புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வங்கியில் போட்ட பணத்திற்கு ஆபத்தா? Poll_c10வங்கியில் போட்ட பணத்திற்கு ஆபத்தா? Poll_m10வங்கியில் போட்ட பணத்திற்கு ஆபத்தா? Poll_c10 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
வங்கியில் போட்ட பணத்திற்கு ஆபத்தா? Poll_c10வங்கியில் போட்ட பணத்திற்கு ஆபத்தா? Poll_m10வங்கியில் போட்ட பணத்திற்கு ஆபத்தா? Poll_c10 
1 Post - 25%
viyasan
வங்கியில் போட்ட பணத்திற்கு ஆபத்தா? Poll_c10வங்கியில் போட்ட பணத்திற்கு ஆபத்தா? Poll_m10வங்கியில் போட்ட பணத்திற்கு ஆபத்தா? Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வங்கியில் போட்ட பணத்திற்கு ஆபத்தா? Poll_c10வங்கியில் போட்ட பணத்திற்கு ஆபத்தா? Poll_m10வங்கியில் போட்ட பணத்திற்கு ஆபத்தா? Poll_c10 
199 Posts - 41%
ayyasamy ram
வங்கியில் போட்ட பணத்திற்கு ஆபத்தா? Poll_c10வங்கியில் போட்ட பணத்திற்கு ஆபத்தா? Poll_m10வங்கியில் போட்ட பணத்திற்கு ஆபத்தா? Poll_c10 
192 Posts - 39%
mohamed nizamudeen
வங்கியில் போட்ட பணத்திற்கு ஆபத்தா? Poll_c10வங்கியில் போட்ட பணத்திற்கு ஆபத்தா? Poll_m10வங்கியில் போட்ட பணத்திற்கு ஆபத்தா? Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
வங்கியில் போட்ட பணத்திற்கு ஆபத்தா? Poll_c10வங்கியில் போட்ட பணத்திற்கு ஆபத்தா? Poll_m10வங்கியில் போட்ட பணத்திற்கு ஆபத்தா? Poll_c10 
21 Posts - 4%
prajai
வங்கியில் போட்ட பணத்திற்கு ஆபத்தா? Poll_c10வங்கியில் போட்ட பணத்திற்கு ஆபத்தா? Poll_m10வங்கியில் போட்ட பணத்திற்கு ஆபத்தா? Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
வங்கியில் போட்ட பணத்திற்கு ஆபத்தா? Poll_c10வங்கியில் போட்ட பணத்திற்கு ஆபத்தா? Poll_m10வங்கியில் போட்ட பணத்திற்கு ஆபத்தா? Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
வங்கியில் போட்ட பணத்திற்கு ஆபத்தா? Poll_c10வங்கியில் போட்ட பணத்திற்கு ஆபத்தா? Poll_m10வங்கியில் போட்ட பணத்திற்கு ஆபத்தா? Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
வங்கியில் போட்ட பணத்திற்கு ஆபத்தா? Poll_c10வங்கியில் போட்ட பணத்திற்கு ஆபத்தா? Poll_m10வங்கியில் போட்ட பணத்திற்கு ஆபத்தா? Poll_c10 
7 Posts - 1%
Guna.D
வங்கியில் போட்ட பணத்திற்கு ஆபத்தா? Poll_c10வங்கியில் போட்ட பணத்திற்கு ஆபத்தா? Poll_m10வங்கியில் போட்ட பணத்திற்கு ஆபத்தா? Poll_c10 
7 Posts - 1%
mruthun
வங்கியில் போட்ட பணத்திற்கு ஆபத்தா? Poll_c10வங்கியில் போட்ட பணத்திற்கு ஆபத்தா? Poll_m10வங்கியில் போட்ட பணத்திற்கு ஆபத்தா? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வங்கியில் போட்ட பணத்திற்கு ஆபத்தா?


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 10 Jan 2018 - 1:06

சமீப காலமாக பொதுமக்களுக்கு ஒரு சந்தேகம். வங்கியில் போட்ட பணம், மீண்டும் கிடைக்குமா... வங்கிகள் நஷ்டம் அடைந்தால், அரசே எடுத்துக் கொண்டால் என்ன செய்வது என, அச்சமடைந்து உள்ளனர். அதற்கு காரணம், மத்திய அரசு தாக்கல் செய்ய இருந்த மசோதா!அச்சத்தை போக்க வேண்டியது, மத்திய அரசின் கடமை மட்டுமல்ல; நம் ஒவ்வொருவரும் இதை அறிந்து கொள்ள வேண்டியதும் முக்கியம்!

கடந்த, 2008ல், அமெரிக்காவின் மிகப்பெரிய வங்கியான, 'லேமென் பிரதர்ஸ்' திவால் ஆனதும், மடமடவென உலகெங்கும் உள்ள நுாற்றுக்கணக்கான வங்கிகள் திவாலாயின; உலகப் பொருளாதாரம் சரிவடைந்தது.வங்கிகளை துாக்கி நிறுத்த, பல நாடுகள், அரசு பணத்தை செலவிட்டன. அதற்காக, மக்கள் வரிப்பணம் செலவிடப்பட்டது.

அந்த ஆண்டில், அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனில் நடந்த, 'ஜி 20' மாநாட்டில், 'வங்கித்துறை நஷ்டத்தை சரி செய்ய, பொதுமக்கள் வரிப்பணம் ஏன் வீணடிக்கப்பட வேண்டும்?' என்ற பலமான கருத்து எழுந்தது.இந்நிலையில், உலக நாடுகளின் மத்திய வங்கிகள், பன்னாட்டு நிதியமைப்புகளை உள்ளடக்கிய, நிதி ஸ்திர அமைப்பு, சுவிட்சர்லாந்து நாட்டின், பாசில் நகரில் ஏற்படுத்தப்பட்டது.

'நஷ்டத்தில் இயங்கும் வங்கிகளை துாக்கி நிறுத்த, முதலீட்டாளர்கள் தங்கள், 'டிபாசிட்'களின் பெரும் பகுதியை தியாகம் செய்ய வேண்டும்' என, இந்த அமைப்பு, 2011ல் கருத்து தெரிவித்தது. இது, 2014ல், ஆஸ்திரேலியாவின், பிரிஸ்பேன் நகரில் நடந்த, 'ஜி 20' மாநாட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.இதையடுத்தே, நம் மத்திய அரசு, 'நிதி தீர்மானம் மற்றும் வைப்பு காப்பீடு' என்ற மசோதாவை தயார் செய்தது. இதை, பார்லிமென்டில் தாக்கல் செய்து, சட்டமாக்க விரும்பியது.

இந்த மசோதாவின், 52வது ஷரத்து தான், முதலீட்டாளர்களுக்கு கவலையை ஏற்படுத்துகிறது. இதன் படி, முதலீட்டாளர், 10 லட்சம் ரூபாயை முதலீடு செய்திருந்தால், வங்கிகள் திவாலாகும் போது, ஒன்பது லட்சம் ரூபாய் கூட தர முடியாது எனக் கூறலாம்...ஐந்து ஆண்டு டிபாசிட்டை, 20 ஆண்டுக்கு கூட நீட்டிக்கலாம்; கடன் பத்திரங்களாக மாற்றம் செய்யலாம் என்பன போன்ற அம்சங்கள், முதலீட்டாளர்களை பயமுறுத்துகின்றன.

இதை, மத்திய அரசின் நிதி நிர்வாக எதேச்சதிகார முடிவு என, சில பொருளாதார வல்லுனர்கள் விமர்சிக்கின்றனர்.ஏராளமான மூத்த குடிமக்கள் தங்கள் கடுமையான உழைப்பின் சேமிப்பை வங்கிகளில் முதலீடு செய்து, வட்டியை வைத்து வாழ்க்கை நடத்துபவர்களாக உள்ளனர்.பெண் திருமணத்திற்காக, ஐந்து ஆண்டுகள் கழித்து எடுப்பதற்காக போட்ட பணத்தை, 20 ஆண்டுகள் கழித்து தான் எடுக்கலாம் என்றால் எப்படி... சேமிப்பு கணக்கில் போட்ட பணம், பங்குகளாக மாற்றப்பட்டால் ஏற்றுக்கொள்ள முடியுமா?


தொடரும்....



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 10 Jan 2018 - 1:08

ஏன் இந்த நிலை என்பதையும் பார்க்கத் தான் வேண்டும்!வங்கி அதிகாரிகளின் ஊழல்களாலும், கடன் வாங்கிய பெரு முதலாளிகள், கடனை திருப்பி செலுத்தாததாலும், வங்கிகளின் வாராக் கடன், 12 லட்சம் கோடி ரூபாயை தாண்டி விட்டது. அதாவது, வங்கிகளின் மொத்த டிபாசிட்டில், 12 சதவீதத்துக்கு மேல் வாராக்கடன் உள்ளது.


இது, வருங்காலத்தில் மேலும் அதிகரிக்கும் என்ற அச்சத்தின் காரணமாக, மத்திய அரசு, இந்த நடவடிக்கையை எடுக்கத் துணிந்துள்ளது என்கின்றனர், வல்லுனர்கள்.எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, மசோதாவில் உள்ள குறைகளை சரி செய்ய, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. வங்கிகளின் ஸ்திரத்தன்மை, ரிசர்வ் வங்கி மீதான மக்களின் நம்பிக்கையை, மத்திய அரசு குலைக்கலாமா என்ற கேள்வி எழுகிறது.

முதலீட்டாளர்களுக்கு சிறிய அளவில் வட்டியை தந்து, லாபத்தில் பங்கு தராத வங்கிகள், நலிவடையும் போது, அவர்களுக்கு துரோகம் செய்யும் வகையில் அரசே அதற்கு ஒத்துழைக்கலாமா என்ற ஆழமான கேள்வியும் வைக்கப்படுகிறது.இதுபோன்ற கேள்விக்கணைகள் பாய்ந்ததும், மத்திய நிதி அமைச்சர், அருண் ஜெட்லி, 'இது வெறும் மசோதா தான்; சட்டமில்லை. அதில் மாற்றங்கள் செய்யப்பட்டு, முதலீட்டாளர்களின் பணம் பாதுகாக்கப்படும்; பீதி அடைய வேண்டாம்' என, விளக்கம் அளித்துள்ளார்.

எனினும், கடந்த ஆண்டு, மத்திய அரசு திடீரென மேற்கொண்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கையை நினைத்து, மக்கள் பயந்து போயுள்ளனர்.

இந்த மசோதா, சட்டமானால், பழைய படி, மிளகாய் டப்பா, தலையணை அடியில், அரிசிப் பானையில் பணத்தை வைத்துக் கொள்ள வேண்டிய நிலை உருவாகுமா... 'டிஜிட்டல் இந்தியா' என்பது கானல் நீராகுமா... என்ற கவலைகள் எழுகின்றன.கடந்த மத்திய பட்ஜெட்டின் போது, 'மூத்த குடிமக்களின் டிபாசிட்களுக்கு, 8 சதவீத வட்டி தருவோம்' என, மத்திய அரசு அறிவித்தாலும், மிக குறைவான வட்டியையே, வங்கிகள் தருகின்றன என்பதை, பொதுமக்கள் நினைவு கொள்கின்றனர்.

ஆக, மத்திய அரசின் வாக்குறுதியின் நம்பகத்தன்மையை, அரசின் சில நடவடிக்கைகள் சந்தேகம் கொள்ள வைக்கின்றன.உலக நாடுகள் சிலவற்றில் நடந்தது என்ன என்பதையும் கவனிப்போம்!கிரீஸ் நாட்டில் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்த போது, வங்கியில் போட்ட பணத்தை எடுக்க முடியாமல் அழுது புலம்பியவர்களை பார்த்து, நாமும் கண்ணீர் வடித்தோமே!அதை விட மோசமான நிலை, நம் நாட்டிலுள்ள பண மதிப்பிழப்பு நேரத்தில் நடைபெற்றதே... பல உயிர்கள் பலியாயினவே... நாம் சம்பாதித்த பணத்தை, நாமே எடுக்க முடியாமல் அல்லாடினோமே!

அதுபோல, பணத்தை இழந்த இத்தாலி நாட்டு முதியவர் துாக்கிட்டு இறந்தது எவ்வளவு பேருக்கு தெரியும்... ஆஸ்திரியா மூத்த குடிமக்களின் டிபாசிட்டில், 54 சதவீதம், நலிவடைந்த வங்கிகளை மீட்க, வலுக்கட்டாயமாக எடுக்கப்பட்டது.'பெயில் இன் எனும் நிதித் தீவிரவாத சட்டம், ஐ.எஸ்., பயங்கரவாதிகளை விடக் கொடுமையானது' என, எல்லென் பிரவுன் என்ற வங்கித்துறை பெண் நிபுணர், தன் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த, 2013ல், சைப்ரஸ் நாட்டின் வங்கியில், ஒரு லட்சம், 'யூரோ' கரன்சிக்கு மேலிருந்த முதலீடுகள், 37.5 பங்குகளாகவும், 22.5 சதவீத பின் பங்குகளாகவும், 30 சதவீதம் முடக்கவும் செய்யப்பட்டது.இது போல, பல நாடுகளில் பொதுமக்களின் பணம், வங்கிகளால் பறிக்கப்பட்டது, நம் நாட்டில் எத்தனை பேருக்கு தெரியும்?
இன்று, வங்கிகளின் மூலதனத்தை அதிகரிக்க, முதலீட்டாளர்களின், 1.33 லட்சம் கோடி ரூபாய் உதவுகிறது. 





தொடரும்.....



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 10 Jan 2018 - 1:19

இதில், அரசின் முதலீடு, 76 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே!வங்கிகளுக்கு உதவிக்கரம் நீட்டும் முதலீட்டாளர்கள் பாதிக்கப்படலாமா!வங்கிகளின், 19.5 சதவீதம் முதலீடு, 'ஸ்டாசுடரி லிக்குடிடி ரேஷ்யோ;' 4 சதவீதம் கேஷ் ரிசர்வ் ரேஷ்யா ஆக, 23.5 சதவீதம், ரிசர்வ் வங்கியிடம் உள்ள நிலையில், இந்திய வங்கிகள் திவால் என்ற பேச்சுக்கே இடமில்லை என, அடித்துக் கூறுகின்றனர், அரசை நடத்துபவர்கள்.

அதே நேரத்தில், உலக வங்கிகள் அரங்கில், 'பெயில் இன்' என்ற சட்டம், தன் கொடுமையான வேலைகளை துவங்கி விட்டது என்ற செய்தியும் உண்மை தானே!அரசு என்ன செய்ய வேண்டும்?'பெயில் இன்' சட்டம் தேவை என, கையெழுத்திட்ட, 24 நாடுகளில், ஆஸ்திரேலியா, சீனா, இந்தோனேஷியா, ரஷ்யா, தென் ஆப்ரிக்கா, பிரேசில் உட்பட, 13 நாடுகள், அதை அமல்படுத்த அஞ்சுகின்றன. இப்படிப்பட்ட சட்டத்தை, இந்தியா கொண்டு வர ஏன் துடிக்க வேண்டுமா!


மேலும், 'பெயில் இன்' என்ற விஷயமே, 'ஜி 20' நாடுகளிடமிருந்து இறக்குமதி செய்யப்பட்டது தானே... இதில், நம் நாட்டு, சுதேசி கொள்கை என்ன ஆயிற்று?இந்த மசோதாவை, பார்லிமென்ட் ஏற்றுக் கொண்டாலும், மத்திய அரசு கைவிடுவதே இந்திய மக்களுக்கு நிம்மதியை தரும்.பன்னாட்டு நிதி நிறுவனங்களின் அறிவுரையாலும், அழுத்தத்தாலும், வங்கி முதலீட்டு, 'பாசில்' குறியீடு - 3ஜ எட்டுவதற்காகவும், இலகுவாக வாணிகம் செய்யும் குறியீட்டை மேம்படுத்தவும், அரசு இந்த நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.

ஏழ்மை நாடான இந்தியாவில், வங்கிகளின் ஸ்திரத்தன்மையை பாதுகாக்க வேண்டிய கடமையும், பெரும் தொழில் முதலைகளிடமிருந்து வாராக் கடன்களை வசூலிக்கும் பொறுப்பும், மத்திய அரசுக்கு உள்ளது.


அப்பாவி முதலீட்டாளர்களை, 'உதவிகரமான முட்டாள்கள்' என, கம்யூனிஷ கொள்கையை அறிமுகம் செய்த லெனின் வர்ணித்தது போல இல்லாமல், 'நாட்டு மாந்தரெல்லாம் தம்போல் நரர்கள் என்ற கருதார், ஆட்டு மந்தையாமென்று உலகை அரசர் எண்ணி விட்டார்' என்ற பாரதி குமுறலையும், நினைவில் ஏந்தி, ஏழை முதலீட்டாளர்களின் நலன்களை பாதுகாக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்!

டாக்டர் ந.ராமசுப்ரமணியன்பொருளாதார நிபுணர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
aeroboy2000
aeroboy2000
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 263
இணைந்தது : 29/08/2012

Postaeroboy2000 Wed 10 Jan 2018 - 9:03

krishnaamma wrote:.'பெயில் இன் எனும் நிதித் தீவிரவாத சட்டம், ஐ.எஸ்., பயங்கரவாதிகளை விடக் கொடுமையானது' என, எல்லென் பிரவுன் என்ற வங்கித்துறை பெண் நிபுணர், தன் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்..
மேற்கோள் செய்த பதிவு: 1256352

இன்றைய ஆட்சியாளர்கள்

மக்கள் எவ்வளவு அடித்தாலும் தாங்குவார்கள் என்று மனப்பால் குடிக்கிறார்கள்....
ஒரு கட்டத்தில் சாது மிரண்டால் நிலை ஏற்பட்டால் ....
இவர்கள் நிலை பற்றி யோசிக்க மறுக்கிறார்கள் ...
இன்று இவர்களை உபசரிக்கும் அமெரிக்கா
நாளை புகலிடம் கூட கொடுக்காமல் விமான நிலையத்தில் இருந்தே திருப்பி அனுப்பும்...
வரலாற்றைக் கண்டும்
இவர்கள் திருந்த மறுக்கிறார்கள்...
. இவர்களை ஒரு கூட்டம் செம்மறி ஆடுகள் போல் எதையும் ஆராயாமல் ஆதரிக்கிறார்கள்


மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக