Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
லட்சம் பேரை வெளியேற்ற எதிர்ப்பு நிதி மசோதா தோற்கடிக்கப்பட்டதால் அமெரிக்க அரசு அலுவலகங்கள் மூடல் : அதிபர் டிரம்புக்கு நெருக்கடி
2 posters
Page 1 of 1
லட்சம் பேரை வெளியேற்ற எதிர்ப்பு நிதி மசோதா தோற்கடிக்கப்பட்டதால் அமெரிக்க அரசு அலுவலகங்கள் மூடல் : அதிபர் டிரம்புக்கு நெருக்கடி
வாஷிங்டன்:
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 7 லட்சம் பேரை
வெறியேற்றும் விவகாரத்தில், அதிபர் டிரம்ப் பேச்சுவார்த்தைக்கு
முன்வராததால், அரசு செலவினங்களுக்கான நிதி மசோதாவை
செனட்டில் எதிர்க்கட்சி தோற்கடித்தது.
இதனால் அங்கு அரசு அலுவலகங்கள் நேற்று முதல் மூடப்பட்டன.
அமெரிக்காவில் அதிபர் டிரம்ப் தலைமையிலான அரசு, குடியேற்ற
சீர்திருத்திருந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள சுமார்
7 லட்சம் பேர் வெளியேற்றப்படுவர் எனத் தெரிகிறது. இந்த
விவகாரம் தொடர்பாக தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த
வேண்டும் என எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி கோரிக்கை
விடுத்தது. ஆனால்,
இதற்கு அதிபர் டிரம்ப் மறுத்து விட்டார். எனவே, அதிபர் டிரம்ப்பை
வழிக்கு கொண்டு வரும் ஆலோசனையில் எதிர்க்கட்சி மும்முரமாக
ஈடுபட்டது.
இந்நிலையில் அமெரிக்க அரசின் செலவுக்காக வரும் பிப்ரவரி
16ம் தேதி வரையிலான குறுகிய கால நிதி மசோதா நாடாளுமன்றத்தின்
ஒட்டெடுப்புக்கு வந்தது. பிரதிநிதிகள் சபையில் ஆளும் கட்சிக்கு
பெரும்பான்மை உள்ளதால், கடந்த வியாழன் அன்று நடந்த ஓட்டெடுப்பில்
நிதி மசோதாவுக்கு ஆதரவாக 230 ஓட்டுகள், எதிராக 197 வாக்குகளும்
பதிவானது.
இதனால் அங்கு மசோதா நிறைவேறியது. செனட் சபையில் நேற்று
முன்தினம் இரவு வாக்கெடுப்பு நடந்தது. இதில் அதிபர் டிரம்ப்பை
பழிவாங்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்தன.
நிதி மசோதாவுக்கு செனட் சபையில் ஒப்புதல் கிடைக்கவில்லை
என்றால், அரசு செலவுக்கு பணம் கிடைக்காது. முக்கிய துறைகள்
தவிர அரசின் மற்ற துறைகள் உடனடியாக மூடப்படும். ஊழியர்கள்
சம்பளம் இல்லாமல் விடுப்பில் இருப்பர்.
இதேபோன்ற நிலை அமெரிக்காவில் கடந்த 2013ம் ஆண்டு
16 நாட்கள் நீடித்தது. தற்போது அந்த நிலை மீண்டும் ஏற்பட்டது.
செனட் சபையில் நிதி மசோதாவுக்கு ஒப்புதல் பெற 60 ஓட்டுக்கள்
தேவை. ஆனால் நேற்று முன்தினம் நடந்த வாக்கெடுப்பில் நிதி
மசோதாவுக்கு ஆதரவாக 48 ஓட்டுகளும், எதிராக 50 ஓட்டுகளும்
விழுந்தன. இதனால் குறுகியக்கால நிதி மசோதா தோல்வியடைந்தது.
இதையடுத்து நேற்று முதல் அமெரிக்க அரசு அலுவலகங்கள்
மூடப்பட்டன. 8 லட்சம் அரசு ஊழியர்கள் அலுவலகத்துக்கு வரவில்லை.
ராணுவம், போலீஸ், தீயணைப்புத்துறை, விமான நிலையம், அஞ்சல்
துறை போன்ற அத்தியாவசிய துறைகளில் மட்டும் ஊழியர்கள்
சம்பளம் பெறாமல் பணியாற்ற வேண்டும்.
இதுகுறித்து செனட் பெரும்பான்மை தலைவர் மிட்ச் மெக்கானல்
கூறுகையில், ஜனநாயக கட்சி உறுப்பினர்களின் நடவடிக்கை
நியாயமற்றது. அரசு செலவினங்களுக்கான நிதி முடக்கப்பட்டால்,
நமது ராணுவம், 90 லட்சம் குழந்தைகளின் நலனை பாதுகாக்கும்
சுகாதாரத்துறை போன்றவற்றுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
அரசு செலவின மசோதாவை முடக்கக் கூடாது என்றார்.
-
--------------------------------
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 7 லட்சம் பேரை
வெறியேற்றும் விவகாரத்தில், அதிபர் டிரம்ப் பேச்சுவார்த்தைக்கு
முன்வராததால், அரசு செலவினங்களுக்கான நிதி மசோதாவை
செனட்டில் எதிர்க்கட்சி தோற்கடித்தது.
இதனால் அங்கு அரசு அலுவலகங்கள் நேற்று முதல் மூடப்பட்டன.
அமெரிக்காவில் அதிபர் டிரம்ப் தலைமையிலான அரசு, குடியேற்ற
சீர்திருத்திருந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள சுமார்
7 லட்சம் பேர் வெளியேற்றப்படுவர் எனத் தெரிகிறது. இந்த
விவகாரம் தொடர்பாக தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த
வேண்டும் என எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி கோரிக்கை
விடுத்தது. ஆனால்,
இதற்கு அதிபர் டிரம்ப் மறுத்து விட்டார். எனவே, அதிபர் டிரம்ப்பை
வழிக்கு கொண்டு வரும் ஆலோசனையில் எதிர்க்கட்சி மும்முரமாக
ஈடுபட்டது.
இந்நிலையில் அமெரிக்க அரசின் செலவுக்காக வரும் பிப்ரவரி
16ம் தேதி வரையிலான குறுகிய கால நிதி மசோதா நாடாளுமன்றத்தின்
ஒட்டெடுப்புக்கு வந்தது. பிரதிநிதிகள் சபையில் ஆளும் கட்சிக்கு
பெரும்பான்மை உள்ளதால், கடந்த வியாழன் அன்று நடந்த ஓட்டெடுப்பில்
நிதி மசோதாவுக்கு ஆதரவாக 230 ஓட்டுகள், எதிராக 197 வாக்குகளும்
பதிவானது.
இதனால் அங்கு மசோதா நிறைவேறியது. செனட் சபையில் நேற்று
முன்தினம் இரவு வாக்கெடுப்பு நடந்தது. இதில் அதிபர் டிரம்ப்பை
பழிவாங்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்தன.
நிதி மசோதாவுக்கு செனட் சபையில் ஒப்புதல் கிடைக்கவில்லை
என்றால், அரசு செலவுக்கு பணம் கிடைக்காது. முக்கிய துறைகள்
தவிர அரசின் மற்ற துறைகள் உடனடியாக மூடப்படும். ஊழியர்கள்
சம்பளம் இல்லாமல் விடுப்பில் இருப்பர்.
இதேபோன்ற நிலை அமெரிக்காவில் கடந்த 2013ம் ஆண்டு
16 நாட்கள் நீடித்தது. தற்போது அந்த நிலை மீண்டும் ஏற்பட்டது.
செனட் சபையில் நிதி மசோதாவுக்கு ஒப்புதல் பெற 60 ஓட்டுக்கள்
தேவை. ஆனால் நேற்று முன்தினம் நடந்த வாக்கெடுப்பில் நிதி
மசோதாவுக்கு ஆதரவாக 48 ஓட்டுகளும், எதிராக 50 ஓட்டுகளும்
விழுந்தன. இதனால் குறுகியக்கால நிதி மசோதா தோல்வியடைந்தது.
இதையடுத்து நேற்று முதல் அமெரிக்க அரசு அலுவலகங்கள்
மூடப்பட்டன. 8 லட்சம் அரசு ஊழியர்கள் அலுவலகத்துக்கு வரவில்லை.
ராணுவம், போலீஸ், தீயணைப்புத்துறை, விமான நிலையம், அஞ்சல்
துறை போன்ற அத்தியாவசிய துறைகளில் மட்டும் ஊழியர்கள்
சம்பளம் பெறாமல் பணியாற்ற வேண்டும்.
இதுகுறித்து செனட் பெரும்பான்மை தலைவர் மிட்ச் மெக்கானல்
கூறுகையில், ஜனநாயக கட்சி உறுப்பினர்களின் நடவடிக்கை
நியாயமற்றது. அரசு செலவினங்களுக்கான நிதி முடக்கப்பட்டால்,
நமது ராணுவம், 90 லட்சம் குழந்தைகளின் நலனை பாதுகாக்கும்
சுகாதாரத்துறை போன்றவற்றுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
அரசு செலவின மசோதாவை முடக்கக் கூடாது என்றார்.
-
--------------------------------
Re: லட்சம் பேரை வெளியேற்ற எதிர்ப்பு நிதி மசோதா தோற்கடிக்கப்பட்டதால் அமெரிக்க அரசு அலுவலகங்கள் மூடல் : அதிபர் டிரம்புக்கு நெருக்கடி
எதிர்க்கட்சி மீது குற்றச்சாட்டு
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி ஏற்று ஓராண்டுக்குப்பின்
அரசு பணிகள் முடக்கப்பட்டுள்ளன. இதற்கு ஜனநாயக கட்சியினர்
மீது அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். எனது அரசு வரி குறைப்பு
நடவடிக்கைகளை வெற்றிகரமாக செய்துள்ளது. இந்நிலையில்
ஜனநாயக கட்சியினர் அரசை முடக்குவது வேகமாக வளரும்
பொருளாதாரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
சமாளிக்க நிர்வாகம் தயார்
மக்களுக்கு அதிகம் பாதிப்பு இல்லாத வகையில் நிலைமையை
சமாளிப்பதற்கான நடவடிக்கைகளை அதிபர் டிரம்ப் நிர்வாகம்
மேற்கொண்டுள்ளதாக பட்ஜெட் நிர்வாக இயக்குனர்
மிக் முல்வானே கூறியுள்ளார். வெள்ளை மாளிகை
அதிகாரி சாரா சாண்டர் அளித்த பேட்டியில், ‘‘டிரம்ப் நிர்வாகத்தால்
வளரும் பொருளாதாரத்தை ஜனநாயக கட்சியினரால் முடக்க முடியாது.
அரசு நிர்வாகத்தை மூடும் அளவுக்கு அவர்கள் விரக்தியாக இருப்பது
ஏன்? சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்காக ஜனநாயக
கட்சியினருடன் பேச மாட்டோம். அவர்கள் தங்களின் பொறுப்பற்ற
கோரிக்கைகளுக்காக சட்டப்படியான குடிமக்களை பிணையக்
கைதிகளாக்கியுள்ளனர்.
இது சட்ட பிரதிநிதிகளின் செயல்பாடு அல்ல. தடையை
ஏற்படுத்துபவர்களின் செயல். அரசு செலவினங்களுக்கான நிதி
மசோதாவுக்கு முதலில் அவர்கள் அனுமதித்தால்தான், குடியேற்ற
சீர்திருத்தம் தொடர்பான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவோம்’
என தெரிவித்தார்.
முதலாண்டு நிறைவு நாளில் சோகம்
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் கடந்தாண்டு ஜனவரி 20ம்
தேதி பதவி ஏற்றார். முதலாம் ஆண்டு நிறைவு நாளை அதிபர் டிரம்ப்
நேற்று உற்சாகமாக கொண்டாடியிருக்க வேண்டும். ஆனால் அரசு
செலவினங்களுக்கான நிதி மசோதா செனட்டில் தோல்வியடைந்ததால்,
நேற்று முதல் அரசு அலுவலகங்கள் மூடும் நிலை ஏற்பட்டது. இதனால்
அதிபர் பதவியின் முதலாம் ஆண்டு நிறைவு நாள் டிரம்புக்கு சோக
நாளாக அமைந்துவிட்டது.
-
--------------------------------------
தினத்தந்தி
Re: லட்சம் பேரை வெளியேற்ற எதிர்ப்பு நிதி மசோதா தோற்கடிக்கப்பட்டதால் அமெரிக்க அரசு அலுவலகங்கள் மூடல் : அதிபர் டிரம்புக்கு நெருக்கடி
இங்க ஒரு செல்லூர் ராஜு ச.ம.உ (எம் எல் ஏ) வா
படுத்தும் பாடே தாங்க முடியலையே ....
அங்க ஒரு செல்லூர் ராஜு
அதிபரா செய்கிற அழும்பு
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
படுத்தும் பாடே தாங்க முடியலையே ....
அங்க ஒரு செல்லூர் ராஜு
அதிபரா செய்கிற அழும்பு
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
aeroboy2000- இளையநிலா
- பதிவுகள் : 263
இணைந்தது : 29/08/2012
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» அமெரிக்க அதிபர் தேர்தல்:கருத்து கணிப்பில் டிரம்புக்கு பின்னடைவு
» டிரம்புக்கு சாதகமாக நீதிமன்ற உத்தரவு: அமெரிக்க அதிபர் தேர்தலில் பரபரப்பு
» ‘கருக்கலைப்பு எதிர்ப்பு கூட்டத்தில் பங்கேற்ற முதல் அமெரிக்க ஜனாதிபதி’ - டிரம்புக்கு புதிய கவுரவம்
» அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
» அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் விருந்து சாப்பிட ரூ.16 லட்சம் கட்டணம் நிர்ணயம்
» டிரம்புக்கு சாதகமாக நீதிமன்ற உத்தரவு: அமெரிக்க அதிபர் தேர்தலில் பரபரப்பு
» ‘கருக்கலைப்பு எதிர்ப்பு கூட்டத்தில் பங்கேற்ற முதல் அமெரிக்க ஜனாதிபதி’ - டிரம்புக்கு புதிய கவுரவம்
» அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
» அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் விருந்து சாப்பிட ரூ.16 லட்சம் கட்டணம் நிர்ணயம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|