புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கதை: சிங்கம் கொடுத்த பரிசு!  I_vote_lcapகதை: சிங்கம் கொடுத்த பரிசு!  I_voting_barகதை: சிங்கம் கொடுத்த பரிசு!  I_vote_rcap 
5 Posts - 63%
heezulia
கதை: சிங்கம் கொடுத்த பரிசு!  I_vote_lcapகதை: சிங்கம் கொடுத்த பரிசு!  I_voting_barகதை: சிங்கம் கொடுத்த பரிசு!  I_vote_rcap 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
கதை: சிங்கம் கொடுத்த பரிசு!  I_vote_lcapகதை: சிங்கம் கொடுத்த பரிசு!  I_voting_barகதை: சிங்கம் கொடுத்த பரிசு!  I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கதை: சிங்கம் கொடுத்த பரிசு!


   
   

Page 1 of 2 1, 2  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Mar 22, 2018 4:10 pm

கதை: சிங்கம் கொடுத்த பரிசு!  I8DAe8A8QV2BXj6q7qhI+

சிங்க ராஜா வேட்டைக்குப் போனபோது ஆபத்தில் மாட்டிக்கொண்டார். வேட்டைக்காரர்கள் விரித்த வலையில் வசமாகச் சிக்கிக்கொண்டார்.

வலையிலிருந்து வெளியேற முடியாமல் உறுமினார். சத்தத்தைக் கேட்டு ஓடிவந்தது எலி.

"எலியே, என்னைக் காப்பாற்று” என்று பரிதாபமாகக் கேட்டார் சிங்க ராஜா.

"இப்படி மாட்டிக் கொண்டீர்களே ராஜா, இதோ நான் உங்களை விடுவிக்கிறேன்" என்று பற்களால் வலையைக் கடித்து, ராஜாவை விடுவித்தது.

"அன்பு எலியே, உருவத்தில் சிறியவனாயினும் இன்று நீ செய்த உதவி மிகவும் பெரியது. மகத்தானது. என்னைக் காப்பாற்றிய உனக்கு, இல்லை இல்லை உன் இனத்துக்கே நன்மை செய்யப் போகிறேன். இன்று முதல் நீங்கள் அச்சமின்றி வாழலாம். யாரும் உங்களை வேட்டையாடவோ, பிடிக்கவோ கூடாது என்று உத்தரவிடப் போகிறேன்” என்று நன்றியோடு சொன்னார் சிங்க ராஜா.

மறுநாள் அரசவையில் தன்னைக் காப்பாற்றிய எலிக்கு நன்றி தெரிவிக்கும் வண்ணம் ஒரு புதிய சட்டத்தைக் கொண்டுவந்தார் சிங்க ராஜா. எலிகளை யாரும் கொல்லவோ, வேட்டையாடவோ கூடாது என்று தடை விதித்தார். அவ்வாறு செய்வது தேசத் துரோகம் என்றும் அறிவித்தார்.

இதைக் கேட்டு அனைத்து விலங்குகளும் திடுக்கிட்டன. சிங்க ராஜாவின் புத்தி இப்படிப் போகிறதே? எலிகள் பெருகினால் காட்டுக்கு நாசம் விளையுமே என்று பேசிக்கொண்டன.

ராஜாவின் அறிவிப்பால் எலிகளுக்கு சந்தோஷம். எதிரிகளே இல்லாததால் இஷ்டத்துக்கு ஆட்டம் போட்டன. எறும்புகள் சேர்த்து வைத்த உணவுகளைக் கொள்ளை அடித்தன. பொருள்களை நாசம் செய்தன. இவற்றின் ஆட்டம் பூனைகளுக்கும் பாம்புகளுக்கும் தெரிய வந்தபோதும் ஒன்றும் செய்ய முடியாமல் தவித்தன. ஒருகட்டத்தில் பூனைகளின் முதுகிலேயே சவாரி செய்ய ஆரம்பித்தன எலிகள். ஆனால் அவை ராஜாவின் அரண்மனைக்குள் மட்டும் நுழையவே இல்லை.

எல்லா விலங்குகளும் நரியிடம் சென்று, எலிகளின் அத்துமீறல்களிலிருந்து காக்க வேண்டும் என்று முறையிட்டன. நரியும் எலிகளின் அராஜகம் அதிகமாகிவிட்டதை ஒப்புக்கொண்டு, ஒரு முடிவு கட்டுவதாக வாக்குக் கொடுத்தது.

நன்றி
தி இந்து

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Mar 22, 2018 4:12 pm

எலிகளின் தலைவனைச் சந்தித்து நரி.

"எலிகளின் தலைவா, சிங்க ராஜா தங்களின் இனத்துக்கு நன்றி தெரிவிக்கும் வண்ணம் அரண்மனை விருந்துக்கு அழைத்துள்ளார். தாங்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும்" என்று கூறியது.

மகிழ்ச்சியுடன் வருவதாக எலிகளின் தலைவனும் தெரிவித்தது.

மறுநாள் எலிகள் படையெடுத்து வருவதாகச் சிங்கத்துக்குத் தகவல் தந்தது நரி.

"என்ன, எலிகள் படையெடுப்பா? அதுவும் என் மீதா? சிரிப்பாக இருக்கிறது” என்றது சிங்க ராஜா.
கதை: சிங்கம் கொடுத்த பரிசு!  CxEQaDlySOW51maFPW2H+
"உண்மைதான் மகாராஜா! எலிகளுக்குத் தாங்கள் அளித்த சலுகைகள் கண்ணைக் கட்டிவிட்டது. அகம்பாவத்தில் உங்களை விரட்டி விட்டு ஆட்சியில் அமர ஆசைப்படுகின்றன. அதனால்தான் படையுடன் வருகின்றன"என்றது நரி.

”உண்மையா?"

"உப்பரிகையில் இருந்து பாருங்கள். எலிகள் திரண்டு வருவது தெரியும். அவற்றை எச்சரித்துவிட்டு வருகிறேன்” என்று கிளம்பியது நரி.

எலிகளிடம் சென்ற நரி, "இது உங்கள் வீடு. விருந்தினரான உங்களைக் கவுரவிப்பதில் மகாராஜா மகிழ்கிறார். எனவே உங்கள் இஷ்டம்போல் தேவையானதைக் கேட்காமலேயே எடுத்துக்கொள்ளுங்கள். அத்துடன் உள்ளே நுழைந்ததும் மகாராஜா மீது தாவி முத்தமிட வேண்டும். அதுதான் அவருக்குப் பிடிக்கும் " என்று சொல்லிவிட்டு, சிங்கத்திடம் சென்றது.

”மகாராஜா, அந்த எலிகளின் அட்டகாசம் அடங்காது போலிருக்கிறது. உங்கள் அரசர் மீது பாய்ந்து கடித்துவிடுகிறோம் என்று குரல் கொடுக்கின்றன. அத்துடன் நமது அரண்மனையையும் சூறையாடுகின்றன பாருங்கள்" என்று நடக்காத ஒன்றை நடந்ததுபோல் சொன்னது நரி.

எட்டிப் பார்த்த சிங்கத்துக்கு எலிகளின் அட்டகாசம் எரிச்சலைத் தந்தது.

"என் உயிரைக் காப்பாற்றியதற்காக எலி இனத்துக்கே எவ்வளவு நன்மை செய்திருக்கிறேன். அதைப் புரிந்துகொள்ளாமல் என்னிடமே தங்கள் வேலையைக் காட்டுகின்றனவா? என்ன செய்கிறேன் பாருங்கள்” என்றபடி கோபத்துடன் சிங்க ராஜா வெளியே வந்தார்.

உடனே எலிகள் கூட்டமாகச் சேர்ந்து சிங்கத்தை முத்தமிட முயன்றன.

“ஐயோ, என்னைக் கொல்ல வருகின்றனவே இந்த எலிகள்… பூனைகளே எலிகளை வேட்டையாடுங்கள்”” என்று உத்தரவிட்டார் சிங்க ராஜா.

பூனைகள் ஆவலோடு பாய்ந்துவந்தன. ஒரு நொடி குழப்பம் அடைந்த எலிகள், உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வேகமாக ஓடி மறைந்தன.

“நல்ல வேளை, நான் தப்பித்தேன். என்னைக் காப்பாற்றிய பூனைகளுக்கு ஏதாவது...?” என்று சிங்க ராஜா சொல்லி முடிப்பதற்குள், சிங்க ராஜாவின் வாயைப் பொத்தினார் சிங்க ராணி.

நிம்மதியாகச் சென்றது நரி.





SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Mar 22, 2018 4:15 pm

இது ஏதோ தமிழ்நாடு சட்டமன்ற நிகழ்வு போல  இருக்கு



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Mar 22, 2018 4:27 pm

SK wrote:இது ஏதோ தமிழ்நாடு சட்டமன்ற நிகழ்வு போல  இருக்கு
மேற்கோள் செய்த பதிவு: 1263439
எப்படிங்க செந்தில் சிரிக்காமல், யோசிக்காமல்
சட்டென்று இப்படி நஞ்சென்ற குத்து விட
முடிகிறது உங்களை பாராட்டியே ஆக வேண்டும்.


SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Mar 22, 2018 4:35 pm

இது தான் நகைச்சுவை பதிவாளர்கள் வேலை ஐயா



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Mar 23, 2018 12:25 pm

SK wrote:இது தான் நகைச்சுவை பதிவாளர்கள் வேலை ஐயா
மேற்கோள் செய்த பதிவு: 1263453
உங்கள் நகைச்சுவை பதிவுகள் தொடரட்டும் நண்பா.

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Mar 24, 2018 12:39 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
SK wrote:இது தான் நகைச்சுவை பதிவாளர்கள் வேலை ஐயா
மேற்கோள் செய்த பதிவு: 1263453
உங்கள் நகைச்சுவை பதிவுகள் தொடரட்டும் நண்பா.
மேற்கோள் செய்த பதிவு: 1263608

நன்றி ஐயா
கதை: சிங்கம் கொடுத்த பரிசு!  1571444738 கதை: சிங்கம் கொடுத்த பரிசு!  1571444738



ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Mar 24, 2018 3:24 pm

ஹா ஹா அருமை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Mar 24, 2018 5:04 pm

சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Mar 24, 2018 8:48 pm

ஜாஹீதாபானு wrote:ஹா ஹா அருமை
மேற்கோள் செய்த பதிவு: 1263818
சிரிப்பில் கூட' ஹ' விடவில்லை ஜாஹீதா.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக