புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீழ்வேன் என்று நினைத்தாயோ! -1 Poll_c10வீழ்வேன் என்று நினைத்தாயோ! -1 Poll_m10வீழ்வேன் என்று நினைத்தாயோ! -1 Poll_c10 
59 Posts - 55%
heezulia
வீழ்வேன் என்று நினைத்தாயோ! -1 Poll_c10வீழ்வேன் என்று நினைத்தாயோ! -1 Poll_m10வீழ்வேன் என்று நினைத்தாயோ! -1 Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
வீழ்வேன் என்று நினைத்தாயோ! -1 Poll_c10வீழ்வேன் என்று நினைத்தாயோ! -1 Poll_m10வீழ்வேன் என்று நினைத்தாயோ! -1 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
வீழ்வேன் என்று நினைத்தாயோ! -1 Poll_c10வீழ்வேன் என்று நினைத்தாயோ! -1 Poll_m10வீழ்வேன் என்று நினைத்தாயோ! -1 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
வீழ்வேன் என்று நினைத்தாயோ! -1 Poll_c10வீழ்வேன் என்று நினைத்தாயோ! -1 Poll_m10வீழ்வேன் என்று நினைத்தாயோ! -1 Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
வீழ்வேன் என்று நினைத்தாயோ! -1 Poll_c10வீழ்வேன் என்று நினைத்தாயோ! -1 Poll_m10வீழ்வேன் என்று நினைத்தாயோ! -1 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
வீழ்வேன் என்று நினைத்தாயோ! -1 Poll_c10வீழ்வேன் என்று நினைத்தாயோ! -1 Poll_m10வீழ்வேன் என்று நினைத்தாயோ! -1 Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
வீழ்வேன் என்று நினைத்தாயோ! -1 Poll_c10வீழ்வேன் என்று நினைத்தாயோ! -1 Poll_m10வீழ்வேன் என்று நினைத்தாயோ! -1 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
வீழ்வேன் என்று நினைத்தாயோ! -1 Poll_c10வீழ்வேன் என்று நினைத்தாயோ! -1 Poll_m10வீழ்வேன் என்று நினைத்தாயோ! -1 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
வீழ்வேன் என்று நினைத்தாயோ! -1 Poll_c10வீழ்வேன் என்று நினைத்தாயோ! -1 Poll_m10வீழ்வேன் என்று நினைத்தாயோ! -1 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீழ்வேன் என்று நினைத்தாயோ! -1 Poll_c10வீழ்வேன் என்று நினைத்தாயோ! -1 Poll_m10வீழ்வேன் என்று நினைத்தாயோ! -1 Poll_c10 
54 Posts - 55%
heezulia
வீழ்வேன் என்று நினைத்தாயோ! -1 Poll_c10வீழ்வேன் என்று நினைத்தாயோ! -1 Poll_m10வீழ்வேன் என்று நினைத்தாயோ! -1 Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
வீழ்வேன் என்று நினைத்தாயோ! -1 Poll_c10வீழ்வேன் என்று நினைத்தாயோ! -1 Poll_m10வீழ்வேன் என்று நினைத்தாயோ! -1 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
வீழ்வேன் என்று நினைத்தாயோ! -1 Poll_c10வீழ்வேன் என்று நினைத்தாயோ! -1 Poll_m10வீழ்வேன் என்று நினைத்தாயோ! -1 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
வீழ்வேன் என்று நினைத்தாயோ! -1 Poll_c10வீழ்வேன் என்று நினைத்தாயோ! -1 Poll_m10வீழ்வேன் என்று நினைத்தாயோ! -1 Poll_c10 
2 Posts - 2%
Sathiyarajan
வீழ்வேன் என்று நினைத்தாயோ! -1 Poll_c10வீழ்வேன் என்று நினைத்தாயோ! -1 Poll_m10வீழ்வேன் என்று நினைத்தாயோ! -1 Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
வீழ்வேன் என்று நினைத்தாயோ! -1 Poll_c10வீழ்வேன் என்று நினைத்தாயோ! -1 Poll_m10வீழ்வேன் என்று நினைத்தாயோ! -1 Poll_c10 
1 Post - 1%
Guna.D
வீழ்வேன் என்று நினைத்தாயோ! -1 Poll_c10வீழ்வேன் என்று நினைத்தாயோ! -1 Poll_m10வீழ்வேன் என்று நினைத்தாயோ! -1 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
வீழ்வேன் என்று நினைத்தாயோ! -1 Poll_c10வீழ்வேன் என்று நினைத்தாயோ! -1 Poll_m10வீழ்வேன் என்று நினைத்தாயோ! -1 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
வீழ்வேன் என்று நினைத்தாயோ! -1 Poll_c10வீழ்வேன் என்று நினைத்தாயோ! -1 Poll_m10வீழ்வேன் என்று நினைத்தாயோ! -1 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீழ்வேன் என்று நினைத்தாயோ! -1


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 31, 2017 11:08 am

வீழ்வேன் என்று நினைத்தாயோ! -1 B9sfqnS9S56waT2kecKN+c2caf96d77841c7ef9361c66d9b9a6fd

இறங்கியது இடி
சிங்கப்பூரின் கலாசாரம், பொருளியல், மரபுடமை தொடர்பான ஆய்வுப்பணிகளை மேற்கொள்ள உலகளவில் அளிக்கப்பெறும் லீ காங் சியான் புலமைப் பரிசிலைப் பெற்ற முதல் இந்தியரும் தமிழருமான மாலன், ஆறுமாத காலம் சிங்கப்பூரில் தங்கியிருந்து 1965 இலிருந்து 2015 வரை எழுதப்பட்ட சிங்கப்பூர் தமிழ் இலக்கியம் அதன் சமூக வாழ்வியலை எவ்விதம் பிரதிபலித்தது என்ற ஆய்வினை மேற்கொண்டார். அவர் தனது அனுபவங்கள், வாசிப்பு இவற்றின் வழி அறிந்தவற்றைக் கொண்டு ஒரு நாடாக, சமூகமாக நாம் சிங்கப்பூரிடமிருந்து கற்க வேண்டியவை எவை என்பதைப் பேசும் கட்டுரைத் தொடர் இது:
ஆகஸ்ட் ஒன்பது 1965. பகல் பத்துமணி. வானொலியில் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்த நிகழ்ச்சிகள் திடீரென ஒரு கணம் நிறுத்தப்பட்டன. அடுத்து ஒலித்தது ஒரு குரல். அது வெறும் அறிவிப்பாளரின் குரல் அல்ல. அது வரலாற்றின் குரல்.
""தற்சார்ந்தும், சுதந்திரமாகவும் வாழ மனிதருக்குள்ள பிரிக்க முடியாத உரிமையினால் இன்று முதல் மலேசியாவிலிருந்து பிரிந்து தனித்த இறையாண்மை கொண்ட, சுதந்திரமான, ஜனநாயகக் குடியரசாக மலர்கிறது சிங்கப்பூர்'' என்ற லீ குவான் யூவின் அறிவிப்பு ஒலித்தது.

நன்றி
தினமணி

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 31, 2017 11:09 am

தன்னைத் தானே ஆண்டு கொள்கிற உரிமையை, ஒரு துளி ரத்தம் சிந்தாமல், எந்த விதப் போராட்டமும் இல்லாமல், ஓர் உயிரிழப்புக் கூட இல்லாமல் ஒரு தேசம் பெறும் போது அங்கே குதூகலமும் கொண்டாட்டமும் தானே கரை மீறிப் புரளும்?
ஆனால்- அறிவிப்பைக் கேட்ட தேசம் திடுக்கிட்டது. திகைப்பில் விக்கித்துப் போய் நின்றது. வெடிகள் இல்லை வேட்டுக்கள் இல்லை. வாணவேடிக்கைக் கொண்டாட்டங்கள் இல்லை. விருந்து கேளிக்கை எதுவும் இல்லை. திகிலும் திகைப்பும் தேசத்தைச் சூழ்ந்து கொண்டது. கண்ணீர் மல்க அறிவிப்பை வெளியிட்ட லீ குவான் யூ யாரையும் சந்திக்காமல், எவர் கண்ணிலும் படாமல், குடும்பத்தோடு சிங்கப்பூரின் புறநகர்ப் பகுதி ஒன்றில் மறைந்து கொண்டார்.
சிங்கப்பூர் சுதந்திரம் பெற்றதன் காரணமாக, அது நாள் வரை மலேசியக் கூட்டமைப்பில் பெரும்பான்மைச் சமூகமாக வாழ்ந்த மலாய் இனத்தவர் திடீரென்று அந்த முற்பகலில் சிறுபான்மையினராக மாறிப் போனார்கள். ஓராண்டிற்கு முன்னர்தான் (ஜூலை 21. செப்டம்பர் 2 1964 ) அவர்கள் இருமுறை இனக்கலவரத்தைச் சந்தித்திருந்தார்கள். வரலாற்றின் எந்த ஒரு நிகழ்வையும் விட சிங்கப்பூர் வாழ் மலாய் இனத்தவரின் மனதில் நேர்ந்த கடுமையான அடையாளச் சிக்கல் மலேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்த போதுதான் ஏற்பட்டது என்று கார்னல் பல்கலைக்கழகத்தில் சமர்ப்பித்த தனது பி.எச்டி ஆய்வில் ஸ்டான்லி சாண்டர்ஸ் பெட்லிங்டன் என்ற ஆய்வாளர் எழுதுகிறார்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 31, 2017 11:10 am

தமிழர்கள் திகைத்துப் போனார்கள். மலேசியாவோடு அவர்கள் மனதால் நெருங்கியவர்கள். சிலர் அங்கிருந்து இங்கு புலம் பெயர்ந்து வந்தவர்கள். அவர்களது உறவினர்களும் நண்பர்களும் அங்கிருந்தார்கள். சிங்கப்பூர் தனி இறையாண்மை பெற்ற நாடாக மலர்ந்த மறுநாள் "தமிழ் முரசு' நாளிதழ் தனது தலையங்கத்தில் "மலேசியர் அனைவருக்கும் திகைப்பையும் வியப்பையும் அளித்தது' என்று எழுதியது. இன்னொரு நாளேடான "தமிழ் மலர்' "திடீர் அரசியல் மாற்றத்தின் விளைவாக தங்களின் எதிர்காலம் பற்றிச் சிறுபான்மை மக்களிடையே காரணம் இல்லாத பீதி ஏற்படுவது இயல்புதான்' என எழுதியது.
சீனர்களும் மகிழ்ச்சியோடு இல்லை. இப்படி ஒரு நடவடிக்கையை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. கைக்கெட்டுகிற தூரத்தில் இருந்த இந்தோனேசியாவோடு முரண்பாடுகள் இருந்தன. அது ஓர் இஸ்லாமிய நாடு. அது மட்டுமல்ல, சிங்கப்பூரைச் சுற்றிலும் இஸ்லாமிய நாடுகள். அவற்றுக்கு நடுவே பல மதங்கள் கொண்ட சிங்கப்பூர். சில மாதங்களுக்கு முன்னர்தான் (மார்ச் 10, 1965) சிங்கப்பூரின் புகழ் பெற்ற ஆர்ச்செட் வீதியில் அமைந்திருந்த ஹாங்காங் ஷாங்காய் வங்கிக் கட்டிடத்தில் இந்தோனேசியாவைச் சேர்ந்த இரு கடற்படை வீரர்கள் ஒரு டைம் பாமை வெடிக்கச் செய்திருந்தார்கள். அந்த சம்பவத்தில் இருவர் உயிரிழந்தார்கள். 30 பேர் படுகாயம் அடைந்தார்கள். அது ஏதோ உதிரியான ஒற்றைச் சம்பவம் அல்ல. அதற்கு முன் 37 முறை சின்னச் சின்னதாய் குண்டு வெடிப்புச் சம்பவங்களுக்கு முயற்சி நடந்திருந்தது

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 31, 2017 11:11 am

தனக்கென பெரிய ராணுவம் இல்லாத ஒரு சிறு தீவு எப்படி எதிர்காலத்தில் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முடியும், பொருளாதாரம் என்ன ஆகும் என்ற கவலைகள் எழுந்தன. சிங்கப்பூரில் பெருமளவு இயற்கை வளங்கள் இல்லை. மலேசியாவோ மலை, நதி, வனம், வயல், கடல் என எல்லா வளங்களாலும் ஆசிர்வதிக்கப்பட்ட நாடு. ரப்பர் உற்பத்தியிலும் ஏற்றுமதியிலும் உலகில் முதல் இடம். அன்றைய சிங்கப்பூரில் பெரிய தொழிற்சாலைகள் இல்லை. சிறு சிறு தொழிலகங்கள் அரும்பத் தொடங்கியிருந்தன. சொல்லிக் கொள்கிறார்போல் இருந்ததெல்லாம் ஒரு துறைமுகம் மட்டும்தான்.
எதிர்காலம் என்ன என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழுந்து நின்றது. ""சிங்கப்பூரும் மலேசியக் கூட்டமைப்பும் ஒரே பொருளாதாரமாக இணைக்கப்பட்டால்தான் சிங்கப்பூர் பொருளாதாரத்தில் பெரிய மாற்றங்கள் செய்வது சாத்தியம்'' என டாக்டர் கோ கெங் ஸ்வீ மீண்டும் மீண்டும் கூறி வந்திருந்தார். பொருளாதர நோக்கில் மட்டுமல்ல, மலேயாவுடனான இணைப்பு "வரலாற்றுத் தேவை' என ராஜரத்தினம் பேசியிருந்தார்.
ஆனால் இனி இணைப்பு சாத்தியமில்லை. பேசியாயிற்று; கடிதங்கள் பரிமாறிக் கொண்டாயிற்று; அமைச்சர்கள் பத்துப் பேரும் கையெழுத்திட்டுப் பிரிந்து வந்தாயிற்று; பாராளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டாயிற்று. இனி இணைப்பு சாத்தியமில்லை. சுயமரியாதையை விட்டுக் கொடுத்து மண்டியிட்டாலொழிய இணைப்பு சாத்தியமில்லை.

அதுதான் அந்த ஆகஸ்ட் 9-இல் இருந்த மனநிலை. ஆனால் வீழ்ந்து விடவில்லை சிங்கப்பூர். உலகப் பரப்பில் ஒருவராலும் கவனிக்கப்படாத ஒரு சிறு புள்ளியாய், பெருங்கடல் நடுவே ஒரு மணல்திட்டாய் அதன் கதை முடிந்து போகவில்லை. சீனம் போல் புலியில்லை, இந்தியா போல் யானை இல்லை, அமெரிக்கா போல் கழுகு இல்லை, என்றாலும் உலகால் புறந்தள்ளமுடியாத ஒரு சக்தியாகத் திகழ்கிறது இந்தச் சிட்டுக்குருவி.
இத்தனை நெருக்கடியிலிருந்து எப்படி எழுந்தது சிங்கப்பூர்?
இதற்கு ஒரு வரியில் விடை சொல்வதானால் சிங்கப்பூரிய உணர்வு (Singaporeaness) என்பது "வீழ்வேன் என்று நினைத்தாயோ?'
அதுதான் என்ன?
(தொடரும்)
நன்றி
தினமணி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக