ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

செம காமடி! : கமலைப் போல ஒருவன்!

Go down

செம காமடி! : கமலைப் போல ஒருவன்! Empty செம காமடி! : கமலைப் போல ஒருவன்!

Post by தண்டாயுதபாணி Sat Dec 12, 2009 4:16 pm

கமல் நடித்து திரைக்கு வந்திருக்கும் உன்னைப் போல் ஒருவன்படத்தை முதலில் வேறொரு நடிகரை வைத்துதான் படமாக்குவதாக இருந்ததாம். அவரோடுநடத்திய டிஸ்கஷனுக்குப் பிறகுதான் கமல் இந்தக் கதையில் தானே நடித்து விடலாம்என்று முடிவு செய்தாராம்.



கமல் அப்படி யாரைச் சந்தித்தார்... என்னவெல்லாம் பேசினார்கள் என்று விசாரித்தபோது...



வெடிகுண்டுகள், தீவிரவாதிகள்என்றெல்லாம் கதை அமைந்திருப்பதால், இந்தப்படத்தில் விஜயகாந்த் நடித்தால் நன்றாக இருக்கும் என்று அவரை அணுகியிருக்கிறார் கமல். கூடவே டைரக்டர் சக்ரி, வசனகர்த்தா இரா.முருகன்ஆகியோரும்!



செம காமடி! : கமலைப் போல ஒருவன்! Vijayakanth-in-kamal-01கமல்: விஜி... ஒரு அருமையான சப்ஜெக்ட் இருக்கு... நீங்க நடிச்சீங்கன்னா ரொம்ப பொருத்தமாக இருக்கும்.



விஜயகாந்தின் மேனேஜர்: (கமலிடம்) கதை என்னவாவேணாலும் இருக்கட்டும்...அதிலே ஹீரோயின் யாருன்னு முதல்ல சொல்லிடுங்க... ஏன்னா, இவருகூடநடிக்கிறதுக்கு நடிகையைக் கண்டுபிடிக்கிறது ரொம்பப் பெரிய வேலை...



கமல்: இந்தக்கதையில் அந்தப் பிரச்னை இல்லை... இவருக்குஜோடி கிடையாது.இவரு யாருகூடவும் சேரவேண்டிய தேவையில்லை...




சொல்லிக் கொண்டிருக்கும்போதே விஜயகாந்த் சட்டென்று சுதாரித்து...



விஜய: நல்லாச்சொன்னீங்க...என் பிரச்னையே யாருகூடயும் சேரமுடியாததுதான்... நான் எப்பவுமே மக்களோடதான் கூட்டணி வைப்பேன்... தேவைப்பட்டு, ரொம்பவற்புறுத்தினா காங்கிரஸ்கூட கூட்டணி வைப்பேன்... அதுகூட ஈ.வி.கே.எஸ்., மாதிரி ஆட்களோடு கிடையாது. ஜி.கே.வாசன்கூட வேணா கூட்டணிவைக்கலாம்!



கமல்: கொஞ்சம்மூச்சு விட்டுக்கோங்க விஜி...நான் உங்களை அரசியல் கூட்டணி அமைக்க ஆலோசனை சொல்லவரலை. ஒரு சினிமா... அதிலே நீங்க நடிச்சா நல்லாயிருக்கும்னு சொல்றேன்... அதிலே நீங்க மத்தியதர வர்க்கத்து மனிதனாக வர்றீங்க. மத்திய வயது மனிதனாகவும்!



விஜய: நான்மனிதனாக இருக்கணும்னுதான் ஆசைப்படுறேன்... ஆனா,அந்த கருணாநிதி என்னை அப்படி இருக்க விடமாட்டேங்கறார். நான் ரோடு சரியில்லைனு சொன்னா, அவரு ஜெயலலிதா காரணம்னு சொல்றார். நான் ஊரு சரியில்லைனு சொன்னா, உடனே அவர் அங்கே அ.தி.மு.. தான்ஊராட்சி அமைப்பில் இருக்குனு சொல்றார். இப்போநான் மத்திய தர வர்க்கத்து மனிதனா நடிக்கிறேன்னு சொன்னா, அதுக்கும் போட்டிக்கு அழகிரியை அனுப்புவார்... இந்த விஜயகாந்த் 2011-ல் சி.எம். ஆகிடுவானோனுஅவருக்கு பயம்.ஆனா, அது நடக்கத்தான்போகுது...நியாயம் ஜெயிக்கத்தான் போகுது!



இரா.முருகன்: கமல் சார்... இவர்தான் ஹீரோன்னா எனக்கு லேப்டாப்பெல்லாம் போதாது... வசனம் எழுத தனியாக மூணு ஹாட் டிஸ்க் இருக்கறமாதிரி ஒருகம்ப்யூட்டர் வாங்கிக் கொடுத்துடுங்க!



விஜய: தம்பிஎன்ன சொல்றாப்புல...




செம காமடி! : கமலைப் போல ஒருவன்! Km-vij-2கமல்: இல்லே... அவர் வசனகர்த்தா... அவர் கவலை அவருக்கு!நாம கதைக்கு வந்திடலாம்... படம்
தொடங்கும்போது நீங்க கோயம்பேடு சந்தையில் காய்கறிவாங்கிட்டு அப்படியே
நடந்து அண்ணாசாலையில் இருக்கற ஒரு அரைகுறை கட்டடத்தின் படிகளில்ஏறி மேலே
வர்றீங்க
...



விஜய: நிறுத்துங்ககமல்... கோயம்பேடு காய்கறி மார்க்கெட்னு சொல்றீங்களே... அங்கே ஒரு டயலாக் போட்டுக்குவோம்... இந்த கத்தரிக்காய்என்ன விலை விற்குதுன்னு கருணாநிதிக்குத் தெரியுமா... அவருடைய மகன் ஸ்டாலினுக்குத்தான் தெரியுமானு நான் கேமராவைப் பார்த்து பேசிட்டே வர்றேன்...



கமல்: இல்லை... விஜி... இது வேற மாதிரி படம்! நான்முதல் சீனையாவது சொல்லிடுறேன்... இதிலேதீவிரவாதம்,போலீஸ் எல்லாம் வர்றதால் நீங்க பண்ணினால் நல்லாயிருக்கும்னுதான்வந்தேன்...

விஜய: ஓகே கமல்... சொல்லுங்க. அந்தஅண்ணாசாலை கட்டடத்துல நான் ஏறும்போது பார்த்தா ஒரு பக்கம் கள்ளத்தனமாக அரசு டி.வி.-யை வெச்சுபத்து பேர் படம் பார்த்துகிட்டு இருக்காங்க... அரசு ஏழைகளுக்கு வழங்கினதாச் சொல்லப்படும் டி.வி. இவங்களுக்குஎப்படிக் கிடைச்சது?இதை என்னால் நிருபிக்க முடியும். ஆனா, அதை போலீஸ்செய்யட்டும்...போலீஸைக் கையில் வெச்சிருக்கும் கருணாநிதி சொல்லட்டும்னுஒரு டயலாக்கைப் போட்டுட்டு மேலே போறேன்... இதை மட்டுமாவது வெச்சுக்கலாம் கமல்!



கமல்: என்னைக்கொஞ்சம் கதை சொல்லவிடுங்க...நகரத்தில் ஐந்து இடங்களில் நீங்க குண்டு வெச்சிருக்கீங்க...



விஜய: சூப்பர்கமல்... எந்த இடங்கள்னு நான் சொல்றேன். முதலாவது குண்டு கோபாலபுரத்தில்... அடுத்த குண்டு சி..டி. நகரில்... மூணாவது குண்டு துணை முதல்வர் வீடு இருக்கிற செனடாப் ரோட்டில், நாலாவது குண்டு அண்ணா சாலையில் இருக்கிற அறிவாலயத்தில்... அஞ்சாவது குண்டு எங்கேனு சொல்லுங்க பார்ப்போம்...



கமல்: (கொஞ்சம் களைப்பாக...)ஐய்யோ... கதையை மாத்துறாரே...நீங்களே சொல்லிடுங்க விஜி...



விஜய: மதுரைலவைக்கிறேன் க்ளைமாக்ஸ் குண்டை... இந்தநாலையும்கூட கண்டுபிடிச்சு வெடிக்காமச் செய்துடலாம். ஆனா, அந்தஅஞ்சாவது குண்டு வெடிச்சே தீரும். ஏன்னா, மக்கள் மதுரையிலே என்ன கஷ்டப்படுறாங்கன்னு இந்த மதுரைக்காரனுக்குத்தான் தெரியும்(சொல்லும்போதே விஜயகாந்தின் கண்கள் சிவக்கின்றன.)



கமல்: குண்டுவெடிக்கும் கதை இல்லைங்க இது... இந்தகுண்டு வெச்ச விவரத்தை போலீஸ் கமிஷனர்கிட்டே சொல்லி, தீவிரவாதிகளை அனுப்பச் சொல்லிக் கேட்கறீங்க...



விஜய: கமிஷனர்கிட்டேஎதுக்கு கேட்கணும்.நான் தே.மு.தி..-ங்கற வலுவான கட்சியோட தலைவன். நான் கருணாநிதிகிட்டேயே கேட்பேன். என் பலம் என்னனு அவருக்குத் தெரியும். ஆனா, தெரியாதமாதிரி நடிப்பாரு.ஒருத்தன் வளர்ந்துட்டான்னு ஒப்புக் கொள்ள அவர்மனசு இடங்கொடுக்காது.



கமல்: நீங்கஇதிலே கட்சித் தலைவர் இல்லே விஜி... சாதாரணபொதுஜனம்.அதனால், சி.எம்கிட்டே பேசுவதெல்லாம் சரியா இருக்காது.



விஜய: சரி, அப்போ இப்படிச் செய்யலாம். நான் கமிஷனர்கிட்டே தீவிரவாதிகளை அனுப்பச் சொல்றதுக்குபதிலாக கருணாநிதி,ஸ்டாலின், அழகிரியைஎல்லாம் அப்படியே வீட்டுக்கு அனுப்பச்சொல்றேன்.ஏன்னா, 2011-ல் மக்களே அவங்களை வீட்டுக்கு அனுப்பிடுவாங்க. என்ன சொல்றீங்க?



டைரக்டர் சக்ரி: (பொறுமை இழந்து போனவராக) சார்... ஏற்கனவே இந்தக் கதையை இந்தியில் எடுத்து ஹிட் ஆகியிருக்கு... அதனால், நம்மஇஷ்டத்துக்கு மாத்த முடியாது. நீங்கதீவிரவாதிகளை அனுப்பச் சொல்லித்தான் கேட்கணும்.



விஜய: ஓகே தம்பி... ஆனால் அந்தத் தீவிரவாதிகளை ஒரு கயித்தில் கட்டி நான்அண்ணாசாலை,ராதாகிருஷ்ணன்
சாலைனு இழுத்துகிட்டு தலைமைச் செயலகத்துக்குப்போய் இப்படி தீவிரவாதிகள்
உருவாக உங்க ஆட்சிதானே காரணம்னு கருணாநிதிகிட்டே கேள்வி கேட்பேன்
. அந்தக் காட்சியையாவது நீங்க வைக்கணும். உங்க கதை அனுமதிக்கலைன்னாலும் இப்படி நடந்தா என்னாகும்னுகமிஷனர் யோசிச்சுப் பார்க்கிற மாதிரியாவது அந்தக் காட்சியை வைக்கணும்...


டைரக்டர் சக்ரி ஒருமாதிரியாக கிறங்கிச் சரிய, ‘ஒன் மினிட் விஜி... இவருக்கு சோடா குடுத்து திரும்பக் கூட்டிட்டு வர்றேன் என்று சொல்லிவிட்டு எஸ்கேப்ஆகிறார் கமல்.


நன்றி தெனாலி
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum