ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருவள்ளுவர் காட்டும் வெற்றிக்கான வழிகள்

3 posters

Go down

திருவள்ளுவர் காட்டும் வெற்றிக்கான வழிகள் Empty திருவள்ளுவர் காட்டும் வெற்றிக்கான வழிகள்

Post by ரிபாஸ் Mon Dec 14, 2009 12:33 pm



திருவள்ளுவர் காட்டும் வெற்றிக்கான வழிகள்











[You must be registered and logged in to see this image.]காலம்
பொன் போன்றது, கடமை கண் போன்றது. காலத்தை வீணாக்காமல் இருக்க
வேண்டியதன் அவசியத்தைப் பற்றி திருவள்ளுவப் பெருமான் அருளியவற்றை சென்ற
கட்டுரையில் கண்டோம். இன்னும் அவரின் பல அறவுரைகளைத் தொடர்ந்து கண்டு
பயனடைவோம்.
வெற்றியினை விரும்பாத மனிதர்கள் உண்டா? இன்று வெற்றிக்கான வழிகாட்டி
என்ற பெயரில் நூற்றுக்கணக்கான புத்தகங்கள் வெளியாகின்றன. இணையத்திலோ, பல
ஆயிரக்கணக்கான தளங்கள், பற்பல உத்திகளைப் பற்றிப் பேசுகின்றன. இவை
எல்லாவற்றையும் படித்தோமானால் கடைசியில் அவற்றின் சாரம் ஒன்றுதான்.
விடாமுயற்சி, சோம்பலின்மை, தகவல் தொடர்புத்திறன், அறிவுத்திறன் போன்ற
தகுதிகள் பல்வேறு விகிதத்தில் ஒன்று கலந்து வெற்றிக்கான பாதையை
அமைத்துக்கொடுக்கின்றன. வெற்றியாளர்களுக்கான பொதுப்பண்புகளாகப் பல
புத்தகங்கள் கூறுவனவற்றை வள்ளுவர் எத்தனையோ ஆயிரமாண்டுகளுக்கு முன்பே
எப்படி அழகுற விளக்கியிருக்கிறார் என்று பார்க்கும்பொழுது வியப்பே
ஏற்படுகிறது.

சந்தர்ப்பத்தை நழுவ விடாத தன்மை:

'Opportunity is missed by most people because it is dressed overalls
and looks like work' என்பது பிரபல அறிவியல் மேதை தாமஸ் ஆல்வா எடிசனின்
கருத்து. நாள், கோள் பார்த்துக் கொண்டோ, சோம்பலின் காரணமாகவோ செயலைத்
தள்ளிப் போட்டுக்கொண்டே போனால் வெற்றித்திருமகள் எப்படித் தேடி
வருவாள்? அதனால்தான் வள்ளுவர் சொல்கிறார்
'ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்
செல்லும் வாய் நோக்கிச் செயல்'
இதன் கருத்தாவது, செய்ய முடிந்த இடத்தில் எல்லாம் செயலைச்
செய்துகொண்டே இருக்க வேண்டும். செய்யா இயலாத இடத்திலோ, செயலைச்செய்து
முடிப்பதற்கான வழிகளை அறிந்து செயலினை முடிக்க வேண்டும் என்பதாகும்.
தளராது செயல்படுபவனே வெற்றியாளன் ஆக முடியுமல்லவா?

தகுந்த காலமும் இடமும் அறிந்து செயல் புரிதல்:

வெற்றியாளர்கள், 'Optimist sees Opportunity in every difficulty,
Pessimist sees difficulties in every opportunity' என்ற பொன்மொழியினை
அறிந்தவர்கள். எந்தக் காலத்தில்/எந்த இடத்தில் எத்தகைய செயலைச்
செய்யலாமென்று அறிந்து, செயலாற்றி வெற்றியை ஈட்டுபவர்கள். காற்றடிக்கும்
நேரத்தில் மாவு விற்கவும், மழை கொட்டுகையில் உப்பு விற்பவனும், கொல்லன்
பட்டறைகள் நிறைந்த இடத்தில் ஊசி வியாபாரம் செய்யச் ச்செல்பவனும் வெற்றி
பெற முடியுமா?
இதை மனதில் கொண்டுதான் வள்ளுவப் பெருந்தகை 'இடனறிதல்',
'காலமறிதல்' என்ற தலைப்புகளில் இருபது குறள்கள் இயற்றி, நமக்கு வழி
காட்டுகிறார். அவற்றில் சிலவற்றைப் பார்க்கலாம்.

'அருவினை என்ப உளவோ கருவியான்
காலம் அறிந்து செயின்' என்று கேட்கிறார் இவர்.
(பொருள்: கருவியையும் காலத்தையும் அறிந்து செயல்பட்டால், முடிக்க முடியாதது என்று ஒன்று உண்டா? - காலமறிதல் - குறள் எண்- 483)

'கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து' என்பது இவர் வெற்றிக்குக் கூறும் மற்றொரு உத்தியாகும்
(பொருள் - வெற்றியை விரும்புபவன், தக்க காலத்தை எதிர்நோக்கி, கொக்கு
போல் காத்திருக்க வேண்டும். வெற்றிக்கான செயல் செய்யும் காலம்
கனியும்பொழுது, அந்தக்கொக்கு விரைந்து மீனைக் கவ்வுவது போல,
செயலாற்றுதல் வேண்டும். - காலமறிதல் - குறள் எண்- 490)

'அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை
எண்ணி இடத்தாற் செயின்'
என்று சரியான இடத்தில் சரியான செயலைச் செய்வதன் பயனை
வலியுறுத்துகிறார். (பொருள் - இடமறிந்து ஒரு செயலில் ஈடுபட்டால்
துணிச்சல் தவிர வேறு துணைகள் தேவையில்லை - இடனறிதல் - குறள் எண் -497)

'நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்
நீங்கின் அதனைப் பிற'
என மேலும் ஒரு உவமையின் மூலம் தகுந்த இடத்தில் தகுந்த செயலைச் செய்வதன்
இன்றியமையாமையை விளக்குகிறார் இவர். ( பொருள் - முதலையானது நீரில்
உள்ளவரை மிகுந்த வலிமையுடையது, மற்ற மிருகங்களை வெல்லக் கூடியது. ஆனால்
அதுவே, கரைக்கு வந்துவிடுமானால், மற்ற மிருகங்கள் அதனை வென்றுவிடும்.
அதாவது, தனக்கு எந்தத் துறையில் திறமை உள்ளதோ, அந்தத் துறையில் ஈடுபட்டு
வெற்றியை ஈட்டவேண்டும். தனக்குத் தெரியாத துறையில் கால்வைத்து,
தேவையில்லாமல் மாட்டிக்கொண்டு திண்டாடக்கூடாது என்பது இதன் கருத்து.
உள்ளூர் யானை, அசலூர்ப் பூனை என்னும் பழமொழி இங்கு நினைவில் கொள்ளத்
தக்கது. - குறள் எண் - 495)

தகவல் பரிமாற்றத் திறன்:

தன் கருத்துக்களை, பிறர் ஏற்கும்படி கூற வல்லவன் எளிதில் வெற்றியடைவான்
என்பது வள்ளுவரின் முடிவு. இது உண்மையும் கூட. உங்களிடம் ஒரு புதிய உத்தி
ஏதும் இருக்கலாம். அதைச் செயல் படுத்த வேண்டுமானால், பலரது ஒத்துழைப்பும்
தேவைப்படும். அப்பொழுதுதான் உங்களால் வெற்றியடைய முடியும்.அவ்வாறு பலரின்
ஒத்துழைப்பும் வேண்டுமானால், உங்கள் உத்தியை அவர்கள் ஏற்றுக்கொள்ள
வேண்டும். அதற்கு, அவர்கள் புரிந்து கொள்ளும் வண்ணம், மனதில் பதியும்
வண்ணம் எடுத்துக்கூறும் பேச்சுத்திறமை (Communication Skill) வேண்டும்.
இதையும் திருக்குறள் அழகாகத் தெளிவு படுத்துகிறது சொல்வன்மை என்ற
அதிகாரத்தில் உள்ள முத்தான பத்துக் குறளின் மூலம்.

'சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
இகல் வெல்லல் யார்க்கும் அரிது'
என்று, தகவல் பரிமாற்றத்தில் சிறந்தவர் வெற்றியாளராவது உறுதி என திட்டவட்டமாகக் கூறுகிறார் திருவள்ளுவர்.
(பொருள் - தான் சொல்ல விரும்புவதை, நன்கு திறம்படக் கூற வல்ல, சொல்ல
வேண்டியவற்றை மறவாமல், அவைக்கு அஞ்சி சோர்ந்துவிடாமல் சொல்லக்கூடிய
வல்லமை படைத்தவனை யாராலும் வெற்றி கொள்ள இயலாது - சொல் வன்மை - குறள்
எண் - 647)

விடாமுயற்சி வெற்றி தரும்:
'மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான் தாளுளாள் தாமரையினாள்'
என்று அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறார் வள்ளுவர். அதாவது
சோம்பலுள்ளவனிடத்தில் மூதேவியும், சோம்பலை நீக்கி நல்முயற்சியை
மேற்கொள்ளுபவனிடம் திருமகள் வீற்றிருப்பாள் என்பது இதன் பொருள். (
ஆள்வினை உடைமை - குறள் எண் - 617)
மூதேவி என்பது துன்பத்தையும் வறுமையையும், திருமகள் என்பது செல்வத்தையும் வெற்றியையும் குறிக்கிறது.

வாழும் முறை குறித்தும், வாழ்வின் பல கூறுகள் வள்ளுவப் பெருந்தகை கூறியுள்ளவை இன்னும் எவ்வளவோ உண்டு. வரும் கட்டுரைகளில்
குறளமுதைத் தொடர்ந்து பருகுவோம்.
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

திருவள்ளுவர் காட்டும் வெற்றிக்கான வழிகள் Empty Re: திருவள்ளுவர் காட்டும் வெற்றிக்கான வழிகள்

Post by ஈகரைச்செல்வி Wed Jun 17, 2015 7:22 pm

திருவள்ளுவர் காட்டும் வெற்றிக்கான வழிகள் 103459460 திருவள்ளுவர் காட்டும் வெற்றிக்கான வழிகள் 103459460 திருவள்ளுவர் காட்டும் வெற்றிக்கான வழிகள் 103459460


மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015

Back to top Go down

திருவள்ளுவர் காட்டும் வெற்றிக்கான வழிகள் Empty Re: திருவள்ளுவர் காட்டும் வெற்றிக்கான வழிகள்

Post by Preethika Chandrakumar Fri Jun 19, 2015 10:51 am

திருவள்ளுவர் காட்டும் வெற்றிக்கான வழிகள் 103459460 சூப்பருங்க
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

Back to top Go down

திருவள்ளுவர் காட்டும் வெற்றிக்கான வழிகள் Empty Re: திருவள்ளுவர் காட்டும் வெற்றிக்கான வழிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum