Latest topics
» நிலா பாட்டுக்கள்by heezulia Today at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
+4
krishnanramadurai
பழ.முத்துராமலிங்கம்
T.N.Balasubramanian
M.Jagadeesan
8 posters
Page 2 of 8
Page 2 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
First topic message reminder :
புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
=====================================
உனது முகமோ உதய நிலவு
மனது முழுது முனது - நினைவே
உனது பிரிவா லுருகு மெனது
மனதை யறியாயோ நீ !
புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
=====================================
உனது முகமோ உதய நிலவு
மனது முழுது முனது - நினைவே
உனது பிரிவா லுருகு மெனது
மனதை யறியாயோ நீ !
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
மேற்கோள் செய்த பதிவு: 1260111M.Jagadeesan wrote:முதலில் நேரிசை வெண்பாவைப் பார்ப்போம் .
பேருந்துக் கட்டணத்தைப் பேயரசு மாற்றியதால்
ஊருக்குச் செல்வோர் உழல்கின்றார் - பாருக்குள்
இல்லாத கூத்தெல்லாம் இங்கே நடக்குதடா
நல்லோர்க்கு வாழ்வில்லை இங்கு .
நேரிசை வெண்பா நான்கு அடிகளைக் கொண்டதாகும் . முதல் மூன்று அடிகள் அளவடியாகவும் ( நான்கு சீர்கள் கொண்ட அடியை அளவடி என்போம் . ) நான்காம் அடி சிந்தடியாகவும் ( மூன்று சீர்கள் கொண்டது சிந்தடி ) இருந்து தனிச்சொல் பெற்றுவரும் . இந்த வெண்பாவில் தனிச்சொல் " பாருக்குள் " என்பதாகும் .
இன்னிசை வெண்பா என்பது தனிச்சொல் பெறாமல் வருவது .
நேரிசை வெண்பாவில் பேருந்து கட்டண உயர்வை வயிற்று எரிச்சலுடன் -' பாருங்கள்' என்ற தனிச்சொல்
விளக்கம் அருமை
நன்றி ஜெகதீஷ்
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
மேற்கோள் செய்த பதிவு: 1260103M.Jagadeesan wrote:மருட்பா
========
வெண்பாவும் , ஆசிரியப்பாவும் கலந்து வருவது மருட்பா எனப்படும் .
பொய்களைச் சொல்லாதே ! பாவங்கள் சேர்க்காதே !
பொய்களினால் நன்மை பிறந்திடு மென்றாலும்
மெய்யே வலிதாகும் ; மேன்மைகள் தந்திடுமே !
உய்யும் வழிக்குன்னை உந்துமே ஆதலினால்
மனத்துடன் வாய்மை மொழிந்தால்
மற்றொரு மகாத்மா உன்றன் உருவே !
மருட்பா, அதிமுக ஆட்சியாளர்களுக்கு
பொருந்தியுள்ளது.
பொய்யா?
மெய்யா? உண்மையில் பொய்யே!!
அருமை நன்றி ஜெகதீஷ்
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
குறளில் குற்றம் காணாதீர் ( நேரிசை வெண்பா )
===================================================
குறளின்பம் துய்க்காது குற்றங்கள் காணுவது
அறமல்ல என்ப தறிவீர் - திருமகளே !
அப்பத்தைத் தின்னாது ஆழ்குழி எண்ணுவது
தப்பன்றோ சான்றோர் தமக்கு .
பொருள் : சுவையான அப்பம் கிடைத்தால் , அதை ருசித்து சாப்பிடவேண்டுமே தவிர , அதிலுள்ள குழிகளை எண்ணிக்கொண்டு இருப்பது மடமையாகும் . அதுபோல திருக்குறளைப் படிக்குங்கால் , அதன் சொற்சுவை , பொருட்சுவை மற்றும் இலக்கியச் சுவையை அனுபவிக்கவேண்டுமே தவிர , குற்றம் காணுதல் சான்றோர்க்கு இழுக்காகும் .
===================================================
குறளின்பம் துய்க்காது குற்றங்கள் காணுவது
அறமல்ல என்ப தறிவீர் - திருமகளே !
அப்பத்தைத் தின்னாது ஆழ்குழி எண்ணுவது
தப்பன்றோ சான்றோர் தமக்கு .
பொருள் : சுவையான அப்பம் கிடைத்தால் , அதை ருசித்து சாப்பிடவேண்டுமே தவிர , அதிலுள்ள குழிகளை எண்ணிக்கொண்டு இருப்பது மடமையாகும் . அதுபோல திருக்குறளைப் படிக்குங்கால் , அதன் சொற்சுவை , பொருட்சுவை மற்றும் இலக்கியச் சுவையை அனுபவிக்கவேண்டுமே தவிர , குற்றம் காணுதல் சான்றோர்க்கு இழுக்காகும் .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
தமிழ்த் தாத்தா உ .வே .சா
==============================
ஓடினாய் ஓடினாய் ஓலைச் சுவடிகளைத்
தேடியே உன்றன்கால் சலித்தாய் - வாடும்
பயிருக்குப் பெய்த மழைபோல் தமிழின்
உயிர்செழிக்க வந்தவனே வாழ்க !
இந்த நேரிசை வெண்பா " வாடும் " என்ற தனிச்சொல் பெற்று வந்துள்ளது .
==============================
ஓடினாய் ஓடினாய் ஓலைச் சுவடிகளைத்
தேடியே உன்றன்கால் சலித்தாய் - வாடும்
பயிருக்குப் பெய்த மழைபோல் தமிழின்
உயிர்செழிக்க வந்தவனே வாழ்க !
இந்த நேரிசை வெண்பா " வாடும் " என்ற தனிச்சொல் பெற்று வந்துள்ளது .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
பாயில் படுக்கும் சுகம் :
========================
மெத்தையில் தூங்கினால் மேனிக்குக் கேடாகும்
நித்திரை வேண்டா நிலம்தன்னில் - முத்தே நீ
நோயில் படுத்தாலும் நோக்காடு போய்விடுமே
பாயில் படுத்த பொழுது .
பொருள் : முத்துப் போன்ற அழகிய பெண்ணே !
=========
மெத்தையில் தூங்குவது உடல்நலத்திற்கு துன்பம்தரும் . வெற்றுத் தரையிலும் படுத்து உறங்கக்கூடாது . தரையிலே பாய் விரித்துப் படுத்தால் , நோயினால் ஏற்படும் துன்பங்களெல்லாம் போய்விடும் .
========================
மெத்தையில் தூங்கினால் மேனிக்குக் கேடாகும்
நித்திரை வேண்டா நிலம்தன்னில் - முத்தே நீ
நோயில் படுத்தாலும் நோக்காடு போய்விடுமே
பாயில் படுத்த பொழுது .
பொருள் : முத்துப் போன்ற அழகிய பெண்ணே !
=========
மெத்தையில் தூங்குவது உடல்நலத்திற்கு துன்பம்தரும் . வெற்றுத் தரையிலும் படுத்து உறங்கக்கூடாது . தரையிலே பாய் விரித்துப் படுத்தால் , நோயினால் ஏற்படும் துன்பங்களெல்லாம் போய்விடும் .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
வேம்பின் மகிமை ( நேரிசை வெண்பா )
==========================================
வேம்பிற் கிணையுண்டோ வேறொரு பற்பசை
ஓம்புக நித்தம் ஒருவேளை - தேம்பாவாய்
கல்லையும் மெல்லக் கடித்துப் பொடியாக்கும்
பல்லைக் கொடுக்குமே பார் .
==========================================
வேம்பிற் கிணையுண்டோ வேறொரு பற்பசை
ஓம்புக நித்தம் ஒருவேளை - தேம்பாவாய்
கல்லையும் மெல்லக் கடித்துப் பொடியாக்கும்
பல்லைக் கொடுக்குமே பார் .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
நன்றி ஐயா.கேட்டதை விட அதிகமாகவே அள்ளித் தந்திருக்கிறீர்கள்.சந்தேகம் பல.
வெண்பா என்றால் என்ன? அதற்கு ஏன் வெண்பா என பெயர் வைத்தார்கள்.
குறளையும் வெண்பா என்கிறார்களே.அப்படியானால் வெண்பாவில் எத்தனை வகை உண்டு.
வெண்பா என்றால் என்ன? அதற்கு ஏன் வெண்பா என பெயர் வைத்தார்கள்.
குறளையும் வெண்பா என்கிறார்களே.அப்படியானால் வெண்பாவில் எத்தனை வகை உண்டு.
Guest- Guest
Re: புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
வெண்பா
குறள் வெண்பா
சிந்தியல் வெண்பா
நேரிசை வெண்பா
இன்னிசை வெண்பா
பஃறொடை வெண்பா
கலிவெண்பா
என்று பலவகைப்படும் .
வெண்பா = வெண் + பா என்று பிரிக்கலாம் . வெண்மை என்றால் தூய்மை .
எனவே வெண்பா என்றால் வெள்ளைப்பா என்றும் தூய்மையான பாட்டு என்றும் குறிப்பிடலாம் .
வெண்பா இலக்கணம் திருக்குறளுக்கும் பொருந்தும் . நான்கடிகளில் இருந்த வெண்பாவைச் சுருக்கி இரண்டடிகளாக்கிக் கவிதை உலகில் புதுமை செய்தவர் வள்ளுவர் .
வெண்பாவிற்கு உரிய ஓசை செப்பலோசை ஆகும் . ஒருவர் மற்றவர்க்குச் சொல்வதுபோல வெண்பா இருப்பதால் , இதன் ஓசை செப்பலோசை ஆகும் . செப்பு என்றால் சொல்லு என்று பொருள் . தெலுங்கு மொழியிலும் செப்பு என்றால் சொல்லு என்று பொருள்படும் .
வெண்பா இலக்கணம் எளிது என்றாலும் , சிறிது கவனக் குறைவாக இருந்தால் , நம்மைக் கவிழ்த்துவிடும் . கிரிக்கெட் விளையாட்டை A Game of rules என்று குறிப்பிடுவார்கள் . அது வெண்பாவிற்கும் பொருந்தும் .இலக்கண விதிகள் நிரம்ப உண்டு . அவற்றையெல்லாம் பின்வரும் பதிவுகளில் பார்க்கலாம் .
குறள் வெண்பா
சிந்தியல் வெண்பா
நேரிசை வெண்பா
இன்னிசை வெண்பா
பஃறொடை வெண்பா
கலிவெண்பா
என்று பலவகைப்படும் .
வெண்பா = வெண் + பா என்று பிரிக்கலாம் . வெண்மை என்றால் தூய்மை .
எனவே வெண்பா என்றால் வெள்ளைப்பா என்றும் தூய்மையான பாட்டு என்றும் குறிப்பிடலாம் .
வெண்பா இலக்கணம் திருக்குறளுக்கும் பொருந்தும் . நான்கடிகளில் இருந்த வெண்பாவைச் சுருக்கி இரண்டடிகளாக்கிக் கவிதை உலகில் புதுமை செய்தவர் வள்ளுவர் .
வெண்பாவிற்கு உரிய ஓசை செப்பலோசை ஆகும் . ஒருவர் மற்றவர்க்குச் சொல்வதுபோல வெண்பா இருப்பதால் , இதன் ஓசை செப்பலோசை ஆகும் . செப்பு என்றால் சொல்லு என்று பொருள் . தெலுங்கு மொழியிலும் செப்பு என்றால் சொல்லு என்று பொருள்படும் .
வெண்பா இலக்கணம் எளிது என்றாலும் , சிறிது கவனக் குறைவாக இருந்தால் , நம்மைக் கவிழ்த்துவிடும் . கிரிக்கெட் விளையாட்டை A Game of rules என்று குறிப்பிடுவார்கள் . அது வெண்பாவிற்கும் பொருந்தும் .இலக்கண விதிகள் நிரம்ப உண்டு . அவற்றையெல்லாம் பின்வரும் பதிவுகளில் பார்க்கலாம் .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
நன்றி ஐயா. கொஞ்சம் முரண்டு பிடிக்கிறது. ஈற்றடி என்றால் இறுதி-கடைசி அடியாக கொள்ளலாமா?
அடி என்றால் வரியாக கொள்ளலாமா? அப்படியானால் சீர் என்பது என்ன? முச்சீர் நாற்சீர் என்கிறார்களே! சீர் என்று நீங்கள் குறிப்பிட்டது என்ன? சீர் என்றால் ஒழுங்கான/சொல் என்று பொருள் அகராதியில் சொல்லப்படுகிறது.ஆனால் விக்கிபீடியாவில் சீர் என்றால் ஓரசைச்சீர்,ஈரசைச்சீர்,மூவசைச்சீர்,நாலசைச்சீர் என சொல்லப்படுகிறது.
வெண்பா நான்கு அடிகளை வரிகளை மட்டும் கொண்டதாக இருக்குமா? மேலே பஃறொடை என சொல்லப்பட்டதே.அகராதியில் பஃறொடை என்பதற்கு பல அடிகள் என காட்டப்பட்டுள்ளது. அப்படியானால் பஃறொடை வெண்பாக்கள் என்றால் பல அடிகளைக் கொண்ட வெண்பாக்கள் என பொருள் கொள்ளலாமா?
பஃறொடை க்கு பொருள் தேடியபோது, சவலை வெண்பா என ஒன்று காட்டப்பட்டுள்ளதே. அது என்ன? சவலை என்றால் அகராதிப்படி ஊனம் என பொருள் சொல்லப்படுகிறது.
சிந்தியலில் இன்னிசை,நேரிசை இருப்பது போல் மற்றைய வெண்பாக்களிலும் இன்னிசை,நேரிசை என உண்டா?
ஒரு சந்தேகம், தனிச்சொல் வருவது நேரிசை வெண்பா என்றால்,இரண்டு குறள் வெண்பாக்களை பொருத்தமான தனிச்சொல் சேர்த்து நான்கு அடிகளைக் கொண்ட நேரிசை வெண்பாவாக மாற்ற முடியுமா?
அடி என்றால் வரியாக கொள்ளலாமா? அப்படியானால் சீர் என்பது என்ன? முச்சீர் நாற்சீர் என்கிறார்களே! சீர் என்று நீங்கள் குறிப்பிட்டது என்ன? சீர் என்றால் ஒழுங்கான/சொல் என்று பொருள் அகராதியில் சொல்லப்படுகிறது.ஆனால் விக்கிபீடியாவில் சீர் என்றால் ஓரசைச்சீர்,ஈரசைச்சீர்,மூவசைச்சீர்,நாலசைச்சீர் என சொல்லப்படுகிறது.
வெண்பா நான்கு அடிகளை வரிகளை மட்டும் கொண்டதாக இருக்குமா? மேலே பஃறொடை என சொல்லப்பட்டதே.அகராதியில் பஃறொடை என்பதற்கு பல அடிகள் என காட்டப்பட்டுள்ளது. அப்படியானால் பஃறொடை வெண்பாக்கள் என்றால் பல அடிகளைக் கொண்ட வெண்பாக்கள் என பொருள் கொள்ளலாமா?
பஃறொடை க்கு பொருள் தேடியபோது, சவலை வெண்பா என ஒன்று காட்டப்பட்டுள்ளதே. அது என்ன? சவலை என்றால் அகராதிப்படி ஊனம் என பொருள் சொல்லப்படுகிறது.
சிந்தியலில் இன்னிசை,நேரிசை இருப்பது போல் மற்றைய வெண்பாக்களிலும் இன்னிசை,நேரிசை என உண்டா?
ஒரு சந்தேகம், தனிச்சொல் வருவது நேரிசை வெண்பா என்றால்,இரண்டு குறள் வெண்பாக்களை பொருத்தமான தனிச்சொல் சேர்த்து நான்கு அடிகளைக் கொண்ட நேரிசை வெண்பாவாக மாற்ற முடியுமா?
Guest- Guest
Re: புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
ஒவ்வொன்றாகப் பார்ப்போம் .
பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான்தருவேன் - கோலம்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்
சங்கத் தமிழ்மூன்றும் தா .
இது ஒரு நேரிசை வெண்பாவாகும் . ஈற்றடி என்பது இறுதியில் உள்ள அடியாகும் .
" சங்கத் தமிழ்மூன்றும் தா " என்பது ஈற்றடியாகும் . ஒவ்வொரு அடியிலும் நான்கு சீர்கள் இருக்கும். இறுதி அடியில் மட்டும் மூன்று சீர்கள் இருக்கும் .
சீர் என்றால் ஒழுங்கு என்று பொருள் .ஒவ்வொரு சீரும் பல அசைகளால் ஆனது . உதாரணமாக
பாலும் என்ற சொல்லில் இரண்டு அசைகள் உள்ளன. " பா " ஒரு அசை " லும் " மற்றோர் அசை .
தெளிதேனும் என்ற சொல்லில் மூன்று அசைகள் உள்ளன. அதாவது தெளிதேனும் என்ற சொல்லைச் சொல்வதற்கு நாம் மூன்று முயற்சிகள் மேற்கொள்கிறோம் என்பது பொருள் .
இதுபோல வெண்பாவில் ஈரசைச் சீர் , மூவசைச் சீர் பயின்று வரும் . நாலசைச் சீர் வெண்பாவில் வராது . ஈரசைச் சீரை தேமா என்றும் , புளிமா என்றும் , கருவிளம் என்றும் கூவிளம் என்றும் சொல்வோம் . வெண்பாவில் பயின்று வரும் மூவசைச் சீர் காய்ச்சீர் மட்டுமே . அதாவது
தேமாங்காய் , புளிமாங்காய் , கருவிளங்காய் , கூவிளங்காய் என்பன. கனிச்சீர் வெண்பாவில் பயின்று வராது . மற்றவை பிறகு சொல்கிறேன் .
முதலில் குழப்பமாக இருந்தாலும் , சிறிது ஊன்றிப் படிக்கத் தொடங்கினால் யாப்பிலக்கணம் எளிமையே !
பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான்தருவேன் - கோலம்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்
சங்கத் தமிழ்மூன்றும் தா .
இது ஒரு நேரிசை வெண்பாவாகும் . ஈற்றடி என்பது இறுதியில் உள்ள அடியாகும் .
" சங்கத் தமிழ்மூன்றும் தா " என்பது ஈற்றடியாகும் . ஒவ்வொரு அடியிலும் நான்கு சீர்கள் இருக்கும். இறுதி அடியில் மட்டும் மூன்று சீர்கள் இருக்கும் .
சீர் என்றால் ஒழுங்கு என்று பொருள் .ஒவ்வொரு சீரும் பல அசைகளால் ஆனது . உதாரணமாக
பாலும் என்ற சொல்லில் இரண்டு அசைகள் உள்ளன. " பா " ஒரு அசை " லும் " மற்றோர் அசை .
தெளிதேனும் என்ற சொல்லில் மூன்று அசைகள் உள்ளன. அதாவது தெளிதேனும் என்ற சொல்லைச் சொல்வதற்கு நாம் மூன்று முயற்சிகள் மேற்கொள்கிறோம் என்பது பொருள் .
இதுபோல வெண்பாவில் ஈரசைச் சீர் , மூவசைச் சீர் பயின்று வரும் . நாலசைச் சீர் வெண்பாவில் வராது . ஈரசைச் சீரை தேமா என்றும் , புளிமா என்றும் , கருவிளம் என்றும் கூவிளம் என்றும் சொல்வோம் . வெண்பாவில் பயின்று வரும் மூவசைச் சீர் காய்ச்சீர் மட்டுமே . அதாவது
தேமாங்காய் , புளிமாங்காய் , கருவிளங்காய் , கூவிளங்காய் என்பன. கனிச்சீர் வெண்பாவில் பயின்று வராது . மற்றவை பிறகு சொல்கிறேன் .
முதலில் குழப்பமாக இருந்தாலும் , சிறிது ஊன்றிப் படிக்கத் தொடங்கினால் யாப்பிலக்கணம் எளிமையே !
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Page 2 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» நூல்கள் இல்லாத வீடு சன்னல் கதவு இல்லாத அறைக்கு சமம்...!
» வெள்ளிமலை வெண்பா
» காளீய வெண்பா
» காதல் வெண்பா- தொடர்வேன்
» காதல் வெண்பா- புள்ளிக்கோலமே
» வெள்ளிமலை வெண்பா
» காளீய வெண்பா
» காதல் வெண்பா- தொடர்வேன்
» காதல் வெண்பா- புள்ளிக்கோலமே
Page 2 of 8
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|