ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாதெள்ளாவில் நடந்தது என்ன? மோசடியில் நகை நிறுவனங்கள்... அலறும் வங்கிகள்!

2 posters

Go down

 நாதெள்ளாவில் நடந்தது என்ன? மோசடியில் நகை நிறுவனங்கள்... அலறும் வங்கிகள்! Empty நாதெள்ளாவில் நடந்தது என்ன? மோசடியில் நகை நிறுவனங்கள்... அலறும் வங்கிகள்!

Post by ayyasamy ram Sun Mar 25, 2018 3:47 pm

 நாதெள்ளாவில் நடந்தது என்ன? மோசடியில் நகை நிறுவனங்கள்... அலறும் வங்கிகள்! Dubai_Gold_Souk_17540
-
வங்கிகளை ஏமாற்றும் நகைக்கடைகள் வரிசையில் லேட்டஸ்ட்
நாதெள்ளா ஜுவல்லரி. போலியான ஆதாரங்கள் காட்டி 250 கோடி
ரூபாய் கடன் வாங்கிவிட்டு கட்டாமல் விட்டுவிட்டதாக மத்திய
புலனாய்வு அமைப்பில் புகார் கொடுத்திருக்கிறது
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா.

2010-ம் ஆண்டு இந்த 250 கோடி ரூபாயை கடனாக வாங்கியதாக
வங்கி சொல்லும் நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம்
பண நெருக்கடியால் தனது அனைத்துக்கிளைகளையும் மூடியது
நாதெள்ளா நிறுவனம்.

77 ஆண்டுக்கால பாரம்பரிய நிறுவனமான நாதெள்ளாவில்
அப்போதே நகை சேமிப்புத் திட்டத்தில் பணம் கட்டி ஏமாந்தவர்கள்
புகார் தெரிவித்தனர். நாதெள்ளா நிறுவனம் 210 பேரிடம் 75 கோடி
ரூபாய் நகை சீட்டு பணத்தை திரும்ப செலுத்தாமல் ஏமாற்றியுள்ள
இந்த புகார் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில்தான் பாரத் ஸ்டேட்
வங்கியின் 250 கோடி ரூபாய் புகார் எழுந்துள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர்மாதம் தான் தங்களுக்கு போலியான
ஆவணங்கள் மூலம் கடன்பெற்றிருப்பது தெரியவந்ததாக சொல்கிறது
பாரத ஸ்டேட் வங்கி. நாதெள்ளா மீதான புகாரும் கடந்த
4 மாதங்களுக்கு முன்பே எஸ்.பி.ஐ கொடுத்துவிட்டதாகத் தெரிகிறது.

2017-ம் ஆண்டு நகை சீட்டு மோசடி அம்பலமானபோது, பொருளாதார
குற்றங்களை விசாரிக்கும் ஆணையம் முன்பு ஆஜரான நாதெள்ளா
நிறுவனம் இந்த ஆண்டு மார்ச் மாதம் வாடிக்கையாளர்களுக்குத்
தரவேண்டிய பணத்தை தந்துவிடுவோம் என உறுதியளித்திருந்தது.

ஆனால் இதுவரை வாடிக்கையாளர்களின் பணம் திரும்ப கொடுக்கப்
படவில்லை.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 நாதெள்ளாவில் நடந்தது என்ன? மோசடியில் நகை நிறுவனங்கள்... அலறும் வங்கிகள்! Empty Re: நாதெள்ளாவில் நடந்தது என்ன? மோசடியில் நகை நிறுவனங்கள்... அலறும் வங்கிகள்!

Post by ayyasamy ram Sun Mar 25, 2018 3:48 pm



நாதெள்ளா நிறுவனத்தின் உரிமையாளர்கள் ரங்கநாத குப்தா,
அவரது மகன்கள் பிரபன்ன குமார், பிரசன்னா குமார், இவர்களது
உறவினர் கோட்டா சுரேஷ் ஆகியோர் மீது கடந்த அக்டோபர் மாதம்
போலீஸ் வழக்குப்பதிவு செய்ததே தவிர கைது செய்யவில்லை.

இப்போதும் இவர்கள் எங்கேயிருக்கிறார்கள் என்கிற விவரம்
வெளியாகவில்லை.

தொடர்ந்து நகை நிறுவன மோசடிகள் வெளிச்சத்துக்கு வரும்
நிலையில் வங்கிகளின் வாராக் கடன் தொடர்ந்து அதிகரித்துக்
கொண்டே போகிறது. கடந்த 2016 மார்ச் மாதம் 7.8 சதவவிகிதமாக
இருந்த வாராக்கடன் டிசம்பரில் 9.1 சதவிகிதமாக அதிகரித்தது.

திருத்தி அமைக்கப்பட்ட கடன் அளவையும் சேர்த்தால், வாராக்
கடன் அளவு 12 சதவிகிதத்துக்கும் மேல் இருக்கும்.
வளரும் நாடுகளில் வாராக் கடன் அதிகமாக இருக்கும் நாடாக
இந்தியா இருக்கிறது.

வரும் காலங்களில் வங்கிகள் கடன் கொடுப்பதை குறைத்துக்
கொண்டாலும், வங்கிகளின் நிதி நிலைமை சீரடைய இன்னும்
பல ஆண்டுகள் பிடிக்கும்.

இந்த வாராக்கடன்களில் முன்னணியில் இருப்பது பொதுத்துறை
வங்கிகள்தான். பொதுத்துறை வங்கிகளில் கிட்டத்தட்ட
8 சதவிகிதம் வாராக்கடன் இருக்கும் நிலையில், தனியார்
வங்கிகளில் வாரக்கடனின் அளவுக்கு 1.5 சதவிகிதத்துக்குள்தான்
இருக்கிறது.

2012 முதல் பொதுத்துறை வங்கிகளின் வாராக் கடன் சதவிகிதம்
உயர்வதற்கு பொருளாதார மந்த நிலை மிக முக்கியக் காரணம்
என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள்.

நகைச் சீட்டுகள் வேண்டாம்!

மக்கள் நகைக்கடைகளில் சீட்டு கட்டும் பழக்கத்தை கைவிட
வேண்டும் என்கிறார்கள் நிபுணர்கள். நகைக்கடையில் நகை
சீட்டு மோசடி நடந்தால் திரும்ப பணம் கிடைப்பது என்பது
எட்டாக் கனிதான் என்கிறார்கள்.

தங்க நகை சேமிப்புத் திட்டத்துக்கு பதிலாக கோல்ட் இடிஎஃப்,
தங்க மியூச்சுவல் ஃபண்ட் திட்டம், மத்திய அரசின் சேமிப்புத்
திட்டம் போன்றவற்றில் முதலீடு செய்யலாம்.

இந்த திட்டங்களில் ஏமாற்றமுடியாது என்பதோடு மிகவும்
வெளிப்படையான திட்டங்கள் இவை.
-
---------------------------------------
நன்றி- விகடன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 நாதெள்ளாவில் நடந்தது என்ன? மோசடியில் நகை நிறுவனங்கள்... அலறும் வங்கிகள்! Empty Re: நாதெள்ளாவில் நடந்தது என்ன? மோசடியில் நகை நிறுவனங்கள்... அலறும் வங்கிகள்!

Post by M.Jagadeesan Sun Mar 25, 2018 4:11 pm

வங்கிகளில் கொள்ளையடித்துவிட்டு வெளிநாட்டிற்குத் தப்பிச்செல்வது இப்போது Fashion ஆகிவிட்டது .இவர்களுக்கெல்லாம் வழிகாட்டி மல்லையாதான் !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

 நாதெள்ளாவில் நடந்தது என்ன? மோசடியில் நகை நிறுவனங்கள்... அலறும் வங்கிகள்! Empty Re: நாதெள்ளாவில் நடந்தது என்ன? மோசடியில் நகை நிறுவனங்கள்... அலறும் வங்கிகள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum