ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆபத்தை மறந்து ஆர்வத்தோடு புகைப்படங்கள் எடுத்தேன்: சிறந்த புகைப்படக் கலைஞராக தேர்வான போஜனின் பரவச அனுபவங்கள்

Go down

ஆபத்தை மறந்து ஆர்வத்தோடு புகைப்படங்கள் எடுத்தேன்: சிறந்த புகைப்படக் கலைஞராக தேர்வான போஜனின் பரவச அனுபவங்கள் Empty ஆபத்தை மறந்து ஆர்வத்தோடு புகைப்படங்கள் எடுத்தேன்: சிறந்த புகைப்படக் கலைஞராக தேர்வான போஜனின் பரவச அனுபவங்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Dec 30, 2017 8:40 am

ஆபத்தை மறந்து ஆர்வத்தோடு புகைப்படங்கள் எடுத்தேன்: சிறந்த புகைப்படக் கலைஞராக தேர்வான போஜனின் பரவச அனுபவங்கள் RFpmGHPYRF2Ii2DhBftm+adf2726aa5fc502dd4f28492851c7c9c

நேஷனல் ஜியாக்ரபிக்கின் 2017ன் சிறந்த இயற்கை புகைப்படக் கலைஞராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் நீலகிரியைச் சேர்ந்த ஜெயப்ரகாஷ் ஜோகீ போஜன். 
ஒரு சாதாரண புகைப்படக்கலைஞராகவே அவர் 10 ஆண்டுகள் பணிபுரிந்து வந்தார். அவரது மனைவி அவருக்கு ஒரு டிஎஸ்எல்ஆர் கேமராவை பரிசளித்தார். அதன்பிறகு அவரது பாதைகள் மாறின.
இந்தோனேசியாவின் போர்னியோ காடுகளில் எடுக்கப்பட்ட 'ஓடும் நதியொன்றைக் கடக்கும் உராங்குட்டான்' புகைப்படத்திற்காக இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டுள்ளது.

நன்றி
தி இந்து
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ஆபத்தை மறந்து ஆர்வத்தோடு புகைப்படங்கள் எடுத்தேன்: சிறந்த புகைப்படக் கலைஞராக தேர்வான போஜனின் பரவச அனுபவங்கள் Empty Re: ஆபத்தை மறந்து ஆர்வத்தோடு புகைப்படங்கள் எடுத்தேன்: சிறந்த புகைப்படக் கலைஞராக தேர்வான போஜனின் பரவச அனுபவங்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Dec 30, 2017 8:42 am

உராங்குட்டான் குரங்கினம்
ஆபத்தை மறந்து ஆர்வத்தோடு புகைப்படங்கள் எடுத்தேன்: சிறந்த புகைப்படக் கலைஞராக தேர்வான போஜனின் பரவச அனுபவங்கள் V3lGNzNTRCbfleIvp1HC+9b938e2b87eda4cf487bf5467c5a9ff0


விருதுபெற்ற படம் மற்றும் காட்டுயிர் புகைப்படக்கலையின் மீதுள்ள தனது காதல் குறித்து உற்சாகம் பொங்க பேசுகிறார் ஜெயப்ரகாஷ் .
''ஆகஸ்ட் மாதத்தில் நான் இந்தோனேசியாவின் போர்னியோ தீவில் கலிமந்தான் பகுதியில் இருந்தேன். அங்கு நான் கேள்விப்பட்ட செய்திகள் என்னை மிகவும் வியக்கவைத்தன. உராங்குட்டான் குரங்குகள் ஆற்றைக்கடக்க சாதாரணமாக தண்ணீரைத் தவிர்த்துவிடுகின்றன. அவைகள் மரங்களுக்குரிய படைப்புகள். அந்த ஆற்றில் நிறைய முதலைகள் வசிக்கின்றன.
அந்த இடத்திற்கே சென்று இரண்டு நாட்கள் காத்திருந்தும் எந்தக் காட்சியும் அவரால் காணமுடியவில்லை. ஆனால் காத்திருக்கத்தான் வேண்டும் என அவர் முடிவு செய்தார். மூன்றாவது நாள் வளைவான இடத்தில் சிறப்பான நிகழ்வை அறிய முடிந்தது. இந்த விலங்குகள் மறுகரையின் இடங்களுக்கு பாய்ந்து சென்றதைக் கேள்வியுற்றிருக்கிறார்.
ஆபத்தான நிலையில்
''உராங்குட்டான் கண்ணுக்குத் தெரிந்தபோது, தண்ணீருக்கிடையில் கிளைகளைப் பற்றினேன். உண்மையில் அப்போது அங்கு முதலைகள் வசிப்பது பற்றிய ஞாபகம் வரவில்லை. ஆமாம், ஆனால் நான் உண்மையிலேயே ஒரு தனித்துவமான காட்சியை விரும்பினேன் என்பதால் நான் அதை செய்ய வேண்டியிருந்தது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ஆபத்தை மறந்து ஆர்வத்தோடு புகைப்படங்கள் எடுத்தேன்: சிறந்த புகைப்படக் கலைஞராக தேர்வான போஜனின் பரவச அனுபவங்கள் Empty Re: ஆபத்தை மறந்து ஆர்வத்தோடு புகைப்படங்கள் எடுத்தேன்: சிறந்த புகைப்படக் கலைஞராக தேர்வான போஜனின் பரவச அனுபவங்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Dec 30, 2017 8:43 am

நான் உராங்குட்டானைப் பார்த்த உடனே உணர்ச்சிவயப்பட்டு கேமராவை எடுத்து கிளிக்கிடத் தொடங்கினேன். அதுவோ பயந்து ஒரு மரத்திற்கு அருகே பின்வாங்கியது. அந்த நேரம் அந்த விலங்குகள் கண்ணாமூச்சி விளையாடத் தொடங்கின. இறுதியாக அவ்விலங்குகள் என்னை அலட்சியம் செய்ய முடிவெடுத்தன.
மரத்திற்கு வெளியே வருவதும் மறைவதுமான 25 காட்சிகள் எனக்குக் கிடைத்தன. பின்னர் அவன் வெளியே வந்து நதியைக் கடக்கத் தொடங்கியபோது கிடைத்த காட்சி இது''- என்று சிரிக்கிறார் ஜெயப்ரகாஷ் போஜன்.''
நீலகிரியைச் சேர்ந்தவர்
நீலகிரிலிருந்து வந்த போஜன், வனவிலங்கு ஆர்வம் தனக்கு இயற்கையாகவே அமைந்துவிட்டதாகக் கூறுகிறார். அவரது தாத்தா பாட்டி தொட்டபெட்டாவிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் ஒரு கிராமத்தில் வசித்து வந்தனர். "பறவைகள் மற்றும் வன விலங்குகளால் நான் சூழப்பட்டேன்" என்கிறார்.
அவர் பெங்களூரில் வாழ்ந்து வந்தார். அதனால் அவருக்கு ஏராளமான ஆற்று முகத்துவாரப் பறவைகளைப் பார்க்கும் வாய்ப்புகள் கிட்டியிருந்தன. அவர் அனைத்து தேசிய பூங்காக்களுக்கும் சென்றுள்ளார். அதில் அவருக்கு மிகவும் பிடித்தது கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் உள்ள நாகல்ஹோல் தேசிய பூங்காவாகும்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ஆபத்தை மறந்து ஆர்வத்தோடு புகைப்படங்கள் எடுத்தேன்: சிறந்த புகைப்படக் கலைஞராக தேர்வான போஜனின் பரவச அனுபவங்கள் Empty Re: ஆபத்தை மறந்து ஆர்வத்தோடு புகைப்படங்கள் எடுத்தேன்: சிறந்த புகைப்படக் கலைஞராக தேர்வான போஜனின் பரவச அனுபவங்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Dec 30, 2017 8:45 am

காட்டுயிர் புகைப்பட ஆர்வம்
ஆனால், இவரது மனைவி இரண்டாண்டுகளுக்குமுன் சிங்கப்பூருக்கு மாறுதல் கிடைத்து இவரும் தனது வேலையைவிட்டு அவருடன் சென்றபிறகுதான் இவர் முழுமூச்சாக வனவிலங்கு புகைப்படங்களை எடுக்கத் தொடங்கினார்.
சிங்கப்பூர் மிருகக் காட்சிக்கு முதன்முதலாக சென்றபோது அங்கு காணநேர்ந்த உயர்விலங்குகளே இவரை படம் எடுக்கத் தூண்டின. ''அங்குதான் இந்தமாதிரி விலங்கினங்களை நான் முதன்முதலாகப் பார்க்கிறேன். இவற்றையே நான் காட்டுக்குள் பார்க்க விரும்பினேன். இதுகுறித்து நான் ஆராய்ச்சி செய்யத் தொடங்கி தெற்காசியா முழுவதும் மக்களிடம் சென்று எனது ஆய்வுப்பணியை மேற்கொண்டேன்.
 ஆபத்தை மறந்து ஆர்வத்தோடு புகைப்படங்கள் எடுத்தேன்: சிறந்த புகைப்படக் கலைஞராக தேர்வான போஜனின் பரவச அனுபவங்கள் NFHg5EWSKqCOz7l9X8pL+d028ea5182cc6ad52a505d4cd90923fe
உலகின் 25 சதவீத மிகவும் அருகிவரும் உயிரினங்களின் தொகுதி தெற்காசியாதான் என்பதையும் தெரிந்துகொண்டேன். நீங்கள் அங்கெல்லாம் புகைப்படங்களை எடுக்க சுதந்திரமாகச் சென்றுவிடமுடியாது. நான் எடுத்த பல புகைப்படங்களின் இடங்களைக் கண்டறிவது மிகவும் சிரமமாகும். மெதுவாக எனது இணைப்புகள் வளர்ந்தன, எட்டு அல்லது ஒன்பது வகையான அரிய வகை உயிரினங்களை நான் புகைப்படம் எடுத்திருக்கிறேன்."
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ஆபத்தை மறந்து ஆர்வத்தோடு புகைப்படங்கள் எடுத்தேன்: சிறந்த புகைப்படக் கலைஞராக தேர்வான போஜனின் பரவச அனுபவங்கள் Empty Re: ஆபத்தை மறந்து ஆர்வத்தோடு புகைப்படங்கள் எடுத்தேன்: சிறந்த புகைப்படக் கலைஞராக தேர்வான போஜனின் பரவச அனுபவங்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Dec 30, 2017 8:47 am

புகைப்படம் தேர்வாகக் காரணம்
நேஷ்னல் ஜியாகிரபி நேச்சர் புகைப்பட விருதுக்காக வந்த படங்களில் போஜனின் புகைப்படங்கள் அனைத்துமே ஆசிரியருக்கு பிடித்தவையாகவேஅமைந்திருந்தன. ஆனால் அவர் மிகவும் மகிழ்ந்தது உராங்குட்டான் படத்தைக் கண்டுதான். அப்படமே விருதுக்கும் தேர்வானது. ''நிறைய பேர் இதை பார்ப்பார்கள். இன்னும் பலரது கவனத்தைச் சென்றடையும். அதன்மூலம் மேலும் அதிகமான மக்கள் உதவ தயாராக இருப்பார்கள்.
உராங்குட்டான்கள் தற்போது பெற்றுவரும் உதவிகளைவிட அதிக உதவிகள் அவற்றிற்கு கிடைக்கும்.'- என்பதுதான் ஆசிரியர் இவற்றைத் தேர்ந்தெடுக்க முக்கிய காரணம்.
[size=31]ஆபத்தை மறந்து ஆர்வத்தோடு புகைப்படங்கள் எடுத்தேன்: சிறந்த புகைப்படக் கலைஞராக தேர்வான போஜனின் பரவச அனுபவங்கள் NSN4iGMpR6mK0CVSnDlT+9c1834d8ee617830f8a7c681a6b31e5e
[/size]
 
நீர்க்கீரிகள்
இவ்வகையான உயர் விலங்கினங்கள் உராங்குட்டான்கள் தவிர, குறிப்பாக புலிகள் மற்றும் நீர்கீரிகள் அவரது விருப்பத்திற்குரிய தேர்வுகளாகும். நான் முதலில் புலியை படம்பிடித்தது பண்டிப்பூர் சரணாலயத்தில் என்று நினைவுகூர்கிறார். அது ஒரு பெண் புலி மற்றும் தனது குட்டிகளோடு இருந்தது. நீர்கீரிகளைப் பொறுத்தவரை அவர் பேசுவதற்கு நிறைய இருக்கிறது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ஆபத்தை மறந்து ஆர்வத்தோடு புகைப்படங்கள் எடுத்தேன்: சிறந்த புகைப்படக் கலைஞராக தேர்வான போஜனின் பரவச அனுபவங்கள் Empty Re: ஆபத்தை மறந்து ஆர்வத்தோடு புகைப்படங்கள் எடுத்தேன்: சிறந்த புகைப்படக் கலைஞராக தேர்வான போஜனின் பரவச அனுபவங்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Dec 30, 2017 8:48 am

அவர் கபிணி மற்றும் கார்பெட் தேசிய பூங்காவில் நிறைய நீர்கீரிகளை படம் பிடித்திருக்கிறார். சமீபத்தில் சிங்கப்பூரில் அவர் வீட்டருகே ஒரே குடும்பமாகக் காணப்பட்ட காட்டு நீர்கீரிகள் அவரை வழிமறித்துள்ளன. அவைகள் சிங்கப்பூர் போன்ற நகர்ப்புற இடங்களில் வாழ ஒரு வழியைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். நீர்கீரிகளின் அருகில் செல்லும் ஒரு ஜோடி முதியோர்களைப் பற்றிய போஜனின் புகைப்படம் இந்திய இயற்கை இணையதளம் ஒன்றில் விருதுபெற்று கவனம் பெற்றது.
2018ல் புதிய பயணங்கள்
வருங்காலத்தில் அரிய வகை உயிரினங்களைப் பற்றிய ஒரு புகைப்பட விவரப் புத்தகம் வெளியிடும் ஆர்வமும் போஜனுக்கு இருக்கிறது. ''இந்த வகை உயிரினங்கள் காட்டில் 50-100 எண்ணிக்கையில்தான் உள்ளன. வரும் பிப்ரவரில் ஜப்பானுக்கு செல்லும் உத்தேசம் உள்ளது. அங்கு பனிக்குரங்கு, சிவப்பு நரி, இடம்பெயர்ந்த நீர்க்கீரிகள் ஆகியவற்றைப் படம்பிடிக்க உள்ளேன். வெள்ளை சிறுத்தைப் புலிகள் நிறைந்த இமயமலை அருகே உள்ள ஸ்பிடி பள்ளத்தாக்கிற்கு 2018ல் செல்வேன் என்ற நம்பிக்கை உள்ளது.
அதைத் தொடர்ந்து ஆண்டின் இறுதிக்குள் அனுமதி கிடைத்தால் அரிதான குரங்குகள் வசிக்கும் வியட்நாம் சீனா எல்லைப்பகுதிக்குச் செல்வேன். நான் எடுத்துவர நிறைய புகைப்படங்கள் உள்ளன. நிறைய கதைகள் சொல்லும்.'' என்கிறார் நீலகிரியைச் சேர்ந்த ஜெயப்ரகாஷ் ஜோகீ போஜன்.
எதைப் பார்த்தாலும் அதனோடு செல்பி எடுத்துக்கொள்கிற இந்த காலத்தில் போஜனின் நம்பிக்கை வார்த்தைகள் புகைப்படக் கலைக்கு மேலும் உயிரூட்டும் என நம்பலாம்.

நன்றி
தி இந்து
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ஆபத்தை மறந்து ஆர்வத்தோடு புகைப்படங்கள் எடுத்தேன்: சிறந்த புகைப்படக் கலைஞராக தேர்வான போஜனின் பரவச அனுபவங்கள் Empty Re: ஆபத்தை மறந்து ஆர்வத்தோடு புகைப்படங்கள் எடுத்தேன்: சிறந்த புகைப்படக் கலைஞராக தேர்வான போஜனின் பரவச அனுபவங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum