ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏ.டி.எம் கார்டு பயன்படுத்தியவர்களுக்கு அதிர்ச்சி - நூதன முறையில் திருட்டு

3 posters

Go down

ஏ.டி.எம் கார்டு பயன்படுத்தியவர்களுக்கு அதிர்ச்சி - நூதன முறையில் திருட்டு Empty ஏ.டி.எம் கார்டு பயன்படுத்தியவர்களுக்கு அதிர்ச்சி - நூதன முறையில் திருட்டு

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Mar 31, 2018 6:13 pm

ஏ.டி.எம் கார்டு பயன்படுத்தியவர்களுக்கு அதிர்ச்சி - நூதன முறையில் திருட்டு ScT2rYYPR6KOlOhwOzPa+Screenshot_2018-03-31-18-12-27
ஏ.டி.எம் கார்டு மூலம் பெட்ரோல் நிரப்பிய வாடிக்கையாளர்களின் ரகசிய தகவல்கள் ஸ்கிம்மர் கருவி மூலம் திருடிய ஊழியர் மற்றும் அவருக்கு உறுதுணையாக இருந்தவர் என இரண்டு பேரை சென்னை போலீஸார் கைதுசெய்துள்ளனர்.

சென்னை, கொட்டிவாக்கத்தில் ஐ.ஓ.சி-க்குச் சொந்தமான பெட்ரோல் பங்க் செயல்பட்டுவருகிறது. இங்கு பாலவாக்கத்தைச் சேர்ந்த ராஜசேகர் மேலாளராகப் பணியாற்றிவருகிறார். இவர், நீலாங்கரை குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில், பெட்ரோல் பங்க்கில் வேலைபார்க்கும் ஜெயராமன் என்பவரின் நடவடிக்கையில் சந்தேகம் இருப்பதாகக் குறிப்பிட்டார்.

இதையடுத்து, நீலாங்கரை குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ரஞ்சித்குமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி, தலைமைக் காவலர் செந்தில் மற்றும் போலீஸார் அக்பர், அகிலன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார் ஜெயராமனைப் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், "ஏ.டி.எம், கிரெடிட் கார்டுகள் மூலம் பெட்ரோல் நிரப்பும் வாடிக்கையாளர்களிடம் ஜெயராமன் நூதன முறையில் மோசடியில் ஈடுபட்டுள்ளார். அதாவது, வாடிக்கையாளர்களின் கார்டுகளை ஸ்வைப் செய்யும் ஜெயராமன், தன்னுடைய பேண்ட் பாக்கெட்டில் மறைத்து வைத்திருக்கும் ஸ்கிம்மர் கருவியிலும் அந்தக் கார்டை ஸ்வைப் செய்துவிடுவார். அப்போது, கார்டுகளின் விவரங்கள் அதில் பதிவாகிவிடும். பிறகு வாடிக்கையாளர்களின் கார்டு விவரங்களை குறித்துக்கொண்டு டூப்ளிக்கேட் கார்டுகளைத் தயாரித்து மோசடிக் கும்பலிடம் கொடுத்துவிடுவார்.
நன்றி
விகடன்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ஏ.டி.எம் கார்டு பயன்படுத்தியவர்களுக்கு அதிர்ச்சி - நூதன முறையில் திருட்டு Empty Re: ஏ.டி.எம் கார்டு பயன்படுத்தியவர்களுக்கு அதிர்ச்சி - நூதன முறையில் திருட்டு

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Mar 31, 2018 6:14 pm

அந்தக் கும்பல் டூப்ளிக்கேட் கார்டு மூலம் லட்சக்கணக்கில் பணத்தை எடுத்துவிடும். இந்த ஸ்கிம்மர் கருவி மோசடிக்கு மாதவரத்தைச் சேர்ந்த கணேஷமூர்த்தியும் உடந்தையாக இருந்துள்ளார். இதனால் இருவரையும் கைது செய்துள்ளோம். அவர்களிடமிருந்து லேப்டாப் மற்றும் ஸ்கிம்மர் கருவியைப் பறிமுதல் செய்துள்ளோம். இந்த வழக்கில் டூப்ளிக் கார்டு தயாரிக்கும் கும்பலைத் தேடிவருகிறோம்" என்றனர்.

ஏ.டி.எம் கார்டு பயன்படுத்தியவர்களுக்கு அதிர்ச்சி - நூதன முறையில் திருட்டு 06nEpQ0YQe2HVkZGY1DT+Screenshot_2018-03-31-18-17-21

பெட்ரோல் பங்க் ஊழியர் ஜெயராமன் பிடிபட்டது எப்படி என்று விசாரித்தபோது கிடைத்த தகவல் அதிர்ச்சி ரகம். பெட்ரோல் பங்க்கில் ஜெயராமனின் நடவடிக்கைகளில் அங்கு பணியாற்றும் சக ஊழியர்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மேலாளர் ராஜசேகரிடம் அவர்கள் கூறியுள்ளனர். இதனால், ஜெயராமனின் நடவடிக்கைகள் பெட்ரோல் பங்க்கில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா மூலம் கண்காணித்தோம். அப்போது, வாடிக்கையாளர்களின் கார்டுகளை ஸ்கிம்மர் கருவியில் ஸ்வைப் செய்வது தெரிந்தது. இதுகுறித்து விசாரித்தபோது ராஜசேகரைத் தாக்கிவிட்டு ஜெயராமன் தப்பி ஓடிவிட்டார். இந்தத் தகவலை போலீஸாரிடம் ராஜசேகர் தெரிவித்தவுடன் ஜெயராமனைப் பிடிக்க போலீஸார் நடவடிக்கை எடுத்தனர். அதாவது, பணிக்குச் சேரும்போது ஜெயராமன் பள்ளிச் சான்றிதழ் மற்றும் ஆதார் கார்டுகளின் நகலைக் கொடுத்துள்ளார். அதன்மூலம் அவரை போலீஸார் பிடித்துள்ளார். இவர், திருச்சியைச் சேர்ந்தவர். ஜெயராமனின் பின்புலம் மற்றும் ஸ்கிம்மர் கருவி மோசடியில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரணை நடந்துவருகிறது.


Last edited by பழ.முத்துராமலிங்கம் on Sat Mar 31, 2018 6:18 pm; edited 1 time in total
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ஏ.டி.எம் கார்டு பயன்படுத்தியவர்களுக்கு அதிர்ச்சி - நூதன முறையில் திருட்டு Empty Re: ஏ.டி.எம் கார்டு பயன்படுத்தியவர்களுக்கு அதிர்ச்சி - நூதன முறையில் திருட்டு

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Mar 31, 2018 6:16 pm

ஜெயராமன், வேலைக்குச் சேர்ந்த சில தினங்களிலேயே சிக்கிவிட்டார். இல்லையெனில் பல லட்ச ரூபாயைச் சுருட்டியிருப்பார். ஜெயராமனால் பாதிக்கப்பட்ட கொட்டிவாக்கம் பெட்ரோல் பங்க்கில் மட்டும் 19 வாடிக்கையாளர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. மேலும், ஜெயராமன், சென்னையில் உள்ள சில பெட்ரோல் பங்க்களில் வேலைபார்த்துள்ளார். அவர் வேலைபார்த்த பெட்ரோல் பங்க்களில் நிரந்தரமாக இருப்பதில்லை. கார்டுகளின் டேட்டாக்களைத் திருடிவிட்டு எஸ்கேப் ஆகிவிடுவார். இவர்மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு, விழுப்புரம் மாவட்டக் குற்றப்பிரிவு ஆகியவற்றில் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இதுகுறித்து பெயரைக் குறிப்பிட விரும்பாத போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "டிஜிட்டல் இந்தியாவை நோக்கிச் செல்லும் நாமும் வங்கிகள் கார்டுகளைப் பயன்படுத்தும்போது கவனமாக இருக்க வேண்டும். அதாவது, கார்டுகளின் சி.வி.வி எண்கள், ரகசிய எண்களை யாரிடமும் தெரிவிக்கக் கூடாது. சி.வி.வி எண்களைக் கார்டிலிருந்து அழித்துவிடுவது காலச் சிறந்தது. கார்டுகளைப் பயன்படுத்துவோர்கள் கவனமாக இருந்தால் பணத்தை இழக்க வேண்டிய அவசியம் ஏற்படாது. சென்னை பெட்ரோல் பங்க்கில் ஸ்கிம்மர் கருவி மூலம் நடந்த நூதன மோசடியில் டேட்டாக்களைத் திருடிய ஜெயராமனுக்கு மோசடிக் கும்பல் கொடுக்கும் தகவல்களுக்கு ஏற்ப கமிஷனாகப் பணம் கொடுத்துள்ளது" என்றார்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ஏ.டி.எம் கார்டு பயன்படுத்தியவர்களுக்கு அதிர்ச்சி - நூதன முறையில் திருட்டு Empty Re: ஏ.டி.எம் கார்டு பயன்படுத்தியவர்களுக்கு அதிர்ச்சி - நூதன முறையில் திருட்டு

Post by சிவனாசான் Sat Mar 31, 2018 9:17 pm

உம்மைதான் அய்யா .கோள்களை வேவு பார்க்கும் விஞ்சானி
இப்படிபட்டதுரோகிகளை களைய ஏதேனும் கண்டு பிடித்தால்
பாராட்டலாம்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

ஏ.டி.எம் கார்டு பயன்படுத்தியவர்களுக்கு அதிர்ச்சி - நூதன முறையில் திருட்டு Empty Re: ஏ.டி.எம் கார்டு பயன்படுத்தியவர்களுக்கு அதிர்ச்சி - நூதன முறையில் திருட்டு

Post by M.Jagadeesan Sun Apr 01, 2018 12:01 pm

ஜெயராமன் போன்ற சில்லரை திருடர்கள் அகப்பட்டுக் கொள்கிறார்கள் . ஆனால் ...........


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

ஏ.டி.எம் கார்டு பயன்படுத்தியவர்களுக்கு அதிர்ச்சி - நூதன முறையில் திருட்டு Empty Re: ஏ.டி.எம் கார்டு பயன்படுத்தியவர்களுக்கு அதிர்ச்சி - நூதன முறையில் திருட்டு

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Apr 01, 2018 12:24 pm

M.Jagadeesan wrote:ஜெயராமன் போன்ற சில்லரை திருடர்கள் அகப்பட்டுக் கொள்கிறார்கள் . ஆனால் ...........
மேற்கோள் செய்த பதிவு: 1264726
இந்த சில்லறை திருடர்கள் நம் சில்லறை சேமிப்பை காலிசெய்து விடுவார்கள்
போல் தெரிகிறது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ஏ.டி.எம் கார்டு பயன்படுத்தியவர்களுக்கு அதிர்ச்சி - நூதன முறையில் திருட்டு Empty Re: ஏ.டி.எம் கார்டு பயன்படுத்தியவர்களுக்கு அதிர்ச்சி - நூதன முறையில் திருட்டு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum