ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கதை: சிங்கம் கொடுத்த பரிசு!

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கதை: சிங்கம் கொடுத்த பரிசு!  Empty கதை: சிங்கம் கொடுத்த பரிசு!

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Mar 22, 2018 4:10 pm

கதை: சிங்கம் கொடுத்த பரிசு!  I8DAe8A8QV2BXj6q7qhI+

சிங்க ராஜா வேட்டைக்குப் போனபோது ஆபத்தில் மாட்டிக்கொண்டார். வேட்டைக்காரர்கள் விரித்த வலையில் வசமாகச் சிக்கிக்கொண்டார்.

வலையிலிருந்து வெளியேற முடியாமல் உறுமினார். சத்தத்தைக் கேட்டு ஓடிவந்தது எலி.

"எலியே, என்னைக் காப்பாற்று” என்று பரிதாபமாகக் கேட்டார் சிங்க ராஜா.

"இப்படி மாட்டிக் கொண்டீர்களே ராஜா, இதோ நான் உங்களை விடுவிக்கிறேன்" என்று பற்களால் வலையைக் கடித்து, ராஜாவை விடுவித்தது.

"அன்பு எலியே, உருவத்தில் சிறியவனாயினும் இன்று நீ செய்த உதவி மிகவும் பெரியது. மகத்தானது. என்னைக் காப்பாற்றிய உனக்கு, இல்லை இல்லை உன் இனத்துக்கே நன்மை செய்யப் போகிறேன். இன்று முதல் நீங்கள் அச்சமின்றி வாழலாம். யாரும் உங்களை வேட்டையாடவோ, பிடிக்கவோ கூடாது என்று உத்தரவிடப் போகிறேன்” என்று நன்றியோடு சொன்னார் சிங்க ராஜா.

மறுநாள் அரசவையில் தன்னைக் காப்பாற்றிய எலிக்கு நன்றி தெரிவிக்கும் வண்ணம் ஒரு புதிய சட்டத்தைக் கொண்டுவந்தார் சிங்க ராஜா. எலிகளை யாரும் கொல்லவோ, வேட்டையாடவோ கூடாது என்று தடை விதித்தார். அவ்வாறு செய்வது தேசத் துரோகம் என்றும் அறிவித்தார்.

இதைக் கேட்டு அனைத்து விலங்குகளும் திடுக்கிட்டன. சிங்க ராஜாவின் புத்தி இப்படிப் போகிறதே? எலிகள் பெருகினால் காட்டுக்கு நாசம் விளையுமே என்று பேசிக்கொண்டன.

ராஜாவின் அறிவிப்பால் எலிகளுக்கு சந்தோஷம். எதிரிகளே இல்லாததால் இஷ்டத்துக்கு ஆட்டம் போட்டன. எறும்புகள் சேர்த்து வைத்த உணவுகளைக் கொள்ளை அடித்தன. பொருள்களை நாசம் செய்தன. இவற்றின் ஆட்டம் பூனைகளுக்கும் பாம்புகளுக்கும் தெரிய வந்தபோதும் ஒன்றும் செய்ய முடியாமல் தவித்தன. ஒருகட்டத்தில் பூனைகளின் முதுகிலேயே சவாரி செய்ய ஆரம்பித்தன எலிகள். ஆனால் அவை ராஜாவின் அரண்மனைக்குள் மட்டும் நுழையவே இல்லை.

எல்லா விலங்குகளும் நரியிடம் சென்று, எலிகளின் அத்துமீறல்களிலிருந்து காக்க வேண்டும் என்று முறையிட்டன. நரியும் எலிகளின் அராஜகம் அதிகமாகிவிட்டதை ஒப்புக்கொண்டு, ஒரு முடிவு கட்டுவதாக வாக்குக் கொடுத்தது.

நன்றி
தி இந்து


Last edited by பழ.முத்துராமலிங்கம் on Thu Mar 22, 2018 4:13 pm; edited 1 time in total
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

கதை: சிங்கம் கொடுத்த பரிசு!  Empty Re: கதை: சிங்கம் கொடுத்த பரிசு!

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Mar 22, 2018 4:12 pm

எலிகளின் தலைவனைச் சந்தித்து நரி.

"எலிகளின் தலைவா, சிங்க ராஜா தங்களின் இனத்துக்கு நன்றி தெரிவிக்கும் வண்ணம் அரண்மனை விருந்துக்கு அழைத்துள்ளார். தாங்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும்" என்று கூறியது.

மகிழ்ச்சியுடன் வருவதாக எலிகளின் தலைவனும் தெரிவித்தது.

மறுநாள் எலிகள் படையெடுத்து வருவதாகச் சிங்கத்துக்குத் தகவல் தந்தது நரி.

"என்ன, எலிகள் படையெடுப்பா? அதுவும் என் மீதா? சிரிப்பாக இருக்கிறது” என்றது சிங்க ராஜா.
கதை: சிங்கம் கொடுத்த பரிசு!  CxEQaDlySOW51maFPW2H+
"உண்மைதான் மகாராஜா! எலிகளுக்குத் தாங்கள் அளித்த சலுகைகள் கண்ணைக் கட்டிவிட்டது. அகம்பாவத்தில் உங்களை விரட்டி விட்டு ஆட்சியில் அமர ஆசைப்படுகின்றன. அதனால்தான் படையுடன் வருகின்றன"என்றது நரி.

”உண்மையா?"

"உப்பரிகையில் இருந்து பாருங்கள். எலிகள் திரண்டு வருவது தெரியும். அவற்றை எச்சரித்துவிட்டு வருகிறேன்” என்று கிளம்பியது நரி.

எலிகளிடம் சென்ற நரி, "இது உங்கள் வீடு. விருந்தினரான உங்களைக் கவுரவிப்பதில் மகாராஜா மகிழ்கிறார். எனவே உங்கள் இஷ்டம்போல் தேவையானதைக் கேட்காமலேயே எடுத்துக்கொள்ளுங்கள். அத்துடன் உள்ளே நுழைந்ததும் மகாராஜா மீது தாவி முத்தமிட வேண்டும். அதுதான் அவருக்குப் பிடிக்கும் " என்று சொல்லிவிட்டு, சிங்கத்திடம் சென்றது.

”மகாராஜா, அந்த எலிகளின் அட்டகாசம் அடங்காது போலிருக்கிறது. உங்கள் அரசர் மீது பாய்ந்து கடித்துவிடுகிறோம் என்று குரல் கொடுக்கின்றன. அத்துடன் நமது அரண்மனையையும் சூறையாடுகின்றன பாருங்கள்" என்று நடக்காத ஒன்றை நடந்ததுபோல் சொன்னது நரி.

எட்டிப் பார்த்த சிங்கத்துக்கு எலிகளின் அட்டகாசம் எரிச்சலைத் தந்தது.

"என் உயிரைக் காப்பாற்றியதற்காக எலி இனத்துக்கே எவ்வளவு நன்மை செய்திருக்கிறேன். அதைப் புரிந்துகொள்ளாமல் என்னிடமே தங்கள் வேலையைக் காட்டுகின்றனவா? என்ன செய்கிறேன் பாருங்கள்” என்றபடி கோபத்துடன் சிங்க ராஜா வெளியே வந்தார்.

உடனே எலிகள் கூட்டமாகச் சேர்ந்து சிங்கத்தை முத்தமிட முயன்றன.

“ஐயோ, என்னைக் கொல்ல வருகின்றனவே இந்த எலிகள்… பூனைகளே எலிகளை வேட்டையாடுங்கள்”” என்று உத்தரவிட்டார் சிங்க ராஜா.

பூனைகள் ஆவலோடு பாய்ந்துவந்தன. ஒரு நொடி குழப்பம் அடைந்த எலிகள், உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வேகமாக ஓடி மறைந்தன.

“நல்ல வேளை, நான் தப்பித்தேன். என்னைக் காப்பாற்றிய பூனைகளுக்கு ஏதாவது...?” என்று சிங்க ராஜா சொல்லி முடிப்பதற்குள், சிங்க ராஜாவின் வாயைப் பொத்தினார் சிங்க ராணி.

நிம்மதியாகச் சென்றது நரி.



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

கதை: சிங்கம் கொடுத்த பரிசு!  Empty Re: கதை: சிங்கம் கொடுத்த பரிசு!

Post by SK Thu Mar 22, 2018 4:15 pm

இது ஏதோ தமிழ்நாடு சட்டமன்ற நிகழ்வு போல  இருக்கு


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

கதை: சிங்கம் கொடுத்த பரிசு!  Empty Re: கதை: சிங்கம் கொடுத்த பரிசு!

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Mar 22, 2018 4:27 pm

SK wrote:இது ஏதோ தமிழ்நாடு சட்டமன்ற நிகழ்வு போல  இருக்கு
மேற்கோள் செய்த பதிவு: 1263439
எப்படிங்க செந்தில் சிரிக்காமல், யோசிக்காமல்
சட்டென்று இப்படி நஞ்சென்ற குத்து விட
முடிகிறது உங்களை பாராட்டியே ஆக வேண்டும்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

கதை: சிங்கம் கொடுத்த பரிசு!  Empty Re: கதை: சிங்கம் கொடுத்த பரிசு!

Post by SK Thu Mar 22, 2018 4:35 pm

இது தான் நகைச்சுவை பதிவாளர்கள் வேலை ஐயா


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

கதை: சிங்கம் கொடுத்த பரிசு!  Empty Re: கதை: சிங்கம் கொடுத்த பரிசு!

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Mar 23, 2018 12:25 pm

SK wrote:இது தான் நகைச்சுவை பதிவாளர்கள் வேலை ஐயா
மேற்கோள் செய்த பதிவு: 1263453
உங்கள் நகைச்சுவை பதிவுகள் தொடரட்டும் நண்பா.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

கதை: சிங்கம் கொடுத்த பரிசு!  Empty Re: கதை: சிங்கம் கொடுத்த பரிசு!

Post by SK Sat Mar 24, 2018 12:39 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
SK wrote:இது தான் நகைச்சுவை பதிவாளர்கள் வேலை ஐயா
மேற்கோள் செய்த பதிவு: 1263453
உங்கள் நகைச்சுவை பதிவுகள் தொடரட்டும் நண்பா.
மேற்கோள் செய்த பதிவு: 1263608

நன்றி ஐயா
கதை: சிங்கம் கொடுத்த பரிசு!  1571444738 கதை: சிங்கம் கொடுத்த பரிசு!  1571444738


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

கதை: சிங்கம் கொடுத்த பரிசு!  Empty Re: கதை: சிங்கம் கொடுத்த பரிசு!

Post by ஜாஹீதாபானு Sat Mar 24, 2018 3:24 pm

ஹா ஹா அருமை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கதை: சிங்கம் கொடுத்த பரிசு!  Empty Re: கதை: சிங்கம் கொடுத்த பரிசு!

Post by T.N.Balasubramanian Sat Mar 24, 2018 5:04 pm

சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கதை: சிங்கம் கொடுத்த பரிசு!  Empty Re: கதை: சிங்கம் கொடுத்த பரிசு!

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Mar 24, 2018 8:48 pm

ஜாஹீதாபானு wrote:ஹா ஹா அருமை
மேற்கோள் செய்த பதிவு: 1263818
சிரிப்பில் கூட' ஹ' விடவில்லை ஜாஹீதா.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

கதை: சிங்கம் கொடுத்த பரிசு!  Empty Re: கதை: சிங்கம் கொடுத்த பரிசு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum