ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

நள்ளிரவு பூஜை!

Go down

நள்ளிரவு பூஜை! Empty நள்ளிரவு பூஜை!

Post by ayyasamy ram Wed Jan 10, 2018 1:52 pm






நள்ளிரவு பூஜை! E_1515148906

கோவில்களில், பகல், மாலை மற்றும் முன்னிரவு நேரங்களில்
பூஜை நடத்தி, இரவு, 9:00 மணிக்குள் நடைசாத்தி விடுவது
வழக்கம்.


ஆனால், சேலம் மாவட்டம் தலைவாசல் அருகிலுள்ள ஆறகழூர்
காமநாதீஸ்வரர் கோவிலில் உள்ள காலபைரவருக்கு, தேய்பிறை
அஷ்டமியன்று, நள்ளிரவில் பூஜை நடக்கிறது. இக்கோவிலில்,
அஷ்ட (எட்டு) பைரவர்களையும் தரிசிக்கலாம் என்பது தான்
விசேஷம்.

அசுரர்களால் துன்பப்பட்ட தேவர்கள், தங்களைக் காக்க
சிவனிடம் முறையிடச் சென்றனர். அப்போது, தியானத்தில்
இருந்தார், சிவபெருமான். அதைக் கலைத்தால், அவரது
கோபத்திற்கு ஆளாக நேரிடும் என பயந்த தேவர்கள்,
மன்மதனிடம் தங்களுக்கு உதவும்படி வேண்ட, சிவன் மீது
மலர் அம்பு எய்தி, தியானத்தைக் கலைத்தான், மன்மதன்.

கோபம் கொண்ட சிவன், அவனை எரித்து விட்டார். பிறர்
நலனுக்காக இப்பணியைச் செய்த தன் கணவனை உயிர்ப்பித்து
தரும்படி சிவனை வேண்டினாள், மன்மதன் மனைவி, ரதி.

அதனால், மன்மதனுக்கு உயிர் கொடுத்து, அவன் ரதிக்கு
மட்டுமே தெரியும்படி அருள்புரிந்தார், சிவபெருமான்.
காமனாகிய மன்மதனுக்கு அருள்புரிந்ததால் இவர்,
'காமநாதீஸ்வரர்' என்று பெயர் பெற்றார்.

மற்றொரு சமயம், சிவனிடம் வரம் பெற்ற அந்தகன் என்னும்
அசுரன், வரத்தை தவறாகப் பயன்படுத்தி, தேவர்களைத்
துன்புறுத்தினான். அவனிடமிருந்து தங்களைக் காக்கும்படி
சிவனிடம் முறையிட்டனர், தேவர்கள். தன் அம்சமான
பைரவரை அனுப்பினார், சிவன்.

திசைக்கு எட்டு பேர் வீதம், எட்டு திசைக்கும், 64 வடிவங்களாக
நின்று, அவனை வதம் செய்தார், பைரவர்.

இவர்களில், அசிதாங்க பைரவர், ருரு பைரவர், சண்ட பைரவர்,
குரோதன பைரவர், உன்மத்த பைரவர், கபால பைரவர்,
பீஷண பைரவர் மற்றும் கால பைரவர் என, எட்டு பேர்
பிரதானம் பெற்றனர்.

இவர்கள், இக்கோவிலில் காட்சி தருகின்றனர். பீஷண பைரவர்
லிங்க வடிவத்திலும், கபால பைரவர் கோபுரத்திலும் இருக்கிறார்.

திருமணத்தடை உள்ளவர்கள் தோஷ நிவர்த்திக்கு, கால
பைரவருக்கு செவ்வரளி மற்றும் வடை மாலை அணிவித்து,
எலுமிச்சை தீபமேற்றி வழிபடுகின்றனர்.

மற்ற கோவில்களில், பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியன்று
பகலில் பூஜை நடக்கும். ஆனால், இங்கு நள்ளிரவில் யாக பூஜை
நடக்கிறது. இவ்வேளையில், சந்தனக்காப்பு மற்றும் புஷ்ப
அலங்காரத்தில் காட்சி தருகிறார்,
சுவாமி. அன்று இரவு, 2:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.

பைரவர் அவதரித்த கார்த்திகை அஷ்டமியன்று, பைரவாஷ்டமி
விழா நடக்கிறது. அன்று காலையில், காமநாதீஸ்வரருக்கு
ஏகாதச ருத்ர ஜெப பாராயணத்துடன், ஹோமம் நடைபெறும்.

மாலையில், நடைபெறும் மகா ஹோம யாகத்தில் தேனில்
நனைத்த, 1,008 வடைகளை இடுவர். நள்ளிரவில் எட்டு
பைரவர்களுக்கும் விசேஷ பூஜை உண்டு.

வசிஷ்டர் பூஜித்ததால் சிவனுக்கு, 'வசிஷ்டேஸ்வரர்' என்றும்
பெயர் உண்டு. பங்குனி மாதத்தில் ஏதாவது ஒருநாள், சிவன் மீது
சூரிய ஒளி விழும்.

பிரகாரத்தில் சுப்பிரமணியர், நடராஜர், பிரதோஷ நாயகர்
உள்ளனர்.

சேலத்திலிருந்து, 50 கி.மீ., துாரத்தில் உள்ளது, ஆத்துார்;
இங்கிருந்து, தலைவாசல் வழியாக, 22 கி.மீ., சென்றால்
ஆறகழூரை அடையலாம்.
-
----------------------------------------
தி.செல்லப்பா
தினமலர்


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum