புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 21:45

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 18:49

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 17:03

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 16:46

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 15:39

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 14:35

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 14:08

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:01

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:42

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:38

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:35

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:09

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:07

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:05

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:03

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"இந்தியா தோன்றும் முன்பிருந்தே இந்த ஆமைகள் இங்கிருக்கின்றன!"- ஆச்சர்யதகவல் Poll_c10"இந்தியா தோன்றும் முன்பிருந்தே இந்த ஆமைகள் இங்கிருக்கின்றன!"- ஆச்சர்யதகவல் Poll_m10"இந்தியா தோன்றும் முன்பிருந்தே இந்த ஆமைகள் இங்கிருக்கின்றன!"- ஆச்சர்யதகவல் Poll_c10 
106 Posts - 65%
heezulia
"இந்தியா தோன்றும் முன்பிருந்தே இந்த ஆமைகள் இங்கிருக்கின்றன!"- ஆச்சர்யதகவல் Poll_c10"இந்தியா தோன்றும் முன்பிருந்தே இந்த ஆமைகள் இங்கிருக்கின்றன!"- ஆச்சர்யதகவல் Poll_m10"இந்தியா தோன்றும் முன்பிருந்தே இந்த ஆமைகள் இங்கிருக்கின்றன!"- ஆச்சர்யதகவல் Poll_c10 
37 Posts - 23%
வேல்முருகன் காசி
"இந்தியா தோன்றும் முன்பிருந்தே இந்த ஆமைகள் இங்கிருக்கின்றன!"- ஆச்சர்யதகவல் Poll_c10"இந்தியா தோன்றும் முன்பிருந்தே இந்த ஆமைகள் இங்கிருக்கின்றன!"- ஆச்சர்யதகவல் Poll_m10"இந்தியா தோன்றும் முன்பிருந்தே இந்த ஆமைகள் இங்கிருக்கின்றன!"- ஆச்சர்யதகவல் Poll_c10 
10 Posts - 6%
mohamed nizamudeen
"இந்தியா தோன்றும் முன்பிருந்தே இந்த ஆமைகள் இங்கிருக்கின்றன!"- ஆச்சர்யதகவல் Poll_c10"இந்தியா தோன்றும் முன்பிருந்தே இந்த ஆமைகள் இங்கிருக்கின்றன!"- ஆச்சர்யதகவல் Poll_m10"இந்தியா தோன்றும் முன்பிருந்தே இந்த ஆமைகள் இங்கிருக்கின்றன!"- ஆச்சர்யதகவல் Poll_c10 
6 Posts - 4%
viyasan
"இந்தியா தோன்றும் முன்பிருந்தே இந்த ஆமைகள் இங்கிருக்கின்றன!"- ஆச்சர்யதகவல் Poll_c10"இந்தியா தோன்றும் முன்பிருந்தே இந்த ஆமைகள் இங்கிருக்கின்றன!"- ஆச்சர்யதகவல் Poll_m10"இந்தியா தோன்றும் முன்பிருந்தே இந்த ஆமைகள் இங்கிருக்கின்றன!"- ஆச்சர்யதகவல் Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
"இந்தியா தோன்றும் முன்பிருந்தே இந்த ஆமைகள் இங்கிருக்கின்றன!"- ஆச்சர்யதகவல் Poll_c10"இந்தியா தோன்றும் முன்பிருந்தே இந்த ஆமைகள் இங்கிருக்கின்றன!"- ஆச்சர்யதகவல் Poll_m10"இந்தியா தோன்றும் முன்பிருந்தே இந்த ஆமைகள் இங்கிருக்கின்றன!"- ஆச்சர்யதகவல் Poll_c10 
1 Post - 1%
eraeravi
"இந்தியா தோன்றும் முன்பிருந்தே இந்த ஆமைகள் இங்கிருக்கின்றன!"- ஆச்சர்யதகவல் Poll_c10"இந்தியா தோன்றும் முன்பிருந்தே இந்த ஆமைகள் இங்கிருக்கின்றன!"- ஆச்சர்யதகவல் Poll_m10"இந்தியா தோன்றும் முன்பிருந்தே இந்த ஆமைகள் இங்கிருக்கின்றன!"- ஆச்சர்யதகவல் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"இந்தியா தோன்றும் முன்பிருந்தே இந்த ஆமைகள் இங்கிருக்கின்றன!"- ஆச்சர்யதகவல் Poll_c10"இந்தியா தோன்றும் முன்பிருந்தே இந்த ஆமைகள் இங்கிருக்கின்றன!"- ஆச்சர்யதகவல் Poll_m10"இந்தியா தோன்றும் முன்பிருந்தே இந்த ஆமைகள் இங்கிருக்கின்றன!"- ஆச்சர்யதகவல் Poll_c10 
