ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீலகிரி டூ கோவை... கோடை மழைக்கு படையெடுக்கும் பட்டாம்பூச்சிகள்...!

Go down

நீலகிரி டூ கோவை... கோடை மழைக்கு படையெடுக்கும் பட்டாம்பூச்சிகள்...! Empty நீலகிரி டூ கோவை... கோடை மழைக்கு படையெடுக்கும் பட்டாம்பூச்சிகள்...!

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Apr 29, 2018 12:04 pm

Coimbatore:
பொதுவாக ஒரு பட்டாம்பூச்சியைப் பார்த்தாலே, சிலாகித்து ஸ்டேட்ஸ்களை பறக்கவிடும் காலம் இது. ஆனால், தினசரி உருவாகும் புதிய இந்தியாக்களில், பட்டாம்பூச்சிகளை பார்ப்பதே அரிதாகிவிட்டது. அப்படியிருக்கும் போது, பட்டாம்பூச்சிகளை ஒரே இடத்தில் கூட்டம் கூட்டமாகப் பார்த்தால் எப்படி இருக்கும்? சூழல் சிறப்பாக இருக்கும் இடங்களில்தான் பட்டாம்பூச்சிகளை காணமுடியும். இந்நிலையில், கடந்த சில நாள்களாக கோவையில் கோடை மழை பெய்து வருகிறது. இதனால், மேற்குதொடர்ச்சி மலைகளில் தாவரங்களின் வளர்ச்சி சிறப்பாக இருக்கிறது. இதையடுத்து, பல்வேறு பகுதிகளில் இருந்து, தண்ணீருக்காகவும், உணவுக்காகவும் பட்டாம்பூச்சிகள் கோவையை நோக்கி படையெடுத்து வருகின்றன.
நீலகிரி டூ கோவை... கோடை மழைக்கு படையெடுக்கும் பட்டாம்பூச்சிகள்...! XMJi6biiShKfGOueMlug+29ee6dc9682121a102ade71d358edee3

பட்டாம்பூச்சிகள் ஏப்ரல், மே மற்றும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் வலசை போதலில் ஈடுபடும். அப்போது, ஓர் இடத்தில் இருந்து, மற்றோர் இடத்துக்கு லட்சக்கணக்கான பட்டாம்பூச்சிகள் நகரும். பட்டாம்பூச்சிகளால் கோடை வெயிலை தாங்க முடியாது. எனவே, அந்தக் காலகட்டத்தில் சூழல் சிறப்பாக இருக்கும் இடங்களுக்கு அவை நகரும். குறிப்பாக, தற்போது கோவையில் கோடை மழை நன்றாக பெய்து வருகிறது. இதனால், நீலகிரி மாவட்டத்தில் இருக்கும் பட்டாம்பூச்சிகள், கோவை ஆனைகட்டி பகுதிக்கு வந்து, பின்னர் ஆனைமலை பகுதிக்குச் செல்லும். அதேபோல, கன்னியாகுமரி உள்ளிட்டப் பகுதிகளிலும் வலசை போதல் நடைபெறுவதை பார்க்க முடியும்.
நன்றி
விகடன்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

நீலகிரி டூ கோவை... கோடை மழைக்கு படையெடுக்கும் பட்டாம்பூச்சிகள்...! Empty Re: நீலகிரி டூ கோவை... கோடை மழைக்கு படையெடுக்கும் பட்டாம்பூச்சிகள்...!

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Apr 29, 2018 12:06 pm

நீலகிரி டூ கோவை... கோடை மழைக்கு படையெடுக்கும் பட்டாம்பூச்சிகள்...! 7UfuhphR7aT2ERXgXBAw+0897b63a9af10cb30d9ffab497e9db4b
இதுகுறித்து தமிழ்நாடு பட்டாம்பூச்சிகள் அமைப்பின் மோகன் பிரசாத் கூறுகையில், “இனப்பெருக்கம், உணவு, தட்பவெட்ப சூழ்நிலை என பல்வேறு காரணங்களுக்காக பட்டாம்பூச்சிகள் வலசை போதலில் ஈடுபடுகின்றன. இந்தக் காலகட்டத்தில், ஒரே இடத்தில் பல ஆயிரக்கணக்கான பட்டாம்பூச்சிகள், நீர் உறியும் காட்சிகளைப் பார்க்க முடியும். பட்டாம்பூச்சி ஆரம்பகாலகட்டத்தில், காட்டில் கிடைக்கும் தாவரங்களை சாப்பிட்டாலும், அது முதிர்ந்த நிலையை அடையும்போது, அவற்றுக்கு அதிகப் பூக்கள் தேவைப்படும். இதனால், மலை மற்றும் சமவெளி பகுதிகளுக்கு வந்து அவை தேன் உறிஞ்சும்.
எந்த ஒரு இடத்திலும் உயிர்ச்சூழல் சிறப்பாக அமைய, விலங்குகள் மற்றும் பறவைகளுக்கும் ஒரே தேவை நீர்தான். அதேசமயம், ஒரே இடத்தில் அதிக மழை பெய்தாலும் இவற்றால் சிறப்பாக இருக்க முடியாது. தற்போது, கோடைமழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இதனால், தாவரங்களின் வளர்ச்சியும் சிறப்பாக இருக்கிறது. இது உயிர்ச்சூழல் சிறப்பாக இருக்கவும் உதவும். முக்கியமாக, இந்தச் சூழல் அதன் இனவிருத்தியை அதிகரிப்பதற்கும் உதவும். கடந்த சில ஆண்டுகளாக, தமிழகம் முழுவதும் வலசை போதல் நடப்பதை நாங்கள் பதிவு செய்திருக்கிறோம். பட்டாம்பூச்சிகள் ஒரு பகுதிக்கு வருகிறது என்றாலே, அந்தப் பகுதியில் சூழல் சிறப்பாக இருக்கிறது என்றுதான் அர்த்தம்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

நீலகிரி டூ கோவை... கோடை மழைக்கு படையெடுக்கும் பட்டாம்பூச்சிகள்...! Empty Re: நீலகிரி டூ கோவை... கோடை மழைக்கு படையெடுக்கும் பட்டாம்பூச்சிகள்...!

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Apr 29, 2018 12:07 pm

நீலகிரி டூ கோவை... கோடை மழைக்கு படையெடுக்கும் பட்டாம்பூச்சிகள்...! JBPfeXmiTkqSmeX3vqX2+4982ad9f9f6b424cc95fe79d9e330150

எலுமிச்சை, எருக்கம், தும்பை, இலந்தை, பலா, கொன்றை, மந்தாரை, அகத்தி, வெட்சி போன்ற தாவரங்கள்தான் பட்டாம்பூச்சிக்கு மிகவும் பிடித்தவை. எனவே, அந்தத் தாவரங்களை நாம் பாதுகாக்க வேண்டும். 85 சதவிகித மகரந்தச் சேர்க்கை, பட்டாம்பூச்சி மற்றும் தேனீக்களால்தான் நடைபெறுகின்றன. வனஉயிரினங்கள் பாதுகாப்புச்சட்டத்தின் அட்டவணைப் பிரிவில் இடம்பெற்றுள்ள 36 வகை பட்டாம்பூச்சிகளும், மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மட்டுமே காணப்படும் 32 வகை பட்டாம்பூச்சிகளும் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. பட்டாம்பூச்சிகளை, சாதாரண பூச்சி என்று நினைத்து நாம் அடித்து வருகிறோம். அதைத் தவிர்க்க வேண்டும். பட்டாம்பூச்சிகள் பாதுகாக்கப்படவேண்டும். ஆனால், மகசூல் அதிகம் கிடைக்க வேண்டும் என்பதற்காக, ரசாயன பூச்சி மருந்துகளை பயன்படுத்தி, பட்டாம்பூச்சிகளின் எண்ணிக்கையை குறைத்து விடுகிறோம். செயற்கை மருந்துகளைத் தவிர்த்தாலே, விவசாயம் செழிப்படையும். அதேபோல, பட்டாம்பூச்சிகளும் பாதுகாக்கப்படும்” என்றார் உறுதியாக.
இயற்கை விவசாயத்துக்கு திரும்புவோம்… பட்டாம்பூச்சிகளை பாதுகாப்போம்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

நீலகிரி டூ கோவை... கோடை மழைக்கு படையெடுக்கும் பட்டாம்பூச்சிகள்...! Empty Re: நீலகிரி டூ கோவை... கோடை மழைக்கு படையெடுக்கும் பட்டாம்பூச்சிகள்...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum