புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 9:43

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:19

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 0:41

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Today at 0:20

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:19

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:05

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 19:48

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:55

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 7:03

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 0:52

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:48

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:30

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 0:09

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 21:54

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 21:20

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 21:04

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 20:39

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun 30 Jun 2024 - 20:07

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 19:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 18:55

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 18:44

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 18:04

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:26

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:29

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:14

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:12

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 54 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 54 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 54 Poll_c10 
9 Posts - 47%
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 54 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 54 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 54 Poll_c10 
5 Posts - 26%
Anthony raj
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 54 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 54 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 54 Poll_c10 
2 Posts - 11%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 54 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 54 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 54 Poll_c10 
2 Posts - 11%
VENKUSADAS
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 54 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 54 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 54 Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 54 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 54 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 54 Poll_c10 
9 Posts - 47%
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 54 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 54 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 54 Poll_c10 
5 Posts - 26%
Anthony raj
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 54 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 54 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 54 Poll_c10 
2 Posts - 11%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 54 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 54 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 54 Poll_c10 
2 Posts - 11%
VENKUSADAS
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 54 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 54 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 54 Poll_c10 
1 Post - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்


   
   

Page 54 of 100 Previous  1 ... 28 ... 53, 54, 55 ... 77 ... 100  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat 30 Dec 2017 - 21:46

First topic message reminder :

திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1

அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு


தெளிவுரை

எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.

அசை

1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு

1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்

அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை

1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு

எதுகை-அர- பவன், முல-முற்றே
மோனை- முதல-முதற்றே

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue 28 Apr 2020 - 9:58

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-2-கல்வி-399

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


தாமின் புறுவ துலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்


தெளிவுரை
தாம் இன்புறுவதற்குக் காரணமான கல்வியால் உலகமும் இன்புறுவதைக்
கண்டு, கற்றறிந்த அறிஞர் மேன்மேலும் (அக்கல்வியையே) விரும்புவர்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

தா/மின்------------- புறு/வ-------------- துல/கின்----------- புறக்/கண்/டு
நேர்/நேர்------------நிரை/நேர்--------நிரை/நேர்----------நிரை/நேர்/நேர்
தேமா-----------------புளிமா--------------புளிமா----------------புளிமாங்காய்
இயற்சீர்--------------இயற்சீர்------------இயற்சீர்--------------வெண்சீர்
வெண்டளை-----வெண்டளை----வெண்டளை------வெண்டளை


கா/முறு/வர்--------- கற்/றறிந்--------தார்
நேர்/நிரை/நேர்----நேர்/நிரை-----நேர்
கூவிளங்காய்-------கூவிளம்--------நாள்
வெண்சீர்-------------இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>தார்>>>நேர்>>>நாள்

1.மா முன் நிரை 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.விளம் முன் நேர்

எதுகை- புக்கண்டு- கற்றறிந்
மோனை- தாமின்- தார் , புறுவ –புறக்கண்டு, காமுறுவர்- ற்றறிந்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue 28 Apr 2020 - 10:07

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-2-கல்வி-400

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


கேடில் விழுச்செல்வங் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை


தெளிவுரை
ஒருவனுக்கு அழிவு இல்லாத சிறந்த செல்வம் கல்வியே ஆகும்; கல்வி
தவிர மற்றப் பொருள்கள் (அத்தகைய சிறப்புடைய ) செல்வம் அல்ல.

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

கே/டில்----------- விழுச்/செல்/வங்-----கல்/வி------------ ஒரு/வற்/கு
நேர்/நேர்----------நிரை/நேர்/நேர்------நேர்/நேர்---------நிரை/நேர்/நேர்
தேமா---------------புளிமாங்காய்----------தேமா--------------புளிமாங்காய்
இயற்சீர்------------வெண்சீர்----------------இயற்சீர்-----------வெண்சீர்
வெண்டளை----வெண்டளை----------வெண்டளை---வெண்டளை

மா/டல்/ல------------ மற்/றை ------யவை
நேர்/நேர்/நேர்------நேர்/நேர்-----நிரை
தேமாங்காய்---------தேமா----------மலர்
வெண்சீர்-------------இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>யவை>>>நிரை>>>மலர்

1.மா முன் நிரை 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-
மோனை- மாடல்ல- ற்றை


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue 28 Apr 2020 - 10:16

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-3-கல்லாமை-401

திருகுறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் -நன்றி

அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
நூலின்றிக் கோட்டி கொளல்


தெளிவுரை
அறிவு நிரம்புவதற்குக் காரணமான நூல்களைக் கற்காமல்
கற்றவரிடம் சென்று பேசுதல், சூதாடும் அரங்கு இழைக்காமல்
வட்டுக்காயை உருட்டி ஆடினாற் போன்றது.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

அரங்/கின்/றி--------வட்/டா/டி----------- யற்/றே------------ நிரம்/பிய
நிரை/நேர்/நேர்----நேர்/நேர்/நேர்----நேர்/நேர்-----------நிரை/நிரை
புளிமாங்காய்-------தேமாங்காய்-------தேமா-----------------கருவிளம்
வெண்சீர்-------------வெண்சீர்-----------இயற்சீர்--------------இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை------வெண்டளை------வெண்டளை


நூ/லின்/றிக்--------- கோட்/டி------ கொளல்
நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்------நிரை
தேமாங்காய்----------தேமா-----------மலர்
வெண்சீர்--------------இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>கொளல்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-ங்கின்றி -நிம்பிய
மோனை- கோட்டி -கொளல்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu 30 Apr 2020 - 17:58

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-3-கல்லாமை-402

திருகுறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் -நன்றி


கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டு
மில்லாதாள் பெண்காமுற் றற்று


தெளிவுரை
(கற்றவரின் அவையில்) கல்லாதவன் ஒன்றைச் சொல்ல விரும்புதல், முலை
இரண்டும் இல்லாதவள் பெண் தன்மையை விரும்பினாற் போன்றது.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

கல்/லா/தான்--------சொற்/கா --------முறு/தல்----------- முலை/யிரண்/டு
நேர்/நேர்/நேர்------நேர்/நேர்----------நிரை/நேர்---------நிரை/நிரை/நேர்
தேமாங்காய்---------தேமா---------------புளிமா---------------கருவிளங்காய்
வெண்சீர்-------------இயற்சீர்------------இயற்சீர்-------------வெண்சீர்
வெண்டளை--------வெண்டளை---வெண்டளை-----வெண்டளை



மில்/லா/தாள்-----பெண்/கா/முற்-------- றற்/று
நேர்/நேர்/நேர்---நேர்/நேர்/நேர்----------நேர்/பு
தேமாங்காய------தேமாங்காய்-------------காசு
வெண்சீர்----------வெண்சீர்
வெண்டளை-----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>றற்று>>>நேர்பு>>>காசு

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.காய் முன் நேர்

எதுகை-ல்லாதான்- மில்லாதாள்- முலையிரண்டு
மோனை- முறுதல்- முலையிரண்டு




பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu 30 Apr 2020 - 18:09

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-3-கல்லாமை-403

திருகுறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முற்
சொல்லா திருக்கப் பெறின்


தெளிவுரை
கற்றவரின் முன்னிலையில் ஒன்றையும் சொல்லாமல் அமைதியாக
இருக்கப்பெற்றால், கல்லாதவர்களும் மிகவும் நல்லவரே ஆவர்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

கல்/லா------------- தவ/ரும்------------ நனி/நல்/லர்------- கற்/றார்/முற்
நேர்/நேர்-----------நிரை/நேர்---------நிரை/நேர்/நேர்---நேர்/நேர்/நேர்
தேமா----------------புளிமா---------------புளிமாங்காய்-------தேமாங்காய்
இயற்சீர்-------------இயற்சீர்-------------வெண்சீர்-------------வெண்சீர்
வெண்டளை-----வெண்டளை-----வெண்டளை-------வெண்டளை


சொல்/லா--------- திருக்/கப்------ பெறின்
நேர்/நேர்------------நிரை/நேர்-----நிரை
தேமா-----------------புளிமா-----------மலர்
இயற்சீர்-------------இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை

ஈற்றுச்சீர்>>>பெறின்>>>நிரை>>>மலர்

1.மா முன் நிரை 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை-ல்லா- சொல்லா
மோனை- ல்லா –ற்றார்முற்



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu 30 Apr 2020 - 18:24

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-3-கல்லாமை-404

திருகுறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

கல்லாதான் ஓட்பங் கழியநன் றாயினுங்
கொள்ளா ரறிவுடை யார்


தெளிவுரை
கல்லாதவனுடைய அறிவுடைமை ஒருகால் மிக நன்றாக இருந்தாலும்
அறிவுடையோர் அதனை அறிவின் பகுதியாக ஏற்றுக் கொள்ளமாட்டார்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

கல்/லா/தான்------ ஓட்/பங்------------- கழி/யநன்---------- றா/யினுங்
நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்------------நிரை/நிரை-------நேர்/நிரை
தேமாங்காய்--------தேமா-----------------கருவிளம்-----------கூவிளம்
வெண்சீர்------------இயற்சீர்--------------இயற்சீர்--------------இயற்சீர்
வெண்டளை------வெண்டளை------வெண்டளை------வெண்டளை



கொள்/ளா------ ரறி/வுடை---------- யார்
நேர்/நேர்---------நிரை/நிரை-------நேர்
தேமா--------------கருவிளம்-----------நாள்
இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை


ஈற்றுச்சீர்>>>யார்>>>நேர்>>>நாள்

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.விளம் முன் நேர் 4.விளம் முன் நேர்
5.மா முன் நிரை 6.விளம் முன் நேர்

எதுகை- ழியநன்- றாயினுங்
மோனை- ல்லாதான் –ழியநன்








பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu 30 Apr 2020 - 18:37

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-3-கல்லாமை-405

திருகுறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


கல்லா வொருவன் றகைமை றலைப்பெய்து
சொல்லாடச் சோர்வு படும்


தெளிவுரை
கல்லாத ஒருவன் தன்னைத் தான் மதித்துக் கொள்ளும் மதிப்பு
(கற்றவரிடம்) கூடிப் பேசும்போது அப்பேச்சினால் கெடும்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

கல்/லா--------------- வொரு/வன்------- றகை/மை--------- றலைப்/பெய்/து
நேர்/நேர்-------------நிரை/நேர்----------நிரை/நேர்----------நிரை/நேர்/நேர்
தேமா------------------புளிமா----------------புளிமா----------------புளிமாங்காய்
இயற்சீர்--------------இயற்சீர்---------------இயற்சீர்--------------வெண்சீர்
வெண்டளை------வெண்டளை------வெண்டளை------வெண்டளை

சொல்/லா/டச்----- சோர்/வு------ படும்
நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்-----நிரை
தேமாங்காய்-------தேமா-----------மலர்
வெண்சீர்-----------இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>படும்>>>நிரை>>>மலர்

1.மா முன் நிரை 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- லைப்பெய்து - கல்லா
மோனை- கைமை –லைப்பெய்து , சொல்லாடச்- சோர்வு


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu 30 Apr 2020 - 18:47

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-3-கல்லாமை-406

திருகுறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


உளரென்னு மாத்திரைய ரல்லாற் பயவாக்
களரனையர் கல்லா தவர்


தெளிவுரை
கல்லாதவர் உயிரோடிருக்கின்றனர் என்று சொல்லப் படும் அளவினரே
அல்லாமல், ஒன்றும் விளையாத களர்நிலத்திற்கு ஒப்பாவர்


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

உள/ரென்/னு------- மாத்/திரை/ய------- ரல்/லாற்----------- பய/வாக்
நிரை/நேர்/நேர்-----நேர்/நிரை/நேர்----நேர்/நேர்-----------நிரை/நேர்
புளிமாங்காய்--------கூவிளங்காய்-------தேமா-----------------புளிமா
வெண்சீர்--------------வெண்சீர்-------------இயற்சீர்--------------இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை--------வெண்டளை------வெண்டளை



கள/ரனை/யர்------ கல்/லா-------- தவர்
நிரை/நிரை/நேர்--நேர்/நேர்------நிரை
கருவிளங்காய்-----தேமா------------மலர்
வெண்சீர்-------------இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை

ஈற்றுச்சீர்>>>தவர்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- ரென்னு – கரனையர் , ரல்லாற் – ரல்லாற்
மோனை- ளரனையர் –ல்லா





பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu 30 Apr 2020 - 18:55

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-3-கல்லாமை-407

திருகுறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

நுண்மாண் நுழைபுல இல்லான் எழில்நலம்
மண்மாண் புனைபாவை யற்று

தெளிவுரை
நுட்பமானதாய் மாட்சியுடையதாய் ஆராயவல்லதான அறிவு இல்லாதவனுடைய எழுச்சியான அழகு, மண்ணால் சிறப்பாகப் புனையப்பட்ட பாவை போன்றது.

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

நுண்/மாண்------ நுழை/புல-------- இல்/லான்-------- எழில்/நலம்
நேர்/நேர்------------நிரை/நிரை------நேர்/நேர்-----------நிரை/நிரை
தேமா-----------------கருவிளம்---------தேமா-----------------கருவிளம்
இயற்சீர்--------------இயற்சீர்------------இயற்சீர்-------------வெண்சீர்
வெண்டளை------வெண்டளை----வெண்டளை-----வெண்டளை


மண்/மாண்-----புனை/பா/வை -------யற்/று
நேர்/நேர்---------நிரை/நேர்/நேர்-------நேர்/பு
தேமா--------------கருவிளங்காய்--------காசு
இயற்சீர்-----------வெண்சீர்
வெண்டளை---வெண்டளை


ஈற்றுச்சீர்>>>யற்று>>>நேர்பு>>>காசு

1.மா முன் நிரை 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.மா முன் நிரை 6.காய் முன் நேர்

எதுகை- நுண்மாண் – மண்மாண்
மோனை- நுண்மாண் –நுழைபுல , ல்லான் –ழில்நலம்




பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri 1 May 2020 - 9:40

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-3-கல்லாமை-408

திருகுறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


நல்லார்கட் பட்ட வறுமையி னின்னாதே
கல்லார்கட் பட்ட திரு


தெளிவுரை
கல்லாதவரிடம் சேர்ந்துள்ள செல்வமானது, கற்றறிந்த
நல்லவரிடம் உள்ள வறுமையைவிட மிகத் துன்பம் செய்வதாகும்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

நல்/லார்/கட்------- பட்/ட-------------- வறு/மையி-------- னின்/னா/தே
நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்---------நிரை/நிரை--------நேர்/நேர்/நேர்
தேமாங்காய்-------தேமா---------------கருவிளம்-----------தேமாங்காய்
வெண்சீர்-----------இயற்சீர்------------இயற்சீர்--------------வெண்சீர்
வெண்டளை------வெண்டளை---வெண்டளை------வெண்டளை


கல்/லார்/கட்------- பட்/ட--------- திரு
நேர்/நேர்/நேர்----நேர்/நேர்-----நிரை
தேமாங்காய்-------தேமா----------மலர்
வெண்சீர்-----------இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>திரு>>>நிரை>>>மலர்

1.காய் முன்நேர் 2.மா முன் நிரை 3.விளம் முன் நேர் 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- ல்லார்கட் – கல்லார்கட் , பட்ட – பட்
மோனை- ட்ட – ட்ட



Sponsored content

PostSponsored content



Page 54 of 100 Previous  1 ... 28 ... 53, 54, 55 ... 77 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக