Latest topics
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குழந்தைகளின் ஒவ்வாமை மூக்கால் வடிதல்
2 posters
Page 1 of 1
குழந்தைகளின் ஒவ்வாமை மூக்கால் வடிதல்
கற்கை ஆற்றலையும் பாதிக்கும் குழந்தைகளின் ஒவ்வாமை மூக்கால் வடிதல் "தேச்சுத் தேச்சு இவன்ரை மூக்கு வீங்கிப் போச்சு எப்ப பாத்தாலும் தும்மலும் சளியும் தான்' எனச் சலித்தார் அம்மா. சினத்து வீங்கிய முகத்துடன் நின்ற சின்னப் பையனின் மூக்கிலிருந்து வழிந்த
சளி அசிங்கமாகத் தோற்றமளித்தது. சோர்வு அவனது முகம் முழுவதையும்
விழுங்குவது போல அப்பிக் கிடந்தது. உடலின் சக்தி அனைத்தும்
உறிஞ்சப்பட்டவன் போல களைப்புடன் இருந்தான். ஆம்,
ஒவ்வாமை மூக்கால் வடிவது (Allergic rhinitis) என்பது வெறுமனே அரிப்பும்,
தும்மலும் நிறைந்த மூக்கு மட்டுமல்ல. தானே வழிந்து முடியட்டும் என
அலட்சியப்படுத்தக்கூடியதும் அல்ல. உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும்
மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பிரச்சினையாகும்.
எந்த வயதினருக்கும் இப்பிரச்சினை ஏற்படக்கூடும். ஆயினும் குழந்தைகளில்
இதன் பாதிப்பு அதிகமாகும். இது விடாமல் தொடர்ந்து தொல்லை கொடுத்துக்
கொண்டிருப்பதால் குழந்தையின் உடல் நலம் சிறப்பாக இருக்காது.
அதன்
கற்கை ஆற்றல், கிரகிக்கும் திறன் ஆகியவற்றைப் பாதிக்கும். சுலபமாக மூச்சு
எடுத்து வெளிவிட முடியாததாலும் அரிப்பு, தும்மல் போன்றவை ஏற்படுவதால்
தூக்கத்தையும் கெடுக்கும். தூக்கம் கெட்டால் மறுநாள் உற்சாகமாக செயற்பட
முடியாது என்பது வெளிப்படை. இவை காரணமாக பிள்ளை தனது முழு ஆற்றலையும்
பயன்படுத்த முடியாது. பாடசாலையில் பின்தங்கக்கூடிய நிலையும் ஏற்படலாம். மூக்கால் ஒழுகும் பிள்ளை என சக மாணவர்களின் ஏளனத்திற்கும்
புறக்கணிப்பிற்கும் ஆளாவதால் குழந்தையின் மனம் சோர்வடைந்து பள்ளி
செல்லுவதற்கும் கற்பதற்குமான ஆர்வத்தைக் கெடுத்து விடலாம். அதற்கு
மேலாக அழற்சியடைந்த மூக்கின் மென்சவ்வுகள் காரணமாக யூதெசியன் ரியூப்,
காற்றறைகள் ஆகியவையும் அழற்சியடைவதால், காது அடைப்பு, காதுக் குத்து,
சைனசைரிஸ் போன்ற நோய்களும் அடிக்கடி ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகமாகும்.
ஆஸ்மா ஏற்படுவதற்கான வாய்ப்பும் ஒவ்வாமை மூக்கால் வடியும் நோயாளிகளுக்கு அதிகமாகும். எனவே பெற்றோர்களும், பாடசாலை ஆசிரியர்களும் அலட்சியப்படுத்தாது இவர்களது பிரச்சினையை வைத்திய ஆலோசனைக்கு அனுப்புவது நல்லது. இதைத் தடுக்க என்ன செய்யலாம்?
ஒவ்வாமை
உள்ள பொருளுடன் தொடர்பு கொள்ளாதிருப்பதே ஒரே வழியாகும். படுக்கைப் பூச்சி,
தூசிப் பூச்சி, மகரந்தம், வளர்ப்புப் பிராணிகளின் ரோமம் போன்ற பலவும்
காரணமாகலாம். எனவே அவற்றிலிருந்து விலகியிருக்க வேண்டும்.
தலையணை,
படுக்கை, படுக்கை விரிப்பு போன்றவற்றை அடிக்கடி தோய்ப்பதுடன், வாரத்திற்கு
இரண்டு தடவையாவது வெயிலில் காயப்போட வேண்டும். நுளம்பு வலை, துணியாலான
கால்மிதி, திரைச்சீலை போன்றவற்றையும் அவ்வாறே சுத்தமாக வைத்திருக்க
வேண்டும்.ரோமம் உள்ள பொம்மைகள், கதிரை விரிப்புகள் ஆகியவற்றை அகற்றுங்கள் அல்லது வக்கியூம் கிளீனரால் (Vacuum Cleaner) சுத்தப்படுத்துங்கள். பூனை, நாய் போன்ற வளர்ப்புப் பிராணிகளை அடிக்கடி குளிக்கவார்த்து சுத்தமாக
வைத்திருப்பதுடன், படுக்கை அறைக்குள் நுழைய விடாதீர்கள். பலரும் நினைப்பது
போல அவற்றின் ரோமம் ஒவ்வாமையை ஏற்படுத்துவதில்லை. அவற்றின் உதிர்ந்த
சருமத்துகள்களும் எச்சில் மற்றும் காய்ந்த சிறுநீருமே ஒவ்வாமையை
ஏற்படுத்தி மூக்கால் வடிவதைத் தூண்டுகிறது.
கரப்பொத்தான் பூச்சியை ஒழியுங்கள். தூசி தட்டுவதற்குப் பதிலாக ஈரத்துணியால் சுத்தப்படுத்துங்கள். மருத்துவத்தைப் பொறுத்தவரையில் அலர்ஜிக்கு எதிரான (Antihistamine)
மாத்திரைகள் உதவும். லொராடடீன், டெஸ்லொராடடீன் போன்ற புதிய பரம்பரை
மாத்திரைகள் அதிக தூக்கத்தை ஏற்படுத்தாது என்பதால் பாடசாலை செல்லும்
பிள்ளைகள் மற்றும் வேலைக்குச் செல்பவர்களும் உபயோகிக்கக் கூடியதாகும்.
இவற்றுடன் மூக்கிற்கான விசிறி மருந்துகளும் (Steroid Nasal Spray) மிகுந்த பலன் அளிக்கக் கூடியதாகும்.
இவற்றைத்
தனித்தனியாகவோ அன்றி இணைத்தும் உபயோகிக்கலாம். இவற்றை நீண்ட நாட்களுக்குத்
தொடர்ந்து உபயோகிக்க வேண்டும். இவை பாரிய பக்க விளைவுகள் அற்றவை யாதலால்
அவ்வாறு மாதக் கணக்கில் உபயோகிப்பது ஆபத்தற்றது.
இத்தகைய நோயுள்ள பலருக்கும் மூக்கின் உள்ளே இருக்கும் குருத்தெலும்பான
Inferior Turbinates வீக்கமடைவது உண்டு. இது கடுமையாக வீக்கமடைந்து
சுவாசத்தையும் பாதிப்பதாக இருந்தால் ENT Surgeon யை சந்திக்கவேண்டி
நேரலாம்.
எந்த வகையிலும் அலட்சியப்படுத்தக் கூடியதல்ல குழந்தைகளின் ஒவ்வாமை மூக்கால் வடிதல்.
aarul- தளபதி
- பதிவுகள் : 1011
இணைந்தது : 02/10/2009
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|