்தார். மனதில் ஐயம் ஒன்று மேலெழும்பியது. அதன் பிறகு அவரிடமிருந்து பேச்சேதும் வெளிவரவில்லை.
`ஏன் எதுவும் சொல்லாமல் நிற்கிறார்?’ எனக் கருங்கைவாணனுக்குப் புரியவில்லை.
உள்ளுக்குள் பரவிய நடுக்கம் அவரை எளிதில் பேச அனுமதிக்கவில்லை. சற்று நேரம் கழித்துச் சொன்னார், ``அவர்கள் அணலி இருக்கும் குகைகளில் இருந்து நெருப்பை ஏந்தி வந்திருப்பார்களோ என அஞ்சுகிறேன்.”
``அணலி என்றால்?” கேட்டான் கருங்கைவாணன்.
மையூர்கிழார் கூறுகின்ற நிலப்பகுதிகளைத் தளபதிகளும் அறிவர். எனவே, அவர் சொல்வதை உற்றுக்கவனித்தனர். மையூர்கிழார் தொடர்ந்தார். ``உறுமன்கொடியின் தலைமையிலான படை இப்போதிருக்கும் மூஞ்சல் பகுதியில் தடுப்பரணை ஏற்படுத்தி நிற்கட்டும். இவற்றிலிருந்து ஒரு காதத் தொலைவில் துடும்பனின் தலைமையிலான படை நிலைகொள்ளட்டும். அதற்கடுத்து காட்டாற்றைக் கடந்து செவ்வரிமேடு இருக்கிறது. மேட்டில் கருங்கைவாணனும் நானும் நமது படையின் வலிமைகொண்ட பகுதியில் நிற்கிறோம். பறம்புப்படை இங்கிருந்து தாக்குதலைத் தொடங்கும்போது, நமது முன்களத் தளபதிகள் சரியான நேரத்தில் பின்வாங்கி, காட்டாற்றை நோக்கி அவர்களை இழுத்துவர வேண்டும். அவர்கள் நீலனை மீட்க, நமது திசை நோக்கி வந்துதான் ஆகவேண்டும். மிகவும் பள்ளமான நிலப்பகுதியில் ஓடும் காட்டாற்றைக் கடந்து அவர்கள் மேலேறும்போது, நாம் மேட்டு நிலத்திலிருந்து அவர்களின் மீது வலிமையான தாக்குதலை நடத்தி அழித்தொழிக்கலாம்.”
பொதியவெற்பன் உற்சாகமடைந்து கூறினான், ``நாம் முன்னரே திட்டமிட்டபடி மலையை விட்டு நன்கு தள்ளிக் களம் அமைத்துக்கொண்டால், நாகக்கரட்டின் மேலிருந்து வழிகாட்ட முடியாது. அவர்கள் பெருமளவுக்குக் குதிரைகளை இழந்துவிட்டனர். இனி, அவர்களின் தொடர்புகள் முற்றிலும் அறுந்துவிடும். இன்றைய போரில் பெரும் எண்ணிக்கையில் வீரர்களை இழந்துள்ள அவர்களை முழுமையாகக் கொன்றழிக்க இது நல்ல திட்டம்.”
மையூர்கிழார் சொல்லத் தொடங்கும்போதே காரமலையின் உச்சியில் ஒரு சிறு புள்ளியின் அளவுக்கு நெருப்பின் சுடர் தெரிந்தது. பந்தங்களை ஏந்தி ஓரிருவர் நடமாடுகின்றனர் என எண்ணினார். சிறிது நேரத்தில் இங்கொன்றும் அங்கொன்றுமாக மின்னல் வெட்டத் தொடங்கியது. ``மழை வரும் அறிகுறியாதலால் பேசி முடித்து, செயலில் வேகமாக இறங்க வேண்டும்’’ என்றார் சோழவேழன்.
தளபதி உறுமன்கொடி கேட்டான், ``நீலனைச் சிறை வைக்கப்போகும் பழைய கோட்டைக்கான பாதுகாப்பு என்ன?”
``அந்தக் கோட்டை மிகவும் வலிமையானது. அங்கு, எமது வெங்கல்நாட்டின் தேர்ந்த போர்வீரர்கள் இருக்கிறார்கள். அதற்குமேல் வேறெதுவும் தேவையில்லை” என்றார்.
இதைச் சொல்லியபோது அவரின் கண்களுக்கு, காரமலையில் வேறு சில திசைகளிலிருந்து சுடர்விடும் நெருப்புப் பந்தங்கள் சிறு புள்ளிகளாய்க் கீழிறங்கி வருவது தெரிந்தது. `என்ன இது?’ என்று இப்போது சற்றுக் கூர்மையுடன் கவனித்தார்.
அதுவரை பேசாமல் இருந்த கருங்கைவாணன் சொன்னான், ``நீங்கள் சொல்லும் திட்டத்தில் காட்டாற்றுப் பகுதி தாக்குதலே மிக முக்கியமானது. அவர்களைக் கீழ்நிலையில் நிறுத்தி நாம் மேல்நிலையில் நின்று தாக்குதல் தொடுக்க ஏதுவான இடம். மிகப் பொருத்தமான ஆலோசனை” என்று சொன்னவன், சற்று சிந்தித்தபடி தொடர்ந்தான், ``காட்டெருமை களின் தாக்குதலின்போது நமது யானைப்படையின் பின்புறத்தில் நின்றிருந்த ஒரு பகுதி யானைகள், பாதுகாப்பாய்த் திரும்பியுள்ளன. அந்த யானைகள் அனைத்தையும் நீலனைச் சிறைவைக்கும் கோட்டையைச் சுற்றி நிறுத்தலாம்” என்றான்.
குலசேகரபாண்டியன் அதை ஏற்றுக்கொண்டார். அப்போது சோழவேழன் சொன்னார், ``படைவீரர்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டால் இப்போது அதிகம் இருப்பது சோழப்படையில்தான். ஏழு சேனைவரையன்களும், நாற்பதுக்கும் மேற்பட்ட சேனைமுதலிகளும், சுமார் பத்தாயிரம் வீரர்களுக்குமேல் எமது பாசறையில் இரவுணவு அருந்தியுள்ளனர்.”
இதைச் சொல்லும்போது செருக்கின் ஒலி இயல்பாய் மேலெழுந்தது. இந்த எண்ணிக்கையைச் சொல்வதற்குக் காரணமில்லாமலில்லை. ஆனால், காரணத்தை வெளிப்படையாகச் சொல்லவில்லை. சோழவேழன் தொடர்ந்தார், ``நீங்கள் சொன்னபடி உறுமன்கொடியின் தலைமையில் பாண்டியப்படையின் ஒரு பகுதி மூஞ்சலில் நிற்கட்டும். துடும்பனின் தலைமையில் சேரர்படையின் ஒரு பகுதி இரண்டாம் நிலையில் தடுப்பரணை ஏற்படுத்தி நிற்கட்டும். எமது முழுப்படையையும் செவ்வரிமேட்டின் மேற்பகுதியில் ஏற்றி நிறுத்துகிறேன். இதுபோக, மற்ற இரு படைகளின் பகுதிகளும் செவ்வரிமேட்டில் நிற்கட்டும்” என்றார்.
``இதுவரை விற்படை, வாட்படை, தேர்ப்படை என்று படைத் தொகுப்புகளுக்குள் மூவேந்தர்களின் வீரர்களும் இணைந்திருந்து தாக்குதல் நடத்தினர். ஆனால், முதன்முறையாக மூவேந்தர்களின் படைகளும் தனித்தனியாக அணிவகுத்து நிற்போம்” என வலிமையான குரலில் சொன்னார் சோழவேழன். அதற்குக் காரணம், இன்று மூஞ்சலின் மீது நடந்த தாக்குதலில் ஒருங்கிணைப்பு இல்லாததால் ஏற்பட்ட பேரிழப்புதான். குறிப்பாக, பொதியவெற்பனின் உத்தரவுகள் மற்ற படையணிகளுக்குக் குழப்பத்தையே உருவாக்கின. எனவே, அதிக எண்ணிக்கையைக்கொண்ட வீரர்களின் படையணியான தனது அணியை, தேவையில்லாமல் இழப்புக்கு உள்ளாக்கிவிடக் கூடாது என்ற சிந்தனையோடு சோழவேழன் இதைச் சொன்னார்.
இதை வெளிப்படையாக விவாதிக்க முடியாது. இதே காரணம் ஏற்கெனவே குலசேகர பாண்டியனுக்கும் சொல்லப்பட்டுவிட்டது. மூஞ்சலுக்குள் மூன்று சிறப்புப் படைகளையும் ஒரே நேரத்தில் உள்ளே நுழைய ஆணையிட்டதால், தாக்குதலில் ஒருங்கிணைப்பு துளியும் இல்லாமற்போனதை அவர் அறிவார். எனவே, இதை மறுத்து உரையாட அவரோ, மற்ற யாருமோ ஆயத்தமாக இல்லை.
எல்லோரும் திட்டத்தை ஏற்றுக்கொண்டனர். மழை சடசடவென இறங்கத் தொடங்கியது. இடியோசை காரமலையெங்கும் எதிரொலித்தது. வேந்தர்களின் தேர்கள் விரைந்து மூஞ்சலை நோக்கிச் சென்றன. இறந்த வீரர்களின் உடல்களை அப்புறப்படுத்தும் வேலை முடிந்தபாடில்லை. ஆனால், மழை பெய்யத் தொடங்கிவிட்டதால் தங்குவதற்கு அருகில் வேறு இடம் எதுவும் இல்லை. எனவே, பாதிப்படையாமல் இருக்கும் குலசேகரபாண்டியனின் கூடாரத்தில் ஐவரும் நுழைந்தனர். தளபதிகளோ பேசப்பட்ட திட்டத்தின் அடிப்படையில் உடனடியாக வேலையைத் தொடங்கினர்.
இரும்புச் சட்டகத்தால் ஆன கூட்டுவண்டியில் நீலனை ஏற்றினர். வாள்படைத் தளபதி மாகனகனின் தலைமையிலான படை அவனை செவ்வரிமேட்டுக்கு அப்பால் இருக்கும் பழைய கோட்டைக்குக் கொண்டுசென்றது. தொடங்கும்போதே மழையின் வேகம் யாவரையும் மிரட்டியது. காரமலையில் மின்னலும் இடியும் விடாது இறங்கின. நீலனை வெளியேற்றிய பிறகு அவன் இருந்த கூடாரத்துக்குள் தளபதிகள் அனைவரும் வந்து நுழைந்தனர். அவர்களைத் தொடர்ந்து அமைச்சர்களும் உள்ளே நுழைந்தனர். காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் கூடாரங்களின் ஆட்டமும் அதிகமாக இருந்தது. உள்ளே நுழைந்த சிறிது நேரத்தில் கருங்கைவாணன் கேட்டான். ``நீலன் இந்தக் கூடாரத்தில்தான் இருந்தான் என்பதை இரவாதனின் படையினர் எப்படிக் கண்டறிந்தனர்?”
யாரிடமும் பதில் இல்லை. மையூர்கிழார், கூடாரத்தின் வாசல்வழியே வெளியில் எதையோ பார்த்துக்கொண்டிருந்தார். தான் கேட்பது, மழையின் ஓசையால் அவரின் காதில் விழவில்லையோ என எண்ணிய கருங்கைவாணன், அவரின் தோள் தொட்டு மீண்டும் கேட்க முற்பட்டபோது மையூர்கிழார் கையை வெளியில் நீட்டி எதையோ காட்டினார்.
எதைக் காட்டுகிறார் என, தலையை நீட்டி எட்டிப்பார்த்தான் கருங்கைவாணன். அவனுக்கு எதுவும் தெரியவில்லை. ``எதைக் காட்டுகிறீர்கள்?” எனக் கேட்டான்.
``அங்கே பாருங்கள். தீப்பந்தங்களை எடுத்துக்கொண்டு சிலர் மலையை விட்டுக் கீழிறங்கி வந்துகொண்டிருக்கின்றனர்.”
``கொட்டும் மழையில் தீப்பந்தங்களை எப்படி ஏந்தி வர முடியும்?” எனக் கேட்டான்.
``எனக்கும் விளங்கவில்லை. ஆனால், பந்தங்கள் முன்னோக்கி நகர்ந்து வந்துகொண்டிருக்கின்றன” என்று சொன்னவர், ``வாருங்கள், பரண்மீது ஏறி நின்று பார்ப்போம்” என்று கூறி உடனடியாக கூடாரத்தை விட்டு வெளியில் வந்தார். அவரைத் தொடர்ந்து கருங்கைவாணனும் வெளியேறினான். இருவரும் குதிரைகளில் ஏறிப் பாய்ந்து சென்றனர். மற்ற தளபதிகளுக்குத் தலைமைத் தளபதிகளைத் தொடர்வதா அல்லது கூடாரத்துக்குள்ளே இருப்பதா எனத் தெரியவில்லை. `சரி, நாமும் போவோம்’ என உறுமன்கொடியும் துடும்பனும் அவர்களைத் தொடர்ந்தனர். அமைச்சர்கள் மட்டும் கூடாரத்திலேயே இருந்தனர்.
பாண்டிய அமைச்சன் ஆதிநந்திக்கு, கருங்கைவாணன் எழுப்பியது மிக முக்கியமான கேள்வி என்றும், அதைக் கண்டறியவில்லை என்றால் நீலன் இருக்கப்போகும் செவ்வரிமேட்டின் பழைய கோட்டையையும் பறம்பினர் கண்டறிந்துவிடுவர் என்றும் தோன்றியது. ஆனால், இதைப் பற்றி உரையாடத் தளபதிகள் யாரும் இல்லை. எல்லோரும் வெளியில் போய்விட்டனர்.
தளபதிகள், பரண் அடிவாரத்துக்கு வந்து சேர்ந்தனர். காற்றோடு மழை பெய்வதால் பரண் ஆடியபடி இருந்தது. மேலே ஏறுவது பாதுகாப்பானதா என ஒரு கணம் சிந்தித்தார். மூன்று நாள்களுக்கு முன்பு வீசிய பேய்க்காற்றையே தாங்கிய பரண், இந்தக் காற்றுக்கு ஒன்றுமாகிவிடாது எனச் சிந்தித்தபடியே வேகவேகமாக மேலேறினார். அவரைத் தொடர்ந்து கருங்கைவாணன் மேலேறினான். மற்ற இரு தளபதிகளையும் கீழேயே நிற்கச் சொன்னார் மையூர்கிழார்.
பரண்மேல் நாழிகைவட்டில் கவிழ்ந்து கிடந்தது. திசைவேழரின் குருதி முழுவதையும் மாமழை கழுவித் தீர்த்தது. தளபதிகள் மேலேறியபோது அவர்களின் கால்களில் மிதிபட குருதியின் உலர்ந்த தடம்கூட பரண்கட்டைகளில் இல்லை. மேலேறிய இருவரும் மேற்குப் பக்கமாகத் திரும்பிப் பார்த்தபடி நின்றனர்.
கருங்கைவாணனின் கண்களுக்கு முதலில் எதுவும் தெரியவில்லை. மழை உரத்துப் பெய்தது. மையூர்கிழார் கை நீட்டிக் கத்திச் சொன்னார். ஆனாலும் அவனுக்குப் புலப்படவில்லை. இடதுபுறமிருந்து வாள் வீசுவதுபோல மின்னல் ஒன்று நாகக்கரட்டை வெட்டி இறங்கியது. வெளிச்சத்தில் தட்டியங்காடு முழுக்க ஒளியால் பளிச்சிட்டு மறைந்தது. அந்தக் கணத்தில்தான் கருங்கைவாணன் பார்த்தான், நாகக்கரட்டின் மேலிருந்து குதிரைப்படை ஒன்று தட்டியங்காட்டின் வலதுபுறம் நோக்கிக் கீழிறங்கிக்கொண்டிருந்தது.
பரண், இதுவரை இல்லாத அளவுக்கு ஆடியது. கீழே நின்றிருந்த உறுமன்கொடியும் துடும்பனும் வீரர்களை அழைத்து பரணின் கால்களை இறுகப் பற்றிக்கொள்ளச் சொன்னார்கள். ஆனால், மேலே நின்றிருந்த இருவரும் பரண் ஆடுவதையோ, இடியோசையோடு மழை முன்னிலும் அதிகமாகப் பொழிவதையோ கவனம்கொள்ளவில்லை. அவர்களின் கவனமெல்லாம் கொட்டும் பேய்மழையில் தீப்பந்தம் எப்படி எரிந்துகொண்டிருக்கிறது என்பதுதான். `வருவது மிகச்சிறிய படைதான். அதனால் பெரிய தாக்குதலை நடத்திவிட முடியாது. ஆனால், ஏன் அவர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள்? எல்லோர் கைகளிலும் பந்தம் இருக்கிறது. எதை எரியூட்ட வருகிறார்கள்?’ எனச் சிந்தித்தபடி நின்றனர்.
நள்ளிரவு பதினைந்தாம் நாழிகை முடிவுறும் நேரம். எதிரிகளின் செயல்களை உற்றுப்பார்த்தபடி நீண்டநேரம் நின்றுகொண்டிருந்தனர். மனத்துக்குள் பெருங்குழப்பம் நிலவிக்கொண்டிருந்தது. சோழப்படையின் பாசறைதான் அந்தத் திசையில் முதலாவதாக இருக்கிறது. நாகக்கரட்டிலிருந்து கீழிறங்கிய வீரர்கள் நேராக அந்தப் பாசறைகளை நோக்கிப் போகின்றனர். இவ்வளவு சிறிய படையினர், பத்தாயிரம் வீரர்கள் இருக்கும் சோழர்களின் பாசறையைத் தாக்கப்போகிறார்களா? கேள்வியை எழுப்பியபடி நிலைமையை உற்றுக் கவனித்துக்கொண்டிருந்தனர்.
கருங்கைவாணனோ மலைமேலிருந்து கீழிறங்கியுள்ள அந்தச் சிறிய படையைத் தாக்கி அழிக்க உத்தரவிடவேண்டும் எனத் துடித்தான். ``சற்றுப் பொறுப்போம். என்ன நடக்கிறது எனத் தெரிந்துகொள்வோம்” என்றார் மையூர்கிழார்.
அவருக்குச் சுலுந்துக்கம்பின் நினைவு வந்தது. கருங்கைவாணனிடம் சொன்னார், ``காட்டுக்குள் அரியவகையான சுலுந்துக்கம்பு இருக்கிறது. அதைக் கூராக வெட்டித் தீப்பற்றவைத்தால், அது கொழுந்துவிட்டு எரியும். காற்றாலும் மழையாலும் அதை அணைக்க முடியாது. குச்சியைக் கீழே போட்டு மண் அள்ளி அதன் மேல் கொட்டினால் மட்டுமே அணைக்க முடியும்” என்றார்.
கீழிறங்கிய பறம்புநாட்டுக் குதிரைவீரர்கள், பாசறையை நெருங்கிவிட்டனர் என்பது தெளிவாகத் தெரிந்தது. அவர்கள் இரு பிரிவுகளாகப் பிரிந்து பாசறையின் இரு பக்கங்களிலும் சுற்றுவதை பந்தச்சுடர்கள் நகரும் வழிகளிலிருந்து புரிந்துகொள்ள முடிந்தது.
சோழப்படையின் பெரும்பாசறை அதுதான். அங்கு காவல்வீரர்கள் இருப்பர். ஆனாலும் மழை கொட்டும் இந்த நள்ளிரவில் விழிப்போடு இருப்பார்களா என்பது ஐயமே, ``நாம் முரசொலி எழுப்பிக் கவனப்படுத்துவோமா?” எனக் கேட்டான் கருங்கைவாணன்.
``இந்த மழையில் முரசினோசையோ கொம்போசையோ அவ்வளவு தொலைவுக்குக் கேட்காது” என்றார் மையூர்கிழார்.
காற்றின் வேகத்தால் பரண் கடுமையாக ஆடியது. ``கவனமாக இறுகப்பிடித்து நில்லுங்கள்” என்று சொன்ன கருங்கைவாணன், இடதுபுறமாக இருக்கும் கம்பத்தை நன்றாகப் பிடித்து நின்றான். அப்போது வடகோடியில் மின்னல் வெட்டி இறங்கியது. அதை உற்றுப்பார்த்தபடி அப்படியே நின்றான். சிறிது நேரம் இருவரிடமும் பேச்சு ஏதும் இல்லை. பிறகு மையூர்கிழார் கேட்டார், ``அந்தத் தீப்பந்தங்கள் அசையாமல் நின்ற இடத்திலேயே நிற்கின்றன. கவனித்தீர்களா?”
கருங்கைவாணன் இடதுபுறம் இருக்கும் கம்பத்தைப் பிடித்துக்கொண்டு அந்தப் பக்கமாகப் பார்த்துக்கொண்டிருந்ததால் அவர் கேட்பது காதில் விழவில்லை. மையூர்கிழார் மீண்டும் உரத்துக் குரல்கொடுத்தபோதுதான் கருங்கைவாணன் திரும்பினான்.
``என்ன?”
``அவர்கள் ஈட்டியின் மேல்முனையில் பந்தங்களைக் கட்டிக்கொண்டு வந்துள்ளனர். அவற்றை வீசியெறிந்துள்ளனர். ஈட்டி குத்தி நிற்கும் இடமெல்லாம் பந்தங்கள் நின்று எரிகின்றன” என்றார்.
``வந்தவர்கள் எங்கே?”
``அவர்கள் நாகக்கரட்டுக்குத் திரும்புகின்றனர். மின்னல் ஒளியில் பார்த்தேன்.”
``நானும் பார்த்தேன், நாகக்கரட்டிலிருந்து பலர் கீழிறங்குகின்றனர்” என்றான் கருங்கைவாணன்.
``எந்தப் பக்கம்?” எனக் கேட்டார் மையூர்கிழார்.
இடதுபுறமாகக் கை நீட்டிக் காட்டினான் கருங்கைவாணன்.
இருவருக்கும் எதுவும் புரிபடவில்லை. வலதுபுறக் கடைசியில் தீப்பந்தங்களை எறிந்து நட்டுவைத்துவிட்டு ஏன் மலையேற வேண்டும்? இடதுபுறம் தட்டியங்காட்டுப் பக்கமாக மலையை விட்டு ஏன் கீழிறங்கி வரவேண்டும் என்று சிந்தித்தபடி நின்றுகொண்டிருந்தனர். மழையின் சீற்றம் மேலும் கூடியது.
மையூர்கிழார் ஏதேதோ எண்ணியபடி இருந்தார். முதன்முதலில் காரமலையின் உச்சியில் தீப்பந்தம் எந்த இடத்தில் தெரியத் தொடங்கியது என நினைவுகூர்ந்தார். மனதில் ஐயம் ஒன்று மேலெழும்பியது. அதன் பிறகு அவரிடமிருந்து பேச்சேதும் வெளிவரவில்லை.
`ஏன் எதுவும் சொல்லாமல் நிற்கிறார்?’ எனக் கருங்கைவாணனுக்குப் புரியவில்லை.
உள்ளுக்குள் பரவிய நடுக்கம் அவரை எளிதில் பேச அனுமதிக்கவில்லை. சற்று நேரம் கழித்துச் சொன்னார், ``அவர்கள் அணலி இருக்கும் குகைகளில் இருந்து நெருப்பை ஏந்தி வந்திருப்பார்களோ என அஞ்சுகிறேன்.”
``அணலி என்றால்?” கேட்டான் கருங்கைவாணன்.
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
வீரயுக நாயகன் வேள் பாரி - 107 - தொடர்ச்சி
``நெருப்புப்பூச்சி. உச்சிமலையின் அடர்குகைக்குள் இருக்கும். நெருப்பைப் பார்த்தால் அதைத் தொடர்ந்து அப்படியே வந்துவிடும். அதன் ரீங்கார ஓசை, பல்வேறு நச்சுப்பூச்சிகளைக் கவர்ந்திழுக்கக்கூடியது. அந்த அணலிகள் இருக்கும் குகையில் இருந்து எடுத்துவரப்பட்ட தீப்பந்தங்கள் அவை. அந்தப் பந்தங்களின் தொடர்ச்சியாகப் பல்லாயிரம் பூச்சிகள் இந்நேரம் அங்கே வந்திருக்கக்கூடும். எல்லாம் பந்தத்தைச் சுற்றி இருளுக்குள் பறந்துகொண்டிருக்கும். அந்த இடத்தில் உயிரினங்களின் நடமாட்டம் இருப்பதை அவை அறிந்தால், கொடுந்தாக்குதலை நடத்தும். நம் வீரர்கள் பாசறையிலிருந்து வெளிவரத் தொடங்கியதும் அங்கு நடக்கப்போவதை என்னால் கற்பனைசெய்துகூடப் பார்க்க முடியவில்லை.”
``ஏன்... அவ்வளவு மோசமான விளைவுகள் ஏற்படும் என்று அஞ்சுகிறீர்களா?”
``அநேகமாக சோழர் பாசறையிலிருந்து பத்தில் ஒரு வீரன்கூடத் தப்ப முடியாது. அணலிப் பூச்சி கடிக்கவேண்டாம்; மேலே பட்டாலே போதும். மொத்த உடலும் தீப்பிடித்து எரிவதைப்போலத் துடிக்கத் தொடங்கும்” இதை அவர் சொல்லிக்கொண்டிருக்கும்போதே வெங்கல்நாட்டு திசையிலிருந்து குதிரையில் இருவர் வேகமாக வந்து சேர்ந்தனர். கொட்டும் மழையின் வேகத்தால் வந்திருப்பது யாரெனத் தெரியவில்லை.
பரணின் கீழே இருந்த தளபதி உறுமன்கொடி பரண் மேலே பார்த்தபடி ``மையூர்கிழாரைத் தேடி வந்துள்ளனர்” என்று உரத்தகுரலில் கத்தினான்.
``அவர்களில் ஒருவனை மேலே அனுப்பு” என்றார் மையூர்கிழார்.
ஒருவன் மட்டும் மேலேறி வந்தான். அவன் போரில் ஈடுபடாத ஆறு ஊர் ஒற்றர்களில் முக்கியமானவன். மையூர்கிழாரால் அந்தப் பணிக்கு நியமிக்கப்பட்டவன். மேலேறிய வேகத்தில் சொன்னான், ``அவர்கள் அணலியை இறக்கிவிட்டார்கள்.”
``அப்படித்தான் இருக்குமெனக் கணித்தேன்.”
``அனைவரும் உடனடியாக இந்த நிலத்தை விட்டு வெளியேறுவது நல்லது” என்று சொன்னவன், ``அதுமட்டுமல்ல, பாண்டியர் படையின் பாசறையைச் சுற்றி எண்ணற்ற ஈட்டிகளை எறிந்துள்ளனர்.”
பாண்டிய வீரர்களின் பாசறை சோழப்படைக்குக் கீழ்ப்புறமாக இருப்பதால், இங்கிருந்து பார்ப்பது கடினம். எனவே, பரண் மேல் இருந்தவர்களுக்கு அது பற்றித் தெரியவில்லை.
``பந்தத்துடனா?” எனப் பதற்றத்துடன் கேட்டார் மையூர்கிழார்.
``இல்லை. பந்தம் இல்லாமல்தான் ஈட்டிகள் மண்ணில் குத்தி நிற்கின்றன.”
``வெறும் ஈட்டியை ஏன் எறிந்துள்ளனர்?”
``அதை அருகில் சென்று பார்த்தால்தான் தெரியும். ஆனால், அருகில் சென்று பார்க்க நம் வீரர்கள் மிகவும் அஞ்சுகின்றனர். ஆனால், என்னவாக இருக்குமென்று வீரன் ஒருவன் சொன்னான்.”
``என்ன சொன்னான்?”
``இருள்வேல மரத்தின் அடியிலிருந்து உருவாகும் சிவப்புநிறப் பிசின் ஈட்டி முழுவதும் தடவப்பட்டிருக்கலாம். அது மழைக்குக் கரையாது” என்று சொல்லி நிறுத்திக்கொண்டான்.
மையூர்கிழார் உறைந்தார்.
``அந்தப் பிசினால் என்ன ஆபத்து?” எனக் கேட்டான் கருங்கைவாணன்.
இரவில் ஆபத்தேதுமில்லை. ஆனால், பொழுது விடியத் தொடங்கியதும் காரமலை முழுவதிலும் இருக்கும் பறக்கும் அட்டைகளும் கொம்புதூக்கி வண்டுகளும் பிசின் வாடைக்கு அங்கு வந்துவிடும். எதிர்ப்படும் மனிதர்கள் யாரும் தப்புவது எளிதல்ல. கொம்புதூக்கி வண்டின் உடலெல்லாம் முள்ளம்பன்றிபோல சின்னஞ்சிறிய கொம்புகள் பல்லாயிரம் உண்டு. ஒரு கொம்பு மனிதனின் மீது பட்டால்போதும் விரல்கள் ஒவ்வொன்றும் கையளவு பருத்துவிடும். ஒரு மாதமானாலும் அவனால் எதுவும் செய்ய முடியாது” என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே பரணின் கீழே ஏதோ சத்தம் கேட்டது. என்னவென்று எட்டிப்பார்த்தான் மையூர்கிழார். வெங்கல்நாட்டு அரண்மனையின் தலைமை ஒற்றன் மேலே அனுமதிக்கச் சொல்லி சத்தம் கொடுத்துக்கொண்டிருந்தான்.
``அவனை மேலே அனுப்பு” எனக் கத்தினார் மையூர்கிழார். அவரின் ஓசை எதுவும் கீழே கேட்கவில்லை. கை அசைவை வைத்துப் புரிந்துகொண்ட உறுமன்கொடி, அவனை மேலே அனுப்பினான். `காற்றும் மழையும் இவ்வளவு அதிகமாக இருக்கும்போது, ஏன் இவரையும் மேலே அனுப்பச் சொல்கிறார்?’ எனக் கோபப்பட்டான் உறுமன்கொடி.
அவன் ஏறும் வேகமே பரணை எதிர் திசையில் ஆட்டுவதைப்போல் இருந்தது. பதற்றத்தின் உச்சத்தை அவனது உடலின் வேகம் சொல்லியது. படியில் ஏறும்போதே சத்தமாகச் சொன்னான், ``பறம்பின் பன்னிரு குடிகளும் கீழிறங்கிவிட்டன.”
``என்ன சொல்கிறாய்?” எனக் கேட்டார் மையூர்கிழார்
``ஆம், நான்கு குடிகளைத் தவிர பறம்பில் அடைக்கலமான பன்னிரு குடிகளும் இறங்கித் தாக்க பாரி அனுமதியளித்துவிட்டான். தலைமுறை தலைமுறையாக மூவேந்தர்களின் மீதிருக்கும் பகைதீர்க்க எல்லோரும் மலையை விட்டுக் கீழிறங்கிவிட்டனர்.”
அப்போது பேரோசையோடு வெட்டி இறங்கிய மின்னல் ஒளியில் மையூர்கிழாரின் முகத்தைப் பார்த்தான் கருங்கைவாணன். அதன் பிறகு அவன் வாய் திறக்கவே இல்லை.
வந்தவன் சொன்னான், `` `வெங்கல் நாட்டினர் எல்லோரும் வெளியேறிவிடுங்கள்’ என ஆறு ஊர்க்காரர்களிடமிருந்து செய்தி வந்துள்ளது. `இனி இந்த மண்ணில் மிஞ்சப்போவது யாரும் இல்லை. உயிர்பிழைத்துக்கொள்ளுங்கள்’ என்று பறம்பின் செய்தி பரவிக்கொண்டிருக்கிறது.”
காற்றின் வேகத்தால்தான் நாம் ஆடுகிறோமா அல்லது உடலின் நடுக்கமா என்ற ஐயம் எழத் தொடங்கியது. ``முடிவை, காலம் தாழ்த்தாமல் எடுங்கள்” என்று கத்தினான் இரண்டாவதாக வந்தவன்.
காற்றின் வேகத்தை எதிர்கொள்ள முடியாமல் பின்புறமாகத் திரும்பி, அந்தப் பக்கம் இருக்கும் கம்பத்தை இறுகப் பற்றினார். எதிரில் வெகுதொலைவில் மூஞ்சல் தெரிந்தது. குலசேகரபாண்டியனின் கூடாரத்தின் முன் கண்ணாடிக்கூடு களால் ஆன பெருவிளக்குகள் ஒளி சிந்திக்கொண்டிருந்தன.
பார்த்த கணத்தில் ஆபத்து புரியத் தொடங்கியது. பெருங்குரலில், ``விளக்கை அணையுங்கள்” என்று கத்தினார். மழையின் ஓசையில் பக்கத்தில் இருப்பவர்களுக்குக்கூட அது கேட்கவில்லை. கடைசியாக மேலேறியவனைவிட இரு மடங்கு வேகத்தில் கீழே இறங்கினார் மையூர்கிழார். அவரைத் தொடர்ந்து அனைவரும் இறங்கினர்.
இறங்கிய வேகத்தில் குதிரையின் மேலேறி மூஞ்சலை நோக்கி விரைந்தார். மற்றவர்களும் அவரின் பின்னால் குதிரையை விரட்டிக்கொண்டு வந்தனர். விளக்கொளியின் அபாயத்தால் துடித்தது மையூர்கிழாரின் உடல். குதிரையை விடாது அடித்து விரட்டினார்.
மூஞ்சலை நெருங்கியபோதே பெருங்குரலில் கத்தினார், ``விளக்கை அணையுங்கள்... விளக்கை அணையுங்கள்!”
மூஞ்சலில் குலசேகரபாண்டியனின் கூடாரத்தைச் சுற்றி மூவேந்தர்களின் மெய்க்காவல்படை வீரர்கள் நின்றிருந்தனர். மையூர்கிழாரின் ஓசை கேட்டதும் ஏதோ ஆபத்தென்று புரிந்துகொண்டு விளக்கின் ஒளியைக் குறைத்தனர்.
``முழுமையாக அணையுங்கள்!” என்று கத்தியபடி குதிரையை விட்டுத் தவ்வி இறங்கினார்.
மெய்க்காவல் வீரன் ஏதோ சொல்லவந்தான். ஆனால், அதைக் கேட்கும் நிலையில் மையூர்கிழார் இல்லை. இறங்கிய வேகத்தில் அருகில் இருந்த ஈட்டியை எடுத்து விளக்குகளின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினார். விளக்கொளி முழுமுற்றாக விழுந்து அணைந்தது. கணநேரத்தில் என்ன நடக்கிறது எனப் புரிந்துகொள்வதற்குள் எங்கும் இருள் சூழ்ந்தது. மெய்க்காவல் தளபதி ஏதோ தவறு நடக்கப்போகிறது என மையூர்கிழாரை நோக்கிக் குரல் உயர்த்தி நெருங்கிவரும்போது கருங்கைவாணன் கத்திக்கொண்டே வந்து சேர்ந்தான். அவனது குரல் கேட்டுத்தான் வீரர்கள் அமைதியாயினர்.
கூடாரத்துக்குள் நுழைய அனுமதி கேட்பதற்கெல்லாம் நேரமில்லை. திரையை விலக்கி, சட்டென உள்ளே நுழைந்தார் மையூர்கிழார். அவரைத் தொடர்ந்து கருங்கைவாணனும் உள்ளே நுழைந்தான். அனுமதி ஏதுமின்றி மேலெல்லாம் கொட்டும் மழைநீரோடு அப்படியே உள்ளே நுழைந்துள்ள இருவரையும் பார்த்த கணத்தில் வேந்தர்களின் முகங்கள் இறுகின.
``பேரரசே, உடனடியாக விளக்கை அணைக்க உத்தரவிடுங்கள்” என்றார் மையூர்கிழார்.
``கூடாரத்துக்குள் இருக்கும் விளக்கை ஏன் அணைக்க வேண்டும்?” எனக் கேட்டார் சோழவேழன்.
``விளக்கத்தைப் பிறகு சொல்கிறேன். ஒரு கணம் காலம் தாழ்த்தினால்கூட நாம் பேராபத்தில் சிக்கிக்கொள்வோம்” என்று கத்தினார்.
ஆபத்தை உணர்ந்த குலசேகரபாண்டியன், ``விளக்கை அணையுங்கள்” என்றார்.
உள்ளே வேந்தர் குடும்பத்தைச் சார்ந்த ஐவர் மட்டுமே இருந்தனர். மையூர்கிழாரும் கருங்கைவாணனும் உள்ளே நுழைந்துள்ளனர். இருவரும் பாண்டியநாட்டைச் சேர்ந்தவர்கள். இந்நிலையில் விளக்கை முற்றிலுமாக அணைக்கச் சொல்வதில் பாண்டியனின் சதியேதும் இருக்குமோ என்ற ஐயத்தில், ``தளபதி உசந்தனை உள்ளே வரச்சொல்” எனக் கத்தினார் சோழவேழன்.
தேர்ப்படைக்குத் தலைமைதாங்கிய சோழர் தளபதி வெறுகாளன் கொல்லப்பட்ட பிறகு, உசந்தனிடம் அந்தப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. சோழவேழனின் உரத்த குரல் வெளியில் நிற்கும் உசந்தனுக்கும் கேட்டது. விளக்கை அணைக்கும் கணத்தில் அவன் உள்ளே நுழைந்தான்.
``துடும்பன் எங்கே?” எனக் கத்தினான் உதியஞ்சேரல்.
``உள்ளே வந்துவிட்டேன் பேரரசே” எனக் கூறியபடி உள்ளே நுழைந்தான். ஆனால், யார் எங்கு இருக்கிறார் என்று எதுவும் தெரியவில்லை. மழையின் பேரோசையும், நம்பிக்கையின்மை உருவாக்கிய அச்சமும் கூடாரம் முழுக்க நிரம்பியிருந்தன.
போரின் நெருக்கடி உருவாக்கியுள்ள நம்பகமின்மையைச் சேரனும் சோழனும் கணநேரத்தில் வெளிப்படுத்தினர். குலசேகர பாண்டியனின் அதிர்ந்த முகத்தைப் பார்க்க, துளியளவும் வெளிச்சமுமில்லை. மூவேந்தர்களும் முழுமையான இருளுக்குள் முகமற்று இருந்தனர்.
எதை நோக்கிக் கேள்வி எழுப்புவது எனத் தயங்கியபடியே கேட்டார் குலசேகரபாண்டியன், ``விளக்கை அணைத்துவிட்டுப் பேசுமளவுக்கு அப்படி என்ன ஆபத்து வந்துவிட்டது?”
``எதிரிகள், அணலிப்பூச்சிகளை மலை உச்சிக் குகைக்குள்ளிருந்து தரைக்குக் கொண்டு வந்துவிட்டார்கள் பேரரசே.”
சொல்லி முடிக்கும் முன் உதியஞ்சேரலின் குரல் வெடித்து வந்தது. பதற்றத்தின் உச்சத்தில் அவன் கேட்ட கேள்வியும் அதற்கு மையூர்கிழார் சொன்ன பதிலும் அவையை நடுங்கச்செய்தன. அணலியைப் பற்றி நன்கு அறிந்தவன் சேரன். எனவே, அந்தப் பெயர் கேட்டவுடன் துடித்துப்போனான். இறுதியாகக் கேட்டான், ``எந்தத் திசையில் கீழிறக்கியிருக்கிறார்கள்?”
``சோழர் படையின் பாசறையைச் சுற்றி” சொல்லும் வரை இந்த அவையில் அது உருவாக்கப்போகும் விபரீதத்தை மையூர்கிழார் சிந்திக்கவில்லை.
உதியஞ்சேரலும் மையூர்கிழாரும் வெளிப்படுத்திய பதற்றம் இப்போது செங்கனச்சோழனுக்கும் சோழவேழனுக்கும் பரவியது. ``எம் போர்வீரர்களின் பாசறை, ஆபத்தில் மாட்டிக்கொண்டதா?”
செங்கனச்சோழனின் கேள்விக்கு யாரும் பதில் சொல்லவில்லை.
``எங்கு நிற்கிறீர்கள் மையூர்கிழாரே, பதில் சொல்லுங்கள்?” என இருட்டுக்குள் கத்தினான் செங்கனச்சோழன்.
``பதற்றமடைய வேண்டாம் பேரரசே! இரவில் வீரர்கள் யாரும் வெளிவராமல் கூடாரத்துக்குள்ளே இருக்க வேண்டும். பொழுது நன்றாக விடிந்து கதிரவன் ஒளி காய்ந்து இறங்கும் வரை அணலி ஆற்றலோடு இருக்கும். உச்சிவெயில் ஏறிய பிறகு அதன் வேகம் குறையும். ஆனால், அதுவரை வீரர்கள் யாரும் கூடாரத்தை விட்டு வெளிவரக் கூடாது” என்றான்.
``இரவின் இறுதி ஐந்து நாழிகையிலே பாசறையில் வேலைகள் முழுமையாகத் தொடங்கிவிடுமே, பொழுது விடியத் தொடங்கும்போதே எல்லா வீரர்களும் கூடாரம் விட்டு வெளியில் வந்துவிடுவார்களே!”
``ஆம். அதைத் தடுப்பது எப்படி என்று உடனடியாகச் சிந்திக்க வேண்டும்” என்று சொல்லிய வேகத்தில் மையூர்கிழார் சொன்னார், ``பேரரசே! இதே போன்றதோர் ஆபத்து, பாண்டிப்படையின் பாசறைக்கும் நிகழ்ந்துள்ளது.”
``என்ன சொல்கிறாய் நீ?” என்று அடிக்குரலில் இருந்து வெளிவந்தன குலசேகரபாண்டியனின் சொற்கள்.
``ஆம் பேரரசே! இருள்வேல மரத்தின் சிவப்புநிறப் பிசின் தடவிய ஈட்டியை நம் வீரர்கள் தங்கியுள்ள பாசறையைச் சுற்றி எறிந்துள்ளனர். பொழுது விடிந்தால் காரமலை முழுவதிலும் இருக்கும் பறக்கும் அட்டைகளும் கொம்புதூக்கி வண்டுகளும் பிசின் வாடைக்குக் கீழிறங்கிவிடும். அதன் பிறகு எதிர்ப்படும் மனிதர்கள் கடுந்தாக்குதலில் மாட்டிக்கொள்வார்கள்.”
பதற்றத்தின் உச்சிக்குப்போனான் பொதியவெற்பன். ``என்ன சொல்கிறீர் மையூர்கிழாரே... நம் வீரர்களைக் காக்க என்ன வழி?”
``விடிவதற்குள் வீரர்கள் அனைவரையும் பாசறைக்குள்ளிருந்து வெளியேற்ற வேண்டும்” சொல்லிக்கொண்டே இருக்கும்போதுதான் பேசப்படும் சொற்கள் எவ்வளவு பெரிய சிக்கலை உருவாக்கப்போகின்றன என்பதை மையூர்கிழாரால் சிந்திக்க முடிந்தது.
சோழர்களின் பாசறையும் பாண்டியர்களின் பாசறையும் ஒருகாத இடைவெளியில்தான் இருக்கின்றன. இங்கு இரவோடு இரவாக வீரர்கள் வெளியேறினால் அது ஏற்படுத்தும் ஓசை சோழர்களின் பாசறைக்கு நன்கு கேட்கும். அரவங்கேட்டு ஒரு வீரன் பார்த்தால் போதும், `ஏதோ ஆபத்து. அதனால்தான் பாண்டிய வீரர்கள் பாசறையை விட்டு வெளியேறுகிறார்கள்’ என நினைத்து, கணநேரத்தில் மொத்த வீரர்களும் வெளியேறுவார்கள். அந்நிலை ஏற்பட்டால் அணலிப் பூச்சிகளுக்கு மிஞ்சப்போவது யாரும் இல்லை.
பேரரசரின் கூடாரத்தை விட்டு வெளியில் நின்றிருந்தான் உறுமன்கொடி. அவன் அருகில் அடுத்தநிலை தளபதிகளும் மெய்க்காப்பாளர்களும் நின்றிருந்தனர். கொட்டும் மழையின் ஓசையை விஞ்சி வெளியில் கேட்டது கூடாரத்துக்குள் வேந்தர்கள் பேசிக்கொள்ளும் ஓசை.
வெளியில் நிற்கும் மெய்க்காவல்படைத் தளபதிகளுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. விளக்குகள் முற்றிலும் அணைக்கப்பட்ட இருளுக்குள் வேந்தர்கள் மிகுந்த சினத்தோடு உரையாடிக்கொண்டிருக்கின்றனர். அது ஆபத்தை ஏற்படுத்திவிடும் என அஞ்சினர். ஆனால், அரச உத்தரவின்றி உள்ளே போக முடியாது, குழப்பத்தில் செய்வதறியாது நின்றனர்.
அப்போது பாண்டியநாட்டு ஆபத்துதவிகளின் தலைவன் சொன்னான், ``மூன்று பேரரசுகளின் தலைமை மெய்க்காவலர்களும் ஒன்றாக உள்ளே செல்வோமா?”
சோழப் பேரரசின் மெய்க்காவல்படையான வேளக்காரப்படையின் தலைவன் ``சரி’’யென்று சொன்னான். ஆனால், சேரமன்னனின் மெய்க்காவல்படையான காக்குவீரர்களின் படைத்தலைவனிடமிருந்து மட்டும் பதில் வரவில்லை.
காலம் கடந்துகொண்டிருந்தது.
அப்போது பாண்டியநாட்டு ஆபத்துதவிகளின் தலைவன் மீண்டும் கேட்டான் ``ஏன் நீங்கள் மட்டும் பேசாமல் இருக்கிறீர்கள்?”
தட்டியங்காட்டைப் பார்த்தபடி நின்றுகொண்டிருந்த காக்குவீரர்களின் படைத்தலைவன் சொன்னான், ``தட்டியங்காட்டை நோக்கி உற்றுப்பாருங்கள்.”
அவன் சொன்னதும் அந்தத் திசை நோக்கி அனைவரும் உற்றுப்பார்த்தனர். கொட்டும் மழையில் இரவின் இருளுக்குள் இருந்து எதுவும் புலப்படவில்லை.
``ஒன்றுமில்லையே” என்று சொல்லியபடி இடதுபுறமாகத் திரும்பும்போது நீளமாய்ப் பிளந்து இறங்கிய அடர்மஞ்சள் மின்னல் ஒளியில் தட்டியங்காடு முழுவதும் ஒளிர்ந்தது. அவ்வளவு நேரமும் தங்கள் தளபதிகள் நின்றிருந்த பரணின்மேல் வீரர்கள் சிலர் ஈட்டி ஏந்தி நின்றிருந்தனர். அதன் அடிவாரத்திலிருந்து ஆவேசமிக்க பறம்புவீரர்கள் பாய்ந்து வந்துகொண்டிருந்தனர்.
``எதிரிகள் வந்துகொண்டிருக்கிறார்கள்” என்று மெய்க்காப்பாளர்கள் பேரோசை எழுப்பிய போதுதான் கூடாரத்துக்குள் இருந்தவர்களுக்கு ஆபத்து புரியத் தொடங்கியது.
- பறம்பின் குரல் ஒலிக்கும்...
| சு.வெங்கடேசன் | ஓவியங்கள்: ம.செ., | நன்றி ஆனந்த விகடன் |
``ஏன்... அவ்வளவு மோசமான விளைவுகள் ஏற்படும் என்று அஞ்சுகிறீர்களா?”
``அநேகமாக சோழர் பாசறையிலிருந்து பத்தில் ஒரு வீரன்கூடத் தப்ப முடியாது. அணலிப் பூச்சி கடிக்கவேண்டாம்; மேலே பட்டாலே போதும். மொத்த உடலும் தீப்பிடித்து எரிவதைப்போலத் துடிக்கத் தொடங்கும்” இதை அவர் சொல்லிக்கொண்டிருக்கும்போதே வெங்கல்நாட்டு திசையிலிருந்து குதிரையில் இருவர் வேகமாக வந்து சேர்ந்தனர். கொட்டும் மழையின் வேகத்தால் வந்திருப்பது யாரெனத் தெரியவில்லை.
பரணின் கீழே இருந்த தளபதி உறுமன்கொடி பரண் மேலே பார்த்தபடி ``மையூர்கிழாரைத் தேடி வந்துள்ளனர்” என்று உரத்தகுரலில் கத்தினான்.
``அவர்களில் ஒருவனை மேலே அனுப்பு” என்றார் மையூர்கிழார்.
ஒருவன் மட்டும் மேலேறி வந்தான். அவன் போரில் ஈடுபடாத ஆறு ஊர் ஒற்றர்களில் முக்கியமானவன். மையூர்கிழாரால் அந்தப் பணிக்கு நியமிக்கப்பட்டவன். மேலேறிய வேகத்தில் சொன்னான், ``அவர்கள் அணலியை இறக்கிவிட்டார்கள்.”
``அப்படித்தான் இருக்குமெனக் கணித்தேன்.”
``அனைவரும் உடனடியாக இந்த நிலத்தை விட்டு வெளியேறுவது நல்லது” என்று சொன்னவன், ``அதுமட்டுமல்ல, பாண்டியர் படையின் பாசறையைச் சுற்றி எண்ணற்ற ஈட்டிகளை எறிந்துள்ளனர்.”
பாண்டிய வீரர்களின் பாசறை சோழப்படைக்குக் கீழ்ப்புறமாக இருப்பதால், இங்கிருந்து பார்ப்பது கடினம். எனவே, பரண் மேல் இருந்தவர்களுக்கு அது பற்றித் தெரியவில்லை.
``பந்தத்துடனா?” எனப் பதற்றத்துடன் கேட்டார் மையூர்கிழார்.
``இல்லை. பந்தம் இல்லாமல்தான் ஈட்டிகள் மண்ணில் குத்தி நிற்கின்றன.”
``வெறும் ஈட்டியை ஏன் எறிந்துள்ளனர்?”
``அதை அருகில் சென்று பார்த்தால்தான் தெரியும். ஆனால், அருகில் சென்று பார்க்க நம் வீரர்கள் மிகவும் அஞ்சுகின்றனர். ஆனால், என்னவாக இருக்குமென்று வீரன் ஒருவன் சொன்னான்.”
``என்ன சொன்னான்?”
``இருள்வேல மரத்தின் அடியிலிருந்து உருவாகும் சிவப்புநிறப் பிசின் ஈட்டி முழுவதும் தடவப்பட்டிருக்கலாம். அது மழைக்குக் கரையாது” என்று சொல்லி நிறுத்திக்கொண்டான்.
மையூர்கிழார் உறைந்தார்.
``அந்தப் பிசினால் என்ன ஆபத்து?” எனக் கேட்டான் கருங்கைவாணன்.
இரவில் ஆபத்தேதுமில்லை. ஆனால், பொழுது விடியத் தொடங்கியதும் காரமலை முழுவதிலும் இருக்கும் பறக்கும் அட்டைகளும் கொம்புதூக்கி வண்டுகளும் பிசின் வாடைக்கு அங்கு வந்துவிடும். எதிர்ப்படும் மனிதர்கள் யாரும் தப்புவது எளிதல்ல. கொம்புதூக்கி வண்டின் உடலெல்லாம் முள்ளம்பன்றிபோல சின்னஞ்சிறிய கொம்புகள் பல்லாயிரம் உண்டு. ஒரு கொம்பு மனிதனின் மீது பட்டால்போதும் விரல்கள் ஒவ்வொன்றும் கையளவு பருத்துவிடும். ஒரு மாதமானாலும் அவனால் எதுவும் செய்ய முடியாது” என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே பரணின் கீழே ஏதோ சத்தம் கேட்டது. என்னவென்று எட்டிப்பார்த்தான் மையூர்கிழார். வெங்கல்நாட்டு அரண்மனையின் தலைமை ஒற்றன் மேலே அனுமதிக்கச் சொல்லி சத்தம் கொடுத்துக்கொண்டிருந்தான்.
``அவனை மேலே அனுப்பு” எனக் கத்தினார் மையூர்கிழார். அவரின் ஓசை எதுவும் கீழே கேட்கவில்லை. கை அசைவை வைத்துப் புரிந்துகொண்ட உறுமன்கொடி, அவனை மேலே அனுப்பினான். `காற்றும் மழையும் இவ்வளவு அதிகமாக இருக்கும்போது, ஏன் இவரையும் மேலே அனுப்பச் சொல்கிறார்?’ எனக் கோபப்பட்டான் உறுமன்கொடி.
அவன் ஏறும் வேகமே பரணை எதிர் திசையில் ஆட்டுவதைப்போல் இருந்தது. பதற்றத்தின் உச்சத்தை அவனது உடலின் வேகம் சொல்லியது. படியில் ஏறும்போதே சத்தமாகச் சொன்னான், ``பறம்பின் பன்னிரு குடிகளும் கீழிறங்கிவிட்டன.”
``என்ன சொல்கிறாய்?” எனக் கேட்டார் மையூர்கிழார்
``ஆம், நான்கு குடிகளைத் தவிர பறம்பில் அடைக்கலமான பன்னிரு குடிகளும் இறங்கித் தாக்க பாரி அனுமதியளித்துவிட்டான். தலைமுறை தலைமுறையாக மூவேந்தர்களின் மீதிருக்கும் பகைதீர்க்க எல்லோரும் மலையை விட்டுக் கீழிறங்கிவிட்டனர்.”
அப்போது பேரோசையோடு வெட்டி இறங்கிய மின்னல் ஒளியில் மையூர்கிழாரின் முகத்தைப் பார்த்தான் கருங்கைவாணன். அதன் பிறகு அவன் வாய் திறக்கவே இல்லை.
வந்தவன் சொன்னான், `` `வெங்கல் நாட்டினர் எல்லோரும் வெளியேறிவிடுங்கள்’ என ஆறு ஊர்க்காரர்களிடமிருந்து செய்தி வந்துள்ளது. `இனி இந்த மண்ணில் மிஞ்சப்போவது யாரும் இல்லை. உயிர்பிழைத்துக்கொள்ளுங்கள்’ என்று பறம்பின் செய்தி பரவிக்கொண்டிருக்கிறது.”
காற்றின் வேகத்தால்தான் நாம் ஆடுகிறோமா அல்லது உடலின் நடுக்கமா என்ற ஐயம் எழத் தொடங்கியது. ``முடிவை, காலம் தாழ்த்தாமல் எடுங்கள்” என்று கத்தினான் இரண்டாவதாக வந்தவன்.
காற்றின் வேகத்தை எதிர்கொள்ள முடியாமல் பின்புறமாகத் திரும்பி, அந்தப் பக்கம் இருக்கும் கம்பத்தை இறுகப் பற்றினார். எதிரில் வெகுதொலைவில் மூஞ்சல் தெரிந்தது. குலசேகரபாண்டியனின் கூடாரத்தின் முன் கண்ணாடிக்கூடு களால் ஆன பெருவிளக்குகள் ஒளி சிந்திக்கொண்டிருந்தன.
பார்த்த கணத்தில் ஆபத்து புரியத் தொடங்கியது. பெருங்குரலில், ``விளக்கை அணையுங்கள்” என்று கத்தினார். மழையின் ஓசையில் பக்கத்தில் இருப்பவர்களுக்குக்கூட அது கேட்கவில்லை. கடைசியாக மேலேறியவனைவிட இரு மடங்கு வேகத்தில் கீழே இறங்கினார் மையூர்கிழார். அவரைத் தொடர்ந்து அனைவரும் இறங்கினர்.
இறங்கிய வேகத்தில் குதிரையின் மேலேறி மூஞ்சலை நோக்கி விரைந்தார். மற்றவர்களும் அவரின் பின்னால் குதிரையை விரட்டிக்கொண்டு வந்தனர். விளக்கொளியின் அபாயத்தால் துடித்தது மையூர்கிழாரின் உடல். குதிரையை விடாது அடித்து விரட்டினார்.
மூஞ்சலை நெருங்கியபோதே பெருங்குரலில் கத்தினார், ``விளக்கை அணையுங்கள்... விளக்கை அணையுங்கள்!”
மூஞ்சலில் குலசேகரபாண்டியனின் கூடாரத்தைச் சுற்றி மூவேந்தர்களின் மெய்க்காவல்படை வீரர்கள் நின்றிருந்தனர். மையூர்கிழாரின் ஓசை கேட்டதும் ஏதோ ஆபத்தென்று புரிந்துகொண்டு விளக்கின் ஒளியைக் குறைத்தனர்.
``முழுமையாக அணையுங்கள்!” என்று கத்தியபடி குதிரையை விட்டுத் தவ்வி இறங்கினார்.
மெய்க்காவல் வீரன் ஏதோ சொல்லவந்தான். ஆனால், அதைக் கேட்கும் நிலையில் மையூர்கிழார் இல்லை. இறங்கிய வேகத்தில் அருகில் இருந்த ஈட்டியை எடுத்து விளக்குகளின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினார். விளக்கொளி முழுமுற்றாக விழுந்து அணைந்தது. கணநேரத்தில் என்ன நடக்கிறது எனப் புரிந்துகொள்வதற்குள் எங்கும் இருள் சூழ்ந்தது. மெய்க்காவல் தளபதி ஏதோ தவறு நடக்கப்போகிறது என மையூர்கிழாரை நோக்கிக் குரல் உயர்த்தி நெருங்கிவரும்போது கருங்கைவாணன் கத்திக்கொண்டே வந்து சேர்ந்தான். அவனது குரல் கேட்டுத்தான் வீரர்கள் அமைதியாயினர்.
கூடாரத்துக்குள் நுழைய அனுமதி கேட்பதற்கெல்லாம் நேரமில்லை. திரையை விலக்கி, சட்டென உள்ளே நுழைந்தார் மையூர்கிழார். அவரைத் தொடர்ந்து கருங்கைவாணனும் உள்ளே நுழைந்தான். அனுமதி ஏதுமின்றி மேலெல்லாம் கொட்டும் மழைநீரோடு அப்படியே உள்ளே நுழைந்துள்ள இருவரையும் பார்த்த கணத்தில் வேந்தர்களின் முகங்கள் இறுகின.
``பேரரசே, உடனடியாக விளக்கை அணைக்க உத்தரவிடுங்கள்” என்றார் மையூர்கிழார்.
``கூடாரத்துக்குள் இருக்கும் விளக்கை ஏன் அணைக்க வேண்டும்?” எனக் கேட்டார் சோழவேழன்.
``விளக்கத்தைப் பிறகு சொல்கிறேன். ஒரு கணம் காலம் தாழ்த்தினால்கூட நாம் பேராபத்தில் சிக்கிக்கொள்வோம்” என்று கத்தினார்.
ஆபத்தை உணர்ந்த குலசேகரபாண்டியன், ``விளக்கை அணையுங்கள்” என்றார்.
உள்ளே வேந்தர் குடும்பத்தைச் சார்ந்த ஐவர் மட்டுமே இருந்தனர். மையூர்கிழாரும் கருங்கைவாணனும் உள்ளே நுழைந்துள்ளனர். இருவரும் பாண்டியநாட்டைச் சேர்ந்தவர்கள். இந்நிலையில் விளக்கை முற்றிலுமாக அணைக்கச் சொல்வதில் பாண்டியனின் சதியேதும் இருக்குமோ என்ற ஐயத்தில், ``தளபதி உசந்தனை உள்ளே வரச்சொல்” எனக் கத்தினார் சோழவேழன்.
தேர்ப்படைக்குத் தலைமைதாங்கிய சோழர் தளபதி வெறுகாளன் கொல்லப்பட்ட பிறகு, உசந்தனிடம் அந்தப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. சோழவேழனின் உரத்த குரல் வெளியில் நிற்கும் உசந்தனுக்கும் கேட்டது. விளக்கை அணைக்கும் கணத்தில் அவன் உள்ளே நுழைந்தான்.
``துடும்பன் எங்கே?” எனக் கத்தினான் உதியஞ்சேரல்.
``உள்ளே வந்துவிட்டேன் பேரரசே” எனக் கூறியபடி உள்ளே நுழைந்தான். ஆனால், யார் எங்கு இருக்கிறார் என்று எதுவும் தெரியவில்லை. மழையின் பேரோசையும், நம்பிக்கையின்மை உருவாக்கிய அச்சமும் கூடாரம் முழுக்க நிரம்பியிருந்தன.
போரின் நெருக்கடி உருவாக்கியுள்ள நம்பகமின்மையைச் சேரனும் சோழனும் கணநேரத்தில் வெளிப்படுத்தினர். குலசேகர பாண்டியனின் அதிர்ந்த முகத்தைப் பார்க்க, துளியளவும் வெளிச்சமுமில்லை. மூவேந்தர்களும் முழுமையான இருளுக்குள் முகமற்று இருந்தனர்.
எதை நோக்கிக் கேள்வி எழுப்புவது எனத் தயங்கியபடியே கேட்டார் குலசேகரபாண்டியன், ``விளக்கை அணைத்துவிட்டுப் பேசுமளவுக்கு அப்படி என்ன ஆபத்து வந்துவிட்டது?”
``எதிரிகள், அணலிப்பூச்சிகளை மலை உச்சிக் குகைக்குள்ளிருந்து தரைக்குக் கொண்டு வந்துவிட்டார்கள் பேரரசே.”
சொல்லி முடிக்கும் முன் உதியஞ்சேரலின் குரல் வெடித்து வந்தது. பதற்றத்தின் உச்சத்தில் அவன் கேட்ட கேள்வியும் அதற்கு மையூர்கிழார் சொன்ன பதிலும் அவையை நடுங்கச்செய்தன. அணலியைப் பற்றி நன்கு அறிந்தவன் சேரன். எனவே, அந்தப் பெயர் கேட்டவுடன் துடித்துப்போனான். இறுதியாகக் கேட்டான், ``எந்தத் திசையில் கீழிறக்கியிருக்கிறார்கள்?”
``சோழர் படையின் பாசறையைச் சுற்றி” சொல்லும் வரை இந்த அவையில் அது உருவாக்கப்போகும் விபரீதத்தை மையூர்கிழார் சிந்திக்கவில்லை.
உதியஞ்சேரலும் மையூர்கிழாரும் வெளிப்படுத்திய பதற்றம் இப்போது செங்கனச்சோழனுக்கும் சோழவேழனுக்கும் பரவியது. ``எம் போர்வீரர்களின் பாசறை, ஆபத்தில் மாட்டிக்கொண்டதா?”
செங்கனச்சோழனின் கேள்விக்கு யாரும் பதில் சொல்லவில்லை.
``எங்கு நிற்கிறீர்கள் மையூர்கிழாரே, பதில் சொல்லுங்கள்?” என இருட்டுக்குள் கத்தினான் செங்கனச்சோழன்.
``பதற்றமடைய வேண்டாம் பேரரசே! இரவில் வீரர்கள் யாரும் வெளிவராமல் கூடாரத்துக்குள்ளே இருக்க வேண்டும். பொழுது நன்றாக விடிந்து கதிரவன் ஒளி காய்ந்து இறங்கும் வரை அணலி ஆற்றலோடு இருக்கும். உச்சிவெயில் ஏறிய பிறகு அதன் வேகம் குறையும். ஆனால், அதுவரை வீரர்கள் யாரும் கூடாரத்தை விட்டு வெளிவரக் கூடாது” என்றான்.
``இரவின் இறுதி ஐந்து நாழிகையிலே பாசறையில் வேலைகள் முழுமையாகத் தொடங்கிவிடுமே, பொழுது விடியத் தொடங்கும்போதே எல்லா வீரர்களும் கூடாரம் விட்டு வெளியில் வந்துவிடுவார்களே!”
``ஆம். அதைத் தடுப்பது எப்படி என்று உடனடியாகச் சிந்திக்க வேண்டும்” என்று சொல்லிய வேகத்தில் மையூர்கிழார் சொன்னார், ``பேரரசே! இதே போன்றதோர் ஆபத்து, பாண்டிப்படையின் பாசறைக்கும் நிகழ்ந்துள்ளது.”
``என்ன சொல்கிறாய் நீ?” என்று அடிக்குரலில் இருந்து வெளிவந்தன குலசேகரபாண்டியனின் சொற்கள்.
``ஆம் பேரரசே! இருள்வேல மரத்தின் சிவப்புநிறப் பிசின் தடவிய ஈட்டியை நம் வீரர்கள் தங்கியுள்ள பாசறையைச் சுற்றி எறிந்துள்ளனர். பொழுது விடிந்தால் காரமலை முழுவதிலும் இருக்கும் பறக்கும் அட்டைகளும் கொம்புதூக்கி வண்டுகளும் பிசின் வாடைக்குக் கீழிறங்கிவிடும். அதன் பிறகு எதிர்ப்படும் மனிதர்கள் கடுந்தாக்குதலில் மாட்டிக்கொள்வார்கள்.”
பதற்றத்தின் உச்சிக்குப்போனான் பொதியவெற்பன். ``என்ன சொல்கிறீர் மையூர்கிழாரே... நம் வீரர்களைக் காக்க என்ன வழி?”
``விடிவதற்குள் வீரர்கள் அனைவரையும் பாசறைக்குள்ளிருந்து வெளியேற்ற வேண்டும்” சொல்லிக்கொண்டே இருக்கும்போதுதான் பேசப்படும் சொற்கள் எவ்வளவு பெரிய சிக்கலை உருவாக்கப்போகின்றன என்பதை மையூர்கிழாரால் சிந்திக்க முடிந்தது.
சோழர்களின் பாசறையும் பாண்டியர்களின் பாசறையும் ஒருகாத இடைவெளியில்தான் இருக்கின்றன. இங்கு இரவோடு இரவாக வீரர்கள் வெளியேறினால் அது ஏற்படுத்தும் ஓசை சோழர்களின் பாசறைக்கு நன்கு கேட்கும். அரவங்கேட்டு ஒரு வீரன் பார்த்தால் போதும், `ஏதோ ஆபத்து. அதனால்தான் பாண்டிய வீரர்கள் பாசறையை விட்டு வெளியேறுகிறார்கள்’ என நினைத்து, கணநேரத்தில் மொத்த வீரர்களும் வெளியேறுவார்கள். அந்நிலை ஏற்பட்டால் அணலிப் பூச்சிகளுக்கு மிஞ்சப்போவது யாரும் இல்லை.
பேரரசரின் கூடாரத்தை விட்டு வெளியில் நின்றிருந்தான் உறுமன்கொடி. அவன் அருகில் அடுத்தநிலை தளபதிகளும் மெய்க்காப்பாளர்களும் நின்றிருந்தனர். கொட்டும் மழையின் ஓசையை விஞ்சி வெளியில் கேட்டது கூடாரத்துக்குள் வேந்தர்கள் பேசிக்கொள்ளும் ஓசை.
வெளியில் நிற்கும் மெய்க்காவல்படைத் தளபதிகளுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. விளக்குகள் முற்றிலும் அணைக்கப்பட்ட இருளுக்குள் வேந்தர்கள் மிகுந்த சினத்தோடு உரையாடிக்கொண்டிருக்கின்றனர். அது ஆபத்தை ஏற்படுத்திவிடும் என அஞ்சினர். ஆனால், அரச உத்தரவின்றி உள்ளே போக முடியாது, குழப்பத்தில் செய்வதறியாது நின்றனர்.
அப்போது பாண்டியநாட்டு ஆபத்துதவிகளின் தலைவன் சொன்னான், ``மூன்று பேரரசுகளின் தலைமை மெய்க்காவலர்களும் ஒன்றாக உள்ளே செல்வோமா?”
சோழப் பேரரசின் மெய்க்காவல்படையான வேளக்காரப்படையின் தலைவன் ``சரி’’யென்று சொன்னான். ஆனால், சேரமன்னனின் மெய்க்காவல்படையான காக்குவீரர்களின் படைத்தலைவனிடமிருந்து மட்டும் பதில் வரவில்லை.
காலம் கடந்துகொண்டிருந்தது.
அப்போது பாண்டியநாட்டு ஆபத்துதவிகளின் தலைவன் மீண்டும் கேட்டான் ``ஏன் நீங்கள் மட்டும் பேசாமல் இருக்கிறீர்கள்?”
தட்டியங்காட்டைப் பார்த்தபடி நின்றுகொண்டிருந்த காக்குவீரர்களின் படைத்தலைவன் சொன்னான், ``தட்டியங்காட்டை நோக்கி உற்றுப்பாருங்கள்.”
அவன் சொன்னதும் அந்தத் திசை நோக்கி அனைவரும் உற்றுப்பார்த்தனர். கொட்டும் மழையில் இரவின் இருளுக்குள் இருந்து எதுவும் புலப்படவில்லை.
``ஒன்றுமில்லையே” என்று சொல்லியபடி இடதுபுறமாகத் திரும்பும்போது நீளமாய்ப் பிளந்து இறங்கிய அடர்மஞ்சள் மின்னல் ஒளியில் தட்டியங்காடு முழுவதும் ஒளிர்ந்தது. அவ்வளவு நேரமும் தங்கள் தளபதிகள் நின்றிருந்த பரணின்மேல் வீரர்கள் சிலர் ஈட்டி ஏந்தி நின்றிருந்தனர். அதன் அடிவாரத்திலிருந்து ஆவேசமிக்க பறம்புவீரர்கள் பாய்ந்து வந்துகொண்டிருந்தனர்.
``எதிரிகள் வந்துகொண்டிருக்கிறார்கள்” என்று மெய்க்காப்பாளர்கள் பேரோசை எழுப்பிய போதுதான் கூடாரத்துக்குள் இருந்தவர்களுக்கு ஆபத்து புரியத் தொடங்கியது.
- பறம்பின் குரல் ஒலிக்கும்...
| சு.வெங்கடேசன் | ஓவியங்கள்: ம.செ., | நன்றி ஆனந்த விகடன் |
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Re: வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
பாரி களம் இறங்கும் நாளை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்
கண்ணன்- இளையநிலா
- பதிவுகள் : 306
இணைந்தது : 17/10/2014
Re: வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
பாரி களம் இறங்குவதை நினைத்தால் ஒருபக்கம் மகிழ்ச்சி ...விரைவிலே முடிந்து விடுமோ என்று கவலை மறுபக்கம்...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Re: வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
ஆம் நண்பா...
இந்த வருட இறுதிக்குள் முடிந்துவிடும்..
2019தில் புத்தககம் வெளியீடு...
இந்த வருட இறுதிக்குள் முடிந்துவிடும்..
2019தில் புத்தககம் வெளியீடு...
பிரபாகரன் ஒற்றன்- பண்பாளர்
- பதிவுகள் : 52
இணைந்தது : 31/08/2018
வீரயுக நாயகன் வேள்பாரி - 108
சு. வெங்கடேசன் | ஓவியங்கள்: ம.செ.,
இரவின் இறுதிப் பத்து நாழிகையில் வெங்கல் நாடெங்கும் சிந்தப்பட்ட குருதியைக் கழுவ, மழைநீர் போதவில்லை. ஏற்றப்பட்ட தீப்பந்த வெளிச்சத்தில் மழைநீர் அடர்செந்நிறத்தில் ஓடியது. இருளுக்குள் ஓடும்போதும் அதே நிறத்தில் புரண்டோடியது. நீரின் வேகத்தில் மூழ்கி எழுவது கட்டைகளா... மனித உடல்களா என நின்று பார்க்க யாரும் இல்லை. மழையின் பேய்க்கூச்சலுக்கிடையே மனிதக்கதறல்கள் முழுமுற்றாக அமுங்கிப்போயின. பறம்பில் வாழும் பன்னிரு குடிகளும் மலைவிட்டு இறங்கி, காணும் இடமெல்லாம் கணக்கில்லாமல் வெட்டியெறிந்த வேகத்தில் மிஞ்சியது யாரென அறிந்தவர் யாரும் இல்லை.
மழையின் வேகத்தால் இரவு கூடுதலாக இருள்கொண்டது. பாசறைக் கூடாரத்தில் படுத்திருந்த வீரர்கள் மழையின் பேரோசையைக் கேட்டபடி ஒடுங்கிப் படுத்தனர். ``போர் நாளில் தூக்கம் வருமா?’’ என்று மற்றவர்கள் கேட்கும்போதெல்லாம் போர் வீரர்கள் சொல்லும் பதில் இதுதான். ``தூக்கம் வராது. ஆனால், மரணம் வரும்.’’ அன்றைய நாளில் களத்தில் எத்தனை முறை மரணத்தின் வாயிலின் அருகே தப்பித்திருப்போம் என்பதை நினைத்துகூடப் பார்க்க முடியாது. ஏனெனில், உடலும் மனமும் ஆற்றலை முற்றிலும் இழந்திருக்கும். போர்க்களத்தில் தேரையே தனித்துத் தூக்க முற்படும் வீரன்கூட, இரவினில் தன்னுடலைத் தூக்கி நகரும் வலுவை இழந்து கிடப்பான். போரற்ற நாளில் படுக்கும்போது வரும் உறக்கமன்று போர் நாளின் உறக்கம். துளிகூட நினைவின் தடமின்றி தன்னை மறந்தால் மட்டுமே உறங்க முடியும். ஏறக்குறைய மரணத்துக்கு மிக அருகில்தான் அது நிகழும். பகலில் மரணத்தோடு ஒட்டியே பயணம் செய்வதுபோல, இரவிலும் மரணத்தோடு ஒட்டிய பயணம்தான். உறக்கம், விழிப்பு, ஆயுதம் ஏந்தல், போரிடுதல் எல்லாமே போர்க்களத்தில் மரணத்தின் மறுசெயல்பாடுகள்தாம்.
பகலில் போர்க்களம்விட்டுத் திரும்பியவுடன் தங்களின் பாசறைக்கு வந்து ஆயுதங்களையும் கவசங்களையும் கழட்டிவிட்டு, உடலை நீர்கொண்டு கழுவி, நேராக உணவுச்சாலைக்குச் செல்வர். வேட்டை விலங்குகள் ஒன்றுகூடிக் கடித்து இழுப்பதைப்போலத்தான் அங்கு நடக்கும் செயல்பாடுகள். உணவை முடித்துவிட்டு ஆயுதப் பொறுப்பாளனிடம் சொல்லவேண்டிய குறிப்புகளைச் சொல்லி முடித்து, தேவைப்பட்டால் மருத்துவனைப் பார்த்துவிட்டு பாசறைக் கூடாரத்துக்கு வரும்போது, ஏறக்குறைய தலை அறுபட்டு விழும் உடல்போலத்தான் உணர்வேதுமின்றி விழுவர். நேற்றிரவும் அப்படித்தான் நடந்தது.
நள்ளிரவு கடக்கும்போது பெருமழை தொடங்கியது. மழையின் பேரோசையும் காற்றிலேறிய குளிரும் வீரர்களை ஒடுங்கிப் படுக்க வைத்தன. பாசறைக் காவலர்கள் கூட, போரின் தொடக்கக் காலத்தில் இருப்பதைப்போல தொடர்ந்து விழிப்போடு இருப்பதில்லை. போர் தொடங்கி ஆறாம் நாள் இரவுதான் இது. ஆனால், படைகள் இங்கு பாசறை அமைத்து ஒரு மாதம் கடந்துவிட்டது. தொடக்கத்தில் இரவிலும் பகலிலும் ஓரிரு நாள் மழை பெய்தது. ஆனால், போர் தொடங்கிய பிறகு நேற்றிரவு தான் முதன்முறையாக மழை பெய்துள்ளது. பாசறைக் காவலர்களும் மிகவும் அயர்வுற்று இருந்தனர். காற்றோடு சேர்ந்த பெருமழையாதலால், பறம்பு வீரர்கள் பந்தங்களோடு ஈட்டியைக் கொண்டுவந்து எறிந்துவிட்டுப் போனதைக்கூட யாரும் கவனிக்கவில்லை.
பேய்மழைக்குள் குறிப்பறிந்து செயல்படுதல் எளிதன்று. மூஞ்சலில் வேந்தர்களுக்குள் எழுந்த முரண் இருட்டு என்பதால் அடுத்த கட்டத்தை அடையவில்லை. அதுவே விளக்கொளியில் முகம் பார்த்து சினம்கொண்டு பேசியிருந்தால் நிலைமை விபரீதமாகியிருக்கும். மட்டுமல்ல, இருளில் யார் ஆயுதத்தைக் கைக் கொள்வார்கள் என யாராலும் கணிக்க முடியாது. யாரேனும் ஒருவர் எல்லை மீறிய சொல்லைப் பயன்படுத்தினாலும் நிலைமை பேரிழப்பை ஏற்படுத்துவதாக மாறிவிடும்.
இருளுக்குள் உருவாகும் நம்பகமின்மை, கணநேரத்தில் தாக்குதலைக் கட்டவிழ்த்துவிடும். நேற்றிரவு குலசேகர பாண்டியனின் கூடாரம் எல்லாமுமாக மாற இருந்தது. மிகச்சிறந்த கூர்மதியாளராக குலசேகரபாண்டியன் இருந்ததால் அந்த இக்கட்டிலிருந்து வேந்தர் குலத்தினர் ஐவரும் தப்பினர்.
பாண்டியப் பாசறையில் முரசோசை எழுப்பி வீரர்களை இரவோடு இரவாக வெளியேற்ற வேண்டும் என்ற திட்டத்தை சோழவேழன் எதிர்த்தார். அவ்வாறு செய்தால் அந்த ஓசையைக் கேட்டு சோழப்படையினரும் எழுந்து வெளியேற நினைப்பார்கள். அப்போது அணலிப்பூச்சி தாக்கி பேரழிவு ஏற்படும் என வாதிட்டார். அவ்வாறு செய்யவில்லை என்றால், பாண்டியப்படை அழியும் என்று கருங்கைவாணன் வாதிட்டான். இந்த நிலையில்தான் கூடாரத்துக்கு வெளியில் இருந்த மெய்க்காவலர்கள் ``எதிரிகள் தாக்குவதற்காக வருகின்றனர்’’ என்று கத்தினர்.
துடித்தெழுந்த கருங்கைவாணன், அவர்களை எதிர் கொள்வதற்கான உத்தியைச் சொல்லத் தொடங்கும் முன் அதற்கு வாய்ப்பே அளிக்காமல் குலசேகரபாண்டியன், ``இக்கணம் நாம் பாதுகாப்பாக இந்த இடம்விட்டு வெளியேறும் முடிவை எடுக்கவில்லை என்றால், அடுத்து எக்கணமும் ஒன்றாய் முடிவெடுக்கும் சூழல் வராது. எனவே, உடனே வெளியேறுவோம்’’ என்றார்.
சோழவேழன் எழுப்பிய கேள்வி, எழுந்துள்ள புதிய ஆபத்தால் தானாகவே காணாமல்போனது. படையைக் காக்கும்முன் தன்னைக் காத்துக்கொள்ளவேண்டிய சூழல் எல்லோருக்கும் உருவானது. அந்த நிலையிலும் மதிநுட்பத்தோடு செயல்பட்டான் குலசேகரபாண்டியன். கூடாரம்விட்டு வெளியேறும்போது மையூர்கிழாரின் காதோடு காதாகச் சொன்னான், ``பாண்டியப் பாசறையில் அபாய ஒலி எழுப்பி, விடியும்முன் வீரர்கள் அனைவரையும் வெளியேற்று.’’
கொட்டும் மழையில் மூஞ்சலின் கூடாரம்விட்டு வெளியேறிய வேந்தர்கள், தங்களின் குதிரைகளை நோக்கி விரைந்து சென்றனர். நூற்றுக்கணக்கில் இருந்த கவசப்படை வீரர்களும் தனிப்படை வீரர்களும் வேந்தர்களைச் சுற்றி அணிவகுத்து நின்றனர். மூவேந்தர்களின் தனித்த முரசங்கள், வேந்தர்கள் உள்ளே வரும்போதும் வெளியே செல்லும்போதும் இசைக்கப்படவேண்டும். ஆனால், சிறிய ஓசைகூட வெளியில் கேட்காத அளவுக்குப் பதுங்கிய நிலையில் மூஞ்சலைவிட்டு இரவின் இருப்பத்தி இரண்டாம் நாழிகையில் வேந்தர்கள் வெளியேறினர்.
வெளியேறி, சிறிது தொலைவு போன பிறகுதான் கருங்கைவாணன் சொன்னான், ``நாம் புறப்படும் அவசரத்தில் செய்தி அனுப்ப மறந்துவிட்டோம். அமைச்சர்கள் மூவரும் நீலனின் கூடாரத்துக்குள் இருக்கிறார்கள்.’’
``அப்படியா!’’ என்று சற்று அதிர்ச்சியோடு குலசேகரபாண்டியன் கேட்டு முடிக்கும் முன் சோழவேழன் சொன்னார், ``உறுமன்கொடியை உடனே அனுப்பி மூன்று அமைச்சர்களையும் பாதுகாப்பாக அழைத்துவரச் சொல்லுங்கள்.’’
குதிரைகள் போய்க்கொண்டிருக்கும்போது சோழவேழன் முந்திக்கொண்டு சொன்னதற்குக் காரணமிருந்தது. ஒரு கணம் காலம் தாழ்த்தினால்கூட, `தளபதி உசந்தனை அனுப்பி, அமைச்சர்களை அழைத்துவரச் சொல்’ என்று குலசேகரபாண்டியன் சொல்லிவிடுவார் என நினைத்தார் சோழவேழன். சோழப்படையின் வலிமை மிகுந்த தளபதி என்றால், இப்போது உசந்தனை மட்டும்தான் சொல்ல முடியும். அவனையும் ஆபத்துக்குள் எளிதாகச் சிக்கவைத்துவிடுவார் குலசேகரபாண்டியன். அவர் சொன்ன பிறகு மாற்றிச் சொல்வது கோழைத்தனமாகத் தெரியும். நீலனை பழைய கோட்டைக்குக் கொண்டுசெல்லும் பணிக்கு, பாண்டியத் தளபதி மாகனகனை அனுப்பவேண்டிய தேவையே இல்லை. பாதுகாப்பு வீரர்களே அதைச் சிறப்பாகச் செய்வர். ஆனால், தன் தளபதிகளை பாதுகாப்பான இடத்தில் சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் குலசேகரபாண்டியன் முதலில் இருந்தே கவனத்தோடு இருப்பதாக சோழவேழன் கருதியதால்தான் உறுமன்கொடியின் பெயரை முந்திக்கொண்டு சொன்னார். அதன் பிறகு குலசேகரபாண்டியனால் மாற்றிச் சொல்ல முடியவில்லை. அவ்வாறே உத்தரவிட்டார்.
உறுமன்கொடி, பன்னிரு குதிரைவீரர்களோடு மூஞ்சலை நோக்கிப் பாய்ந்து போனான். குலசேகரபாண்டியனின் கூடாரத்திலிருந்து மிகத் தள்ளி நீலனின் கூடாரம் இருந்ததாலும், மழையின் பேரோசையினாலும் வேந்தர்கள் புறப்பட்டதை அமைச்சர்களால் அறிய முடியவில்லை. உறுமன்கொடி, குதிரையைத் தாற்றுக்கோலால் மாறி மாறி அடித்து வேகத்தைக் கூட்டினான். பறம்புவீரர்கள் அதற்குள் மூஞ்சலுக்கு வர வாய்ப்பில்லை என்பதை மனதுக்குள் உறுதிப்படுத்தியபடியும் நீலனின் கூடாரத்தை நோக்கி ஓசையெழுப்பியபடியும் விரைந்தான். ஆனால், எதிரோசை எதுவும் வரவில்லை. கூடாரத்தின் அருகே வந்ததும் அமைச்சர்களின் பெயரைச் சொல்லிக் கத்தினான். கொட்டும் மழையில் தனக்கே கேட்கவில்லை என்று நினைத்தபடி வீரன் ஒருவனை, ``உள்ளே போய்ப் பார்’’ என்றான்.
அவன் சொல்லி முடிக்கும்போது, அவனுக்குப் பின்னால் எந்த வீரனும் உயிருடன் இல்லை. மழை ஓசையை மீறிக்கேட்டது ஒரு குரல்.
அது எதிரியின் குரல் என அறிந்த கணத்தில், வாளை உருவினான். அப்போது கூடாரத்துக்குள் இருந்து வெளிவந்த முடியனின் ஈட்டி உறுமன் கொடியின் கீழ்நாடியில் குத்தி பின்மண்டையில் வெளியேறியது.
குலசேகரபாண்டியன் காதோடு காதாக இட்ட உத்தரவுப்படி பாண்டியப் பாசறையில் நள்ளிரவு முரசின் ஓசை எழுப்பப்பட்டது. நன்றாக உறங்கிக்கொண்டிருந்த வீரர்கள் திடுக்கிட்டு எழுந்தனர். ``உடனடியாக ஆயுதங்களை எடுத்துக்கொண்டு பாசறையை விட்டு வெளியேறுங்கள்’’ என்று உத்தரவிட்டான் பாசறைத் தளபதி. மழை ஓசையால் அவனது குரல் பெரிதாகக் கேட்கவில்லை. எனவே, வீரர்கள் கூடாரம்தோறும் சென்று சொன்னார்கள். முதல் ஐந்தாறு கூடாரங்கள் கலையத் தொடங்கிய பிறகு செய்தி தனதுபோக்கில் பரவத் தொடங்கியது. பேராபத்து வருவதாகக் கருதிய வீரர்கள் பதறியடித்து ஓடத் தொடங்கினர். பெருங்கூச்சல் மேலேறிவந்தது.
மழையின் வேகம் சற்றே குறையத் தொடங்கியபோது, பாண்டியப் பாசறையிலிருந்து பேரோசை மேலேறி வருவது சோழர்களின் பாசறைக்கும் எதிரொலிக்கத் தொடங்கியது. அந்தக் கணம் முதலே பேரழிவு தொடங்கியது. சோழப்படை வீரர்கள் அஞ்சி வெளியேறிய கணத்தில் அணலிகளின் தாக்குதல்கள் தொடங்கின.
கண்ணுக்குத் தெரியாமல் இருளுக்குள்ளிருந்து பெரும்படை வருகிறது என எண்ணிய வீரர்கள், சிறு பூச்சிகளை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை. கையில் சிக்கிய ஆயுதங்களை எடுத்துக்கொண்டு வீரர்கள் ஓடத் தொடங்கினர். நாகக்கரடு இருக்கும் மேற்குத்திசைதான் எதிரிகள் இருக்கும் ஆபத்தான திசை என்பதால் கிழக்குத்திசை நோக்கி ஓடத் தொடங்கினர். பாண்டியப் பாசறை, ஒரு காதத்தொலைவில் வடகிழக்குத் திசையில் இருந்தது. அங்கிருந்து மேலேறிவந்த ஓசையும் இங்கிருந்து மேலேறிய ஓசையும் வெகுவிரைவாக இணைந்தன.
அணலிகள் தாக்கத் தொடங்கிய சிறுகணத்திலேயே வீரர்கள் எழுப்பும் ஓசையின் தன்மை மாறத் தொடங்கியது. சோழப்படையின் எண்ணிக்கை மிகப்பெரியது என்பதால், கதறலின் பேரோசை இருளை நடுங்கச் செய்தது. தப்பித்து ஓடத் தொடங்கிய சோழப்படை வீரர்கள், பாண்டிய வீரர்களோடு இணைவதற்கு ஆகும் நேரம்கூட அணலிகள் எடுத்துக்கொள்ளவில்லை. அதற்கு முன்பே பாண்டியப் படையின் பந்த வெளிச்சத்தை நோக்கி அணலிகள் வந்து சேர்ந்தன.
அந்தத் திசையில் பறம்புவீரர்கள் யாரும் இல்லை. அணலிகள் பற்றியும் மற்ற நஞ்சுப்பூச்சிகள் பற்றியும் பறம்பினர் நன்கு அறிவர். அதுவும் இந்தப் பேய்மழையை யாரும் எதிர்பார்க்கவில்லை. மழை முடிந்த கணத்தில் காட்டுக்குள்ளிருந்து கிளம்பப்போகும் பூச்சி வகைகளை யாராலும் கற்பனைசெய்துகூடப் பார்க்க முடியாது. பள்ளம் நோக்கிப் பாயும் நீர்போல, அணலியின் வாசம் நோக்கிப் பறக்கும் நஞ்சுயிர்கள் அனைத்தும் வந்துசேரும். இரவின் பூச்சிகளை அணலியும், பகலின் பூச்சிகளை கொம்புதூக்கி வண்டின் ரீங்காரமும் கொண்டுவந்து சேர்த்துவிடும். இப்போது மழையும் இணைந்துகொண்டதால் நிலைமை பன்மடங்கு மோசமாய்விட்டது. எனவே, `பறம்புவீரர்கள் யாரும் அந்தத் திசைப் பக்கமே போகவேண்டாம்’ என்று பாரி கூறியிருந்தான்.
அவனது திட்டம் முழுவதும், வெங்கல்நாட்டின் நடுப்பகுதியில் நிலைகொண்டு தாக்க வேண்டும் என்பதுதான். அங்குதான் சேரப்படையின் பாசறை இருக்கிறது. இந்தப் போரில் மிகக் கவனமாக இருப்பவன் சேரன்தான். அவன் பாசறை அமைக்கும்போதே பாதுகாப்புமிக்க இடத்தைத் தேர்வுசெய்திருந்தான். அவனுடைய வீரர்களைத் தாக்கி அழிப்பதும், மூஞ்சலில் இருந்து தப்பி வெளியேறுபவர்களைத் தாக்கி அழிப்பதும், வேந்தர்களின் சிறப்புப் படையைத் தாக்குவதும், நீலனை கவனத்துடன் மீட்பதுமாக... பல்வேறு முறையில் தாக்குதல் உத்தியை வகுத்திருந்தான் பாரி.
இரவின் இறுதிப் பத்து நாழிகையில் வெங்கல் நாடெங்கும் சிந்தப்பட்ட குருதியைக் கழுவ, மழைநீர் போதவில்லை. ஏற்றப்பட்ட தீப்பந்த வெளிச்சத்தில் மழைநீர் அடர்செந்நிறத்தில் ஓடியது. இருளுக்குள் ஓடும்போதும் அதே நிறத்தில் புரண்டோடியது. நீரின் வேகத்தில் மூழ்கி எழுவது கட்டைகளா... மனித உடல்களா என நின்று பார்க்க யாரும் இல்லை. மழையின் பேய்க்கூச்சலுக்கிடையே மனிதக்கதறல்கள் முழுமுற்றாக அமுங்கிப்போயின. பறம்பில் வாழும் பன்னிரு குடிகளும் மலைவிட்டு இறங்கி, காணும் இடமெல்லாம் கணக்கில்லாமல் வெட்டியெறிந்த வேகத்தில் மிஞ்சியது யாரென அறிந்தவர் யாரும் இல்லை.
மழையின் வேகத்தால் இரவு கூடுதலாக இருள்கொண்டது. பாசறைக் கூடாரத்தில் படுத்திருந்த வீரர்கள் மழையின் பேரோசையைக் கேட்டபடி ஒடுங்கிப் படுத்தனர். ``போர் நாளில் தூக்கம் வருமா?’’ என்று மற்றவர்கள் கேட்கும்போதெல்லாம் போர் வீரர்கள் சொல்லும் பதில் இதுதான். ``தூக்கம் வராது. ஆனால், மரணம் வரும்.’’ அன்றைய நாளில் களத்தில் எத்தனை முறை மரணத்தின் வாயிலின் அருகே தப்பித்திருப்போம் என்பதை நினைத்துகூடப் பார்க்க முடியாது. ஏனெனில், உடலும் மனமும் ஆற்றலை முற்றிலும் இழந்திருக்கும். போர்க்களத்தில் தேரையே தனித்துத் தூக்க முற்படும் வீரன்கூட, இரவினில் தன்னுடலைத் தூக்கி நகரும் வலுவை இழந்து கிடப்பான். போரற்ற நாளில் படுக்கும்போது வரும் உறக்கமன்று போர் நாளின் உறக்கம். துளிகூட நினைவின் தடமின்றி தன்னை மறந்தால் மட்டுமே உறங்க முடியும். ஏறக்குறைய மரணத்துக்கு மிக அருகில்தான் அது நிகழும். பகலில் மரணத்தோடு ஒட்டியே பயணம் செய்வதுபோல, இரவிலும் மரணத்தோடு ஒட்டிய பயணம்தான். உறக்கம், விழிப்பு, ஆயுதம் ஏந்தல், போரிடுதல் எல்லாமே போர்க்களத்தில் மரணத்தின் மறுசெயல்பாடுகள்தாம்.
பகலில் போர்க்களம்விட்டுத் திரும்பியவுடன் தங்களின் பாசறைக்கு வந்து ஆயுதங்களையும் கவசங்களையும் கழட்டிவிட்டு, உடலை நீர்கொண்டு கழுவி, நேராக உணவுச்சாலைக்குச் செல்வர். வேட்டை விலங்குகள் ஒன்றுகூடிக் கடித்து இழுப்பதைப்போலத்தான் அங்கு நடக்கும் செயல்பாடுகள். உணவை முடித்துவிட்டு ஆயுதப் பொறுப்பாளனிடம் சொல்லவேண்டிய குறிப்புகளைச் சொல்லி முடித்து, தேவைப்பட்டால் மருத்துவனைப் பார்த்துவிட்டு பாசறைக் கூடாரத்துக்கு வரும்போது, ஏறக்குறைய தலை அறுபட்டு விழும் உடல்போலத்தான் உணர்வேதுமின்றி விழுவர். நேற்றிரவும் அப்படித்தான் நடந்தது.
நள்ளிரவு கடக்கும்போது பெருமழை தொடங்கியது. மழையின் பேரோசையும் காற்றிலேறிய குளிரும் வீரர்களை ஒடுங்கிப் படுக்க வைத்தன. பாசறைக் காவலர்கள் கூட, போரின் தொடக்கக் காலத்தில் இருப்பதைப்போல தொடர்ந்து விழிப்போடு இருப்பதில்லை. போர் தொடங்கி ஆறாம் நாள் இரவுதான் இது. ஆனால், படைகள் இங்கு பாசறை அமைத்து ஒரு மாதம் கடந்துவிட்டது. தொடக்கத்தில் இரவிலும் பகலிலும் ஓரிரு நாள் மழை பெய்தது. ஆனால், போர் தொடங்கிய பிறகு நேற்றிரவு தான் முதன்முறையாக மழை பெய்துள்ளது. பாசறைக் காவலர்களும் மிகவும் அயர்வுற்று இருந்தனர். காற்றோடு சேர்ந்த பெருமழையாதலால், பறம்பு வீரர்கள் பந்தங்களோடு ஈட்டியைக் கொண்டுவந்து எறிந்துவிட்டுப் போனதைக்கூட யாரும் கவனிக்கவில்லை.
பேய்மழைக்குள் குறிப்பறிந்து செயல்படுதல் எளிதன்று. மூஞ்சலில் வேந்தர்களுக்குள் எழுந்த முரண் இருட்டு என்பதால் அடுத்த கட்டத்தை அடையவில்லை. அதுவே விளக்கொளியில் முகம் பார்த்து சினம்கொண்டு பேசியிருந்தால் நிலைமை விபரீதமாகியிருக்கும். மட்டுமல்ல, இருளில் யார் ஆயுதத்தைக் கைக் கொள்வார்கள் என யாராலும் கணிக்க முடியாது. யாரேனும் ஒருவர் எல்லை மீறிய சொல்லைப் பயன்படுத்தினாலும் நிலைமை பேரிழப்பை ஏற்படுத்துவதாக மாறிவிடும்.
இருளுக்குள் உருவாகும் நம்பகமின்மை, கணநேரத்தில் தாக்குதலைக் கட்டவிழ்த்துவிடும். நேற்றிரவு குலசேகர பாண்டியனின் கூடாரம் எல்லாமுமாக மாற இருந்தது. மிகச்சிறந்த கூர்மதியாளராக குலசேகரபாண்டியன் இருந்ததால் அந்த இக்கட்டிலிருந்து வேந்தர் குலத்தினர் ஐவரும் தப்பினர்.
பாண்டியப் பாசறையில் முரசோசை எழுப்பி வீரர்களை இரவோடு இரவாக வெளியேற்ற வேண்டும் என்ற திட்டத்தை சோழவேழன் எதிர்த்தார். அவ்வாறு செய்தால் அந்த ஓசையைக் கேட்டு சோழப்படையினரும் எழுந்து வெளியேற நினைப்பார்கள். அப்போது அணலிப்பூச்சி தாக்கி பேரழிவு ஏற்படும் என வாதிட்டார். அவ்வாறு செய்யவில்லை என்றால், பாண்டியப்படை அழியும் என்று கருங்கைவாணன் வாதிட்டான். இந்த நிலையில்தான் கூடாரத்துக்கு வெளியில் இருந்த மெய்க்காவலர்கள் ``எதிரிகள் தாக்குவதற்காக வருகின்றனர்’’ என்று கத்தினர்.
துடித்தெழுந்த கருங்கைவாணன், அவர்களை எதிர் கொள்வதற்கான உத்தியைச் சொல்லத் தொடங்கும் முன் அதற்கு வாய்ப்பே அளிக்காமல் குலசேகரபாண்டியன், ``இக்கணம் நாம் பாதுகாப்பாக இந்த இடம்விட்டு வெளியேறும் முடிவை எடுக்கவில்லை என்றால், அடுத்து எக்கணமும் ஒன்றாய் முடிவெடுக்கும் சூழல் வராது. எனவே, உடனே வெளியேறுவோம்’’ என்றார்.
சோழவேழன் எழுப்பிய கேள்வி, எழுந்துள்ள புதிய ஆபத்தால் தானாகவே காணாமல்போனது. படையைக் காக்கும்முன் தன்னைக் காத்துக்கொள்ளவேண்டிய சூழல் எல்லோருக்கும் உருவானது. அந்த நிலையிலும் மதிநுட்பத்தோடு செயல்பட்டான் குலசேகரபாண்டியன். கூடாரம்விட்டு வெளியேறும்போது மையூர்கிழாரின் காதோடு காதாகச் சொன்னான், ``பாண்டியப் பாசறையில் அபாய ஒலி எழுப்பி, விடியும்முன் வீரர்கள் அனைவரையும் வெளியேற்று.’’
கொட்டும் மழையில் மூஞ்சலின் கூடாரம்விட்டு வெளியேறிய வேந்தர்கள், தங்களின் குதிரைகளை நோக்கி விரைந்து சென்றனர். நூற்றுக்கணக்கில் இருந்த கவசப்படை வீரர்களும் தனிப்படை வீரர்களும் வேந்தர்களைச் சுற்றி அணிவகுத்து நின்றனர். மூவேந்தர்களின் தனித்த முரசங்கள், வேந்தர்கள் உள்ளே வரும்போதும் வெளியே செல்லும்போதும் இசைக்கப்படவேண்டும். ஆனால், சிறிய ஓசைகூட வெளியில் கேட்காத அளவுக்குப் பதுங்கிய நிலையில் மூஞ்சலைவிட்டு இரவின் இருப்பத்தி இரண்டாம் நாழிகையில் வேந்தர்கள் வெளியேறினர்.
வெளியேறி, சிறிது தொலைவு போன பிறகுதான் கருங்கைவாணன் சொன்னான், ``நாம் புறப்படும் அவசரத்தில் செய்தி அனுப்ப மறந்துவிட்டோம். அமைச்சர்கள் மூவரும் நீலனின் கூடாரத்துக்குள் இருக்கிறார்கள்.’’
``அப்படியா!’’ என்று சற்று அதிர்ச்சியோடு குலசேகரபாண்டியன் கேட்டு முடிக்கும் முன் சோழவேழன் சொன்னார், ``உறுமன்கொடியை உடனே அனுப்பி மூன்று அமைச்சர்களையும் பாதுகாப்பாக அழைத்துவரச் சொல்லுங்கள்.’’
குதிரைகள் போய்க்கொண்டிருக்கும்போது சோழவேழன் முந்திக்கொண்டு சொன்னதற்குக் காரணமிருந்தது. ஒரு கணம் காலம் தாழ்த்தினால்கூட, `தளபதி உசந்தனை அனுப்பி, அமைச்சர்களை அழைத்துவரச் சொல்’ என்று குலசேகரபாண்டியன் சொல்லிவிடுவார் என நினைத்தார் சோழவேழன். சோழப்படையின் வலிமை மிகுந்த தளபதி என்றால், இப்போது உசந்தனை மட்டும்தான் சொல்ல முடியும். அவனையும் ஆபத்துக்குள் எளிதாகச் சிக்கவைத்துவிடுவார் குலசேகரபாண்டியன். அவர் சொன்ன பிறகு மாற்றிச் சொல்வது கோழைத்தனமாகத் தெரியும். நீலனை பழைய கோட்டைக்குக் கொண்டுசெல்லும் பணிக்கு, பாண்டியத் தளபதி மாகனகனை அனுப்பவேண்டிய தேவையே இல்லை. பாதுகாப்பு வீரர்களே அதைச் சிறப்பாகச் செய்வர். ஆனால், தன் தளபதிகளை பாதுகாப்பான இடத்தில் சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் குலசேகரபாண்டியன் முதலில் இருந்தே கவனத்தோடு இருப்பதாக சோழவேழன் கருதியதால்தான் உறுமன்கொடியின் பெயரை முந்திக்கொண்டு சொன்னார். அதன் பிறகு குலசேகரபாண்டியனால் மாற்றிச் சொல்ல முடியவில்லை. அவ்வாறே உத்தரவிட்டார்.
உறுமன்கொடி, பன்னிரு குதிரைவீரர்களோடு மூஞ்சலை நோக்கிப் பாய்ந்து போனான். குலசேகரபாண்டியனின் கூடாரத்திலிருந்து மிகத் தள்ளி நீலனின் கூடாரம் இருந்ததாலும், மழையின் பேரோசையினாலும் வேந்தர்கள் புறப்பட்டதை அமைச்சர்களால் அறிய முடியவில்லை. உறுமன்கொடி, குதிரையைத் தாற்றுக்கோலால் மாறி மாறி அடித்து வேகத்தைக் கூட்டினான். பறம்புவீரர்கள் அதற்குள் மூஞ்சலுக்கு வர வாய்ப்பில்லை என்பதை மனதுக்குள் உறுதிப்படுத்தியபடியும் நீலனின் கூடாரத்தை நோக்கி ஓசையெழுப்பியபடியும் விரைந்தான். ஆனால், எதிரோசை எதுவும் வரவில்லை. கூடாரத்தின் அருகே வந்ததும் அமைச்சர்களின் பெயரைச் சொல்லிக் கத்தினான். கொட்டும் மழையில் தனக்கே கேட்கவில்லை என்று நினைத்தபடி வீரன் ஒருவனை, ``உள்ளே போய்ப் பார்’’ என்றான்.
அவன் சொல்லி முடிக்கும்போது, அவனுக்குப் பின்னால் எந்த வீரனும் உயிருடன் இல்லை. மழை ஓசையை மீறிக்கேட்டது ஒரு குரல்.
அது எதிரியின் குரல் என அறிந்த கணத்தில், வாளை உருவினான். அப்போது கூடாரத்துக்குள் இருந்து வெளிவந்த முடியனின் ஈட்டி உறுமன் கொடியின் கீழ்நாடியில் குத்தி பின்மண்டையில் வெளியேறியது.
குலசேகரபாண்டியன் காதோடு காதாக இட்ட உத்தரவுப்படி பாண்டியப் பாசறையில் நள்ளிரவு முரசின் ஓசை எழுப்பப்பட்டது. நன்றாக உறங்கிக்கொண்டிருந்த வீரர்கள் திடுக்கிட்டு எழுந்தனர். ``உடனடியாக ஆயுதங்களை எடுத்துக்கொண்டு பாசறையை விட்டு வெளியேறுங்கள்’’ என்று உத்தரவிட்டான் பாசறைத் தளபதி. மழை ஓசையால் அவனது குரல் பெரிதாகக் கேட்கவில்லை. எனவே, வீரர்கள் கூடாரம்தோறும் சென்று சொன்னார்கள். முதல் ஐந்தாறு கூடாரங்கள் கலையத் தொடங்கிய பிறகு செய்தி தனதுபோக்கில் பரவத் தொடங்கியது. பேராபத்து வருவதாகக் கருதிய வீரர்கள் பதறியடித்து ஓடத் தொடங்கினர். பெருங்கூச்சல் மேலேறிவந்தது.
மழையின் வேகம் சற்றே குறையத் தொடங்கியபோது, பாண்டியப் பாசறையிலிருந்து பேரோசை மேலேறி வருவது சோழர்களின் பாசறைக்கும் எதிரொலிக்கத் தொடங்கியது. அந்தக் கணம் முதலே பேரழிவு தொடங்கியது. சோழப்படை வீரர்கள் அஞ்சி வெளியேறிய கணத்தில் அணலிகளின் தாக்குதல்கள் தொடங்கின.
கண்ணுக்குத் தெரியாமல் இருளுக்குள்ளிருந்து பெரும்படை வருகிறது என எண்ணிய வீரர்கள், சிறு பூச்சிகளை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை. கையில் சிக்கிய ஆயுதங்களை எடுத்துக்கொண்டு வீரர்கள் ஓடத் தொடங்கினர். நாகக்கரடு இருக்கும் மேற்குத்திசைதான் எதிரிகள் இருக்கும் ஆபத்தான திசை என்பதால் கிழக்குத்திசை நோக்கி ஓடத் தொடங்கினர். பாண்டியப் பாசறை, ஒரு காதத்தொலைவில் வடகிழக்குத் திசையில் இருந்தது. அங்கிருந்து மேலேறிவந்த ஓசையும் இங்கிருந்து மேலேறிய ஓசையும் வெகுவிரைவாக இணைந்தன.
அணலிகள் தாக்கத் தொடங்கிய சிறுகணத்திலேயே வீரர்கள் எழுப்பும் ஓசையின் தன்மை மாறத் தொடங்கியது. சோழப்படையின் எண்ணிக்கை மிகப்பெரியது என்பதால், கதறலின் பேரோசை இருளை நடுங்கச் செய்தது. தப்பித்து ஓடத் தொடங்கிய சோழப்படை வீரர்கள், பாண்டிய வீரர்களோடு இணைவதற்கு ஆகும் நேரம்கூட அணலிகள் எடுத்துக்கொள்ளவில்லை. அதற்கு முன்பே பாண்டியப் படையின் பந்த வெளிச்சத்தை நோக்கி அணலிகள் வந்து சேர்ந்தன.
அந்தத் திசையில் பறம்புவீரர்கள் யாரும் இல்லை. அணலிகள் பற்றியும் மற்ற நஞ்சுப்பூச்சிகள் பற்றியும் பறம்பினர் நன்கு அறிவர். அதுவும் இந்தப் பேய்மழையை யாரும் எதிர்பார்க்கவில்லை. மழை முடிந்த கணத்தில் காட்டுக்குள்ளிருந்து கிளம்பப்போகும் பூச்சி வகைகளை யாராலும் கற்பனைசெய்துகூடப் பார்க்க முடியாது. பள்ளம் நோக்கிப் பாயும் நீர்போல, அணலியின் வாசம் நோக்கிப் பறக்கும் நஞ்சுயிர்கள் அனைத்தும் வந்துசேரும். இரவின் பூச்சிகளை அணலியும், பகலின் பூச்சிகளை கொம்புதூக்கி வண்டின் ரீங்காரமும் கொண்டுவந்து சேர்த்துவிடும். இப்போது மழையும் இணைந்துகொண்டதால் நிலைமை பன்மடங்கு மோசமாய்விட்டது. எனவே, `பறம்புவீரர்கள் யாரும் அந்தத் திசைப் பக்கமே போகவேண்டாம்’ என்று பாரி கூறியிருந்தான்.
அவனது திட்டம் முழுவதும், வெங்கல்நாட்டின் நடுப்பகுதியில் நிலைகொண்டு தாக்க வேண்டும் என்பதுதான். அங்குதான் சேரப்படையின் பாசறை இருக்கிறது. இந்தப் போரில் மிகக் கவனமாக இருப்பவன் சேரன்தான். அவன் பாசறை அமைக்கும்போதே பாதுகாப்புமிக்க இடத்தைத் தேர்வுசெய்திருந்தான். அவனுடைய வீரர்களைத் தாக்கி அழிப்பதும், மூஞ்சலில் இருந்து தப்பி வெளியேறுபவர்களைத் தாக்கி அழிப்பதும், வேந்தர்களின் சிறப்புப் படையைத் தாக்குவதும், நீலனை கவனத்துடன் மீட்பதுமாக... பல்வேறு முறையில் தாக்குதல் உத்தியை வகுத்திருந்தான் பாரி.
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Page 17 of 19 • 1 ... 10 ... 16, 17, 18, 19
Similar topics
» வீரயுக நாயகன் வேள் பாரி மின்நூல் இருந்தால் பகிரவும்
» வீரயுக நாயகன் வேள்பாரி - ஆசிரியர்: சு.வெங்கடேசன்
» ஜடேஜாவுக்கு ஆட்ட நாயகன் - தொடர் நாயகன் விருது
» சரித்திர நாயகன் சாண்டில்யன்
» சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு
» வீரயுக நாயகன் வேள்பாரி - ஆசிரியர்: சு.வெங்கடேசன்
» ஜடேஜாவுக்கு ஆட்ட நாயகன் - தொடர் நாயகன் விருது
» சரித்திர நாயகன் சாண்டில்யன்
» சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு
ஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: கதைகள் :: நாவல்கள்
Page 17 of 19
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|