ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடிச்சு சொல்கிறார் அலங்காநல்லூர் பெண்: என்னோட ஒத்தக்காளை அஞ்சு சிங்கத்துக்கு சமம்..

Go down

அடிச்சு சொல்கிறார் அலங்காநல்லூர் பெண்: என்னோட ஒத்தக்காளை அஞ்சு சிங்கத்துக்கு சமம்.. Empty அடிச்சு சொல்கிறார் அலங்காநல்லூர் பெண்: என்னோட ஒத்தக்காளை அஞ்சு சிங்கத்துக்கு சமம்..

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Dec 31, 2017 11:41 am

[You must be registered and logged in to see this image.]

அலங்காநல்லூர்: ஜல்லிக்கட்டு காளையை தன் பிள்ளை போலவும், ‘ஒரு சிங்கம்’ போலவும் வளர்த்து வருகிறார் அலங்காநல்லூரை சேர்ந்த பெண்.
ஜல்லிக்கட்டு... 2017ம் ஆண்டின் துவக்கத்தில் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கிய ஒத்தை வார்த்தை. நடத்தியே தீர வேண்டுமென பள்ளி, கல்லூரி மாணவர்கள் முதல், வீட்டு பெண்கள், மக்கள் என அனைவருமே வீதிக்கு வந்து போராட்டம் நடத்தினார்கள். சாலை மற்றும் ரயில் மறியல், மெரினாவில் என போராட்டம் உச்சத்திற்கே சென்றது.உச்சநீதிமன்றத்தில் பீட்டா போட்ட வழக்கால், 2015, 2016ம் ஆண்டுகளில் ஜல்லிக்கட்டு நடக்கவில்லை. நடப்பாண்டிலாவது (2017) நடத்த வேண்டுமென தமிழகமே திரண்டு பெரும் போராட்டம் நடத்தியது. இதனைத்தொடர்ந்து அரசு தனிச்சட்டம் கொண்டு வந்து நடத்தியது. வரும் ஆண்டில் (2018) உடனடியாக ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்தது. இதனை தொடர்ந்து தென்மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிக்காக காளைகள், ‘காளையருக்கு’ சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
ஜல்லிக்கட்டுக்கு புகழ் பெற்ற மதுரை மாவட்டம், அலங்காநல்லூர், பாலமேடு மற்றும் சிவகங்கை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு காளைகளை வீடுகளில் வளர்த்து வருகின்றனர். அலங்காநல்லூர் அருகே வெள்ளையம்பட்டியை சேர்ந்த நாகராஜன் மனைவி அழகுநாச்சி (27). இவர் கடந்த 9 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு காளை வைத்து நடத்தி வருகிறார். ‘ராமு’ என்று இவர் குரல் கேட்டால் போதும். விறைப்பை ஒத்தி வைத்து விட்டு, பாசத்துடன் அழகுநாச்சியை பார்க்கிறது காளை. சாதாரணமாக மாடு வளர்ப்பது போல ஜல்லிக்கட்டு காளைகளை வளர்க்க முடியாது. 

நன்றி
தினகரன்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

அடிச்சு சொல்கிறார் அலங்காநல்லூர் பெண்: என்னோட ஒத்தக்காளை அஞ்சு சிங்கத்துக்கு சமம்.. Empty Re: அடிச்சு சொல்கிறார் அலங்காநல்லூர் பெண்: என்னோட ஒத்தக்காளை அஞ்சு சிங்கத்துக்கு சமம்..

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Dec 31, 2017 11:42 am

ஆண்களே வளர்க்க யோசிக்கும் நேரத்தில், இவரால் மட்டும் எப்படி முடிகிறது? அவரிடமே கேட்போமே...?அழகுநாச்சி பேச்சை துவக்கினார். ‘‘நீங்க சொல்றது சரிதான்... வீட்ல ஒரு மல்யுத்த பயில்வானை வளர்க்கிற மாதிரிதான் காளையை வளர்க்கிறதும்...? சரியான நேரத்தில் முட்டை, முந்திரி, பாதாம், பிஸ்தா, நாட்டுக்கோழி சூப் சேர்த்து சத்தான சாப்பாடு, நீச்சல் பயிற்சி, மண்ணை குத்தும் பயிற்சி எல்லாம் கொடுக்கணும்... கொஞ்சம் கவனக்குறைவாய் விட்டாலும் சிக்கல்தான்.
அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம்... அப்புறம் தென்மாவட்டங்கள்ல நடந்த பல போட்டிகளில் என் ‘ராமு’ பங்கேற்று பல பரிசுகளை வாங்கியிருக்கு... இது வாங்கிட்டு வந்த பரிசுகள்தான் வீட்ல குவிஞ்சு கிடக்கு... என் பொண்ணுக்கு இதைத்தான் சீராய் கொடுத்து விடப்போறேன் (சிரிக்கிறார்)’’.* அதெல்லாம் சரி...? காளையை வளர்க்க கடுமையாக செலவாகுமே? எப்படி சமாளிக்கிறீங்க....? ‘‘என்ன செய்றது கஷ்டம்தான்... ஸ்பெஷல் சாப்பாடோட பருத்தி விதை நெல், தவிட்டு தண்ணீர், பசுந்தீவனங்களும் கொடுக்கணும்... விவசாய கூலி வேலை செஞ்சு, அதுல கிடைக்கிற வருவாயை வச்சுத்தான் காளையை பராமரிச்சுட்டு வர்றேன்... கஷ்டம்னாலும் கவுரவம், பாரம்பரியம் முக்கியம்யா... போட்டியில கூட என் பெயருலதான் காளையை களமிறக்குவேன்... என் ‘ராமு’ ஒண்ணும் சும்மா கிடையாது. ஒத்தை காளை அஞ்சு சிங்கத்துக்கு சமம்... அவ்வளவு சீக்கிரத்துல இவனை யாரும் அடக்கி விட முடியாது. அது என்ன சொல்லுவாக... ஆங்... கொம்பு வச்ச சிங்கம் என் ராமு... சாமியாய், பிள்ளையாய் நினைச்சு வளர்க்கிறோங்க... காடு, கழனி செழிக்கணும்னா ஜல்லிக்கட்டு எல்லா வருஷமும் நடக்கணும்யா...’’சொல்லிக்கொண்டே காளையை கொஞ்சுகிறார்.அவரை பாராட்டி விட்டு கிளம்பினோம்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum