Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 8:09 pm
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிவ கடாட்சம் நிச்சயம் ... மகா சிவராத்திரி விரதம்!
2 posters
Page 1 of 1
சிவ கடாட்சம் நிச்சயம் ... மகா சிவராத்திரி விரதம்!
-
மகா சிவராத்திரி மகிமைகளை சிவபெருமான், நந்திதேவரிடம்
சொல்ல, அவர் தேவர்களிடமும் முனிவர்களிடமும் தெரிவிக்க,
அதையடுத்து சிவராத்திரியன்று எல்லா தெய்வங்களும் விரதம்
மேற்கொண்டார்கள் எனச் சொல்கிறது சிவ புராணம்!
ஊழிக்காலத்தில் பிரளயம் ஏற்பட, உலகமே அழிந்தது.
மீண்டும் இந்த உலகம் இயங்கவேண்டும் என உமையவள் விரதம்
இருந்து, சிவனாரின் இடபாகத்தைப் பெற்றாள்.
அந்த நன்னாளே மகா சிவராத்திரித் திருநாள் என்கிறது
புராணம்.
மாதந்தோறும் வருகிற சிவராத்திரி விசேஷம். மாசி மாதத்தில்,
தேய்பிறை சதுர்த்தசி நாளில் வருகிற மகா சிவராத்திரி கூடுதல்
புண்ணியங்களையும் பலன்களையும் தரக்கூடியது என்று
போற்றுகின்றனர்.
இந்த முறை, மாசி மாதப் பிறப்பன்று, அதாவது
13.2.18 செவ்வாய்க்கிழமை அன்று, திரயோதசியும் அன்றைய
தினமே சதுர்த்தசியும் வருகிறது. அதாவது, பிரதோஷமும்
அன்றைக்குத்தான். மகா சிவராத்திரியும் அந்த நாளில்தான்!
அம்பிகைக்கு நவராத்திரி... ஈசனுக்கு ஒரு ராத்திரி...
அது சிவராத்திரி என்கிற சொலவடை உண்டு என்கிறார்கள்
ஆச்சார்யர்கள்.
-
------------------------------------------
Re: சிவ கடாட்சம் நிச்சயம் ... மகா சிவராத்திரி விரதம்!
பிரம்மாவும் விஷ்ணுவும் சிவனாரின் அடிமுடி தேடிய கதை
தெரியும்தானே. அடியையும் தொடமுடியாமல், முடியையும்
தொடமுடியாமல் நொந்து போனார்கள் இரண்டுபேரும்.
அவ்வளவு பிரமாண்டமாக, நெருப்புப் பிழம்பாக, அக்னி மலையாக
விஸ்வரூப தரிசனம் தந்தார் சிவபெருமான்.
அதுவே மகாசிவராத்திரி என்றும் சொல்வார்கள்.
முருகக்கடவுள், எம தருமன், இந்திரன், சூரிய பகவான், சந்திரன்,
அக்னி, குபேரன் முதலானோர் சிவராத்திரி விரதம் மேற்கொண்டு,
தவமிருந்து பூஜைகள் செய்து, சிவனருளைப் பெற்றதாகச்
சொல்கிறது புராணம்!
மகா சிவராத்திரி நன்னாளில்தான், மகாவிஷ்ணு சிவபெருமானை
நோக்கி கடும் தவமிருந்தார். பிறகு அந்த தவத்தின் பலனாக,
சக்ராயுதத்தை வரமாகப் பெற்றார். மகாலட்சுமியை மனைவியாக
அடைந்தார்.
படைப்புக் கடவுளான பிரம்மா சிவனருளை வேண்டி தவமிருந்தார்.
சிவனாரின் அருளைப் பெற்றதுடன் கல்வியையும் ஞானத்தையும்
தந்தருளும் சரஸ்வதிதேவியைக் கரம் பற்றினார்!
மரத்தின் மீது அமர்ந்திருந்த குரங்கு, தூக்கம் வராமல் அந்த மரத்தின்
இலைகளைப் பறித்து கீழே போட்டபடியே இருந்தது. அப்படி கீழே
போடப்படும் இலைகள் வெறும் இலைகள் அல்ல. அது வில்வமரம்.
அந்தக் குரங்கு வில்வ இலைகளைத்தான் பறித்துப் பறித்துப்
போட்டது.
அந்த வில்வ இலைகளும் தரையில் விழவில்லை. மரத்தடியில் இருந்த
சிவலிங்கத் திருமேனியில் விழுந்தபடியே இருந்தது. விடிய விடிய...
தெரிந்தோ தெரியாமலோ சிவலிங்கத்துக்கு வில்வத்தால் அர்ச்சனை
செய்திருந்தது குரங்கு.
அதுமட்டுமா? அன்றைய நாள் சிவராத்திரி. இதில் குளிர்ந்து போன
சிவனார், அந்த குரங்குக்கு மோட்சம் அளித்தார். சிவராத்திரி விரத
பலன் கிடைக்கப் பெற்ற அந்தக் குரங்கு, முசுகுந்தச் சக்கரவர்த்தியாகப்
பிறக்க அருள்புரிந்தார் ஈசன்.
குரங்கு முகமும் மனித உடலும் கொண்டு, சோழச் சக்கரவர்த்தியாக
வாழ்ந்து, சிறந்த பக்திக்கு உதாரணமாகத் திகழ்ந்தார் முசுகுந்தச்
சக்கரவர்த்தி என்கிறது புராணம்!
-
-------------------------------------------
Re: சிவ கடாட்சம் நிச்சயம் ... மகா சிவராத்திரி விரதம்!
ஆகவே, மகா சிவராத்திரி நாளில் விரதம் இருந்து சிவபெருமானைத்
தரிசித்தால் சகல வளங்களும் அடையலாம். முக்தி பெறலாம்.
திரயோதசி அன்று ஒருபொழுது மட்டும் சாப்பிட்டு விட்டு, விரதம்
மேற்கொள்ளவேண்டும். முடியாதவர்கள், வயதானவர்கள், எளிமையான
உணவை எடுத்துக் கொள்ளலாம். திரவ உணவாகவும் எடுத்துக்
கொள்ளலாம்.
அடுத்து, சதுர்த்தசியில் விரதம் இருந்து, அன்றிரவு ஆலயங்களில்
நான்கு ஜாமங்களில் நான்கு கால பூஜைகள் சிவன் கோயில்களில்
விமரிசையாக நடைபெறும். அவற்றைக் கண் குளிரத் தரிசிக்கலாம்.
அல்லது வீட்டிலேயே இருந்து கொண்டு சிவபாராயணம் செய்யலாம்.
ருத்ரம் ஜபிக்கலாம்.
முக்கியமாக, ஏழைகளுக்கு அன்னதானம் செய்வது மகா புண்ணியம்
என்கின்றன சாஸ்திரங்கள்!
மகா சிவராத்திரி விரதம் இருந்து, சிவ தரிசனம் செய்து, தானங்கள்
செய்பவர்களுக்கு சிவ கடாட்சம் நிச்சயம்.
நமசிவாயம்... நமசிவாயம்... நமசிவாயம்!
-
------------------------------------
நன்றி- தி இந்து
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» மகா சிவராத்திரி விரதம்
» மாத சிவராத்திரி விரதம்
» சிவராத்திரி விரதம் பிறந்த கதை!
» கார்த்திகை மாத சிவராத்திரி; கவலைகள் போக்கும் சிவராத்திரி!
» லட்சுமி கடாட்சம் நிறைந்த குங்குமம்
» மாத சிவராத்திரி விரதம்
» சிவராத்திரி விரதம் பிறந்த கதை!
» கார்த்திகை மாத சிவராத்திரி; கவலைகள் போக்கும் சிவராத்திரி!
» லட்சுமி கடாட்சம் நிறைந்த குங்குமம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|