Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்by heezulia Today at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Dr.S.Soundarapandian | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
கண்ணன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: வறுத்து பயன்படுத்தினால் வாயு இல்லை!
2 posters
Page 1 of 1
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: வறுத்து பயன்படுத்தினால் வாயு இல்லை!
பருப்பு வகைகள் பலதும் வாயுவை அதிகபடுத்தும் என்று பல கட்டுரைகளில் நீங்கள் தெரிவித்து வருகிறீர்கள். எப்படி சாப்பிட்டால் வாயுவைக் குறைக்க முடியும்? ஒரு சில மருத்துவ குணங்களை விவரிக்க முடியுமா?
- சிவகாமி, திருச்சி.
பருப்பு வகைகள் அனைத்துமே ஜீரணமாகத் தாமதமாகுபவை. புளிப்பையும் எரிச்சலையும் அதிகப்படுத்துபவை. வயிற்றில் வாயு அழுத்தத்தை அதிகமாக்குபவை. இவற்றைத் தண்ணீரில் ஊற வைத்துத் துணியில் இறுகக் கட்டி முளைக்க வைத்துப் பின் குத்திப் புடைத்து வைத்துக் கொள்வதுண்டு. முளை நீங்குவதால் இவை எளிதில் செரிக்கும். வறுத்து உபயோகிக்க மேலும் லேசான தன்மையை அடைகிறது. நெய்யில் சேர்த்துச் சாப்பிட வறட்சி தராது. இவற்றில் உளுந்து நல்லது. காய்ச்சல் உள்ள நிலையில் பச்சைப் பயறு நல்லது. களைப்பு சோர்வுள்ள நிலையில் பச்சைப் பயறும் , துவரம் பருப்பும் நல்லது. மாதவிடாய் சிக்கல், இரவில் அதிகம் சிறுநீர் போகுதல் இவற்றிற்கு எள்ளு நல்லது. வாயில் பற்களிடுக்கில், தொண்டையில், மலத்தில் ரத்தக் கசிவிருந்தால் துவரம் பருப்பு நல்லது. மூலம் சிறுநீர்த் தாரையில் கல்லடைப்பு, விக்கல், மூச்சுத்திணறல் முதலியவற்றுக்கு கொள்ளு நல்லது.
துவரை- நல்ல வலிமை தரும் பொருள். படுக்கையிலேயே வெகு நாட்கள் நோய் வாய்ப்பட்டிருந்தவர், மிக மெலிந்தவர் திரும்பவும் வலுவடைய ஏற்றது. பட்டினி முடிவிற் சேர்க்கத்தக்க பத்திய உணவு. உடலுரம் கூடச்செய்யும். உள் அழற்சி ஆற்றும். அதனால் உணவு வரிசையில் இதற்கு முதல் இடம். தோல் நீக்கிய பருப்பு உணவாகிறது. மிக பலவீனமானவர், வயிற்றில் வாயு சேர்பவர் இதனை லேசாக வறுத்துச் சேர்ப்பர். காரம், புளிப்பு, உப்பு இவை இரைப்பையைப் புண்படுத்தாமலிருக்க துவரம் பருப்பு அவற்றிற்கு நடுவே நின்று உதவுகின்றது.
துவரம் பருப்பை வேக வைத்து அதன் தண்ணீரை இறுத்து அதில் மிளகு, பூண்டு சேர்த்து ரசம் வைத்துச் சாப்பிடலாம். இப்படிச் சாப்பிடும் போதும், பருப்பை வறுத்து அரைத்து துவையலாகச் சாப்பிடும் போதும், வாயு அழுத்தம் குறையும்.
காராமணி- இனிப்பும் குளிர்ச்சியும் உள்ளது. சிறுநீர் பெருக்கி. உப்பும் வெல்லமும் சேர்த்து வேகவைத்து உண்பதுண்டு. வாயுத் தொந்தரவு, பேதி உள்ளவர்களுக்கு ஏற்றதல்ல.
உளுந்து- நல்ல புஷ்டி தரும் புரதசத்து நிறைந்தது. செரிப்பதற்குத் தாமதமாகும். உடல் மூட்டுகளுக்கு எண்ணெய்ப் பசையை உருவாக்கித் தரும். இதில் பெரும் பகுதி மலமாக மாறுவதால் அதிக அளவில் உபயோகித்தால் சிறுநீரும் மலமும் அதிகமாகி அடிக்கடி வெளியாகும்.
நரம்புகளிலும் தசைகளிலும் வலியும் எரிச்சலும் உள்ள நிலையில் உளுந்தை வேக வைத்துச் சூட்டுடன் தேய்க்க வலி நீங்கும். உளுந்து சேர்த்து தயாரிக்கப்படும் மஹாமாஷ தைலம், தசைகளிலும் மூட்டுகளிலும் ரத்தக் குழாய்களிலும் வறட்சி அதிகமாகி எண்ணெய் பசையில்லாமல் அசைக்கக் கூட முடியாத நிலையில், இது எண்ணெய்ப் பசையை அளித்து வறட்சியைப் போக்கி, உட்புற பூச்சையும் பிசுபிசுப்பையும் அளித்து தசைகளைத் தளர்த்தி வேதனையை குறைக்கும். உளுந்தையும் கொள்ளையும் வேக வைத்து அதன் கஷாயத்தால் வலி உள்ள இடத்தில் ஒத்தடம் கொடுப்பது வலியை குறைக்க உதவும்.
கொள்ளும், அரிசியும் சேர்த்துக் காய்ச்சிய கஞ்சி நல்ல பசி, உடல் பலம், விந்தணு வீர்ய வளர்ச்சி, சுறுசுறுப்பு தரக்கூடியது. பச்சைக் கொள்ளை நீர் சேர்த்து இடித்துப் பிழிந்த சாற்றைத் தினம் பருகிவர வற்றிய உடல் பருக்கும். தூண்போல் உரத்து நிற்கும், வறட்சி, சளியுடன் இருமல், சளியால் மூச்சுத்திணறல், ஜலதோஷம் இவற்றை நீக்கும். ஒரு பங்கு கொள்ளை பத்து பங்கு தண்ணீரில் நீர்த்த கஞ்சியாக்கி இந்துப்பு சேர்த்துச் சாப்பிட சிறுநீரகம், பித்தப்பை முதலான இடங்களில் ஏற்படும் கற்கள் கரைந்து வெளியாகும். பிரசவ அழுக்கு வெளியேற இந்த நீர்த்தக் கஞ்சி உதவும்.
கடலை - நல்ல புஷ்டி தரும் பருப்பு. அதிக அளவில் வயிற்று உப்புசம், பெருங்குடலின் கடைசிப் பகுதியில் அழுத்தம், ஜீரணமில்லாத பெருமலப் போக்கு, தலைசுற்றுதல் இவற்றையும் ஏற்படுத்தும்.
பச்சைக்கடலை - நல்ல வாளிப்பைத் தரும். உடலை ஊட்டப்படுத்தி தசைகளை நிறைவுறச் செய்யும். நுரையீரலுக்குப் பலம் தரும். கடலையைச் சற்றுக் கருக வறுத்து பொடித்துச் சாப்பிட வயிற்றுப் பொருமல், மூத்திரத்தடை நீங்கும். கடலையை லேசாக வேக வைத்து மென்று சாப்பிட்டு மேல் பால் சாப்பிட நீர்க்கோர்வையும் இருமலும் விலகும்.
(தொடரும்)
பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்,
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,
நன்றி
தினமணி
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Similar topics
» ஆயுள் காக்கும் ஆயுர்வேதம் - கை வைத்திய முறைகள்
» ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சோம்பலும் களைப்பும் ஒன்றல்ல...
» ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: இரைப்பை மந்தத்தை விரட்டும் கடுகு!
» ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கரைந்து போகும் சிறுநீரகக் கற்கள்!
» ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சாப்பிடுவதற்கு முன்பும்... சாப்பிட்ட பிறகும்!
» ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சோம்பலும் களைப்பும் ஒன்றல்ல...
» ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: இரைப்பை மந்தத்தை விரட்டும் கடுகு!
» ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கரைந்து போகும் சிறுநீரகக் கற்கள்!
» ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சாப்பிடுவதற்கு முன்பும்... சாப்பிட்ட பிறகும்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|