புதிய பதிவுகள்
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 5:21 am

» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மெட்ராஸின் 300 வருடங்களுக்கு முந்தைய பார்ட்டி - சென்னை பிறந்த கதை! பகுதி 5 Poll_c10மெட்ராஸின் 300 வருடங்களுக்கு முந்தைய பார்ட்டி - சென்னை பிறந்த கதை! பகுதி 5 Poll_m10மெட்ராஸின் 300 வருடங்களுக்கு முந்தைய பார்ட்டி - சென்னை பிறந்த கதை! பகுதி 5 Poll_c10 
53 Posts - 58%
ayyasamy ram
மெட்ராஸின் 300 வருடங்களுக்கு முந்தைய பார்ட்டி - சென்னை பிறந்த கதை! பகுதி 5 Poll_c10மெட்ராஸின் 300 வருடங்களுக்கு முந்தைய பார்ட்டி - சென்னை பிறந்த கதை! பகுதி 5 Poll_m10மெட்ராஸின் 300 வருடங்களுக்கு முந்தைய பார்ட்டி - சென்னை பிறந்த கதை! பகுதி 5 Poll_c10 
13 Posts - 14%
Dr.S.Soundarapandian
மெட்ராஸின் 300 வருடங்களுக்கு முந்தைய பார்ட்டி - சென்னை பிறந்த கதை! பகுதி 5 Poll_c10மெட்ராஸின் 300 வருடங்களுக்கு முந்தைய பார்ட்டி - சென்னை பிறந்த கதை! பகுதி 5 Poll_m10மெட்ராஸின் 300 வருடங்களுக்கு முந்தைய பார்ட்டி - சென்னை பிறந்த கதை! பகுதி 5 Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
மெட்ராஸின் 300 வருடங்களுக்கு முந்தைய பார்ட்டி - சென்னை பிறந்த கதை! பகுதி 5 Poll_c10மெட்ராஸின் 300 வருடங்களுக்கு முந்தைய பார்ட்டி - சென்னை பிறந்த கதை! பகுதி 5 Poll_m10மெட்ராஸின் 300 வருடங்களுக்கு முந்தைய பார்ட்டி - சென்னை பிறந்த கதை! பகுதி 5 Poll_c10 
4 Posts - 4%
Abiraj_26
மெட்ராஸின் 300 வருடங்களுக்கு முந்தைய பார்ட்டி - சென்னை பிறந்த கதை! பகுதி 5 Poll_c10மெட்ராஸின் 300 வருடங்களுக்கு முந்தைய பார்ட்டி - சென்னை பிறந்த கதை! பகுதி 5 Poll_m10மெட்ராஸின் 300 வருடங்களுக்கு முந்தைய பார்ட்டி - சென்னை பிறந்த கதை! பகுதி 5 Poll_c10 
2 Posts - 2%
prajai
மெட்ராஸின் 300 வருடங்களுக்கு முந்தைய பார்ட்டி - சென்னை பிறந்த கதை! பகுதி 5 Poll_c10மெட்ராஸின் 300 வருடங்களுக்கு முந்தைய பார்ட்டி - சென்னை பிறந்த கதை! பகுதி 5 Poll_m10மெட்ராஸின் 300 வருடங்களுக்கு முந்தைய பார்ட்டி - சென்னை பிறந்த கதை! பகுதி 5 Poll_c10 
2 Posts - 2%
natayanan@gmail.com
மெட்ராஸின் 300 வருடங்களுக்கு முந்தைய பார்ட்டி - சென்னை பிறந்த கதை! பகுதி 5 Poll_c10மெட்ராஸின் 300 வருடங்களுக்கு முந்தைய பார்ட்டி - சென்னை பிறந்த கதை! பகுதி 5 Poll_m10மெட்ராஸின் 300 வருடங்களுக்கு முந்தைய பார்ட்டி - சென்னை பிறந்த கதை! பகுதி 5 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மெட்ராஸின் 300 வருடங்களுக்கு முந்தைய பார்ட்டி - சென்னை பிறந்த கதை! பகுதி 5 Poll_c10மெட்ராஸின் 300 வருடங்களுக்கு முந்தைய பார்ட்டி - சென்னை பிறந்த கதை! பகுதி 5 Poll_m10மெட்ராஸின் 300 வருடங்களுக்கு முந்தைய பார்ட்டி - சென்னை பிறந்த கதை! பகுதி 5 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
மெட்ராஸின் 300 வருடங்களுக்கு முந்தைய பார்ட்டி - சென்னை பிறந்த கதை! பகுதி 5 Poll_c10மெட்ராஸின் 300 வருடங்களுக்கு முந்தைய பார்ட்டி - சென்னை பிறந்த கதை! பகுதி 5 Poll_m10மெட்ராஸின் 300 வருடங்களுக்கு முந்தைய பார்ட்டி - சென்னை பிறந்த கதை! பகுதி 5 Poll_c10 
1 Post - 1%
Rutu
மெட்ராஸின் 300 வருடங்களுக்கு முந்தைய பார்ட்டி - சென்னை பிறந்த கதை! பகுதி 5 Poll_c10மெட்ராஸின் 300 வருடங்களுக்கு முந்தைய பார்ட்டி - சென்னை பிறந்த கதை! பகுதி 5 Poll_m10மெட்ராஸின் 300 வருடங்களுக்கு முந்தைய பார்ட்டி - சென்னை பிறந்த கதை! பகுதி 5 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மெட்ராஸின் 300 வருடங்களுக்கு முந்தைய பார்ட்டி - சென்னை பிறந்த கதை! பகுதி 5 Poll_c10மெட்ராஸின் 300 வருடங்களுக்கு முந்தைய பார்ட்டி - சென்னை பிறந்த கதை! பகுதி 5 Poll_m10மெட்ராஸின் 300 வருடங்களுக்கு முந்தைய பார்ட்டி - சென்னை பிறந்த கதை! பகுதி 5 Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
மெட்ராஸின் 300 வருடங்களுக்கு முந்தைய பார்ட்டி - சென்னை பிறந்த கதை! பகுதி 5 Poll_c10மெட்ராஸின் 300 வருடங்களுக்கு முந்தைய பார்ட்டி - சென்னை பிறந்த கதை! பகுதி 5 Poll_m10மெட்ராஸின் 300 வருடங்களுக்கு முந்தைய பார்ட்டி - சென்னை பிறந்த கதை! பகுதி 5 Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
மெட்ராஸின் 300 வருடங்களுக்கு முந்தைய பார்ட்டி - சென்னை பிறந்த கதை! பகுதி 5 Poll_c10மெட்ராஸின் 300 வருடங்களுக்கு முந்தைய பார்ட்டி - சென்னை பிறந்த கதை! பகுதி 5 Poll_m10மெட்ராஸின் 300 வருடங்களுக்கு முந்தைய பார்ட்டி - சென்னை பிறந்த கதை! பகுதி 5 Poll_c10 
231 Posts - 22%
sugumaran
மெட்ராஸின் 300 வருடங்களுக்கு முந்தைய பார்ட்டி - சென்னை பிறந்த கதை! பகுதி 5 Poll_c10மெட்ராஸின் 300 வருடங்களுக்கு முந்தைய பார்ட்டி - சென்னை பிறந்த கதை! பகுதி 5 Poll_m10மெட்ராஸின் 300 வருடங்களுக்கு முந்தைய பார்ட்டி - சென்னை பிறந்த கதை! பகுதி 5 Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
மெட்ராஸின் 300 வருடங்களுக்கு முந்தைய பார்ட்டி - சென்னை பிறந்த கதை! பகுதி 5 Poll_c10மெட்ராஸின் 300 வருடங்களுக்கு முந்தைய பார்ட்டி - சென்னை பிறந்த கதை! பகுதி 5 Poll_m10மெட்ராஸின் 300 வருடங்களுக்கு முந்தைய பார்ட்டி - சென்னை பிறந்த கதை! பகுதி 5 Poll_c10 
28 Posts - 3%
krishnaamma
மெட்ராஸின் 300 வருடங்களுக்கு முந்தைய பார்ட்டி - சென்னை பிறந்த கதை! பகுதி 5 Poll_c10மெட்ராஸின் 300 வருடங்களுக்கு முந்தைய பார்ட்டி - சென்னை பிறந்த கதை! பகுதி 5 Poll_m10மெட்ராஸின் 300 வருடங்களுக்கு முந்தைய பார்ட்டி - சென்னை பிறந்த கதை! பகுதி 5 Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
மெட்ராஸின் 300 வருடங்களுக்கு முந்தைய பார்ட்டி - சென்னை பிறந்த கதை! பகுதி 5 Poll_c10மெட்ராஸின் 300 வருடங்களுக்கு முந்தைய பார்ட்டி - சென்னை பிறந்த கதை! பகுதி 5 Poll_m10மெட்ராஸின் 300 வருடங்களுக்கு முந்தைய பார்ட்டி - சென்னை பிறந்த கதை! பகுதி 5 Poll_c10 
18 Posts - 2%
prajai
மெட்ராஸின் 300 வருடங்களுக்கு முந்தைய பார்ட்டி - சென்னை பிறந்த கதை! பகுதி 5 Poll_c10மெட்ராஸின் 300 வருடங்களுக்கு முந்தைய பார்ட்டி - சென்னை பிறந்த கதை! பகுதி 5 Poll_m10மெட்ராஸின் 300 வருடங்களுக்கு முந்தைய பார்ட்டி - சென்னை பிறந்த கதை! பகுதி 5 Poll_c10 
8 Posts - 1%
Rutu
மெட்ராஸின் 300 வருடங்களுக்கு முந்தைய பார்ட்டி - சென்னை பிறந்த கதை! பகுதி 5 Poll_c10மெட்ராஸின் 300 வருடங்களுக்கு முந்தைய பார்ட்டி - சென்னை பிறந்த கதை! பகுதி 5 Poll_m10மெட்ராஸின் 300 வருடங்களுக்கு முந்தைய பார்ட்டி - சென்னை பிறந்த கதை! பகுதி 5 Poll_c10 
5 Posts - 0%
Abiraj_26
மெட்ராஸின் 300 வருடங்களுக்கு முந்தைய பார்ட்டி - சென்னை பிறந்த கதை! பகுதி 5 Poll_c10மெட்ராஸின் 300 வருடங்களுக்கு முந்தைய பார்ட்டி - சென்னை பிறந்த கதை! பகுதி 5 Poll_m10மெட்ராஸின் 300 வருடங்களுக்கு முந்தைய பார்ட்டி - சென்னை பிறந்த கதை! பகுதி 5 Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மெட்ராஸின் 300 வருடங்களுக்கு முந்தைய பார்ட்டி - சென்னை பிறந்த கதை! பகுதி 5


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Dec 26, 2017 11:02 am

மெட்ராஸின் 300 வருடங்களுக்கு முந்தைய பார்ட்டி - சென்னை பிறந்த கதை! பகுதி 5 Vo699YFxRtGFgS2DXRNZ+4448b729dd3cad5a3e1f0bbe9d6ae0cd
Third party image reference
நியூ இயர் பார்ட்டிதான் தற்போதைய ஹாட் ட்ரெண்டிங் சப்ஜெக்ட். இன்னைக்கு மெட்ராஸ் மக்கள் பார்ட்டி கொண்டாட ஆயிரம் இடங்கள் இருக்கின்றன. ஈ.சி.ஆர், ஓ.எம்.ஆர். பக்கம் போனால் பார்ட்டியோ பார்ட்டிதான். ஆனால், கிட்டத்தட்ட 350 வருடங்களுக்குமுன் கிழக்கிந்திய கம்பெனிக்காரர்கள், மெட்ராஸில் காலடி எடுத்து வைத்தபோது, ஈ.சி.ஆர், ஓ.எம்.ஆர் எல்லாம் இல்லை. குளிர்தேசத்தில் இளம் சூடான மதுபானங்களை சுவைத்தபடி, காற்றில் தவழும் மெல்லிசைக்கு நோகாமல் டான்ஸ் ஆடி பார்ட்டி கொண்டாடிய பார்ட்டிகள், இப்படி வெயில் வறுத்தெடுக்கும் நாட்டிற்கு வந்ததும் உண்மையிலேயே நாக்கு தள்ளிப் போனார்கள்.


கிழக்கிந்திய கம்பெனியின் பிரதிநிதியான பிரான்சிஸ் டே, சென்னை என்ற இந்த நிலப்பகுதியை தேர்ந்தெடுத்ததற்கு முக்கியக் காரணமே இது கடலுக்கு மிக அருகில் இருக்கிறது என்பதால்தான். கூடுதலாக, கோட்டைக்கு அருகிலேயே கூவம் நதியும் (அந்த காலத்தில் உண்மையில் நதியாகத்தான் இருந்தது) இருந்ததால் இங்கு வீசும் காற்றில் குளுமை இருந்தது. அவர்களின் வணிகத்திற்கு கடலும், வாட்டும் வெயிலுக்கு மாலையில் வீசும் சில்லென்ற கடல் காற்றும் பெரும் உதவியாக இருந்தன. ஆனாலும் அவர்களுக்கு ஒரு பெரிய குறை இருந்தது. தங்கள் நாட்டில் இருந்ததைப்போல இங்கு தினமும் இரவில் பார்ட்டி கொண்டாட முடியவில்லை. அதற்கு முக்கியக் காரணம் ஐஸ் கட்டி கிடைக்காததுதான். இங்கிலாந்தில் இருந்து வரும் கப்பல்களில் வணிகச்  சரக்குகளுடன் சேர்த்து பார்ட்டிக்கான “சரக்கையும்” ஏற்றி வந்துவிடலாம். ஆனால் அதில் போட்டு மிதக்கவிட ஐஸ் கட்டிக்கு என்ன செய்வது? அப்படியே பாளம்பாளமாக ஐஸ் கட்டிகளை கப்பலில் ஏற்றி வந்தாலும், அதை எப்படி நாள்கணக்கில் பாதுகாத்து வைப்பது? இதெல்லாம் அன்றைய “குடி”மகன்களின் தலையாய பிரச்னைகளாக இருந்தன.


இந்தப் பிரச்னைக்குத் தீர்வுகாணப் பிறந்ததுதான் இன்றைய விவேகானந்தர் இல்லம் என்று அழைக்கப்படும் அன்றைய 'ஐஸ் ஹவுஸ்'. பார்ட்டிக்கு உதவும் கட்டடம் என்பதாலோ என்னவோ பிரமாண்டமான பிறந்தநாள் கேக் போல கட்டிவிட்டார்கள். இந்த கட்டிடம் தோன்றிய கதை ரொம்பவே சுவாரஸ்யமானது. இதைக் கட்டியவர் ஒரு மகாராஜா. சாதாரண மகாராஜா அல்ல, ஐஸ் மகாராஜா. அட, ஆமாங்க! அவரை அப்படித்தான் அந்தக் காலத்தில் எல்லோரும் அழைப்பார்கள். அவர் பெயர் ஃபிரெட்ரிக் டூடர் (Fredric Tudor). ஐஸ் கட்டி வியாபாரத்தில் கொடிகட்டிப் பறந்ததால் அவருக்கு இந்த பட்டப்பெயர் வந்தது.
நன்றி
விகடன்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Dec 26, 2017 11:03 am

அமெரிக்காவைச் சேர்ந்த டூடர், தன் கல்லூரிப் படிப்பை பாதியில் விட்டுவிட்டு அப்படியே ஹாயாக ஊர்சுற்ற ஆரம்பித்தார். சும்மா உள்ளூரில் சுற்றாமல் வெளிநாடுகளுக்குச் சென்று சுற்றியதுதான் அவர் வாழ்வில் பெரிய மாற்றத்திற்கு வித்திட்டது. அப்படி ஒருமுறை கியூபா சென்ற டூடர், அங்கு சுட்டெரித்த சூரியனைப் பார்த்து மெர்சலாகி விட்டார். "அப்பப்பா.. என்னா வெயில்...என்னா வெயில்.. கொஞ்சம் ஜில்லுனு ஏதாவது குடித்தால் நன்றாக இருக்குமே" என்று எண்ணியவருக்கு ஒன்றும் கிடைக்கவில்லை. ஆனால் ஒரு அற்புதமான யோசனை கிடைத்தது. "அமெரிக்காவில் வீணாகப்போகும் ஐஸ் கட்டிகளை ஏன் கியூபாவிற்கு ஏற்றுமதி செய்யக்கூடாது?" என்பதுதான் அந்த அதிஅற்புத யோசனை. இதேபோல வெயில் பட்டையை உரிக்கும் நாடுகளின் பட்டியலை தயாரித்தார் டூடர். அதில் இந்தியாவும் இருந்தது. ஐஸ் வியாபாரியாக மாறிய டூடர், முதன்முதலில் 1833-ல் கிளிப்பர் டுஸ்கானி (Clipper Tuscany) என்ற கப்பலில் இந்தியாவிற்கு ஐஸ் கட்டிகளை அனுப்பி வைத்தார். இப்படித்தான் முதன்முதலில் இம்போர்டட் ஐஸ் ஜில்லென்று இந்தியாவிற்குள் வந்தது. ஐஸ் கட்டிகளை அனுப்பிவைத்தால் மட்டும் போதாது, அவற்றை பல மாதங்கள் பத்திரமாக சேமித்து வைத்து விற்பனை செய்ய ஏற்ற கட்டடங்கள் வேண்டும் என்பதை டூடர் உணர்ந்தார். அதற்காக இந்தியாவில் மூன்று கட்டடங்களைக் கட்டினார். பம்பாய், கல்கத்தா, மெட்ராஸ் ஆகிய பெருநகரங்களில் கடலை ஒட்டி அவர் தனது ஐஸ் கிடங்குக்கான கட்டடங்களைக் கட்டினார். இதில் பம்பாய், கல்கத்தா கட்டிடங்கள், ஐஸ் கட்டியைப்போல காலத்தால் கரைந்து காணாமல் போய்விட்டன. சென்னையில் அமைக்கப்பட்ட ஐஸ் ஹவுஸ் கட்டடம் மட்டும் இன்றும் கில்லி மாதிரி நிற்கிறது. அதுதான் மெரினா சாலையில் இன்று விவேகானந்தர் இல்லமாக மாறி இருக்கிறது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Dec 26, 2017 11:04 am

ஐஸ் ஹவுஸ் கட்டிடம் 1842-ல் கட்டப்பட்டது. இங்கிலாந்தில் இருந்து பெரிய கப்பல்களில் வரும் ஐஸ் கட்டிகளை சிறிய படகுகளில் இறக்கி கரை சேர்ப்பார்கள். பின்னர் அந்த ஐஸ் கட்டிகள் கடற்கரைக்கு மிக அருகிலேயே  (அப்போதெல்லாம் கடல் இன்னும் பக்கத்தில் இருந்தது) அமைந்திருந்த ஐஸ் ஹவுஸ் கட்டிடத்தில் சேமித்து வைக்கப்படும். வெயிலில் கரைந்து விடக்கூடாது என்பதற்காக சூரிய ஒளி உள்ளே புகாத வகையில் இந்த கட்டிடம் வட்டவடிவில் ஜன்னல்கள் ஏதுமின்றி பெரிய குடோன் போன்ற அமைப்பில் கட்டப்பட்டது. ஒரு பவுண்ட் எடையுள்ள ஐஸ் கட்டி நான்கு அணா என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. வாங்கிச்செல்லும் ஐஸ் கட்டிகள் சீக்கிரம் கரைந்துவிடாமல் இருக்க, அவற்றின் மீது போர்த்தும் கனமான போர்வைகளையும் டூடர் விற்பனை செய்தார். 


டூடரின் ஐஸ் கட்டிகளுக்கு சென்னையில் நல்ல மவுசு இருந்தது. அந்தக் காலத்தில் கோட்டைக்குள் நடந்த பார்ட்டிகளில் எல்லாம் டூடரின் ஐஸ்தான் கோப்பைகளுக்குள் மிதந்து கொண்டிருந்தன. இதில் டூடருக்கு நல்ல லாபம் கிடைத்தது. இப்படியே சுமார் 40 ஆண்டு காலம், சென்னையில் இந்த ஐஸ் வியாபாரம் கனஜோராக நடைபெற்றது. 1880-களில் இந்தியாவிலேயே நீராவி முறையில் ஐஸ் கட்டி தயாரிக்கும் முறை அறிமுகமானதும், டூடரின் வியாபாரம் படுத்துவிட்டது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Dec 26, 2017 11:07 am

இதனால் வியாபாரத்தை மூட்டைகட்ட முடிவு செய்த டூடர், ஐஸ் ஹவுஸ் கட்டடத்தை பிலிகிரி அய்யங்கார் என்ற மெட்ராஸ் உயர் நீதிமன்ற வழக்கறிஞருக்கு விற்றுவிட்டார். வீடாகப் பயன்படுத்தலாம் என்ற எண்ணத்தில்தான் அய்யங்கார் இதை வாங்கினார். எனவே அதற்கேற்ப வராண்டாக்கள், நிறைய ஜன்னல்கள் என அந்தக் கட்டடத்தில் பல மாற்றங்களை செய்து, அதற்கு கெர்னன் கேஸ்டல் எனப் பெயரும் வைத்தார். கட்டடத்தின் ஒரு பகுதியில் ஏழை மாணவர்களையும் பிலிகிரி அய்யங்கார் தங்க வைத்திருந்தார். ஆனால், எத்தனை ஜன்னல்கள் வைத்தபோதும் அந்த வீட்டில் காற்றோட்டம் போதுமான அளவு கிடைக்கவில்லை. கடைசிவரை, ஒரு நல்ல வீடாக இருக்கும் வாய்ப்பு அந்தக் கட்டிடத்திற்கு வாய்க்கவே இல்லை. இந்த சமயத்தில்தான் இங்கு வந்து தங்கினார் ஒரு தேசியப் பிரபலம். அவர்தான் இந்தியாவின் வீரத்துறவி விவேகானந்தர். சிகாகோ மாநாட்டில் உலகப் புகழ்பெற்ற உரையை ஆற்றிவிட்டு, பெரும் புகழுடன் 1897-ல் தாய்நாடு திரும்பிய சுவாமி விவேகானந்தர், ஊருக்குச் செல்லும் வழியில் சென்னைக்கு வந்தார். அவருக்கு எழும்பூர் ரயில் நிலையத்தில் வரலாறு காணாத வரவேற்பு அளிக்கப்பட்டது. நம்ம பிலிகிரி அய்யங்கார் விவேகானந்தரின் தீவிர சீடர் என்பதால் சுவாமிகள் தனது வீட்டில் சிறிது காலம் தங்க வேண்டும் என விண்ணப்பம் வைத்தார். இதனை ஏற்றுக்கொண்ட விவேகானந்தர் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு ஐஸ் ஹவுசில் தங்க வைக்கப்பட்டார். இங்கு தங்கியிருந்த நாட்களில், விவேகானந்தர் எழுச்சிமிக்க ஏழு உரைகளை ஆற்றினார். சென்னைவாசம் முடிந்து ஊருக்குப் புறப்பட்ட விவேகானந்தரிடம், சுவாமிகளின் ஆன்மீகப் பணிகளுக்காக சென்னையிலேயே ஒரு நிரந்தர மையம் அமைக்க வேண்டுமென உள்ளூர் பக்தர்கள் கேட்டுக் கொண்டனர். இதனையடுத்து ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சருக்கு ஐஸ் ஹவுஸ் கட்டடத்திற்குள்ளேயே ஒரு கோயில் கட்டப்பட்டது. அதுதான் மெட்ராசில் ஆரம்பிக்கப்பட்ட ராமகிருஷ்ண மடத்தின் முதல் கிளை. 1906-ல் பிலிகிரி அய்யங்கார் பரமபதம் அடைந்த பிறகு, ஒரு ஜமீன்தார் இந்த வீட்டை வாங்கினார். பின்னர் 1917-ல் அப்போதைய பிரிட்டிஷ் அரசாங்கம் இந்த வீட்டை அவரிடம் இருந்து வாங்கி, பிராமண விதவைகளுக்கான ஹாஸ்டலாக மாற்றியது. பின்னர் சில காலம் ஆசிரியர்கள் தங்கும் விடுதியாகவும், பி.எட். பயிற்சி மாணவர் விடுதியாகவும் இந்த வீடு செயல்பட்டது. இந்நிலையில் 1963-ல் சுவாமி விவேகானந்தரின்  நூற்றாண்டு விழா வந்தது. இதனையொட்டி, இந்த கட்டிடத்தின் பெயர் விவேகானந்தர் இல்லம் என தமிழக அரசால் அதிகாரப்பூர்வமாக மாற்றப்பட்டது. 1997-ல் இந்த கட்டடமும், அருகில் உள்ள நிலமும் ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்திற்கு லீசுக்கு விடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இங்கு சுவாமி விவேகானந்தர் மற்றும் இந்தியாவின் கலாச்சார பாரம்பரியம் பற்றிய நிரந்தர கண்காட்சி அமைக்கப்பட்டது. இங்கு விவேகானந்தரின் அரிய புகைப்படங்கள் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

இப்படித்தான் கால ஓட்டத்தில், சிற்றின்பத்திற்கு உதவுவதற்காக கட்டப்பட்ட கட்டிடம் பேரின்பத்திற்கு வழிகாட்ட உதவும் இடமாக பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கிறது

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Dec 26, 2017 5:06 pm

அருமை இப்போது தான் ஐஸ் ஹவுஸ் பெயர் கரணம் தெரியுது



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Dec 26, 2017 8:09 pm

SK wrote:அருமை இப்போது தான் ஐஸ் ஹவுஸ் பெயர் கரணம் தெரியுது
மேற்கோள் செய்த பதிவு: 1254845
நன்றி
நண்பா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக