புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திரைப் பிரபலங்கள்  - Page 2 I_vote_lcapதிரைப் பிரபலங்கள்  - Page 2 I_voting_barதிரைப் பிரபலங்கள்  - Page 2 I_vote_rcap 
5 Posts - 63%
heezulia
திரைப் பிரபலங்கள்  - Page 2 I_vote_lcapதிரைப் பிரபலங்கள்  - Page 2 I_voting_barதிரைப் பிரபலங்கள்  - Page 2 I_vote_rcap 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
திரைப் பிரபலங்கள்  - Page 2 I_vote_lcapதிரைப் பிரபலங்கள்  - Page 2 I_voting_barதிரைப் பிரபலங்கள்  - Page 2 I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரைப் பிரபலங்கள்


   
   

Page 2 of 12 Previous  1, 2, 3, ... 10, 11, 12  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Dec 16, 2017 9:52 pm

First topic message reminder :

16.12.2017

அப்போ நாடங்களில மனோரமா ஹீரோயினா நடிச்சிட்டு இருந்தாராம். மணிமகுடம் நாடகத்ல அவர் நடிப்பை ஒரு பிரபலர் பார்த்தாராம். மாலையிட்ட மங்கை படத்தில நடிக்க சொன்னாராம். ஆனா ஹீரோயினா இல்ல, காமெடியனா. வந்ததே .............. ரோஷம் மனோரமாவுக்கு. “என்னான்னு நெனச்சுகிட்டீங்க, நான் நாடகத்தில ஹீரோயினாத்தான் நடிச்சிருக்கேன். தெரியும்ல. நீங்க என்னை இப்போ காமெடியனா நடிக்க சொல்றீங்க.” ன்னுட்டாராம். அந்தப் பிரபலர் , “இத பாரும்மா, படத்தில நீ ஹீரோயினா நடிச்சா, ரெண்டு வருஷமோ மூணு வருஷமோ, அவ்வளவுதான். அதுக்கப்புறமா சினிமாவில ஹீரோயினா நெலச்சு நிக்க முடியாது. காமெடியனா நடிச்சேன்னு வச்சுக்கோ, காலாகாலத்துக்கும் நடிச்சுட்டே ................ இருக்கலாம்” னு சொன்னாராம். அது போலத்தானே இருந்தார் ஆச்சியம்மா நாலு தலைமுறையா.

Baby Heerajan
 மீண்டும் சந்திப்போம்

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்


avatar
Guest
Guest

PostGuest Wed Dec 27, 2017 11:52 pm

பாடல் கேட்க..............

ஆடி அடங்கும் வாழ்க்கையடா

காகித ஓடம் கடலலை மேலே

பதிவுக்கு நன்றி.

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Dec 28, 2017 11:41 am

28 .12 .2017 

நன்றி பாலு சார்.

பாட்டுக்களுக்கு நன்றி மூர்த்தி. ஆனா திடீர்னு பாட்டு அனுப்பியிருக்கீங்க.

சரி ............... அது போவட்டும். 

இது எப்படி செஞ்சீங்கன்னு சொல்லுங்க. பாட்டு வரிகள் மேல க்ளிக்கினா பாட்டு பாடுதே. எனக்கு இது கண்டிப்பா தெரிஞ்சாகணும். ஆ ........................மா, சொல்லிபுட்டேன். 

Heezulia 

avatar
Guest
Guest

PostGuest Thu Dec 28, 2017 10:46 pm

இது ஒன்றும் பெரிய வேலையல்ல. ஒவ்வொரு இணையப் பக்கமும் HTML/CSS/PHP/Java/C++  இப்படி வெவ்வேறு கணினி மொழியைக் கொண்டு எழுதப்படுகிறது.

நீங்கள் கேட்டது ஒரு சிறிய html code ஆகும். அதில், வேண்டிய இணைய முகவரியை (URL) copy and paste முறையில் ஒட்டிக் கொள்ளலாம். பக்கத்தில் உள்ள (தமிழில்) இடத்தில் வேண்டிய தலைப்பை எழுதலாம் அவ்வளவுதான்.

அதற்கான code இது.

திரைப் பிரபலங்கள்  - Page 2 Bq78oEROm7E3eK1IWpwO+Capture1

அதேசமயம்  ஈகரை விதிமுறைகளையும் ஒருமுறை படித்துக் கொள்ளுங்கள். காணொளி/பாடல்கள்/படங்கள் தவிர வேறொரு இணையத்தள முகவரியை நேரடியாக பதிவிடுவதை ஈகரை அனுமதிப்பதில்லை. அத்துடன் வேறெங்காவது இருந்து பதிவிட்டால் (copy and paste) அதற்கு நன்றி தெரிவிப்பதையும் ஈகரை நாகரீகமாகக் கொண்டுள்ளது. (எழுதிய விதிமுறை சரியென்று நினைகின்றேன்,தவறிருந்தால் அட்மின் திருத்திக் கொள்வார்கள்.)

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Dec 28, 2017 11:53 pm

28 .12 .2017 

நன்றி மூர்த்தி, ரொம்...........ப நன்றி. 

ஆனா பாருங்க, ஒண்.................ணும் புரியல. 
அதேசமயம்  ஈகரை விதிமுறைகளையும் ஒருமுறை படித்துக் கொள்ளுங்கள். காணொளி/பாடல்கள்/படங்கள் தவிர வேறொரு இணையத்தள முகவரியை நேரடியாக பதிவிடுவதை ஈகரை அனுமதிப்பதில்லை. அத்துடன் வேறெங்காவது இருந்து பதிவிட்டால் (copy and paste) அதற்கு நன்றி தெரிவிப்பதையும் ஈகரை நாகரீகமாகக் கொண்டுள்ளது. 
இது மட்...........................டும்தான் புரிஞ்சுது. 

Heezulia 

avatar
Guest
Guest

PostGuest Fri Dec 29, 2017 12:56 am

இதில் புரிவதற்கு எதுவுமே இல்லையே! ஈகரை விதி முறைகளை  படிக்க சிவப்பு நிறத்தில்
உள்ளதை கிளிக் செய்தால் ஈகரை விதிகள் வரும்.அதுபோல்.....

வெள்ளையாக இருக்கும் படத்தில் உள்ளபடி எழுத  வேண்டியது தான்.அதில் http எனது தொடங்கும் இடத்தில் வேண்டிய முகவரியை (URL ) copy செய்து பேஸ்ட் பண்ணலாம்.தமிழில் உள்ள இடத்தில்
விரும்பிய தலைப்பை எழுதலாம். அவ்வளவுதான்.

உதாரணமாக, திரைக்குப் பின்னால் நடந்தது என்ன? என்ற பதிவுக்கு இங்கிருந்தே செல்ல.இப்படி எழுத  வேண்டும்.

திரைப் பிரபலங்கள்  - Page 2 DoNsgND3TpCf3JBoPDFO+Capture2

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Dec 29, 2017 1:50 am

29.12.2017 

எல்லா நடிகர்களுக்கும் ரசிகர் இருப்பாங்கள். ஆனா சிவாஜிக்கு மட்டும் எல்லா நடிகர்களும் ரசிகர்கள். உண்மைதானே. 

இவரோட உண்மையான பேர் வி.சி.கணேசனாம். சத்ரபதி சிவாஜியா இவர் நடிச்சத பெரியார் பார்த்தாராம். "இனிமே இவர்தான் சிவாஜி" ன்னு அவர் சொல்லிட்டாராம். அந்த பேரே அவருக்கு நிலச்சுருச்சு. 

இவர் முதல்முதலா பெண் வேஷம்தான் போட்டாராமே. உப்பரிகையில நின்னுகிட்டு ராமனை பார்க்கும் சீதை வேஷமாமே. எந்த நாடகமோ? 

பராசக்தியில சிவாஜி ஹீரோவாக நடிச்சார்ல. அவர் ஹீரோவா நடிக்கிறதுக்கு அந்த படத்தோட தயாரிப்பாளர் ப்பி.ஏ.பெருமாள் முடிவு செஞ்சாராம். அது அங்கே யாருக்குமே பிடிக்கலயாம். என்னவெல்லாமோ சொல்லி எதிர்ப்பு தெரிவிச்சுருக்காங்க. ஊஹும்........ பெருமாள் அசையலியாம். எதையுமே காதுல வாங்கிக்கலியாம். படம் செம ஹிட். So சிவாஜிய ஹீரோவாக்கின பெருமை பெருமாளுக்கே சேரும். இல்லியா? 

உண்மை, ஒழுங்கு, நேரம் தவறாமல் இருப்பது இதையெல்லாம் சிவாஜி கடைப்பிடிக்கும் முக்கியமானவையாம். ஏழு மணிக்கு ஷூட்டிங்க்னா ஆறேமுக்காலுக்கே ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு போயிருவாராம். அவர் சினிமா வாழ்க்கையில ஒரு நாள் கூட லேட்டா போனதில்லியாம். 

இவர் கலைஞரை 'மூனா கானா' ன்னும், எம்.ஜி.ஆர 'அண்ணன்' ன்னும், ஜெயலலிதாவ 'அம்மு' ன்னும் தான் கூப்பிடுவாராம்.

Heezulia


SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Dec 29, 2017 2:13 pm

sk wrote: 'மூனா கானா'

ஒன்னும் புரியல ஒன்னும் புரியல



heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Jan 04, 2018 12:12 am

03.01.2018

TS பாலையா 

எல்லாவித பாத்திரத்திலேயும் சினிமாவில் நடிச்சவர்.  Character ரோல், காமெடியன், வில்லன், கதாநாயகன்னு எந்த வேஷமானாலும் சரி, அசா................தாரணமா, தனக்கென தனி.................. பாணியில சூப்பரா நடிக்கிறவர். அவருக்கு நிகர் அவர்தான்னு சொல்லலாம்.  36 வருஷமா சினிமாவில தனக்கென தனி இடத்தை புடிச்சிருந்தார். எல்லா முன்னணி நடிகை நடிகர்களுடன் நடிச்சு புகழ் பெற்றவர்.

இவர் நடிக்காத சில படங்களில் சில முன்னணி ஹீரோ நடிக்க மாட்டேன்னு போயிருக்காங்களாம். 


1948 ல வந்த மோகினி படத்தில் இவர் MGR உடன் நடிச்சிருந்தாராம். கதாநாயகன் யார்னு பிரச்சினை வந்துச்சாம். 

"MGRஏ கதாநாயகனா நடிக்கட்டும், நான் வேணும்னா துணை நாயகனா இருக்கேன்"னு 

பாலையா விட்டுக் கொடுத்துட்டாராம். MGR கதாநாயகனா நடிச்சாலும், இந்தப் பட பாட்டு புத்தகத்தில பாலையா பேர்தான் முதல்ல இருந்துச்சாம். 

“உண்மையும் இது இல்லையா ஒருகாலும் மறுக்காதே” 

ன்னு ஒரு பாட்டு மோகினி படத்தில இருக்காம். இந்தப் பாட்டை பாலையா பாடியதாம்.

கற்பகம் [1963] படத்தில கதாநாயகனா நடிக்கிறதுக்கு MGR ட்ட 
KSG பேசினாராம். அந்தப் படத்தில மாமனார் ரோலுக்கு பாலையா நடிச்சா, நான் கதாநாயகனா நடிக்கிறேன்னு சொல்லிட்டாராம். ஆனா SV ரங்காராவைத்தான் மாமனார் ரோலுக்கு KSG நெனச்சு வச்சிருந்தாராம். இதனால்தான் MGR க்கு பதிலா ஜெமினி  கணேசன் நடிச்சிருக்கார்.

இவர் கதாநாயகனாக நடிச்ச படங்கள் சித்ரா 1946,  செண்பகவல்லி 1948, வெறும் பேச்சல்ல 1956. [மாலை மலர்]. மலையாளம், கன்னட படங்களில நடிச்சதோட இல்லாம, சிவாஜி நடிச்ச ஸ்வீகாரம் படத்திற்கு கதை வசனம் எழுதினாராம். ஆனா படம் வெளிவரல.

இவர் நடிச்ச படங்களில் சொந்தக் குரலில் பாடியிருக்காராம். 1954 ல நல்ல காலம்னு படத்தை சொந்தமா தயாரிச்சாராம்.

காதலிக்க நேரமில்லை படத்துக்கு ரீமேக் உரிமையை மனோபாலா ஸ்ரீதர்ட்ட கேட்டாராம்.


ஸ்ரீதர் : கதாநாயகனா யாரை போடபோற ?

மனோபாலா : முத்துராமன், ரவிச்சந்திரன் ரோல்ல நடிக்க ரெண்டு பேரை யோசிச்சு வச்சிருக்கேன்.

ஸ்ரீதர் : யாரு ?

மனோபாலா ரெண்டு ஹீரோக்களின் பேரை சொல்லியிருக்கார்.

ஸ்ரீதர் : அது சரி, இந்த ரெண்டு பேர் இருக்கட்டும். நான் கேக்குறது ஹீரோவா யாரை போட போற ?

மனோபாலாவுக்கு ஒண்ணும் புரியல. முத்துராமனும், ரவிச்சந்தரும் தானே ஹீரோ. இவர் ஏன் இப்படி கேக்குறார்னு குழம்பினார்.

ஸ்ரீதர் : டேய் மடையா, படத்தை பாத்தியா?

மனோபாலா : ஆமா, பார்த்தேனே.

ஸ்ரீதர் : டைட்டில கவனிச்சியா?

மனோபாலா : டைட்டிலா,  பார்த்தேனே.

ஸ்ரீதர் : பார்த்த பின்னால கூடவா யார் ஹீரோன்னு தெரியல ?

மனோபாலா : என்ன சொல்றீங்க ?

ஸ்ரீதர் : டைட்டில்ல மொதல்ல பாலையா பேர்தானே இருக்கு. பின்னே அவர்தானே இந்தப் படத்தின் ஹீரோ ? அவர் அளவுக்கு நடிக்கிறதுக்கு ஆளை தேடு. அப்புறம்தான் ரைட்ஸ் தர்றேன்.

அதுக்கப்புறம் அவர் வரவே இல்லியாம். பாலையா மாதிரி நடிக்கிறதுக்கு ஆள் கிடைக்கல போல. எப்படி கிடைப்பான்?

செந்தமிழ் பேசி நடிச்ச அந்த காலத்தில, பேச்சுத் தமிழ் கொண்டு வந்தது பாலையாதான். சரித்திர நாடகம் ஆனாகூட சாதாரண தமிழ்ல பேசுவாராம்.
[இது உண்மையா]

ஒரு படத்தில MGR நடிக்க வேண்டிய வேஷத்தில பாலையா நடிச்சுட்டாராம். [எந்தப் படம்?] MGRக்கு பாலையா மேல செம கோவம். அப்புறமா MGR 


“பாலையாவுக்கு பதிலா நான் நடிச்சிருந்தா அந்தப் படம் ஓடியிருக்காது” ன்னு 

சொன்னாராம். ‘நான் ஏன் பிறந்தேன்’ சுயசரிதையில் MGR இப்படி எழுதியிருந்தாராம்.

200 படங்களுக்கு மேல நடிச்சிருக்காராம். இவர் நடிச்ச படங்களைப் பத்தி எழுதணும்னா இப்போதைக்கு முடியாது போலியே. அதனால இம்புட்டு போதும்னு நினைக்கிறேன்.

Heezulia


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Jan 04, 2018 12:54 am

03.02.2018

K சாரங்கபாணி
 
நாடகம் & சினிமாவில் காமெடியனான இவர் NSKக்கு இணையான பல்துறை வித்தகர். காமெடி பண்ணும்போது இவர் முகபாவங்களை பார்க்கணுமே, அவ்வளவு திறமையானவர். இவர் வசனங்களை பேசும் பாணி வேற யா..............ருக்கும் வராதாம். காமெடியனா இருந்தாலும் ஒரு சில படங்களில ஹீரோவாவும், சில படங்களில் வில்லனாவும் நடிச்சிருக்காராம். இவருக்கு பாடவும், டான்ஸ் ஆடவும் தெரியுமாம்.
 
1935ல வந்த ‘பக்த ராமதாஸ்’ படத்தின் மூலமா முதல் முதலா தமிழ் சினிமாவுக்கு வந்தாராம். இதன்  ஸ்பெஷாலிட்டி என்னானா, இந்தப் படத்தில பொம்பளங்களே கிடையாதாம். எல்லா.................ருக்கும் சேர்த்து ஆம்பளைங்களே நடிச்சாங்களாம்.
 
1939ல வந்த ‘சாந்தா சக்குபாய்’ படத்தில ஹீரோவா நடிச்சிருந்தாராம். ‘மிளகாய்ப்பொடி’ என்ற கேலியான ஒரு  குறும்படம் எடுத்தாங்களாம். இதில இவர் பெண்ணாய் நடிச்சாராம். 

இன்னொரு கேலியான படத்தில  சாரங்கபாணி 10 ரோல்ல நடிச்சாராம். அப்போல்லாம் இப்படி குறும்படம் எடுத்து, பெரிய படத்தின் நடுவே போடுவாங்களாம். அதே மாதிரி இந்த குறும்படத்தை ஒரு பெரிய படத்தின் இடையே போட்டாங்களாம். 

ரம்பையின் காதல் 1939 படத்தில நகைச்சுவை நடிகரா நடிச்சாராம். 1948லதான், வேதாள உலகம் படத்தின் மூலமா சிறந்த நகைச்சுவை நடிகரா நெலச்சு நின்னாராம். 1949ல வாழ்க்கை படத்தில் இவருடைய காமெடி நடிப்பு புகழ் பெற ஆரம்பிச்சுதாம். இந்தப் படத்தில இவருடைய நகைச்சுவை வசனம் 

“அந்தக் காலத்தில நான் காலேஜ் படிக்கும்பொழுது .................” 

1951ல ராஜாம்பாள் படத்தில துப்பறியும் அதிகாரியா நடிச்சாராம். இந்தப் படத்தில இவருடைய பஞ்ச் 

“மோசம் போனேனே கோபாலா சுடலைமாடன்  தெருவில”

Heezulia

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Jan 04, 2018 1:32 am

03.02.2018 

திருகம்புலியூர் ரங்காராவ் ராமச்சந்திரன்
 
இவர் புகழ் பெற்ற ஒரு சிரிப்பு ஆக்ட்டர். ஆனாலும் இவர் குணசித்திர வேஷங்கள்லேயும் நடிச்சிருக்காராம். சாவித்திரி, வைஜெயந்திமாலா, VN ஜானகி இவங்க கூட ஹீரோவாவும் நடிச்சிருக்காராம். ஆனா நெலச்சு நின்னது காமெடியனா.
 
இவர் முட்டைகண்களை  உருட்டி உருட்டி பேசுவார். ஹாலிவுட்ல இவர மாதிரியே முட்டை கண்களோடு  Eddie Cantorனு      ஒருத்தர் இருந்தாராம். ராமச்சந்திரனை ‘தமிழ்நாட்டின் Eddie Cantor’னு அப்போ சொல்வாங்களாம்.

திரைப் பிரபலங்கள்  - Page 2 QnEmUdSWSWaNWmeLUFqy+TRராமச்சந்திரன்

TR ராமச்சந்திரனுக்கு அஞ்ஜாப்புக்கு மேல படிப்பு ஏறல. நாடகத்தில நடிக்க ஆசைன்னு இவர் தன் அப்பாட்ட சொன்னாராம். அப்பாவும் அவரை Boys கம்பெனியில சேர்த்து விட்டுட்டாராம். அதுல சின்ன சின்ன ரோல்ல நடிச்சு ஏதோ கொஞ்சம் சம்பாதிச்சுட்டு இருந்தாராம். 

ஆனா அந்த கம்பெனிக்கு சொந்தக்காரார் திடீர்னு ஓடிப்போயிட்டாராம். என்ன செய்றதுன்னு தெரியாம, கம்பெனில இருந்த ஒரு சிலர், இவரையும் சேர்த்துதான், தெருவில ஆடிப் பாடி சம்பாதிச்சாங்களாம். சாப்பிட காசு வேணுமே. 

எப்படியோ, யாரோ ஒருத்தர் அந்த கம்பெனியை வாங்கினாராம். ஆனா அவருக்கு நாடகத்துக்கு தேவையானதை வாங்க பணமில்ல. ராமன், சீதை, முருகன், வள்ளின்னு பல வேஷங்களை போட்டு நடிச்சாங்க. 

எப்படி? கிழிஞ்ச டிரஸ் போட்டுட்டு. சில நேரங்கள்ல எல்லோருமே சட்டை, வேஷ்டி கட்டி நடிச்சாங்களாம். நாடகத்தை பார்க்கிற ஜனங்களுக்கு யார் எந்த வேஷத்தில நடிக்கிறாங்கன்னு தெரியலயாம்.  அதுக்காக நடிக்கிறவங்க “நான் ராமன், நான் சீதா”ன்னு தங்களை அறிமுகப்படுத்திட்டு தான் வசனம் பேச ஆரம்பிச்சாங்களாம். TRR எப்டீல்லாம் கஷ்டப்பட்டிருக்கார், பாவம்.
 
Boys கம்பெனியிலிருந்து வெளியேறிய  SV வெங்கட்ராமன், புதுசா ஒரு நாடக குழுவை ஆரம்பிச்சு, தன்கூட முன்பு இருந்த பாலையா, MR ராதா, TR ராமச்சந்திரன் எல்லோரையும் கூப்ட்டுகிட்டாராம். கொஞ்ச நாள் நல்லாத்தான் போயிட்டு இருந்துச்சாம். குழு உறுப்பினர்களுக்கிடையே கருத்து வேறுபாடு வந்து, குழு அம்புட்டுதான். மறுபடியும் சாப்பாட்டுக்கு கஷ்டம். வெங்கட்ராமனோடு சிலர் சேர்ந்துட்டு பெங்களூருக்கு போயிட்டாங்க.
 
அங்கதான் ராமச்சந்திரனுக்கு அதிர்ஷ்ட காத்து அடிக்க ஆரம்பிச்சுது. 'நந்தகுமார்' படத்துக்காக AVM செட்டியார் பெங்களூருக்கு வந்திருந்தார். எப்படியோ TRR திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தில காமெடியனாக சேந்துட்டார், மூணு வேளை  சாப்பாடும் கெடச்சுது.
 
சபாபதி படத்தில அவர் நல்ல நடிகர்னு நிரூபிச்சார். மாடர்ன் தியேட்டர்ஸின் ‘திவான் பகதூர்’ 1943 படம். இந்தப் படத்தில படிக்காத பணக்காரனா காளி N ரத்தினம் நடிச்சாராம். பெரிய மனுஷங்களை விமர்சிப்பவராக ராமச்சந்திரன் நடிச்சாராம். மீட்டிங்க்ல பேசும்போது இங்கிலீஷ்ல பேசினாராம். அஞ்சாங்கிளாஸ் படிச்சாலும், அவருடைய இங்க்லீஷ் உச்சரிப்பு, பேசும் நடை எல்லாமே அவ்வளவு நல்லா இருந்துச்சாம்.  இங்க்லாந்துல போய் படிச்சுட்டு வந்த TR சுந்தரம், ராமச்சந்திரன் படத்தில பேசிய ஆங்கிலத்தை கேட்டு, அவருக்கு போனஸ் கொடுத்தாராம்.
 
காதல் கல்யாணத்தில நம்பிக்கையுள்ள விசித்திரமான பணக்கார பையனாக 1946 ல வந்த வித்யாபதி படத்தில நடிச்சாராம். தினமும் இந்தப் பையன், பேப்பரில், மணமகன் தேவை பகுதியை பார்ப்பானாம். இந்தப் படத்தில இவருடைய நகைச்சுவை வசனம் “ஊ ... பண்ணி, லவ் பண்ணி, marry பண்ணி”. 

காமெடியனா 1946ல லவங்கி, அஞ்சலிதேவிக்கு ஜோடியாக 1954ல பொன்வயல், 1960ல அடுத்த வீட்டுப் பெண் போன்ற சில படங்கள் அவருக்கு பேர் வாங்கி கொடுத்தவை. வயசானப்புறம், ஹீரோவுக்கு அப்பா போன்ற supporting character ரோல்ல நடிச்சாராம்.   - ஹிந்து பத்திரிகை 
 
Heezulia  

Sponsored content

PostSponsored content



Page 2 of 12 Previous  1, 2, 3, ... 10, 11, 12  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக