புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதல்வர் நலனுக்காக மாதம் இருமுறை டெல்லி செல்வது மின்துறை அமைச்சரின் பணியா?- ராமதாஸ்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82752
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Feb 07, 2018 7:19 am

மின்வாரிய தொழிலாளர்களின் ஊதியத்தை இறுதி செய்வதை விட, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் நலன்களைப் பாதுகாப்பதற்காக மாதத்திற்கு இருமுறை டெல்லிக்கு தூது சென்று வருவது தான் முக்கியப் பணியா? என்பதை மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெளிவுபடுத்தவேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் "தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணியாற்றும் 90,000 பணியாளர்களுக்கு இடைக்கால நிவாரணமாக மாதம் ரூ.2,500 வழங்கப்படும் என்றும், 4 மாதங்களுக்கான நிவாரணத் தொகை ரூ.10,000 உடனடியாக வழங்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்திருக்கிறது.

மேலோட்டமாக பார்ப்பதற்கு வரவேற்கத்தக்க நடவடிக்கையாகத் தோன்றினாலும் இது மின்வாரிய தொழிலாளர்களுக்கு வழங்கப்படவேண்டிய ஊதிய உயர்வை சில ஆண்டுகளுக்கு தாமதப்படுத்தும் முயற்சியாகும். இது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாடு மின்வாரியத் தொழிலாளர்களுக்கான புதிய ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்து, அவர்களுக்கு 1.12.2015 முதல் ஊதிய உயர்வு வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அதன்பின் 26 மாதங்களாகியும் இன்றுவரை புதிய ஊதிய ஒப்பந்தம் கையெழுத்திடப்படவில்லை.

புதிய ஊதிய ஒப்பந்தம் குறித்து பேச்சு நடத்த வரும்படி தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு பாட்டாளி தொழிற்சங்கம் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் பலமுறை கோரிக்கை விடுத்தன. இதுதொடர்பாக 2017ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16, 23 ஆகிய தேதிகளில் மின்வாரிய அதிகாரிகளுக்கும், தொழிற்சங்கங்களுக்கும் இடையே பேச்சுக்கள் நடத்தப்பட்டன.

அப்போது ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளின்படி, அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டிருப்பதைப் போன்று, மின்வாரியத் தொழிலாளர்களுக்கும் அடிப்படை ஊதியம் 2.57 மடங்கு உயர்த்தி வழங்கப்பட வேண்டும் என தொழிற்சங்கங்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதை கொள்கை அடிப்படையில் ஏற்றுக்கொள்வதாக தமிழ்நாடு மின்வாரிய அதிகாரிகளும் உறுதியளித்தனர்.

ஆனால், புதிய ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் தமிழக அரசு ஆர்வம் காட்டாததால், தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக கடந்த மாதம் தொழிற்சங்கங்கள் அறிவித்தன. இதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட சமரசப் பேச்சுக்களின் போது, வரும் 12ஆம் தேதிக்குள் புதிய ஊதிய ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுவிடும் என்று மின்சாரவாரிய அதிகாரிகளும், தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளும் உறுதியளித்தனர்.

அதன்படி, இன்னும் 10 நாட்களில் புதிய ஊதிய ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு ஊதிய உயர்வு வழங்கப்படும் என அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில், இடைக்கால நிவாரணமாக மாதம் ரூ.2,500 வழங்கப்படும் என்று மின்துறை அமைச்சர் தங்கமணி அறிவித்திருப்பது மின்வாரிய பணியாளர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

புதிய ஊதிய ஒப்பந்தத்தை இன்னும் இறுதி செய்யாததற்கு அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ள காரணங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. பணிச்சுமை காரணமாகவே புதிய ஊதிய ஒப்பந்தம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என அமைச்சர் கூறியிருக்கிறார். மின்வாரியத் தொழிலாளர்களுக்கு 26 மாதங்களுக்கு முன்பு வழங்கப்படவேண்டிய ஊதிய உயர்வை இறுதி செய்வதைவிட மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கு வேறு என்ன பணிச்சுமை இருக்கிறது? என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை.

தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதைவிட, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் நலன்களைப் பாதுகாப்பதற்காக மாதத்திற்கு இருமுறை டெல்லிக்கு தூது சென்று வருவது தான் தமது முக்கியப் பணியா? என்பதை மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெளிவுபடுத்தவேண்டும்.

தமிழ்நாடு மின்சார வாரியத் தொழிலாளர்களுக்கான புதிய ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் எந்தச் சிக்கலும் இல்லை. இதற்காக பல கட்டங்களாக பேச்சு நடத்தவும் தேவையில்லை. தமிழகஅரசு பணியாளர்களுக்கு ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை எவ்வாறு செயல்படுத்துவது? என்பதை தீர்மானிப்பதுதான் மிகவும் சிக்கலானது ஆகும்.

ஆனால், மத்திய அரசுப் பணியாளர்களுக்கு வழங்கப் பட்டதைப் போலவே, மாநில அரசுப் பணியாளர்களுக்கும் 2.57 காரணி மடங்கு ஊதிய உயர்வு வழங்கப் படும் என்று அறிவித்ததன் மூலம், இந்தச் சிக்கலுக்கு மிக எளிதாக தீர்வு காணப்பட்டது.

போக்குவரத்து தொழிலாளர்களும் அதே அடிப்படையில் ஊதிய உயர்வு கோரிய நிலையில், அவர்களுக்கு 2.44 காரணி மடங்கு ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. அதை போக்குவரத்துத் தொழிலாளர்கள் ஏற்றுக்கொள்ளாத நிலையில், சென்னை உயர்நீதிமன்ற ஆணையின்படி ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி பத்மநாபன் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி புதிய ஊதிய உயர்வு விகிதம் விரைவில் தீர்மானிக்கப்படவுள்ளது.

மின்வாரிய ஊழியர்களுக்கும், அதேபோல் 2.57 காரணி
மடங்கு ஊதிய உயர்வு வழங்குவது தான் இயற்கை நீதி
ஆகும்.
இதுதொடர்பாக, மீண்டும் மீண்டும் பேச்சு நடத்தவேண்டிய
தேவையில்லை.


வரும் 12ஆம் தேதிக்குள் புதிய ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்யாவிட்டால், 16ஆம் தேதி ஒருநாள் வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்போவதாகவும், அதை காலவரையற்ற போராட்டமாக மாற்றப்போவதாகவும் மின்வாரிய தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

மின்வாரியத் தொழிலாளர்களை போராட்டம் நடத்தும் நிலைக்குத் தள்ளக்கூடாது. ஏற்கெனவே அளிக்கப்பட்ட வாக்குறுதியின்படி, மின்சார வாரியத் தொழிலாளர்களுக்கு 2.57 காரணி மடங்கு ஊதிய உயர்வு வழங்கி, புதிய ஊதிய ஒப்பந்தத்தை வரும் 12-ஆம் தேதிக்குள் கையெழுத்திட தமிழக அரசும், மின்சார வாரியமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ எனக் கூறியுள்ளார்.

தி இந்து

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Feb 07, 2018 11:11 am

அடுத்தது மின் கட்டண உயர்வா



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக