புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரவுத்ரம் பழகு! Poll_c10ரவுத்ரம் பழகு! Poll_m10ரவுத்ரம் பழகு! Poll_c10 
75 Posts - 60%
heezulia
ரவுத்ரம் பழகு! Poll_c10ரவுத்ரம் பழகு! Poll_m10ரவுத்ரம் பழகு! Poll_c10 
32 Posts - 26%
mohamed nizamudeen
ரவுத்ரம் பழகு! Poll_c10ரவுத்ரம் பழகு! Poll_m10ரவுத்ரம் பழகு! Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
ரவுத்ரம் பழகு! Poll_c10ரவுத்ரம் பழகு! Poll_m10ரவுத்ரம் பழகு! Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
ரவுத்ரம் பழகு! Poll_c10ரவுத்ரம் பழகு! Poll_m10ரவுத்ரம் பழகு! Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
ரவுத்ரம் பழகு! Poll_c10ரவுத்ரம் பழகு! Poll_m10ரவுத்ரம் பழகு! Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
ரவுத்ரம் பழகு! Poll_c10ரவுத்ரம் பழகு! Poll_m10ரவுத்ரம் பழகு! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
ரவுத்ரம் பழகு! Poll_c10ரவுத்ரம் பழகு! Poll_m10ரவுத்ரம் பழகு! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
ரவுத்ரம் பழகு! Poll_c10ரவுத்ரம் பழகு! Poll_m10ரவுத்ரம் பழகு! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
ரவுத்ரம் பழகு! Poll_c10ரவுத்ரம் பழகு! Poll_m10ரவுத்ரம் பழகு! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரவுத்ரம் பழகு! Poll_c10ரவுத்ரம் பழகு! Poll_m10ரவுத்ரம் பழகு! Poll_c10 
70 Posts - 60%
heezulia
ரவுத்ரம் பழகு! Poll_c10ரவுத்ரம் பழகு! Poll_m10ரவுத்ரம் பழகு! Poll_c10 
30 Posts - 26%
mohamed nizamudeen
ரவுத்ரம் பழகு! Poll_c10ரவுத்ரம் பழகு! Poll_m10ரவுத்ரம் பழகு! Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
ரவுத்ரம் பழகு! Poll_c10ரவுத்ரம் பழகு! Poll_m10ரவுத்ரம் பழகு! Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
ரவுத்ரம் பழகு! Poll_c10ரவுத்ரம் பழகு! Poll_m10ரவுத்ரம் பழகு! Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
ரவுத்ரம் பழகு! Poll_c10ரவுத்ரம் பழகு! Poll_m10ரவுத்ரம் பழகு! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
ரவுத்ரம் பழகு! Poll_c10ரவுத்ரம் பழகு! Poll_m10ரவுத்ரம் பழகு! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
ரவுத்ரம் பழகு! Poll_c10ரவுத்ரம் பழகு! Poll_m10ரவுத்ரம் பழகு! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
ரவுத்ரம் பழகு! Poll_c10ரவுத்ரம் பழகு! Poll_m10ரவுத்ரம் பழகு! Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
ரவுத்ரம் பழகு! Poll_c10ரவுத்ரம் பழகு! Poll_m10ரவுத்ரம் பழகு! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரவுத்ரம் பழகு!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jan 17, 2018 10:56 am

அம்மா... நான், ஸ்கூலுக்கு கிளம்பிட்டேன்...'' என்றாள், நந்தினி.

''அதை ஏண்டா இப்படி டல்லாக சொல்றே...'' என்று கேட்டு அவள், டையை சரி பண்ணினான், சரவணன்.


உதட்டைக் கடித்து யோசித்தபடி, ''டாடி...'' என, ஆரம்பித்தபோது, ''நந்து... இன்னைக்கு, அம்மாவால், 'லஞ்ச்' பண்ண முடியல; மதியம், கடையில ஏதாவது வாங்கிட்டு வந்து, ஸ்கூல்ல கொடுத்துட்டுப் போறேன்,'' என்ற மாலினி, ''இந்தா ஸ்நாக்ஸ் பாக்ஸ்... கார்ல போய் உட்காரு; டாடியும், நானும் இப்போ வந்திடுறோம்...'' என்றாள்.


சிறிது நேரத்தில் மூவரும் கிளம்பி சென்றனர். நந்தினியை பள்ளியில் இறக்கிவிட்டு, தங்கள் அலுவலகத்திற்கு செல்லும் போது, ''ஏங்க... கொஞ்ச நாளாகவே நந்தினி ரொம்ப டல்லாவே இருக்கா என்ன காரணம்ன்னு தெரியல...'' கவலையுடன் சொன்னாள், மாலினி.


''நானும் கவனிச்சேன்; பாவம் குழந்தைக்கு என்ன பிரச்னையோ... நீ எதுவும் விசாரிச்சயா...'' 
''எனக்கு எங்கே நேரம் இருக்கு... முடித்து கொடுத்த புராஜெக்ட்டில் ஏகப்பட்ட கோளாறு சொல்றார், டீம் லீடர்... நாங்க எல்லாரும் மண்டைய உடைச்சுட்டு இருக்கோம். நைட் துாங்கறதுக்கு ஒரு மணி ஆகுது. திரும்ப ஐஞ்சு மணிக்கு எழுந்திருக்க வேண்டியிருக்கு... நீங்களும் பாத்துட்டு தானே இருக்கீங்க... நீங்க, அவகிட்ட பேசலாமே...''


''எனக்கு புது புராஜெக்ட் ஆரம்பிச்சதை மறந்துட்டாயா... எங்கே ஆரம்பிக்கிறது, எங்கே முடிக்கிறதுன்னு தெரியாமல் நாங்க அல்லாடிட்டிருக்கோம்... இந்த சண்டே கொஞ்சம், 'டைம்' ஒதுக்கி, அவ கிட்ட பேசலாம்...''


சிறிது நேரம் மவுனமாக வந்த மாலினி, ''ஏங்க... பேசாம, நான் வேலைய விட்டு வீட்டில இருக்கவா... பாருங்க... நம்ம குழந்தை கிட்ட பேசக் கூட நமக்கு நேரமிருக்க மாட்டேங்குது; சிலநேரம், இது என்ன வாழ்க்கைன்னு தோணுதுப்பா...'' என்றாள்.


''ஏண்டி... புத்தியோடதான் பேசுறியா... இப்பத் தான், 50 லட்சத்திற்கு இந்த அப்பார்ட்மென்டை வாங்கியிருக்கோம். இன்னும், 10 வருஷத்திற்கு, 'டியூ' கட்டணும். என் ஒருத்தன் சம்பளத்தில் இதை, எப்படி சமாளிப்பேன்னு கொஞ்சமாவது யோசிச்சியா...'' என்று படபடத்தான்.
அவன் கூறுவதில் உள்ள நியாயம் புரிபட, மவுனமாக தலையசைத்தாள், மாலினி.


''லஞ்ச் டைமில் அவளுக்கு ஏதாவது வாங்கிட்டு போய் கொடுத்துட்டு, அப்படியே அவ கிளாஸ் மிஸ்சையும் பாத்துட்டு வர்றேன்,'' என்றாள், கண்களில் துளிர்த்த நீரை மறைத்தபடி!
'ஹாய் நந்து... என்னடி இன்னைக்கு லேட்...' எனக் கேட்டு, அவளை வரவேற்றனர், அவள் தோழிகள். 


''கிளம்ப கொஞ்சம் லேட்டாயிடுச்சு; நீங்க ஹோம் ஒர்க் முடிச்சிட்டீங்களா...'' நந்தினியின் குரலில் லேசான பயம் தெரிந்தது.


'முடிச்சிட்டோம்; இல்லன்னா பிரச்னை ஆயிடுமே...' என்ற அவர்கள் குரல்களில் பயத்தோடு, மெல்லிய கலக்கமும் தெரிந்தது. அனைவரும் எட்டாம் வகுப்பு படிக்கும் குழந்தைகள்.
''ஆமா... முடிச்சுட்டா மட்டும் பிரச்னை இல்லாம போயிடுமா... அவனுக்கு வேறு ஏதாவது காரணம் கிடைச்சுடும்,'' என்றாள், எரிச்சலுடன், நந்தினி.


''என்ன... பிரச்னை உங்களுக்கு...'' என்றபடி அவர்களின் அருகில் வந்தான், வகுப்பு தோழன் ஒருவன்.
'ஒண்ணுமில்ல; நீ போ...' என்று எரிந்து விழுந்தனர். 


''எதுக்கு கத்துறீங்க... நம்ம கிளாசுக்கு இன்னைக்கு ஒரு நியூ அட்மிஷன் வருது தெரியுமா...'' புது செய்தி சொல்லும் ஆவல் அவனிடம்!


''இவ்வளவு நாள் கழிச்சா... யார் அது...'' என்று கேட்டாள், நந்தினியின் தோழி சரிதா. 
''ஒரு பொண்ணு... அவங்க அப்பா ஏதோ கவர்ன்மென்ட் ஆபிசில் வேலை செய்கிறார் போல... அவருக்கு இங்கே டிரான்ஸ்பர் ஆனதால, லேட்டா ஜாயின் பண்ணுறா...''
''இதெல்லாம் உனக்கு எப்படி தெரியும்?''


''அவங்க, எங்க வீட்டிற்கு பக்கத்தில் தான் குடி வந்திருக்காங்க,'' என்று அவன் முடிக்கும் போது, வகுப்பிற்குள் அவள் நுழைந்தாள். வெகு அழகாக இருந்தாள்.


''ஹாய்... என் பெயர் அபிராமி,'' என்று அறிமுகப்படுத்திக் கொண்டாள். மற்ற மாணவர்களும் தங்களை அறிமுகம் செய்து கொண்டனர். தொடர்ந்து, அனைவரும் தங்கள் ஹோம் ஒர்க்கை சரிபார்க்க, நந்தினியை நாடினர். வகுப்பில் அவள் தான் முதல் ரேங்க் வாங்கும் மாணவி. அந்த பெருமிதம் முகத்தில் தெரிய, தன்னிடம் கணக்கு நோட்டுகளை நீட்டியவர்களுக்கு, சரிபார்த்தபடி, ஓரக்கண்ணால், 'பாத்தாயா என் மதிப்பை...' என்பது போல், அபிராமியை பார்த்தாள். 


அபிராமியின் கவனம், நந்தினி கடைசியாக கணக்கை சரி செய்த மாணவனின் நோட்டில் இருந்தது.


''நந்தினி... இந்தக் கணக்கு தப்பு; இது, இப்படி வரணும்,'' என, நோட்டை வாங்கி, 'கடகட'வென அந்த கணக்கை சரியாக போட்டாள். அத்துடன், அனைவருக்கும் அதை விளக்கவும் செய்தாள்.
''அட... இந்த மெத்தடுல கூட போடலாமா... உனக்கு எப்படி தெரியும்?'' என்று கேட்டு, பொறாமையுடன் அவளை பார்த்து, முகத்தை திருப்பிக் கொண்டாள், நந்தினி.


''அவ படிச்ச ஸ்கூல்ல, அவ தான் பர்ஸ்ட் ரேங்காம்... அதுதான் இவ்வளவு அலட்டுறா; இந்த சித்ராவை பாரேன்... ஒரு, 'சம்' போட்டு தந்ததும், அவள் பின்னாலேயே போயிட்டா,'' என்று கூறி, 'நான், உன் பக்கம்தான்...' என்பது போல் நந்தினியின் கைகளை பற்றிக் கொண்டாள், சரிதா.


மதியம் உணவு இடைவேளை -


''நீங்க இரண்டு பேரும் சாப்பிடலயா?'' என்று கேட்டபடி, புன்னகையுடன் அவர்கள் அருகில் வந்து அமர்ந்தாள், அபிராமி.


''நந்தினிக்கு இன்னும் லஞ்ச் வரல; அதனால்தான் வெயிட் பண்ணுறோம்,'' சரிதா பதில் சொல்ல, நந்தினி முறைக்கவும், நிறுத்திக் கொண்டாள்.


''ஓ... அப்போ என் கூட, 'லஞ்ச்' ஷேர் பண்ணிக்கிறீங்களா?'' என்று கேட்டவள், தன் டிபன் பாக்ஸை திறந்து காட்டி, ''இது எங்க அம்மா செய்த அவ்வையார் கொழுக்கட்டை. இதை, ஆண்கள் சாப்பிட கூடாது; ஏன், பாக்கவே கூடாது. ரொம்ப டேஸ்டா இருக்கும்; சாப்பிட்டு பாக்கிறீங்களா...'' என்றாள். 


புதியதொரு நட்பை பெறும் ஆவல், அபிராமியின் கண்களில் தெரிந்தது. வெள்ளை வெளேரென்று நீளமாக, உருண்டையாக என, பல வடிவங்களில் இருந்த அந்த கொழுக்கட்டைகளை பார்த்ததும், வாயில் நீர் ஊறினாலும், ''உங்க ஊர் எது?'' என்று கேட்டாள், நந்தினி.


அவள் தன் கிராமத்தின் பெயரைச் சொன்னதும், ''இதுபோன்ற பட்டிக்காட்டு பலகாரங்களெல்லாம் உன் போன்ற பிள்ளைங்க தான் சாப்பிடுவாங்க; 'சிட்டி' பிள்ளைங்க சாப்பிட மாட்டாங்க. இதைப் பாத்தாலே எங்களுக்கு வாந்தி வருது; நீயே தின்னு... வாடி,'' என்று சரிதாவை இழுத்துக் கொண்டு வெளியே நடந்தாள் நந்தினி.


''ஏண்டி இப்படி பண்ணினே...'' கொழுக்கட்டை ஞாபகத்தில் சரிதா கேட்க, ''ஏன்... உனக்கு அவ பின்னால் போகணுமா... போய்க்கோ... எனக்கு அந்த பட்டிக்காட்டு பெண்ணோட பிரண்ட்ஷிப் தேவையில்ல...'' என்றாள்.



தொடரும்...............



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jan 17, 2018 10:57 am

அப்போது, ''நந்தினி...'' என்றபடி ஓடி வந்தாள், வகுப்பு தோழி ஒருத்தி.
''என்னடி... ஏன் இப்படி மூச்சிரைக்க ஓடி வர்றே...''


''சார் அவளை, 'ஸ்போர்ட்ஸ்' ரூமுக்குள்ளே கூட்டிட்டு போறாருடி,'' என்றாள், நடுங்கியபடி!
''ஐயோ... ஏண்டி அவள போக விட்டே...'' பதறினாள் நந்தினி.


''நான் போகாதன்னு சொல்றதுக்குள்ள, இவ பாட்டுக்கு அவர் பின்னாடி போயிட்டாடி...''
''நான் சொல்லல... இவ, ஒரு மக்கு; இவளுக்கு ஒண்ணும் தெரியாதுன்னு... ஐயோ என்னடி பண்ணுறது... அந்த ஆள் நம்மள மாதிரிதானே இவளையும் சீண்டுவான்,'' என்று கலங்கினாள், நந்தினி.


'அவன், 'ஸ்போர்ட்ஸ்' ரூமுக்கு கூப்பிடுறதே அதுக்குத்தானே... அதனால தானே, நாம தனியா போகாம, ஒண்ணா சேர்ந்து இருப்போம்... வாங்கடி, நாம போய் அவளை கூட்டிட்டு வருவோம்...' தங்களுக்குள் பேசியபடி பதற்றத்துடன் அங்கே சென்றனர்.


ஸ்போர்ட்ஸ் ரூம் வாசலை அடைந்தபோது, உள்ளே, 'கடமுடா'வென ஏதோ சத்தம் கேட்டது.


''என்னடி, அந்த ஆள், அவள அடிக்கிறானா...'' நந்தினி சந்தேகப்படுவதற்குள், 'ஓ'வென கத்தியபடி, வெளியே ஓடி வந்த அவனின் சட்டை கசங்கி, தலை கலைந்திருந்தது.
''ஏய் நில்லுடா...'' என்று கத்தியபடி பின்னாலேயே வந்த அபிராமியின் கைகளில், ஹாக்கி மட்டை இருந்தது. இவர்களை பார்த்ததும், ''உங்ககிட்டேயும் இப்படித்தான் சில்மிஷம் பண்ணுவானா... சும்மாவா விட்டீங்க இவனை...'' மட்டையை சுழற்றினாள்.
இப்படி ஒரு எதிர்ப்பை எதிர்பாராததால், அதிர்ந்து போய் நின்றிருந்தான். 


''என்னடா பாக்கிறே... எவ்வளவு திமிர் இருந்தா, என்னை தொடுவே...'' குனிந்து தன் கால் ஷூவை கழற்றியவள், சரமாரியாக அடிக்கத் துவங்கினாள். கூட்டம் சேரத் துவங்கியது.
'ஏண்டி பாத்துட்டு நிற்கிறீங்க... உங்களையும் தானே சீண்டினான்; நீங்களும் வாங்க...'' என்று அபிராமி கூறியதும், கீழே கிடந்த ஹாக்கி மட்டையை எடுத்தாள், நந்தினி.


''இனி, எங்கள தொடுவியா... தொடுவியா...'' என்று கூறி, சேர்த்து வைத்திருந்த ஆத்திரத்தையெல்லாம் தீர்க்கும் விதமாக அடித்தாள். மற்ற சிறுமியரும் சேர்ந்து கொண்டனர்.


''ஓ... உங்களுக்கு இதுதான் பிரச்னையா... இவன் இப்படியா செய்தான்...'' என்ற அவர்கள் வகுப்பு மாணவன் ஒருவன், கீழே கிடந்த கல் ஒன்றை எடுத்து, அவன் தலையை குறி வைத்து எறிய, ரத்தம் வழியத் துவங்கியது. தொடர்ந்து கற்கள் அவன் மீது விழுந்தன.


''என்ன மேடம் இது... உடனே போலீசுக்கு போன் போடுங்க...'' ஓரமாக நின்று பார்த்துக் கொண்டிருந்த தலைமை ஆசிரியையிடம், வாட்ச்மேன் படபடக்க, ''இருய்யா... சிக்னல் கிடைக்க மாட்டேங்குது; நான், 'டிரை' பண்ணிட்டுதான் இருக்கேன். நீ ஸ்கூலுக்குள்ள யாரும் வராமல் பாத்துக்கோ போ,'' என, அவனை விரட்டி, போன் போடும் எண்ணமின்றி, கைகளை கட்டியபடி சந்தோஷமாக வேடிக்கை பார்க்கத் துவங்கினாள், தலைமை ஆசிரியை.
''என்ன மேடம்... நீங்களும் பாதிக்கப்பட்டிருக்கீங்க போல...'' என்ற கேள்வியில் திரும்பினாள், தலைமை ஆசிரியை. 


''நான் நந்தினியோட அம்மா; அவளுக்கு லஞ்ச் எடுத்துட்டு வந்தேன். இங்கே நடக்கிற சம்பவங்களை பாத்து, அப்படியே நின்னுட்டேன்,'' என்ற மாலினி, ஹாக்கி மட்டையை சுழற்றிக் கொண்டிருந்த நந்தினியை பெருமிதமாக பார்த்தாள்.


''இவன் கரஸ்பாண்டோட சொந்தக்காரன்; இவனை பற்றி தெரிந்தும் ஒண்ணும் செய்ய முடியாம இருந்தோம். கடவுள் இருக்காருன்னு காட்டிட்டாரு... இந்த குழந்தைகள் எல்லாரும், 'அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பனை' நமக்கு ஞாபகத்திற்கு கொண்டு வந்துட்டாங்க,'' என்ற தலைமை ஆசிரியையின் குரல் நெகிழ்ந்திருந்தது.
ஒரு வழியாக போலீஸ் வந்து அவனை மீட்டு சென்றது.


''எப்படிம்மா உனக்கு இவ்வளவு தைரியம் வந்தது,'' அபிராமியிடம் கேட்டாள், தலைமை ஆசிரியை.


''ஓடி விளையாடு பாப்பான்னு எனக்கு சொல்லிக் கொடுக்கும்போதே, 'ரவுத்ரம் பழகு பாப்பா'ன்னு எங்க அம்மா சொல்லிக் குடுத்திருக்காங்க மேடம்...'' என்று புன்னகையோடு சொன்னாள், அபிராமி. அவளுக்கு இருபுறமும் நந்தினியும், சரிதாவும் நின்றிருந்தனர்.
''காமுகர்கள் நிறைந்திருக்கும் இந்த உலகில், ஒவ்வொரு பாப்பாவும் கண்டிப்பாக ரவுத்ரம் பழக வேண்டும்,'' என்றார், தலைமை ஆசிரியர்.


''பாப்பாக்கள் மட்டுமல்ல; ஒவ்வொரு பெண்ணும் ரவுத்ரம் பழக வேண்டும்,'' என்றாள் மாலினி. தலைமை ஆசிரியை கேள்வியாக நோக்க, ''நானும் வேலைக்கு போறேன் மேடம்,'' என்றாள் வறண்ட புன்னகையுடன்!


''அப்போ, நந்தினி கையிலிருந்து அந்த ஹாக்கி மட்டையை நீங்க வாங்கிக்கங்க...'' என்று தலைமை ஆசிரியை சிரிக்க, மாலினியும் அந்த சிரிப்பில் சேர்ந்து கொண்டாள்.

- பத்மா கிரகதுரை




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக