Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு எதிரொலி 1,300 மதுக்கடைகளை உடனடியாக மூட உத்தரவு தமிழக அரசு நடவடிக்கை
Page 1 of 1
சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு எதிரொலி 1,300 மதுக்கடைகளை உடனடியாக மூட உத்தரவு தமிழக அரசு நடவடிக்கை
சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு எதிரொலி 1,300 மதுக்கடைகளை உடனடியாக மூட உத்தரவு தமிழக அரசு நடவடிக்கை
சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு எதிரொலி
1,300 மதுக்கடைகளை உடனடியாக மூட உத்தரவு
தமிழக அரசு நடவடிக்கை
Facebook Google+ Mail Text Size Print சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பின் காரணமாக, தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள 1,300 மதுக்கடைகளை உடனடியாக மூட தமிழக அரசு உத்தரவிட்டதை தொடர்ந்து, அந்த கடைகள் மூடப்பட்டன.
ஏப்ரல் 30, 2018, 05:45 AM
சென்னை,
சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பின் காரணமாக, தேசிய, மாநில
நெடுஞ்சாலைகளில் உள்ள 1,300 மதுக்கடைகளை உடனடியாக
மூட தமிழக அரசு உத்தரவிட்டதை தொடர்ந்து, அந்த கடைகள்
மூடப்பட்டன.
தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள ‘டாஸ்மாக்’
மதுபானக்கடைகளை மூட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு
உத்தரவு பிறப்பித்தது.
உள்ளாட்சி சாலைகளாக மாற்றம்
இதைத்தொடர்ந்து தமிழகத்தில் தேசிய மற்றும் மாநில
நெடுஞ்சாலைகளில் இருந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட
மதுபானக்கடைகள் மூடப்பட்டன.
இந்த கடைகளை தமிழக அரசு வேறு இடத்துக்கு மாற்றம் செய்தது.
இந்தநிலையில் தமிழகத்தில் பல இடங்களில் மாநில
நெடுஞ்சாலைகள் உள்ளாட்சி சாலைகளாக வகை மாற்றம்
செய்யப்பட்டு மதுபானக்கடைகள் திறக்கப்பட்டன.
ஐகோர்ட்டு தீர்ப்பு
இதுபோன்று மாநில நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி சாலைகளாக
வகை மாற்றம் செய்து மதுபானக்கடைகளை திறக்க தடை விதிக்க
வேண்டும் என்று வழக்கறிஞர்களுக்கான சமூக நீதிப் பேரவை
சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, மாநில நெடுஞ்சாலைகளை
உள்ளாட்சி சாலைகளாக வகை மாற்றம் செய்து முறையாக
அறிவிக்கப்படாத சாலைகளுக்கு அருகே மதுபானக்கடைகளை
திறக்க தடை விதித்து நேற்று முன்தினம் அதிரடி தீர்ப்பு கூறியது.
மேலும், அதுபோன்று திறக்கப்பட்ட கடைகளை மூடவும் ஐகோர்ட்டு
உத்தரவு பிறப்பித்தது.
உடனடியாக மூட உத்தரவு
இதைத்தொடர்ந்து ‘டாஸ் மாக்’ நிர்வாக இயக்குனர் கிர்லோஷ்குமார்,
அனைத்து மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள், டாஸ்மாக்
மண்டல முதுநிலை மேலாளர்கள், மாவட்ட மேலாளர்கள் ஆகியோருக்கு
ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
‘மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் 20 ஆயிரத்துக்கும்
அதிகமான மக்கள் வசிக்கும் பகுதிகளில் செல்லும் தேசிய, மாநில
நெடுஞ்சாலை மற்றும் அதனை ஒட்டிச்செல்லும் இணைப்புச்
சாலைகளில் இருந்து 500 மீட்டர் தூரத்துக்குள் உள்ள மதுபானக்கடைகள்,
20 ஆயிரத்துக்கும் குறைவான மக்கள் வசிக்கும் பகுதிகளில் செல்லும்
தேசிய, மாநில நெடுஞ்சாலை மற்றும் அதனை ஒட்டிச்செல்லும்
இணைப்பு சாலைகளில் இருந்து 220 மீட்டர் தூரத்துக்குள் உள்ள
மதுபானக் கடைகள் மற்றும் மதுபான பார்களை உடனடியாக மூட
வேண்டும்.
இதை, 30-ந்தேதி (இன்று) உறுதி செய்து டாஸ்மாக் மண்டல
முதுநிலை மேலாளர்கள், மாவட்ட மேலாளர்கள் ஆகியோர்
அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் மற்றும் டாஸ்மாக் நிர்வாக
இயக்குனருக்கு அறிக்கை அளிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
1,300 மதுக்கடைகள்
தமிழ்நாட்டில் மொத்தம் 6,729 மதுக்கடைகள் செயல்பட்டு வந்தன.
இந்தநிலையில், படிப்படியாக மதுக்கடைகள் மூடப்படும் என்ற
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் அறிவிப்பை
தொடர்ந்து, 2 கட்டங்களாக 1,000 மதுக்கடைகள் மூடப்பட்டன.
இதற்கிடையே, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி தேசிய, மாநில
நெடுஞ்சாலைகளின் அருகே இருந்த மதுக்கடைகளும் அடைக்கப்
பட்டன. இதுபோன்ற நடவடிக்கைகளினால், மதுக்கடைகளின்
எண்ணிக்கை 4,929 என்ற அளவுக்கு குறைந்தது.
இந்த நிலையில், நகரங்களில் நெடுஞ்சாலைகளின் அருகேயுள்ள
மதுக்கடைகளை திறக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு
அளித்தது. அதனைத் தொடர்ந்து, சுமார் 1,700 மதுக்கடைகள்
திறக்கப்பட்டிருந்தன.
தற்போது, இந்த மதுக்கடைகளை இனம்கண்டு உடனடியாக
மூட சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அதன்படி,
நேற்று ஒரே நாளில் தமிழ்நாடு முழுவதும் 1,300 மதுக்கடைகள்
மூடப்பட்டன.
சென்னையில் எத்தனை கடைகள்?
அதாவது, சென்னை மண்டலத்தை பொறுத்தவரை,
வடசென்னையில் 8, மத்திய சென்னையில் 15,
தென்சென்னையில் 18, திருவள்ளூர் மேற்கில் 8, திருவள்ளூர்
கிழக்கில் 59, காஞ்சீபுரம் வடக்கில் 33, காஞ்சீபுரம் தெற்கில்
15 என மொத்தம் 156 மதுக்கடைகளும்,
சேலம் மண்டலத்தில் 122 மதுக்கடைகளும் என மொத்தம்
1,300 கடைகள் மூடப்பட்டுள்ளன.
ஆனால், மூடப்பட்டுள்ள மதுக்கடைகளில் பணியாற்றிய
பணியாளர்களுக்கு மாற்றுப் பணி வழங்குவதற்கான
கொள்கையை உருவாக்க அரசாணை எதுவும் வெளியிடப்
படவில்லை என்றும், அவர்களுக்கு அரசு துறைகளில் காலியாக
உள்ள பணியிடங்களில் மாற்றுப்பணி வழங்க வேண்டும்
என்றும் தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின்
(ஏ.ஐ.டி.யு.சி.) பொதுச்செயலாளர் தனசேகரன் அரசுக்கு
கோரிக்கை விடுத்துள்ளார்.
-
------------------------------------
தினத்தந்தி
சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு எதிரொலி
1,300 மதுக்கடைகளை உடனடியாக மூட உத்தரவு
தமிழக அரசு நடவடிக்கை
Facebook Google+ Mail Text Size Print சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பின் காரணமாக, தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள 1,300 மதுக்கடைகளை உடனடியாக மூட தமிழக அரசு உத்தரவிட்டதை தொடர்ந்து, அந்த கடைகள் மூடப்பட்டன.
ஏப்ரல் 30, 2018, 05:45 AM
சென்னை,
சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பின் காரணமாக, தேசிய, மாநில
நெடுஞ்சாலைகளில் உள்ள 1,300 மதுக்கடைகளை உடனடியாக
மூட தமிழக அரசு உத்தரவிட்டதை தொடர்ந்து, அந்த கடைகள்
மூடப்பட்டன.
தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள ‘டாஸ்மாக்’
மதுபானக்கடைகளை மூட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு
உத்தரவு பிறப்பித்தது.
உள்ளாட்சி சாலைகளாக மாற்றம்
இதைத்தொடர்ந்து தமிழகத்தில் தேசிய மற்றும் மாநில
நெடுஞ்சாலைகளில் இருந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட
மதுபானக்கடைகள் மூடப்பட்டன.
இந்த கடைகளை தமிழக அரசு வேறு இடத்துக்கு மாற்றம் செய்தது.
இந்தநிலையில் தமிழகத்தில் பல இடங்களில் மாநில
நெடுஞ்சாலைகள் உள்ளாட்சி சாலைகளாக வகை மாற்றம்
செய்யப்பட்டு மதுபானக்கடைகள் திறக்கப்பட்டன.
ஐகோர்ட்டு தீர்ப்பு
இதுபோன்று மாநில நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி சாலைகளாக
வகை மாற்றம் செய்து மதுபானக்கடைகளை திறக்க தடை விதிக்க
வேண்டும் என்று வழக்கறிஞர்களுக்கான சமூக நீதிப் பேரவை
சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, மாநில நெடுஞ்சாலைகளை
உள்ளாட்சி சாலைகளாக வகை மாற்றம் செய்து முறையாக
அறிவிக்கப்படாத சாலைகளுக்கு அருகே மதுபானக்கடைகளை
திறக்க தடை விதித்து நேற்று முன்தினம் அதிரடி தீர்ப்பு கூறியது.
மேலும், அதுபோன்று திறக்கப்பட்ட கடைகளை மூடவும் ஐகோர்ட்டு
உத்தரவு பிறப்பித்தது.
உடனடியாக மூட உத்தரவு
இதைத்தொடர்ந்து ‘டாஸ் மாக்’ நிர்வாக இயக்குனர் கிர்லோஷ்குமார்,
அனைத்து மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள், டாஸ்மாக்
மண்டல முதுநிலை மேலாளர்கள், மாவட்ட மேலாளர்கள் ஆகியோருக்கு
ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
‘மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் 20 ஆயிரத்துக்கும்
அதிகமான மக்கள் வசிக்கும் பகுதிகளில் செல்லும் தேசிய, மாநில
நெடுஞ்சாலை மற்றும் அதனை ஒட்டிச்செல்லும் இணைப்புச்
சாலைகளில் இருந்து 500 மீட்டர் தூரத்துக்குள் உள்ள மதுபானக்கடைகள்,
20 ஆயிரத்துக்கும் குறைவான மக்கள் வசிக்கும் பகுதிகளில் செல்லும்
தேசிய, மாநில நெடுஞ்சாலை மற்றும் அதனை ஒட்டிச்செல்லும்
இணைப்பு சாலைகளில் இருந்து 220 மீட்டர் தூரத்துக்குள் உள்ள
மதுபானக் கடைகள் மற்றும் மதுபான பார்களை உடனடியாக மூட
வேண்டும்.
இதை, 30-ந்தேதி (இன்று) உறுதி செய்து டாஸ்மாக் மண்டல
முதுநிலை மேலாளர்கள், மாவட்ட மேலாளர்கள் ஆகியோர்
அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் மற்றும் டாஸ்மாக் நிர்வாக
இயக்குனருக்கு அறிக்கை அளிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
1,300 மதுக்கடைகள்
தமிழ்நாட்டில் மொத்தம் 6,729 மதுக்கடைகள் செயல்பட்டு வந்தன.
இந்தநிலையில், படிப்படியாக மதுக்கடைகள் மூடப்படும் என்ற
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் அறிவிப்பை
தொடர்ந்து, 2 கட்டங்களாக 1,000 மதுக்கடைகள் மூடப்பட்டன.
இதற்கிடையே, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி தேசிய, மாநில
நெடுஞ்சாலைகளின் அருகே இருந்த மதுக்கடைகளும் அடைக்கப்
பட்டன. இதுபோன்ற நடவடிக்கைகளினால், மதுக்கடைகளின்
எண்ணிக்கை 4,929 என்ற அளவுக்கு குறைந்தது.
இந்த நிலையில், நகரங்களில் நெடுஞ்சாலைகளின் அருகேயுள்ள
மதுக்கடைகளை திறக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு
அளித்தது. அதனைத் தொடர்ந்து, சுமார் 1,700 மதுக்கடைகள்
திறக்கப்பட்டிருந்தன.
தற்போது, இந்த மதுக்கடைகளை இனம்கண்டு உடனடியாக
மூட சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அதன்படி,
நேற்று ஒரே நாளில் தமிழ்நாடு முழுவதும் 1,300 மதுக்கடைகள்
மூடப்பட்டன.
சென்னையில் எத்தனை கடைகள்?
அதாவது, சென்னை மண்டலத்தை பொறுத்தவரை,
வடசென்னையில் 8, மத்திய சென்னையில் 15,
தென்சென்னையில் 18, திருவள்ளூர் மேற்கில் 8, திருவள்ளூர்
கிழக்கில் 59, காஞ்சீபுரம் வடக்கில் 33, காஞ்சீபுரம் தெற்கில்
15 என மொத்தம் 156 மதுக்கடைகளும்,
சேலம் மண்டலத்தில் 122 மதுக்கடைகளும் என மொத்தம்
1,300 கடைகள் மூடப்பட்டுள்ளன.
ஆனால், மூடப்பட்டுள்ள மதுக்கடைகளில் பணியாற்றிய
பணியாளர்களுக்கு மாற்றுப் பணி வழங்குவதற்கான
கொள்கையை உருவாக்க அரசாணை எதுவும் வெளியிடப்
படவில்லை என்றும், அவர்களுக்கு அரசு துறைகளில் காலியாக
உள்ள பணியிடங்களில் மாற்றுப்பணி வழங்க வேண்டும்
என்றும் தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின்
(ஏ.ஐ.டி.யு.சி.) பொதுச்செயலாளர் தனசேகரன் அரசுக்கு
கோரிக்கை விடுத்துள்ளார்.
-
------------------------------------
தினத்தந்தி
Similar topics
» பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு விதித்த தடை செல்லும் ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
» தைப்பூச திருவிழாவையொட்டி இந்துக்கள் பகுதியில் 3 நாள் மதுக்கடைகளை மூட சிங்கப்பூர் அரசு உத்தரவு
» சீமான் வழக்கில் 6 வாரத்தில் பதில் அளிக்க வேண்டும்” தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
» அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு: தமிழக அரசு உத்தரவு
» அடையாள அட்டையை அரசு ஊழியர்கள் கண்டிப்பாக அணிய வேண்டும் தமிழக அரசு உத்தரவு
» தைப்பூச திருவிழாவையொட்டி இந்துக்கள் பகுதியில் 3 நாள் மதுக்கடைகளை மூட சிங்கப்பூர் அரசு உத்தரவு
» சீமான் வழக்கில் 6 வாரத்தில் பதில் அளிக்க வேண்டும்” தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
» அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு: தமிழக அரசு உத்தரவு
» அடையாள அட்டையை அரசு ஊழியர்கள் கண்டிப்பாக அணிய வேண்டும் தமிழக அரசு உத்தரவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|