Latest topics
» அலங்கார முகமூடிகள்!by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
ஜாஹீதாபானு |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
`14 ஆண்டுகள் புற்றுநோயை எதிர்த்துப் போராடி ஜெயித்தேன்!'' - கெளதமி
Page 1 of 1
`14 ஆண்டுகள் புற்றுநோயை எதிர்த்துப் போராடி ஜெயித்தேன்!'' - கெளதமி
-
சமீபகாலமாக உலகம் முழுவதும் இதயநோயாளிகளைவிட
கேன்சர் நோயாளிகள் பெருத்துவிட்டனர். பிப்ரவரி 4-ம்தேதி
உலக கேன்சர் தினம். கடந்த பல ஆண்டுகளாக கேன்சர்
நோயின் கொடுமைகளை எப்படி எதிர்த்துப் போராட
வேண்டும் என்கிற கருத்தை வலியுறுத்தி, உலக நாடுகளில்
சுற்றுபயணம் செய்துவருகிறார், நடிகை கெளதமி.
பொதுவாக, மற்ற துறைகளைச் சேர்ந்த பெண்களைவிட
திரைப்பட நடிகைகள் தங்கள் மேனிஅழகைப் பேணி
காப்பார்கள் என்பது உலகறிந்த உண்மை. தமிழ்த் திரைப்பட
உலகில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்து, பின்னர்
திருமணமாகி, ஒரு பெண் குழந்தைக்குத் தாயாகி
வாழ்க்கையை நகர்த்திய தருணத்தில் ஒருநாள் உச்சிவானில்
இருந்து உச்சந்தலையில் இடிவிழுந்த மாதிரி உருக்குலைந்து
போனார் கெளதமி.
தனிமனிதத் தன்னம்பிக்கையையும் துணிச்சலையையும்
துணையாகக் கொண்டு புற்றுநோயை எதிர்த்துப் போராடி
வென்ற வீராங்கனை கெளதமியிடம் பேசினோம்...
Re: `14 ஆண்டுகள் புற்றுநோயை எதிர்த்துப் போராடி ஜெயித்தேன்!'' - கெளதமி
''முதலில் புற்றுநோய் வந்துவிட்டாலே 'நாம் வாழ்க்கை
அவ்வளவுதான் முடிந்துவிட்டது' என்று விரக்தி கொள்வதை
முதலில் கைவிட வேண்டும். நம் உடலில் எந்த நோய் வந்தாலும்
கவனமாக இருக்க வேண்டும். ஜலதோஷம் தொடர்ந்து வந்தால்,
`சாதாரணச் சளிதானே...’ என்று அலட்சியமாக இருந்துவிட்டால்,
நிமோனியா வந்து நுரையீரலில் புற்றுநோய் வரும் வாய்ப்பு
இருக்கிறது.
கேன்சர் நோய் குட்டிகுட்டியாக சிக்னல் காட்டிக்கொண்டே
இருக்கும். நாம் கவனித்துப் பார்க்க வேண்டும். நம் உடலில்
இருமலோ, சளியோ, காய்ச்சலோ தொடர்ந்து இருந்து,
ஆரம்பத்திலேயே கவனித்துவிட்டால், புற்றுநோயிலிருந்து
சுலபமாக விடுபட்டுவிடலாம். சிலர், தனக்கு நோய் இருப்பது
தெரிந்தும், உயிர் பயத்தில் அதை வெளியே சொல்வதில்லை.
நம் உடலில் உள்ள செல்கள் ஆரோக்கியப் பாதையில் செல்லாமல்,
தவறான வகையில் வளர்ச்சி அடையும்போது வியாதி கொண்ட
செல்லாக உருமாறும். அதுதான் புற்றுநோய். பொதுவாக,
`நம் எல்லோருடைய உடலிலும் புற்றுநோய் செல்கள் இருக்கின்றன’
என்று சொல்கிறது விஞ்ஞானம்.
வழக்கமாக உடலில் தூங்கிக்கொண்டிருக்கும் செல்கள்,
நாம் முழு வாழ்க்கையையும் வாழ்ந்து முடிக்கும் வரை எந்தவிதத்
தொல்லையும் தராமல் நம்மோடு வாழ்ந்து, நம்மோடு இறந்து
போகும்.
சிலருக்கு பரம்பரை பரம்பரையாக வருவது தெரியாது.
திடீரென ஒரு தலைமுறையில் வெளிப்படையாகத் தெரிய
ஆரம்பிக்கும். புதிதாகச் சிலருக்கு புற்றுநோய் வருவது என்பது
அவர்கள் தானாக வரவழைத்துக்கொள்வது. அதுபாட்டுக்கு
தூங்கிக்கொண்டிருக்கிற செல்களை நாமே தூண்டிவிட்டு
வரச்செய்வதும் ஒரு காரணம்.
அடிக்கடி உணர்ச்சிவசப்படுவது, தவறான உணவு வகைகளை
பயன்படுத்துவது, பொதுவாக வாழ்க்கை நெறிமுறைகளை
மீறி செயல்படுவது ஆகியவை முக்கியக் காரணங்களாகும்.
இப்போதும் நம் முன்னோர்கள் 100 வயது வரை பிளட் பிரஷர்,
சர்க்கரைநோயில்லாமல் வாழ்ந்தார்கள் என்று நாம்
பெருமையாகச் சொல்வதற்கு முக்கியக் காரணம், அவர்கள்
வாழ்ந்த வாழ்க்கையில் காலம் தவறாத உணவுப்பழக்கம்,
முறையான உடற்பயிற்சி, நேர்த்தியான வாழ்க்கை முறை,
ஆரோக்கியம் மிக்க உணவு வகைகளை உண்பது என
இருந்ததுதான்.
-
---------------------------------------------
Re: `14 ஆண்டுகள் புற்றுநோயை எதிர்த்துப் போராடி ஜெயித்தேன்!'' - கெளதமி
-
இப்போது புற்றுநோய் வருவதற்குக் காரணங்கள்...
உண்ணும் உணவில் உப்பை அதிகமாகச் சேர்த்துக்கொள்வது,
அதிக எண்ணெயைப்பயன்படுத்துவது, கண்ட நேரத்துக்கு
ஃபாஸ்ட் ஃபுட் சாப்பிடுவது. ஏனென்றால், நாம் உண்ணும் உணவு
உடலின் அனைத்துப் பகுதிகளுக்கும் செல்லும் தன்மை கொண்டது.
அது மட்டுமல்ல, நாம் பயன்படுத்தும் அழகுசாதனப் பொருள்கள்,
வாசனைப் பொருள்கள், தலைக்குப் பயன்படுத்தும் ஷாம்பூ
போன்ற பெரும்பாலானவற்றில் புற்றுநோயைப் பரப்பக்கூடிய
கெமிக்கல்கள் கலந்திருக்கின்றன என்ற உண்மை கண்டு
பிடிக்கப்பட்டு நிரூபிக்கப்பட்டும் இருக்கிறது.
இதையெல்லாம் தெரிந்திருந்தும், அவற்றையே நாம் பயன்
படுத்துகிறோம். வியாபாரிகளும் இவற்றை உற்பத்தி செய்து,
நம் தலையில் கட்டுகிறார்கள். இப்போது இருப்பவர்கள்
நம் முன்னோர்களின் பாரம்பர்ய உணவையே விரும்புவதில்லை.
குறிப்பாக, இளம் தலைமுறையினர் விரும்பிச் சாப்பிடும் பீட்சா,
பர்க்கரில் நிச்சயம் ஆபத்து இருக்கிறது. முதலில் பீட்சா என்பது
ஒரு ரொட்டி. அதன் மேல் சீஸ், அதன் மேல் ரொட்டி வைப்பார்கள்.
அதில் வெறும் மைதா மற்றும் எண்ணெய் மட்டும்
கலந்திருக்கவில்லை. மெல்லியதாக இருக்கிற பீட்சா, தடிமனாகத்
தெரிவதற்காக ஒரு கெமிக்கலையும், இன்னும் பல
பொருள்களையும் சேர்க்கிறார்கள். அதன் பின்னர் ஒவ்வொரு
கிளைகளுக்கும் அனுப்புவார்கள்.
கிளையிலிருப்பவர்கள், பீட்சாவை ஃப்ரீஸரில் வைப்பார்கள்
அதற்காக ஃப்ரீஸருக்குள் கெமிக்கலைப் போடுவார்கள்
அதைப் பல வாரங்கள் கழித்து எடுத்து, ஃப்ரெஷ்ஷாக இருப்பதற்காக
மீண்டுமொரு கெமிக்கலைச் சேர்துப் பயன்படுத்தி விற்பனை
செய்வார்கள்.
Re: `14 ஆண்டுகள் புற்றுநோயை எதிர்த்துப் போராடி ஜெயித்தேன்!'' - கெளதமி
-
சென்னை போன்ற பெருநகரங்களில் இருக்கும் இளம்
தலைமுறையினர் பலர் ரிலாக்ஸுக்காக `டிஸ்கோதே செல்கிறேன்...’
என்று சொல்கிறார்கள். நிறையப்பேர் அங்கே செல்வதால்தான்
டென்ஷனே ஏற்படுகிறது.
இப்போது வாழ்பவர்களின் வாழ்க்கை முறையாலும், உணவுப்
பழக்கத்தாலும் முன்பைவிட புற்று நோயாளிகள் அதிகமாகி
விட்டார்கள் என்பது கசப்பான உண்மை.முன்னோர்களுக்கு
புற்றுநோய் இருந்திருந்தால், அவர்களின் அடுத்த தலைமுறையை
சந்ததியினரும் கண்டிப்பாக சந்திக்கவேண்டி வரும் என்று
சொல்வதும் தவறு. `
என் முன்னோர்களுக்கு இல்லை. அதனால் எனக்கும் வரவே வராது’
என்று நினைத்துக்கொண்டிருப்பதும் தவறு. எனது குடும்பத்தில்
இருந்த முன்னோர்கள் யாருக்குமே புற்றுநோய் வந்ததே இல்லை.
எனக்கு வந்துவிட்டதே என்னத்தைச் சொல்வது? ஆண்களுக்கு
புற்றுநோய் வந்துவிட்டால், அருகில் உறவுப் பெண்கள் இருந்து
பராமரிப்பார்கள்.
பெண்களுக்கு வந்துவிட்டால், பெரும் துன்பம்.
அதனால் பெண்களைப் பாதுகாப்பது நம் முக்கியக் கடமை.
நம் வீட்டில் இருக்கும் அம்மாவை, குடும்ப உறுப்பினர்கள் யாருமே
கண்டுகொள்வதில்லை. வயதான அம்மா, தன் உடல்நிலையைச்
சரியாக கவனித்துக்கொள்கிறாரா... சரியான நேரத்துக்கு உணவு
உட்கொள்ளுகிறாரா... நீங்கள் ஆபிஸ்விட்டு வீட்டுக்கு வந்தவுடன்
அம்மாவில் அருகில் உட்கார்ந்து ஜாலியாக ஜோக்கடித்து,
அவரை மனம்விட்டு சிரிக்கவைக்கிறீர்களா?’ இதையெல்லாம்
கவனத்தில்கொண்டு நாம் அன்றாடம் செயல்பட வேண்டும்.
நம் நாட்டு, வீட்டு நடைமுறையே வேறு... ஆபிஸ் செல்லும் கணவன்
தன் கோபத்தை மனைவியிடமும், காலேஜ் போகும் மகன் தன்
டென்ஷனை அம்மாவிடமும் காட்டுவார்கள். அம்மாக்கள்
தங்களுக்கு என்று நேரம் ஒதுக்குவது கிடையாது. வீட்டில் மீந்து
போன உணவுகளைச் சாப்பிடுவது, எல்லோருடைய டென்ஷனையும்
தன் தலையில் ஏற்றிக்கொள்வது என இருப்பதால், தாய்க்கு வியாதி
ஏற்படும் சூழ்நிலை உண்டாகிறது.
-
--------------------------------
Re: `14 ஆண்டுகள் புற்றுநோயை எதிர்த்துப் போராடி ஜெயித்தேன்!'' - கெளதமி
-
எனக்கு கேன்சர் நோய் வந்து 14 ஆண்டுகள் ஆகின்றன.
எனக்கு வந்த புற்றுநோயை நானாகத்தான் கண்டுபிடித்தேன்.
முதலில், என் உடலில் கட்டி தோன்றியபோது 'இது கேன்சர்
கட்டிதானா?' என்கிற சந்தேகம் எழுந்தது. டாக்டரிடம் சென்று
பரிசோதித்தபோது நான் நினைத்தது உண்மை என்று
நிரூபணமானது.
நான் அடிக்கடி டென்ஷனாகும் இயல்புகொண்டவள். அதனால்
கூட எனக்கு புற்றுநோய் வந்திருக்கலாம். அப்போது என் மகள்
குழந்தையாக இருந்தாள். புற்றுநோயை எதிர்த்துப் போராடி,
என் மகளுக்காக நான் வாழ்ந்தே ஆக வேண்டும் என்று எனக்கு
நானே உறுதி செய்துகொண்டேன்.
என்னைப்போல் பெண் குழந்தையிருக்கும் ஒரு பெண்ணுக்கு
புற்றுநோய் வந்தால், என்னென்ன கஷ்டங்களையும்
பிரச்னைகளையும் அனுபவிப்பாள் என்பதை நான் 14 ஆண்டுகள்
அனுபவித்தேன்.
அதுபோல வேறு ஒரு பெண்ணுக்கு நேரவே கூடாது என்றுதான்
நான் களத்தில் இறங்கிப் போராடிக்கொண்டிருக்கிறேன்.
சிலருக்கு சூழ்நிலை காரணமாக புற்றுநோய் வந்துவிட்டால்,
அதற்காக அவர்கள் கலங்கிப் போய், பயந்துவிடக் கூடாது.
துணிச்சலாக எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதைச்
சாதாரணமான ஒருவர் எடுத்துச் சொல்வதைவிட, ஏற்கெனவே
பாதிக்கப்பட்டு அந்த நோயில் இருந்து மீண்டுவந்த நான்
சொல்வதைக் கேட்பது அவர்களுக்கு துணிச்சலையும்
தைரியத்தையும் கண்டிப்பாக தரும் என்று நம்புகிறேன்.’’
-
----------------------------------எம்.குணா
-விகடன்
Similar topics
» ஆசிட் குடித்ததால் சாப்பிட, பேச முடியாமல் தவித்த சிறுவன்: 6 ஆண்டுகள் போராடி சாதித்த அரசு மருத்துவமனை
» நூறு ஆண்டுகள் சதாப்தம் போல் ஆயிரம் ஆண்டுகள் எவ்வாறு அழைக்கப்படும்?
» கமல்-கெளதமி உறவு முறிவு???
» அலெக்சாண்டரை எதிர்த்துப் புறக்கணித்தவர்
» நானும் கமல்ஹாசனும் பிரிந்துவிட்டோம்: கெளதமி அறிவிப்பு
» நூறு ஆண்டுகள் சதாப்தம் போல் ஆயிரம் ஆண்டுகள் எவ்வாறு அழைக்கப்படும்?
» கமல்-கெளதமி உறவு முறிவு???
» அலெக்சாண்டரை எதிர்த்துப் புறக்கணித்தவர்
» நானும் கமல்ஹாசனும் பிரிந்துவிட்டோம்: கெளதமி அறிவிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|