Latest topics
» நிலா பாட்டுக்கள்by heezulia Today at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
+4
krishnanramadurai
பழ.முத்துராமலிங்கம்
T.N.Balasubramanian
M.Jagadeesan
8 posters
Page 6 of 8
Page 6 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
First topic message reminder :
புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
=====================================
உனது முகமோ உதய நிலவு
மனது முழுது முனது - நினைவே
உனது பிரிவா லுருகு மெனது
மனதை யறியாயோ நீ !
புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
=====================================
உனது முகமோ உதய நிலவு
மனது முழுது முனது - நினைவே
உனது பிரிவா லுருகு மெனது
மனதை யறியாயோ நீ !
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
இனி வெண்பாவில் பயின்று வரும் சீர்களைப்பற்றிப் பார்ப்போம் .
வெண்பாவில் மாச்சீர் , விளச்சீர் , காய்சசீர் ஆகிய சீர்கள் பயின்று வரும் . அதாவது தேமா, புளிமா , கருவிளம் , கூவிளம் ஆகிய ஈரசைச் சீர்களும் , தேமாங்காய் , கருவிளங்காய் , கூவிளங்காய் , புளிமாங்காய் ஆகிய மூவசைச் சீர்களும் பயின்று வரும் .
நேர் நேர் > தேமா
நிரை நேர் > புளிமா
நிரை நிரை > கருவிளம்
நேர் நிரை > கூவிளம்
நேர் நேர் நேர் > தேமாங்காய்
நிரை நிரை நேர் > கருவிளங்காய்
நேர் நிரை நிரை > கூவிளங்காய்
நிரை நேர் நேர் > புளிமாங்காய்
வெண்பாவில் கனிச்சீர் வராது . இனி ஒரு குறள் வெண்பாவை எப்படி இயற்றுவது என்று பார்ப்போம் .
வெண்பாவில் மாச்சீர் , விளச்சீர் , காய்சசீர் ஆகிய சீர்கள் பயின்று வரும் . அதாவது தேமா, புளிமா , கருவிளம் , கூவிளம் ஆகிய ஈரசைச் சீர்களும் , தேமாங்காய் , கருவிளங்காய் , கூவிளங்காய் , புளிமாங்காய் ஆகிய மூவசைச் சீர்களும் பயின்று வரும் .
நேர் நேர் > தேமா
நிரை நேர் > புளிமா
நிரை நிரை > கருவிளம்
நேர் நிரை > கூவிளம்
நேர் நேர் நேர் > தேமாங்காய்
நிரை நிரை நேர் > கருவிளங்காய்
நேர் நிரை நிரை > கூவிளங்காய்
நிரை நேர் நேர் > புளிமாங்காய்
வெண்பாவில் கனிச்சீர் வராது . இனி ஒரு குறள் வெண்பாவை எப்படி இயற்றுவது என்று பார்ப்போம் .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
ஈரசைச்சீர் , இயற்சீர் என்றும் , ஆசிரியச்சீர் என்றும் அழைப்பார்கள் . ஆசிரியப்பாவில் ஈரசைச்சீர் அதிகம் வருவதால் , ஈரசைச்சீரை ஆசிரியச்சீர் என்று அழைப்பார்கள் .
ஒரு குறட்பாவில் ஏழு சீர்கள் உண்டு என்பது நமக்குத் தெரியும் . நின்றசீர் இறுதியில் நேரசை இருந்தால் , வரும் சீரின் முதலில் நிரையசை வரவேண்டும் . நின்றசீரின் இறுதியில் நிரை வந்தால் , வரும் சீரின் முதலில் நேர் வரவேண்டும் . நின்றசீர் காய்ச்சீராக இருந்தால் , வரும்சீரின் முதலில் நேர் வரவேண்டும் .
சுருக்கமாக
மா முன் நிரை
விள முன் நேர்
வரவேண்டும் . இதை இயற்சீர் வெண்டளை என்பார்கள் .
காய் முன் நேர் வருவது வெண்சீர் வெண்டளை எனப்படும் .
எல்லோரும் வெண்பா எளிதில் எழுதலாம்
நில்லாமல் இன்றே தொடங்கு .
இந்தக் குறட்பாவில்
எல்லோரும் > நேர் நேர் நேர் > தேமாங்காய்
வெண்பா > நேர் நேர் > தேமா
காய் முன் நேர் வருவது காண்க .
வெண்பா > நேர் நேர் > தேமா
எளிதில் > நிரை நேர் > புளிமா
மா முன் நிரை வருவது காண்க .
எளிதில் > நிரை நேர் > புளிமா
எழுதலாம் > நிரை நிரை > கருவிளம்
மா முன் நிரை வருவது காண்க
எழுதலாம் > நிரை நிரை > கருவிளம்
நில்லாமல் > நேர் நேர் நேர் > தேமாங்காய்
விள முன் நேர் வருவது காண்க .
நில்லாமல் > நேர் நேர் நேர் > தேமாங்காய்
இன்றே > நேர் நேர் > தேமா
காய் முன் நேர் வருவது காண்க .
இன்றே > நேர் நேர் > தேமா
தொடங்கு .> பிறப்பு என்னும் வாய்ப்பாடு
மா முன் நிரை வந்தது .
இவ்வாறு பல குறட்பாக்களை எழுதிப் பழகினால் முழு வெண்பா எழுதுவது எளிதாகும் .
ஒரு குறட்பாவில் ஏழு சீர்கள் உண்டு என்பது நமக்குத் தெரியும் . நின்றசீர் இறுதியில் நேரசை இருந்தால் , வரும் சீரின் முதலில் நிரையசை வரவேண்டும் . நின்றசீரின் இறுதியில் நிரை வந்தால் , வரும் சீரின் முதலில் நேர் வரவேண்டும் . நின்றசீர் காய்ச்சீராக இருந்தால் , வரும்சீரின் முதலில் நேர் வரவேண்டும் .
சுருக்கமாக
மா முன் நிரை
விள முன் நேர்
வரவேண்டும் . இதை இயற்சீர் வெண்டளை என்பார்கள் .
காய் முன் நேர் வருவது வெண்சீர் வெண்டளை எனப்படும் .
எல்லோரும் வெண்பா எளிதில் எழுதலாம்
நில்லாமல் இன்றே தொடங்கு .
இந்தக் குறட்பாவில்
எல்லோரும் > நேர் நேர் நேர் > தேமாங்காய்
வெண்பா > நேர் நேர் > தேமா
காய் முன் நேர் வருவது காண்க .
வெண்பா > நேர் நேர் > தேமா
எளிதில் > நிரை நேர் > புளிமா
மா முன் நிரை வருவது காண்க .
எளிதில் > நிரை நேர் > புளிமா
எழுதலாம் > நிரை நிரை > கருவிளம்
மா முன் நிரை வருவது காண்க
எழுதலாம் > நிரை நிரை > கருவிளம்
நில்லாமல் > நேர் நேர் நேர் > தேமாங்காய்
விள முன் நேர் வருவது காண்க .
நில்லாமல் > நேர் நேர் நேர் > தேமாங்காய்
இன்றே > நேர் நேர் > தேமா
காய் முன் நேர் வருவது காண்க .
இன்றே > நேர் நேர் > தேமா
தொடங்கு .> பிறப்பு என்னும் வாய்ப்பாடு
மா முன் நிரை வந்தது .
இவ்வாறு பல குறட்பாக்களை எழுதிப் பழகினால் முழு வெண்பா எழுதுவது எளிதாகும் .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
முத்துராமலிங்கம் ஐயாவின் பதிவில் வாய்பாடு பற்றி பார்த்தேன்.ஒன்றும் புரியவில்லை. இப்போது விளக்கம் சற்றே புரிகிறது.
முதலில் அடிப்படை தமிழ் இலக்கணம் சிறிதாவது தெரிந்திருக்க வேண்டும்.
குற்றெழுத்து,ஒற்றெழுத்து,குற்றியலுகரம்,குற்றியலிகரம்,சார்பெழுத்து…...என பல சொல்லப்படுகிறது. இதைப் படித்துக் கொண்டு தொடருகிறேன்.நன்றி ஐயா.
அசை பிரித்தல்
பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
கலந்தீமை யாற்றிரிந் தற்று.
பண்பிலான்>பண்+பிலான் - நேர் நிரை
பெற்ற>பெற்+ற – நேர் நேர்
பெருஞ்செல்வம்>பெருஞ்+செல்+வம் - நேர் நேர் நேர்
நன்பால்>நன்+பால் - நேர் நேர்
கலந்தீமை>கலந்+தீ+மை -நேர் நேர் நேர்
யாற்றிரிந்>யாற்+றிரிந் - நேர் நேர்
தற்று>தற்+று - நேர் நேர் - காசு
களித்தானைக் காரணம் காட்டுதல் , கீழ்நீர்க்
குளித்தானைத் தீத்துரீஇ யற்று .
களித்தானைக்>களித்+தா+னைக் -நிரை நேர் நேர்
காரணம்>கா+ரணம் -நேர் நிரை
காட்டுதல்>காட்+டுதல் -நேர் நிரை
கீழ்நீர்க்>கீழ்+நீர்க் - நேர் நேர்
குளித்தானைத்>குளித்+தா+னைத் -நிரை நேர் நேர்
தீத்துரீஇ>தீத்+துரீ+இ -நேர் நேர் நேர்
யற்று>யற்று - காசு
நன்றி.
முதலில் அடிப்படை தமிழ் இலக்கணம் சிறிதாவது தெரிந்திருக்க வேண்டும்.
குற்றெழுத்து,ஒற்றெழுத்து,குற்றியலுகரம்,குற்றியலிகரம்,சார்பெழுத்து…...என பல சொல்லப்படுகிறது. இதைப் படித்துக் கொண்டு தொடருகிறேன்.நன்றி ஐயா.
அசை பிரித்தல்
பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
கலந்தீமை யாற்றிரிந் தற்று.
பண்பிலான்>பண்+பிலான் - நேர் நிரை
பெற்ற>பெற்+ற – நேர் நேர்
பெருஞ்செல்வம்>பெருஞ்+செல்+வம் - நேர் நேர் நேர்
நன்பால்>நன்+பால் - நேர் நேர்
கலந்தீமை>கலந்+தீ+மை -நேர் நேர் நேர்
யாற்றிரிந்>யாற்+றிரிந் - நேர் நேர்
தற்று>தற்+று - நேர் நேர் - காசு
களித்தானைக் காரணம் காட்டுதல் , கீழ்நீர்க்
குளித்தானைத் தீத்துரீஇ யற்று .
களித்தானைக்>களித்+தா+னைக் -நிரை நேர் நேர்
காரணம்>கா+ரணம் -நேர் நிரை
காட்டுதல்>காட்+டுதல் -நேர் நிரை
கீழ்நீர்க்>கீழ்+நீர்க் - நேர் நேர்
குளித்தானைத்>குளித்+தா+னைத் -நிரை நேர் நேர்
தீத்துரீஇ>தீத்+துரீ+இ -நேர் நேர் நேர்
யற்று>யற்று - காசு
நன்றி.
Guest- Guest
Re: புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
பெருஞ்செல்வம் > நிரை நேர் நேர் > புளிமாங்காய்
கலந்தீமை > நிரை நேர் நேர் > புளிமாங்காய்
யாற்றிரிந் > நேர் நிரை > கூவிளம்
தற்று > காசு
காரணம் > நேர் நிரை > கூவிளம்
தீத்துரீஇ > நேர் நிரை நேர் > கூவிளங்காய்
தாங்கள் செய்த தவறுகளைச் சுட்டிக் காட்டியுள்ளேன் . இரண்டு குறில்கள் தனித்து வந்தாலும் , ஒற்றடுத்து வந்தாலும் நிரையசை . குறில் நெடில் இணைந்து வந்தாலும் நிரையசையாகும் .
கலந்தீமை > நிரை நேர் நேர் > புளிமாங்காய்
யாற்றிரிந் > நேர் நிரை > கூவிளம்
தற்று > காசு
காரணம் > நேர் நிரை > கூவிளம்
தீத்துரீஇ > நேர் நிரை நேர் > கூவிளங்காய்
தாங்கள் செய்த தவறுகளைச் சுட்டிக் காட்டியுள்ளேன் . இரண்டு குறில்கள் தனித்து வந்தாலும் , ஒற்றடுத்து வந்தாலும் நிரையசை . குறில் நெடில் இணைந்து வந்தாலும் நிரையசையாகும் .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
நன்றி ஐயா.
தனிக் குறில் (க-ப….) சீரின் தொடக்கத்தில்,நடுவில்,இறுதியில் எங்கே தனியாக வரலாம்?
ஐ எழுத்து (கை,நை….னை..) எங்கே தனியாக வரலாம்?
புதிதாக தேமாங்காய்…...என்றெல்லாம் சொல்கிறீர்களே.அவற்றை ஏன் தெரிந்து கொள்ள வேண்டும்? அசை பிரித்தால் போதாதா?
தனிக் குறில் (க-ப….) சீரின் தொடக்கத்தில்,நடுவில்,இறுதியில் எங்கே தனியாக வரலாம்?
ஐ எழுத்து (கை,நை….னை..) எங்கே தனியாக வரலாம்?
புதிதாக தேமாங்காய்…...என்றெல்லாம் சொல்கிறீர்களே.அவற்றை ஏன் தெரிந்து கொள்ள வேண்டும்? அசை பிரித்தால் போதாதா?
Guest- Guest
Re: புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
தனிக்குறில் ஒரு சீரின் கடைசியில்தான் வரும் ; மற்ற இடங்களில் ஒற்றடுத்து வரும் .
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு .
என்ற குறட்பாவில்
அக / ர > தனிக்குறில் இறுதியில் வந்தது .
முத / ல > தனிக்குறில் இறுதியில் வந்தது .
எழுத் / தெல் / லாம் > தனிக்குறில் இடையில் ஒற்றடுத்து வந்தது .
ஆ / தி > தனிக்குறில் இறுதியில் வந்தது .
பக / வன் . தனிக்குறில் இறுதியில் ஒற்றடுத்து வந்தது .
கைநாட்டு > கை / நாட் / டு - சொல்லின் முதலில் கை வந்தது .
( க் + ஐ = கை )
வாழ்க்கை > வாழ்க் / கை - சொல்லின் இறுதியில் கை வந்தது .
சீர்களை இனம் கண்டு கொள்வதற்காகப் பெயர் வைக்கப்படுகிறது .
உதாரணமாக
நேர் நேர் > தேமா எனப்படும் . " தேமா " என்ற சொல்லை அசை பிரித்தாலே நேர் நேர் என்று வரும்
இதுபோல இரண்டு சீர் மற்றும் மூன்று சீர்களுக்குக் காரண காரியத்தோடு பெயரிட்டுள்ளனர் என்பதை அறியவேண்டும் .
தேமாங்காய் என்ற சொல் நேர் நேர் நேர் என்று வருகின்ற சொல்லைக் குறிக்கும் .
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு .
என்ற குறட்பாவில்
அக / ர > தனிக்குறில் இறுதியில் வந்தது .
முத / ல > தனிக்குறில் இறுதியில் வந்தது .
எழுத் / தெல் / லாம் > தனிக்குறில் இடையில் ஒற்றடுத்து வந்தது .
ஆ / தி > தனிக்குறில் இறுதியில் வந்தது .
பக / வன் . தனிக்குறில் இறுதியில் ஒற்றடுத்து வந்தது .
கைநாட்டு > கை / நாட் / டு - சொல்லின் முதலில் கை வந்தது .
( க் + ஐ = கை )
வாழ்க்கை > வாழ்க் / கை - சொல்லின் இறுதியில் கை வந்தது .
சீர்களை இனம் கண்டு கொள்வதற்காகப் பெயர் வைக்கப்படுகிறது .
உதாரணமாக
நேர் நேர் > தேமா எனப்படும் . " தேமா " என்ற சொல்லை அசை பிரித்தாலே நேர் நேர் என்று வரும்
இதுபோல இரண்டு சீர் மற்றும் மூன்று சீர்களுக்குக் காரண காரியத்தோடு பெயரிட்டுள்ளனர் என்பதை அறியவேண்டும் .
தேமாங்காய் என்ற சொல் நேர் நேர் நேர் என்று வருகின்ற சொல்லைக் குறிக்கும் .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
மேற்கோள் செய்த பதிவு: 1261068மூர்த்தி wrote:
முதலில் அடிப்படை தமிழ் இலக்கணம் சிறிதாவது தெரிந்திருக்க வேண்டும்.
குற்றெழுத்து,ஒற்றெழுத்து,குற்றியலுகரம்,குற்றியலிகரம்,சார்பெழுத்து…...என பல சொல்லப்படுகிறது. இதைப் படித்துக் கொண்டு தொடருகிறேன்.நன்றி ஐயா.
.
நீச்சல் தெரிந்தபின் நீந்துவோம் என்னாது
மூச்சடக்கி ஆற்றில் குதி .
பொருள் : நீச்சல் தெரிந்துகொண்டு நீந்துகிறேன் என்று சொன்னால் , நீச்சலைக் கற்றுக்கொள்ளவே முடியாது . ஆற்றிலே குதித்துதான் நீச்சலைக் கற்றுக்கொள்ள வேண்டும் .
அதுபோல தமிழிலக்கணம் கற்றுக்கொண்ட பிறகு யாப்பிலக்கணம் கற்றுக்கொள்கிறேன் என்றால் , செய்யுள் இலக்கணம் கற்றுக்கொள்ள முடியாது .
யாப்பிலக்கணம் கற்றுக்கொள்ளும்போதே , தமிழிலக்கணமும் கற்றுக் கொள்ளலாம் .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
பட்டப் பகலில் பருவப்பெண் கத்தியால்
வெட்டிக் கொலையுண்டாள் நேற்று .
இந்தக் குறட்பாவில்
பட் / டப் > நேர் நேர் > தேமா
பக / லில் > நிரை நேர் > புளிமா
பரு / வப் / பெண் > நிரை நேர் நேர் > புளிமாங்காய்
கத் / தியால் > நேர் நிரை > கூவிளம்
வெட் / டிக் > நேர் நேர் > தேமா
கொலை / யுண் / டாள் > நிரை நேர் நேர் > புளிமாங்காய்
நேற்று > நேர்பு என்னும் வாய்ப்பாடு .
முதல் சீரும் மூன்றாம் சீரும் மோனை நயம் பெற்றும் , முதல் சீரும் , ஐந்தாம் சீரும் இரண்டாம் எழுத்து ஒன்றி எதுகை நயம் பெற்றும் வந்துள்ளது .
என்று வெண்பா இலக்கணம் பயின்று வந்துள்ளது .
மா முன் நிரை
விள முன் நேர் வருவது இயற்சீர் வெண்டளையாகும் .
காய் முன் நேர் வருவது வெண்சீர் வெண்டளையாகும் .
வெட்டிக் கொலையுண்டாள் நேற்று .
இந்தக் குறட்பாவில்
பட் / டப் > நேர் நேர் > தேமா
பக / லில் > நிரை நேர் > புளிமா
பரு / வப் / பெண் > நிரை நேர் நேர் > புளிமாங்காய்
கத் / தியால் > நேர் நிரை > கூவிளம்
வெட் / டிக் > நேர் நேர் > தேமா
கொலை / யுண் / டாள் > நிரை நேர் நேர் > புளிமாங்காய்
நேற்று > நேர்பு என்னும் வாய்ப்பாடு .
முதல் சீரும் மூன்றாம் சீரும் மோனை நயம் பெற்றும் , முதல் சீரும் , ஐந்தாம் சீரும் இரண்டாம் எழுத்து ஒன்றி எதுகை நயம் பெற்றும் வந்துள்ளது .
என்று வெண்பா இலக்கணம் பயின்று வந்துள்ளது .
மா முன் நிரை
விள முன் நேர் வருவது இயற்சீர் வெண்டளையாகும் .
காய் முன் நேர் வருவது வெண்சீர் வெண்டளையாகும் .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
இதற்கு பெயர் "நடப்பு குறட்பாவோ" ??
ரமணியன்
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
Re: புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
ஆம் ஐயா !
இப்படியும் குறட்பா மீது மற்றவர்களுக்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தலாம் அல்லவா ?
இப்படியும் குறட்பா மீது மற்றவர்களுக்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தலாம் அல்லவா ?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Page 6 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» நூல்கள் இல்லாத வீடு சன்னல் கதவு இல்லாத அறைக்கு சமம்...!
» வெள்ளிமலை வெண்பா
» காளீய வெண்பா
» காதல் வெண்பா- தொடர்வேன்
» காதல் வெண்பா- புள்ளிக்கோலமே
» வெள்ளிமலை வெண்பா
» காளீய வெண்பா
» காதல் வெண்பா- தொடர்வேன்
» காதல் வெண்பா- புள்ளிக்கோலமே
Page 6 of 8
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|