புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விவாகம் ஏன் விவகாரத்தாகிறது? Poll_c10விவாகம் ஏன் விவகாரத்தாகிறது? Poll_m10விவாகம் ஏன் விவகாரத்தாகிறது? Poll_c10 
21 Posts - 84%
heezulia
விவாகம் ஏன் விவகாரத்தாகிறது? Poll_c10விவாகம் ஏன் விவகாரத்தாகிறது? Poll_m10விவாகம் ஏன் விவகாரத்தாகிறது? Poll_c10 
2 Posts - 8%
viyasan
விவாகம் ஏன் விவகாரத்தாகிறது? Poll_c10விவாகம் ஏன் விவகாரத்தாகிறது? Poll_m10விவாகம் ஏன் விவகாரத்தாகிறது? Poll_c10 
1 Post - 4%
வேல்முருகன் காசி
விவாகம் ஏன் விவகாரத்தாகிறது? Poll_c10விவாகம் ஏன் விவகாரத்தாகிறது? Poll_m10விவாகம் ஏன் விவகாரத்தாகிறது? Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விவாகம் ஏன் விவகாரத்தாகிறது? Poll_c10விவாகம் ஏன் விவகாரத்தாகிறது? Poll_m10விவாகம் ஏன் விவகாரத்தாகிறது? Poll_c10 
213 Posts - 42%
heezulia
விவாகம் ஏன் விவகாரத்தாகிறது? Poll_c10விவாகம் ஏன் விவகாரத்தாகிறது? Poll_m10விவாகம் ஏன் விவகாரத்தாகிறது? Poll_c10 
199 Posts - 39%
mohamed nizamudeen
விவாகம் ஏன் விவகாரத்தாகிறது? Poll_c10விவாகம் ஏன் விவகாரத்தாகிறது? Poll_m10விவாகம் ஏன் விவகாரத்தாகிறது? Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
விவாகம் ஏன் விவகாரத்தாகிறது? Poll_c10விவாகம் ஏன் விவகாரத்தாகிறது? Poll_m10விவாகம் ஏன் விவகாரத்தாகிறது? Poll_c10 
21 Posts - 4%
prajai
விவாகம் ஏன் விவகாரத்தாகிறது? Poll_c10விவாகம் ஏன் விவகாரத்தாகிறது? Poll_m10விவாகம் ஏன் விவகாரத்தாகிறது? Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
விவாகம் ஏன் விவகாரத்தாகிறது? Poll_c10விவாகம் ஏன் விவகாரத்தாகிறது? Poll_m10விவாகம் ஏன் விவகாரத்தாகிறது? Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
விவாகம் ஏன் விவகாரத்தாகிறது? Poll_c10விவாகம் ஏன் விவகாரத்தாகிறது? Poll_m10விவாகம் ஏன் விவகாரத்தாகிறது? Poll_c10 
8 Posts - 2%
Guna.D
விவாகம் ஏன் விவகாரத்தாகிறது? Poll_c10விவாகம் ஏன் விவகாரத்தாகிறது? Poll_m10விவாகம் ஏன் விவகாரத்தாகிறது? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
விவாகம் ஏன் விவகாரத்தாகிறது? Poll_c10விவாகம் ஏன் விவகாரத்தாகிறது? Poll_m10விவாகம் ஏன் விவகாரத்தாகிறது? Poll_c10 
7 Posts - 1%
mruthun
விவாகம் ஏன் விவகாரத்தாகிறது? Poll_c10விவாகம் ஏன் விவகாரத்தாகிறது? Poll_m10விவாகம் ஏன் விவகாரத்தாகிறது? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விவாகம் ஏன் விவகாரத்தாகிறது?


   
   
ksikkuh
ksikkuh
பண்பாளர்

பதிவுகள் : 196
இணைந்தது : 30/11/2017

Postksikkuh Thu Dec 07, 2017 11:51 am



சமீப ஆண்டுகளில், அதிகரித்து வரும் விவாகரத்து வழக்குகள், சமூக பிரச்னையாக மாறிக் கொண்டிருக்கிறது. ‘கணவன் – மனைவிக்குள் ஒத்துவரலைன்னா பிரிந்துவிட வேண்டியது தான். அதானே இருவரின் வாழ்க்கைக்கும் நல்லது’ என்ற மனோபாவமும், இளம் வயதினரிடையே உள்ளது. பரஸ்பரம் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுப்பது பிரச்னைகளை பேசித் தீர்த்துக் கொள்வது என்பதற்கெல்லாம் நேரமும் இல்லை; பொறுமையும் இல்லை.

கல்வி, பொருளாதாரம், சமூக அந்தஸ்து போன்றவற்றில், பெண்கள் வேகமாக முன்னேறி வரும் நிலையில், குடும்ப பொறுப்பு என்பது, அவர்களுக்கு கூடுதல் சுமையாகி விட்டது. குடும்ப பொறுப்பு பெண்களுடையது தான் என்ற மனநிலையில் காலங்காலமாக இருக்கும் ஆண்களால் கல்வி, பொருளாதாரத்தில் பெண்கள் முன்னேறுவதை, பல நேரங்களில் ஆரோக்கியமான மனோநிலையில் அணுக முடிவதில்லை. அதனால் இரு பக்கமும் யார் விட்டுக் கொடுப்பது என்ற போட்டி மனப்பான்மை வளர்ந்து, சிறிய முரண்பாடுகள் வந்தாலும், குடும்ப நல நீதிமன்றங்கள் தான் தீர்வு என்று, நம்ப ஆரம்பித்து விடுகின்றனர். மனைவியிடமிருந்து விவாகரத்து வேண்டும் என்று, கோர்ட் படியேறும் ஆண்களின் எண்ணிக்கை கணிசமாக இருந்தாலும், பெண்கள் தங்கள் கணவனிடமிருந்து கேட்கும் விவாகரத்து தான் அதிகமாக கவனிக்கப்படுகிறது. காரணம், பெண்களின் சமூக மதிப்பு, அவர்களின் கல்வி, திறமை, அரசுப் பணி, உடை ஆகியவற்றில் இல்லை. அவர்களின் திருமண வாழ்க்கையிலேயே உள்ளது என்பது, நாம் தொன்றுதொட்டு வளர்த்துக் கொண்ட நம்பிக்கை. பெண்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று, எழுதப்படாத விதிகள் இருக்கிறதோ, அப்படித்தான் அவள் நடக்க வேண்டும்.
அதில் சிறிய மாற்றம் இருப்பதாக, ஆணின் கண்களுக்குத் தெரிந்தாலும் உடனடியாக, ‘என் மனைவியின் நடத்தை சரியில்லை’ என்று தான் ஆண்கள் விவாகரத்திற்கான காரணமாக சொல்கின்றனர். தங்களுக்கு ஒத்து வராத திருமண பந்தத்தில் இருந்து விடுபட, பெண்கள் பயன்படுத்தும் ஆயுதமே குடும்ப வன்முறை, ஆண்மையின்மை, பிற பெண்ணுடன் தொடர்பு என்றே இருக்கிறது.
சரியான காரணங்கள் இல்லை விவாகரத்து வழக்குகள் என்பது சமூக, பொருளாதார நிலையில் முன்னேறியவர்களிடம் மட்டும் இல்லை. எல்லா தரப்பு இளம் தம்பதியரிடமும், இன்றைய காலகட்டத்தில் விவாகரத்து வழக்குகள் அதிகரித்துள்ளன. பெரும்பாலான விவாகரத்து வழக்குகள் இளம் பெண்களால், சரியான காரணங்கள் இல்லாமலே தொடுக்கப்படுகின்றன. இது திடீரென்று முளைத்த பிரச்னைஇல்லை. கொஞ்சம் கொஞ்சமாய் வேர்விட்டு பரவி வரும் அபாயம். முன்பெல்லாம், இரவில் கணவன் – மனைவிக்குள் வாக்குவாதம் ஏற்பட்டால், அது கொஞ்ச நேரம் நீடித்து, அழுகையாகி, ஊடலுடன் கூடிய கூடல் என்று, சமாதானம் ஆகிவிடும். காலையில் அப்படி ஒரு சண்டை நடந்ததற்கான சுவடேயில்லாமல், இயல்பாய், அவரவர் வேலையை கவனிப்பர். ஆனால், இப்போது நள்ளிரவில் பெண் உடனேயே, தன் பெற்றோருக்கு மொபைல் போனில் செய்தி சொல்ல, அவர்களும் உடனேயே கிளம்பிவந்து, சின்ன பிரச்னையை பெரிதுபடுத்தி, பிணக்கை பரம்பரை விரோதமாய் மாற்றி விடுகின்றனர். கணவன் – மனைவிக்குள் எப்போது ஒத்துப் போகும், எப்போது முறுக்கிக் கொள்வர் என்பதெல்லாம், மூன்றாம் மனிதர்களான வீட்டு பெரியவர்களுக்கு கூட தெரிய வாய்ப்பில்லை. தன் பெண்ணின் கணவனின் பர்சனல் விஷயங்கள் தெரியவும் வாய்ப்பில்லை. ‘தலையிடக் கூடாது என்று தடை செய்வதை விட, தெரியாது என்று ஒதுங்கிக் கொள்ளுங்கள்…’ என்று கூறுவது தான், இப்போதைய பெற்றோருக்கு நம் அறிவுரை. மகளை கொடுமைப்படுத்துகின்றனர், குடித்துவிட்டு வீட்டை கவனிப்பதில்லை. வேறு பெண்ணிடம் பழக்கம் இருக்கிறது போன்ற கடுமையான விஷயங்களில் தலையிடுவதை ஒத்துக் கொள்ளலாம்.
தன் மகளின் பிறந்த நாள் அன்று வெளியில் கூட்டிப் போகவில்லை என்ற புகாரையெல்லாம் கையில் எடுத்து, அவர்களின் இருவருக்குள்ளும் புகுந்தால், அது தன் மகளின் வாழ்வை கெடுப்பதற்கு சமம். சின்ன சின்ன விஷயங்களாய் ஆனாலும், நம் பக்கம், நம் பெற்றோர் இருக்கின்றனர் என்ற தவறான நம்பிக்கையை ஏற்படுத்திவிடக் கூடாது. வாழ்க்கை என்கிற பூவை, நெருப்பு பக்கத்தில் வைத்துவிட்டு, கருகுதேன்னு புலம்புவதை விட்டுவிட்டு அழகாய் மலரட்டும்ன்னு காத்திருந்து அழகாய் சூடி அழகு பார்ப்பதுதானே சிறப்பு.
குறை கூறுவதை தவிர்க்கலாமே கணவன் – மனைவி ஒரே வட்டத்துக்குள் தான் இருக்கணும். அந்த வட்டத்தினுள் யார் பெரியவங்க என்கிற கணக்கு வரக் கூடாது. வேறு யாரையும், அது பெற்றோராய் இருந்தாலும் உள்ளே வர அனுமதிக்கக் கூடாது; எவ்வளவு
பாசம், அன்பு என்பது வெளியில் யாருக்கும் தெரியாது. பார்த்தால் பாசம் தெரியலாம். எவ்வளவு என்பது எப்படி தெரியும்? அதுபோல் தான் சண்டையென தெரியும், எதனால்… ஏன்… எப்படி… என்பது இருவருக்கு மட்டுமே தெரியும். அந்த சண்டைக்கான தீர்வும் இருவருக்கு
மட்டுமே தெரிந்திருக்கும். தன் கணவனிடம் எதிர்பார்க்கும் அன்பையும், பாசத்தையும், பாதுகாப்பையும் முதலில் தான் தருவதற்கு தயாராக இருக்கணும். இது ஆண்களை விட, பெண்களுக்கு கை வந்தக் கலை. ஒருத்தரை ஒருத்தர் குறை கூறுவதை விடுத்து,
உங்களிடமும் சில தவறுகள் இருக்கிறது என்பதை புரிந்துக் கொள்ளுங்கள். அதை திருத்துவதற்கு முயற்சி செய்தால், இணையும் திருந்தி விடுவர்; மன்னிக்கும் பக்குவம் வேண்டும். இத்தகைய மன்னிக்கும் பண்புடன் திருமண வாழ்க்கையை நடத்தினால், வாழ்வில் எப்போதும் மகிழ்ச்சி பொங்கும்.
பெண்கள் சாதிக்காத துறையில்லை, செய்யாத வேலையில்லை, மண்ணுலகம், விண்ணுலகம் என, வெற்றிக் கொடி கட்டிக் கொண்டிருக்கின்றனர். அப்படிப்பட்ட சாதனை பெண்கள், தன்
கணவனிடம் மட்டும், இப்படி நடந்துக் கொள்வதற்கு காரண காரியங்களை ஆராய்ந்தால், பல கேள்விகளுக்கு விடைகள் தெளிவாகும். ஒரு பெண் நினைத்தால், தங்கள் இருவருக்குள்ளும் பேசி சரி செய்துக் கொள்ள முடியும். இப்படி வழக்கு, வக்கீல் என்று அலைய தேவையிருக்காது. தான் படித்த படிப்பு, சம்பாதிக்கும் திறமை இதையெல்லாம் ரொம்ப பெரிதாக எண்ணி, குடும்பம் உறவுகள், பிள்ளைகள் என, தன் வட்டத்தை துச்சமாக நினைக்கும் குணம் பெண்களிடம் வளர ஆரம்பித்திருப்பது, ஆரோக்கிய மானது அல்ல. இப்படி தப்பாகவே வாழ்க்கையை ஆரம்பிக்கும் பெண்களை ஆரம்பத்திலேயே கண்டிக்காத, கண்டுக் கொள்ளாத பெற்றோரும் இந்த மாபெரும் நிலைக்கு காரணமே, ஒரு குடும்பத்தின் நல்லது. அனைவருடனும் கைகோர்த்து…
நான்கு பேருக்கு தெரிந்து பெருமையடைவது பெண்களால் தான். அதே குடும்பத்தின் குறைகள் வெளியில் தெரியாமல், அதை சரிபடுத்தும் திறமையிருப்பதும், பெண்களுக்கு தான். இதன் உண்மையான அர்த்தத்தை புரிந்துக் கொண்டு, பெண்கள் நடந்துக் கொண்டாலே, குடும்ப பிரச்னைகள் நான்கு சுவருக்குள்ளேயே தீர்ந்து விடும்.இளம் பெண்கள் ஒன்றை மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும். பெண் விடுதலை, பெண் சுதந்திரம் என்பது ஆணை வெற்றிக் கொண்டு அலட்சியப்படுத்துவதோ, அற்ப காரணங்களுக்காக காவல்துறையில் புகார் கொடுப்பதோ, பெரியவர்களை பராமரிக்கும் கடமையில் இருந்து விலகி நிற்பதோ இல்லை. சுயமாய் சிந்தித்து நம்மையும், நம்மை சார்ந்திருப்போரையும் பாதிக்காமல், நாமே நமக்கு ஏற்படுத்திக் கொள்ளும் கூட்டில் வாழ்வது. கூண்டில் சிறைபட்ட கிளியாக இல்லாமல் கூட்டில் வாழும் பறவையாக, அனைவருடனும் கை கோர்த்து வாழ்வோம் இனிதாய்!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 20, 2017 8:53 pm

நிஜம் தான், பெற்றவர்களே ஆனாலும் கணவன் மனைவிக்கு நடுவில் வரவே கூடாது என்கிற கொள்கை வேண்டும், அது பையனை பெற்றவர்கள் ஆகட்டும் பெண்ணை பெற்றவர்கள் ஆகட்டும். அப்போது தான் தம்பதிகளுக்குள் ஏற்படும் சண்டை சச்சரவை அவர்களே தீர்த்துக் கொள்வார்கள், தம்பதிகளுக்குள் மான அவமானங்கள் கிடையாது என்கிற படிப்பினையை புரிந்து கொள்வார்கள்.

பெரியவர்கள் தலை இட்டால் அவ்வளவுதான் ........புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக