ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

’’என் அம்மா, அப்பாவுக்கு நான் இப்போ எப்படி இருப்பேனு கூட தெரியாது..!’’ - 'அருவி' எமிலி

2 posters

Go down

’’என் அம்மா, அப்பாவுக்கு நான் இப்போ எப்படி இருப்பேனு கூட தெரியாது..!’’ - 'அருவி' எமிலி Empty ’’என் அம்மா, அப்பாவுக்கு நான் இப்போ எப்படி இருப்பேனு கூட தெரியாது..!’’ - 'அருவி' எமிலி

Post by ayyasamy ram Tue Dec 19, 2017 8:22 am

’’என் அம்மா, அப்பாவுக்கு நான் இப்போ எப்படி இருப்பேனு கூட தெரியாது..!’’ - 'அருவி' எமிலி 03_17231
-
கடந்த வெள்ளியன்று வெளியாகி பல பாஸிட்டிவ் விமர்சனங்களைப்
பெற்றிருக்கும் திரைப்படம் 'அருவி'. அறிமுக இயக்குநர் அருண்
எடுத்திருக்கும் இந்தப் படத்தில் திருநங்கை கதாபாத்திரத்தில்
எமிலியாக நடித்திருப்பவர் நடிகை அஞ்சலி வரதன்.

இவருக்கு முதல் படமான 'அருவி' வாய்ப்பு எப்படி வந்தது என்பது
பற்றி தெரிந்துகொள்ள அஞ்சலியிடம் பேசினோம்.

'இந்தப் படத்தில் அருவியை அவர்கள் வீட்டில் இருப்பவர்
புறக்கணிப்பார்கள். அப்போது, அருவி எப்படி வீட்டிலிருந்து வெளியே
வந்து கஷ்டப்படுவாரோ, அதே மாதிரி நான் திருநங்கையாக
இருந்ததால் வீட்டிலிருந்து வெளியே வந்து பட்ட கஷ்டங்களும், அ
வமானங்களும் அதிகம்'' என்று பேச ஆரம்பிக்கிறார் அஞ்சலி.

'' என்னுடைய சொந்த ஊர் பாண்டிச்சேரி. சின்ன வயதில் அப்பா,
அம்மா குடும்பத்துடன் சென்னைக்கு வந்து விட்டனர். என்னுடன்
பிறந்தவர்கள் இரண்டு அண்ணன், அக்கா, நான்தான் வீட்டில்
கடைக்குட்டி.

என்னுடைய பத்து வயதின் போதே எனக்குள்ளே ஹார்மோன்
சேன்ஜ் ஆகி, திருநங்கையாக மாறப்பெற்றேன். அப்போது
என்னுடன் ஸ்கூலில் படித்த பசங்க எல்லாம் என்னை மிகவும்
கிண்டல் செய்வார்கள். எனக்கு அப்போது அழுகையாக வரும்.
வீட்டில் இருந்த என் பெற்றோர்கள், உடன் பிறந்தவர்கள்
எல்லோரும் என்னை தீண்டத்தகாத ஒருவராய் பார்க்க
ஆரம்பித்தனர்.

நான் சாப்பிட்ட தட்டு, படுக்கை எல்லாம் தனியாக ஓரத்தில்தான்
இருக்கும். அதை அவர்கள் தொட மாட்டார்கள். அவர்களுடைய
பொருள்கள் எதையும் தொடவும் விட மாட்டார்கள். வீட்டில்
இருந்தவர்களை என்னைப் புரிந்துகொள்ளாத காரணத்தால் எ
ன் 16 வயதில் வீட்டை விட்டு வெளியேறினேன்.
-
-----------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82783
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

’’என் அம்மா, அப்பாவுக்கு நான் இப்போ எப்படி இருப்பேனு கூட தெரியாது..!’’ - 'அருவி' எமிலி Empty Re: ’’என் அம்மா, அப்பாவுக்கு நான் இப்போ எப்படி இருப்பேனு கூட தெரியாது..!’’ - 'அருவி' எமிலி

Post by ayyasamy ram Tue Dec 19, 2017 8:24 am



அப்போது சென்னையிலிருந்த திருநங்கைகள் சிலரிடம் நட்பானேன்.
மும்பையில் சில நாள்களும் இருந்தேன். அப்போது வாழ்க்கை
இப்படியே போயிட்டே இருக்குனு யோசித்தேன். அப்போது ஒரு
என்.ஜி.ஓ-வில் பரதநாட்டியம் சொல்லித்தருவதாகச் சொன்னார்கள்.

உடனே, அதில் சேர்ந்தேன். பொன்னினு ஒரு திருநங்கை அங்கே
இருந்தாங்க. அவங்கதான் எனக்கு குரு. அவர்களிடம்தான்
பரதநாட்டியம் கத்துக்கிட்டேன். பொன்னி, ''சென்னையில் ஒரு
பரதநாட்டியம் கிளாஸ் ஆரம்பிக்கணும்''னு சொன்னாங்க.

சரி பண்ணலாம்னு திருநங்கை மற்றும் குடிசை வாழ் பகுதியில்
வாழும் குழந்தைகளுக்காக பரதநாட்டியம் கிளாஸ் தொடங்கினோம்.
தற்போது நாற்பது குழந்தைகள் பரதநாட்டியம் கத்துக்கிட்டு
இருக்காங்க. அப்போது, 'அருவி' படத்தில் நடிப்பதற்காக ஆடிசன்
நடந்தது.

அதில் கலந்துகொள்ள தூத்துக்குடியில் இருந்து ஒரு திருநங்கை
வந்திருந்தார்கள். அவர்களை ஆடிசனுக்காக நான்தான் அழைத்துப்
போனேன். ஏன்னா, அவர்களுக்குச் சென்னையில் எந்த இடமும்
தெரியாது.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82783
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

’’என் அம்மா, அப்பாவுக்கு நான் இப்போ எப்படி இருப்பேனு கூட தெரியாது..!’’ - 'அருவி' எமிலி Empty Re: ’’என் அம்மா, அப்பாவுக்கு நான் இப்போ எப்படி இருப்பேனு கூட தெரியாது..!’’ - 'அருவி' எமிலி

Post by ayyasamy ram Tue Dec 19, 2017 8:27 am

’’என் அம்மா, அப்பாவுக்கு நான் இப்போ எப்படி இருப்பேனு கூட தெரியாது..!’’ - 'அருவி' எமிலி Anjali_17175

ஆடிசன் போன இடத்தில் எனக்கும் சேர்த்து ஒரு சீன் கொடுத்தாங்க.
நாங்க ரெண்டு பேரும் நடித்தோம். அதன்பிறகு ரிசல்ட் எதுவும்
சொல்லவில்லை அதனால் கிளம்பி விட்டோம். அதன்பிறகு ஒரு
மாதம் கழித்து எனக்கு போன் வந்தது உங்களைப் படத்தில் நடிக்க
செலக்ட் செய்திருக்கிறோம் என்று,

அதற்குபிறகு ஒரு மூன்று மாதம் எப்படி நடிக்கணும்னு சொல்லி
பயிற்சி கொடுத்தாங்க. இது எல்லாமே மூன்றரை வருஷத்துக்கு
முன்பு நடந்தது. நடிக்கும் போது எங்களுக்கான பயிற்சி முறைப்படி
கொடுத்ததால் எந்த சீனும் நடிப்பதற்கு கஷ்டமாக தெரியவில்லை.

நான் அடிவாங்கும் சீனில், 'அண்ணா நல்லா அடிங்க அப்போதுதான்
தத்ரூபமாக இருக்கும்''னு  நானே சொன்னேன்

ஷூட்டிங் முடிந்து இரண்டரை வருஷத்துக்குப் பிறகுதான் படம்
ரிலீஸ் ஆகியிருக்கு. இத்தனை வருஷத்துக்குப் பிறகு படம்
ரிலீஸாகி நல்லா பேசப்படும் போது மகிழ்ச்சியாக உள்ளது.

படம் ரிலீஸ் ஆனதுக்குப் பிறகு தியேட்டரில் போய் படம் பார்த்தேன்.
அப்போது நிறையப் பேர் என்னைப் பார்த்து எமிலி கேரக்டர் நல்லா
செய்திருக்கீங்கனு பாராட்டினாங்க.

இது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. ஏன்னா, என் அம்மா
படம் பார்த்து இருப்பாங்களானு தெரியாது. அப்படியே
பார்த்திருந்தாலும் அவர்களுக்கு என்னை அடையாளம் தெரியுமானு
கூட தெரியவில்லை. சின்ன வயதிலேயே வீட்டிலிருந்து வெளியே
வந்துவிட்டதால் என்னை அவர்களுக்கு அடையாளம் கூட தெரியாது.

நான் எங்கே இருக்கேன் இப்போது என்ன செய்கிறேன் என்று
என்னைப் பெத்தவர்களுக்குத் தெரியாது. என் அப்பா இறந்துவிட்டார்
என்ற செய்திகூட எனக்கு யாரோ ஒருவர் மூலமாக சமீபத்தில்தான்
தெரியவந்தது.

முழுபடத்தையும் பார்க்கும் போது என்னையே அறியாமல்
க்ளைமாக்ஸ் சீனில் அழுதுவிட்டேன். அப்படியே புரட்டி எடுத்து
விட்டது. தியேட்டரை விட்டு வெளியே வரும் போது கனத்த
இதயத்துடன்தான் வந்தேன்.
-
-------------------------------------

திருநங்கை அஞ்சலி வரதன்
நன்றி- விகடன்


Last edited by ayyasamy ram on Tue Dec 19, 2017 11:10 am; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82783
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

’’என் அம்மா, அப்பாவுக்கு நான் இப்போ எப்படி இருப்பேனு கூட தெரியாது..!’’ - 'அருவி' எமிலி Empty Re: ’’என் அம்மா, அப்பாவுக்கு நான் இப்போ எப்படி இருப்பேனு கூட தெரியாது..!’’ - 'அருவி' எமிலி

Post by SK Tue Dec 19, 2017 10:08 am

பதிவு அருமை

அவர் கதையை கேட்டல் நமக்கே இதயம் வலிக்கிறது


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

’’என் அம்மா, அப்பாவுக்கு நான் இப்போ எப்படி இருப்பேனு கூட தெரியாது..!’’ - 'அருவி' எமிலி Empty Re: ’’என் அம்மா, அப்பாவுக்கு நான் இப்போ எப்படி இருப்பேனு கூட தெரியாது..!’’ - 'அருவி' எமிலி

Post by ayyasamy ram Tue Dec 19, 2017 11:14 am


’’என் அம்மா, அப்பாவுக்கு நான் இப்போ எப்படி இருப்பேனு கூட தெரியாது..!’’ - 'அருவி' எமிலி 14_17403
'அருவி' படத்தில் எமிலியாக வாழ்ந்த அஞ்சலி வரதன்.
மேலும் சொன்னது:
-
எனக்கு எல்லாமே திருநங்கை பொன்னிதான். அவர்களும்
படம்பார்த்து விட்டு என்னைப் பாராட்டினார்கள்.

தியேட்டரில் மக்கள் எல்லோரும் என்னுடன் செல்பி எல்லாம்
எடுத்துக்கொண்டார்கள். இது எல்லாம் எனக்கு வித்தியாசமான
அனுபவமாக இருந்தது. படத்தில் என்னுடைய கேரக்டர்
பார்த்துவிட்டு நிறைய திருநங்கைகள் போன் பண்ணி
வாழ்த்தினார்கள்.

ஏன்னா, என்னை மாதிரி ஒரு திருநங்கை முன்னேறினால்தான்
எனக்குப் பின்னால் வரும் எத்தனையோ திருநங்கைகளுக்கு
வாய்ப்புகள் கிடைக்கும்.

திருநங்கைகளுக்கு வேலை கிடைத்து விட்டால் போதும்
அவர்களே முன்னேறி விடுவார்கள். அரசாங்கம் அதை செய்யும்
அப்படிங்கிறதை விட இந்தச் சமூகம்தான் முதலில் அதற்கு
வழிவகுக்கணும்.

பத்து வருடங்களுக்கு முன்பு திருநங்கைகளைப் பார்த்த
பார்வைக்கும் இப்போது சமூகத்தில் இருக்கும் மக்கள் பார்க்கும்
பார்வைக்கும் நிறைய வித்தியாசங்கள் வந்திருக்கு.

இப்போதுதான் கொஞ்சம் எங்களை மதிக்க ஆரம்பித்து
இருக்கிறார்கள். ஆனால், இன்னும் அடுத்த படிக்கு நாங்கள்
எல்லோரும் செல்ல வேண்டும். சமூகத்துடன் ஒன்றிதான்
நாங்கள் இருக்கோம்.

நாங்கள் எல்லோரும் எங்கள் வாழ்க்கையில் எத்தனையோ
அவமானங்களைச் சந்தித்து இருக்கோம்'' என்றார் 'அருவி'
படத்தில் எமிலியாக வாழ்ந்த அஞ்சலி வரதன்.
-
------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82783
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

’’என் அம்மா, அப்பாவுக்கு நான் இப்போ எப்படி இருப்பேனு கூட தெரியாது..!’’ - 'அருவி' எமிலி Empty Re: ’’என் அம்மா, அப்பாவுக்கு நான் இப்போ எப்படி இருப்பேனு கூட தெரியாது..!’’ - 'அருவி' எமிலி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum