புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:17 pm

» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Today at 4:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:49 pm

» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Today at 3:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:42 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:51 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:26 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:17 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:00 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 11:44 am

» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Today at 11:42 am

» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Today at 11:41 am

» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Today at 11:39 am

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆக்டோபஸின் ஞானமும் அலட்சியம் செய்யப்படும் உழைப்பும்!  Poll_c10ஆக்டோபஸின் ஞானமும் அலட்சியம் செய்யப்படும் உழைப்பும்!  Poll_m10ஆக்டோபஸின் ஞானமும் அலட்சியம் செய்யப்படும் உழைப்பும்!  Poll_c10 
41 Posts - 53%
heezulia
ஆக்டோபஸின் ஞானமும் அலட்சியம் செய்யப்படும் உழைப்பும்!  Poll_c10ஆக்டோபஸின் ஞானமும் அலட்சியம் செய்யப்படும் உழைப்பும்!  Poll_m10ஆக்டோபஸின் ஞானமும் அலட்சியம் செய்யப்படும் உழைப்பும்!  Poll_c10 
20 Posts - 26%
Dr.S.Soundarapandian
ஆக்டோபஸின் ஞானமும் அலட்சியம் செய்யப்படும் உழைப்பும்!  Poll_c10ஆக்டோபஸின் ஞானமும் அலட்சியம் செய்யப்படும் உழைப்பும்!  Poll_m10ஆக்டோபஸின் ஞானமும் அலட்சியம் செய்யப்படும் உழைப்பும்!  Poll_c10 
6 Posts - 8%
T.N.Balasubramanian
ஆக்டோபஸின் ஞானமும் அலட்சியம் செய்யப்படும் உழைப்பும்!  Poll_c10ஆக்டோபஸின் ஞானமும் அலட்சியம் செய்யப்படும் உழைப்பும்!  Poll_m10ஆக்டோபஸின் ஞானமும் அலட்சியம் செய்யப்படும் உழைப்பும்!  Poll_c10 
4 Posts - 5%
ஆனந்திபழனியப்பன்
ஆக்டோபஸின் ஞானமும் அலட்சியம் செய்யப்படும் உழைப்பும்!  Poll_c10ஆக்டோபஸின் ஞானமும் அலட்சியம் செய்யப்படும் உழைப்பும்!  Poll_m10ஆக்டோபஸின் ஞானமும் அலட்சியம் செய்யப்படும் உழைப்பும்!  Poll_c10 
1 Post - 1%
Rutu
ஆக்டோபஸின் ஞானமும் அலட்சியம் செய்யப்படும் உழைப்பும்!  Poll_c10ஆக்டோபஸின் ஞானமும் அலட்சியம் செய்யப்படும் உழைப்பும்!  Poll_m10ஆக்டோபஸின் ஞானமும் அலட்சியம் செய்யப்படும் உழைப்பும்!  Poll_c10 
1 Post - 1%
prajai
ஆக்டோபஸின் ஞானமும் அலட்சியம் செய்யப்படும் உழைப்பும்!  Poll_c10ஆக்டோபஸின் ஞானமும் அலட்சியம் செய்யப்படும் உழைப்பும்!  Poll_m10ஆக்டோபஸின் ஞானமும் அலட்சியம் செய்யப்படும் உழைப்பும்!  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஆக்டோபஸின் ஞானமும் அலட்சியம் செய்யப்படும் உழைப்பும்!  Poll_c10ஆக்டோபஸின் ஞானமும் அலட்சியம் செய்யப்படும் உழைப்பும்!  Poll_m10ஆக்டோபஸின் ஞானமும் அலட்சியம் செய்யப்படும் உழைப்பும்!  Poll_c10 
1 Post - 1%
mruthun
ஆக்டோபஸின் ஞானமும் அலட்சியம் செய்யப்படும் உழைப்பும்!  Poll_c10ஆக்டோபஸின் ஞானமும் அலட்சியம் செய்யப்படும் உழைப்பும்!  Poll_m10ஆக்டோபஸின் ஞானமும் அலட்சியம் செய்யப்படும் உழைப்பும்!  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
ஆக்டோபஸின் ஞானமும் அலட்சியம் செய்யப்படும் உழைப்பும்!  Poll_c10ஆக்டோபஸின் ஞானமும் அலட்சியம் செய்யப்படும் உழைப்பும்!  Poll_m10ஆக்டோபஸின் ஞானமும் அலட்சியம் செய்யப்படும் உழைப்பும்!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆக்டோபஸின் ஞானமும் அலட்சியம் செய்யப்படும் உழைப்பும்!  Poll_c10ஆக்டோபஸின் ஞானமும் அலட்சியம் செய்யப்படும் உழைப்பும்!  Poll_m10ஆக்டோபஸின் ஞானமும் அலட்சியம் செய்யப்படும் உழைப்பும்!  Poll_c10 
229 Posts - 43%
heezulia
ஆக்டோபஸின் ஞானமும் அலட்சியம் செய்யப்படும் உழைப்பும்!  Poll_c10ஆக்டோபஸின் ஞானமும் அலட்சியம் செய்யப்படும் உழைப்பும்!  Poll_m10ஆக்டோபஸின் ஞானமும் அலட்சியம் செய்யப்படும் உழைப்பும்!  Poll_c10 
208 Posts - 39%
Dr.S.Soundarapandian
ஆக்டோபஸின் ஞானமும் அலட்சியம் செய்யப்படும் உழைப்பும்!  Poll_c10ஆக்டோபஸின் ஞானமும் அலட்சியம் செய்யப்படும் உழைப்பும்!  Poll_m10ஆக்டோபஸின் ஞானமும் அலட்சியம் செய்யப்படும் உழைப்பும்!  Poll_c10 
24 Posts - 5%
i6appar
ஆக்டோபஸின் ஞானமும் அலட்சியம் செய்யப்படும் உழைப்பும்!  Poll_c10ஆக்டோபஸின் ஞானமும் அலட்சியம் செய்யப்படும் உழைப்பும்!  Poll_m10ஆக்டோபஸின் ஞானமும் அலட்சியம் செய்யப்படும் உழைப்பும்!  Poll_c10 
16 Posts - 3%
mohamed nizamudeen
ஆக்டோபஸின் ஞானமும் அலட்சியம் செய்யப்படும் உழைப்பும்!  Poll_c10ஆக்டோபஸின் ஞானமும் அலட்சியம் செய்யப்படும் உழைப்பும்!  Poll_m10ஆக்டோபஸின் ஞானமும் அலட்சியம் செய்யப்படும் உழைப்பும்!  Poll_c10 
14 Posts - 3%
Anthony raj
ஆக்டோபஸின் ஞானமும் அலட்சியம் செய்யப்படும் உழைப்பும்!  Poll_c10ஆக்டோபஸின் ஞானமும் அலட்சியம் செய்யப்படும் உழைப்பும்!  Poll_m10ஆக்டோபஸின் ஞானமும் அலட்சியம் செய்யப்படும் உழைப்பும்!  Poll_c10 
13 Posts - 2%
T.N.Balasubramanian
ஆக்டோபஸின் ஞானமும் அலட்சியம் செய்யப்படும் உழைப்பும்!  Poll_c10ஆக்டோபஸின் ஞானமும் அலட்சியம் செய்யப்படும் உழைப்பும்!  Poll_m10ஆக்டோபஸின் ஞானமும் அலட்சியம் செய்யப்படும் உழைப்பும்!  Poll_c10 
13 Posts - 2%
prajai
ஆக்டோபஸின் ஞானமும் அலட்சியம் செய்யப்படும் உழைப்பும்!  Poll_c10ஆக்டோபஸின் ஞானமும் அலட்சியம் செய்யப்படும் உழைப்பும்!  Poll_m10ஆக்டோபஸின் ஞானமும் அலட்சியம் செய்யப்படும் உழைப்பும்!  Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆக்டோபஸின் ஞானமும் அலட்சியம் செய்யப்படும் உழைப்பும்!  Poll_c10ஆக்டோபஸின் ஞானமும் அலட்சியம் செய்யப்படும் உழைப்பும்!  Poll_m10ஆக்டோபஸின் ஞானமும் அலட்சியம் செய்யப்படும் உழைப்பும்!  Poll_c10 
3 Posts - 1%
Guna.D
ஆக்டோபஸின் ஞானமும் அலட்சியம் செய்யப்படும் உழைப்பும்!  Poll_c10ஆக்டோபஸின் ஞானமும் அலட்சியம் செய்யப்படும் உழைப்பும்!  Poll_m10ஆக்டோபஸின் ஞானமும் அலட்சியம் செய்யப்படும் உழைப்பும்!  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆக்டோபஸின் ஞானமும் அலட்சியம் செய்யப்படும் உழைப்பும்!


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Dec 22, 2017 8:59 pm

ஆக்டோபஸின் ஞானமும் அலட்சியம் செய்யப்படும் உழைப்பும்!  LGZb14BSzq1lj4rmAhwC+shutterstock274092959





டந்த செப்டம்பர் மாதம் தென்னாப்பிரிக்க நாடாளுமன்றம் வழக்கமில்லாத ஒரு பேச்சாளரை, வழக்கமில்லாத ஒரு பொருள் குறித்துப் பேச இடம்கொடுத்தது. தென்னாப்பிரிக்கக் கண்டத்தின் தென்முனையில் கடலுக்கு அடியில் உள்ள காட்டில் நடத்திக்கொண்டிருந்த ஆராய்ச்சியிலிருந்து சிறிது விடுபட்டு, நாடாளுமன்றத்தில் உரையாற்றினார் காட்டுயிர் ஆராய்ச்சியாளரும் திரைப்படத் தயாரிப்பாளருமான கிரெய்க் ஃபோஸ்டர்.

கடலடி நிலத்தைத் திட்டமிட்டுப் பயன்படுத்தும் சட்டத்தைத் தென்னாப்பிரிக்க நாடாளுமன்றம் இயற்றவிருந்தது. அதற்கும் முன்னால், கடலுக்கு அடியில் உள்ள நிலத்தில் என்ன இருக்கிறது, என்ன நடக்கிறது என்று நாடாளுமன்றத்துக்குத் தெரிவிக்க - அதிலும் குறிப்பாக ஒரு பெண் ஆக்டோபஸின் புத்திசாலித்தனத்தை எடுத்துக்கூற - அவர் வந்திருந்தார்.

திரவ மந்திரக்காரி

கேப் முனையின் மேற்குப் பக்கத்தில் கடலுக்கு அடியில் ஆராய்ச்சி மேற்கொண்டபோது, ஒரு பெண் ஆக்டோபஸைத் தினமும் சந்திப்பார் க்ரெய்க். அதனுடன் நட்பை ஏற்படுத்திக்கொள்ளவும் கடலுக்கு அடியில் நடப்பதைத் தெரிந்துகொள்ளவும், அபூர்வமான அந்த உயிரினத்தின் செயலைப் புரிந்துகொள்ளவும் அவர் விரும்பினார். அந்த ஆக்டோபஸை அவர் ‘திரவ மந்திரக்காரி’ என்று செல்லமாக அழைக்கிறார். மனிதர்களிடையே கலையும் கலாச்சாரமும் எப்படி வளர்ந்திருக்கும் என்பது முதல் சமுத்திரங்களின் இன்றைய நிலை, அவற்றுக்கு ஏற்பட்டுள்ள சூழலியல் ஆபத்துகள் ஆகியவற்றைத் தெரிந்துகொள்ள அந்த ஆக்டோபஸைத் தொடர்ந்து ஆராய்வது உதவுகிறது என்கிறார் கிரெய்க்.

வாழுமிடத்தில் ஏற்படும் மாற்றங்களைக் கவனித்து, அதற்கேற்ப ஆக்டோபஸ் தன்னைத் தகவமைத்துக்கொள்கிறது. உண்பது, வாழ்வது ஆகியவற்றில் புதுப்புது உத்திகளை அது கையாள்கிறது. ஆக்டோபஸ் போன்ற கடல்வாழ் பிராணிகளின் குரல்கள் யார் காதுகளிலும் ஏறுவதில்லை. அப்படியே அதன் குரலைக் கேட்கும் வாய்ப்புகள் இருந்தாலும் மனிதர்கள் அதை மதிக்க மாட்டார்கள் என்கிறார். நம்முடைய உலகம் வெவ்வேறு உயிரினங்களின் குரல் தொகுப்புதான். நம்முடைய குரல் எப்படி கேட்கப்பட வேண்டியது என்று நினைக்கிறோமோ அப்படித்தான் மற்றவையும் என்கிறார்.

நன்றி
தி இந்து

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Dec 22, 2017 9:00 pm

புறக்கணிக்கப்பட்ட மலைப் பகுதி

இதே போல விநோதமான ஒரு காட்சி விளக்கம் பெங்களூரு நகரில் செப்டம்பர் மாதம் நடந்த அறிவியல் பாதுகாப்பு மாணவர் மாநாட்டிலும் நடந்தது. அங்கே பேசியவர் மது ராம்நாத். அவர் நூலாசிரியர் மற்றும் ஆய்வாளர். பஸ்தார் பகுதியில் ‘துர்வா’ என்ற பழங்குடி சமூகத்தவருடன் பல ஆண்டுகளாக வாழ்ந்தபோது நடந்த சம்பவங்களையும் கற்ற பாடங்களையும் ராம்நாத் விவரித்தார். பாதுகாப்புப் படையினருக்கும் ஆயுதமேந்திய தீவிரவாதிகளுக்கும் இடையில் மோதல்கள் நடக்கும் இடங்களில் இயற்கைச் சூழலைக் காப்பது என்ற திட்டம் எப்படிப்பட்ட நிலையை ஏற்படுத்தும் என்பதை அவர் விவரித்தார்.

கிழக்குத் தொடர்ச்சி மலைப் பகுதியை அறிவியலாளர்களும், சூழல் பாதுகாவலர்களும் அடியோடு புறக்கணித்துவிட்டதைச் சுட்டிக்காட்டி அவர் வருத்தம் தெரிவித்தார். கிழக்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பல்லுயிர்ப் பெருக்கமும் பழங்குடிகளின் வாழ்க்கைமுறையும் மிகவும் செறிவானது என்று குறிப்பிட்டார்.

கிழக்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் வாழ்பவர்களுக்காகக் குரல்கொடுத்த அவர் உரிய மரியாதையும் அங்கீகாரமும் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

திறன் இல்லாதவர் யார்?

தென்னாப்பிரிக்க நாடாளுமன்றத்திலும் பெங்களூரு அறிவியல் மாநாட்டிலும் இப்படி வித்தியாசமான குரல்கள் எழுந்தது மிகவும் முக்கியமானது. உயிரினங்கள் வாழ்வதற்காக எத்தகைய திறன்களைப் பெற்றிருக்கின்றன, மாறும் சூழல்களுக்கேற்ப அந்தத் திறன்களை எப்படிப் பயன்படுத்துகின்றன அல்லது புதிய திறன்களை எப்படிப் பெறுகின்றன என்பது குறித்துப் பல கேள்விகளை இவை எழுப்புகின்றன. ‘இந்தியாவில் திறனே இல்லாத வேலைக்காரர் என்றால் அது ஏர் உழவனும், ஓரளவுக்குத் திறமை படைத்தவர் என்றால் தச்சுத் தொழிலாளியும்தான்’ என்று சமீபத்தில் ஒரு பொருளாதார அறிஞர் கட்டுரையில் எழுதியிருந்தார். திறமை, அறிவு, வாழ்திறன் என்பவை வெவ்வேறு பொருள்களைக் கொண்டவை. ஏர் உழவனுக்குத் திறன் மிகமிகக் குறைவு என்று குறிப்பிட்டதன் மூலம் அவருக்கு எந்த அளவுக்கு உலகைப் பற்றிய புரிதல் இருக்கிறது என்பது வெட்டவெளிச்சமாக்கிவிட்டார்!

கடலுக்கடியில் தான் பார்த்த ஆக்டோபஸின் செயல்களிலிருந்து கிரெய்க் ஃபோஸ்டர் பலவற்றைக் கற்றுக்கொண்டார். பழங்குடிகளுடன் வாழ்ந்ததன் மூலம் அவர்களுடைய அறிவையும் திறனையும் நேரில் தெரிந்துகொண்டார் ராம்நாத். இப்போதுள்ள வாழ்திறனுக்கு மாற்று ஒன்றைக் கண்டுபிடிக்க வேண்டும் என்றால், இவர்களுடைய அனுபவங்களைப் போல நிறைய நமக்குத் தேவைப்படும். இவை முழுமையான, மரியாதைக்குரிய, தொடர்ந்து வாழ்வதற்குரிய திறனை எதிர்காலத்துக்கு நமக்கு வழங்கக் கூடியவை. இவற்றை நாம் புறக்கணித்தால் நமக்கு நாமே தீங்கை வரவழைத்துக் கொண்டவர்களாவோம்!

தமிழில்: சாரி

©️: ‘தி இந்து’ ஆங்கிலம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக