Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm
» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
Top posting users this week
No user |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
+2
SK
heezulia
6 posters
Page 10 of 14
Page 10 of 14 • 1 ... 6 ... 9, 10, 11, 12, 13, 14
திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
First topic message reminder :
17.12.2017
கர்ணன் vs வேட்டைக்காரன்
ரஜனி / கமல், விஜய் / சூர்யா மாதிரி அப்போ சிவாஜி / MGR. இவங்க படங்கள் ரிலீஸ் ஆனா, அவங்கவங்க ரசிகர்கள் மோதிக்குவாங்களாம்.
பந்துலு எக் ............. கச்சக்கமான செலவுல கர்ணன் படத்தையும், திருமுகம் கொறஞ்.................ச பட்ஜெட்ல வேட்டைக்காரன் படத்தையும் எடுத்தாங்களாம். கர்ணன் படத்ல முன்னணி நட்சத்திர கூட்டம். பாதி படம் முடிஞ்சிருச்சாம். மீதி படத்தை எடுக்கவும் ஆரம்பிச்சாச்சாம். ஆனா வேட்டைக்காரன் படத்தை அப்பதான் எடுக்க ஆரம்பிச்சாங்களாம்.
பந்துலு கர்ணன் படத்தை பொங்கல் அன்னிக்கி ரிலீஸ் செய்ய சுறுசுறுப்பா வேல செஞ்சுட்டு இருந்தாராம். அப்போ ஒருத்தர் பந்துலுட்ட ஒரு விஷயத்தை சொல்லியிருக்கார். பந்துலு யோசிக்க ஆரம்பிச்சுட்டாராம். அந்த ஆள் சொன்ன விஷயம் என்ன............? கர்ணன் ரிலீஸ் ஆகிற அன்னிக்கே, திருமுகம் வேட்டைக்காரன் படத்தை ரிலீஸ் செய்ய போறதா.
ரெண்டு மெகா ஸ்டார் படங்கள் ஒண்ணா ரிலீஸ் ஆனா நல்லா இருக்காதே, வசூல் அடிபடுமேன்னு பந்துலு நினைச்சு, தமது குழுவினருடன் பேசினாராம். சிவாஜி காதிலும் போட்டு வச்சாங்க. அவரும் யோசனை செய்ய ஆரம்பிச்சுட்டாராம். வேட்டைக்காரன் படத் தயாரிப்பாளர் தேவரையும் கூப்ட்டு பேசியிருக்காங்க. ஆனா இவங்கல்லாம் என்னதான் பேசினாலும், MGR தான் ரிலீஸ் date சொல்லணுமாமே. ஒரு வாரம் கழிச்சு படத்தை ரிலீஸ் செய்யலாம்னு அவர்ட்ட எப்படி, யார் சொல்றது? அப்புறமா ஒருத்தர் ஒரு ஐடியா சொன்னாராம். MGR க்கு கர்ணன் படத்தை தனியா போட்டு காட்டிட்டு, அதுக்கப்புறமா ரிலீஸ் பத்தி பேசலாம்னு முடிவு செஞ்சாச்சாம். MGRட்ட போய் சொன்னாங்களாம். அவரும் படத்தை பார்க்க உம் சொல்லிட்டாராம்.
படத்தை பார்த்த MGRக்கு சிவாஜியின் நடிப்பு ரொம்ப புடிச்சு போச்சாம். "நடிப்புக்குன்னே பொறந்தவர்யா. மனுஷன் கர்ணனாவே வாழ்ந்திருக்கார்"ன்னு பாராட்டினாராம். பந்துலு உள்பட, எல்லா கலைஞர்களையும் மனசா................ர புகழ்ந்தாராம். படத்தின் வெற்றிக்கு வாழ்த்து சொல்லிட்டு போய்ட்டாராம். இப்படிப்பட்ட சமயத்தில் ரிலீஸை பத்தி பேச எல்லாரும் தயங்கினாங்களாம். வேட்டைக்காரன் படத்தை ஒரு வாரம் கழிச்சு ரிலீஸ் பண்றத பத்தி எப்படி பேசுறது?
மறுநாள். தேவரை கூப்ட்டுட்டு MGR ஐ பாக்க போனாங்களாம். விஷயத்தை சொல்லியிருக்காங்க. "படத்தை பார்த்தேன். ப்ரமாதமாய், ப்ரமாண்டமாய் இருக்கு. நண்பர் சிவாஜியும் நல்லாவே நடிச்சிருக்கார். சரி, ஒண்ணு செய்ங்க, ரெண்டு படத்தையும் ஒண்ணாவே ரிலீஸ் செஞ்சிருங்க. ரெண்டு பேர் ரசிகர்களும் பார்த்து ரசிச்ச மாதிரி இருக்கும்ல. ரெண்டு பேர் ரசிகர்களும் ரெண்டு படத்தையும் பார்க்கட்டுமே. எல்லாரும் சந்தோஷப்படுவாங்க".
வேற வழி? அப்டீ இப்டீன்னு ரெண்டு படங்களும் 14.01.1964 ல ரிலீஸ் ஆயிருச்சு. கர்ணன் ரிலீஸ் ஆன தியேட்டர்கள்ல பிரமாண்டமான பேனர்கள். படத்தை பார்த்தவங்க பாராட்டினாங்களாம். ஆனா அவ்ளோ பணம் செலவழிச்சு எடுத்த கர்ணன், வேட்டைக்காரன் மாதிரி வெற்றி பெறலியாம். ஆனா பாருங்க, 2012ல வெளியான டிஜிட்டல் படம் ஓஹோன்னு ஓடுச்சாம்.
ஆனா வேட்டைக்காரன் ரிலீஸ் ஆன தியேட்டர்களில் என்ன செஞ்சாங்க தெரியுமோ? தேவர் ஃபிலிம் ஆச்சே. நிஜமான கூண்டு வச்சு, நிஜமான புலியையும் கூண்டுக்குள்ள வச்சுட்டாங்களாம். இந்தப் புலியை பார்க்குறதுக்குன்னே .............. கூட்டம் கூடுச்சாம். Low பட்ஜெட் படம் வசூலை குவிச்சுதாம். இதுக்கு MGR என்ன செஞ்சார் தெரியுமா? பந்துலுவுக்கு 1965ல ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கு வாய்ப்பு கொடுத்தாராம். நல்ல லாபம் அள்ளிக் கொடுத்த படமாச்சே. கன்னாபின்னான்னு ஓடின படமாச்சே. நல்ல மனுஷர்தானே MGR.
Baby Heerajan
17.12.2017
கர்ணன் vs வேட்டைக்காரன்
ரஜனி / கமல், விஜய் / சூர்யா மாதிரி அப்போ சிவாஜி / MGR. இவங்க படங்கள் ரிலீஸ் ஆனா, அவங்கவங்க ரசிகர்கள் மோதிக்குவாங்களாம்.
பந்துலு எக் ............. கச்சக்கமான செலவுல கர்ணன் படத்தையும், திருமுகம் கொறஞ்.................ச பட்ஜெட்ல வேட்டைக்காரன் படத்தையும் எடுத்தாங்களாம். கர்ணன் படத்ல முன்னணி நட்சத்திர கூட்டம். பாதி படம் முடிஞ்சிருச்சாம். மீதி படத்தை எடுக்கவும் ஆரம்பிச்சாச்சாம். ஆனா வேட்டைக்காரன் படத்தை அப்பதான் எடுக்க ஆரம்பிச்சாங்களாம்.
பந்துலு கர்ணன் படத்தை பொங்கல் அன்னிக்கி ரிலீஸ் செய்ய சுறுசுறுப்பா வேல செஞ்சுட்டு இருந்தாராம். அப்போ ஒருத்தர் பந்துலுட்ட ஒரு விஷயத்தை சொல்லியிருக்கார். பந்துலு யோசிக்க ஆரம்பிச்சுட்டாராம். அந்த ஆள் சொன்ன விஷயம் என்ன............? கர்ணன் ரிலீஸ் ஆகிற அன்னிக்கே, திருமுகம் வேட்டைக்காரன் படத்தை ரிலீஸ் செய்ய போறதா.
ரெண்டு மெகா ஸ்டார் படங்கள் ஒண்ணா ரிலீஸ் ஆனா நல்லா இருக்காதே, வசூல் அடிபடுமேன்னு பந்துலு நினைச்சு, தமது குழுவினருடன் பேசினாராம். சிவாஜி காதிலும் போட்டு வச்சாங்க. அவரும் யோசனை செய்ய ஆரம்பிச்சுட்டாராம். வேட்டைக்காரன் படத் தயாரிப்பாளர் தேவரையும் கூப்ட்டு பேசியிருக்காங்க. ஆனா இவங்கல்லாம் என்னதான் பேசினாலும், MGR தான் ரிலீஸ் date சொல்லணுமாமே. ஒரு வாரம் கழிச்சு படத்தை ரிலீஸ் செய்யலாம்னு அவர்ட்ட எப்படி, யார் சொல்றது? அப்புறமா ஒருத்தர் ஒரு ஐடியா சொன்னாராம். MGR க்கு கர்ணன் படத்தை தனியா போட்டு காட்டிட்டு, அதுக்கப்புறமா ரிலீஸ் பத்தி பேசலாம்னு முடிவு செஞ்சாச்சாம். MGRட்ட போய் சொன்னாங்களாம். அவரும் படத்தை பார்க்க உம் சொல்லிட்டாராம்.
படத்தை பார்த்த MGRக்கு சிவாஜியின் நடிப்பு ரொம்ப புடிச்சு போச்சாம். "நடிப்புக்குன்னே பொறந்தவர்யா. மனுஷன் கர்ணனாவே வாழ்ந்திருக்கார்"ன்னு பாராட்டினாராம். பந்துலு உள்பட, எல்லா கலைஞர்களையும் மனசா................ர புகழ்ந்தாராம். படத்தின் வெற்றிக்கு வாழ்த்து சொல்லிட்டு போய்ட்டாராம். இப்படிப்பட்ட சமயத்தில் ரிலீஸை பத்தி பேச எல்லாரும் தயங்கினாங்களாம். வேட்டைக்காரன் படத்தை ஒரு வாரம் கழிச்சு ரிலீஸ் பண்றத பத்தி எப்படி பேசுறது?
மறுநாள். தேவரை கூப்ட்டுட்டு MGR ஐ பாக்க போனாங்களாம். விஷயத்தை சொல்லியிருக்காங்க. "படத்தை பார்த்தேன். ப்ரமாதமாய், ப்ரமாண்டமாய் இருக்கு. நண்பர் சிவாஜியும் நல்லாவே நடிச்சிருக்கார். சரி, ஒண்ணு செய்ங்க, ரெண்டு படத்தையும் ஒண்ணாவே ரிலீஸ் செஞ்சிருங்க. ரெண்டு பேர் ரசிகர்களும் பார்த்து ரசிச்ச மாதிரி இருக்கும்ல. ரெண்டு பேர் ரசிகர்களும் ரெண்டு படத்தையும் பார்க்கட்டுமே. எல்லாரும் சந்தோஷப்படுவாங்க".
வேற வழி? அப்டீ இப்டீன்னு ரெண்டு படங்களும் 14.01.1964 ல ரிலீஸ் ஆயிருச்சு. கர்ணன் ரிலீஸ் ஆன தியேட்டர்கள்ல பிரமாண்டமான பேனர்கள். படத்தை பார்த்தவங்க பாராட்டினாங்களாம். ஆனா அவ்ளோ பணம் செலவழிச்சு எடுத்த கர்ணன், வேட்டைக்காரன் மாதிரி வெற்றி பெறலியாம். ஆனா பாருங்க, 2012ல வெளியான டிஜிட்டல் படம் ஓஹோன்னு ஓடுச்சாம்.
ஆனா வேட்டைக்காரன் ரிலீஸ் ஆன தியேட்டர்களில் என்ன செஞ்சாங்க தெரியுமோ? தேவர் ஃபிலிம் ஆச்சே. நிஜமான கூண்டு வச்சு, நிஜமான புலியையும் கூண்டுக்குள்ள வச்சுட்டாங்களாம். இந்தப் புலியை பார்க்குறதுக்குன்னே .............. கூட்டம் கூடுச்சாம். Low பட்ஜெட் படம் வசூலை குவிச்சுதாம். இதுக்கு MGR என்ன செஞ்சார் தெரியுமா? பந்துலுவுக்கு 1965ல ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கு வாய்ப்பு கொடுத்தாராம். நல்ல லாபம் அள்ளிக் கொடுத்த படமாச்சே. கன்னாபின்னான்னு ஓடின படமாச்சே. நல்ல மனுஷர்தானே MGR.
Baby Heerajan
heezulia- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5874
இணைந்தது : 03/12/2017
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
21.03.2018
பத்..............த வச்சுட்டியே......... பரட்ட.
Heezulia
பத்..............த வச்சுட்டியே......... பரட்ட.
Heezulia
heezulia- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5874
இணைந்தது : 03/12/2017
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
21.03.2018
பத்த வச்சது நீங்களா? ரஜினி பத்த வச்சாரு. வடிவேலு பத்து போட்டாரு.
சரி, சரி, ரஜினியும், வடிவேலும் படத்தில பத்த வச்சாங்க. நீங்க இங்கயா?
சாதா..............ரணமாவா பத்த வச்சீங்க. தீயா..................ல்ல வேல செஞ்சிருக்கீங்க.
சரி சரி, இப்டியே நான் அரட்டை அடிச்சிட்டு இருந்தா, என் மத்த அஞ்சு தலைப்பும் என்னாவுறது?
Heezulia
பத்த வச்சது நீங்களா? ரஜினி பத்த வச்சாரு. வடிவேலு பத்து போட்டாரு.
சரி, சரி, ரஜினியும், வடிவேலும் படத்தில பத்த வச்சாங்க. நீங்க இங்கயா?
சாதா..............ரணமாவா பத்த வச்சீங்க. தீயா..................ல்ல வேல செஞ்சிருக்கீங்க.
சரி சரி, இப்டியே நான் அரட்டை அடிச்சிட்டு இருந்தா, என் மத்த அஞ்சு தலைப்பும் என்னாவுறது?
Heezulia
heezulia- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5874
இணைந்தது : 03/12/2017
Re: திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
மேற்கோள் செய்த பதிவு: 1263204heezulia wrote:20.03.2018
நன்றி முத்து சார்.
நூத்துக்கணக்கா....................ன தகவல்கள் இருக்கு சார். நேரந்தான் பத்தல.
அதுக்குன்னு, சரியா பத்தவைங்க பத்தும்னு சொல்லாதீங்க.
Heezulia
எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் துடுக்காக சுவாரஸ்யமாக பதிவு செய்து விடுகிறார்கள்.
அதில் ஒரு நகைச்சுவை ததும்புகிறது.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
25.03.2018
இயக்குனர் துரைக்கு, இயக்குனர் ஆறதுக்கு முன்னால, கதை எழுதுறதில ஆர்வம் இருந்துச்சு. கதை எழுதினாலே சினிமால பெரிய ஆளாயிறலாம்னு நெனச்சார். இயக்குனர் யோகானந்த் இடம் போயி, தன் சினிமா ஆசையை சொன்னார்.
கதை எழுதுறதில அண்ணா, கலைஞர் ஜாம்பவான்களாக இருந்த சமயம். துரை புதுசாச்சே, அவருடைய கதையை ஏத்துக்குவாங்களான்னு யோகானாந்த் யோசிச்சார். ஆனாலும் துரையின் ஆசையை நிராகரிக்க பிடிக்கல. அதனால, சினிமாவின் தொழில் நுட்பங்களை பற்றி தெரிஞ்சிகிட்டா, எழுத்தாளராகலாம், இயக்குனராகலாம்னு சொன்னார். அதன்படி ஒளிப்பதிவாளர் ரங்கசாமிட்ட போய் கத்துக்க ஆரம்பிச்சார். கெடச்ச நேரத்தில எடிட்டிங்கையும் கத்துகிட்டார்.
‘அனார்கலி’ன்னு தெலுங்கு படம். அஞ்சலி, நாகேஸ்வரராவ் நடிச்சது. இந்தப் படத்தில துரைக்கு அதிர்ஷ்டம் அடிச்சுது. படத்தின் டைட்டில்ல, ‘ஒலிப்பதிவு உதவி – துரை’ ன்னு போட்டிருந்துச்சு. அதை பார்த்து துரை சந்தோஷப்பட்டார். உறவினர்களையும், நண்பர்களையும் தியேட்டருக்கு கூட்டியாந்து காட்டினார். இதுதான் துரைக்கு கெடச்ச முதல் வெற்றி. ஆனாலும் எப்..................படியா.................வது டைரக்டர் ஆயிரணும்னுதான் துரையின் ஒரு லட்சியமாவே இருந்துச்சு.
கல்யாண்குமார் நடிச்ச ஒரு தெலுங்கு படம். அந்த படத்தில் தான் நடிச்ச ஒரு பாட்டை பார்க்க, கல்யாண்குமார் வந்தார். அந்த ஸ்டூடியோவின் தியேட்டர்ல துரை வேலை செஞ்சுட்டு இருந்தார். கல்யாண்குமார் வந்த சமயத்தில, ப்ரொஜெக்டரை ஓட்ற ஆப்பரேட்டர் இல்ல. கல்யாண்குமாருக்கு தான் நடிச்ச பாட்டு ஸீனை பார்க்க முடியலியேன்னு வருத்தம். அந்த சமயத்தில துரை போட்டு காட்டியிருக்கார். துரையின் இந்த உதவி, கல்யாண்குமாருக்கு பிடிச்சு போச்சு. அதிலே இருந்து ரெண்டு பேரும் நல்ல நண்பர்கள் ஆயிட்டாங்க.
அதுக்கப்புறம் அவருடைய உதவியினால, கதை எழுதுறதோட, உதவி இயக்குனர் வேலையும் கெடச்சிருச்சு. தமிழ் படத்தில வேலை செய்யணும்னு நெனச்ச துரையின் ஆசை நிறைவேறுச்சா. இல்ல. கன்னட சினிமாவில்தான் துரைக்கு வேலை கெடச்சுது. ஏன்னா கல்யாண்குமார், துரையை கன்னட பட இயக்குனர்ட்டல்ல அறிமுகபடுத்தி வச்சுட்டார்.
அந்த வேலையோட இன்னொண்ணையும் கத்துகிட்டார். கன்னடம். கன்னட படங்கள்ல உதவி இயக்குனராக இருந்துட்டே, கன்னட படங்களுக்கு கதையும் எழுதினார். இந்த கதைகள் படமானபோ, அந்த படங்கள் வெற்றிகரமா ஓடுச்சு.
அந்த சமயத்தில கன்னட படங்கள்ல பண்டரிபாய் நடிச்சிட்டு இருந்தார். துரை துணை இயக்குனராக வேலை செஞ்சு, பண்டரிபாய் நடிச்ச படங்கள் நல்லா ஓடுச்சு. அதனால, தான் தயாரிக்க போற தமிழ் படத்துக்கு, துரை இயக்குனராக இருக்கணும்னு ஆசைப்பட்டார். துரைக்கு தலை எங்க இருக்கு, கால் எங்க இருக்குன்னு தெரியாம சந்தோஷப்பட்டார். சரீன்னுட்டார்.
கரும்பு திங்க கூலியா?
அவர்ட்ட ஒரு கதை இருக்கூன்னு பண்டரிபாய்ட்ட துரை சொன்னார். பெண்களுக்கு பிடிக்கிற மாதிரியான கதை இருந்தா நல்லா இருக்கும்னு சொன்னார். அவர்ட்ட இருந்த கதையை சொல்லி, அது பண்டரிபாய்க்கு புடிச்சிருந்துச்சு. இந்த கதைக்கு, புதுசா யாராவது நடிச்சா படம் நல்லா ஓடும்னு துரை சொன்னார். பண்டரிபாயும் ஒத்துகிட்டார். அந்த சமயத்தில ஆப்ட்டவர்தான் சுமித்ரா. இவரோட முதல் படம் ‘அவளும் பெண்தானே’. இந்தப் படம் 1975 பொங்கல் அன்னிக்கு ரிலீஸ் ஆகி, 100 நாள் ஓடுச்சு. இயக்குனராக வேலை செஞ்ச துரையின் முதல் படமே ஓஹோன்னு ஓடினதால, நல்ல கதாசிரியர், இயக்குனர்னு பேர் கெடச்சிருச்சு.
- ரமணி
- தொடரும்
Heezulia
இயக்குனர் துரைக்கு, இயக்குனர் ஆறதுக்கு முன்னால, கதை எழுதுறதில ஆர்வம் இருந்துச்சு. கதை எழுதினாலே சினிமால பெரிய ஆளாயிறலாம்னு நெனச்சார். இயக்குனர் யோகானந்த் இடம் போயி, தன் சினிமா ஆசையை சொன்னார்.
கதை எழுதுறதில அண்ணா, கலைஞர் ஜாம்பவான்களாக இருந்த சமயம். துரை புதுசாச்சே, அவருடைய கதையை ஏத்துக்குவாங்களான்னு யோகானாந்த் யோசிச்சார். ஆனாலும் துரையின் ஆசையை நிராகரிக்க பிடிக்கல. அதனால, சினிமாவின் தொழில் நுட்பங்களை பற்றி தெரிஞ்சிகிட்டா, எழுத்தாளராகலாம், இயக்குனராகலாம்னு சொன்னார். அதன்படி ஒளிப்பதிவாளர் ரங்கசாமிட்ட போய் கத்துக்க ஆரம்பிச்சார். கெடச்ச நேரத்தில எடிட்டிங்கையும் கத்துகிட்டார்.
‘அனார்கலி’ன்னு தெலுங்கு படம். அஞ்சலி, நாகேஸ்வரராவ் நடிச்சது. இந்தப் படத்தில துரைக்கு அதிர்ஷ்டம் அடிச்சுது. படத்தின் டைட்டில்ல, ‘ஒலிப்பதிவு உதவி – துரை’ ன்னு போட்டிருந்துச்சு. அதை பார்த்து துரை சந்தோஷப்பட்டார். உறவினர்களையும், நண்பர்களையும் தியேட்டருக்கு கூட்டியாந்து காட்டினார். இதுதான் துரைக்கு கெடச்ச முதல் வெற்றி. ஆனாலும் எப்..................படியா.................வது டைரக்டர் ஆயிரணும்னுதான் துரையின் ஒரு லட்சியமாவே இருந்துச்சு.
கல்யாண்குமார் நடிச்ச ஒரு தெலுங்கு படம். அந்த படத்தில் தான் நடிச்ச ஒரு பாட்டை பார்க்க, கல்யாண்குமார் வந்தார். அந்த ஸ்டூடியோவின் தியேட்டர்ல துரை வேலை செஞ்சுட்டு இருந்தார். கல்யாண்குமார் வந்த சமயத்தில, ப்ரொஜெக்டரை ஓட்ற ஆப்பரேட்டர் இல்ல. கல்யாண்குமாருக்கு தான் நடிச்ச பாட்டு ஸீனை பார்க்க முடியலியேன்னு வருத்தம். அந்த சமயத்தில துரை போட்டு காட்டியிருக்கார். துரையின் இந்த உதவி, கல்யாண்குமாருக்கு பிடிச்சு போச்சு. அதிலே இருந்து ரெண்டு பேரும் நல்ல நண்பர்கள் ஆயிட்டாங்க.
அதுக்கப்புறம் அவருடைய உதவியினால, கதை எழுதுறதோட, உதவி இயக்குனர் வேலையும் கெடச்சிருச்சு. தமிழ் படத்தில வேலை செய்யணும்னு நெனச்ச துரையின் ஆசை நிறைவேறுச்சா. இல்ல. கன்னட சினிமாவில்தான் துரைக்கு வேலை கெடச்சுது. ஏன்னா கல்யாண்குமார், துரையை கன்னட பட இயக்குனர்ட்டல்ல அறிமுகபடுத்தி வச்சுட்டார்.
அந்த வேலையோட இன்னொண்ணையும் கத்துகிட்டார். கன்னடம். கன்னட படங்கள்ல உதவி இயக்குனராக இருந்துட்டே, கன்னட படங்களுக்கு கதையும் எழுதினார். இந்த கதைகள் படமானபோ, அந்த படங்கள் வெற்றிகரமா ஓடுச்சு.
அந்த சமயத்தில கன்னட படங்கள்ல பண்டரிபாய் நடிச்சிட்டு இருந்தார். துரை துணை இயக்குனராக வேலை செஞ்சு, பண்டரிபாய் நடிச்ச படங்கள் நல்லா ஓடுச்சு. அதனால, தான் தயாரிக்க போற தமிழ் படத்துக்கு, துரை இயக்குனராக இருக்கணும்னு ஆசைப்பட்டார். துரைக்கு தலை எங்க இருக்கு, கால் எங்க இருக்குன்னு தெரியாம சந்தோஷப்பட்டார். சரீன்னுட்டார்.
கரும்பு திங்க கூலியா?
அவர்ட்ட ஒரு கதை இருக்கூன்னு பண்டரிபாய்ட்ட துரை சொன்னார். பெண்களுக்கு பிடிக்கிற மாதிரியான கதை இருந்தா நல்லா இருக்கும்னு சொன்னார். அவர்ட்ட இருந்த கதையை சொல்லி, அது பண்டரிபாய்க்கு புடிச்சிருந்துச்சு. இந்த கதைக்கு, புதுசா யாராவது நடிச்சா படம் நல்லா ஓடும்னு துரை சொன்னார். பண்டரிபாயும் ஒத்துகிட்டார். அந்த சமயத்தில ஆப்ட்டவர்தான் சுமித்ரா. இவரோட முதல் படம் ‘அவளும் பெண்தானே’. இந்தப் படம் 1975 பொங்கல் அன்னிக்கு ரிலீஸ் ஆகி, 100 நாள் ஓடுச்சு. இயக்குனராக வேலை செஞ்ச துரையின் முதல் படமே ஓஹோன்னு ஓடினதால, நல்ல கதாசிரியர், இயக்குனர்னு பேர் கெடச்சிருச்சு.
- ரமணி
- தொடரும்
Heezulia
heezulia- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5874
இணைந்தது : 03/12/2017
Re: திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
04.04.2018
துரை இயக்கிய ‘அவளும் பெண்தானே’ படம் ஓஹோன்னு ஓடினதால, அதை கன்னடத்தில எடுத்தார். அதுலேயும் சுமித்ராதான் ஹீரோயின். ஆனா கன்னடத்ல படம் சரியா ஓடல.
கன்னட டைரக்டக்கர் புட்டண்ணா ரஜினிய வச்சு டைரக்ட்டின ஒரு படம் நல்லா ஓடினதால, துரைக்கு ரஜினியை வச்சு ஒரு படம் டைரக்ட்டணும்னு ஆசை வந்துச்சு. அவரோட ஆசை நிறைவேருச்சு. சதுரங்கம், ரகுபதி ராகவ ராஜாராம், ஆயிரம் ஜென்மங்கள், பாவத்தின் சம்பளம் படங்கள் டைரக்ட் செஞ்சார். மலையாளத்தில வந்த ‘யக்க்ஷ கானம்’ படத்தை ஆயிரம் ஜென்மங்கள் படமாக தமிழ்ல எடுத்தார். இந்த படத்தில ரஜினியோடு லதா நடிச்சா நல்லா இருக்குமேன்னு துரை நெனச்சார். லதாவிடம் கேட்டபோ, தயக்கமில்லாம சரீன்னுட்டார். ஸ்ரீப்ரியாவை வச்சு ‘நீயா’ படத்தை டைரக்ட் செஞ்சு, அதுவும் பெரும் வெற்றி பெற்றது.
அகில இந்திய அளவில, துரைக்கு பேர் வாங்கி கொடுத்த படம் ‘பசி’. இந்தக் கதை ரொம்ப நா.....................ளா துரையின் மனசில இருந்திருக்கு இவருக்கு எப்பவுமே கதை நடக்கிற இடத்தில்தான் கதை எழுதி பழக்கம். குப்பத்து ஜனங்களின் வாழ்க்கையை பற்றி எழுதணும்னு நெனச்சார். மெரீனால உள்ள சேரிக்கே போய்ட்டார். அங்க உக்காந்து கதை எழுதினர். நட்ராத்திரி ஆயிருச்சு. ஒரு ரிக் ஷால ஏறி போனார். போற வழில, அந்த ரிக் ஷாவை ஓட்டிட்டு போனவன், துரைட்ட சொல்லிட்டு வந்த சொந்தக்கதை இந்த பசி படமாச்சு.
பல பேர்ட்ட இந்தக் கதையை சொல்லி பார்த்திருக்கார். கதையை கேட்டவங்க, கதை நல்ல இருக்குன்னு சொன்னாங்களே தவிர, படமா எடுக்க காணோம். அதனாலே துரையே அந்த படத்தை தயாரிச்சுட்டார். அந்த சமயத்தில ஓஹோ நடிகை, யதார்த்த நடிகை ஷோபா. அவரையே வச்சு ‘பசி’ படத்தை எடுத்தார்.
புது ஆளுங்களை இந்த படத்தில நடிக்க வைக்கலாம்னு, பிரவீணா, செந்தில், சத்யா, நாராயணன் இவங்களல்லாம் நடிக்க வச்சார். ஆமா, இவங்கல்லாம் துரையின் சினிமா அறிமுகங்கள். ‘பசி’ சத்யா, ‘பசி’நாராயணன் இப்படி வந்தவங்க.
ஷோபா இந்தப் படத்தில ப்ராமண பொண்ணா நடிச்சார். அதனால ப்ராமண பொண்ணுகளோட நடை, உடை பாவனைகளை கவனிக்க சொன்னார், துரை. தவிர படத்தில ஷோபா சேரி பொண்ணு. அதனால அதுக்காகவும் துரை ஷோபாவுக்கு ட்ரைனிங் எடுத்துக்க ஏற்பாடுகளை செஞ்சார். டெல்லி கணேஷ் ரிக் ஷா ஓட்றவறா வருவார். அதுக்காக, புது ரிக் ஷாவையே வாங்கி கொடுத்து, அவர் ஓட்டி பழக ஏற்பாடுகள் செஞ்சார்.
ஸ்டூடியோல ஒத்திகை பாத்துட்டு, அப்புறமா சேரீல ஷூட்டிங் நடந்துச்சு. மேக்கப் இல்ல, பாட்டு இல்ல, டான்ஸ் இல்ல. 22 நாள்ல முடிச்ச படம். ஷூட்டிங் முடிஞ்சுது. படத்தை விநியோகம் செய்யணுமே. படத்தை போட்டு காட்டினார். விநியோகஸ்தர்கள் பாத்தாங்க.
“படம் நல்லா இருக்கே.”
அம்புட்டுதான். பாராட்டினாங்க. சொல்லிட்டு போய்ட்டாங்க. துரை அஸ்....................ஸரலியே. எழுத்தாளர்கள், தயாரிப்பாளர்கள், எல்லா மொழி டைரக்டர்கள் இவங்களை எல்லாம் கூப்ட்டார். அவங்களும் என்ன, படத்தை பாத்தாங்க, பாராட்டினாங்க. அவ்ளோதான். படத்தை எடுக்க எப்படி யா.........................ரும் முன்வரலியோ, அதே............ மாதிரிதான், படத்தை வாங்கவும் யாரும் முன்வரல. துரையே படத்தை எடுத்த மாதிரி, அவரே ரிலீஸும் செஞ்சுட்டார்.
இந்த படம் எங்கே ஓட போகுதுன்னு நெனச்சவங்களுக்கெல்லாம், இதோ பார்னு, ஓஹோன்னு ஓடி சாதனை செஞ்சுது. விருதுகள் வாங்குச்சு. அதுங்கள்ல ஒண்ணு, மாநில மொழி படத்தின் சிறந்த டைரக்டக்கர்ங்கற விருதை, இந்த படத்துக்காக துரை வாங்கினார்.
- தொடரும்
- ரமணி
Heezulia
துரை இயக்கிய ‘அவளும் பெண்தானே’ படம் ஓஹோன்னு ஓடினதால, அதை கன்னடத்தில எடுத்தார். அதுலேயும் சுமித்ராதான் ஹீரோயின். ஆனா கன்னடத்ல படம் சரியா ஓடல.
கன்னட டைரக்டக்கர் புட்டண்ணா ரஜினிய வச்சு டைரக்ட்டின ஒரு படம் நல்லா ஓடினதால, துரைக்கு ரஜினியை வச்சு ஒரு படம் டைரக்ட்டணும்னு ஆசை வந்துச்சு. அவரோட ஆசை நிறைவேருச்சு. சதுரங்கம், ரகுபதி ராகவ ராஜாராம், ஆயிரம் ஜென்மங்கள், பாவத்தின் சம்பளம் படங்கள் டைரக்ட் செஞ்சார். மலையாளத்தில வந்த ‘யக்க்ஷ கானம்’ படத்தை ஆயிரம் ஜென்மங்கள் படமாக தமிழ்ல எடுத்தார். இந்த படத்தில ரஜினியோடு லதா நடிச்சா நல்லா இருக்குமேன்னு துரை நெனச்சார். லதாவிடம் கேட்டபோ, தயக்கமில்லாம சரீன்னுட்டார். ஸ்ரீப்ரியாவை வச்சு ‘நீயா’ படத்தை டைரக்ட் செஞ்சு, அதுவும் பெரும் வெற்றி பெற்றது.
அகில இந்திய அளவில, துரைக்கு பேர் வாங்கி கொடுத்த படம் ‘பசி’. இந்தக் கதை ரொம்ப நா.....................ளா துரையின் மனசில இருந்திருக்கு இவருக்கு எப்பவுமே கதை நடக்கிற இடத்தில்தான் கதை எழுதி பழக்கம். குப்பத்து ஜனங்களின் வாழ்க்கையை பற்றி எழுதணும்னு நெனச்சார். மெரீனால உள்ள சேரிக்கே போய்ட்டார். அங்க உக்காந்து கதை எழுதினர். நட்ராத்திரி ஆயிருச்சு. ஒரு ரிக் ஷால ஏறி போனார். போற வழில, அந்த ரிக் ஷாவை ஓட்டிட்டு போனவன், துரைட்ட சொல்லிட்டு வந்த சொந்தக்கதை இந்த பசி படமாச்சு.
பல பேர்ட்ட இந்தக் கதையை சொல்லி பார்த்திருக்கார். கதையை கேட்டவங்க, கதை நல்ல இருக்குன்னு சொன்னாங்களே தவிர, படமா எடுக்க காணோம். அதனாலே துரையே அந்த படத்தை தயாரிச்சுட்டார். அந்த சமயத்தில ஓஹோ நடிகை, யதார்த்த நடிகை ஷோபா. அவரையே வச்சு ‘பசி’ படத்தை எடுத்தார்.
புது ஆளுங்களை இந்த படத்தில நடிக்க வைக்கலாம்னு, பிரவீணா, செந்தில், சத்யா, நாராயணன் இவங்களல்லாம் நடிக்க வச்சார். ஆமா, இவங்கல்லாம் துரையின் சினிமா அறிமுகங்கள். ‘பசி’ சத்யா, ‘பசி’நாராயணன் இப்படி வந்தவங்க.
ஷோபா இந்தப் படத்தில ப்ராமண பொண்ணா நடிச்சார். அதனால ப்ராமண பொண்ணுகளோட நடை, உடை பாவனைகளை கவனிக்க சொன்னார், துரை. தவிர படத்தில ஷோபா சேரி பொண்ணு. அதனால அதுக்காகவும் துரை ஷோபாவுக்கு ட்ரைனிங் எடுத்துக்க ஏற்பாடுகளை செஞ்சார். டெல்லி கணேஷ் ரிக் ஷா ஓட்றவறா வருவார். அதுக்காக, புது ரிக் ஷாவையே வாங்கி கொடுத்து, அவர் ஓட்டி பழக ஏற்பாடுகள் செஞ்சார்.
ஸ்டூடியோல ஒத்திகை பாத்துட்டு, அப்புறமா சேரீல ஷூட்டிங் நடந்துச்சு. மேக்கப் இல்ல, பாட்டு இல்ல, டான்ஸ் இல்ல. 22 நாள்ல முடிச்ச படம். ஷூட்டிங் முடிஞ்சுது. படத்தை விநியோகம் செய்யணுமே. படத்தை போட்டு காட்டினார். விநியோகஸ்தர்கள் பாத்தாங்க.
“படம் நல்லா இருக்கே.”
அம்புட்டுதான். பாராட்டினாங்க. சொல்லிட்டு போய்ட்டாங்க. துரை அஸ்....................ஸரலியே. எழுத்தாளர்கள், தயாரிப்பாளர்கள், எல்லா மொழி டைரக்டர்கள் இவங்களை எல்லாம் கூப்ட்டார். அவங்களும் என்ன, படத்தை பாத்தாங்க, பாராட்டினாங்க. அவ்ளோதான். படத்தை எடுக்க எப்படி யா.........................ரும் முன்வரலியோ, அதே............ மாதிரிதான், படத்தை வாங்கவும் யாரும் முன்வரல. துரையே படத்தை எடுத்த மாதிரி, அவரே ரிலீஸும் செஞ்சுட்டார்.
இந்த படம் எங்கே ஓட போகுதுன்னு நெனச்சவங்களுக்கெல்லாம், இதோ பார்னு, ஓஹோன்னு ஓடி சாதனை செஞ்சுது. விருதுகள் வாங்குச்சு. அதுங்கள்ல ஒண்ணு, மாநில மொழி படத்தின் சிறந்த டைரக்டக்கர்ங்கற விருதை, இந்த படத்துக்காக துரை வாங்கினார்.
- தொடரும்
- ரமணி
Heezulia
heezulia- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5874
இணைந்தது : 03/12/2017
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
04.04.2018
இது ரெண்டாம் பாகமாக்கும். இன்னொரு பாகம் ரெடி ஆயிட்டு இருக்கு.
Heezulia
இது ரெண்டாம் பாகமாக்கும். இன்னொரு பாகம் ரெடி ஆயிட்டு இருக்கு.
Heezulia
heezulia- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5874
இணைந்தது : 03/12/2017
Re: திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
04.04.2018
பசி படத்தின் வெற்றிக்கு அப்புறம், துரை பிஸியாயிட்டார். 1979ல மட்டும் ஒம்போ................து படம் டைரக்ட்டினார். 1981ல கிளிஞ்சல்கள் இவரோட படம்தான். மோகன் நடிச்சது. பூர்ணிமா ஜெயராமை இதுலதான் ஹீரோயினாக துரை அறிமுகம் செஞ்சார். ஹிந்தி பட பிரபல ஹீரோயின் ஹேமமாலினியின் அம்மா ஜெயா சக்கரவர்த்தி. இவர்தான் துரையிடம் பூர்ணிமாவை பற்றி சொல்லி அறிமுகப்படுத்தினார். இந்தப் படமும் ஓஹோன்னு ஓடினதால, துரையின் புகழ் அதிகமாச்சு. கிளிஞ்சல்கள் படம் 250 நாளை தாண்டி ஓடுச்சு. துரை வெற்றி பட இயக்குனர்னு பேர் வாங்கிட்டார். மலையாளத்தில இந்த படம் ரூபி மை டார்லிங் பேர்ல உருவாச்சு. துரைதான் டைரக்டக்கினார். மலையாள படமும் ஓஹோ. தெலுங்கிலேயும், ஹிந்திலயும் கூட அட்டகாசமா ஓடுச்சு.
சரத்குமாரை துரைதான் சினிமாவுக்குள்ள கொண்டுவந்தார். ஆனா தமிழ்ல இல்ல. தெலுங்கில.
MGRஇன் ராமாவரம் தோட்டத்தில, துரை ஒரு நாள் MGR கூட பேசிட்டு இருந்தாராம். அப்போ MGR, “நான் CM ஆயிட்டதால உங்க டைரக் ஷன்ல நான் நடிக்க முடியாம போச்சூ”ன்னு சொன்னார். பசி படம் MGRக்கு ரொம்ப புடிக்குமாம். அதனால துரையின் இயக்கத்தில, தான் நடிக்க முடியாட்டாலும் பரவா இல்ல. சிவாஜியை நடிக்க வைக்கணும்னு ஆசைப்பட்டார். தன்னோட ஆசையை துரையிடம் சொல்லி, துரை சிவாஜிட்ட சொன்னார். ஆனா சிவாஜி மொதல்ல நம்பல. அப்புறமா MGRஇன் விருப்பத்தின்படி, சந்தோ.......................ஷமா ஒத்துகிட்டார்.
ஆனா துரைக்கு, சிவாஜியை வச்சு படத்தை இயக்க பயமாயிருந்துச்சாம். சிவாஜி அதை பார்த்து, துரைக்கு தைரியம் சொன்னார். ஓடுற ட்ரெயின்ல ஷூட்டிங். அதுக்கு ஒரு எலெக்ட்ரிக் ட்ரெயினை வாடகைக்கு வாங்கினார், துரை. எதாவது அதிர்ச்சியான செய்தியை கேட்டா, சிவாஜிக்கு காக்கா வலிப்பு வர்ற மாதிரி ஸீன். இந்த ஸீனை பற்றி துரை சிவாஜிட்ட சொன்னார்.
“அதெல்லாம் பெரிய விஷயமில்ல. ஆனா ஒரே.................. ஷாட்ல நடிச்சிருவேன். அதுக்கப்புறமா, மிடில் ஷாட், க்ளோஸப் ஷாட்னு சொல்லக்கூடாது.”ன்னு சிவாஜி சொல்லிட்டார். துரைக்கு ஷாக். என்ன செய்றதுன்னு தெரியாம,
“சரி, ஆனா யோசிக்க எனக்கு ஒரு மணி நேரம் டைம் வேணும்” னு சொல்லிட்டார்.
“இதுக்கு எதுக்கு ஒரு மணி நேரம்?”
“இல்ல, நீங்க ஒரே ஷாட்லதான் எடுக்கணும்னு சொல்லிட்டீங்க. அது கொஞ்சம் கஷ்டம்தான். அதனால் இன்னும் ரெண்டு கேமரா வேண்டியதிருக்கு. அதுக்குதான் ஒரு மணி நேரம் டைம் கேட்டேன்.”
ரெண்டு கேமரா ஒரு மணி நேரத்தில வந்துச்சு. துரை சொன்ன அந்த ஸீனையும் எடுத்தாச்சு. எனக்கு படம் வந்ததே தெரியாத நிறை.........................ய படங்கள்ல இந்த துணை படமும் ஒண்ணு.
துரை மனசுல ஒரு குறை இருந்துச்சாம். சிவாஜி கூட அநேகமாக எல்லா இளம் நடிகர்களும் நடிச்சிட்டாங்களே, விஜயகாந்த் இன்னும் நடிக்கலியேங்கற குறைதான். அட, இதை எதுக்கு ஒரு குறையா வச்சுக்கணும், சரி பண்ணிர்லாமேன்னு, வீரபாண்டின்னு ஒரு படத்தை தயாரிச்சார். அந்த படத்தின் டைட்டில்ல, “முதல் முறையாக இருவரும் இணைந்து நடிக்கும்” ன்னு போட்டிருக்கு.
- ரமணி
Heezulia
பசி படத்தின் வெற்றிக்கு அப்புறம், துரை பிஸியாயிட்டார். 1979ல மட்டும் ஒம்போ................து படம் டைரக்ட்டினார். 1981ல கிளிஞ்சல்கள் இவரோட படம்தான். மோகன் நடிச்சது. பூர்ணிமா ஜெயராமை இதுலதான் ஹீரோயினாக துரை அறிமுகம் செஞ்சார். ஹிந்தி பட பிரபல ஹீரோயின் ஹேமமாலினியின் அம்மா ஜெயா சக்கரவர்த்தி. இவர்தான் துரையிடம் பூர்ணிமாவை பற்றி சொல்லி அறிமுகப்படுத்தினார். இந்தப் படமும் ஓஹோன்னு ஓடினதால, துரையின் புகழ் அதிகமாச்சு. கிளிஞ்சல்கள் படம் 250 நாளை தாண்டி ஓடுச்சு. துரை வெற்றி பட இயக்குனர்னு பேர் வாங்கிட்டார். மலையாளத்தில இந்த படம் ரூபி மை டார்லிங் பேர்ல உருவாச்சு. துரைதான் டைரக்டக்கினார். மலையாள படமும் ஓஹோ. தெலுங்கிலேயும், ஹிந்திலயும் கூட அட்டகாசமா ஓடுச்சு.
சரத்குமாரை துரைதான் சினிமாவுக்குள்ள கொண்டுவந்தார். ஆனா தமிழ்ல இல்ல. தெலுங்கில.
MGRஇன் ராமாவரம் தோட்டத்தில, துரை ஒரு நாள் MGR கூட பேசிட்டு இருந்தாராம். அப்போ MGR, “நான் CM ஆயிட்டதால உங்க டைரக் ஷன்ல நான் நடிக்க முடியாம போச்சூ”ன்னு சொன்னார். பசி படம் MGRக்கு ரொம்ப புடிக்குமாம். அதனால துரையின் இயக்கத்தில, தான் நடிக்க முடியாட்டாலும் பரவா இல்ல. சிவாஜியை நடிக்க வைக்கணும்னு ஆசைப்பட்டார். தன்னோட ஆசையை துரையிடம் சொல்லி, துரை சிவாஜிட்ட சொன்னார். ஆனா சிவாஜி மொதல்ல நம்பல. அப்புறமா MGRஇன் விருப்பத்தின்படி, சந்தோ.......................ஷமா ஒத்துகிட்டார்.
ஆனா துரைக்கு, சிவாஜியை வச்சு படத்தை இயக்க பயமாயிருந்துச்சாம். சிவாஜி அதை பார்த்து, துரைக்கு தைரியம் சொன்னார். ஓடுற ட்ரெயின்ல ஷூட்டிங். அதுக்கு ஒரு எலெக்ட்ரிக் ட்ரெயினை வாடகைக்கு வாங்கினார், துரை. எதாவது அதிர்ச்சியான செய்தியை கேட்டா, சிவாஜிக்கு காக்கா வலிப்பு வர்ற மாதிரி ஸீன். இந்த ஸீனை பற்றி துரை சிவாஜிட்ட சொன்னார்.
“அதெல்லாம் பெரிய விஷயமில்ல. ஆனா ஒரே.................. ஷாட்ல நடிச்சிருவேன். அதுக்கப்புறமா, மிடில் ஷாட், க்ளோஸப் ஷாட்னு சொல்லக்கூடாது.”ன்னு சிவாஜி சொல்லிட்டார். துரைக்கு ஷாக். என்ன செய்றதுன்னு தெரியாம,
“சரி, ஆனா யோசிக்க எனக்கு ஒரு மணி நேரம் டைம் வேணும்” னு சொல்லிட்டார்.
“இதுக்கு எதுக்கு ஒரு மணி நேரம்?”
“இல்ல, நீங்க ஒரே ஷாட்லதான் எடுக்கணும்னு சொல்லிட்டீங்க. அது கொஞ்சம் கஷ்டம்தான். அதனால் இன்னும் ரெண்டு கேமரா வேண்டியதிருக்கு. அதுக்குதான் ஒரு மணி நேரம் டைம் கேட்டேன்.”
ரெண்டு கேமரா ஒரு மணி நேரத்தில வந்துச்சு. துரை சொன்ன அந்த ஸீனையும் எடுத்தாச்சு. எனக்கு படம் வந்ததே தெரியாத நிறை.........................ய படங்கள்ல இந்த துணை படமும் ஒண்ணு.
துரை மனசுல ஒரு குறை இருந்துச்சாம். சிவாஜி கூட அநேகமாக எல்லா இளம் நடிகர்களும் நடிச்சிட்டாங்களே, விஜயகாந்த் இன்னும் நடிக்கலியேங்கற குறைதான். அட, இதை எதுக்கு ஒரு குறையா வச்சுக்கணும், சரி பண்ணிர்லாமேன்னு, வீரபாண்டின்னு ஒரு படத்தை தயாரிச்சார். அந்த படத்தின் டைட்டில்ல, “முதல் முறையாக இருவரும் இணைந்து நடிக்கும்” ன்னு போட்டிருக்கு.
- ரமணி
Heezulia
heezulia- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5874
இணைந்தது : 03/12/2017
Page 10 of 14 • 1 ... 6 ... 9, 10, 11, 12, 13, 14
Similar topics
» பின்னால் என்ன இருக்கு?
» ஆவி உள்ளதா? மரணத்திற்கு பின்னால் என்ன நடக்கின்றது?
» என்ன நடந்தது?
» நடந்தது என்ன? - ஒரு பக்க கதை
» ஜெனிவாவில் நடந்தது என்ன?
» ஆவி உள்ளதா? மரணத்திற்கு பின்னால் என்ன நடக்கின்றது?
» என்ன நடந்தது?
» நடந்தது என்ன? - ஒரு பக்க கதை
» ஜெனிவாவில் நடந்தது என்ன?
Page 10 of 14
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|