புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பள்ளி தலம் அனைத்தும் வேலு நாச்சியார்: இயக்குநர் ஸ்ரீராம் சர்மாவின் புதிய முயற்சி  I_vote_lcapபள்ளி தலம் அனைத்தும் வேலு நாச்சியார்: இயக்குநர் ஸ்ரீராம் சர்மாவின் புதிய முயற்சி  I_voting_barபள்ளி தலம் அனைத்தும் வேலு நாச்சியார்: இயக்குநர் ஸ்ரீராம் சர்மாவின் புதிய முயற்சி  I_vote_rcap 
5 Posts - 63%
heezulia
பள்ளி தலம் அனைத்தும் வேலு நாச்சியார்: இயக்குநர் ஸ்ரீராம் சர்மாவின் புதிய முயற்சி  I_vote_lcapபள்ளி தலம் அனைத்தும் வேலு நாச்சியார்: இயக்குநர் ஸ்ரீராம் சர்மாவின் புதிய முயற்சி  I_voting_barபள்ளி தலம் அனைத்தும் வேலு நாச்சியார்: இயக்குநர் ஸ்ரீராம் சர்மாவின் புதிய முயற்சி  I_vote_rcap 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
பள்ளி தலம் அனைத்தும் வேலு நாச்சியார்: இயக்குநர் ஸ்ரீராம் சர்மாவின் புதிய முயற்சி  I_vote_lcapபள்ளி தலம் அனைத்தும் வேலு நாச்சியார்: இயக்குநர் ஸ்ரீராம் சர்மாவின் புதிய முயற்சி  I_voting_barபள்ளி தலம் அனைத்தும் வேலு நாச்சியார்: இயக்குநர் ஸ்ரீராம் சர்மாவின் புதிய முயற்சி  I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பள்ளி தலம் அனைத்தும் வேலு நாச்சியார்: இயக்குநர் ஸ்ரீராம் சர்மாவின் புதிய முயற்சி


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Dec 21, 2017 7:11 pm

பள்ளி தலம் அனைத்தும் வேலு நாச்சியார்: இயக்குநர் ஸ்ரீராம் சர்மாவின் புதிய முயற்சி  UDm0RmKTQd6sgufSQdsr+velu1JPG

பள்ளி தலம் அனைத்தும் வேலு நாச்சியார்: இயக்குநர் ஸ்ரீராம் சர்மாவின் புதிய முயற்சி  6iEXIkVJSfuhAjigvBqj+velu4JPG



வே.ஸ்ரீராம் சர்மா வடிவமைத்து இயக்கிய வீரமங்கை வேலு நாச்சியார் நாட்டிய நாடகத்தை தனது திரைக்கதை வசனத்தில் திரைப்படமாக எடுக்கிறார் வைகோ. இந்நிலையில் பள்ளி மாணவர்களைக் கொண்டே பள்ளி மாணவர்கள் மத்தியில் வேலுநாச்சியார் வரலாற்றை விதைக்கப் புறப்பட்டிருக்கிறார் ஸ்ரீராம் சர்மா. அதற்கு இவர் சூட்டியிருக்கும் பெயர் ‘பள்ளித் தலம் அனைத்தும் வேலு நாச்சியார்!’

இப்போது பல பள்ளிகளின் ஆண்டு விழாக்களில் குத்துப்பாட்டுக்கு ஆடுவதும், நமது மண்ணுக்கு சம்பந்தம் இல்லாத அந்நிய நாடகங்களை அரங்கேற்றுவதுமே நிகழ்கிறது. ஆண்டு விழா நிகழ்ச்சிகளுக்கு இவ்வளவு மெனக்கெடும் மாணவர்கள், விழா முடிந்தவுடன் அதனை மறந்துவிடுகிறார்கள். காரணம், அவர்கள் பங்கெடுத்துக் கொண்ட விஷயம் இந்த மண்ணுக்குச் சம்பந்த மில்லாத ஏதோ ஒன்று என்பதுதான்.

இதை கடுமையாகச் சாடும் ஸ்ரீராம் சர்மா, “மாணவப் பருவம் என்பது மிகவும் செழிப்பான அற்புதமான வரம். அந்தப் பருவத்தில் நாம் எதை அவனது மனதில் விதைக்கிறோமோ அதுதான் அவனது எதிர்கால வாழ்க்கையில் வீரியமாய் முளைக்கும்.

ஆபாசத்தை நாமே அங்கீகரிக்கிறோம்

சினிமாவும் தொலைக்காட்சியும் பெண் என்பவள் வெறும் போகப் பொருள் மட்டுமே என்ற விஷ வித்தை நம் பிள்ளைகளின் ஆழ்மனத்தில் விதைத்து வைத்திருக்கின்றன. பள்ளி ஆண்டு விழாக்களில், ‘ஏம் பேரு மீனாக்குமாரி’ என்று நம் பிள்ளைகள் அருவருக்கும் உடல் அசைவுகளுடன் நடனம் ஆடுகிறார்கள். எதிரில் ஆசிரியர்களோடு அமர்ந்து நாமும் இதை கைதட்டி ரசிக்கிறோம். அப்படியானால், அவர்களின் செய்கையை நாம் அங்கீகரிக்கிறோம் என்றுதானே அர்த்தம். இதனால் நம் பிள்ளைகளுக்கு சமூக அச்சம் போய்விடுகிறது. அதனால், ஒரு மாணவன் துளிர்க்கும்போதே பெண்ணை உடமையாக்கப் பார்க்கிறான். இதனால்தான் சிறு வயதுக் குற்றங்கள் அடிக்கடி நடக்கின்றன. இதற்கு அடிப்போட்டுக் கொடுத் தது யார் நாம்தானே?” என்று ஆவேசப் படுகிறார்.
நன்றி
தி இந்து

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Dec 21, 2017 7:13 pm

பள்ளி தலம் அனைத்தும் வேலு நாச்சியார்: இயக்குநர் ஸ்ரீராம் சர்மாவின் புதிய முயற்சி  SVva6cyESfwsrM3X7w7Q+velu2jpg
பள்ளி தலம் அனைத்தும் வேலு நாச்சியார்: இயக்குநர் ஸ்ரீராம் சர்மாவின் புதிய முயற்சி  LQ7TxcUVThS0vKOIWLp3+velu6jpg

இதுதொடர்பாக நம்மிடம் இன்னும் சில கருத்துகளைப் பகிர்ந்துகொண்ட சர்மா, “பள்ளிகளும் பெற்றோரும் நினைத்தால் இந்த அவலங்களை எல் லாம் துடைத்தெறிய முடியும். அதற்கு முதல் வேலையாக குத்தாட்டங்களை பள்ளிகளை விட்டுத் துரத்த வேண்டும். அடுத்தது, நமது மண்ணுக்கு மட்டுமே சொந்தமான வீர வரலாறுகளை மாணவர்கள் மனதில் விதைக்க வேண்டும். ’பள்ளித் தலம் அனைத்தும் வேலுநாச்சியார்’ என்ற எங்களது கோஷம் அதைத்தான் செய்யப் போகிறது. வேலு நாச்சியார் மட்டுமல்ல.. காலத்தை வென்ற நம் மண்ணின் காவிய தலைவர்கள் பலரையும் இப்படிப் பள்ளிகளுக்குள் கொண்டு செல்வோம்.

பொன்னேரியில் உள்ள வேலம் மாள் பள்ளியில் இந்த நாடகத்தில் நடிப்பதற்காக 100 மாணவ - மாணவி யரைத் தேர்வு செய்தோம். நாடகத்தில் அவர்களை நடிக்க வைப்பது மட்டுமல்லாது அவர்களுக்கு ‘தியேட்டர் சயின்ஸை’ முழுமையாக கற்றுத் தர வும் முடிவெடுத்தோம்.

முதலில் அவர்களுக்கு, மேடை ஒழுக்கம், ஆக்‌ஷன், ரியாக்‌ஷன், டயலாக் ரீடிங், லைட்டிங் உள்ளிட்ட தொழில்நுட்ப விஷயங்கள் அத்தனை யும் சொல்லிக் கொடுத்தோம். அதன் பிறகு, உண்மையான ஸ்கிரிப்டைக் கொடுத்து நடிக்கச் சொன்னோம்.

எங்களது வேலு நாச்சியார் நாட்டிய நாடகத்தில் அந்தந்த கதாபாத்திரத்தில் நடிப்பவர்களைக் கொண்டே மாணவர்களுக்கும் நடிக்கச் சொல்லிக் கொடுத்தோம். இதற்காக, நாடகத்தில் நடிக்க ஒரு நாளைக்கு என்ன சம்பளமோ அதை கலைஞர்களுக்குத் தந்தோம்.

நாங்கள் எதிர்பார்த்ததைவிடவும் மாணவர்கள் அற்புதமாக நடித்தார்கள். வேலு நாச்சியார் நாட்டிய நாடகத்தைப் பள்ளிக்குள் கொண்டுவந்த தன் மூலம் நமது மண்ணின் பெருமையை, நாட்டுக்காக உயிரையும் தரத் துணிந்த பெண்களின் மேன்மையை, வேலு நாச்சியாருக்கு மருது சகோதரர்கள் உள்ளிட்ட ஆண் கள் பக்கபலமாக இருந்த உண்மையை, இவை எல்லாவற்றுக்கும் மேலாக தமிழை பள்ளி மாணவர்களின் ஆழ்மனத்தில் நாங்கள் பதிய வைத்திருக்கிறோம்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Dec 21, 2017 7:16 pm

பள்ளி தலம் அனைத்தும் வேலு நாச்சியார்: இயக்குநர் ஸ்ரீராம் சர்மாவின் புதிய முயற்சி  HPQxV6O4RHitCQoZc621+velu3jpg

பள்ளி தலம் அனைத்தும் வேலு நாச்சியார்: இயக்குநர் ஸ்ரீராம் சர்மாவின் புதிய முயற்சி  Ceq82ByRYGCpRDCKPGlU+velu5jpg

பள்ளி தலம் அனைத்தும் வேலு நாச்சியார்: இயக்குநர் ஸ்ரீராம் சர்மாவின் புதிய முயற்சி  HlgQ0H4RxiL1tR8uAEuQ+velu7jpg

50 பள்ளிகளில்..

இந்த நாடகத்தில் நடித்த மாணவர்களில் சிலரது நடவடிக்கைகளில் நல்ல மாற்றம் தெரிவதாக பள்ளியில் இருந்து இப்போது பின்னூட்டம் தருகிறார்கள். மாணவர்கள் மத்தி யில் நாங்கள் உருவாக்க நினைக்கும் மாற்றமும் இதுதான். சென்னையைத் தொடர்ந்து, மதுரை, தேனியில் உள்ள வேலம்மாள் குழுமத்தின் பள்ளிகளி லும் இந்த நாடகத்தை அந்தப் பள்ளிகளின் மாணவர்களைக் கொண்டே நடத்தவிருக்கிறோம்.

தமிழகம் முழுவதும் 50 பள்ளிகளில் இப்படி இந்த நாடகத்தை நடத்தத் திட்டம். அப்படி நடத்திவிட்டால் அடுத்த ஐந்தாண்டுகளில் வேலு நாச்சியார் சரிதம் உலக அளவில் எடுத்துச் செல்லப்பட்டுவிடும்.

மண்ணையும் மக்களையும் நேசிக் கும் தரமான மாணவர்களை வார்த்து எடுத்த பெருமையும் எங்களுக்குக் கிடைக்கும்” என்றார்.

நன்றி
தி இந்து

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக