Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
+2
SK
heezulia
6 posters
Page 14 of 14
Page 14 of 14 • 1 ... 8 ... 12, 13, 14
திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
First topic message reminder :
17.12.2017
கர்ணன் vs வேட்டைக்காரன்
ரஜனி / கமல், விஜய் / சூர்யா மாதிரி அப்போ சிவாஜி / MGR. இவங்க படங்கள் ரிலீஸ் ஆனா, அவங்கவங்க ரசிகர்கள் மோதிக்குவாங்களாம்.
பந்துலு எக் ............. கச்சக்கமான செலவுல கர்ணன் படத்தையும், திருமுகம் கொறஞ்.................ச பட்ஜெட்ல வேட்டைக்காரன் படத்தையும் எடுத்தாங்களாம். கர்ணன் படத்ல முன்னணி நட்சத்திர கூட்டம். பாதி படம் முடிஞ்சிருச்சாம். மீதி படத்தை எடுக்கவும் ஆரம்பிச்சாச்சாம். ஆனா வேட்டைக்காரன் படத்தை அப்பதான் எடுக்க ஆரம்பிச்சாங்களாம்.
பந்துலு கர்ணன் படத்தை பொங்கல் அன்னிக்கி ரிலீஸ் செய்ய சுறுசுறுப்பா வேல செஞ்சுட்டு இருந்தாராம். அப்போ ஒருத்தர் பந்துலுட்ட ஒரு விஷயத்தை சொல்லியிருக்கார். பந்துலு யோசிக்க ஆரம்பிச்சுட்டாராம். அந்த ஆள் சொன்ன விஷயம் என்ன............? கர்ணன் ரிலீஸ் ஆகிற அன்னிக்கே, திருமுகம் வேட்டைக்காரன் படத்தை ரிலீஸ் செய்ய போறதா.
ரெண்டு மெகா ஸ்டார் படங்கள் ஒண்ணா ரிலீஸ் ஆனா நல்லா இருக்காதே, வசூல் அடிபடுமேன்னு பந்துலு நினைச்சு, தமது குழுவினருடன் பேசினாராம். சிவாஜி காதிலும் போட்டு வச்சாங்க. அவரும் யோசனை செய்ய ஆரம்பிச்சுட்டாராம். வேட்டைக்காரன் படத் தயாரிப்பாளர் தேவரையும் கூப்ட்டு பேசியிருக்காங்க. ஆனா இவங்கல்லாம் என்னதான் பேசினாலும், MGR தான் ரிலீஸ் date சொல்லணுமாமே. ஒரு வாரம் கழிச்சு படத்தை ரிலீஸ் செய்யலாம்னு அவர்ட்ட எப்படி, யார் சொல்றது? அப்புறமா ஒருத்தர் ஒரு ஐடியா சொன்னாராம். MGR க்கு கர்ணன் படத்தை தனியா போட்டு காட்டிட்டு, அதுக்கப்புறமா ரிலீஸ் பத்தி பேசலாம்னு முடிவு செஞ்சாச்சாம். MGRட்ட போய் சொன்னாங்களாம். அவரும் படத்தை பார்க்க உம் சொல்லிட்டாராம்.
படத்தை பார்த்த MGRக்கு சிவாஜியின் நடிப்பு ரொம்ப புடிச்சு போச்சாம். "நடிப்புக்குன்னே பொறந்தவர்யா. மனுஷன் கர்ணனாவே வாழ்ந்திருக்கார்"ன்னு பாராட்டினாராம். பந்துலு உள்பட, எல்லா கலைஞர்களையும் மனசா................ர புகழ்ந்தாராம். படத்தின் வெற்றிக்கு வாழ்த்து சொல்லிட்டு போய்ட்டாராம். இப்படிப்பட்ட சமயத்தில் ரிலீஸை பத்தி பேச எல்லாரும் தயங்கினாங்களாம். வேட்டைக்காரன் படத்தை ஒரு வாரம் கழிச்சு ரிலீஸ் பண்றத பத்தி எப்படி பேசுறது?
மறுநாள். தேவரை கூப்ட்டுட்டு MGR ஐ பாக்க போனாங்களாம். விஷயத்தை சொல்லியிருக்காங்க. "படத்தை பார்த்தேன். ப்ரமாதமாய், ப்ரமாண்டமாய் இருக்கு. நண்பர் சிவாஜியும் நல்லாவே நடிச்சிருக்கார். சரி, ஒண்ணு செய்ங்க, ரெண்டு படத்தையும் ஒண்ணாவே ரிலீஸ் செஞ்சிருங்க. ரெண்டு பேர் ரசிகர்களும் பார்த்து ரசிச்ச மாதிரி இருக்கும்ல. ரெண்டு பேர் ரசிகர்களும் ரெண்டு படத்தையும் பார்க்கட்டுமே. எல்லாரும் சந்தோஷப்படுவாங்க".
வேற வழி? அப்டீ இப்டீன்னு ரெண்டு படங்களும் 14.01.1964 ல ரிலீஸ் ஆயிருச்சு. கர்ணன் ரிலீஸ் ஆன தியேட்டர்கள்ல பிரமாண்டமான பேனர்கள். படத்தை பார்த்தவங்க பாராட்டினாங்களாம். ஆனா அவ்ளோ பணம் செலவழிச்சு எடுத்த கர்ணன், வேட்டைக்காரன் மாதிரி வெற்றி பெறலியாம். ஆனா பாருங்க, 2012ல வெளியான டிஜிட்டல் படம் ஓஹோன்னு ஓடுச்சாம்.
ஆனா வேட்டைக்காரன் ரிலீஸ் ஆன தியேட்டர்களில் என்ன செஞ்சாங்க தெரியுமோ? தேவர் ஃபிலிம் ஆச்சே. நிஜமான கூண்டு வச்சு, நிஜமான புலியையும் கூண்டுக்குள்ள வச்சுட்டாங்களாம். இந்தப் புலியை பார்க்குறதுக்குன்னே .............. கூட்டம் கூடுச்சாம். Low பட்ஜெட் படம் வசூலை குவிச்சுதாம். இதுக்கு MGR என்ன செஞ்சார் தெரியுமா? பந்துலுவுக்கு 1965ல ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கு வாய்ப்பு கொடுத்தாராம். நல்ல லாபம் அள்ளிக் கொடுத்த படமாச்சே. கன்னாபின்னான்னு ஓடின படமாச்சே. நல்ல மனுஷர்தானே MGR.
Baby Heerajan
17.12.2017
கர்ணன் vs வேட்டைக்காரன்
ரஜனி / கமல், விஜய் / சூர்யா மாதிரி அப்போ சிவாஜி / MGR. இவங்க படங்கள் ரிலீஸ் ஆனா, அவங்கவங்க ரசிகர்கள் மோதிக்குவாங்களாம்.
பந்துலு எக் ............. கச்சக்கமான செலவுல கர்ணன் படத்தையும், திருமுகம் கொறஞ்.................ச பட்ஜெட்ல வேட்டைக்காரன் படத்தையும் எடுத்தாங்களாம். கர்ணன் படத்ல முன்னணி நட்சத்திர கூட்டம். பாதி படம் முடிஞ்சிருச்சாம். மீதி படத்தை எடுக்கவும் ஆரம்பிச்சாச்சாம். ஆனா வேட்டைக்காரன் படத்தை அப்பதான் எடுக்க ஆரம்பிச்சாங்களாம்.
பந்துலு கர்ணன் படத்தை பொங்கல் அன்னிக்கி ரிலீஸ் செய்ய சுறுசுறுப்பா வேல செஞ்சுட்டு இருந்தாராம். அப்போ ஒருத்தர் பந்துலுட்ட ஒரு விஷயத்தை சொல்லியிருக்கார். பந்துலு யோசிக்க ஆரம்பிச்சுட்டாராம். அந்த ஆள் சொன்ன விஷயம் என்ன............? கர்ணன் ரிலீஸ் ஆகிற அன்னிக்கே, திருமுகம் வேட்டைக்காரன் படத்தை ரிலீஸ் செய்ய போறதா.
ரெண்டு மெகா ஸ்டார் படங்கள் ஒண்ணா ரிலீஸ் ஆனா நல்லா இருக்காதே, வசூல் அடிபடுமேன்னு பந்துலு நினைச்சு, தமது குழுவினருடன் பேசினாராம். சிவாஜி காதிலும் போட்டு வச்சாங்க. அவரும் யோசனை செய்ய ஆரம்பிச்சுட்டாராம். வேட்டைக்காரன் படத் தயாரிப்பாளர் தேவரையும் கூப்ட்டு பேசியிருக்காங்க. ஆனா இவங்கல்லாம் என்னதான் பேசினாலும், MGR தான் ரிலீஸ் date சொல்லணுமாமே. ஒரு வாரம் கழிச்சு படத்தை ரிலீஸ் செய்யலாம்னு அவர்ட்ட எப்படி, யார் சொல்றது? அப்புறமா ஒருத்தர் ஒரு ஐடியா சொன்னாராம். MGR க்கு கர்ணன் படத்தை தனியா போட்டு காட்டிட்டு, அதுக்கப்புறமா ரிலீஸ் பத்தி பேசலாம்னு முடிவு செஞ்சாச்சாம். MGRட்ட போய் சொன்னாங்களாம். அவரும் படத்தை பார்க்க உம் சொல்லிட்டாராம்.
படத்தை பார்த்த MGRக்கு சிவாஜியின் நடிப்பு ரொம்ப புடிச்சு போச்சாம். "நடிப்புக்குன்னே பொறந்தவர்யா. மனுஷன் கர்ணனாவே வாழ்ந்திருக்கார்"ன்னு பாராட்டினாராம். பந்துலு உள்பட, எல்லா கலைஞர்களையும் மனசா................ர புகழ்ந்தாராம். படத்தின் வெற்றிக்கு வாழ்த்து சொல்லிட்டு போய்ட்டாராம். இப்படிப்பட்ட சமயத்தில் ரிலீஸை பத்தி பேச எல்லாரும் தயங்கினாங்களாம். வேட்டைக்காரன் படத்தை ஒரு வாரம் கழிச்சு ரிலீஸ் பண்றத பத்தி எப்படி பேசுறது?
மறுநாள். தேவரை கூப்ட்டுட்டு MGR ஐ பாக்க போனாங்களாம். விஷயத்தை சொல்லியிருக்காங்க. "படத்தை பார்த்தேன். ப்ரமாதமாய், ப்ரமாண்டமாய் இருக்கு. நண்பர் சிவாஜியும் நல்லாவே நடிச்சிருக்கார். சரி, ஒண்ணு செய்ங்க, ரெண்டு படத்தையும் ஒண்ணாவே ரிலீஸ் செஞ்சிருங்க. ரெண்டு பேர் ரசிகர்களும் பார்த்து ரசிச்ச மாதிரி இருக்கும்ல. ரெண்டு பேர் ரசிகர்களும் ரெண்டு படத்தையும் பார்க்கட்டுமே. எல்லாரும் சந்தோஷப்படுவாங்க".
வேற வழி? அப்டீ இப்டீன்னு ரெண்டு படங்களும் 14.01.1964 ல ரிலீஸ் ஆயிருச்சு. கர்ணன் ரிலீஸ் ஆன தியேட்டர்கள்ல பிரமாண்டமான பேனர்கள். படத்தை பார்த்தவங்க பாராட்டினாங்களாம். ஆனா அவ்ளோ பணம் செலவழிச்சு எடுத்த கர்ணன், வேட்டைக்காரன் மாதிரி வெற்றி பெறலியாம். ஆனா பாருங்க, 2012ல வெளியான டிஜிட்டல் படம் ஓஹோன்னு ஓடுச்சாம்.
ஆனா வேட்டைக்காரன் ரிலீஸ் ஆன தியேட்டர்களில் என்ன செஞ்சாங்க தெரியுமோ? தேவர் ஃபிலிம் ஆச்சே. நிஜமான கூண்டு வச்சு, நிஜமான புலியையும் கூண்டுக்குள்ள வச்சுட்டாங்களாம். இந்தப் புலியை பார்க்குறதுக்குன்னே .............. கூட்டம் கூடுச்சாம். Low பட்ஜெட் படம் வசூலை குவிச்சுதாம். இதுக்கு MGR என்ன செஞ்சார் தெரியுமா? பந்துலுவுக்கு 1965ல ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கு வாய்ப்பு கொடுத்தாராம். நல்ல லாபம் அள்ளிக் கொடுத்த படமாச்சே. கன்னாபின்னான்னு ஓடின படமாச்சே. நல்ல மனுஷர்தானே MGR.
Baby Heerajan
heezulia- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
17.07.2020
சகோதரி படத்தை டைரக்ட் செஞ்சுட்டு இருந்தாராம், பீம்சிங். அப்போ சந்திரபாபு பீம்சிங்ட்ட ஒரு கதை சொன்னார். அந்தக் கதை அவருக்கு பிடிச்சிருந்துச்சு. AVM சரவணன்ட்ட சொல்லியிருக்கார். அவருக்கும் புடிச்சிருந்துச்சு. அதனால இந்தக் கதையை படமாக்க ரெண்டு பேரும் முடிவு செஞ்சுட்டாங்க.
கதைக்கு ‘அப்துல்லா’ன்னு பேர் வச்சாங்க.
பீம்சிங்கின் கதைக்குழு, இணை இயக்குனர்கள் இவங்க எல்லாரும் சேர்ந்து சந்திரபாபுவின் அப்துல்லா கதையை அலசி, ஆராய்ஞ்சு, ஆர்gue செஞ்சு, கதையை மெருகேற்றினாங்களாம். கதை ரெடியாயிருச்சு.
பீம்சிங் சரவணனிடம் “கதை ரெடியா இருக்கு. நல்ல கதை. ஆனா ஒரு விஷயம். இதுல சந்திரபாபு ஹீரோவா நடிக்க முடியாது. செண்டிமெண்ட்டல் ஸீன் நிறைய வருது. அதனால சிவாஜி நடிச்சாதான் நல்லா வரும்” னு சொன்னாராம்.
சரவணனோ “கதை சந்திரபாபுவுடையதாச்சே, அவர் ஹீரோவா இல்லேன்னா எப்டி?”ன்னு கேட்டாராம்.
“நா சந்திரபாபுகிட்ட பர்மிஷன் வாங்கிட்டேன்”ன்னு பீம்சிங் சொன்னாராம்.
அப்படி சிவாஜி நடிச்ச படம் என்னான்னு தெரியுமோ?
‘பாவமன்னிப்பு’.
1961ல் சிவாஜியின் சாந்தி தியேட்டர் ஆரம்பிச்சப்போ இந்தப் படம்தான் முதல் முதலில் திரையிடப்பட்டுச்சாமே.
- ஹிந்து
Baby Heerajan
சகோதரி படத்தை டைரக்ட் செஞ்சுட்டு இருந்தாராம், பீம்சிங். அப்போ சந்திரபாபு பீம்சிங்ட்ட ஒரு கதை சொன்னார். அந்தக் கதை அவருக்கு பிடிச்சிருந்துச்சு. AVM சரவணன்ட்ட சொல்லியிருக்கார். அவருக்கும் புடிச்சிருந்துச்சு. அதனால இந்தக் கதையை படமாக்க ரெண்டு பேரும் முடிவு செஞ்சுட்டாங்க.
கதைக்கு ‘அப்துல்லா’ன்னு பேர் வச்சாங்க.
பீம்சிங்கின் கதைக்குழு, இணை இயக்குனர்கள் இவங்க எல்லாரும் சேர்ந்து சந்திரபாபுவின் அப்துல்லா கதையை அலசி, ஆராய்ஞ்சு, ஆர்gue செஞ்சு, கதையை மெருகேற்றினாங்களாம். கதை ரெடியாயிருச்சு.
பீம்சிங் சரவணனிடம் “கதை ரெடியா இருக்கு. நல்ல கதை. ஆனா ஒரு விஷயம். இதுல சந்திரபாபு ஹீரோவா நடிக்க முடியாது. செண்டிமெண்ட்டல் ஸீன் நிறைய வருது. அதனால சிவாஜி நடிச்சாதான் நல்லா வரும்” னு சொன்னாராம்.
சரவணனோ “கதை சந்திரபாபுவுடையதாச்சே, அவர் ஹீரோவா இல்லேன்னா எப்டி?”ன்னு கேட்டாராம்.
“நா சந்திரபாபுகிட்ட பர்மிஷன் வாங்கிட்டேன்”ன்னு பீம்சிங் சொன்னாராம்.
அப்படி சிவாஜி நடிச்ச படம் என்னான்னு தெரியுமோ?
‘பாவமன்னிப்பு’.
1961ல் சிவாஜியின் சாந்தி தியேட்டர் ஆரம்பிச்சப்போ இந்தப் படம்தான் முதல் முதலில் திரையிடப்பட்டுச்சாமே.
- ஹிந்து
Baby Heerajan
heezulia- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
‘பாவமன்னிப்பு’
---
கடந்த, 1961ம் ஆண்டு கட்டப்பட்ட, சாந்தி திரையரங்கை
அப்போதைய தமிழக முதல்வர் காமராஜர் திறந்து வைதார்.
இதில் சிவாஜி கணேசன் நடித்த,‘பாவமன்னிப்பு’
திரைப்படம் முதன் முதலாக திரையிடப்பட்டது.
--
இப்படத்தை விளம்பரப்படுத்துவதற்காக, ஜப்பானில்
இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒரு பெரிய அளவிலான
ஹைட்ரஜன் நிரப்பப்பட்ட பலூன் சாந்தி தியேட்டருக்கு
மேலே ஏற்றப்பட்டது.
பலூனின் தலையில் ஆங்கிலத்தில் "ஏவிஎம்" என்று
எழுதப்பட்டது, இது தயாரிப்பு நிறுவனத்தின் ஈடுபாட்டைக்
குறித்தது. பலூனின் வால் முனையில் தமிழில் எழுதப்பட்ட
படத்தின் பெயர் இருந்தது (பாவ மன்னிப்பு).
தமிழ் திரைப்படத்தை விளம்பரப்படுத்த பலூன்
பயன்படுத்தப்பட்டது இதுவே முதல் முறை என்று
கருதப்பட்டது.
சாந்தி தியேட்டரைக் கடந்து சென்ற அனைவருக்கும்
இது ஒரு ஈர்ப்பாக அமைந்தது.
-
-----------------------
---
கடந்த, 1961ம் ஆண்டு கட்டப்பட்ட, சாந்தி திரையரங்கை
அப்போதைய தமிழக முதல்வர் காமராஜர் திறந்து வைதார்.
இதில் சிவாஜி கணேசன் நடித்த,‘பாவமன்னிப்பு’
திரைப்படம் முதன் முதலாக திரையிடப்பட்டது.
--
இப்படத்தை விளம்பரப்படுத்துவதற்காக, ஜப்பானில்
இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒரு பெரிய அளவிலான
ஹைட்ரஜன் நிரப்பப்பட்ட பலூன் சாந்தி தியேட்டருக்கு
மேலே ஏற்றப்பட்டது.
பலூனின் தலையில் ஆங்கிலத்தில் "ஏவிஎம்" என்று
எழுதப்பட்டது, இது தயாரிப்பு நிறுவனத்தின் ஈடுபாட்டைக்
குறித்தது. பலூனின் வால் முனையில் தமிழில் எழுதப்பட்ட
படத்தின் பெயர் இருந்தது (பாவ மன்னிப்பு).
தமிழ் திரைப்படத்தை விளம்பரப்படுத்த பலூன்
பயன்படுத்தப்பட்டது இதுவே முதல் முறை என்று
கருதப்பட்டது.
சாந்தி தியேட்டரைக் கடந்து சென்ற அனைவருக்கும்
இது ஒரு ஈர்ப்பாக அமைந்தது.
-
-----------------------
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
28.07.2020
எங்க ஊர்ல சர்க்கஸ், Exhibition வந்தா இப்படித்தான் ராட்சச பலூன் கட்டியிருப்பாங்க.
ஆனா இப்போ சாந்தி தியேட்டர் இடிக்கப்பட்டு ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் ஆயிட்டாமே.
பேபி
எங்க ஊர்ல சர்க்கஸ், Exhibition வந்தா இப்படித்தான் ராட்சச பலூன் கட்டியிருப்பாங்க.
ஆனா இப்போ சாந்தி தியேட்டர் இடிக்கப்பட்டு ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் ஆயிட்டாமே.
பேபி
heezulia- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
28.07.2020
"மெட்டி'' படம் மகேந்திரன் டைரக் ஷன்ல. ராஜேஷ், சரத்பாபு, ராதிகா, வடிவுக்கரசி கூட விஜயகுமாரியும் நடிச்சார்.
இந்தப் படத்தின் முதல் ஷாட் எடுக்கும்போது டைரக்டர் மகேந்திரனே வந்து "கிளாப்'' அடிச்சார். விஜயகுமாரிக்கு ஆச்சரியம்.
`உதவி டைரக்டர்கள் தானே கிளாப் அடிப்பாங்க. இவர் ஏன் கிளாப் அடிக்கிறார்''னு விஜயகுமாரி யோசிச்சார்.
மகேந்திரன், "அம்மா! உங்களுக்கு "காஞ்சித்தலைவன்'' படத்ல நாந்தான் கிளாப் அடிச்சேன். அப்போ நான் அந்தப் படத்தின் டைரக்டர் காசிலிங்கம்கிட்ட உதவி டைரக்டரா இருந்தேன். இப்போ நான் டைரக்ட் செய்யும் படத்ல நீங்க நடிக்கிறதால, நானே கிளாப் அடிக்கணும்னு ஒரு ஆச எனக்கு. அதான்!''னு சொன்னார் மகேந்திரன்.
பேபி
"மெட்டி'' படம் மகேந்திரன் டைரக் ஷன்ல. ராஜேஷ், சரத்பாபு, ராதிகா, வடிவுக்கரசி கூட விஜயகுமாரியும் நடிச்சார்.
இந்தப் படத்தின் முதல் ஷாட் எடுக்கும்போது டைரக்டர் மகேந்திரனே வந்து "கிளாப்'' அடிச்சார். விஜயகுமாரிக்கு ஆச்சரியம்.
`உதவி டைரக்டர்கள் தானே கிளாப் அடிப்பாங்க. இவர் ஏன் கிளாப் அடிக்கிறார்''னு விஜயகுமாரி யோசிச்சார்.
மகேந்திரன், "அம்மா! உங்களுக்கு "காஞ்சித்தலைவன்'' படத்ல நாந்தான் கிளாப் அடிச்சேன். அப்போ நான் அந்தப் படத்தின் டைரக்டர் காசிலிங்கம்கிட்ட உதவி டைரக்டரா இருந்தேன். இப்போ நான் டைரக்ட் செய்யும் படத்ல நீங்க நடிக்கிறதால, நானே கிளாப் அடிக்கணும்னு ஒரு ஆச எனக்கு. அதான்!''னு சொன்னார் மகேந்திரன்.
பேபி
heezulia- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
17.09.2020
மூடுபனி 1980 படத்தின் ரீ-ரெக்கார்டிங் செய்யும்போது, கீபோர்ட் வாசித்தவரை நீக்கிட்டாராம் இளையராஜா. ஏன்னா கீboட் வாசிச்சவர் சரக்கு அடிச்சுட்டு வந்திருந்தாராம்.
இந்த சமயத்தில, இளையராஜாவின் இசைக்குழுவில ஒருவர், "திலிப் என்கிற இளைஞனுக்கு கீபோர்ட் வாசிக்க தெரியும். அவரை சந்தித்து பேசலாமே"ன்னு சொன்னார். இளையராஜா சரீன்னுட்டு திலிப்பை கூப்ட்டு அனுப்பினார்.
திலீப் வந்ததும், வாசிக்க வேண்டிய ம்யூசிக் நோட்ஸை பற்றியும், ட்யூனை பற்றியும் இளையராஜா விளக்கினார். திலிப்பும் இளையராஜாவின் மேற்பார்வையில் மூடுபனி படத்தின் ரீரெக்கார்டிங்கை வெற்றிகரமா முடிச்சார்.
அன்றைய திலீப்தான் இன்றைய AR ரஹ்மான்.
கங்கை அமரனுக்கு அவர் எழுத கஷ்டப்பட்ட பாட்டுக்களில் "என் இனிய பொன் நிலாவே" பாட்டும் ஒண்ணு.
இளையராஜா ஏற்கனவே தயாரிச்சு வச்சிருந்த "இளையநிலா பொழிகிறது" பாட்டு முதல்ல இந்தப் படத்தில சேர்ப்பதா இருந்துச்சு. ஆனா பாலுமகேந்திரா வேணாம்னுட்டார். அதனால "என் இனிய பொன்நிலாவே" பாட்டு இந்தப் படத்திலயும், "இளையநிலா பொழிகிறது" பாட்டு 1982ல வந்த பயணங்கள் முடிவதில்லை படத்துக்கும் போயிருச்சு.
இந்தப் படத்தை பற்றி ஆனந்த விகடன் விமர்சனம் இப்படி எழுதுச்சு.
"இந்தப் படத்தின் பாதி வசனத்தை கேமராதான் பேசியிருக்கு. இப்படிப்பட்ட ஒளிப்பதிவு இருக்கும்போது, திரைக்கதையும், வசனமும் இந்தப் படத்துக்கு தேவையில்லை".
பேபி
மூடுபனி 1980 படத்தின் ரீ-ரெக்கார்டிங் செய்யும்போது, கீபோர்ட் வாசித்தவரை நீக்கிட்டாராம் இளையராஜா. ஏன்னா கீboட் வாசிச்சவர் சரக்கு அடிச்சுட்டு வந்திருந்தாராம்.
இந்த சமயத்தில, இளையராஜாவின் இசைக்குழுவில ஒருவர், "திலிப் என்கிற இளைஞனுக்கு கீபோர்ட் வாசிக்க தெரியும். அவரை சந்தித்து பேசலாமே"ன்னு சொன்னார். இளையராஜா சரீன்னுட்டு திலிப்பை கூப்ட்டு அனுப்பினார்.
திலீப் வந்ததும், வாசிக்க வேண்டிய ம்யூசிக் நோட்ஸை பற்றியும், ட்யூனை பற்றியும் இளையராஜா விளக்கினார். திலிப்பும் இளையராஜாவின் மேற்பார்வையில் மூடுபனி படத்தின் ரீரெக்கார்டிங்கை வெற்றிகரமா முடிச்சார்.
அன்றைய திலீப்தான் இன்றைய AR ரஹ்மான்.
கங்கை அமரனுக்கு அவர் எழுத கஷ்டப்பட்ட பாட்டுக்களில் "என் இனிய பொன் நிலாவே" பாட்டும் ஒண்ணு.
இளையராஜா ஏற்கனவே தயாரிச்சு வச்சிருந்த "இளையநிலா பொழிகிறது" பாட்டு முதல்ல இந்தப் படத்தில சேர்ப்பதா இருந்துச்சு. ஆனா பாலுமகேந்திரா வேணாம்னுட்டார். அதனால "என் இனிய பொன்நிலாவே" பாட்டு இந்தப் படத்திலயும், "இளையநிலா பொழிகிறது" பாட்டு 1982ல வந்த பயணங்கள் முடிவதில்லை படத்துக்கும் போயிருச்சு.
இந்தப் படத்தை பற்றி ஆனந்த விகடன் விமர்சனம் இப்படி எழுதுச்சு.
"இந்தப் படத்தின் பாதி வசனத்தை கேமராதான் பேசியிருக்கு. இப்படிப்பட்ட ஒளிப்பதிவு இருக்கும்போது, திரைக்கதையும், வசனமும் இந்தப் படத்துக்கு தேவையில்லை".
பேபி
heezulia- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
17.09.2020
முரட்டுக்காளை படத்தின் முக்கியதத்துவம் என்னான்னா மஞ்சுவிரட்டு. படம் ஷூட்டிங்கின்போது, ரஜினியை காளை முட்டிடுமோ, குத்திடுமோன்னு பயந்தாங்களாம். ஸ்ட்டண்ட் டைரக்ட்டர் ஜூடோ ரத்தினம் பாதுகாப்பாக இருந்து, அந்த ஸீனை எல்லாம் எடுத்தாராம். படக்குழுவுக்கு த்ரில்லாவே இருந்துச்சாம்.
காரைக்குடி பக்கத்தில நடந்த மஞ்சுவிரட்டு விழால ரஜினியை கூட்டிப் போய் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுத்தாங்களாம். களத்தில் எடுத்த longஷாட்ஸை க்ளோஸப்ல எடுக்கும்போது AVM ஸ்கூல் கிரௌண்ட்ல எடுத்தாங்களாம். ரெண்டுக்கும் வித்தியாசமே தெரியாம எடிட் செஞ்சிருக்காங்க.
ரஜினி ரேக்ளா பந்தயத்தில் ஜெயிக்கிற மாதிரி காட்சி. பொள்ளாச்சியில சம்பந்தப்பட்டவங்கட்ட பேசினாங்களாம். சம்பந்தப்பட்டவர்னா வானவராயர். அவர் சந்தோஷப்பட்டாராம்.
தண்டோரா போட்டு ரேக்ளா பந்தயம் நடக்க போறதா சொல்ல சொன்னாராம். ரேக்ளா வண்டிகளும், மாடுகளும் வந்து குவிந்தன. ரஜினி ரேக்ளா வண்டில போற மாதிரியும், அவரை துரத்திக்கொண்டு மத்த வண்டிகள் போற மாதிரியும் பல கோணங்களில், ரேக்ளா வண்டியின் அடியில கூட கேமரா வச்சு ஷூட் செஞ்சாங்களாம்.
தெலுங்கில dub ஆச்சு. இந்தப்படத்தில் ஜூடோ ரத்தினம் ஓடுற ரயிலில் ஒரு fight ஸீன் போட்டிருப்பார். அட்டகாசமா இருக்கும்.
அந்த ரெயில்வே லைன்ல காலைல ஒரு ட்ரெயினும், சாயங்காலம் ஒரு ட்ரெயினும் போகும். எந்த நேரத்தில வரும்னு விசாரிச்சு வச்சுட்டு, இடைப்பட்ட நேரத்தில ஒரு கூட்ஸ் ரயிலை வாடகைக்கு வாங்கி, தென்காசி ரயில்வே ஸ்டேஷன் பக்கத்தில இந்த ஸீனை எடுத்தாங்களாம். நிறைய செலவு செஞ்சு மூணு நாளைல எடுத்த ஸீன். எல்லோராலும் பேசப்பட்ட ஸீன்.
100 நாள் ஓடி வெற்றி பெற்ற படம். ரஜினியை சினிமாவில பெரிய நடிகரா தூக்கி நிறுத்தின படம்.
பேபி
முரட்டுக்காளை படத்தின் முக்கியதத்துவம் என்னான்னா மஞ்சுவிரட்டு. படம் ஷூட்டிங்கின்போது, ரஜினியை காளை முட்டிடுமோ, குத்திடுமோன்னு பயந்தாங்களாம். ஸ்ட்டண்ட் டைரக்ட்டர் ஜூடோ ரத்தினம் பாதுகாப்பாக இருந்து, அந்த ஸீனை எல்லாம் எடுத்தாராம். படக்குழுவுக்கு த்ரில்லாவே இருந்துச்சாம்.
காரைக்குடி பக்கத்தில நடந்த மஞ்சுவிரட்டு விழால ரஜினியை கூட்டிப் போய் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுத்தாங்களாம். களத்தில் எடுத்த longஷாட்ஸை க்ளோஸப்ல எடுக்கும்போது AVM ஸ்கூல் கிரௌண்ட்ல எடுத்தாங்களாம். ரெண்டுக்கும் வித்தியாசமே தெரியாம எடிட் செஞ்சிருக்காங்க.
ரஜினி ரேக்ளா பந்தயத்தில் ஜெயிக்கிற மாதிரி காட்சி. பொள்ளாச்சியில சம்பந்தப்பட்டவங்கட்ட பேசினாங்களாம். சம்பந்தப்பட்டவர்னா வானவராயர். அவர் சந்தோஷப்பட்டாராம்.
தண்டோரா போட்டு ரேக்ளா பந்தயம் நடக்க போறதா சொல்ல சொன்னாராம். ரேக்ளா வண்டிகளும், மாடுகளும் வந்து குவிந்தன. ரஜினி ரேக்ளா வண்டில போற மாதிரியும், அவரை துரத்திக்கொண்டு மத்த வண்டிகள் போற மாதிரியும் பல கோணங்களில், ரேக்ளா வண்டியின் அடியில கூட கேமரா வச்சு ஷூட் செஞ்சாங்களாம்.
தெலுங்கில dub ஆச்சு. இந்தப்படத்தில் ஜூடோ ரத்தினம் ஓடுற ரயிலில் ஒரு fight ஸீன் போட்டிருப்பார். அட்டகாசமா இருக்கும்.
அந்த ரெயில்வே லைன்ல காலைல ஒரு ட்ரெயினும், சாயங்காலம் ஒரு ட்ரெயினும் போகும். எந்த நேரத்தில வரும்னு விசாரிச்சு வச்சுட்டு, இடைப்பட்ட நேரத்தில ஒரு கூட்ஸ் ரயிலை வாடகைக்கு வாங்கி, தென்காசி ரயில்வே ஸ்டேஷன் பக்கத்தில இந்த ஸீனை எடுத்தாங்களாம். நிறைய செலவு செஞ்சு மூணு நாளைல எடுத்த ஸீன். எல்லோராலும் பேசப்பட்ட ஸீன்.
100 நாள் ஓடி வெற்றி பெற்ற படம். ரஜினியை சினிமாவில பெரிய நடிகரா தூக்கி நிறுத்தின படம்.
பேபி
heezulia- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
17.09.2020
AVM சரவணண்ட்ட போய் டைரக்டர் சொன்னாராம், "ட்ரெயின் ஸீனை எடுக்கணும்னா மூணு நாள் ட்ரெயினை வாடகைக்கு எடுக்கணும். நம்ம இஷ்டததுக்கு ஃபிலிமை யூஸ் செய்ய முடியாது. அங்க போய் பார்த்ததுல, எப்படியம் 6 முதல் 7 லட்சம் வரை செலவழியும் போலிருக்கு. வழக்கமான சண்டைக் காட்சியைவிட மூணு நாலு லட்சம் அதிகமாகும். உங்களுக்கு சரிப்பட்டு வருமா?"
சரவணன் : மூணு லட்சம் அதிகமாகும்னா அது ஒண்ணும் பிரச்சன இல்ல. ஆனா இதே மாதிரி சண்டை காட்சி வேற எந்தப் படத்துலேயும் வந்ததில்லேன்னு சொல்ற மாதிரி இருக்குமா? அது உங்களால முடியுமா?
முத்துராமன் : சண்டை காட்சி எப்படி வருதூன்னு மட் ...................... டும் பாருங்க.
அப்படியே அற்புதமா அமஞ்சுது முரட்டுக்காளை பட சண்டை காட்சி.
இதே மாதிரி இன்னொரு சண்டைக் காட்சி, கிளைமாக்ஸ்ல. சீன மொழியிலுள்ள ஒரு சினிமாவில் இருந்த சண்டைக்காட்சிகளை வச்சு எடுத்தாங்களாம்.
டூப் போட்டு எடுக்கலாம். ரிஸ்க்கான காட்சீன்னு ரஜினிட்ட சொன்னாங்களாம். டூப்பா நடிக்கிறவரும் மனுஷன்தானே, அவருக்கு மட்டும் ரிஸ்க் இல்லையான்னு சொல்லிட்டு, ரஜினியே நடிச்சாராம்.
முதல்ல வில்லனா நடிக்க விஜயகாந்தை கூப்டாங்களாம். அவர் மாட்டேன்னுட்டாராம். ரஜனி அவருக்கு நல்ல friend ங்கிறதனால, வில்லனா நடிக்கலியாம். அப்புறமாத்தான் ஜெய்சங்கரை போய் பார்த்தங்களாம். ஆரம்பத்தில அவரும் தயங்கினாராம். காயத்திரி படத்தில் ஜெய்சங்கர் ஹீரோ, ரஜினி வில்லன். மெய்யப்ப செட்டியார் அவரை சமாதானபடுத்தி வில்லனா நடிக்க வச்சாராம். வில்லனா நடிக்கிறது ஜெய்சங்கருக்கு இது முதல் படம்.
படத்தை விளம்பரம் செய்யும்போது, தனக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்களோ, அதேபோல ஜெய்சங்கருக்கும் கொடுக்கணும்னு ரஜினி கவனமா இருந்தாராம்.
ரஜினிக்கு இந்தப் படத்தின் punch டயலாக் "சீவிடுவேன்".
பேபி
AVM சரவணண்ட்ட போய் டைரக்டர் சொன்னாராம், "ட்ரெயின் ஸீனை எடுக்கணும்னா மூணு நாள் ட்ரெயினை வாடகைக்கு எடுக்கணும். நம்ம இஷ்டததுக்கு ஃபிலிமை யூஸ் செய்ய முடியாது. அங்க போய் பார்த்ததுல, எப்படியம் 6 முதல் 7 லட்சம் வரை செலவழியும் போலிருக்கு. வழக்கமான சண்டைக் காட்சியைவிட மூணு நாலு லட்சம் அதிகமாகும். உங்களுக்கு சரிப்பட்டு வருமா?"
சரவணன் : மூணு லட்சம் அதிகமாகும்னா அது ஒண்ணும் பிரச்சன இல்ல. ஆனா இதே மாதிரி சண்டை காட்சி வேற எந்தப் படத்துலேயும் வந்ததில்லேன்னு சொல்ற மாதிரி இருக்குமா? அது உங்களால முடியுமா?
முத்துராமன் : சண்டை காட்சி எப்படி வருதூன்னு மட் ...................... டும் பாருங்க.
அப்படியே அற்புதமா அமஞ்சுது முரட்டுக்காளை பட சண்டை காட்சி.
இதே மாதிரி இன்னொரு சண்டைக் காட்சி, கிளைமாக்ஸ்ல. சீன மொழியிலுள்ள ஒரு சினிமாவில் இருந்த சண்டைக்காட்சிகளை வச்சு எடுத்தாங்களாம்.
டூப் போட்டு எடுக்கலாம். ரிஸ்க்கான காட்சீன்னு ரஜினிட்ட சொன்னாங்களாம். டூப்பா நடிக்கிறவரும் மனுஷன்தானே, அவருக்கு மட்டும் ரிஸ்க் இல்லையான்னு சொல்லிட்டு, ரஜினியே நடிச்சாராம்.
முதல்ல வில்லனா நடிக்க விஜயகாந்தை கூப்டாங்களாம். அவர் மாட்டேன்னுட்டாராம். ரஜனி அவருக்கு நல்ல friend ங்கிறதனால, வில்லனா நடிக்கலியாம். அப்புறமாத்தான் ஜெய்சங்கரை போய் பார்த்தங்களாம். ஆரம்பத்தில அவரும் தயங்கினாராம். காயத்திரி படத்தில் ஜெய்சங்கர் ஹீரோ, ரஜினி வில்லன். மெய்யப்ப செட்டியார் அவரை சமாதானபடுத்தி வில்லனா நடிக்க வச்சாராம். வில்லனா நடிக்கிறது ஜெய்சங்கருக்கு இது முதல் படம்.
படத்தை விளம்பரம் செய்யும்போது, தனக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்களோ, அதேபோல ஜெய்சங்கருக்கும் கொடுக்கணும்னு ரஜினி கவனமா இருந்தாராம்.
ரஜினிக்கு இந்தப் படத்தின் punch டயலாக் "சீவிடுவேன்".
பேபி
heezulia- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
Page 14 of 14 • 1 ... 8 ... 12, 13, 14
Similar topics
» பின்னால் என்ன இருக்கு?
» ஆவி உள்ளதா? மரணத்திற்கு பின்னால் என்ன நடக்கின்றது?
» என்ன நடந்தது?
» நடந்தது என்ன? - ஒரு பக்க கதை
» ஜெனிவாவில் நடந்தது என்ன?
» ஆவி உள்ளதா? மரணத்திற்கு பின்னால் என்ன நடக்கின்றது?
» என்ன நடந்தது?
» நடந்தது என்ன? - ஒரு பக்க கதை
» ஜெனிவாவில் நடந்தது என்ன?
Page 14 of 14
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|