புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க
Page 9 of 12 •
Page 9 of 12 • 1, 2, 3 ... 8, 9, 10, 11, 12
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5828
இணைந்தது : 03/12/2017
First topic message reminder :
18 .12 .2017
இது ஒரு புதிய முயற்சி.
ஒரு படத்திலுள்ள வசனங்களை அப்படியே தர்றேன். என்ன படம், இந்த வசனங்கள்ல நடிச்சிருப்பவங்க யார் யார்னு உங்களுக்குத் தெரியும்னு எனக்குத் தெரியும். சொல்லுங்களேன். கண்டிப்பா கண்டு புடிச்சிருவீங்க. ஏன்னா ஈஸியானதாதானே குடுத்திருக்கேன்.
ஒரு அரண்மனை. அரசி சபைக்குள் நுழைகிறார்.
காவல்காரன் : நாட்டின் பேரரசி, செல்வபுரத்தின் பெண்ணரசி, மங்கையர் உலகுக்கு மாபெரும் தலைவியாய் விளங்க வந்த மங்கையர்க்கரசி, தக்க சமயத்தில் மக்களைக் காக்க வந்த மாதரசி, திருவின் கடாட்சத்தால், தெய்வத்தின் கருணையால் நம் நாட்டிற்குக் கிடைத்த பொன்னரசி, மாட்சிமை பொருந்திய செல்வபுரத்தின் மஹாராணி, ராஜமஹோன்னத, ராஜகோலாஹல, ராஜகம்பீர, ஸ்ரீ விஜயஜெய செல்வாம்பிகை நாச்சியார், வாழ்க.
அரசி வந்து, எல்லோரையும் அமரச் சொல்லி, அவரும் அமர்கிறார். சபையில் இருந்தவர்கள் அமர்கின்றனர்.
அரசி [சபையைப் பார்த்து] : ப்ரதம தளபதி பட்டமளிப்பு விழாவிற்கு விஜயம் செய்துள்ள ராஜ ப்ரமுகர்கள் அனைவரையும், அன்போடு வரவேற்கிறேன். என் அழைப்பிற்கிணங்கி, அனைவரும் வருகை தந்தமைக்கு, நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். தன்னைச் துச்சமென மதித்து என்னைக் காப்பாற்றிய வீரமல்லரின் வீரத்தைப் பற்றி, நான் விளக்கம் சொல்லத் தேவையில்லை. நடந்த சம்பவம் நாடறிந்தது. அப்படிப்பட்ட பலசாலியின், அரசியின் உயிரையே காத்த மாபெரும் வீரரே, இந்தச் செல்வபுரத்தின் ப்ரதம தளபதியாக நியமிக்க முடிவு கட்டி, உங்கள் முன் பதவிப் ப்ரமாணம் செய்து வைக்கிறேன்.
அரசி [தளபதியைப் பார்த்து]: வீரமல்லரே, நாட்டுக்கும், சட்டத்துக்கும் கட்டுப்பட்டு, பெற்ற தாய்போல் பிறந்த நாட்டைப் பாதுகாக்க வேண்டியது உங்கள் கடமை என்று கட்டளை இடுகிறேன். [தளபதியை நோக்கிக் கையை நீட்டி] இன்று முதல், உம்மை இந்த நாட்டிற்குப் ப்ரதம தளபதியாக நியமிக்கிறேன்.
அரசி ஒரு காவலாளியை நோக்க, அந்தக் காவலாளி வாள் இருந்த ஒரு தட்டை அரசியின் அருகில் கொண்டு வந்து நீட்டுகிறான். அரசி சிம்மாசனத்திலிருந்து இறங்கி வந்து, தட்டிலிருந்த அந்த வாளை எடுத்து, பிரதம தளபதியின் கையில் கொடுக்கிறார். தளபதியும் அந்த வாளைக் கையில் வாங்கிப் பணிவுடன் அரசியை வணங்குகிறார். அரசி சிம்மாசனத்தில் அமர்கிறார்.
ப்ரதம தளபதி [உறையிலிருந்து வாளை உருவி] : பேரரசியே, பிறந்த நாட்டின் ஒரு பிடி மண்ணைக் கூட மாற்றான் கொண்டு செல்ல முடியாத அளவுக்கு, நம் நாட்டைக் காப்பேன். எல்லைகளைக் காப்பேன். பகைவரால் தொல்லை ஏதேனும் வந்தால், அதை வேரோடு முறியடித்து விடுகிறேன். நமது செல்வபுரத்தை எனது உடலில் கடை.... சி சொட்டு ரத்தம் உள்ளவரை பாதுகாக்கிறேன் என்று உறுதி கூறி, இந்தப் ப்ரதம தளபதி பதவியை ஏற்றுக் கொள்கிறேன். இது என் தாய்மீதாணை. தாய்நாட்டின் மீதாணை.
என்று கூறி, வாளை உரையிலிருந்து உருவி மேலுயர்த்தி
"என் வீரத்தின் மீதாணை"
இவ்வாறு சொல்லி, வாளை முத்தமிட்டு விட்டு, உறையில் வைக்கிறார் ப்ரதம தளபதி.
தளபதி : பேரரசியே, ப்ரதம தளபதிக்குப் பக்கத் துணையாக இருந்து, படை நடத்தி, நாங்களும் நாட்டைப் பாதுகாப்போம் என்று உறுதி கூறுகிறோம்.
ப்ரதம தளபதியும், தளபதியும் தத்தம் இருக்கையில் அமர்கின்றனர்.
அரசி : வாழ்க வீரம். வளர்க உங்களது ஆற்றல். பெருகட்டும் படைபலம்.
அந்தச் சமயத்தில் ஒரு காவலாளி அரசிமுன் வந்து வணங்குகிறான்.
காவலாளி : அரசியே, தங்கள் உத்தரவுப்படி, புலவரை அழைத்து வந்திருக்கிறோம்.
அரசி : வரச்சொல் சபைக்கு.
காவலாளி : உத்தரவு.
ப்ரதம தளபதி [சிறிது யோசித்து விட்டு அரசியைப் பார்த்து] : யாரந்தப் புலவன்?
அரசி [அலட்சியமாக] : வருவார் பாரும்.
சபைக்கு அந்தப் புலவர் கர்வத்துடன் வீரனடை நடந்து வருகிறார். சபையிலுள்ளவர்கள் எல்லோரும் அவரையே பார்க்கின்றனர். புலவர் அரசி முன் வந்து.
புலவர் : வாழ்க நாடு. உயர்க அரசு, ஓங்குக புலமை.
அரசி [புன்னகையுடன்] : வருக புலவரே. வருக [என்று வரவேற்று] திடீரென்று நான் அழைத்தது, உமக்கு வியப்பைத் தந்ததோ?
புலவர் [இல்லையென்று தலையாட்டி] : வேண்டா வெறுப்பாக இருந்தது.
அரசி : ஏனப்படி?
புலவர் : காரணம் புரியவில்லை
அரசி : புரியச் சொல்கிறேன். உமது புலமையின் திறமையைப் பரிசோதிக்கவே உம்மை இங்கே அழைத்தேன்.
புலவர் [சிரித்து] : ஹா ஹா .... எனது புலமையை சோதிக்கும் அளவுக்குப் புலமையில் தேர்ச்சி பெற்ற பாவலன் இங்கு யாரோ?
புலவர் சுற்றுமுற்றும் பார்க்கிறார் கர்வமாக.
அரசி : சகலரும் இங்கு சகல கலைகளும் பயின்றவர்கள்.
புலவர் : [கிண்டலாக] ஆ... மகிழ்ச்சி. வினாக்களைக் கேட்டால் விடை சொல்லக் காத்திருக்கிறேன்.
அரசி : தளபதியாரே [ என்று ப்ரதம தளபதியைப் பார்க்கிறார்]
ப்ரதம தளபதி : [புலவரைப் பார்த்து] உமது ஊர்?
புலவர் : இதே ஊர்.
ப்ரதம தளபதி : பெயர்?
புலவர் : [நடந்துகொண்டே பதிலளிக்கிறார்] வித்யாபதி.
ப்ரதம தளபதி : தாய் தந்தையர்?
புலவர் : தாய் இல்லை, தந்தை உண்டு
ப்ரதம தளபதி : உற்றார் உறவினர்?
புலவர் : இல்லை
ப்ரதம தளபதி : சகோதரர்?
புலவர் : அனாதை
ப்ரதம தளபதி : உமக்குத் தொழில்?
புலவர் : எமக்குத் தொழில் கவிதை.
ப்ரதம தளபதி : அடுத்து?
புலவர் : ஆண்டவன் தொண்டு
ப்ரதம தளபதி : இதற்கு முன்?
புலவர் : பிறப்பால் ஊமை.
ப்ரதம தளபதி : பேச்சு வந்தது?
புலவர் : கலைவாணியின் அருளால்.
ப்ரதம தளபதி : [அலட்சியமாக] ஹே ஹே [அரசியைப் பார்த்து] நம்பத் தகாதது.
புலவர் : [அவரும் அலட்சியமாக] ஹே ஹே ... கோழை வீரனாகி, தளபதியாக வீற்றிக்கும்போது. ஊமை புலவனாகிப் பேசுவது நம்ப முடியவில்லையோ?
ப்ரதம தளபதி : ம்ம்ம்ம்ம்ம், அடக்கமாகப் பேசும்.
புலவர் : [கையை அமர்த்தி] அமைதியாகக் கேளும்.
அரசி : வித்தையிலே மெத்தப் படித்து, வினாக்களுக்கு அடுக்கடுக்காக விடை பகரும் புலவர் வித்யாபதி,
அரசி இதைக் கூறிக் கொண்டிருக்கும்போதே புலவர் அரசியின் அருகில் சென்று நிற்கிறார்.
புலவர் : அரசி
அரசி : ஆட்சிக்கிலக்கணம்?
புலவர் : ஆணவமற்ற அரசு.
அரசி : புலவனின் உரிமை?
புலவர் : சுதந்திரப் பறவை.
அரசி : இதயத்தை மகிழ்விப்பது?
புலவர் : குழந்தையின் மழலை
அரசி : வேதனை தருவது?
புலவர் : நண்பனின் பிரிவு.
அரசி : நட்புக்குயர்வு?
புலவர் : இடுக்கண் களைவது.
அரசி : எண்ணக்கூடாதது ?
புலவர் : செல்வத்தின் செருக்கு [அரசியைச் சுட்டிக்காட்டுகிறார்]
அரசி : பொருளில்லாதவர்க்கு?
புலவர் : இவ்வுலகமட்டும் இல்லை.
அரசி : அருளில்லாதவர்க்கு?
புலவர் : எவ்வுலகமுமில்லை.
அரசி : எங்கும் வேண்டுவது?
புலவர் : ஒழுக்கத்தின் உயர்வு.
அரசி : உயர்வுக்கு வழி?
புலவர் : உண்மையும், சத்தியமும்.
ப்ரதம தளபதி : அழியாது நிற்பது?
புலவர் : கவிஞனின் காவியம்
அரசி : அழிந்து விடுவது?
புலவர் : நிலையற்ற செல்வம்
ப்ரதம தளபதி : வீரருக்கு அழகு?
புலவர் : பேச்சைக் குறைப்பது.
ப்ரதம தளபதி : புலவனுக்கு முடிவு?
புலவர் : பொன்னேட்டில் இருப்பது.
அரசி : புவியாள்பவர் முடிவு?
புலவர் : முடிசார்ந்த மன்னரும் முடிவில் பிடி சாம்பலாவர்.
ப்ரதம தளபதி : சகிக்க முடியாதது?
புலவர் : பச்சைக் குழந்தையின் அழுகை
தளபதி : தாள முடியாதது?
புலவர் : பத்தினிப் பெண்ணின் சாபம்
தளபதி : கேட்கத் தகாதது ?
புலவர் : [தளபதியின் முகத்தின் நேரே கையை நீட்டி] தகுதியற்ற கேள்வியும், அர்த்தமற்ற பதிலும்.
ப்ரதம தளபதி : பார்க்க முடியாதது?
புலவர் : அடக்கமில்லாமை
அரசி : அதற்குதாரணம் ?
புலவர் : [அரசியைச் சுட்டிக்காட்டி] உங்களது ஆட்சி.
ப்ரதம தளபதி : [கோபமா எந்திரிச்சு] வித்யாபதி
பிரதம தளபதியும், தளபதியும் கோபமாக எழுகிறார்.
அரசி இருவரையும் உட்காருமாறு சைகை காட்டுகிறார். இருவரும் அமர்கின்றனர்.
அரசி : வித்யாபதி, உமது புலமையின் திறமையைப பாராட்டுகிறேன். இன்றுமுதல், உம்மை எமது ஆஸ்தான புலவனாக நியமிக்க முடிவு கட்டியிருக்கிறேன்.
புலவர் : நீங்கள் முடிவு கட்டியிருக்கலாம். ஆனால் முழு மனதுடன் நான் ஏற்றுக்கொள்ள வேண்டாமா?
அரசி : ஏற்றுக்கொள்ள என்ன தயக்கம்?
புலவர் : ஆண்டவன் சன்னிதானத்திற்கே எங்களை அர்ப்பணித்துக்கொண்ட பரம்பரை நாங்கள். தெய்வத்தொண்டே திருத்தொண்டாக நினைத்து, இறைவனுக்கடியவனாக இருக்கும் நான், இந்த அரசுக்கு அடிமையாக மாட்டேன்.
ப்ரதம தளபதி : [கோபமா கத்துகிறார்] ஆணவம் படைத்த புலவன் நீ. எப்போது எமது அரசியின் கட்டளையை மதிக்கத் தவறினாயோ, அப்போதே உனக்கு இங்கு ஆஸ்தான புலவனாக அமரும் யோக்யதை இல்லையென்று முடிவு கட்டிவிட்டோம். போகட்டும். அழைத்த மரியாதைக்காக, நாங்கள் அனைவரும் கேட்க, அரசியைப் பாராட்டி ஒரேயொரு கவி பாடிவிட்டு போ.
புலவர் : நரஸ்துதி......... பாடுவதில்லை.
அரசி : எப்படி?
புலவர் : இறைவனைப் பாடும் வாயால், இடையே தோன்றி மறையும் இந்த மனித ஜென்மங்களைப் பாடுவதில்லை.
ப்ரதம தளபதி : பாடாமல் உன்னை விடப்போவதில்லை.
புலவர் : இந்த பலாத்காரத்தைக் கண்டு நான் பயப்படப்போவதில்லை.
தளபதி : உன்னைப் பணிய வைக்கிறோமா இல்லையா பார்.
புலவர் : உங்களுக்குச் சரியான பாடம் கற்பிக்கிறேனா இல்லையா பாருங்கள்.
Heezulia
18 .12 .2017
இது ஒரு புதிய முயற்சி.
ஒரு படத்திலுள்ள வசனங்களை அப்படியே தர்றேன். என்ன படம், இந்த வசனங்கள்ல நடிச்சிருப்பவங்க யார் யார்னு உங்களுக்குத் தெரியும்னு எனக்குத் தெரியும். சொல்லுங்களேன். கண்டிப்பா கண்டு புடிச்சிருவீங்க. ஏன்னா ஈஸியானதாதானே குடுத்திருக்கேன்.
ஒரு அரண்மனை. அரசி சபைக்குள் நுழைகிறார்.
காவல்காரன் : நாட்டின் பேரரசி, செல்வபுரத்தின் பெண்ணரசி, மங்கையர் உலகுக்கு மாபெரும் தலைவியாய் விளங்க வந்த மங்கையர்க்கரசி, தக்க சமயத்தில் மக்களைக் காக்க வந்த மாதரசி, திருவின் கடாட்சத்தால், தெய்வத்தின் கருணையால் நம் நாட்டிற்குக் கிடைத்த பொன்னரசி, மாட்சிமை பொருந்திய செல்வபுரத்தின் மஹாராணி, ராஜமஹோன்னத, ராஜகோலாஹல, ராஜகம்பீர, ஸ்ரீ விஜயஜெய செல்வாம்பிகை நாச்சியார், வாழ்க.
அரசி வந்து, எல்லோரையும் அமரச் சொல்லி, அவரும் அமர்கிறார். சபையில் இருந்தவர்கள் அமர்கின்றனர்.
அரசி [சபையைப் பார்த்து] : ப்ரதம தளபதி பட்டமளிப்பு விழாவிற்கு விஜயம் செய்துள்ள ராஜ ப்ரமுகர்கள் அனைவரையும், அன்போடு வரவேற்கிறேன். என் அழைப்பிற்கிணங்கி, அனைவரும் வருகை தந்தமைக்கு, நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். தன்னைச் துச்சமென மதித்து என்னைக் காப்பாற்றிய வீரமல்லரின் வீரத்தைப் பற்றி, நான் விளக்கம் சொல்லத் தேவையில்லை. நடந்த சம்பவம் நாடறிந்தது. அப்படிப்பட்ட பலசாலியின், அரசியின் உயிரையே காத்த மாபெரும் வீரரே, இந்தச் செல்வபுரத்தின் ப்ரதம தளபதியாக நியமிக்க முடிவு கட்டி, உங்கள் முன் பதவிப் ப்ரமாணம் செய்து வைக்கிறேன்.
அரசி [தளபதியைப் பார்த்து]: வீரமல்லரே, நாட்டுக்கும், சட்டத்துக்கும் கட்டுப்பட்டு, பெற்ற தாய்போல் பிறந்த நாட்டைப் பாதுகாக்க வேண்டியது உங்கள் கடமை என்று கட்டளை இடுகிறேன். [தளபதியை நோக்கிக் கையை நீட்டி] இன்று முதல், உம்மை இந்த நாட்டிற்குப் ப்ரதம தளபதியாக நியமிக்கிறேன்.
அரசி ஒரு காவலாளியை நோக்க, அந்தக் காவலாளி வாள் இருந்த ஒரு தட்டை அரசியின் அருகில் கொண்டு வந்து நீட்டுகிறான். அரசி சிம்மாசனத்திலிருந்து இறங்கி வந்து, தட்டிலிருந்த அந்த வாளை எடுத்து, பிரதம தளபதியின் கையில் கொடுக்கிறார். தளபதியும் அந்த வாளைக் கையில் வாங்கிப் பணிவுடன் அரசியை வணங்குகிறார். அரசி சிம்மாசனத்தில் அமர்கிறார்.
ப்ரதம தளபதி [உறையிலிருந்து வாளை உருவி] : பேரரசியே, பிறந்த நாட்டின் ஒரு பிடி மண்ணைக் கூட மாற்றான் கொண்டு செல்ல முடியாத அளவுக்கு, நம் நாட்டைக் காப்பேன். எல்லைகளைக் காப்பேன். பகைவரால் தொல்லை ஏதேனும் வந்தால், அதை வேரோடு முறியடித்து விடுகிறேன். நமது செல்வபுரத்தை எனது உடலில் கடை.... சி சொட்டு ரத்தம் உள்ளவரை பாதுகாக்கிறேன் என்று உறுதி கூறி, இந்தப் ப்ரதம தளபதி பதவியை ஏற்றுக் கொள்கிறேன். இது என் தாய்மீதாணை. தாய்நாட்டின் மீதாணை.
என்று கூறி, வாளை உரையிலிருந்து உருவி மேலுயர்த்தி
"என் வீரத்தின் மீதாணை"
இவ்வாறு சொல்லி, வாளை முத்தமிட்டு விட்டு, உறையில் வைக்கிறார் ப்ரதம தளபதி.
தளபதி : பேரரசியே, ப்ரதம தளபதிக்குப் பக்கத் துணையாக இருந்து, படை நடத்தி, நாங்களும் நாட்டைப் பாதுகாப்போம் என்று உறுதி கூறுகிறோம்.
ப்ரதம தளபதியும், தளபதியும் தத்தம் இருக்கையில் அமர்கின்றனர்.
அரசி : வாழ்க வீரம். வளர்க உங்களது ஆற்றல். பெருகட்டும் படைபலம்.
அந்தச் சமயத்தில் ஒரு காவலாளி அரசிமுன் வந்து வணங்குகிறான்.
காவலாளி : அரசியே, தங்கள் உத்தரவுப்படி, புலவரை அழைத்து வந்திருக்கிறோம்.
அரசி : வரச்சொல் சபைக்கு.
காவலாளி : உத்தரவு.
ப்ரதம தளபதி [சிறிது யோசித்து விட்டு அரசியைப் பார்த்து] : யாரந்தப் புலவன்?
அரசி [அலட்சியமாக] : வருவார் பாரும்.
சபைக்கு அந்தப் புலவர் கர்வத்துடன் வீரனடை நடந்து வருகிறார். சபையிலுள்ளவர்கள் எல்லோரும் அவரையே பார்க்கின்றனர். புலவர் அரசி முன் வந்து.
புலவர் : வாழ்க நாடு. உயர்க அரசு, ஓங்குக புலமை.
அரசி [புன்னகையுடன்] : வருக புலவரே. வருக [என்று வரவேற்று] திடீரென்று நான் அழைத்தது, உமக்கு வியப்பைத் தந்ததோ?
புலவர் [இல்லையென்று தலையாட்டி] : வேண்டா வெறுப்பாக இருந்தது.
அரசி : ஏனப்படி?
புலவர் : காரணம் புரியவில்லை
அரசி : புரியச் சொல்கிறேன். உமது புலமையின் திறமையைப் பரிசோதிக்கவே உம்மை இங்கே அழைத்தேன்.
புலவர் [சிரித்து] : ஹா ஹா .... எனது புலமையை சோதிக்கும் அளவுக்குப் புலமையில் தேர்ச்சி பெற்ற பாவலன் இங்கு யாரோ?
புலவர் சுற்றுமுற்றும் பார்க்கிறார் கர்வமாக.
அரசி : சகலரும் இங்கு சகல கலைகளும் பயின்றவர்கள்.
புலவர் : [கிண்டலாக] ஆ... மகிழ்ச்சி. வினாக்களைக் கேட்டால் விடை சொல்லக் காத்திருக்கிறேன்.
அரசி : தளபதியாரே [ என்று ப்ரதம தளபதியைப் பார்க்கிறார்]
ப்ரதம தளபதி : [புலவரைப் பார்த்து] உமது ஊர்?
புலவர் : இதே ஊர்.
ப்ரதம தளபதி : பெயர்?
புலவர் : [நடந்துகொண்டே பதிலளிக்கிறார்] வித்யாபதி.
ப்ரதம தளபதி : தாய் தந்தையர்?
புலவர் : தாய் இல்லை, தந்தை உண்டு
ப்ரதம தளபதி : உற்றார் உறவினர்?
புலவர் : இல்லை
ப்ரதம தளபதி : சகோதரர்?
புலவர் : அனாதை
ப்ரதம தளபதி : உமக்குத் தொழில்?
புலவர் : எமக்குத் தொழில் கவிதை.
ப்ரதம தளபதி : அடுத்து?
புலவர் : ஆண்டவன் தொண்டு
ப்ரதம தளபதி : இதற்கு முன்?
புலவர் : பிறப்பால் ஊமை.
ப்ரதம தளபதி : பேச்சு வந்தது?
புலவர் : கலைவாணியின் அருளால்.
ப்ரதம தளபதி : [அலட்சியமாக] ஹே ஹே [அரசியைப் பார்த்து] நம்பத் தகாதது.
புலவர் : [அவரும் அலட்சியமாக] ஹே ஹே ... கோழை வீரனாகி, தளபதியாக வீற்றிக்கும்போது. ஊமை புலவனாகிப் பேசுவது நம்ப முடியவில்லையோ?
ப்ரதம தளபதி : ம்ம்ம்ம்ம்ம், அடக்கமாகப் பேசும்.
புலவர் : [கையை அமர்த்தி] அமைதியாகக் கேளும்.
அரசி : வித்தையிலே மெத்தப் படித்து, வினாக்களுக்கு அடுக்கடுக்காக விடை பகரும் புலவர் வித்யாபதி,
அரசி இதைக் கூறிக் கொண்டிருக்கும்போதே புலவர் அரசியின் அருகில் சென்று நிற்கிறார்.
புலவர் : அரசி
அரசி : ஆட்சிக்கிலக்கணம்?
புலவர் : ஆணவமற்ற அரசு.
அரசி : புலவனின் உரிமை?
புலவர் : சுதந்திரப் பறவை.
அரசி : இதயத்தை மகிழ்விப்பது?
புலவர் : குழந்தையின் மழலை
அரசி : வேதனை தருவது?
புலவர் : நண்பனின் பிரிவு.
அரசி : நட்புக்குயர்வு?
புலவர் : இடுக்கண் களைவது.
அரசி : எண்ணக்கூடாதது ?
புலவர் : செல்வத்தின் செருக்கு [அரசியைச் சுட்டிக்காட்டுகிறார்]
அரசி : பொருளில்லாதவர்க்கு?
புலவர் : இவ்வுலகமட்டும் இல்லை.
அரசி : அருளில்லாதவர்க்கு?
புலவர் : எவ்வுலகமுமில்லை.
அரசி : எங்கும் வேண்டுவது?
புலவர் : ஒழுக்கத்தின் உயர்வு.
அரசி : உயர்வுக்கு வழி?
புலவர் : உண்மையும், சத்தியமும்.
ப்ரதம தளபதி : அழியாது நிற்பது?
புலவர் : கவிஞனின் காவியம்
அரசி : அழிந்து விடுவது?
புலவர் : நிலையற்ற செல்வம்
ப்ரதம தளபதி : வீரருக்கு அழகு?
புலவர் : பேச்சைக் குறைப்பது.
ப்ரதம தளபதி : புலவனுக்கு முடிவு?
புலவர் : பொன்னேட்டில் இருப்பது.
அரசி : புவியாள்பவர் முடிவு?
புலவர் : முடிசார்ந்த மன்னரும் முடிவில் பிடி சாம்பலாவர்.
ப்ரதம தளபதி : சகிக்க முடியாதது?
புலவர் : பச்சைக் குழந்தையின் அழுகை
தளபதி : தாள முடியாதது?
புலவர் : பத்தினிப் பெண்ணின் சாபம்
தளபதி : கேட்கத் தகாதது ?
புலவர் : [தளபதியின் முகத்தின் நேரே கையை நீட்டி] தகுதியற்ற கேள்வியும், அர்த்தமற்ற பதிலும்.
ப்ரதம தளபதி : பார்க்க முடியாதது?
புலவர் : அடக்கமில்லாமை
அரசி : அதற்குதாரணம் ?
புலவர் : [அரசியைச் சுட்டிக்காட்டி] உங்களது ஆட்சி.
ப்ரதம தளபதி : [கோபமா எந்திரிச்சு] வித்யாபதி
பிரதம தளபதியும், தளபதியும் கோபமாக எழுகிறார்.
அரசி இருவரையும் உட்காருமாறு சைகை காட்டுகிறார். இருவரும் அமர்கின்றனர்.
அரசி : வித்யாபதி, உமது புலமையின் திறமையைப பாராட்டுகிறேன். இன்றுமுதல், உம்மை எமது ஆஸ்தான புலவனாக நியமிக்க முடிவு கட்டியிருக்கிறேன்.
புலவர் : நீங்கள் முடிவு கட்டியிருக்கலாம். ஆனால் முழு மனதுடன் நான் ஏற்றுக்கொள்ள வேண்டாமா?
அரசி : ஏற்றுக்கொள்ள என்ன தயக்கம்?
புலவர் : ஆண்டவன் சன்னிதானத்திற்கே எங்களை அர்ப்பணித்துக்கொண்ட பரம்பரை நாங்கள். தெய்வத்தொண்டே திருத்தொண்டாக நினைத்து, இறைவனுக்கடியவனாக இருக்கும் நான், இந்த அரசுக்கு அடிமையாக மாட்டேன்.
ப்ரதம தளபதி : [கோபமா கத்துகிறார்] ஆணவம் படைத்த புலவன் நீ. எப்போது எமது அரசியின் கட்டளையை மதிக்கத் தவறினாயோ, அப்போதே உனக்கு இங்கு ஆஸ்தான புலவனாக அமரும் யோக்யதை இல்லையென்று முடிவு கட்டிவிட்டோம். போகட்டும். அழைத்த மரியாதைக்காக, நாங்கள் அனைவரும் கேட்க, அரசியைப் பாராட்டி ஒரேயொரு கவி பாடிவிட்டு போ.
புலவர் : நரஸ்துதி......... பாடுவதில்லை.
அரசி : எப்படி?
புலவர் : இறைவனைப் பாடும் வாயால், இடையே தோன்றி மறையும் இந்த மனித ஜென்மங்களைப் பாடுவதில்லை.
ப்ரதம தளபதி : பாடாமல் உன்னை விடப்போவதில்லை.
புலவர் : இந்த பலாத்காரத்தைக் கண்டு நான் பயப்படப்போவதில்லை.
தளபதி : உன்னைப் பணிய வைக்கிறோமா இல்லையா பார்.
புலவர் : உங்களுக்குச் சரியான பாடம் கற்பிக்கிறேனா இல்லையா பாருங்கள்.
Heezulia
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5828
இணைந்தது : 03/12/2017
21.03.2018
என்ன மூர்த்தி இது. இப்டி தப்பு தப்பா............. எழுதாதீங்க. அது அப்டி இல்ல.
வரும்..................... ஆனா வராது. இப்..................டி எழுதணும்.
வழமையான உங்க சூப்பரோ சூப்பருக்கு வழமையான என் நன்றியோ நன்றி.
துப்புதானே. MGR படம்.
நான் மட்டும் என்ன எல்லா................... படங்களையுமா பார்க்கிறேன். ஒரு 10% தான் பார்த்திருப்பேன்.
Heezulia
என்ன மூர்த்தி இது. இப்டி தப்பு தப்பா............. எழுதாதீங்க. அது அப்டி இல்ல.
வரும்..................... ஆனா வராது. இப்..................டி எழுதணும்.
வழமையான உங்க சூப்பரோ சூப்பருக்கு வழமையான என் நன்றியோ நன்றி.
துப்புதானே. MGR படம்.
நான் மட்டும் என்ன எல்லா................... படங்களையுமா பார்க்கிறேன். ஒரு 10% தான் பார்த்திருப்பேன்.
ஓஹோ அப்டியா. இதைத்தான் என் மத்த friends சொன்னாங்க. ஆனா காட்சியில்ல. படத்தையே போட்டிருக்காங்க. அதனால பதில் சொல்லிட்டாங்க.by SK on Wed Mar 21, 2018
இந்த காட்சி சமீபத்தில் சன் லைப் சானலில் பார்த்த நியாபகம் அனால் நடிகர்கள் படம் நினைவில் இல்ல
Heezulia
- GuestGuest
நானும் கண்டு பிடிச்சிட்டேன். வேலு -நம்பியார்.ஆனா லேட்டா கண்டு பிடித்தேன். SK முந்திட்டார்.அடுத்த தடவை முயற்சி பண்ணலாம்.
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5828
இணைந்தது : 03/12/2017
21.03.2018
செந்தில், மூர்த்தி ரெண்டு பேரும் கரீ.......................ட்டா சொல்லிட்டீங்க.
மூர்த்தி லேட்டா சொன்னாலும், கரெக்கேட்டா சொல்லியிருக்கீங்கல்ல. அதுதானே முக்கியம்.
ரெண்டு பேருக்குமே வா............ழ்............த்..............து............க்............க.............ள்..........
Heezulia
செந்தில், மூர்த்தி ரெண்டு பேரும் கரீ.......................ட்டா சொல்லிட்டீங்க.
மூர்த்தி லேட்டா சொன்னாலும், கரெக்கேட்டா சொல்லியிருக்கீங்கல்ல. அதுதானே முக்கியம்.
ரெண்டு பேருக்குமே வா............ழ்............த்..............து............க்............க.............ள்..........
Heezulia
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
மேற்கோள் செய்த பதிவு: 1263270heezulia wrote:21.03.2018
செந்தில், மூர்த்தி ரெண்டு பேரும் கரீ.......................ட்டா சொல்லிட்டீங்க.
மூர்த்தி லேட்டா சொன்னாலும், கரெக்கேட்டா சொல்லியிருக்கீங்கல்ல. அதுதானே முக்கியம்.
ரெண்டு பேருக்குமே வா............ழ்............த்..............து............க்............க.............ள்..........
Heezulia
வா............ழ்............த்..............து............க்............க.............ள்
இப்படி ஆகா யார் கரணம்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5828
இணைந்தது : 03/12/2017
22.03.2018
செந்தில், ஏன் இப்டி கரணம்லாம் அடிக்கிறீங்க?
Heezulia
மேற்கோள் செய்த பதிவு: 1263461SK wrote: இப்படி ஆகா யார் கரணம்
செந்தில், ஏன் இப்டி கரணம்லாம் அடிக்கிறீங்க?
Heezulia
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
தமிழ்ராக்கர்ஸ்-ல் இந்த படங்கள் எல்லாம் வந்தால் பார்த்து பதில் சொல்ல முயற்சிக்கிறேன்ங்க..
தொடர்ந்து பதிவிடுங்கள் ...
தொடர்ந்து பதிவிடுங்கள் ...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5828
இணைந்தது : 03/12/2017
30.03.2018
இதுல பேசியிருக்கிறவங்க : மேனேஜரம்மா, மேனேஜர், சுதா, சேகர், சேகரின் அம்மா.
ஒரு ஆபிஸ். ஒரு மேனேஜர், பக்கத்தில ஓர் க்ளார்க். ரெண்டு பேருமே பொம்பளைங்க. மேஜை மேல பேர் பலகை . ஆனா அதுல மேனேஜரம்மா பேர் இல்ல. "பெண் என்பவள் மனித ஜாதியின் மிகச் சிறப்பான பாதி - மகாத்மா காந்தி" னு எழுதப்பட்டிருக்கு.
ரூமை திறந்துட்டு ஒரு அம்மா தயங்கி தயங்கி உள்ள வர்றாங்க. அந்தம்மாவ பாத்து, மேனேஜரம்மா எந்திரிச்சு நிக்கிறாங்க. இவங்க நிக்கிறதை பார்த்து கிளார்க் திரும்பி பார்க்கிறா. சின்னூண்டு அதிர்ச்சி. அவளும் எந்திரிக்கிறா. உள்ளே வந்த அம்மா மேஜை பக்கத்தில வந்து நிக்கிறாங்க. மேனேஜரம்மா உக்காந்ததும், வந்த அம்மாவும் உக்கார்றாங்க. கிளார்க்கும் உக்கார்றா. மேனேஜரம்மா, வந்த அம்மாவை பார்த்து, "எனக்கு லெட்டர் எழுதுனது..............."
மேனேஜரம்மா இப்டி கேக்கும்போது, கிளார்க், வந்த அம்மாவையே.............. கண்கொட்டாம பார்க்கிறா. வந்த அம்மா திக்கி தெணறி, தயங்கி, "நாந்தான்" ன்னு சொல்றா. இப்டி சொன்னதும், மேனேஜரம்மாவும், க்ளார்க்கும் திகைக்கிறாங்க. ஒருத்தரை ஒருத்தர் பாத்துக்குறாங்க.
மேனேஜரம்மா : லெட்டர்ல, உங்கள யாரோ கொடுமபடுத்றதா எழுதியிருந்தீங்களே, யாரு ஒங்கள கொடுமப்படுத்றாங்க?
அந்த அம்மா, க்ளார்க்க ஓரக்கண்ணால பாக்குறாங்க. அப்புறம் தலைய குனிஞ்சுட்டு, "மருமக." ன்னு மெதுவா சொல்றாங்க. கிளார்க் அந்தம்மாவ மொறக்கிறா.
மேனேஜரம்மா : சுதா, ஒனக்கு நான் பர்மிஷன் தர்றேன். ஓமாமியார கூட்டிகிட்டு வீட்டுக்கு போற. அவங்க கொறைகள என்னன்னு கேக்ற. ஒன்ன நீ மாத்திக்கிற, இல்ல, ஒன்ன நா மாத்தவேண்டியதிருக்கும்.
சுதா எந்திரிக்கிறா.
அடுத்த ஸீன்.
இங்க வேற ஒரு ஆஃபிஸ். ஒரு ஆம்பள மேனேஜர். அவருக்கு எதுத்தாப்ல ஒரு பெரியவர்.
பெரியவர் : மனுஷன்னா பகல்ல முழிச்சுகிட்டு இருக்கணும். ராத்ரில தூங்கணும். நீங்க....... ராத்ரீல முழுச்சுட்டு இருக்கணும்ங்றதுக்காக, பகல்ல தூங்றீங்க. வீட்ல நடக்ற எதையுமே............. கண்டுக்றதுல்ல.
மேனேஜர் கத்துறார் "What do you mean?"
பெரியவர் அக்கம் பக்கம் பாத்துட்டு, "இப்போ....... நீங்க கத்தினா, நானும் கத்துவேன். நாலு பேர் காதுல விழும். நான் இந்த ஆஃபிஸ்ல வேல செய்யல அதனால எனக்கு அசிங்கம் கெடயாது. ஆனா நீங்க இந்த ஆஃபிஸ்ல வேல செய்றீங்க. ஒங்ளுக்குத்தான் அசிங்கம். நம்ம பேர சொல்ல வாரிச கொடுக்றவ பொண்டாட்டி. ஆனா நமக்கே......... பேர் வக்றவங்க அப்பா அம்மா. ரெண்டு பேருக்கும் நமக்கு வித்யாசம் தெரிஞ்சிர்க்கணுமில்லியா?”
மேனேஜர் நாற்காலீல முன்னுக்கு நகர்ந்து வர்றார்.
பெரியவர் : மாதா, பிதா, குரு, தெய்வம். இதுதான பழமொழி. இதுல பொண்டாட்டீயே வர்லியே.
மேனேஜர் எதையோ எழுதிட்டு இருந்தவர், தெகச்சு அவரை பார்க்கிறார்.
பெரியவர் தொடர்றார். "கட்டிலுக்கு வந்தவளுக்கு கொடுக்குற மரியாதைல பாதியயாவது, தொட்டில ஆட்டினவங்களுக்கு கொடுக்கணும் இல்லியா சார்?"
மேனேஜருக்கு மறுபடியும் அதிர்ச்சி.
பெரியவர் : நான் சொல்றத அப்படியே வீட்ல போய் ஒங்க பொண்டாட்டிகிட்ட பேசுவீங்களா?
அடுத்த ஸீன்
மேனேஜர் வீடு. சூட்கேஸுடன் கோவமா, வேகமா வீட்டுக்குள்ள நுழைறார். பெட்ரூம். மனைவி சுதா. கட்டில்ல குப்புற படுத்திருக்கா. மேனேஜர், மேஜை மேல ஸூட்கேஸை வைக்கிறார். ட்ரெஸ்ஸிங் டேபிள் முன்னால உக்காந்து, ட்டைய கழட்றான்.
சுதா கோவமா : இதை பாருங்க, இப்ப உடனடியா எனக்கு ரெண்டுல ஒண்ணு தெரிஞ்சாகணும்.
மேனேஜர் திரும்பி பாக்காமலேயே,"ஆஃபீஸ்ல இருந்து திரும்பி வந்திருக்கிற புருஷன் முன்னாடி, மொதல்ல பொம்பளயா எழுந்து உக்காரு.”
சுதா எந்திரிக்கல. அதிர்ச்சியாக அப்படியா குப்புற படுத்திருக்கா.
புருஷன் : பொண்டாட்டியா காஃபி கொண்டுவா. அப்புறமா புருஷனா நான் என்ன செய்யணும்னு சொல்லு, [இப்பதான் மனைவி சுதாவை திரும்பி பார்க்கிறான்] செய்றேன். தர்ம ஞாயங்கள அலசி பாக்றேன்.
சுதா மெதுவ்வ்வ்வா புருஷனை திரும்பி பார்க்கிறா. அவன் அம்மா காபி எடுத்துட்டு வேகவேகமா அவன்ட்ட வர்றா.
அம்மா : காபி இந்தாப்பா.
மகன் காபியை வாங்கி , மேஜை மேல வைக்கிறான்.
மகன் : நீங்க என்ன இந்த வீட்ல சமயகாரியா?
அம்மாவை பார்த்து கோவபட்றான்.
மகன் : ஒன்ன உக்கார வச்சு சோறு போட்ற அளவுக்கு வயசிருக்கு, மரியாத இருக்கு, பதவியும் இருக்கு. போய் அந்த ஹால்ல உக்காரும்மா.
அம்மா பயத்தோடும், திகைப்போடும் மகனை பார்த்தபடி நிக்கிறா.
மகன் : என்னம்மா அப்டி பாக்றே? ஓம்புருஷன் ராப்பகலா கண்ணு முழிச்சு, ஒழச்சு, சோறு போட்டு, படிக்க வச்சு ஒரு நல்ல நெலமக்கி கொண்டு வந்த ஒம்பையன், தன் சொந்...................த சம்பாத்யத்ல வாங்கன சோஃபாமா அது. கண்ட கண்ட கழுதைங்கல்லாம் உக்காந்து தேய்க்குது.
இதை கேட்டதும் சுதா சட்டுன்னு கோவத்தில எழுந்து உக்கார்றா.
மகன் அம்மாட்ட : நீ கொஞ்சம் உக்காந்து தேச்சா தப்புல்ல.
சுதா பெட்ரூம்ல இருந்து ஹாலுக்கு வர்றா. அம்மா அங்க சோஃபால உக்காந்திருக்கா. மகன் டிரஸ்ஸ மாத்திட்டு லுங்கியை கட்டிட்டு வர்றான்.
சுதா : என்ன ஆச்சு உங்க்ளுக்கு இன்னிக்கி?
இப்ப புருஷன் அவன் குரல்ல பேசல. அவன் ஆஃபிஸ்க்கு ஒரு பெரியவர் வந்து, “நான் சொல்றத அப்படியே வீட்ல போய் ஒங்க பொண்டாட்டிகிட்ட பேசுவீங்களா?” ன்னு கேட்டாரே, அவர் குரல் dubbing.
புருஷன் : அ..........................., இத்ன் நாளா................., பொடவ கட்டிட்ருந்தேன். இன்னைலிருந்து, லுங்கி கட்றதா முடிவு பண்ணிர்க்கேன்.
சுதா : What do you mean?
இப்டீ சொல்லிட்டு மாமியார் உக்காந்திருந்த சோஃபாவுக்கு முன்னால இருந்த, single சோஃபால உக்காந்து, கால் மேல கால் போட்டு உக்கார்றா.
புருஷன் சொடக்கு போட்டு எழுந்திரிமா" ன்னு சொல்றான். அவ எந்திரிக்கல. "எழுந்திர்ரி" புருஷன் கத்துறான். அவ மொறச்சுகிட்டே மெதுவா எந்திரிக்கிறா.
புருஷன் : ரெண்டு காபி கொண்டு வர்றியா? என்ன முழிக்கிற? காபி போட தெரியாதா? இல்ல.... கேஸ [gas] திறக்க தெரியாதா? இல்ல நெருப்பு குச்சிய வச்சு நெருப்பு பத்த வக்க தெரியாதா? இல்ல இந்த வீட்ல சமயகட்டு எங்க இருக்குன்னு தெரியாதா?
சுதா சட்டுன்னு திரும்பி கோவத்ல ஹாலை ஒரு சுத்த சுத்தி வர்றா. " This is too much. You are going beyond your limit."
புருஷன் : தமிழ்ல பேசுமா. நீ என்ன வெள்ளைக்காரனுக்கா பொறந்த?
சுதா அவன கோவமா முறைக்கிறா.
புருஷன் : எழுதிர்ற ஓம்பத்திரிகைல மாசாமாசம். பெத்த அப்பன பையன் நடுரோ...........ட்க்கு தொரத்தி விட்டான். பத்...........து மாசம் சொமந்து பெத்த தாய்க்கு பையன் சோறு போட்ல. கூட பொறந்த தங்கச்சிய அண்ணன் கவனிக்கல. இந்த ஆம்ப்ளைங்களே இப்டித்தான். ஒன்ன மாத்ரி ஒரு பொண்டாட்டி வாச்சா, நாங்கல்லாம் என்னம்மா பண்றது? பெண் என்பவள் மனித ஜாதியின் மிகச் சிறந்த பாதி. மகாத்மா காந்தி சொன்னத, நீங்களும் ஒங்க பத்திரிகையில் மொதல் பக்கத்தில போட்டிருக்கீங்க. அவர் சொல்வார்மா. ஏன்னா அவர் பொண்டாட்டி கஸ்தூரிபாய். எம்பொண்டாட்டி நீயாச்சே. மாதர் சங்க மீட்டிங்க்ல பேசிர்ற, பெண்கள் அவமானப்படுத்தப்படுகிறார்கள், பெண்கள் நசுக்கப்படுகிறார்கள், பெண்கள் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள்.
[அம்மாவ பார்த்து, அவள் தோள்ல கைய வச்சு]
எங்கம்மா மட்டும் பொம்ப்ள இல்லியா?
[இதோடு பெரியவரின் dubbing குரல் கட்டாகுது.
புருஷன் பேசுறான்]. தோ பார். இனிமே நீ பத்திரிகைல போயி எழுதி கிழிச்சதெல்லாம் போதும். சம்பாதிச்சு கொண்டு வந்து கொட்டுனது போதும். நாளை காலைலருந்து, இந்த வீட்டு பொண்ணா, எனக்கு பொண்டாட்டியா, எங்க அம்மாக்கு மருமகளா இருக்குற.
சுதா அவன் பக்கத்தில அவனது தெனாவட்டா. "இதுக்கு நான் சம்மதிக்கலேன்னா?"
புருஷன் : ஒவ்வீடு பாத்துகிட்டு நீ போ.
சுதா : எது எவ்வீடு?
புருஷன் : ஒங்கம்மா வீடு.
சுதா அலட்சியமா சிரிக்கிறா. “ஹஹ்ஹஹ்ஹஹ்ஹஹ்ஹ. நான் ஏன் எங்கம்மா வீட்டுக்கு போணும்? இந்த வீட்டுக்கு அட்வான்ஸ் நான் குடுத்ருக்கேன். வாடக நான் குடுத்ட்டு வர்றேன். நீங்க போட்ட சாப்பாட்டுக்கு, எத்தனையோ.............. நாளு இந்த ஒடம்ப ஒங்ளுக்கு தானம் பண்ணியாச்சு.”
அம்மா சோஃபால இருந்து எந்திரிக்கிறா.
புருஷன் அதிர்ச்சியாக அவளை பாக்குறான். அவள் பக்கத்தில வர்றான். "இதுதான் ஓம்முடிவா?"
சுதா : முடிவில்ல, ஆரம்பம். அடங்கி போயி, அடங்கி போய்தான், எங்ள நீங்க அடிமைகளாக்கிட்டீங்க. என்னால என் சொந்தக்கால்ல நிக்க முடியும்.
அம்மா அவங்க ரெண்டு பேர் பக்கத்ல வந்துட்டா. ரெண்டு பேரையும் மாறி மாறி பாக்குறா.
புருஷன் : ஹும், என்னிக்கி நமக்கு பந்தக்கால் போட்டாங்களோ, அன்னிக்கே ஒனக்கு சொந்தக்கால் போயாச்சு.
சுதா : புல்ஷிட் ச்சாலஞ்? [Thumbsup காட்றா]
அம்மா தெகச்சு, மகன் கையை பிடிக்கிறா. "சேகர்"
சேகர் : நீ சும்மா இரும்மா. [அம்மா கையை எடுத்து விட்றான்] ச்சாலஞ்ரி.
அவனும் Thumbsup காட்றான்.
என்ன படம், யார் யார் பேசியிருக்காங்க?
Heezulia
இதுல பேசியிருக்கிறவங்க : மேனேஜரம்மா, மேனேஜர், சுதா, சேகர், சேகரின் அம்மா.
ஒரு ஆபிஸ். ஒரு மேனேஜர், பக்கத்தில ஓர் க்ளார்க். ரெண்டு பேருமே பொம்பளைங்க. மேஜை மேல பேர் பலகை . ஆனா அதுல மேனேஜரம்மா பேர் இல்ல. "பெண் என்பவள் மனித ஜாதியின் மிகச் சிறப்பான பாதி - மகாத்மா காந்தி" னு எழுதப்பட்டிருக்கு.
ரூமை திறந்துட்டு ஒரு அம்மா தயங்கி தயங்கி உள்ள வர்றாங்க. அந்தம்மாவ பாத்து, மேனேஜரம்மா எந்திரிச்சு நிக்கிறாங்க. இவங்க நிக்கிறதை பார்த்து கிளார்க் திரும்பி பார்க்கிறா. சின்னூண்டு அதிர்ச்சி. அவளும் எந்திரிக்கிறா. உள்ளே வந்த அம்மா மேஜை பக்கத்தில வந்து நிக்கிறாங்க. மேனேஜரம்மா உக்காந்ததும், வந்த அம்மாவும் உக்கார்றாங்க. கிளார்க்கும் உக்கார்றா. மேனேஜரம்மா, வந்த அம்மாவை பார்த்து, "எனக்கு லெட்டர் எழுதுனது..............."
மேனேஜரம்மா இப்டி கேக்கும்போது, கிளார்க், வந்த அம்மாவையே.............. கண்கொட்டாம பார்க்கிறா. வந்த அம்மா திக்கி தெணறி, தயங்கி, "நாந்தான்" ன்னு சொல்றா. இப்டி சொன்னதும், மேனேஜரம்மாவும், க்ளார்க்கும் திகைக்கிறாங்க. ஒருத்தரை ஒருத்தர் பாத்துக்குறாங்க.
மேனேஜரம்மா : லெட்டர்ல, உங்கள யாரோ கொடுமபடுத்றதா எழுதியிருந்தீங்களே, யாரு ஒங்கள கொடுமப்படுத்றாங்க?
அந்த அம்மா, க்ளார்க்க ஓரக்கண்ணால பாக்குறாங்க. அப்புறம் தலைய குனிஞ்சுட்டு, "மருமக." ன்னு மெதுவா சொல்றாங்க. கிளார்க் அந்தம்மாவ மொறக்கிறா.
மேனேஜரம்மா : சுதா, ஒனக்கு நான் பர்மிஷன் தர்றேன். ஓமாமியார கூட்டிகிட்டு வீட்டுக்கு போற. அவங்க கொறைகள என்னன்னு கேக்ற. ஒன்ன நீ மாத்திக்கிற, இல்ல, ஒன்ன நா மாத்தவேண்டியதிருக்கும்.
சுதா எந்திரிக்கிறா.
அடுத்த ஸீன்.
இங்க வேற ஒரு ஆஃபிஸ். ஒரு ஆம்பள மேனேஜர். அவருக்கு எதுத்தாப்ல ஒரு பெரியவர்.
பெரியவர் : மனுஷன்னா பகல்ல முழிச்சுகிட்டு இருக்கணும். ராத்ரில தூங்கணும். நீங்க....... ராத்ரீல முழுச்சுட்டு இருக்கணும்ங்றதுக்காக, பகல்ல தூங்றீங்க. வீட்ல நடக்ற எதையுமே............. கண்டுக்றதுல்ல.
மேனேஜர் கத்துறார் "What do you mean?"
பெரியவர் அக்கம் பக்கம் பாத்துட்டு, "இப்போ....... நீங்க கத்தினா, நானும் கத்துவேன். நாலு பேர் காதுல விழும். நான் இந்த ஆஃபிஸ்ல வேல செய்யல அதனால எனக்கு அசிங்கம் கெடயாது. ஆனா நீங்க இந்த ஆஃபிஸ்ல வேல செய்றீங்க. ஒங்ளுக்குத்தான் அசிங்கம். நம்ம பேர சொல்ல வாரிச கொடுக்றவ பொண்டாட்டி. ஆனா நமக்கே......... பேர் வக்றவங்க அப்பா அம்மா. ரெண்டு பேருக்கும் நமக்கு வித்யாசம் தெரிஞ்சிர்க்கணுமில்லியா?”
மேனேஜர் நாற்காலீல முன்னுக்கு நகர்ந்து வர்றார்.
பெரியவர் : மாதா, பிதா, குரு, தெய்வம். இதுதான பழமொழி. இதுல பொண்டாட்டீயே வர்லியே.
மேனேஜர் எதையோ எழுதிட்டு இருந்தவர், தெகச்சு அவரை பார்க்கிறார்.
பெரியவர் தொடர்றார். "கட்டிலுக்கு வந்தவளுக்கு கொடுக்குற மரியாதைல பாதியயாவது, தொட்டில ஆட்டினவங்களுக்கு கொடுக்கணும் இல்லியா சார்?"
மேனேஜருக்கு மறுபடியும் அதிர்ச்சி.
பெரியவர் : நான் சொல்றத அப்படியே வீட்ல போய் ஒங்க பொண்டாட்டிகிட்ட பேசுவீங்களா?
அடுத்த ஸீன்
மேனேஜர் வீடு. சூட்கேஸுடன் கோவமா, வேகமா வீட்டுக்குள்ள நுழைறார். பெட்ரூம். மனைவி சுதா. கட்டில்ல குப்புற படுத்திருக்கா. மேனேஜர், மேஜை மேல ஸூட்கேஸை வைக்கிறார். ட்ரெஸ்ஸிங் டேபிள் முன்னால உக்காந்து, ட்டைய கழட்றான்.
சுதா கோவமா : இதை பாருங்க, இப்ப உடனடியா எனக்கு ரெண்டுல ஒண்ணு தெரிஞ்சாகணும்.
மேனேஜர் திரும்பி பாக்காமலேயே,"ஆஃபீஸ்ல இருந்து திரும்பி வந்திருக்கிற புருஷன் முன்னாடி, மொதல்ல பொம்பளயா எழுந்து உக்காரு.”
சுதா எந்திரிக்கல. அதிர்ச்சியாக அப்படியா குப்புற படுத்திருக்கா.
புருஷன் : பொண்டாட்டியா காஃபி கொண்டுவா. அப்புறமா புருஷனா நான் என்ன செய்யணும்னு சொல்லு, [இப்பதான் மனைவி சுதாவை திரும்பி பார்க்கிறான்] செய்றேன். தர்ம ஞாயங்கள அலசி பாக்றேன்.
சுதா மெதுவ்வ்வ்வா புருஷனை திரும்பி பார்க்கிறா. அவன் அம்மா காபி எடுத்துட்டு வேகவேகமா அவன்ட்ட வர்றா.
அம்மா : காபி இந்தாப்பா.
மகன் காபியை வாங்கி , மேஜை மேல வைக்கிறான்.
மகன் : நீங்க என்ன இந்த வீட்ல சமயகாரியா?
அம்மாவை பார்த்து கோவபட்றான்.
மகன் : ஒன்ன உக்கார வச்சு சோறு போட்ற அளவுக்கு வயசிருக்கு, மரியாத இருக்கு, பதவியும் இருக்கு. போய் அந்த ஹால்ல உக்காரும்மா.
அம்மா பயத்தோடும், திகைப்போடும் மகனை பார்த்தபடி நிக்கிறா.
மகன் : என்னம்மா அப்டி பாக்றே? ஓம்புருஷன் ராப்பகலா கண்ணு முழிச்சு, ஒழச்சு, சோறு போட்டு, படிக்க வச்சு ஒரு நல்ல நெலமக்கி கொண்டு வந்த ஒம்பையன், தன் சொந்...................த சம்பாத்யத்ல வாங்கன சோஃபாமா அது. கண்ட கண்ட கழுதைங்கல்லாம் உக்காந்து தேய்க்குது.
இதை கேட்டதும் சுதா சட்டுன்னு கோவத்தில எழுந்து உக்கார்றா.
மகன் அம்மாட்ட : நீ கொஞ்சம் உக்காந்து தேச்சா தப்புல்ல.
சுதா பெட்ரூம்ல இருந்து ஹாலுக்கு வர்றா. அம்மா அங்க சோஃபால உக்காந்திருக்கா. மகன் டிரஸ்ஸ மாத்திட்டு லுங்கியை கட்டிட்டு வர்றான்.
சுதா : என்ன ஆச்சு உங்க்ளுக்கு இன்னிக்கி?
இப்ப புருஷன் அவன் குரல்ல பேசல. அவன் ஆஃபிஸ்க்கு ஒரு பெரியவர் வந்து, “நான் சொல்றத அப்படியே வீட்ல போய் ஒங்க பொண்டாட்டிகிட்ட பேசுவீங்களா?” ன்னு கேட்டாரே, அவர் குரல் dubbing.
புருஷன் : அ..........................., இத்ன் நாளா................., பொடவ கட்டிட்ருந்தேன். இன்னைலிருந்து, லுங்கி கட்றதா முடிவு பண்ணிர்க்கேன்.
சுதா : What do you mean?
இப்டீ சொல்லிட்டு மாமியார் உக்காந்திருந்த சோஃபாவுக்கு முன்னால இருந்த, single சோஃபால உக்காந்து, கால் மேல கால் போட்டு உக்கார்றா.
புருஷன் சொடக்கு போட்டு எழுந்திரிமா" ன்னு சொல்றான். அவ எந்திரிக்கல. "எழுந்திர்ரி" புருஷன் கத்துறான். அவ மொறச்சுகிட்டே மெதுவா எந்திரிக்கிறா.
புருஷன் : ரெண்டு காபி கொண்டு வர்றியா? என்ன முழிக்கிற? காபி போட தெரியாதா? இல்ல.... கேஸ [gas] திறக்க தெரியாதா? இல்ல நெருப்பு குச்சிய வச்சு நெருப்பு பத்த வக்க தெரியாதா? இல்ல இந்த வீட்ல சமயகட்டு எங்க இருக்குன்னு தெரியாதா?
சுதா சட்டுன்னு திரும்பி கோவத்ல ஹாலை ஒரு சுத்த சுத்தி வர்றா. " This is too much. You are going beyond your limit."
புருஷன் : தமிழ்ல பேசுமா. நீ என்ன வெள்ளைக்காரனுக்கா பொறந்த?
சுதா அவன கோவமா முறைக்கிறா.
புருஷன் : எழுதிர்ற ஓம்பத்திரிகைல மாசாமாசம். பெத்த அப்பன பையன் நடுரோ...........ட்க்கு தொரத்தி விட்டான். பத்...........து மாசம் சொமந்து பெத்த தாய்க்கு பையன் சோறு போட்ல. கூட பொறந்த தங்கச்சிய அண்ணன் கவனிக்கல. இந்த ஆம்ப்ளைங்களே இப்டித்தான். ஒன்ன மாத்ரி ஒரு பொண்டாட்டி வாச்சா, நாங்கல்லாம் என்னம்மா பண்றது? பெண் என்பவள் மனித ஜாதியின் மிகச் சிறந்த பாதி. மகாத்மா காந்தி சொன்னத, நீங்களும் ஒங்க பத்திரிகையில் மொதல் பக்கத்தில போட்டிருக்கீங்க. அவர் சொல்வார்மா. ஏன்னா அவர் பொண்டாட்டி கஸ்தூரிபாய். எம்பொண்டாட்டி நீயாச்சே. மாதர் சங்க மீட்டிங்க்ல பேசிர்ற, பெண்கள் அவமானப்படுத்தப்படுகிறார்கள், பெண்கள் நசுக்கப்படுகிறார்கள், பெண்கள் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள்.
[அம்மாவ பார்த்து, அவள் தோள்ல கைய வச்சு]
எங்கம்மா மட்டும் பொம்ப்ள இல்லியா?
[இதோடு பெரியவரின் dubbing குரல் கட்டாகுது.
புருஷன் பேசுறான்]. தோ பார். இனிமே நீ பத்திரிகைல போயி எழுதி கிழிச்சதெல்லாம் போதும். சம்பாதிச்சு கொண்டு வந்து கொட்டுனது போதும். நாளை காலைலருந்து, இந்த வீட்டு பொண்ணா, எனக்கு பொண்டாட்டியா, எங்க அம்மாக்கு மருமகளா இருக்குற.
சுதா அவன் பக்கத்தில அவனது தெனாவட்டா. "இதுக்கு நான் சம்மதிக்கலேன்னா?"
புருஷன் : ஒவ்வீடு பாத்துகிட்டு நீ போ.
சுதா : எது எவ்வீடு?
புருஷன் : ஒங்கம்மா வீடு.
சுதா அலட்சியமா சிரிக்கிறா. “ஹஹ்ஹஹ்ஹஹ்ஹஹ்ஹ. நான் ஏன் எங்கம்மா வீட்டுக்கு போணும்? இந்த வீட்டுக்கு அட்வான்ஸ் நான் குடுத்ருக்கேன். வாடக நான் குடுத்ட்டு வர்றேன். நீங்க போட்ட சாப்பாட்டுக்கு, எத்தனையோ.............. நாளு இந்த ஒடம்ப ஒங்ளுக்கு தானம் பண்ணியாச்சு.”
அம்மா சோஃபால இருந்து எந்திரிக்கிறா.
புருஷன் அதிர்ச்சியாக அவளை பாக்குறான். அவள் பக்கத்தில வர்றான். "இதுதான் ஓம்முடிவா?"
சுதா : முடிவில்ல, ஆரம்பம். அடங்கி போயி, அடங்கி போய்தான், எங்ள நீங்க அடிமைகளாக்கிட்டீங்க. என்னால என் சொந்தக்கால்ல நிக்க முடியும்.
அம்மா அவங்க ரெண்டு பேர் பக்கத்ல வந்துட்டா. ரெண்டு பேரையும் மாறி மாறி பாக்குறா.
புருஷன் : ஹும், என்னிக்கி நமக்கு பந்தக்கால் போட்டாங்களோ, அன்னிக்கே ஒனக்கு சொந்தக்கால் போயாச்சு.
சுதா : புல்ஷிட் ச்சாலஞ்? [Thumbsup காட்றா]
அம்மா தெகச்சு, மகன் கையை பிடிக்கிறா. "சேகர்"
சேகர் : நீ சும்மா இரும்மா. [அம்மா கையை எடுத்து விட்றான்] ச்சாலஞ்ரி.
அவனும் Thumbsup காட்றான்.
என்ன படம், யார் யார் பேசியிருக்காங்க?
Heezulia
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5828
இணைந்தது : 03/12/2017
30.03.2018
கரீட்டு செந்தில்.
இதுக்கே பாதி மார்க் கொடுத்துறலாம்.
வாழ்த்து.
'க்கள்' முழுஸ்ஸா சொன்னதுக்கப்புறம். யோசிங்க யோசிங்க. மத்தவங்க என்ன பண்றீங்க, படிக்கலியா?
Heezulia
கரீட்டு செந்தில்.
இதுக்கே பாதி மார்க் கொடுத்துறலாம்.
வாழ்த்து.
'க்கள்' முழுஸ்ஸா சொன்னதுக்கப்புறம். யோசிங்க யோசிங்க. மத்தவங்க என்ன பண்றீங்க, படிக்கலியா?
Heezulia
- Sponsored content
Page 9 of 12 • 1, 2, 3 ... 8, 9, 10, 11, 12
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 9 of 12
|
|