283 Posts - 45%
heezulia
"இந்தியா தோன்றும் முன்பிருந்தே இந்த ஆமைகள் இங்கிருக்கின்றன!"- ஆச்சர்யதகவல் Poll_c10"இந்தியா தோன்றும் முன்பிருந்தே இந்த ஆமைகள் இங்கிருக்கின்றன!"- ஆச்சர்யதகவல் Poll_m10"இந்தியா தோன்றும் முன்பிருந்தே இந்த ஆமைகள் இங்கிருக்கின்றன!"- ஆச்சர்யதகவல் Poll_c10 
232 Posts - 37%
mohamed nizamudeen
"இந்தியா தோன்றும் முன்பிருந்தே இந்த ஆமைகள் இங்கிருக்கின்றன!"- ஆச்சர்யதகவல் Poll_c10"இந்தியா தோன்றும் முன்பிருந்தே இந்த ஆமைகள் இங்கிருக்கின்றன!"- ஆச்சர்யதகவல் Poll_m10"இந்தியா தோன்றும் முன்பிருந்தே இந்த ஆமைகள் இங்கிருக்கின்றன!"- ஆச்சர்யதகவல் Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
"இந்தியா தோன்றும் முன்பிருந்தே இந்த ஆமைகள் இங்கிருக்கின்றன!"- ஆச்சர்யதகவல் Poll_c10"இந்தியா தோன்றும் முன்பிருந்தே இந்த ஆமைகள் இங்கிருக்கின்றன!"- ஆச்சர்யதகவல் Poll_m10"இந்தியா தோன்றும் முன்பிருந்தே இந்த ஆமைகள் இங்கிருக்கின்றன!"- ஆச்சர்யதகவல் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
"இந்தியா தோன்றும் முன்பிருந்தே இந்த ஆமைகள் இங்கிருக்கின்றன!"- ஆச்சர்யதகவல் Poll_c10"இந்தியா தோன்றும் முன்பிருந்தே இந்த ஆமைகள் இங்கிருக்கின்றன!"- ஆச்சர்யதகவல் Poll_m10"இந்தியா தோன்றும் முன்பிருந்தே இந்த ஆமைகள் இங்கிருக்கின்றன!"- ஆச்சர்யதகவல் Poll_c10 
19 Posts - 3%
prajai
"இந்தியா தோன்றும் முன்பிருந்தே இந்த ஆமைகள் இங்கிருக்கின்றன!"- ஆச்சர்யதகவல் Poll_c10"இந்தியா தோன்றும் முன்பிருந்தே இந்த ஆமைகள் இங்கிருக்கின்றன!"- ஆச்சர்யதகவல் Poll_m10"இந்தியா தோன்றும் முன்பிருந்தே இந்த ஆமைகள் இங்கிருக்கின்றன!"- ஆச்சர்யதகவல் Poll_c10 
13 Posts - 2%
Rathinavelu
"இந்தியா தோன்றும் முன்பிருந்தே இந்த ஆமைகள் இங்கிருக்கின்றன!"- ஆச்சர்யதகவல் Poll_c10"இந்தியா தோன்றும் முன்பிருந்தே இந்த ஆமைகள் இங்கிருக்கின்றன!"- ஆச்சர்யதகவல் Poll_m10"இந்தியா தோன்றும் முன்பிருந்தே இந்த ஆமைகள் இங்கிருக்கின்றன!"- ஆச்சர்யதகவல் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
"இந்தியா தோன்றும் முன்பிருந்தே இந்த ஆமைகள் இங்கிருக்கின்றன!"- ஆச்சர்யதகவல் Poll_c10"இந்தியா தோன்றும் முன்பிருந்தே இந்த ஆமைகள் இங்கிருக்கின்றன!"- ஆச்சர்யதகவல் Poll_m10"இந்தியா தோன்றும் முன்பிருந்தே இந்த ஆமைகள் இங்கிருக்கின்றன!"- ஆச்சர்யதகவல் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
"இந்தியா தோன்றும் முன்பிருந்தே இந்த ஆமைகள் இங்கிருக்கின்றன!"- ஆச்சர்யதகவல் Poll_c10"இந்தியா தோன்றும் முன்பிருந்தே இந்த ஆமைகள் இங்கிருக்கின்றன!"- ஆச்சர்யதகவல் Poll_m10"இந்தியா தோன்றும் முன்பிருந்தே இந்த ஆமைகள் இங்கிருக்கின்றன!"- ஆச்சர்யதகவல் Poll_c10 
7 Posts - 1%
mruthun
"இந்தியா தோன்றும் முன்பிருந்தே இந்த ஆமைகள் இங்கிருக்கின்றன!"- ஆச்சர்யதகவல் Poll_c10"இந்தியா தோன்றும் முன்பிருந்தே இந்த ஆமைகள் இங்கிருக்கின்றன!"- ஆச்சர்யதகவல் Poll_m10"இந்தியா தோன்றும் முன்பிருந்தே இந்த ஆமைகள் இங்கிருக்கின்றன!"- ஆச்சர்யதகவல் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"இந்தியா தோன்றும் முன்பிருந்தே இந்த ஆமைகள் இங்கிருக்கின்றன!"- ஆச்சர்யதகவல்


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun 28 Jan 2018 - 18:57

உ ள்ளங்கையில் வைத்துவிடலாம் அதை. அத்தனை சிறியதாக இருக்கும். முட்டையிலிருந்து வெளிவந்து சில நிமிடங்கள்தாம் ஆகியிருந்தன. இதுவரை முட்டையினுள் அந்த இருட்டு உலகில் இருந்தே நீச்சலடித்துக்கொண்டிருந்த அது, முதன் முதலாக இந்தப் பெரிய உலகத்தைப் பார்க்கிறது. கண்களில் ஒரு மிரட்சி, ஆச்சர்யம்...தன் சின்னஞ்சிறு தலையைத் திருப்பி, திருப்பி பார்க்கிறது. நல்ல குளிரான ஓர் இரவு அது. அதைக் கைகளில் சில தூரம் சுமந்து வந்த அவர், கடற்கரையில் இறக்கி விடுகிறார். அந்த மண்ணில் அதன் உடல் பட்டதும், அத்தனை ஒரு நெகிழ்ச்சி. அந்த மண்ணை அப்போதுதான் முதலில் உணர்கிறது. சில நிமிடங்கள் அமைதியாக அந்த மண்ணை உணர்ந்தது.
சுற்றத்தைக் கவனமாக கவனித்தது. பின்னர், மெதுவாக...மிக மெதுவாக நடக்க ஆரம்பித்தது. கடல் அலைகளின் சத்தத்தை அது வெகுவாக ரசித்திருக்கக் கூடும். கடலை கிட்டத்தட்ட நெருங்கிவிட்டது...அமைதியாக அப்படியே நின்றது. ஒரு பெரும் அலை வந்து அதன் மீது மோதியது. முதன்முறை கடல்நீர் தன் மேல் படுவதை எப்படி எடுத்துக்கொள்வது என அதற்குப் புரியவில்லை...சற்று பயப்படத்தான் செய்கிறது. அலை அதை கடலினுள் இழுக்க முயற்சிக்க...தன் கால்களை மண்ணில் இறுக்கமாகப் புதைத்து வைத்து அலையின் அழைப்பில் சிக்கிவிடாமல் நின்றது. அடுத்த அலை வர இன்னும் சில நொடிகள் இருக்கின்றன...ஆனால், அந்த சில நொடிகளில் இதற்குப் புரிந்துவிட்டது. "இதுதான் என் வாழ்க்கை. கடல்தான் என் வாழ்க்கை..." அடுத்த அலை நெருங்குவதற்கு முன்பே, வேகமாக அந்த அலையை நோக்கி முன்னேறியது. மண்ணில் எத்தனை மெதுவாக நகர்ந்ததோ, அதற்கு அப்படியே நேரெதிராக அந்தக் கடல் அலையில் அத்தனை வேகமாகப் பாய்ந்து நீந்தியது அந்த ஆலிவ் ரிட்லி ஆமை (Olive Ridley Turtle). அது மீண்டும் இந்த மண்ணிற்கு வர குறைந்தது 13 ஆண்டுகள் ஆகும்...அதாவது அத்தனை ஆண்டுகள் ஒருவேளை அது பிழைத்திருந்தால்...
நன்றி
விகடன்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun 28 Jan 2018 - 18:59

ஆலிவ் ரிட்லி ஓர் ஆச்சர்ய உயிரினம். முட்டையிலிருந்து வெளிவரும் குஞ்சுகளுக்குத் தன் தாய் யார் என்பதே தெரியாது. கரையில் முட்டைகளை இட்டதும், தாய் மீண்டும் கடலுக்குள் சென்றுவிடும். முட்டையிலிருந்து தானாக வெளிவரும் ஆமைக் குஞ்சுகள், தாமாகவே கடலுக்குள் செல்லும். தாமாகவே வளரும். வளர்ந்து 10லிருந்து 13 ஆண்டுகள் ஆகும் காலத்தில்தான் இனப்பெருக்கத்திற்கான முதிர்ச்சியை அது எட்டும். கருவுற்றதும்...எந்த நிலத்தில் அது பிறந்ததோ, மீண்டும் அதே நிலத்திற்கு வந்துதான் முட்டையிடும். இந்த இனப்பெருக்கம் ஆண்டின் ஜனவரி, பிப்ரவரி, மார்ச் ஆகிய மாதங்களில் நடைபெறும். உலகில் ஆலிவ் ரிட்லி ஆமைகள் அதிகம் வருகை தரும் நாடுகளில் இந்தியா, கோஸ்டரிகா, மெக்ஸிகோ ஆகிய நாடுகள் முன்னிலையில் இருக்கின்றன. இந்தியாவில் மிக அதிகமாக ஒடிஷா கடற்கரையிலும், ஆந்திரக் கடற்கரை மற்றும் தமிழகத்தின் கிழக்குக் கடற்கரையிலும் அதிகம் வருகின்றன ஆலிவ்ரிட்லிகள்.
[size=31]"இந்தியா தோன்றும் முன்பிருந்தே இந்த ஆமைகள் இங்கிருக்கின்றன!"- ஆச்சர்யதகவல் UjhOxKH8ToGw3QRN44Bj+e364cd37b7176e49b37f18026606d06a
[/size]


1970களின் ஆரம்பம் அது. சென்னையின் பாம்புப் பண்ணை மற்றும் முதலைப் பண்ணையை ஆரம்பித்த ரொம்யூலஸ் விட்டேகர் (Romulus Whitaker) பண்ணைக்கு ஒரு மீனவர் வந்தார். தன் கையிலிருந்த அந்தச் சின்னஞ்சிறு ஆமையைக் காட்டி...

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun 28 Jan 2018 - 19:01

ஐயா...இத இன்னிக்கு கடலுக்குப் போகும் போது கரையில பார்த்தேன். இதப் பத்தி உங்களுக்குத் தெரியும்ன்னுதான் கொண்டு வந்தேன்..." என்று சொல்லி அதைக் கொடுக்கிறார். அது ஒரு பெண் ஆலிவ் ரிட்லி குட்டி. அங்கிருந்து தொடங்கிய அந்தத் தேடல்... ரொம்யூலஸுக்கு இந்தப் பகுதியில் ஆலிரிட்லிகள் முட்டையிட வருவது பற்றி தெரிகிறது. அதைக் காக்க அன்றைய காலங்களிலேயே அவர் இரவுகளில் இந்த "Turtle Walk" செய்யத் தொடங்கிவிட்டார். பின்னர், 1987யில் சில கல்லூரி மாணவர்கள் இணைந்து Chennai Students' Sea Turtle Conservation Network (SSTCN) எனும் அமைப்பைத் தொடங்கினர். அன்று முதல் இன்றுவரை முழுக்க, முழுக்க தன்னார்வலர்களால் இந்த "ஆமைகளைக் காக்கும் நடை" தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அப்படியான ஓர் இரவு நடை இது...
[size=31]"இந்தியா தோன்றும் முன்பிருந்தே இந்த ஆமைகள் இங்கிருக்கின்றன!"- ஆச்சர்யதகவல் SYYrhYtS4uiuuwjcFfVV+36d7b8e41ec467bcb4977fef944f14f8
[/size]


சென்னை நீலாங்கரை கடற்கரைப் பகுதியில இரவு 11.30 மணியளவில் நடையில் பங்கேற்க வந்துள்ளோர் அனைவரும் கூடுகிறார்கள். அவர்களை இரண்டு குழுக்களாகப் பிரித்து SSTCN உறுப்பினர்கள் ஆலிவ் ரிட்லி ஆமைகள் குறித்தும், அந்த நடையின் அவசியம் குறித்தும், இன்னும், இன்னும் பல சூழலியல் சிக்கல்கள் குறித்தும் உரையாடுகிறார்கள். விவாதிக்கிறார்கள். மணி ஒன்றைத் தொடங்கும்போது பெசன்ட் நகர் பிச்சை நோக்கிய நடைத் தொடங்குகிறது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun 28 Jan 2018 - 19:03

கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கும் மேலாக இந்த முன்னெடுப்புகளில் ஈடுபட்டிருக்கும் அருண், திருவண்ணாமலையில் "மருதம்" எனும் மாற்று வழிக்கல்வியைக் கற்பிக்கும் பள்ளியை நடத்தி வருகிறார். அந்த இரவு நேரத்தில் அலைகளின் சத்தத்திற்கு இடையே சில கேள்விகளை முன்வைத்தோம்:
[size=31]"இந்தியா தோன்றும் முன்பிருந்தே இந்த ஆமைகள் இங்கிருக்கின்றன!"- ஆச்சர்யதகவல் K5pV3JVTli8DLVn2WMN0+6e0cfa3909fa6dcd84f8e8b88fce172f
[/size]


இந்த Olive Ridley Turtlesச் என்பது என்ன? அது ஏன் இந்தப் பகுதிகளில் முட்டையிடுகின்றன?
"ஆலிவ் ரிட்லியின் வயது என்று பார்த்தால் 120மில்லியன் ஆண்டுகள். அதாவது அப்பொழுது இந்தியா என்கிற தீபகற்பமே (Peninsula) உருவாகவில்லை. அது ஆப்பிக்காவோடு இணைந்திருந்த சமயமாக இருக்கலாம். அந்தளவிற்கு ஒரு பழைய உயிரினம் ஆலிவ் ரிட்லி. பிறக்கும் இடத்திலேயே வந்து மீண்டும் அதற்கு முட்டையிடும் வழக்கம் இயற்கையிலேயே இருப்பதால் இங்கு வருகின்றன. சொல்லப்போனால், தமிழ்நாட்டில் ஆலிவ் ரிட்லி வருகை குறைவுதான். ஒடிஷாவில்தான் பல்லாயிரக்கணக்கான ஆமைகள் வரும்."

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun 28 Jan 2018 - 19:04

"இந்தியா தோன்றும் முன்பிருந்தே இந்த ஆமைகள் இங்கிருக்கின்றன!"- ஆச்சர்யதகவல் DyU9EwtYTU6lZcviDadc+2bb994df09432096079f299da99c2685

இயற்கையாக நடக்கும் இந்த நிகழ்வில்...நாம் ஏன் முட்டைகளைக் காப்பாற்றி சேகரித்து அதைக் கடலில் விடவேண்டும். இயற்கையின் அடிப்படையே 'தக்கன பிழைக்கும்' (Survival of the Fittest) என்பது தானே?
"இல்லை...நாம் இந்த "சர்வைவல் ஆஃப தி பிட்டெஸ்ட்" என்பதையே தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறோம். அதை இன்று ஏதேதோ உதாரணங்களுக்கு...இன்று நாம் செய்யும் அரசியல் கொள்ளைகள், வியாபாரக் கொள்ளைகள் வரை எல்லாவற்றிற்கும் பொதுவாக உபயோகப்படுத்திக் கொண்டிருக்கிறோம். இன்றைக்கு இருக்கும் இயற்கைச் சூழலுக்கு நமக்கான தேவை என்பது 'பரஸ்பர ஒத்துழைப்பு'(Mutual Co-operation) தான். அப்படிப் பார்க்கும்போது, இந்த இயற்கைச் சூழலை அதன் இயல்பிலேயே நாம் விட்டுவைக்கவில்லை. கடலையும், கடற்கரையையும் பெருமளவு சீர்குலைத்துவிட்டோம். ஆலிவ் ரிட்லி என்பது கடற்வாழ் சுழற்சியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இதன் முக்கிய உணவு ஜெல்லி மீன்கள். ஜெல்லி மீன்களின் முக்கிய உணவு மற்ற சின்ன மீன்கள். ஜெல்லி மீன்களின் தொகையைக் கட்டுக்குள் வைத்தால், கடலில் மீன்வளம் நன்றாக இருக்கும். அதற்கு ஆலிவ்ரிட்லிகள் அவசியம். ஆனால், இன்று கடற்கரைகளில் நாம் எரியவிட்டிருக்கும் விளக்குகள் தொடங்கி பல பிரச்னைகள் அவற்றுக்கு இருக்கின்றன. அதனால் தான், நம்மால் முடிந்த உதவிகளை நாம் செய்கிறோம். இதனால், உலகளவில் பெரிய மாற்றங்கள் வந்துவிடுமா? ஆலிவ் ரிட்லிகளை நாம் காப்பாற்றிவிடுவோமா? என்று கேட்டால், இல்லைதான். ஆனால், குறைந்தபட்சம் மக்களுக்கு இதன் மூலம் சின்ன விழிப்புஉணர்வு ஏற்படும். சென்னை போன்ற நகரத்தில் வாழும் மனிதர்களுக்கான ஒரே இயற்கைத் தொடர்பு கடல்தான். இயற்கை என்றாலே காடுதான் என்பதில்லை. கடலும், கடல் வாழ்க்கையும் கூட இயற்கைதான்."

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun 28 Jan 2018 - 19:07

"இந்தியா தோன்றும் முன்பிருந்தே இந்த ஆமைகள் இங்கிருக்கின்றன!"- ஆச்சர்யதகவல் 0EoidOoXTp2oMi0IpIvw+b7297dd316f9b93e579f24d64469c5bc

இந்த வருடத்தின் சீசன் தொடக்கம் எப்படியிருக்கிறது? ஆமைகளின் வருகை அதிகரித்திருக்கிறதா?
"இல்லை இந்த வருடம் மிகவும் கவலைக்குரிய வருடமாகவே தெரிகிறது. ஜனவரி 1 தொடங்கி இந்த 24 நாள்களில் மட்டும் 185 ஆமைகள் இறந்து கரை ஒதுங்கியிருக்கின்றன. 24 கூடுகளை மட்டுமே கண்டுபிடித்திருக்கிறோம். 24ம் தேதி இரவு மட்டுமே 22 இறந்த ஆமைகளைக் கண்டுபிடித்தோம். இது மிகவும் வருந்தத்தக்க விஷயம்."
பொதுவாக ஆங்கிலத்தில் சொல்லப்படும் Tortoise மற்றும் Turtle இரண்டுமே ஒன்றுதான் என்று பலரும் நினைக்கிறோம். ஆனால், இரண்டும் செலோனியன் (Chelonian) எனும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவையாக இருந்தாலும், இரண்டிற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன:
Tortoise Turtle
1. நிலத்தில் அதிகம் வாழக் கூடியவை
1. நீரில் அதிகம் வாழக்கூடியவை.
2. இதன் ஓடு கூம்பு போன்று இருக்கும்.
2. பெரும்பாலும் இதன் ஓடுகள் தட்டையாக இருக்கும்.
3. ஓடுகள் அதிக எடைக் கொண்டவையாக இருக்கும்.
3. ஓடுகளின் எடை கம்மியாக இருக்கும்.
4. பெரும்பாலானவை தாவர உண்ணிகள் மட்டுமே.
4. மாமிசம் உண்ணும்.
5. 80லிருந்து 150 வருடங்கள் வரை வாழும்.
5. 20லிருந்து 40 வயது வரை வாழும்.
6. முதல் 80 நாள்கள் குஞ்சுகளைப் பாதுகாக்கும்.
6. முட்டையிட்ட உடனே கடலுக்குள் சென்றுவிடும்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun 28 Jan 2018 - 19:11

"இந்தியா தோன்றும் முன்பிருந்தே இந்த ஆமைகள் இங்கிருக்கின்றன!"- ஆச்சர்யதகவல் 3g5OpxHDTTaDdObskDcB+bacc8e52be8d41446266a9d0f3f139ba


இதற்கான காரணங்கள்?
"பல காரணங்கள். பூமி வெப்பமயமாதல் தொடங்கி, கடலை நிரப்பியிருக்கும் பிளாஸ்டிக் குப்பைகள், கில் நெட் (Gill Net) உபயோகம், நாம் அலட்சியமாக தூக்கியெறியும் குப்பைகள், இயற்கைக்கு எதிரான நம் ஆடம்பரமான வாழ்க்கை வரைப் பல காரணங்கள் இருக்கின்றன. ஆனால், நம் கடல் மிகவும் மாசுபட்டிருக்கிறது என்பது உண்மை. ஆனால், காட்டைக் காப்பாற்ற வேண்டும், மரங்கள் வெட்டுவதைத் தடுக்க வேண்டும் என்ற விழிப்புணர்வே மக்களுக்கு இப்பொழுதுதான் வரத் தொடங்கியிருக்கிறது. நிலத்தின் பிரச்னைகளை உணர்ந்து, கடலின் பிரச்னைகளை அவர்கள் உணரத் தொடங்குவதற்குள் கடல் இருக்குமா? என்பதே தெரியவில்லை. அந்தளவிற்கு கடல் பெரும் மாசடைந்திருக்கிறது." என்று கையில் இருந்த டார்ச் லைட்டை மணலின் ஒரு பக்கம் அடித்தார்.
நள்ளிரவு மணி 2. உப்புநீரின் ஈரத்தோடு அந்த ஆமை மணலில் மெதுவாக நடக்கத் தொடங்கியது. கரையிலிருந்த அந்த மணற் மேட்டில் மெதுவாக ஏறியது. மணற்பரப்பின் ஒரு பகுதியைத் தேர்ந்தெடுத்து தன் துடுப்பால் அதை சுத்தம் செய்தது. பின்னர், தன் ஓட்டின் பின்புற முனையைக் கொண்டு அங்கு ஒரு குழி தோண்ட ஆரம்பித்தது. எல்லாம் தயார்.


"இந்தியா தோன்றும் முன்பிருந்தே இந்த ஆமைகள் இங்கிருக்கின்றன!"- ஆச்சர்யதகவல் IsNpIcYR5q6wBNPFIK0w+bb1e6916bbda6c7ffec7fd576c7e6a6a

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun 28 Jan 2018 - 19:13

"இந்தியா தோன்றும் முன்பிருந்தே இந்த ஆமைகள் இங்கிருக்கின்றன!"- ஆச்சர்யதகவல் BwQZNOpaSW943icaovKv+39b7aafaf540dda3581b8513801ab443

"அது மயக்க நிலைக்குச் சென்று கொண்டிருக்கிறது" என்றார் அருண்.
சில நிமிடங்கள் அங்குமிங்கும் அலைந்தது. பின்னர், மெதுவாக அந்தக் குழியின் மத்திக்கு வந்து முட்டையிடத் தொடங்கியது. மொத்தம் 137 முட்டைகள். மிகவும் சோர்வாகக் காணப்பட்டது அந்த ஆமை. மெதுவாக அங்கிருந்து நகர்ந்தது. மெள்ள, மெள்ள நடந்தது. கடலை நோக்கி நடக்கத் தொடங்கியது. அங்கிருந்த ஒரு சரிவில் சற்று சறுக்கியது. கடலை நெருங்கிவிட்டது. முதல் அலை அதைத் தொட்டது. அது போகவில்லை. கால்களை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு நின்றுவிட்டது. ஒருமுறை திரும்பிதான் முட்டையிட்ட இடத்தைப் பார்த்தது. அடுத்த அலை அதனை அடித்தது. அது நிற்கவில்லை...கடலோடு அப்படியே கரைந்துவிட்டது.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக