ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

+2
T.N.Balasubramanian
பழ.முத்துராமலிங்கம்
6 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு Empty காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Feb 16, 2018 8:09 pm

தி இந்துToggle navigation
இந்தியா
காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
ஏஎன்ஐ
புதுடெல்லி
614 Subscribe
காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு Hpaaj0UwQLi36gcTKc80+vsjpg
படம்: வி.சுதர்சன்

Published : 16 Feb 2018 11:02 IST
Updated : 16 Feb 2018 12:30 IST
காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், அமிதவ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தத் தீர்ப்பை வழங்கியது.

கர்நாடகா, தமிழகம் இடையே நீண்ட காலமாக தொடரும் காவிரி நதி நீர் பங்கீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நிலத்தடி நீரை அளவுகோலாக வைத்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தொடர்புடையவை

காவிரி கடந்து வந்த பாதை: சுருக்கமான நினைவூட்டல்
இதன் மூலம் கர்நாடகாவுக்கு கூடுதலாக 14.75 டிஎம்சி தண்ணீர் கிடைக்கும்.

கடந்த 2007-ல் காவிரி நடுவர் மன்றம், தமிழகத்துக்கு 192 டிஎம்சி தண்ணீர் வழங்க உத்தரவிட்டிருந்த நிலையில் தற்போது 177.25 டி.எம்.சி. தண்ணீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேவேளையில், கேரளாவுக்கு 30 டிஎம்சி புதுச்சேரிக்கு 7 டிஎம் சி என்ற நடுவர் மன்ற தீர்ப்பில் மாற்றமில்லை எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், காவிரி நதி நீரில் உரிமை கொண்டாட எந்த ஒரு தனிப்பட்ட மாநிலத்துக்கும் உரிமை இல்லை எனவும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா கருத்து தெரிவித்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. காவிரி வழக்கில் மேல்முறையீடு செய்யமுடியாது எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு மாநிலத்துக்கும் எவ்வளவு?



எண் மாநிலம் நீரின் அளவு
1 கர்நாடகா 284.75 டிஎம்சி
2 தமிழ்நாடு 404.25 டிஎம்சி
3 கேரளா 30 டிஎம்சி
4 புதுச்சேரி 7 டிஎம்சி






தமிழகத்துக்கு தண்ணீர் குறைப்பு:

எற்கெனவே நடுவர் மன்ற வழங்கிய அளவில் இருந்து தற்போது தமிழகத்துக்கு வழங்கப்படக் கூடிய தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. இது தமிழகத்துக்கு பின்னடைவாகக் கருதப்படுகிறது என அதிமுக எம்.பி.நவநீதகிருஷ்ணன் கூறினார். இத்தீர்ப்பின் மூலம் தமிழகத்துக்கு இனி காவிரியில் இருந்து மொத்தம் கிடைக்கக் கூடிய நீர் 404.25 டிஎம்சி என்ற அளவில் இருக்கும். முன்னதாக இது 419 டிஎம்சி என்ற அளவில் இருந்தது.

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு C6p9FmvJQnS5epmCnLhB+navajpg
கர்நாடகாவுக்கு ஏன் கூடுதல் தண்ணீர்?

தமிழகத்துக்கு தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கர்நாடகாவுக்கு ஏன் கூடுதலாக 14.75 டிஎம்சி தண்ணீர் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து உச்ச நீதிமன்றம் கூறும்போது, "பெங்களூருவில் குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளதை கருத்தில் கொண்டும் கர்நாடகாவில் உள்ள தொழிற்சாலைகளின் தேவைக்கு கூடுதல் நீர் தேவைப்படுவதைக் கருத்தில் கொண்டும் கர்நாடகாவுக்கு கூடுதலாக 14.75 டிஎம்சி தண்ணீர் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பினை கர்நாடக வழக்கறிஞர்கள் வரவேற்றுள்ளனர். மேலும், முதல்வர் சித்தராமையாவும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்பதாகக் கூறியுள்ளார்.

அய்யாக்கண்ணு கருத்து:

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு கூறும்போது, "தமிழகத்துக்கு தண்ணீரின் பங்கு குறைக்கப்பட்டுள்ளது ஏமாற்றமளிக்கிறது. ஆனால், அதேவேளையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் எனக் கூறியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டதும் தமிழகத்துக்கான நீர் பங்கை நீதிமன்ற உத்தரவுகளுக்கு இணங்க பெற்றுத் தர வேண்டும் என அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" என்றார்.

வழக்கு கடந்து வந்த பாதை..

கர்நாடகா, தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு இடையேயான காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம் கடந்த 125 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கிறது. இது தொடர்பாக மெட்ராஸ் - மைசூரு மாகாணங்களுக்கு இடையே கடந்த 1892-ம் ஆண்டு முதல் ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் சிக்கல் ஏற்பட்டதை தொடர்ந்து 1924-ம் ஆண்டு மீண்டும் 50 ஆண்டுகளுக்கு புதிய ஒப்பந்தம் போடப்பட்டது.

நாடு சுதந்திரம் அடைந்த பிறகும் காவிரி பிரச்சினை தொடர்ந்ததால் மத்திய அரசு காவிரி நடுவர் மன்றத்தை ஏற்படுத்தியது. காவிரி வழக்கை விசாரித்த நடுவர் மன்றம் 1991-ல் இடைக்கால தீர்ப்பு வழங்கிய நிலையில், 2007-ம் ஆண்டு பிப்ரவரி 5-ம் தேதி இறுதித் தீர்ப்பு வழங்கியது. அதில், கர்நாடகா, தமிழகத்துக்கு 10 மாத கால இடைவெளியில் 192 டிஎம்சி காவிரி நீரை தமிழகத்துக்கு திறந்துவிட வேண்டும் என்று தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து தமிழகம், 192 டிஎம்சி நீர் போதாது என்பதால் கூடுதலாக 72 டிஎம்சி நீரை திறந்துவிட வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதே வேளையில் கர்நாடகா, தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரை 132 டிஎம்சியாக குறைத்து உத்தரவிடக் கோரி மேல்முறையீடு செய்தது. இதே போல கேரளாவும், புதுச்சேரியும் கூடுதல் நீரை திறந்துவிடக்கோரி மேல்முறையீடு செய்தன.

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்புக்கு எதிராக தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய நான்கு மாநிலங்களும் கடந்த 20 ஆண்டுகளாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கை நடத்தி வந்தன. இந்நிலையில் கடந்த ஆண்டு ஜனவரி 9-ம் தேதி இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம்,'' மாநிலங்களுக்கிடையே ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக நடக்கும் காவிரி வழக்கை, ஒரே மாதத்தில் விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டும்'' என உத்தரவிட்டது.

காவிரி வழக்கில் விசாரணை நிறைவடைந்து 150 நாட்கள் நெருங்கும் நிலையில் உச்ச நீதிமன்றம் நேற்று, "காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் இன்று (வெள்ளி) காலை தீர்ப்பு வழங்கப்படும்'' என அறிவித்தது.

இந்நிலையில், காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் திறக்க உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்தது.
நன்றி
தி இந்து
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு Empty Re: காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

Post by T.N.Balasubramanian Fri Feb 16, 2018 8:41 pm

அனுமதிக்கப்பட்ட அளவை ஒழுங்காக கொடுத்தால் நல்லது.
அதற்கும் தகராறு பண்ணினால் ....அமைக்க படப்போகும்
..காவிரி மேலாண்மை வாரியம் ..பொறுப்பேற்கவேண்டும்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு Empty Re: காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

Post by ராஜா Sat Feb 17, 2018 3:04 am

இந்த உச்ச நீதிமன்ற உத்தரவை தான் அவர்கள் (கர்நாடகம் ) மதிப்பதே இல்லையே
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு Empty Re: காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

Post by கோபால்ஜி Sat Feb 17, 2018 11:13 am

யதார்த்தமான தீர்ப்பு..கூடுதல் அளவு தண்ணீர் வழங்க வேண்டும் என்று தீர்ப்பு வந்திருந்தாலும் அது ஏட்டளவில் தான் இருந்திருக்கும்,கண்டிப்பாக கர்நாடகம் அதை செயல்படுத்தாது.அவ்வளவு ஏன்,நாம் கன்னடர்களாக இருந்தாலும் அதை ஏற்க மாட்டோம்..500 tmc என்றே தீர்ப்பு வந்தாலும் அது நமக்கு கிடைக்கவா போகிறது? அதை விட இப்போது சொல்லப்பட்டிருக்கும் அளவை குறைக்காமல் பெற முயல வேண்டும்..அரசியலவியாதிகள் பிரித்தாளும் தங்கள் பிழைப்பு போய் விடுமே என்றும்,ஊடகங்கள் தங்கள் பரபரப்பு செய்திகள் போய் விடுமே என்று இதை ஒத்துக்கொள்ள மாட்டார்கள்..இரு மாநில மக்களும்,விவசாயிகளும் தான் இவர்களை ஓரம்கட்டி நல்லுறவு பேணி கிடைக்கும் நீரை சச்சரவு இல்லாமல் பகிர்ந்து கொள்ள வேண்டும்
கோபால்ஜி
கோபால்ஜி
பண்பாளர்


பதிவுகள் : 197
இணைந்தது : 14/01/2017

Back to top Go down

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு Empty Re: காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

Post by SK Sat Feb 17, 2018 12:33 pm

SK wrote:உச்ச நீதிமன்ற தீர்ப்பினை கர்நாடக வழக்கறிஞர்கள் வரவேற்றுள்ளனர். மேலும், முதல்வர் சித்தராமையாவும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்பதாகக் கூறியுள்ளார்.

அப்போ தண்ணி எப்போ திறப்பேங்க


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு Empty Re: காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

Post by T.N.Balasubramanian Sat Feb 17, 2018 1:33 pm

gayathri gopal wrote:யதார்த்தமான தீர்ப்பு..கூடுதல் அளவு தண்ணீர் வழங்க வேண்டும் என்று தீர்ப்பு வந்திருந்தாலும் அது ஏட்டளவில் தான் இருந்திருக்கும்,கண்டிப்பாக கர்நாடகம் அதை செயல்படுத்தாது.அவ்வளவு ஏன்,நாம் கன்னடர்களாக இருந்தாலும் அதை ஏற்க மாட்டோம்..500 tmc என்றே தீர்ப்பு வந்தாலும் அது நமக்கு கிடைக்கவா போகிறது? அதை விட இப்போது சொல்லப்பட்டிருக்கும் அளவை குறைக்காமல் பெற முயல வேண்டும்..அரசியலவியாதிகள் பிரித்தாளும் தங்கள் பிழைப்பு போய் விடுமே என்றும்,ஊடகங்கள் தங்கள் பரபரப்பு செய்திகள் போய் விடுமே என்று இதை ஒத்துக்கொள்ள மாட்டார்கள்..இரு மாநில மக்களும்,விவசாயிகளும் தான் இவர்களை ஓரம்கட்டி நல்லுறவு பேணி கிடைக்கும் நீரை சச்சரவு இல்லாமல் பகிர்ந்து கொள்ள வேண்டும்
மேற்கோள் செய்த பதிவு: 1259670

சரியாக சொன்னீர்கள். அரசியல்வாதிகள் செய்யும் சதிகள் அதிகம்.
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு Empty Re: காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

Post by T.N.Balasubramanian Sat Feb 17, 2018 1:39 pm

SK wrote:
SK wrote:உச்ச நீதிமன்ற தீர்ப்பினை கர்நாடக வழக்கறிஞர்கள் வரவேற்றுள்ளனர். மேலும், முதல்வர் சித்தராமையாவும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்பதாகக் கூறியுள்ளார்.

அப்போ தண்ணி எப்போ திறப்பேங்க
மேற்கோள் செய்த பதிவு: 1259677

தீர்ப்பை வரவேற்பதாக தானே கூறினார்.தண்ணீர் தருவதாக கூறவில்லையே.
தண்ணீர் இருந்தால் தருவதற்கு தடை இல்லையென்பார்.
தண்ணீர் இருந்தால் விவசாயிகள் தகராறு செய்கிறார் என்பார்.
நாம்தான் வேறுவழி பார்க்கவேண்டும்.
உதகமண்டலத்திலிருந்து ஏதோ ஒரு ஆறு காவிரியில் போய் கலக்கிறதாம்.
அதை இந்த பக்கம் திருப்ப முயற்சி செய்யலாம் என படித்தேன்.
முழு விவரம் கிடைத்தவுடன் பதிவிடுகிறேன்.
முடிந்தால் தமிழக அரசிற்கும் தெரியப்படுத்தலாம்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு Empty Re: காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

Post by M.Jagadeesan Sat Feb 17, 2018 1:45 pm

இனியும் நம்பிக்கையில்லை ! காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படுமானால் , நீர் நிர்வாகம் அதன் கைக்குப் போய்விடும் . எனவே அதை அமைக்க விடமாட்டார்கள் . காவிரிக்கு யாரும் சொந்தம் கொண்டாட முடியாது என்ற தீர்ப்பையும் மதிக்கமாட்டார்கள் . தமிழ்நாட்டில் பொம்மை அரசு நடப்பதால் அவர்களுக்கு இளக்காரமாகப் போய்விட்டது .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு Empty Re: காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

Post by M.Jagadeesan Sat Feb 17, 2018 1:49 pm

T.N.Balasubramanian wrote:
SK wrote:
SK wrote:உச்ச நீதிமன்ற தீர்ப்பினை கர்நாடக வழக்கறிஞர்கள் வரவேற்றுள்ளனர். மேலும், முதல்வர் சித்தராமையாவும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்பதாகக் கூறியுள்ளார்.

அப்போ தண்ணி எப்போ திறப்பேங்க
மேற்கோள் செய்த பதிவு: 1259677

தீர்ப்பை வரவேற்பதாக தானே கூறினார்.தண்ணீர் தருவதாக கூறவில்லையே.
தண்ணீர் இருந்தால் தருவதற்கு தடை இல்லையென்பார்.
தண்ணீர் இருந்தால் விவசாயிகள் தகராறு செய்கிறார் என்பார்.
நாம்தான் வேறுவழி பார்க்கவேண்டும்.
உதகமண்டலத்திலிருந்து ஏதோ ஒரு ஆறு காவிரியில் போய் கலக்கிறதாம்.
அதை இந்த பக்கம் திருப்ப முயற்சி செய்யலாம் என படித்தேன்.
முழு விவரம் கிடைத்தவுடன் பதிவிடுகிறேன்.
முடிந்தால் தமிழக அரசிற்கும் தெரியப்படுத்தலாம்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1259690


ஐயா !

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டால் ( ! ) , சித்தராமையாவைக் கேட்டுத்தான் தண்ணீர் விடவேண்டும் என்பதில்லை . நீர் நிர்வாகம் அவர்கள் கைக்குப் போய்விடும் . கர்நாடக அரசால் எதுவும் செய்யமுடியாது . அதனால் அமைக்கவிடமாட்டார்கள் . மோடியும் ஓட்டுக்காக எதையும் கண்டுகொள்ளமாட்டார் .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு Empty Re: காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

Post by T.N.Balasubramanian Sat Feb 17, 2018 1:58 pm

MJagadeesan wrote:தமிழ்நாட்டில் பொம்மை அரசு நடப்பதால் அவர்களுக்கு இளக்காரமாகப் போய்விட்டது .

எந்த அரசு நடந்தாலும் அவர்கள் தரமாட்டார்கள் என்பது உறுதி.
மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டால், நீர்வரத்து சீர்படலாம்.
நடுநடுவே அணை கட்டாமல் இருக்கவேண்டும்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு Empty Re: காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics
» தமிழகத்துக்கு காவிரியில் 9.2 டிஎம்சி நீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு
» காவிரியில் தண்ணீர் திறக்க முடியுமா? முடியாதா?: கர்நாடகத்தை எச்சரித்த நீதிமன்றம்
» ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்ச நீதிமன்றம் தடை- பசுமை தீர்ப்பாய உத்தரவும் ரத்து
» பிரதமர் வந்தாலும் வராவிட்டாலும் கிழக்கு எக்ஸ்பிரஸ் சாலையை திறக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு
» முழு கொள்ளளவை எட்டியது கிருஷ்ணராஜ சாகர் அணையில் எடியூரப்பா சமர்ப்பண பூஜை ஒப்பந்தப்படி தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்பட்டதாக பேச்சு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum