புதிய பதிவுகள்
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Today at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:22 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:52 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Yesterday at 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Yesterday at 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Yesterday at 10:32 am

» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:51 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்குப் பின்னர் அரசியலிலிருந்து ஓய்வு - கருணாநிதி Poll_c10உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்குப் பின்னர் அரசியலிலிருந்து ஓய்வு - கருணாநிதி Poll_m10உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்குப் பின்னர் அரசியலிலிருந்து ஓய்வு - கருணாநிதி Poll_c10 
54 Posts - 43%
ayyasamy ram
உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்குப் பின்னர் அரசியலிலிருந்து ஓய்வு - கருணாநிதி Poll_c10உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்குப் பின்னர் அரசியலிலிருந்து ஓய்வு - கருணாநிதி Poll_m10உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்குப் பின்னர் அரசியலிலிருந்து ஓய்வு - கருணாநிதி Poll_c10 
53 Posts - 42%
T.N.Balasubramanian
உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்குப் பின்னர் அரசியலிலிருந்து ஓய்வு - கருணாநிதி Poll_c10உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்குப் பின்னர் அரசியலிலிருந்து ஓய்வு - கருணாநிதி Poll_m10உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்குப் பின்னர் அரசியலிலிருந்து ஓய்வு - கருணாநிதி Poll_c10 
7 Posts - 6%
mohamed nizamudeen
உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்குப் பின்னர் அரசியலிலிருந்து ஓய்வு - கருணாநிதி Poll_c10உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்குப் பின்னர் அரசியலிலிருந்து ஓய்வு - கருணாநிதி Poll_m10உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்குப் பின்னர் அரசியலிலிருந்து ஓய்வு - கருணாநிதி Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்குப் பின்னர் அரசியலிலிருந்து ஓய்வு - கருணாநிதி Poll_c10உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்குப் பின்னர் அரசியலிலிருந்து ஓய்வு - கருணாநிதி Poll_m10உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்குப் பின்னர் அரசியலிலிருந்து ஓய்வு - கருணாநிதி Poll_c10 
3 Posts - 2%
jairam
உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்குப் பின்னர் அரசியலிலிருந்து ஓய்வு - கருணாநிதி Poll_c10உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்குப் பின்னர் அரசியலிலிருந்து ஓய்வு - கருணாநிதி Poll_m10உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்குப் பின்னர் அரசியலிலிருந்து ஓய்வு - கருணாநிதி Poll_c10 
2 Posts - 2%
Manimegala
உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்குப் பின்னர் அரசியலிலிருந்து ஓய்வு - கருணாநிதி Poll_c10உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்குப் பின்னர் அரசியலிலிருந்து ஓய்வு - கருணாநிதி Poll_m10உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்குப் பின்னர் அரசியலிலிருந்து ஓய்வு - கருணாநிதி Poll_c10 
1 Post - 1%
Poomagi
உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்குப் பின்னர் அரசியலிலிருந்து ஓய்வு - கருணாநிதி Poll_c10உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்குப் பின்னர் அரசியலிலிருந்து ஓய்வு - கருணாநிதி Poll_m10உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்குப் பின்னர் அரசியலிலிருந்து ஓய்வு - கருணாநிதி Poll_c10 
1 Post - 1%
சிவா
உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்குப் பின்னர் அரசியலிலிருந்து ஓய்வு - கருணாநிதி Poll_c10உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்குப் பின்னர் அரசியலிலிருந்து ஓய்வு - கருணாநிதி Poll_m10உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்குப் பின்னர் அரசியலிலிருந்து ஓய்வு - கருணாநிதி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்குப் பின்னர் அரசியலிலிருந்து ஓய்வு - கருணாநிதி Poll_c10உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்குப் பின்னர் அரசியலிலிருந்து ஓய்வு - கருணாநிதி Poll_m10உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்குப் பின்னர் அரசியலிலிருந்து ஓய்வு - கருணாநிதி Poll_c10 
184 Posts - 50%
ayyasamy ram
உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்குப் பின்னர் அரசியலிலிருந்து ஓய்வு - கருணாநிதி Poll_c10உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்குப் பின்னர் அரசியலிலிருந்து ஓய்வு - கருணாநிதி Poll_m10உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்குப் பின்னர் அரசியலிலிருந்து ஓய்வு - கருணாநிதி Poll_c10 
136 Posts - 37%
mohamed nizamudeen
உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்குப் பின்னர் அரசியலிலிருந்து ஓய்வு - கருணாநிதி Poll_c10உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்குப் பின்னர் அரசியலிலிருந்து ஓய்வு - கருணாநிதி Poll_m10உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்குப் பின்னர் அரசியலிலிருந்து ஓய்வு - கருணாநிதி Poll_c10 
15 Posts - 4%
prajai
உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்குப் பின்னர் அரசியலிலிருந்து ஓய்வு - கருணாநிதி Poll_c10உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்குப் பின்னர் அரசியலிலிருந்து ஓய்வு - கருணாநிதி Poll_m10உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்குப் பின்னர் அரசியலிலிருந்து ஓய்வு - கருணாநிதி Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்குப் பின்னர் அரசியலிலிருந்து ஓய்வு - கருணாநிதி Poll_c10உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்குப் பின்னர் அரசியலிலிருந்து ஓய்வு - கருணாநிதி Poll_m10உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்குப் பின்னர் அரசியலிலிருந்து ஓய்வு - கருணாநிதி Poll_c10 
7 Posts - 2%
Jenila
உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்குப் பின்னர் அரசியலிலிருந்து ஓய்வு - கருணாநிதி Poll_c10உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்குப் பின்னர் அரசியலிலிருந்து ஓய்வு - கருணாநிதி Poll_m10உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்குப் பின்னர் அரசியலிலிருந்து ஓய்வு - கருணாநிதி Poll_c10 
4 Posts - 1%
jairam
உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்குப் பின்னர் அரசியலிலிருந்து ஓய்வு - கருணாநிதி Poll_c10உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்குப் பின்னர் அரசியலிலிருந்து ஓய்வு - கருணாநிதி Poll_m10உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்குப் பின்னர் அரசியலிலிருந்து ஓய்வு - கருணாநிதி Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்குப் பின்னர் அரசியலிலிருந்து ஓய்வு - கருணாநிதி Poll_c10உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்குப் பின்னர் அரசியலிலிருந்து ஓய்வு - கருணாநிதி Poll_m10உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்குப் பின்னர் அரசியலிலிருந்து ஓய்வு - கருணாநிதி Poll_c10 
3 Posts - 1%
Rutu
உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்குப் பின்னர் அரசியலிலிருந்து ஓய்வு - கருணாநிதி Poll_c10உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்குப் பின்னர் அரசியலிலிருந்து ஓய்வு - கருணாநிதி Poll_m10உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்குப் பின்னர் அரசியலிலிருந்து ஓய்வு - கருணாநிதி Poll_c10 
3 Posts - 1%
Guna.D
உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்குப் பின்னர் அரசியலிலிருந்து ஓய்வு - கருணாநிதி Poll_c10உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்குப் பின்னர் அரசியலிலிருந்து ஓய்வு - கருணாநிதி Poll_m10உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்குப் பின்னர் அரசியலிலிருந்து ஓய்வு - கருணாநிதி Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்குப் பின்னர் அரசியலிலிருந்து ஓய்வு - கருணாநிதி


   
   
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sun Dec 06, 2009 11:04 am

சென்னை: உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்குப் பிறகு அரசியல், அமைச்சர் பதவிகளை ஒதுக்கி வைத்து விட்டு மக்களுடன் ஒருவனாக நான் என்னை இணைத்துக் கொள்வேன் என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி

இதன் மூலம் அடுத்த ஆண்டு ஜூன் மாதத்துடன் அவர் அரசியலை விட்டு விலகப் போவதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமைச்சர்கள், திமுகவினர் மத்தியில் இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2009-2010-ம் ஆண்டு பட்ஜெட்டில் அருந்ததியருக்கு 3 சதவீத தனி உள் இடஒதுக்கீட்டை முதல்வர் கருணாநிதி வழங்கினார். மேலும், உயர்கல்வி வளர்ச்சிக்கு நன்கொடையாக ரூ.61 லட்சத்து 5 ஆயிரம் வழங்கினார்.

இதற்காக கருணாநிதிக்கு அருந்ததியர் மக்கள் சார்பில் நன்றி தெரிவித்து பாராட்டுக் கூட்டம் சென்னையில் நடந்தது.

விழாவில் முதல்வர் கருணாநிதி பேசுகையில்,

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று அய்யன் வள்ளுவருடைய வாய்மொழியை இங்கே உரையாற்றியவர்கள் நினைவுபடுத்தினார்கள். அந்த அருமையான வாசகம், வள்ளுவருடைய குறளிலே இருக்குமே அல்லாமல், வள்ளுவரைப் பாராட்டுகின்ற, வள்ளுவருடைய படத்தைத் திறந்து வைக்கின்ற, வள்ளுவருடைய குறளை மூச்சுக்கு முப்பது முறை எடுத்துக் கூறுகின்ற புலவர்களிடத்திலே, படித்த மக்களிடத்திலே இன்றைக்கு இருக்கிறதா என்றால் இல்லை.

வள்ளுவரை பெயரளவுக்கு; நமக்கும் வள்ளுவம் தெரியும் என்று பெருமைப்படத் தக்க அளவிற்கு பெயர் சூட்டி அழைக்கிறோமே அல்லாமல், அவருடைய கொள்கைகளை, அவருடைய எண்ணத்தை, அவருடைய உறுதியை, அவர் யாத்து தந்த திருக்குறளிலே பொதிந்த கருத்துகளை ஏற்றுக் கொண்டிருக்கிறோமா, அவ்வழி நடக்கிறோமா என்று நம்மை நாமே கேட்டுக் கொள்ளும்போது நமக்கு நம்மை அறியாமல் ஒரு வெட்கம் தான் தலையைத் தாழ்த்த வைக்கின்றது.

இங்கே குறிப்பிட்டார்களே, சுதந்திரம் கிடைத்து இத்தனை நாட்களாகியும் கூட, எங்களுக்குச் சுதந்திரம் கிடைக்கவில்லை என்று, சுதந்திரம் மாத்திரமல்ல கிடைக்காமல் போனது, உங்களுக்கும், உங்களைப் போன்ற இன மக்களுக்கும் கிடைக்க வேண்டிய சுயமரியாதையும் இதுவரையில் கிடைக்கவில்லை. உங்களுக்காக அந்தச் சுய மரியாதைக் கொடியை பறக்கவிட வேண்டிய அந்தக் கடமையைத் தான், பணியைத் தான் நாங்கள் மேற்கொண்டிருக்கின்றோம்.

நான் என்னுடைய வாழ்க்கை வரலாற்றை எழுதியிருக்கிறேன், படித்துப் பார்த்தால் உங்களுக்குத் தெரியும். இன்றைக்கு இந்த விழாவிற்குப் பிறகு நாளைக்கு நான் பேனா எடுத்து எழுதப் போகின்ற வாழ்க்கை வரலாறு அல்ல. அப்பொழுதே எழுதியிருக்கிறேன், என்னுடைய பொது வாழ்க்கையின் தொடக்கம், ஏழையெளிய, பாட்டாளி மக்களுடைய பகுதிகளிலே தான், குறிப்பாக தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பகுதிகளிலே தான் என்று எழுதியிருக்கிறேன். அது இன்று வரையில் அந்த நிலை தொடருகிறது. இன்றும் தொடருகிறது, என்றும் தொடரும் என்ற உறுதியை இந்த விழாவிலே நான் உறுதிப்படுத்துகின்றேன். மீண்டும் மீண்டும் உங்களுக்கு சத்தியம் செய்து குறிப்பிடுகின்றேன்.

நீங்கள் பேசும்போது சொல்லிக் கொண்டீர்கள், நீங்கள் என்னிடம் கோரிக்கை வைத்ததாகவும், அதை நான் நிறைவேற்றிக் கொடுத்ததாகவும் பேசும்போது துரைசாமியும், ரவிச்சந்திரனும் சொன்னார்கள். நான் சொல்லுகிறேன், நீங்கள் யாரும் கோரிக்கை வைத்து நான் கொடுக்கவில்லை. இப்படிச் சொல்வதற்காக நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும், நானே கோரிக்கை வைத்து, நானே நிறைவேற்றிக் கொண்ட திட்டம் தான் இந்தத் திட்டம்.

நான் யாரிடத்திலே கோரிக்கை வைப்பது? என்னிடத்திலே தான் கோரிக்கை வைக்க வேண்டும்.

வள்ளுவர் கோட்டத்திலே எத்தனையோ விழாக்கள் நடைபெற்றிருக்கின்றன. ஆனால் அந்த விழாக்களில் கலந்து கொள்ளும் போது எனக்கு ஏற்பட்ட உணர்வை விட, அந்த உயிர்ப்பை விட இன்றைக்கு இந்த விழாவிலே கலந்து கொள்ளும்போது ஏற்படுகின்ற உயிர்ப்பும் உணர்வும் மிக மிக உயரமானது, மிக மிக உணர்ச்சிகரமானது.

ஏனென்றால், என்னுடைய உள்ளக் கிடக்கையை ஒரு கவிதை மூலமாக நான் வெளியிட்டதை இங்கே தமிழரசி எடுத்துச் சொன்னார். அது என்ன கவிதை? இந்த அருந்ததியருக்கான 3 சதவிகித இட ஒதுக்கீடு சட்டம் நிறைவேறும்பொழுது நான் மருத்துவமனையிலே இருந்தேன்.

சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் முதுகு தண்டுவடத்திலே அபாயகரமான ஒரு அறுவைச் சிகிச்சைக்கு ஆட்பட்டு, மீண்டும் வந்து உங்களை எல்லாம் பார்ப்பேனா என்ற அய்யப்பாட்டுக்கிடையே படுக்கையிலே இருந்தேன். அப்போது நான் எழுதிய அந்தக் கவிதையை முரசொலியிலே வெளியிடச் சொல்லி அனுப்பினேன்.

எழுதியது மாத்திரமல்ல. இட ஒதுக்கீடு சட்டத்தை மருத்துவமனையில் இருந்தபடியே சட்டப் பேரவைக்கு அனுப்பி, இங்கே நம்முடைய துணை சபாநாயகர் எடுத்துச் சொன்னதைப் போல, அங்கே நிறைவேற்ற நான் எழுதிய கடிதம் இதோ :-

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, அவை முன்னவர் அருமைப் பேராசிரியர் அவர்களே, சட்டப் பேரவை அனைத்துக் கட்சி அன்பு உடன்பிறப்புகளே, இன்று வந்து உங்களை சந்திப்பதாக இருந்தும் கூட டெல்லி மருத்துவரும் சென்னை மருத்துவ நண்பர்கள் குழுவும் அளித்த அறிவுரையாலும் அச்சுறுத்தலாலும் வர இயலவில்லை. மன்னிக்க வேண்டுகிறேன்.

நிமிர முடியாமலும், திரும்ப முடியாமலும் "நங்கூரம்'' போட்டது போல நரம்பிணைந்து முதுகுத் தண்டில் வலி! வலி! வலி!

ஒன்று உடல் வலி, பிறிதொன்று நீங்கள் வழங்கியுள்ள மன வலி! கருத்து மாறுபாடுகளுக்கிடையிலேயும் நீங்கள் காட்டும் கனிவு, அரசியல் மாச்சரியங்களை மீறி நீங்கள் காட்டும் அன்பு, இன்று நம்மை மீண்டும் இணைக்கிறது, தமிழ்த் தாயின் கரம் நம்மை ஒரு சேர அணைக்கிறது.

அறிவியக்கம்,ஆன்மிகம், நாத்திகம்,ஆத்திகம் இந்த வேறுபாடுகள் மாறுபாடுகள் கடந்த நன்றியுணர்வும் நன்மனித நேயமும் வளர்த்திடுவோம். ஆரம்பகால பொதுவுடைமை வாதி என்ற முறையிலும் அய்யா, அண்ணா, காமராஜர், அண்ணன் ஜீவா போன்றோரின் அருமைத் தொண்டர்களில் ஒருவன் என்ற முறையிலும், அடி மட்டத்துக்கெல்லாம் அடி மட்டமாகக் கிடந்து அவதியுறும் "மனித ஜீவன்கள்''

"அருந்ததி'' மக்கள், புதிய உலகம், புரட்சியுகம் காண்பதற்காக; இன்று அவையில் நான் முன் வைக்கும் சட்ட முன் வடிவை; உங்கள் ஆதரவு வழங்கி; நிறைவேற்றித் தர வேண்டுகிறேன்.

என்று ராமச்சந்திரா மருத்துவமனையிலிருந்து எழுதினேன்.

அன்றைக்கு அரசின் துணை முதல்வர் மு. க. ஸ்டாலினால் பேரவையில் இந்தச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட காரணத்தால் தான் இங்கே நாமெல்லாம் மகிழ்ச்சி வெள்ளத்திலே நிரம்பி, திளைத்துக் கூடியிருக்கிறோம்.

அடித்தளம் என்பது கேவலமான ஒன்றல்ல. அடித்தளம் கோபுரத்தையே காப்பாற்றக் கூடிய, கோபுரத்திற்கு அடிவாரம். ஆகவே தான் அடித்தள மக்களைக் காப்பாற்றினால் தான் அடித்தள மக்களை உயர்த்தினால் தான் அடித்தள மக்களை நம்மோடு அணைத்துக் கொண்டால்தான், சமுதாயத்தை வாழ வைக்கமுடியும். நாட்டை வாழ வைக்க முடியும்.

இந்த உன்னதமான கருத்தோடு நான் பால பருவத்திலேயிருந்து இதுவரை உழைத்து வருகிறேன். இன்னமும் உழைக்கத் தயாராக இருக்கிறேன். உழைப்பேன். ஆனால் என்னுடைய உழைப்பில் நான் சிந்துகின்ற ஒவ்வொரு துளி வியர்வையும் ஏழையெளிய மக்களுக்காக, பாட்டாளி மக்களுக்காக, குடிசை களிலே வாழ்கின்ற மக்களுக்காக, தொழிலாளத் தோழர்களுக்காக இங்கே கூடி யிருக்கிறீர்களே, அருந்ததியர், இந்த அருந்ததிய மக்களுக்காக, ஆதி திராவிட மக்களுக்காக, இன்னும் சொல்லப் போனால், இன்றைக்கு தொலைக் காட்சியிலே பார்த்தேன், மதுரை மாநகரத்தில் திருநங்கையர் கூட்டம், இவர்கள் எல்லாம் ஆடவரும் அல்ல, பெண்டிரும் அல்ல என்ற கேலிக் குரியவர்களாக, சமுதாயத்திலே பேசப்பட்ட காலம் போய் இன்று அவர்களுக்கு எல்லாம் திருநங்கையர் என்ற பட்டம் சூட்டி, அவர்களுக்கு வாக்குச் சீட்டு, ரேஷன் கார்டு வரையிலே தந்து அவர்களை நாம் உயர்த்தியிருப்பது இந்த ஆட்சியிலே தான் என்பதை நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.

நாம் புழுக்களாக இருப்பவர்களை புலிகளாக மாற்றுவோம், நாம் சிற்றெரும்புகளாக கிடப்பவர்களை சிங்க ஏறுகளாக ஆக்குவோம், அப்படி மாற்றுவதற்காக உருவாக்கப்பட்டது தான், உதயமானது தான் திராவிட இயக்கம். திராவிட இயக்கம் தான் அது தோன்றிய காலத்தில் எடுத்துச் சொன்ன கொள்கைகளையெல்லாம் ஏதோ பிரிவினைக்காக மக்களிடத்திலே வேறுபாடான உணர்ச்சிகளை ஏற்படுத்துவதற்காக என்றெல்லாம் எதிரிகளால் சொல்லப்பட்டது.

ஆனால் இன்றைக்கு எதிரிகளாலும், பகைவர்களாலும் பாராட்டப்படுகின்ற, போற்றப்படுகின்ற கொள்கைகளை, செயல்படுத்துகின்ற இயக்கம் திராவிட இயக்கம், குறிப்பாக திராவிட இயக்கத்தின் அரசியல் பிரிவான திராவிட முன்னேற்றக் கழகம். இந்த இயக்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டிருக்கின்ற எல்லோரையும் நான் பாகுபடுத்தாமல் அவர்களை யெல்லாம் நம்மவர்கள் என்ற முறையிலே தான் நான் நினைக்கிறேன்.

எனக்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த துணை சபாநாயகர் துரைசாமி ஆனாலும், அல்லது அருந்ததிய மக்கள் கட்சியின் தலைவர் ரவிச்சந்திரன் ஆனாலும், இரண்டு பேரும் எனக்கு உடன்பிறப்புகள் தான். இருவரும் ஒன்றுபட்டு உழைத்தால் இன்னும் பல உறுதியான வெற்றிகளை நாம் பெற முடியும். அந்த வெற்றிகளைப் பெறுவதற்கு நான் ஓயாமல் உழைக்க இந்த வள்ளுவர் கோட்டத்திலே உங்கள் முன்னால் உறுதி எடுத்துக் கொள்கிறேன்.

ஒன்று சொல்வேன், என்னுடைய மிச்சம் இருக்கின்ற வாழ்நாள் முழுதும் உங்களைப் போன்ற ஏழையெளிய மக்களுக்காக, உங்களைப் போன்ற அடக்கப் பட்ட மக்களை அடலேறுகளாக மாற்றுவதற்காக, உழைப்பேன், உழைப்பேன் என்று சொல்லிக் கொண்டு அதற்கென்று ஒரு அறிவிப்பை நான் அமைச்சர் பதவியிலே இருந்து கொண்டு இதையெல்லாம் செய்ய வேண்டுமா என்ற கேள்விக்கு நானே தருகின்ற விடையாக, என்னுடைய லட்சியத்திலே பல நிறைவேறிவிட்டன.

அவைகளிலே மிச்சம் இருக்கின்ற லட்சியங்கள், சட்டசபையின் புதிய கட்டிடம், அண்ணா பெயரால் புதிய நூலகம், உலகத்திலேயே புகழ் பெற்ற நூலகமாக அந்த நூலகம் அமைகின்றது.

அடுத்து 2010-ம் ஆண்டு ஜுன் மாதம் நடைபெறுகின்ற உலகத் தமிழ் செம்மொழி மாநாடு, அந்த மாநாடு முடிந்த பிறகு இன்னும் நெருக்கமாக உங்களோடு நான் வருவேன், இந்த அரசியல், அமைச்சர் பதவி இவைகளையெல்லாம் ஒதுக்கி வைத்து உங்களில் ஒருவனாக நான் என்னை இணைத்துக் கொள்வேன் என்ற மகிழ்ச்சிகரமான ஒரு செய்தியை இந்தக் கோட்டத்திலே குறிப்பிட்டு இந்த அளவில் உங்களுடைய பாராட்டுக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன் என்றார் கருணாநிதி.

அரசியல், அமைச்சர் பதவிகளை ஒதுக்கி வைத்து விட்டு உங்களுடன் இன்னும் நெருக்கமாக வருவேன் என்று முதல்வர் கூறியிருப்பது அரசியலை விட்டு அவர் ஓய்வெடுக்க முடிவு செய்திருப்பதாக கருதப்படுகிறது.

முதல்வரின் இந்த திடீர் சூசக அறிவிப்பால் அமைச்சர்கள், திமுகவினரிடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

அதிகார மாற்றம்?

இருப்பினும் அதிகார மாற்றத்தின் ஒரு பகுதியாகவே முதல்வர் கருணாநிதியின் இந்த அறிவிப்பு வெளியாகியிருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த மே மாதம் முதல்வர் கருணாநிதியின் மகனும், உள்ளாட்சித் துறை அமைச்சருமான மு.க.ஸ்டாலின் துணை முதல்வராக உயர்த்தப்பட்டார். அவருக்கு பெருமளவிலான இலாகாக்களை ஒதுக்கினார் முதல்வர் கருணாநிதி.

அதேபோல முதல்வரின் மூத்த மகன் மு.க.அழகிரி எம்.பி. தேர்தலில் நிறுத்தப்பட்டு மத்திய கேபினட் அமைச்சராகவும் உயர்த்தப்பட்டார்.

லோக்சபா, இடைத் தேர்தல் பிரசாரங்களை முதல்வருக்குப் பதில் மு.க.ஸ்டாலினே முன்னின்று திட்டமிட்டு நடத்தினார்.

இந்தச் சூழ்நிலையில் ஸ்டாலினிடம் முதல்வர் பதவியை ஒப்படைக்க காலம் வந்து விட்டதாக முதல்வர் கருதுவதால்தான் தனது ஓய்வு முடிவை அவர் அறிவித்திருப்பதாக கருதப்படுகிறது.

தான் சொன்னபடி முதல்வர் அடுத்த ஆண்டு மத்தியில் ஓய்வு பெற்றால் சட்டசபை பொதுத் தேர்தலில் ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக திமுக அறிவித்து முழுக்க முழுக்க அவரது தலைமையில் தேர்தலை எதிர்கொள்ளும் என்று தெரிகிறது.



ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Dec 06, 2009 11:23 am

Tamilzhan wrote:
அதிகார மாற்றம்?
இருப்பினும் அதிகார மாற்றத்தின் ஒரு பகுதியாகவே முதல்வர் கருணாநிதியின் இந்த அறிவிப்பு வெளியாகியிருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த
மே மாதம் முதல்வர் கருணாநிதியின் மகனும், உள்ளாட்சித் துறை அமைச்சருமான
மு.க.ஸ்டாலின் துணை முதல்வராக உயர்த்தப்பட்டார். அவருக்கு பெருமளவிலான
இலாகாக்களை ஒதுக்கினார் முதல்வர் கருணாநிதி.

அதேபோல முதல்வரின் மூத்த மகன் மு.க.அழகிரி எம்.பி. தேர்தலில் நிறுத்தப்பட்டு மத்திய கேபினட் அமைச்சராகவும் உயர்த்தப்பட்டார்.

லோக்சபா, இடைத் தேர்தல் பிரசாரங்களை முதல்வருக்குப் பதில் மு.க.ஸ்டாலினே முன்னின்று திட்டமிட்டு நடத்தினார்.

இந்தச்
சூழ்நிலையில் ஸ்டாலினிடம் முதல்வர் பதவியை ஒப்படைக்க காலம் வந்து விட்டதாக
முதல்வர் கருதுவதால்தான் தனது ஓய்வு முடிவை அவர் அறிவித்திருப்பதாக
கருதப்படுகிறது.

தான் சொன்னபடி முதல்வர் அடுத்த ஆண்டு மத்தியில்
ஓய்வு பெற்றால் சட்டசபை பொதுத் தேர்தலில் ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக
திமுக அறிவித்து முழுக்க முழுக்க அவரது தலைமையில் தேர்தலை எதிர்கொள்ளும்
என்று தெரிகிறது.


பட்டாபிஷேகம்:-



இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் , மகாராஜா ******
அவர்கள் இளவரசர் ******** அவர்களுக்கு முடிசூட்டு விழா நடத்த
போகிறார். குடிமக்கள் அனைவரும் வழக்கம் போல் காதிலே பூ வைத்து கொண்டு
ஆயிரம் ரூபா பணமும் , குவாட்டரும் , கோழி பிரியாணியும் வாங்கி கொண்டு
இளவரசரை ஆதரிக்குமாறுகேட்டுக்கொள்கிறேன்
உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்குப் பின்னர் அரசியலிலிருந்து ஓய்வு - கருணாநிதி 56667 உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்குப் பின்னர் அரசியலிலிருந்து ஓய்வு - கருணாநிதி 56667 உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்குப் பின்னர் அரசியலிலிருந்து ஓய்வு - கருணாநிதி 56667 உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்குப் பின்னர் அரசியலிலிருந்து ஓய்வு - கருணாநிதி 56667 உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்குப் பின்னர் அரசியலிலிருந்து ஓய்வு - கருணாநிதி 56667

sudhakaran
sudhakaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 441
இணைந்தது : 06/03/2009

Postsudhakaran Mon Dec 07, 2009 7:15 pm

அப்போ தமிழின துரோக செயலில் இருந்து விலகுகிறார்ன்னு சொல்லுங்க உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்குப் பின்னர் அரசியலிலிருந்து ஓய்வு - கருணாநிதி 677196 உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்குப் பின்னர் அரசியலிலிருந்து ஓய்வு - கருணாநிதி 677196 உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்குப் பின்னர் அரசியலிலிருந்து ஓய்வு - கருணாநிதி 677196



அன்புடன்
உங்கள் சுதாகரன்
avatar
rosariorajkumar
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 4
இணைந்தது : 11/12/2009

Postrosariorajkumar Sat Dec 12, 2009 6:38 pm

kalaignarin uyarntha ullam enrum vaazhga. X.Rosariorajkumar

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக