புதிய பதிவுகள்
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:22

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:43

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சர்க்கரை: நினைத்தாலே இனிப்பு! I_vote_lcapசர்க்கரை: நினைத்தாலே இனிப்பு! I_voting_barசர்க்கரை: நினைத்தாலே இனிப்பு! I_vote_rcap 
4 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சர்க்கரை: நினைத்தாலே இனிப்பு! I_vote_lcapசர்க்கரை: நினைத்தாலே இனிப்பு! I_voting_barசர்க்கரை: நினைத்தாலே இனிப்பு! I_vote_rcap 
195 Posts - 41%
ayyasamy ram
சர்க்கரை: நினைத்தாலே இனிப்பு! I_vote_lcapசர்க்கரை: நினைத்தாலே இனிப்பு! I_voting_barசர்க்கரை: நினைத்தாலே இனிப்பு! I_vote_rcap 
181 Posts - 38%
mohamed nizamudeen
சர்க்கரை: நினைத்தாலே இனிப்பு! I_vote_lcapசர்க்கரை: நினைத்தாலே இனிப்பு! I_voting_barசர்க்கரை: நினைத்தாலே இனிப்பு! I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
சர்க்கரை: நினைத்தாலே இனிப்பு! I_vote_lcapசர்க்கரை: நினைத்தாலே இனிப்பு! I_voting_barசர்க்கரை: நினைத்தாலே இனிப்பு! I_vote_rcap 
21 Posts - 4%
prajai
சர்க்கரை: நினைத்தாலே இனிப்பு! I_vote_lcapசர்க்கரை: நினைத்தாலே இனிப்பு! I_voting_barசர்க்கரை: நினைத்தாலே இனிப்பு! I_vote_rcap 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
சர்க்கரை: நினைத்தாலே இனிப்பு! I_vote_lcapசர்க்கரை: நினைத்தாலே இனிப்பு! I_voting_barசர்க்கரை: நினைத்தாலே இனிப்பு! I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
சர்க்கரை: நினைத்தாலே இனிப்பு! I_vote_lcapசர்க்கரை: நினைத்தாலே இனிப்பு! I_voting_barசர்க்கரை: நினைத்தாலே இனிப்பு! I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
சர்க்கரை: நினைத்தாலே இனிப்பு! I_vote_lcapசர்க்கரை: நினைத்தாலே இனிப்பு! I_voting_barசர்க்கரை: நினைத்தாலே இனிப்பு! I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
சர்க்கரை: நினைத்தாலே இனிப்பு! I_vote_lcapசர்க்கரை: நினைத்தாலே இனிப்பு! I_voting_barசர்க்கரை: நினைத்தாலே இனிப்பு! I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
சர்க்கரை: நினைத்தாலே இனிப்பு! I_vote_lcapசர்க்கரை: நினைத்தாலே இனிப்பு! I_voting_barசர்க்கரை: நினைத்தாலே இனிப்பு! I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சர்க்கரை: நினைத்தாலே இனிப்பு!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84037
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu 1 Feb 2018 - 11:51

சர்க்கரை: நினைத்தாலே இனிப்பு! Shutterstock615908132
-

இனிப்புக்கு உதாரணம் எது என்று கேட்டால் உடனே நினைவுக்கு
வருவது சர்க்கரை. பழங்கள், காய்கறிகள், பால், தேன், தானியங்கள்
போன்றவற்றிலிருந்தும் சர்க்கரையைத் தயாரிக்க முடியும்.

குளூகோஸ், பிரக்டோஸ், காலக்டோஸ், சுக்ரோஸ், மால்டோஸ்
என்பவையும் சர்க்கரையே. பீட்ரூட்டிலும் மரவள்ளிக்கிழங்கிலும்
சர்க்கரைச் சத்து அதிகம். நாம் உண்ணும் உணவில் உள்ள
கார்போஹைட்ரேட் உடலில் சென்று சர்க்கரைச் சத்தாக மாற்றப்
பட்டு ரத்தத்தால் உட்கிரகிக்கப்படுகிறது.

அதுதான் செல்களுக்கு நேரடியாகச் சென்று உடல் இயங்குவதற்கான
ஆற்றலைக் கொடுக்கிறது. இந்த சர்க்கரை போதுமான அளவில்
இருக்க வேண்டும். அதிகமானால் நீரிழிவு நோயாகிறது. அளவு
குறைந்து தாழ் சர்க்கரை நிலை வந்தால் தலைசுற்றல், கிறுகிறுப்பு
மயக்கம் ஏற்பட்டு ஆபத்தாகி விடுகிறது.

கரும்புச் சாற்றிலிருந்து வெல்லம் தயாரித்துச் சாப்பிட்டு வந்த
இந்தியர்கள், வெள்ளைக்காரர்களின் வருகைக்குப் பிறகு அதை
சர்க்கரையாகப் பயன்படுத்தத் தொடங்கினர். இப்படிப்பட்ட
சர்க்கரை ஆலையொன்று ஒடிசா மாநிலத்தின் அஸ்கா என்ற
ஊரில் நிறுவப்பட்டு, அந்த ஊரிலிருந்து தமிழகத்துக்கு
விற்பனைக்கு வந்ததால், ‘அஸ்கா சர்க்கரை’ கொடு என்று
கேட்டு வாங்கினர்.

நாளடைவில் சர்க்கரைக்கே ‘அஸ்கா’ என்ற பெயரும் சேர்ந்து
விட்டது. ‘சீனி’ என்ற பெயரும் பிரசித்தம். இந்த சர்க்கரை வந்த
பிறகு, ஏற்கெனவே தயாரிக்கப்பட்டு வந்த வெல்ல சர்க்கரையை
‘நாட்டு சர்க்கரை’யாக்கிவிட்டார்கள்.
-
--------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84037
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu 1 Feb 2018 - 11:53



பயன்கள்

சர்க்கரை உணவுகளுக்கும் தின்பண்டங்களுக்கும் இனிப்புச்
சுவையூட்டுகிறது. ஜாம் – ஜெல்லி போன்றவை நீண்ட
நாளைக்குக் கெடாமல் பாதுகாக்கிறது. கொதிநிலையைக்
கூட்டுவது, உறைநிலையைக் குறைப்பது என்ற குணங்களும்
சர்க்கரைக்கு உண்டு.

நொதித்தலுக்கும் உதவுகிறது. அமினோ அமிலங்களுடன்
சேரும்போது நல்ல வண்ணங்களைத் தருகிறது. பேக்கரியில்
தயாராகும் பல தின்பண்டங்களின் பொன்னிற மேனியின்
ரகசியமே இந்த சர்க்கரைதான்.

இதைத் தூவி தயாரிக்கும் பிஸ்கெட் போன்றவை நல்ல
மொறுமொறுப்புடன் இருக்கும். உலகம் எங்கிலுமே வயிற்றுப்
போக்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலில் கொடுக்கப்
படுவது தண்ணீர், உப்பு ஆகியவற்றுடன் சேர்ந்த
‘சர்க்கரைக் கரைசல்’தான்.

கரும்புகளைத் துண்டுகளாக வெட்டி அரைத்துச் சாறு
பிழிகிறார்கள். அந்தச் சாற்றைப் பிறகு கொதிக்க
வைக்கிறார்கள். அந்தக் கலவை ஆறிய பிறகு சர்க்கரைப்
பாளங்களாகும். கரும்புச் சாறின் நிறம் பழுப்பு. கார்பனேஷன்,
பாஸ்படேஷன் முறைகளில் அதைச் சுத்தப்படுத்துகின்றனர்.

அதிலுள்ள கழிவுகள் நீக்கப்பட்ட பிறகு ‘ஆக்டிவேட்டட்
கார்பன்’ முறையில் வெண்ணிறமாக்குகின்றனர்.

வெள்ளையாக்கப்பட்ட சாறு கொதிக்க வைக்கப்பட்டு மீண்டும்
ஆறவைக்கப்படுகிறது. இப்படியாகக் கரும்புச் சாறு மூன்று
முறை காய்ச்சப்பட்ட பிறகே சர்க்கரையாக வெளியே வருகிறது.

சர்க்கரை தயாரிப்புக்குப் பிறகு மிஞ்சும் கரும்புப் பாகுக்
கழிவுக்கு ‘மொலாசஸ்’ என்று பெயர். இது மதுபானத்
தயாரிப்புக்கும், மாற்று எரிபொருள் (எத்தனால்) தயாரிப்புக்கும்
பயன்படுத்தப்படு கிறது. ‘சர்க்கரை உற்பத்தி’ என்று நாம்
சொன்னாலும் அத்துறையில் உள்ளவர்கள் இதை, ‘சுத்திகரித்தல் –
தூய்மைப்படுத்தல்’ என்றே கூறுகின்றனர்.

கரும்புச் சாற்றில் சர்க்கரை மட்டுமல்லாமல் சுண்ணாம்பு,
இரும்பு, மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம்
ஆகியவற்றுடன் வைட்டமின்கள் பி2, பி3, பி6, பி9 ஆகியவையும்
உள்ளன.

வேதிப்பொருட்கள் சேர்க்கப்படுவதால் இவை சர்க்கரையிலிருந்து
நீங்கிவிடுகின்றன. எனவேதான் சர்க்கரையை ‘வெற்று கலோரிகள்’
என்று அழைக்கின்றனர்.
-
----------------------------



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84037
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu 1 Feb 2018 - 11:54




கரும்பு உற்பத்தி

இந்தியா உட்பட 200 நாடுகளில் 2 கோடி ஹெக்டேர் பரப்பளவில்
கரும்பு பயிராகிறது. இது புல் வகைத் தாவரம். கோரையும்
ஒருவகை இனிப்புச் செடியும் கலப்பினமாக்கப்பட்டு கரும்பு
உருவாக்கப்பட்டதாகக் கூறுவார்கள்.

சர்க்கரை ஆலைகள் வருவதற்கு முன்னால் அச்சு வெல்லம்,
மண்டை வெல்லம் மட்டுமே தயாரிக்கப்பட்டன. அப்போது
எஞ்சும் தூள் நாட்டுச் சர்க்கரை யாக விற்கப்பட்டது. பனைமரம்,
தென்னை மரத்திலிருந்தும்கூட வெல்லம் தயாரிக்கின்றனர்.
கரும்புச் சாகுபடிக்கு நிறைய தண்ணீர் வேண்டும்.

சாகுபடிக் காலமும் நீண்டது. பணப் பயிர். ஆறு அடி முதல்
19 அடி உயரம் வரை வளரக்கூடியது கரும்பு. எட்டாயிரம்
ஆண்டுகளுக்கு முன்னால் தென் பசிபிக் தீவுகளில்தான் முதலில்
கரும்பு சாகுபடியானது,

இந்தியாவில் கி.மு. 500-ல் அறிமுகமானது, கி.மு. 100-ல்தான்
சீனத்தில் சர்க்கரை தயாரானது. உலகில் தயாராகும்
சர்க்கரையில் 70% கரும்பிலிருந்துதான் கிடைக்கிறது.

உலகின் ‘சர்க்கரைக் கிண்ணம்’ என்ற பெயரைப் பெற்றுள்ளது
கியூபா. கரும்புச் சாகுபடி, சர்க்கரைத் தயாரிப்பு இரண்டிலும்
முன்னணியில் இருப்பது அந்நாடு.

சர்க்கரைக்கு மருத்துவக் குணங்களும் உண்டு.
புண்களை ஆற்றும். சுடச்சுட காபி, டீ அருந்தி நாக்கைச் சுட்டுக்
கொண்டுவிட்டால் உடனே சிறிது சர்க்கரையை எடுத்து நாக்கில்
தேய்த்தால் சூடு தணிந்து, நாக்கு இயல்பு நிலைக்கு வரும்.

சர்க்கரையை எண்ணெயுடன் சேர்த்துத் தேய்த்துக்கொள்ளும்
வழக்கமும் உண்டு. மறக்காமல் தண்ணீர் ஊற்றிக் குளித்துவிட
வேண்டும், இல்லாவிட்டால் எறும்புகள் மொய்க்க ஆரம்பித்துவிடும்!
-
---------------------------------
ஜூரி
நன்றி- தி இந்து

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu 1 Feb 2018 - 12:26

ayyasamy ram wrote:


கரும்பு உற்பத்தி

இந்தியா உட்பட 200 நாடுகளில் 2 கோடி ஹெக்டேர் பரப்பளவில்
கரும்பு பயிராகிறது. இது புல் வகைத் தாவரம். கோரையும்
ஒருவகை இனிப்புச் செடியும் கலப்பினமாக்கப்பட்டு கரும்பு
உருவாக்கப்பட்டதாகக் கூறுவார்கள்.

சர்க்கரை ஆலைகள் வருவதற்கு முன்னால் அச்சு வெல்லம்,
மண்டை வெல்லம் மட்டுமே தயாரிக்கப்பட்டன. அப்போது
எஞ்சும் தூள் நாட்டுச் சர்க்கரை யாக விற்கப்பட்டது. பனைமரம்,
தென்னை மரத்திலிருந்தும்கூட வெல்லம் தயாரிக்கின்றனர்.
கரும்புச் சாகுபடிக்கு நிறைய தண்ணீர் வேண்டும்.
மேற்கோள் செய்த பதிவு: 1258462
அருமையான தகவல்கள்,
சர்க்கரையால் வரும் நோய்கள் பற்றிய
பதிவும் இருந்திருந்தால் நல்லதாக இருந்திருக்கும்.
நன்றி ஐயா.
பழ.முத்துராமலிங்கம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பழ.முத்துராமலிங்கம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக