Latest topics
» கிட்டப்பார்வையைத் தடுக்க….by ayyasamy ram Today at 9:46
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 9:46
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 9:42
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 9:40
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 9:39
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 9:37
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 9:35
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 9:33
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:32
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 9:30
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 0:19
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:56
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 23:31
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 23:29
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:37
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:50
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 19:36
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:28
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:12
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 18:03
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:02
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:40
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:18
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:43
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:22
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:06
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:39
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:08
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 13:48
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 12:17
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 10:47
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:45
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:44
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 10:41
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 10:29
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:23
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:18
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue 2 Jul 2024 - 18:49
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:15
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:10
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:05
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:01
நிகழ்நிலை நிர்வாகிகள்
கனி கொண்டு குணத்தைக் கணிப்போமா?
5 posters
Page 1 of 1
கனி கொண்டு குணத்தைக் கணிப்போமா?
கனி கொண்டு குணத்தைக் கணிப்போமா?
கனி ஜோதிடம் தெரியுமா உங்களுக்கு? கிளி ஜோதிடம் தெரியும், அது என்ன கனி
ஜோதிடம் என்கிறீர்களா? மேலை நாட்டில் இப்பொழுது பரபரப்பாக உலவி வருவது கனி
ஜோதிடம். நாம் ஒருவரின் ராசி, நட்சத்திரத்தைக் கொண்டு ஒருவரைப் பற்றிக்
கணிப்பது போல் உங்களுக்குப் பிடித்தமான கனியைக் கொண்டு உங்கள் குணத்தைக்
கணிப்பதுதான் இந்த ஜோதிடம்.
கீழே
பல்வேறு கனிவகைகளும் அவற்றை விரும்புபவர்களின் பொதுவான தன்மைகளும்
கொடுக்கப்பட்டுள்ளன. உங்களுக்குப் பிடித்த பழம் என்ன, பலன் பொருந்துகிறதா
என்று பார்த்துக்கொள்ளுங்களேன்!!
மாம்பழப்பிரியரா நீங்கள்? அப்படியானால்....நீங்கள் கொஞ்சம் தீவிரமான
ஆசாமி. உங்களுக்கு என்றுள்ள விருப்பு வெறுப்புகளை ஒருபோதும் மாற்றிக்கொள்ள
மாட்டீர்கள். உங்களை மாற்ற முயல்வதோ, உங்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்துவதோ
மிகவும் கடினமான விஷயம். உங்களுக்கென்று மாற்றமுடியாத நிலையான எண்ணங்கள்
இருக்கும். எந்தச் சூழ்நிலையையும் உங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைக்க
விரும்புவீர்களே தவிர, சூழ்நிலைக்கேற்றவாறு நீங்கள் வளையமாட்டீர்கள்.
மூளைக்குச் சவால் விடும் பணிகளை அதிகம் விரும்புவீர்கள். கொஞ்சம்...
கொஞ்சமென்ன நிறையவே பிடிவாதக்காரர் நீங்கள். ஆயினும் அன்பான துணையிடம்
கன்றுக்குட்டி போல் பாசமாக இருப்பீர்கள். அன்பை வீட்டுக்குள்ளும் உங்கள்
வலிமையையெல்லாம் வெளியிலும் காட்டுவது உங்கள் தன்மை.
உங்கள்
விருப்பம் வாழைப்பழமானால்.... நீங்கள் அந்த வாழைப்பழம் போலவே
மென்மையானவர். மிகவும் அன்பானவர். பிறருக்கு இரங்கும் மனமும் இதமாகப்
பழகும் குணமும் நிறைந்தவர். ஆனால், உங்களுக்குக் கூச்சம் அதிகம். பிறருடன்
கலந்து பழக மாட்டீர்கள். உங்களுக்கு தன்னம்பிக்கையும் கொஞ்சம் குறைவுதான்.
உங்கள் மென்மையான குணத்தினை சிலர் அவர்களுடைய லாபத்திற்குப்
பயன்படுத்திக்கொண்டு விடுவர். கவனம் தேவை.
உங்கள் துணையை நீங்கள்
மிகவும் பாராட்டிச் சீராட்டி வைத்துக் கொள்வீர்கள். உங்கள் இனிய
குணத்தினால் உங்கள் குடும்ப வாழ்வில் எப்பொழுதும் அமைதியும் அன்பும்
நிலவும்.
ஆரஞ்சுப் பழத்தை விரும்புபர்களுக்கு: அதிக அளவு
பொறுமையும், அதே அளவு திடமான மன உறுதியும் உள்ளவர்கள் நீங்கள். மெதுவாக
நிதானமாக அதேசமயம் கடின உழைப்பின் மூலம் உங்கள் இலக்கை அடைவது உங்கள்
நோக்கமாக இருக்கும். நீங்களும் கூச்ச சுபாவம் உடையவர்தான் என்றாலும்,
நம்பிக்கைக்குரிய நண்பராக இருப்பீர்கள். பொதுவாக சண்டை சச்சரவை
விரும்பாதவர்களாகிய நீங்கள், மிகுந்த அழகுணர்ச்சியை உடையவர். உங்கள்
வாழ்க்கைத்துணையை அதிகக் கவனத்துடன் தேர்ந்தெடுப்பீர்கள்; முழு மனதுடன்
நேசிப்பீர்கள்.
ஆப்பிளை விரும்பும் அன்பர்களே! நீங்கள் உடனடியாக
முடிவெடுத்துத் தடாலடியாகச் செயல் படக்கூடியவர். அதிகமாகச் செலவு
செய்பவர். மிகவும் வெளிப்படையாகப் பேசும் போக்கை உடையவர். ஆனால் எளிதில்
உணர்ச்சிவசப் படுபவர். உற்சாகத்துடன் நடைபோடக்கூடியவராகிய நீங்கள், ஒரு
குழுவிற்குச் சிறந்த தலைவராக விளங்கக் கூடியவர். எப்பொழுதும், முன்னேறிச்
செல்வீர்களே தவிர சுணங்கிவிட மாட்டீர்கள். வாழ்வில் உங்களுக்கு இருக்கும்
ஈடுபாட்டிலும், செயல்பாட்டில் காட்டும் ஆர்வத்திலும் உங்களுக்கு நிகர்
நீங்களேதான். உங்கள் துணையின் உள்ளம் கவர்ந்தவர் நீங்கள்.
அன்னாசியை
ரசித்து ருசிப்பவரா? நீங்கள் எந்த விசயத்தையும் சட்டென ஆலோசித்து
முடிவெடுத்து அதைவிட வேகமாகச் செயல்படுத்துவீர்கள். உங்களுக்கு அதனால்
லாபம் ஏற்படும் எனில் எத்தனை முறை வேண்டுமானாலும் துணிவுடன் தொழிலை
மாற்றிக்கொண்டிருக்கும் பழக்கமுடையவர் நீங்கள். எவ்வளவு பெரிய வேலையாக
இருப்பினும் அதை அருமையாக ஒருங்கிணைத்து நிர்வாகம் செய்யும் திறமையில்
உங்களுக்கு இணையே இல்லை என்று சொல்லலாம். தன்னிறைவுடனும், நேர்மையாகவும்
இருப்பது உங்கள் தன்மை. எளிதில் யாரிடமும் நட்புக் கொள்ள மாட்டீர்கள்
ஆனால் அப்படி நட்புக்கொண்டால் வாழ்நாள் முழுவதும் அந்நட்பைத்
தொடர்வீர்கள். உங்கள் துணைவர் / துணைவி உங்கள் ஒளிவு மறைவில்லாத குணத்தால்
ஈர்க்கப் பட்டாலும், அன்பை வெளிக்காட்டத்தெரியாத உங்கள் தன்மை அவரை
சலிப்படையச் செய்துவிட வாய்ப்புண்டு.
பேரிக்காய்ப்பிரியர்களே!
உங்கள் மனத்தினை ஏதாவது ஒரு காரியத்தில் ஈடுபடுத்தினால், அதை வெற்றிகரமாக
முடித்துவிடுவீர்கள். ஆனால் மனம் வைப்பது என்பது நிரம்பவும் கடினம்
உங்களுக்கு. எதையும் ஏகப்பட்ட உற்சாகத்துடன் தொடங்கிவிட்டு இடையிலே
கைவிடுவது உங்கள் பழக்கம். எதைச் செய்தாலும் உடனடியாகப் பலன் தெரிந்தாக
வேண்டும் என்று துடிப்பீர்கள். அதிக ஆற்றலும் தெம்பும் உடையவர். யாருடனும்
எளிதில் பழகுவதில் வல்லவராக உள்ள நீங்கள் அதை நீண்ட நாள் தொடர்வதில்
அன்னாசிப் பழக்காரருக்கு அப்படியே எதிரிடையானவர்.
திராட்சை
விரும்பிகளே! உங்களைப்பற்றிப் பார்ப்போமா? நீங்கள் பொதுவாக மென்மையாக,
அமைதியாகப் பழகக் கூடியவர். ஆனால் 'சாது மிரண்டால் காடு கொள்ளாது' என்ற
பழமொழி உங்களைப் பற்றித்தான் எழுந்ததோ என்னவோ! கோபம் பொங்கி வரும் அதே
வேகத்தில் அடங்கியும் விடுவது உங்கள் சிறப்பியல்பு. அழகினை ஆராதிப்பவர்
நீங்கள். மலரோ, ஓவியமோ, குழந்தைகளோ மற்ற மனிதர்களோ எதுவானாலும் அழகாக
இருந்தால் இரசிப்பதும் பாராட்டுவதும் உங்களுக்கு இயல்பானது. உங்கள்
தோழமையான அணுகுமுறையாலும், வெளிப்படையாகப் பாராட்டும் குணத்தினாலும்,
உங்களுடைய நட்பு பலராலும் விரும்பப் படும். உங்கள் வட்டத்தில் நீங்கள்
பிரபலமானவராக இருப்பீர்கள். நீங்கள் செய்யும் எந்தச் செயலாக இருந்தாலும்
அதை ஏனோதானோ என்று செய்யாமல் இரசித்துச் செய்வீர்கள். வாழ்வை
உற்சாகத்துடனும், புத்துணர்வுடனும் எதிகொள்வீர்கள். என்ன? உங்கள்
வாழ்க்கைத்துணையும் அதே போல் இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பீர்கள்.
அப்படியில்லை என்றால் கொஞ்சம் மனத்தை வருத்திக்கொள்வீர்கள்... கொஞ்ச
நேரத்திற்கு. பின் உங்கள் பழைய துள்ளல் உங்களைத் தொத்திக்கொண்டுவிடும்.
அவ்வளவுதான்.
செர்ரிப்பழமா உங்கள் தேர்வு? உங்களுக்குப் பிடித்த
இடம் உங்கள் வீடுதான். குடும்பமும் நெருங்கிய உறவுகளும் சூழ இருப்பதையே
நீங்கள் அதிகம் விரும்புவீர்கள். ஆனால் உங்கள் தொழிலில் உங்களுக்கென்று
ஒரு நிலையான இடத்தைப் பிடிக்க இயலாது. எப்பொழுதும் ஏற்றமும் இறக்கமுமாகவே
இருக்கும். சிறுகச் சிறுகத்தான் உங்களால் சேமிக்கக் கூட முடியும்.
உங்களுக்குக் கற்பனைத்திறனும் படைப்பாற்றலும் அதிகம் உண்டு. ஒரே மாதிரியான
சலிப்பு தரும் வேலைகளை விரும்பமாட்டீர்கள். சொல்லப்போனால், விளம்பரத்துறை,
ஓவியம், கலைத்துறைகளில்தான் உங்கள் நாட்டம். உங்கள் துணைக்கு உண்மையானவராக
இருப்பீர்கள். ஆனால் அன்பை வெளிக்காட்ட நீங்கள் இன்னும் கொஞ்சம்
கற்றுக்கொள்ளவேண்டும்.
சீதாப்பழத்திற்கா உங்கள் வாக்கு?
அப்படியென்றால், நீங்கள் கொஞ்சம் கட்டுப்பெட்டி. அடக்கமானவர். எதையும்
ஆழ்ந்து ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்துத்தான் முடிவு செய்வீர்கள். ஒரு
இலக்கை நிர்ணயித்துக் கொண்டு, அதைக் கண்டிப்பாக அடைந்து விடுவீர்கள்.
ஆனால், அவசரமோ பதற்றமோ உங்கள் பக்கத்தில் கூட வராது. நிதானமும் பொறுமையும்
மிக்கவர். விரிவாக விளக்கப் படவேண்டிய பணி அல்லது புள்ளிவிவரங்கள்
தொடர்பான பணிதான் உங்களுக்கு மிகவும் பிடித்தமான, உங்களுக்குப் பொருத்தமான
பணியாக இருக்கும். புற அழகு அல்லது மற்ற குணங்களை விட அறிவுத்திறன்
வாய்ந்தவரே துணையாக இருக்கவேண்டும் என்று விரும்புவீர்கள். நீங்கள் எந்தச்
செயலைச் செய்தாலும் கச்சிதமாக நேர்த்தியாக இருப்பது போல் பிறரும்
இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பதால் அடுத்தவர்களிடம் நிறையக் குற்றம்
கண்டுபிடித்தபடியே இருப்பது உங்கள் குறைபாடு. கொஞ்சம் வெட்கமும் கூச்சமும்
நிறைந்தவராக இருப்பதால், உங்கள் பிரியத்தை யாரிடமும் காட்டிக்கொள்வது
உங்களுக்கு மிகவும் சிரமமான காரியம்.
இனி என்ன? உங்கள் நண்பர்
அல்லது வாழ்க்கைத்துணைக்குப் பிடித்த பழம் என்ன என்று தெரிந்துகொண்டு,
அவருடைய தன்மையைப் பற்றிச் சொல்லி வியக்க வையுங்களேன்.
கனி ஜோதிடம் தெரியுமா உங்களுக்கு? கிளி ஜோதிடம் தெரியும், அது என்ன கனி
ஜோதிடம் என்கிறீர்களா? மேலை நாட்டில் இப்பொழுது பரபரப்பாக உலவி வருவது கனி
ஜோதிடம். நாம் ஒருவரின் ராசி, நட்சத்திரத்தைக் கொண்டு ஒருவரைப் பற்றிக்
கணிப்பது போல் உங்களுக்குப் பிடித்தமான கனியைக் கொண்டு உங்கள் குணத்தைக்
கணிப்பதுதான் இந்த ஜோதிடம்.
கீழே
பல்வேறு கனிவகைகளும் அவற்றை விரும்புபவர்களின் பொதுவான தன்மைகளும்
கொடுக்கப்பட்டுள்ளன. உங்களுக்குப் பிடித்த பழம் என்ன, பலன் பொருந்துகிறதா
என்று பார்த்துக்கொள்ளுங்களேன்!!
மாம்பழப்பிரியரா நீங்கள்? அப்படியானால்....நீங்கள் கொஞ்சம் தீவிரமான
ஆசாமி. உங்களுக்கு என்றுள்ள விருப்பு வெறுப்புகளை ஒருபோதும் மாற்றிக்கொள்ள
மாட்டீர்கள். உங்களை மாற்ற முயல்வதோ, உங்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்துவதோ
மிகவும் கடினமான விஷயம். உங்களுக்கென்று மாற்றமுடியாத நிலையான எண்ணங்கள்
இருக்கும். எந்தச் சூழ்நிலையையும் உங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைக்க
விரும்புவீர்களே தவிர, சூழ்நிலைக்கேற்றவாறு நீங்கள் வளையமாட்டீர்கள்.
மூளைக்குச் சவால் விடும் பணிகளை அதிகம் விரும்புவீர்கள். கொஞ்சம்...
கொஞ்சமென்ன நிறையவே பிடிவாதக்காரர் நீங்கள். ஆயினும் அன்பான துணையிடம்
கன்றுக்குட்டி போல் பாசமாக இருப்பீர்கள். அன்பை வீட்டுக்குள்ளும் உங்கள்
வலிமையையெல்லாம் வெளியிலும் காட்டுவது உங்கள் தன்மை.
உங்கள்
விருப்பம் வாழைப்பழமானால்.... நீங்கள் அந்த வாழைப்பழம் போலவே
மென்மையானவர். மிகவும் அன்பானவர். பிறருக்கு இரங்கும் மனமும் இதமாகப்
பழகும் குணமும் நிறைந்தவர். ஆனால், உங்களுக்குக் கூச்சம் அதிகம். பிறருடன்
கலந்து பழக மாட்டீர்கள். உங்களுக்கு தன்னம்பிக்கையும் கொஞ்சம் குறைவுதான்.
உங்கள் மென்மையான குணத்தினை சிலர் அவர்களுடைய லாபத்திற்குப்
பயன்படுத்திக்கொண்டு விடுவர். கவனம் தேவை.
உங்கள் துணையை நீங்கள்
மிகவும் பாராட்டிச் சீராட்டி வைத்துக் கொள்வீர்கள். உங்கள் இனிய
குணத்தினால் உங்கள் குடும்ப வாழ்வில் எப்பொழுதும் அமைதியும் அன்பும்
நிலவும்.
ஆரஞ்சுப் பழத்தை விரும்புபர்களுக்கு: அதிக அளவு
பொறுமையும், அதே அளவு திடமான மன உறுதியும் உள்ளவர்கள் நீங்கள். மெதுவாக
நிதானமாக அதேசமயம் கடின உழைப்பின் மூலம் உங்கள் இலக்கை அடைவது உங்கள்
நோக்கமாக இருக்கும். நீங்களும் கூச்ச சுபாவம் உடையவர்தான் என்றாலும்,
நம்பிக்கைக்குரிய நண்பராக இருப்பீர்கள். பொதுவாக சண்டை சச்சரவை
விரும்பாதவர்களாகிய நீங்கள், மிகுந்த அழகுணர்ச்சியை உடையவர். உங்கள்
வாழ்க்கைத்துணையை அதிகக் கவனத்துடன் தேர்ந்தெடுப்பீர்கள்; முழு மனதுடன்
நேசிப்பீர்கள்.
ஆப்பிளை விரும்பும் அன்பர்களே! நீங்கள் உடனடியாக
முடிவெடுத்துத் தடாலடியாகச் செயல் படக்கூடியவர். அதிகமாகச் செலவு
செய்பவர். மிகவும் வெளிப்படையாகப் பேசும் போக்கை உடையவர். ஆனால் எளிதில்
உணர்ச்சிவசப் படுபவர். உற்சாகத்துடன் நடைபோடக்கூடியவராகிய நீங்கள், ஒரு
குழுவிற்குச் சிறந்த தலைவராக விளங்கக் கூடியவர். எப்பொழுதும், முன்னேறிச்
செல்வீர்களே தவிர சுணங்கிவிட மாட்டீர்கள். வாழ்வில் உங்களுக்கு இருக்கும்
ஈடுபாட்டிலும், செயல்பாட்டில் காட்டும் ஆர்வத்திலும் உங்களுக்கு நிகர்
நீங்களேதான். உங்கள் துணையின் உள்ளம் கவர்ந்தவர் நீங்கள்.
அன்னாசியை
ரசித்து ருசிப்பவரா? நீங்கள் எந்த விசயத்தையும் சட்டென ஆலோசித்து
முடிவெடுத்து அதைவிட வேகமாகச் செயல்படுத்துவீர்கள். உங்களுக்கு அதனால்
லாபம் ஏற்படும் எனில் எத்தனை முறை வேண்டுமானாலும் துணிவுடன் தொழிலை
மாற்றிக்கொண்டிருக்கும் பழக்கமுடையவர் நீங்கள். எவ்வளவு பெரிய வேலையாக
இருப்பினும் அதை அருமையாக ஒருங்கிணைத்து நிர்வாகம் செய்யும் திறமையில்
உங்களுக்கு இணையே இல்லை என்று சொல்லலாம். தன்னிறைவுடனும், நேர்மையாகவும்
இருப்பது உங்கள் தன்மை. எளிதில் யாரிடமும் நட்புக் கொள்ள மாட்டீர்கள்
ஆனால் அப்படி நட்புக்கொண்டால் வாழ்நாள் முழுவதும் அந்நட்பைத்
தொடர்வீர்கள். உங்கள் துணைவர் / துணைவி உங்கள் ஒளிவு மறைவில்லாத குணத்தால்
ஈர்க்கப் பட்டாலும், அன்பை வெளிக்காட்டத்தெரியாத உங்கள் தன்மை அவரை
சலிப்படையச் செய்துவிட வாய்ப்புண்டு.
பேரிக்காய்ப்பிரியர்களே!
உங்கள் மனத்தினை ஏதாவது ஒரு காரியத்தில் ஈடுபடுத்தினால், அதை வெற்றிகரமாக
முடித்துவிடுவீர்கள். ஆனால் மனம் வைப்பது என்பது நிரம்பவும் கடினம்
உங்களுக்கு. எதையும் ஏகப்பட்ட உற்சாகத்துடன் தொடங்கிவிட்டு இடையிலே
கைவிடுவது உங்கள் பழக்கம். எதைச் செய்தாலும் உடனடியாகப் பலன் தெரிந்தாக
வேண்டும் என்று துடிப்பீர்கள். அதிக ஆற்றலும் தெம்பும் உடையவர். யாருடனும்
எளிதில் பழகுவதில் வல்லவராக உள்ள நீங்கள் அதை நீண்ட நாள் தொடர்வதில்
அன்னாசிப் பழக்காரருக்கு அப்படியே எதிரிடையானவர்.
திராட்சை
விரும்பிகளே! உங்களைப்பற்றிப் பார்ப்போமா? நீங்கள் பொதுவாக மென்மையாக,
அமைதியாகப் பழகக் கூடியவர். ஆனால் 'சாது மிரண்டால் காடு கொள்ளாது' என்ற
பழமொழி உங்களைப் பற்றித்தான் எழுந்ததோ என்னவோ! கோபம் பொங்கி வரும் அதே
வேகத்தில் அடங்கியும் விடுவது உங்கள் சிறப்பியல்பு. அழகினை ஆராதிப்பவர்
நீங்கள். மலரோ, ஓவியமோ, குழந்தைகளோ மற்ற மனிதர்களோ எதுவானாலும் அழகாக
இருந்தால் இரசிப்பதும் பாராட்டுவதும் உங்களுக்கு இயல்பானது. உங்கள்
தோழமையான அணுகுமுறையாலும், வெளிப்படையாகப் பாராட்டும் குணத்தினாலும்,
உங்களுடைய நட்பு பலராலும் விரும்பப் படும். உங்கள் வட்டத்தில் நீங்கள்
பிரபலமானவராக இருப்பீர்கள். நீங்கள் செய்யும் எந்தச் செயலாக இருந்தாலும்
அதை ஏனோதானோ என்று செய்யாமல் இரசித்துச் செய்வீர்கள். வாழ்வை
உற்சாகத்துடனும், புத்துணர்வுடனும் எதிகொள்வீர்கள். என்ன? உங்கள்
வாழ்க்கைத்துணையும் அதே போல் இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பீர்கள்.
அப்படியில்லை என்றால் கொஞ்சம் மனத்தை வருத்திக்கொள்வீர்கள்... கொஞ்ச
நேரத்திற்கு. பின் உங்கள் பழைய துள்ளல் உங்களைத் தொத்திக்கொண்டுவிடும்.
அவ்வளவுதான்.
செர்ரிப்பழமா உங்கள் தேர்வு? உங்களுக்குப் பிடித்த
இடம் உங்கள் வீடுதான். குடும்பமும் நெருங்கிய உறவுகளும் சூழ இருப்பதையே
நீங்கள் அதிகம் விரும்புவீர்கள். ஆனால் உங்கள் தொழிலில் உங்களுக்கென்று
ஒரு நிலையான இடத்தைப் பிடிக்க இயலாது. எப்பொழுதும் ஏற்றமும் இறக்கமுமாகவே
இருக்கும். சிறுகச் சிறுகத்தான் உங்களால் சேமிக்கக் கூட முடியும்.
உங்களுக்குக் கற்பனைத்திறனும் படைப்பாற்றலும் அதிகம் உண்டு. ஒரே மாதிரியான
சலிப்பு தரும் வேலைகளை விரும்பமாட்டீர்கள். சொல்லப்போனால், விளம்பரத்துறை,
ஓவியம், கலைத்துறைகளில்தான் உங்கள் நாட்டம். உங்கள் துணைக்கு உண்மையானவராக
இருப்பீர்கள். ஆனால் அன்பை வெளிக்காட்ட நீங்கள் இன்னும் கொஞ்சம்
கற்றுக்கொள்ளவேண்டும்.
சீதாப்பழத்திற்கா உங்கள் வாக்கு?
அப்படியென்றால், நீங்கள் கொஞ்சம் கட்டுப்பெட்டி. அடக்கமானவர். எதையும்
ஆழ்ந்து ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்துத்தான் முடிவு செய்வீர்கள். ஒரு
இலக்கை நிர்ணயித்துக் கொண்டு, அதைக் கண்டிப்பாக அடைந்து விடுவீர்கள்.
ஆனால், அவசரமோ பதற்றமோ உங்கள் பக்கத்தில் கூட வராது. நிதானமும் பொறுமையும்
மிக்கவர். விரிவாக விளக்கப் படவேண்டிய பணி அல்லது புள்ளிவிவரங்கள்
தொடர்பான பணிதான் உங்களுக்கு மிகவும் பிடித்தமான, உங்களுக்குப் பொருத்தமான
பணியாக இருக்கும். புற அழகு அல்லது மற்ற குணங்களை விட அறிவுத்திறன்
வாய்ந்தவரே துணையாக இருக்கவேண்டும் என்று விரும்புவீர்கள். நீங்கள் எந்தச்
செயலைச் செய்தாலும் கச்சிதமாக நேர்த்தியாக இருப்பது போல் பிறரும்
இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பதால் அடுத்தவர்களிடம் நிறையக் குற்றம்
கண்டுபிடித்தபடியே இருப்பது உங்கள் குறைபாடு. கொஞ்சம் வெட்கமும் கூச்சமும்
நிறைந்தவராக இருப்பதால், உங்கள் பிரியத்தை யாரிடமும் காட்டிக்கொள்வது
உங்களுக்கு மிகவும் சிரமமான காரியம்.
இனி என்ன? உங்கள் நண்பர்
அல்லது வாழ்க்கைத்துணைக்குப் பிடித்த பழம் என்ன என்று தெரிந்துகொண்டு,
அவருடைய தன்மையைப் பற்றிச் சொல்லி வியக்க வையுங்களேன்.
Re: கனி கொண்டு குணத்தைக் கணிப்போமா?
அருமையான கணிப்புதான்..
சூப்பர் ரிபாஸ்
சூப்பர் ரிபாஸ்
செரின்- வி.ஐ.பி
- பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009
Re: கனி கொண்டு குணத்தைக் கணிப்போமா?
ஆச்சரியமாய் இருக்கிறது, அத்துடன் கணிப்பும் சரியாக இருக்கிறது, நன்றி ரிபாஸ்!
kirupairajah- வி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
Re: கனி கொண்டு குணத்தைக் கணிப்போமா?
வாழ்த்துக்கள் ரிபாஸ்........... கனியின் கணிப்பு பிரமிக்க வைக்கிறது........
Re: கனி கொண்டு குணத்தைக் கணிப்போமா?
100 பெர்சென்ட் சரியாய் உள்ளது ரிபாஸ்.
சூப்பர் சூப்பர் சூப்பர்
சூப்பர் சூப்பர் சூப்பர்
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Similar topics
» "வேகமா' கொண்டு வரச்சொன்னா "வேகாம' கொண்டு வந்திருக்கியே!
» நிறத்தைவைத்துக் குணத்தைக் கண்டுபிடிக்கலாம்
» மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய...
» கையெழுத்து குணத்தைக் காட்டிக் கொடுத்து விடும்.
» வீறு கொண்டு எழு!
» நிறத்தைவைத்துக் குணத்தைக் கண்டுபிடிக்கலாம்
» மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய...
» கையெழுத்து குணத்தைக் காட்டிக் கொடுத்து விடும்.
» வீறு கொண்டு எழு!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|