ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏற்காட்டில் ஏலம் என்ற பெயரில் கொள்ளை போகும் பச்சை தங்கம் : இயற்கை ஆர்வலர்கள் வேதனை

3 posters

Go down

ஏற்காட்டில் ஏலம் என்ற பெயரில் கொள்ளை போகும் பச்சை தங்கம் : இயற்கை ஆர்வலர்கள் வேதனை Empty ஏற்காட்டில் ஏலம் என்ற பெயரில் கொள்ளை போகும் பச்சை தங்கம் : இயற்கை ஆர்வலர்கள் வேதனை

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Feb 18, 2018 7:48 pm

ஏற்காடு: சேலம் ஏற்காட்டில் ஏலம் என்ற பெயரில் பச்சைத்தங்கம் என்று வர்ணிக்கப்படும் மூங்கில்கள், கொள்ளை போவதாக இயற்கை ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மலைகளின் இளவரசி, ஏழைகளின் ஊட்டி என்று வர்ணிக்கப்படும் ஏற்காடு, தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக திகழ்கிறது. ஏற்காடு என்றவுடன் கண்ணுக்கு குளிர்ச்சியான இடங்கள் மட்டுமல்லாமல், விண்ணை மூட்டும் மூங்கில் மரங்களும் நினைவுகளில் வந்து போகும். இந்நிலையில் ஏலம் என்ற பெயரில் காய்ந்த மூங்கில்களை வெட்டிச் செல்ல அனுமதி பெற்றவர்கள், பச்சை மூங்கில்களை வெட்டிச் செல்வதும், அதை வனத்துறையினர் கண்டுகொள்ளாமல் இருப்பதும் இயற்கை ஆர்வலர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து ஏற்காட்டை சேர்ந்த இயற்கை ஆர்வலர்கள் கூறியது: மூங்கிலின் சிறப்புகள் குறித்து இளைய தலைமுறையினருக்கு அதிகம் தெரிய வாய்ப்பில்லை. அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரம், காமதேனு, வாரி வழங்கும் வள்ளல், பச்சை தங்கம் என்று மூங்கிலை குறிப்பிட்டால் அது மிகையல்ல. மூங்கில் அளவுக்கு லாபம் தரக்கூடிய தாவரம் வேறு எதுவும் இல்லை. கட்டுமானங்கள், நாற்காலிகள், பொம்மைகள், கூடைகள், பாய்கள், இசைக் கருவிகள் என்று மூங்கிலை சரியாக பயன்படுத்தும் நாடுகள், அதைக் கொண்டு அவர்களின் பொருளாதாரத்தை உயர்த்தி வருகின்றனர்.
ஆனால், ஏற்காட்டை பொறுத்தவரை மூங்கில்கள் கேட்பாரற்ற பொருளாகவே கிடக்கிறது. குப்பனூர் பாதையில் ஆயிரக்கணக்கான மூங்கில்கள் உள்ளது. இதில் காய்ந்த மூங்கில்களை வெட்டி எடுத்துக்கொள்ள, வனத்துறையினர் ஏலம் விட்டுள்ளனர். ஆனால் ஏலம் எடுத்தவர்கள், பச்சை மூங்கில்களையும் சேர்த்தே வெட்டி எடுத்து செல்கின்றனர். இதை வனத்துறையினரும், சோதனை சாவடியில் இருப்பவர்களும் கண்டுகொள்வதில்லை. 60 ஆண்டுகளுக்கு ஒரு முறை மூங்கில்களில், அரிசி விளைந்து பின்னர் கொத்தோடு காய்ந்து அழிந்து விடும்.
இப்படி காய்ந்த மூங்கில்களை வெட்டிச் செல்ல மட்டுமே ஏலம் எடுத்தவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், லாபநோக்கத்தில் புதிய பச்சை மூங்கில்களையும் வெட்டி, கொள்ளையடித்துச் செல்கின்றனர். இதனால் அடர்த்தியான மரங்கள் இருந்த இடங்கள் அனைத்தும் மொட்டையாகி வருகிறது. இது இயற்கையை நாமே அழிப்பதற்கு சமமானது. இவர்களை வனத்துறையினர் கண்டு கொள்ளாததால், பச்சைத் தங்கம் கொள்ளை போவது தொடர்கிறது. எனவே, வனத்துறையினர் பச்சை மூங்கில் வெட்டிச் செல்வோரை தடுத்து நிறுத்தி, இயற்கையை பாதுகாக்க முன்வரவேண்டும்.
இவ்வாறு இயற்கை ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
நன்றி
தினகரன்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ஏற்காட்டில் ஏலம் என்ற பெயரில் கொள்ளை போகும் பச்சை தங்கம் : இயற்கை ஆர்வலர்கள் வேதனை Empty Re: ஏற்காட்டில் ஏலம் என்ற பெயரில் கொள்ளை போகும் பச்சை தங்கம் : இயற்கை ஆர்வலர்கள் வேதனை

Post by SK Mon Feb 19, 2018 12:26 pm

எங்கும் லஞ்ச
எதிலும் ஊழல்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

ஏற்காட்டில் ஏலம் என்ற பெயரில் கொள்ளை போகும் பச்சை தங்கம் : இயற்கை ஆர்வலர்கள் வேதனை Empty Re: ஏற்காட்டில் ஏலம் என்ற பெயரில் கொள்ளை போகும் பச்சை தங்கம் : இயற்கை ஆர்வலர்கள் வேதனை

Post by ayyasamy ram Mon Feb 19, 2018 12:36 pm

கொள்ளை போகும் பச்சை தங்கம் குறித்து இயற்கை ஆர்வலர்கள்
வருத்தப்பட்டு புண்ணியமில்லை....
-
அது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்திருக்க வேண்டும்...
மேலும் யாரை அணுக வேண்டும் என்கிற விபர ம் தெரிந்து செய்ல்பட
வேண்டும்...
-
அங்கிருக்கும் லையன்ஸ் கிளப், போன்ற சமூக ஆர்வலர்களிடம்
விவாதித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்
-
டீ கடை பெஞ்சில் டைம் பாஸ் பண்ண பல விஷயம் பேசிவிட்டு
கலைந்து சென்றால் ஏதும் நடவாது....!!
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஏற்காட்டில் ஏலம் என்ற பெயரில் கொள்ளை போகும் பச்சை தங்கம் : இயற்கை ஆர்வலர்கள் வேதனை Empty Re: ஏற்காட்டில் ஏலம் என்ற பெயரில் கொள்ளை போகும் பச்சை தங்கம் : இயற்கை ஆர்வலர்கள் வேதனை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» குடி மராமத்து என்ற பெயரில் தமிழகம் முழுவதும் மண் கொள்ளை
» எஸ்எம்எஸ் என்ற பெயரில் மொபைல் நிறுவனங்கள் அடிக்கும் கொள்ளை!
» பண்ணை குட்டை என்ற பெயரில் கொள்ளை அடிக்கும் அதிகாரிகளும் வேலை செய்யும் மக்களும் !!!!!!!!!!!!
» இயற்கை ஒளி என்ற பெயரில் ஆன்மிக தீட்சை அளித்து, பயிற்சி வகுப்புகள் -- அன்னபூரணி
» அழிந்து வரும் குருவி இனங்களை காக்க இயற்கை ஆர்வலர்கள் நடவடிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum