ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றைய செடிகொடிகள் அனைத்துக்கும் முப்பாட்டன் இதுதான், ஒரு சுவாரஸ்ய வரலாறு!

2 posters

Go down

இன்றைய செடிகொடிகள் அனைத்துக்கும் முப்பாட்டன் இதுதான், ஒரு சுவாரஸ்ய வரலாறு! Empty இன்றைய செடிகொடிகள் அனைத்துக்கும் முப்பாட்டன் இதுதான், ஒரு சுவாரஸ்ய வரலாறு!

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Apr 30, 2018 8:04 pm

மனித இனம் அழிந்துகொண்டே வருகிறது. உலகின் ஆறாவது பேரழிவு தொடங்கிவிட்டது. அதை ஒட்டுமொத்தமாகத் தடுத்து நிறுத்த முடியாது. ஆனால், தாமதப்படுத்தலாம். அதற்கு உலகம் முழுவதும் மக்கள் அனைவரும் செய்யவேண்டிய முழுமுதற் காரியமாக உலக நாடுகள் கூறுவது, ``உலகின் பசுமைப் போர்வையை அதிகப் படுத்துங்கள்.'' காடுகளும் செடிகொடிகள் போன்ற தாவரங்களுமே மனிதர்களின் சூழலியல் நாசங்களைச் சரிசெய்வதற்கும், புவி கல்லறை ஆவதைத் தடுப்பதற்கும் இருக்கும் ஒரே மருத்துவர். அத்தகைய தாவரங்கள் புவி உருவான தொடக்கத்தில் எப்படி இருந்தன தெரியுமா? அவை தம்மை இந்தப் பூமியில் தக்க வைத்துக்கொள்ள என்ன வகையான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டன தெரியுமா?

தாவரங்கள் ஒளிச்சேர்க்கை செய்து வாழும் உயிரினமாகவே முதலில் தோன்றிவிடவில்லை. அவை ஆரம்ப கட்டத்தில் நிலவாழ் உயிரினமே கிடையாது. கேம்பிரியன் காலம் (Cambrian period) வரைக்கும் கடலில் வாழ்ந்துகொண்டிருந்த தொல் உட்கரு உயிரி எனப்படும் ஆல்கே (Algae) மாதிரியான ஓரணு உயிரிகள் காலப்போக்கில் கடல் மட்டக்குறைவு காரணமாக நிலத்துக்கு வரத்தொடங்கின. அவை நிலத்தில் வாழத் தேவையான ஊட்டச்சத்துகள் கடலில் இருந்ததுபோல் கிடைக்கவில்லை. அதனால் அவை அங்கு இருக்கும் பாறைகளில் படிந்து அப்பாறையைச் சார்ந்து வாழத்தொடங்கின. அத்தகைய காலத்தில் கடல் மட்டம் மீண்டும் உயரவே கடல் மட்டம் உயர்ந்த பகுதிகளில் வாழ்ந்துகொண்டிருந்த ஓரணு உயிரிகள் மீண்டும் மாற்றத்துக்கு உட்படுத்தப்பட்டன. அவ்வாறு மாற்றத்துக்கு உள்ளான உயிரினங்கள் நீர்நில வாழ் உயிரினமாக வளர்ச்சி அடையவே அவை தனது இனப்பெருக்கத்துக்காக நீரைச் சார்ந்து வாழத் தொடங்கியது. எப்படி நீரைச் சார்ந்து இனப்பெருக்கம் செய்யமுடியும்?
நன்றி
விகடன்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

இன்றைய செடிகொடிகள் அனைத்துக்கும் முப்பாட்டன் இதுதான், ஒரு சுவாரஸ்ய வரலாறு! Empty Re: இன்றைய செடிகொடிகள் அனைத்துக்கும் முப்பாட்டன் இதுதான், ஒரு சுவாரஸ்ய வரலாறு!

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Apr 30, 2018 8:07 pm

இன்றைய செடிகொடிகள் அனைத்துக்கும் முப்பாட்டன் இதுதான், ஒரு சுவாரஸ்ய வரலாறு! HI8cFzUQdmgkDYl392dQ+f7fd73cc24628e144aed7bf62b1fa151
Third party image reference
ஆண் உயிரிகளின் உயிரணுக்களான கேமட்ஸ் (Gametes) நீரில் நீந்தும் திறன் கொண்டவை. அவை நீந்திச் சென்று ஆர்க்கிகோனியா (Archegonia) என்ற அமைப்புக்குள் இருக்கும் பெண் கேமட்டை அடையும். அவ்வாறு மிகுந்த சிரமங்களைச் சந்தித்து இனப்பெருக்கம் செய்து தன்னைத் தக்கவைத்துக்கொண்டு வளர்ந்த நுண்ணுயிரிகள் எப்படித் தாவரங்களாக பரிணாம வளர்ச்சியடைந்தன?

இயற்கை என்றுதான் அமைதியாக இருந்திருக்கிறாள். அவளின் தொடர்ச்சியான மாற்றங்களே புவியை அழகானதொரு பல்லுயிர் வாழ்விடமாக மாற்றியுள்ளது. அதையே அவள் அன்றும் செய்தாள். தொடங்கியது பனி யுகம். பனி யுகம் தொடங்கிய காலத்தில் நீர்நில வாழ்விகளாக மாறிய உயிர்கள் தமக்குத் தேவையான உணவுகளை நீரிலிருந்தோ நிலத்திலிருந்தோ எடுத்துக்கொள்ள இயலாமல் ஒரே இடத்தில் இருந்துகொண்டு குறைவின்றிக் கிடைக்கும் சூரிய ஒளியைப் பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்தன. அவ்வாறு வந்தவைதான் பிரையோஃபைட்ஸ் (Bryophytes) மற்றும் ட்ராக்கியோஃபைட்ஸ் (Tracheophytes) என்ற இரண்டு வகைத் தாவரங்கள். இவை இரண்டுமே மைக்ரோ எனப்படும் நுண்ணிய வகைத் தாவரங்கள். பிரையோவில் அதற்குத் தேவையான ஊட்டச்சத்துகளை வெளியில் இருந்து எடுத்து உட்புற உறுப்புகளுக்குக் கொடுப்பது, இன்றைய தாவரங்களில் இருப்பதுபோல் பட்டையம், மரவியம் போன்ற உட்புற உறுப்புகளால் நிகழவில்லை. அதற்கு அந்த உறுப்புகளே இல்லை. அதன் அணுச்சுவர்கள் உயிர்பிழைக்க வேண்டி ஏற்படுத்திய அழுத்தம் காற்றைச் சுவாசிக்க வைத்தது. எந்நேரமும் உயிருக்கான போராட்டத்தோடே வாழ்ந்துகொண்டு இருந்ததால் இவை பெரிதளவில் வளர முடியவில்லை. இன்றைய பாசிகளைப்போல் நுண்ணுயிரிகளாகவே வாழ்ந்தன.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

இன்றைய செடிகொடிகள் அனைத்துக்கும் முப்பாட்டன் இதுதான், ஒரு சுவாரஸ்ய வரலாறு! Empty Re: இன்றைய செடிகொடிகள் அனைத்துக்கும் முப்பாட்டன் இதுதான், ஒரு சுவாரஸ்ய வரலாறு!

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Apr 30, 2018 8:09 pm

தாவரங்களில் சுமார் 430 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தாவர வகைகளில் முதலில் தோன்றிய இந்தப் பாசி வகைப் பிரையோ உயிரினங்களில் இருந்துதான் இரண்டாவதான ட்ராக்கியோ வகைத் தாவரங்கள் பரிணாம வளர்ச்சி அடையத் தொடங்கின. இதற்கு ஆதாரமாகக் கூறப்படுவது என்னவென்றால் காற்றைச் சுவாசிக்கவும் ஒளிச்சேர்க்கை செய்யவும் தேவையான துளைகள் இரண்டிலுமே இருக்கின்றன. பிரையோ வகைத் தாவரங்களின் தொல்லெச்சங்கள் சுமார் 430 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தையதாகவும், ட்ராக்கியோ வகைத் தாவரங்களின் தொல்லெச்சங்கள் சுமார் 350 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தையதாகவும் கிடைத்திருப்பதன் மூலம் பிரையோ வகை தான் பிந்தைய வகையின் மூதாதை என்பது புரிகிறது. அதற்காக ட்ராக்கியோ வகைத் தாவரங்கள் வளர்ச்சி அடைய அடையப் பிரையோ முழுமையாக அழிந்துவிட்டதாகக் கூறமுடியாது. முந்தையதில் இருந்து இரண்டாவது பரிணாம வளர்ச்சி அடைந்து இருந்தாலும் இரண்டுமே சம காலத்தில் வாழ்ந்ததற்கான தொல்லெச்சங்களும் கிடைத்திருக்கிறது.
இன்றைய செடிகொடிகள் அனைத்துக்கும் முப்பாட்டன் இதுதான், ஒரு சுவாரஸ்ய வரலாறு! JJn5Oy3PTRWVM2n4TaJH+1e90a3da11c955c26c831fee085c10cd

Third party image reference
பிரையோவில் இருந்து பிரிந்து வந்த ட்ராக்கியோ வகைத் தாவரங்களே இன்றைய தாவரங்களின் உடல் அமைப்புக்கு மூதாதை என்று கூறலாம். ஏனென்றால், இதில் பட்டையம் மற்றும் மரவியம் போன்ற ஊட்டச்சத்துகளைக் கடத்தும் திசுக்கள் இருக்கிறது. அது மட்டுமின்றி இவற்றின் வளர்ச்சியும் சில மில்லியன் ஆண்டுகள் கடந்த பிறகு கணிசமாக இருந்துள்ளது. காலப்போக்கில் பலவகைகளாகப் பிரிந்து பல்வேறு தாவரங்களாக வளர்ச்சி அடைந்தது இந்த ட்ராக்கியோஃபைட் தாவரங்கள் தான்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

இன்றைய செடிகொடிகள் அனைத்துக்கும் முப்பாட்டன் இதுதான், ஒரு சுவாரஸ்ய வரலாறு! Empty Re: இன்றைய செடிகொடிகள் அனைத்துக்கும் முப்பாட்டன் இதுதான், ஒரு சுவாரஸ்ய வரலாறு!

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Apr 30, 2018 8:10 pm

உலகின் முதல் தாவரமான பிரையோஃபைட்கூட நீரில் இருந்து நிலத்துக்கு வந்த ஓரணு உயிரியான தொல் உட்கரு உயிரிகளில் இருந்து தான் பரிணாம வளர்ச்சியடைந்தன. ட்ராக்கியோவில் இருந்து பல்கிப் பெருகிய தாவர வகைகள் காலத்துக்கு ஏற்ப ஆதிக்க உயிர்களாகவும் சார்ந்திருக்கும் உயிர்களாகவும் மாறி மாறிப் பல மாற்றங்களுக்கு உட்பட்டு இன்று பல்லாயிரம் வகைகளில் உலகம் முழுவதும் பரவி பூமியின் கவசமாக விளங்குகிறது. பல மில்லியன் ஆண்டுகளாகப் பல அபாயங்களையும், பல்லாயிரம் மாற்றங்களையும் கண்டு வந்த இந்தத் தாவரங்கள் இன்று மனிதர்கள் கையால் வீழ்ந்துகொண்டிருப்பது ஒரு சோக காவியம். அத்தகைய கவசத்தை நமக்களித்த இயற்கையை மனித இனம் மதிக்காதது மட்டுமன்றி பாதுகாக்கவும் தவறியது வேதனைக்குரியது. சூழலியலாளர் ஒவ்வொருவர் மனதிலும் வேள்வியாய் வெந்துகொண்டிருக்கும் இயற்கை வளச்சுரண்டலுக்கு எதிரான கோபக்கனல் புவியின் மடியைச் சுரண்டுவதால் அவள் படும் வேதனையைப் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

இன்றைய செடிகொடிகள் அனைத்துக்கும் முப்பாட்டன் இதுதான், ஒரு சுவாரஸ்ய வரலாறு! Empty Re: இன்றைய செடிகொடிகள் அனைத்துக்கும் முப்பாட்டன் இதுதான், ஒரு சுவாரஸ்ய வரலாறு!

Post by Dr.S.Soundarapandian Thu Jul 12, 2018 6:59 pm

இன்றைய செடிகொடிகள் அனைத்துக்கும் முப்பாட்டன் இதுதான், ஒரு சுவாரஸ்ய வரலாறு! 103459460 இன்றைய செடிகொடிகள் அனைத்துக்கும் முப்பாட்டன் இதுதான், ஒரு சுவாரஸ்ய வரலாறு! 103459460 இன்றைய செடிகொடிகள் அனைத்துக்கும் முப்பாட்டன் இதுதான், ஒரு சுவாரஸ்ய வரலாறு! 103459460


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

இன்றைய செடிகொடிகள் அனைத்துக்கும் முப்பாட்டன் இதுதான், ஒரு சுவாரஸ்ய வரலாறு! Empty Re: இன்றைய செடிகொடிகள் அனைத்துக்கும் முப்பாட்டன் இதுதான், ஒரு சுவாரஸ்ய வரலாறு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum