புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எம்.ஜி.ஆர். வழங்கியது போன்ற நல்ல ஆட்சியை என்னால் கொடுக்க முடியும் ரஜினிகாந்த் உறுதி Poll_c10எம்.ஜி.ஆர். வழங்கியது போன்ற நல்ல ஆட்சியை என்னால் கொடுக்க முடியும் ரஜினிகாந்த் உறுதி Poll_m10எம்.ஜி.ஆர். வழங்கியது போன்ற நல்ல ஆட்சியை என்னால் கொடுக்க முடியும் ரஜினிகாந்த் உறுதி Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
எம்.ஜி.ஆர். வழங்கியது போன்ற நல்ல ஆட்சியை என்னால் கொடுக்க முடியும் ரஜினிகாந்த் உறுதி Poll_c10எம்.ஜி.ஆர். வழங்கியது போன்ற நல்ல ஆட்சியை என்னால் கொடுக்க முடியும் ரஜினிகாந்த் உறுதி Poll_m10எம்.ஜி.ஆர். வழங்கியது போன்ற நல்ல ஆட்சியை என்னால் கொடுக்க முடியும் ரஜினிகாந்த் உறுதி Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
எம்.ஜி.ஆர். வழங்கியது போன்ற நல்ல ஆட்சியை என்னால் கொடுக்க முடியும் ரஜினிகாந்த் உறுதி Poll_c10எம்.ஜி.ஆர். வழங்கியது போன்ற நல்ல ஆட்சியை என்னால் கொடுக்க முடியும் ரஜினிகாந்த் உறுதி Poll_m10எம்.ஜி.ஆர். வழங்கியது போன்ற நல்ல ஆட்சியை என்னால் கொடுக்க முடியும் ரஜினிகாந்த் உறுதி Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
எம்.ஜி.ஆர். வழங்கியது போன்ற நல்ல ஆட்சியை என்னால் கொடுக்க முடியும் ரஜினிகாந்த் உறுதி Poll_c10எம்.ஜி.ஆர். வழங்கியது போன்ற நல்ல ஆட்சியை என்னால் கொடுக்க முடியும் ரஜினிகாந்த் உறுதி Poll_m10எம்.ஜி.ஆர். வழங்கியது போன்ற நல்ல ஆட்சியை என்னால் கொடுக்க முடியும் ரஜினிகாந்த் உறுதி Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எம்.ஜி.ஆர். வழங்கியது போன்ற நல்ல ஆட்சியை என்னால் கொடுக்க முடியும் ரஜினிகாந்த் உறுதி Poll_c10எம்.ஜி.ஆர். வழங்கியது போன்ற நல்ல ஆட்சியை என்னால் கொடுக்க முடியும் ரஜினிகாந்த் உறுதி Poll_m10எம்.ஜி.ஆர். வழங்கியது போன்ற நல்ல ஆட்சியை என்னால் கொடுக்க முடியும் ரஜினிகாந்த் உறுதி Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
எம்.ஜி.ஆர். வழங்கியது போன்ற நல்ல ஆட்சியை என்னால் கொடுக்க முடியும் ரஜினிகாந்த் உறுதி Poll_c10எம்.ஜி.ஆர். வழங்கியது போன்ற நல்ல ஆட்சியை என்னால் கொடுக்க முடியும் ரஜினிகாந்த் உறுதி Poll_m10எம்.ஜி.ஆர். வழங்கியது போன்ற நல்ல ஆட்சியை என்னால் கொடுக்க முடியும் ரஜினிகாந்த் உறுதி Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
எம்.ஜி.ஆர். வழங்கியது போன்ற நல்ல ஆட்சியை என்னால் கொடுக்க முடியும் ரஜினிகாந்த் உறுதி Poll_c10எம்.ஜி.ஆர். வழங்கியது போன்ற நல்ல ஆட்சியை என்னால் கொடுக்க முடியும் ரஜினிகாந்த் உறுதி Poll_m10எம்.ஜி.ஆர். வழங்கியது போன்ற நல்ல ஆட்சியை என்னால் கொடுக்க முடியும் ரஜினிகாந்த் உறுதி Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
எம்.ஜி.ஆர். வழங்கியது போன்ற நல்ல ஆட்சியை என்னால் கொடுக்க முடியும் ரஜினிகாந்த் உறுதி Poll_c10எம்.ஜி.ஆர். வழங்கியது போன்ற நல்ல ஆட்சியை என்னால் கொடுக்க முடியும் ரஜினிகாந்த் உறுதி Poll_m10எம்.ஜி.ஆர். வழங்கியது போன்ற நல்ல ஆட்சியை என்னால் கொடுக்க முடியும் ரஜினிகாந்த் உறுதி Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எம்.ஜி.ஆர். வழங்கியது போன்ற நல்ல ஆட்சியை என்னால் கொடுக்க முடியும் ரஜினிகாந்த் உறுதி


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Mar 06, 2018 7:20 am

எம்.ஜி.ஆர். வழங்கியது போன்ற நல்ல ஆட்சியை என்னால் கொடுக்க முடியும் ரஜினிகாந்த் உறுதி 201803060317371387_I-can-give-good-governance-Rajinikanth-confirmed_SECVPF
-
சென்னை,

எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவையொட்டி, சென்னை வேலப்பன் சாவடியில் உள்ள ஏ.சி.எஸ். மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில் அவருக்கு 8 அடி உயரத்தில் வெண்கல சிலை நிறுவப்பட்டுள்ளது.

எம்.ஜி.ஆர். சிலையை நடிகர் ரஜினிகாந்த் நேற்று திறந்துவைத்தார். விழாவில், அவர் பேசியதாவது:-

இது ஒரு பல்கலைக்கழக விழா என்று நினைத்தேன். இது கட்சி மாநாடு போல உள்ளது. இதை நான் அரசியல் மேடையாக ஆக்கக்கூடாது. இங்கு அரசியல் பேசக்கூடாது என்று நினைத்திருந்தேன். அந்த நினைப்பின் திரியை ஏ.சி.சண்முகம் பற்ற வைத்துவிட்டார்.

அரசியல் பேசக்கூடாது என்று அழுத்தமாக இருந்தேன். ஆனால் பேசும் அளவுக்கு தள்ளப்பட்டு உள்ளேன். சில வார்த்தைகள் மட்டும் பேசுகிறேன். மற்றவைகளை வேறு விழாக்களில் வைத்துக்கொள்வோம்.

எம்.ஜி.ஆரின் ஆட்சி தான், அ.தி.மு.க. ஆட்சி தான் நடக்கிறது. அவரது ஆட்சியில் ஊரெல்லாம் அவரது நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. எம்.ஜி.ஆர் சினிமாத்துறையில் இருந்து வந்தவர். இதுதான் அவரது தாய்வீடு. அதுமட்டுமல்ல, இதயதெய்வம் என்றழைக்கப்படும் ஜெயலலிதாவும் சினிமாத்துறையில் இருந்து வந்தவர் தான். சினிமாத்துறையினரை அழைத்து எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா நடக்கும் என்று எதிர்பார்த்து இருந்தேன். நடக்கவில்லை,

எனக்கும், எம்.ஜி.ஆருக்கும் உள்ள பந்தம் பலருக்கும் தெரியாது.

‘எம்.ஜி.ஆரை போல சினிமா உலகில் இருந்து இன்னொருவர் அரசியலுக்கு வரக்கூடாது’ என்கிறார்கள். ‘பேண்ட்-சர்ட் போட்டு மேக்கப் போட்டு கதாநாயகிகளுடன் ‘டூயட்’ பாட நாங்கள் வரவில்லை. நீங்கள் ஏன் கரைவேட்டி கட்டி எங்கள் வேலைக்கு வருகிறீர்கள்?’ என்கிறார்கள்.

அய்யா... நான் மற்றவர்களை பற்றி பேசவில்லை. என்னை பற்றி மட்டும் சொல்கிறேன். என் வேலையை நான் சரியாக செய்துகொண்டிருக்கிறேன், நீங்கள் உங்கள் வேலையை சரியாக செய்யவில்லையே? 1996-ல் இருந்து அரசியல் எனும் நீர் என் மீதும் பட்டுவிட்டது. அதனால் அரசியல் நெளிவு சுளிவுகளை தெரிந்துகொள்ள ஆரம்பித்து வந்தேன்.

கருணாநிதி, மூப்பனார், சோ ஆகியோருடன் பழ கி நானும் கொஞ்சம் அரசியல் கற்று இருக்கிறேன். எங்கெங்கே தப்பு நடக்கிறது, அதை எப்படி தடுப்பது என்று எனக்கு தெரியும். எனக்கும், மக்களுக்கு செய்யவேண்டிய கடமை இருக்கிறது. எனவே தான் அரசியலுக்கு வருகிறேன்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Mar 06, 2018 7:21 am

நான் அரசியலுக்கு வருகிறேன் என்று சொன்னதும் என்னை ரத்தின கம்பளம் விரித்து வரவேற்பார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. வாழ்த்துகள் சொல்லவேண்டிய அவசியம் இல்லை, ஆனால் ஏன் ஏளனம் செய்கிறீர்கள்?

அரசியல் பாதை எனக்கும் தெரியும். பூப்பாதை அல்ல முள்களும், பாம்புகளும், கற்களும் உள்ள பாதை. எனக்கு எல்லாமே தெரிந்தும், இந்த வயதிலும் நான் அரசியலுக்கு வருகிறேன் என்று சொன்னால், ஏன் ஏளனம் செய்கிறார்கள்? என்று தெரியவில்லை. இந்த ‘திட்டுப்’ அரசியல் வேண்டாம். போதும் இதோடு நிறுத்திக்கலாம்.

எல்லோரும் எம்.ஜி.ஆராக முடியாது. சினிமாவில் இருந்து அவரை போல யாரும் அரசியலில் ஜொலிக்க முடியாது என்கிறார்கள். சத்தியமாக யாரும் எம்.ஜி.ஆராக முடியாது. அவர் ஒரு யுக புருஷர். ‘பொன்மனச்செம்மல்’, ‘மக்கள் திலகம்’, நூறு அல்ல ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் அவரை போல யாரும் வரமுடியாது. அவரே மீண்டும் பிறந்து வந்தால் தான் உண்டு.

எம்.ஜி.ஆரை போல ஒருவர் வருகிறேன் என்று சொன்னால் அவனை விட பைத்தியக்காரன் யாரும் இருக்கமுடியாது. ஆனால் அவர் தந்த நல்லாட்சி, ஏழை மக்களுக்கான ஆட்சி, சாமானிய மக்களுக்கான ஆட்சி, மத்தியஸ்த குடும்பத்தாருக்கான ஆட்சி என்னாலும் கொடுக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

மக்கள் ஆசிர்வாதம், இளைஞர்கள் உறுதுணையுடன், நல்ல தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, நல்ல சிந்தனையாளர்கள், ஆலோசகர்கள் மற்றும் திறமைசாலிகளை வைத்துக்கொண்டு அந்த மாதிரி ஆட்சியை என்னாலும் கொடுக்கமுடியும். ஆன்மிக அரசியல் என்ன என்று என்னிடம் கேட்கிறார்கள்.

உண்மையான, நேர்மையான, வெளிப்படையான, சாதி-மத சார்பற்ற அறவழியில் நடப்பது தான் ஆன்மிக அரசியல் என்று ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். தூய்மை தான் ஆன்மிகம். எல்லா ஜீவன்களும் ஒன்றுதான். அனைத்துமே பரமாத்மா. இறை நம்பிக்கை இருப்பது தான் ஆன்மிக அரசியல்.

அப்போது திராவிடத்தில் இறை நம்பிக்கை, தூய்மை, நேர்மை, சாதி-மத சார்பு கிடையாதா? இனிமேல் தான் பார்க்க போகிறீர்கள், ஆன்மிக அரசியலை.

‘கொள்கை பற்றி கேட்டால் தலை சுற்றுகிறது’, என்று நான் சொன்ன சிறிய விஷயத்தை பற்றி ஒரு பட்டிமன்றமே நடத்துகிறார்கள். 31-ந் தேதி நான் அரசியலுக்கு வருகிறேனா, இல்லையா? என்பதை தெரிவிப்பேன் என்றேன். ஆனால் 29-ந் தேதியே ‘உங்கள் கொள்கை என்ன?’ என்று கேட்கிறார்கள். இது எப்படி இருக்கிறது என்றால், ‘பொண்ணு பார்க்க போய்கிட்டு இருக்கும்போது, எனக்கு கல்யாணத்துக்கு பத்திரிகை வரவில்லையே?’ என்று கேட்பது போல இருக்கிறது.

பெரிய பெரிய அரசியல் தலைவர்களும், மேடையில் இதுபற்றி பேசி, கிண்டல் செய்தனர். மக்கள் முன்னால் பேசும்போது மிகவும் ஜாக்கிரதையாக பேசவேண்டும். மேடையில் கேட்டுக்கொண்டு இருக்கும்போதே மக்களின் அறிவு திடீரென்று மேலோங்கும். மாசக்கணக்கில் ‘ரூம்’ போட்டு, கதை குறித்து விவாதம் நடத்தி, சினிமா எடுக்கும் கஷ்டம் சினிமாக்காரனான எனக்கு தெரியும். எல்லா ‘லாஜிக்’கையும் பார்த்து கதை பண்ணுவோம். ஆனால் படத்தை பார்த்துவிட்டு ‘அது சரியில்லை, இது சரியில்லை’, என்று ஒரே வார்த்தையில் சொல்லிவிடுவார்கள்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Mar 06, 2018 7:21 am

அதே நபரிடம் படத்தை தனியாக போட்டுக்காட்டுங்கள். எதுவுமே சொல்லமுடியாது. இது தான் ‘மாஸ் சைக்காலஜி’. மக்களிடம் பேசும்போது ஜாக்கிரதையாக பேசவேண்டும்.

சரி இப்போது ஏன் அரசியலுக்கு வருகிறீர்கள்?, ஜெயலலிதா இருக்கும்போது ஏன் வரவில்லை?, பயமா? என்று கேட்டார்கள். 1996-ம் ஆண்டு நிலைமை எல்லோருக்கும் தெரியும். அப்போதே அவருக்கு (ஜெயலலிதா) எதிராக குரல் கொடுத்த எனக்கு, ஏன் வரப்போகிறது பயம்? அரசியல் வெற்றிடம் இருப்பது உண்மை தான். நல்ல தலைவனுக்கு, நல்ல தலைமைக்கு வெற்றிடம் இருக்கிறது.

சக்தியும், திறமையும் வாய்ந்த 2 தலைவர்கள் இருந்தார்கள். ஜெயலலிதாவின் ஆளுமை பற்றி யாருமே கேள்விகேட்க முடியாது. அவரை போல எந்த தலைவரும் ஒரு கட்சியை தன் கட்டுப்பாட்டுக்குள் அப்படி வைக்கமுடியாது. அப்படி கட்டுப்பாட்டுடன் கட்சியை வைத்திருந்தார் ஜெயலலிதா. ஒரு தலைவர்.

அந்த பக்கம் கருணாநிதி. என் அருமை நண்பர், 13 ஆண்டுகள் ஆட்சியில் இல்லையென்றாலும் தன் கட்சியை அப்படி அக்கறையுடன் கட்டி காப்பாற்றினார். எத்தனை தலைவர்களை உருவாக்கிய கட்சி அது. பல மனஸ்தாபங்கள் இருந்தாலும் எப்படி அந்த கட்சி கட்டுப்பாட்டுடன் இருந்தது. அவர் இப்போது உடல்நிலை சரியில்லாமல் உள்ளார்.

தமிழகத்துக்கு இப்போது ஒரு தலைமை தேவை. ஒரு தலைவன் தேவை. அந்த இடத்தை நிரப்ப நான் வருகிறேன். அய்யா... ‘நம்ம பக்கம் அந்த ஆண்டவனே இருக்கிறான்’. நான் நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் ரசிகன்.

நான் சென்னைக்கு வந்த பிறகு, சினிமா துறைக்கு வந்த பிறகு புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பற்றி கேள்விப்பட்டு, அவருடைய வாழ்க்கை வரலாற்றை எல்லாம் பார்த்து, அவருடைய சாதனைகளை எல்லாம் பார்த்து, ‘ஆப் ஸ்கீரினிலே’, வாழ்க்கையிலே நான் அவருடைய மிகப்பெரிய ரசிகனாகி விட்டேன்.

அவருடைய பெரிய வெறியனாகவும் மாறிட்டேன். எம்.ஜி.ஆர். 1950-ம் ஆண்டுகளில் மிகப்பெரிய ‘ஆக்‌ஷன் ஹீரோ’வாக இருந்தார். ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’, ‘மலைக்கள்ளன்’ படங்களில் நடித்துக்கொண்டிருக்கும் போது சிவாஜி சார் நுழைகிறார்.

‘பராசக்தி’ ஒரே ஷோவிலேயே, நடிப்புனா என்ன? என்பதையே மாற்றிவிட்டார். வசன உச்சரிப்புன்னா என்ன? என்பதையே மாற்றிட்டார். ‘இதுதான்டா நடிப்பு. வசன உச்சரிப்பு’, என்று சிவாஜி தனி புரட்சியையே உருவாக்கினார். அந்த காலக்கட்டத்தில் மிகப்பெரிய தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் எல்லாம் சிவாஜி சார் பின்னால் சென்றார்கள். ‘எம்.ஜி.ஆரின் கதை முடிந்தது’, என்றார்கள். அப்போது எம்.ஜி.ஆர். சொந்தப்படம் தயாரித்தார். அந்த படத்தை அவரே இயக்கினார்.

‘இவருக்கு தேவையா இது? கெட்டகாலம் வந்தா இப்படி தான்’, என்று சொன்னார்கள். அந்த படம் ‘நாடோடி மன்னன்’. அது இதிகாசம் படைத்தது. டைரக்டர்கள் எல்லாம் நடுங்கி விட்டார்கள். தான் யார்? என்று நிரூபித்தார், எம்.ஜி.ஆர். அப்போது எம்.ஜி.ஆர். ‘செட்டு’க்குள் வந்தாலே இயக்குனர்களுக்கு வியர்க்கும். அந்த மாதிரி சாதனை படைத்து காட்டியவர்.

அவருடைய காலத்தில் சினிமாவில் யாருடன் போட்டி என்றால் அது சிவாஜி கணேசனுடன் தான். அரசியலில் அவருக்கு யார் போட்டி?. கருணாநிதி. அவரை போன்ற ஒரு எழுத்தாளர், பேச்சாளர், அரசியல் ஞானி, ராஜதந்திரி இந்தியாவிலேயே கிடையாது.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Mar 06, 2018 7:22 am


அவரை 13 ஆண்டுகள் கோட்டைக்கு வந்து முதல்-அமைச்சர் நாற்காலி பக்கமே திரும்பி பார்க்காமல் வைத்தவர் எம்.ஜி.ஆர்., இது என்ன சாதாரண சாதனையா?

13 ஆண்டுகள் எம்.ஜி.ஆருக்கு மக்கள் மீது அக்கறை. மின்சாரம் இல்லாத கிராமங்களுக்கு மின்சாரம் கிடைத்தது. ஒவ்வொரு குடிசையிலும் ஒரு விளக்கு இலவசமாக கொடுத்தார். ஒவ்வொரு கிராமத்துக்கும் பஸ், சாலை வசதி கொடுத்தார்.

13 ஆண்டுகள் 1 கிலோ அரிசிக்கு ரூ.1.45 காசு, அதற்கு மேல் தாண்டவில்லை. காமராஜர் கொண்டு வந்த மதிய உணவு ஒரு வகுப்பில் 100 குழந்தைகள் இருந்தார்கள் என்றால், அதில் 30 குழந்தைகளுக்கு மட்டும் கொடுக்கப்பட்டு வந்தது. எம்.ஜி.ஆர். வந்த பிறகு எல்லோருக்கும் சாப்பாட்டு போட்டார்.

ஏழை மக்கள் சைக்கிளில் 2 பேர் சென்றால், போலீசார் பிடித்து விடுவார்கள். 2 பேர் செல்லலாம் என்று அந்த சட்டத்தை மாற்றினார். அப்போது சந்தேகத்தின் பேரில் யார் மீது என்றாலும் வழக்கு போடலாம். அதையும் மாற்றினார். ரேஷன் கடைகள் ஆரம்பித்தார். அதனால் தான் 13 ஆண்டுகள் முழுமையாக ஆட்சியில் இருந்தார். அமெரிக்காவில் இருந்த போது அவர் உயிரோடு இருக்கிறாரா? என்று கேட்டார்கள். அவரிடம் பேச முடியாது, செயலாற்ற முடியாது என்று சொன்னாலும், அந்த மகான் உயிரோடு இருந்தால் மட்டும் போது அவருக்கு தான் ஓட்டு போடுவோம் என்று சொல்லி ஓட்டை குத்தினார்கள்.

எம்.ஜி.ஆர். மறைந்த பிறகும், அவருடைய சமாதியில் உள்ள கைகடிகாரம் ஓடுகிறதா? என்று இன்னும் பொதுமக்கள் கேட்கின்றனர். அவர் ஒரு தெய்வப்பிறவி.

அவர் ஒரு மர்ம மனிதர், மாய மனிதர். அந்த ஆண்டவருடைய சக்தி, அவரை இயக்கிக்கொண்டிருந்தது. மூகாம்பிகை அம்மன் தான் அவரை இயக்கியது. மதுரை வீரன் தான் அவரை இயக்கிக்கொண்டிருந்தார்.

இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.

---------------------------------------
நன்றி- விகடன்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 06, 2018 7:35 am

ஹையோ , ஹையோ......ரொம்ப காமெடி பண்ணுகிறார்.............    சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Mar 06, 2018 10:28 am

ஆட்சியை என்னால் கொடுக்க முடியும் ரஜினிகாந்த் உறுதி

அது சரி வாடகை  கொடுக்க முடியுமா முடியாத ????



M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Mar 06, 2018 11:45 am

krishnaamma wrote:ஹையோ , ஹையோ......ரொம்ப காமெடி பண்ணுகிறார்.............    சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

என்னம்மா ! அத்தி பூத்தாற்போல வந்துள்ளீர்களே ! வீட்டுவேலை அதிகமோ ?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 06, 2018 12:16 pm

M.Jagadeesan wrote:
krishnaamma wrote:ஹையோ , ஹையோ......ரொம்ப காமெடி பண்ணுகிறார்.............    சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

என்னம்மா ! அத்தி பூத்தாற்போல வந்துள்ளீர்களே ! வீட்டுவேலை அதிகமோ ?
மேற்கோள் செய்த பதிவு: 1261391


புன்னகை...இல்லை ஐயா ...கொஞ்சம் உடல்நல குறைவு....தனிமடல் பாருங்கள் ஐயா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue Mar 06, 2018 1:20 pm

பரவாயில்லையே நல்ல தான் பேசிருக்காரு ... எம்.ஜி.ஆர். வழங்கியது போன்ற நல்ல ஆட்சியை என்னால் கொடுக்க முடியும் ரஜினிகாந்த் உறுதி 3838410834 வாழ்த்துக்கள் ... சூப்பருங்க



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Mar 06, 2018 5:25 pm

SK wrote:
ஆட்சியை என்னால் கொடுக்க முடியும் ரஜினிகாந்த் உறுதி

அது சரி வாடகை  கொடுக்க முடியுமா முடியாத ????
மேற்கோள் செய்த பதிவு: 1261370

அவர் பள்ளியில் வேலை செய்யும் ஆசிரியர்களுக்கு சம்பள பாக்கி கொடுத்தவுடன் கொடுப்பாராம் .

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக