Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்by heezulia Today at 6:48 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தெரிஞ்சதும் தெரியாததும்
+7
ரா.ரமேஷ்குமார்
Dr.S.Soundarapandian
பழ.முத்துராமலிங்கம்
SK
ayyasamy ram
T.N.Balasubramanian
heezulia
11 posters
Page 29 of 29
Page 29 of 29 • 1 ... 16 ... 27, 28, 29
தெரிஞ்சதும் தெரியாததும்
First topic message reminder :
16.12.2017
'தெரிஞ்சதும் தெரியாததும்' - ஏன் இந்த தலைப்புன்னு நெனச்சாலும் நெனப்பீங்க. நான் சொல்ற விஷயங்கள் எதுவும் எனக்கு தெரியாதது போல ஒரு சிலருக்கு தெரியாம இருக்கலாம். மத்தவங்களுக்கு தெரிஞ்சிருக்கலாம். அதுதான் 'உங்களுக்கு தெரிந்ததும் எனக்கு தெரியாததும்'.
சந்திரபாபு பாட்டுக்களை நாம் எல்லாரும் கேட்டிருக்கோம்ல ? நல்லாவே பாடியிருப்பார். சரி, ஜேசுதாஸ் எப்படி? அவரும் நல்ல ஒரு பாடகர்தான். ஆனா ............. பறக்கும் பாவை படத்துல சந்திரபாபுக்காக ஜேசுதாஸ் ஒரு பாட்டு பாடியிருக்கார். அது என்ன பாட்டுன்னு சொல்லுங்க பார்ப்போம். சரி................, ஜேசுதாசுக்கு சந்திரபாபு பாடியிருக்காரா?
எம்.ஜி.ஆருக்கு கலங்கரை விளக்கத்தில பஞ்சு அருணாச்சலம் ஒரு பாட்டு எழுதியிருக்காராம். அது என்ன பா.........................ட்டு?
உரிமைக் குரல் [1974] அப்டீன்னு ஒரு படம் இருக்குல்ல. அதுல "விழியே கதை எழுது" ன்னு ஒரு பாட்டு இருக்குல்ல. இந்த பாட்ட எழுதியது யாருன்னு தெரியும்னு நெனக்கிறேன். கண்ணதாசன்தானாங்க. ஆனா, பாட்டு புத்தகத்துல, ஆடியோ கேசட்டுல, அதுமட்டுமில்லீங்க, படத்தோட டைட்டில்ல கூட வாலின்னு போட்டிருந்ததாமே. அந்த சமயத்தில எம்.ஜி.ஆருக்கும், கண்ணதாசனுக்கும் என்னவோ லடாயாம். அதனால ஸ்ரீதர் [உரிமைக்குரல் எம்.ஜி.ஆர வச்சு எடுத்த முதல் படமாம்] எம்.ஜி.ஆருக்கு தெரியாம கண்ணதாசன்கிட்டே பாட்டை எழுதி வாங்கிட்டு, வாலி பேர போட்டுட்டாராம். இந்த சமாச்சாரம் எப்படியோ எம்.ஜி.ஆருக்கு தெரிய வந்துச்சாம். வருத்தப்பட்டாராம் எம்.ஜி.ஆர்.
Baby Heerajan
16.12.2017
'தெரிஞ்சதும் தெரியாததும்' - ஏன் இந்த தலைப்புன்னு நெனச்சாலும் நெனப்பீங்க. நான் சொல்ற விஷயங்கள் எதுவும் எனக்கு தெரியாதது போல ஒரு சிலருக்கு தெரியாம இருக்கலாம். மத்தவங்களுக்கு தெரிஞ்சிருக்கலாம். அதுதான் 'உங்களுக்கு தெரிந்ததும் எனக்கு தெரியாததும்'.
சந்திரபாபு பாட்டுக்களை நாம் எல்லாரும் கேட்டிருக்கோம்ல ? நல்லாவே பாடியிருப்பார். சரி, ஜேசுதாஸ் எப்படி? அவரும் நல்ல ஒரு பாடகர்தான். ஆனா ............. பறக்கும் பாவை படத்துல சந்திரபாபுக்காக ஜேசுதாஸ் ஒரு பாட்டு பாடியிருக்கார். அது என்ன பாட்டுன்னு சொல்லுங்க பார்ப்போம். சரி................, ஜேசுதாசுக்கு சந்திரபாபு பாடியிருக்காரா?
எம்.ஜி.ஆருக்கு கலங்கரை விளக்கத்தில பஞ்சு அருணாச்சலம் ஒரு பாட்டு எழுதியிருக்காராம். அது என்ன பா.........................ட்டு?
உரிமைக் குரல் [1974] அப்டீன்னு ஒரு படம் இருக்குல்ல. அதுல "விழியே கதை எழுது" ன்னு ஒரு பாட்டு இருக்குல்ல. இந்த பாட்ட எழுதியது யாருன்னு தெரியும்னு நெனக்கிறேன். கண்ணதாசன்தானாங்க. ஆனா, பாட்டு புத்தகத்துல, ஆடியோ கேசட்டுல, அதுமட்டுமில்லீங்க, படத்தோட டைட்டில்ல கூட வாலின்னு போட்டிருந்ததாமே. அந்த சமயத்தில எம்.ஜி.ஆருக்கும், கண்ணதாசனுக்கும் என்னவோ லடாயாம். அதனால ஸ்ரீதர் [உரிமைக்குரல் எம்.ஜி.ஆர வச்சு எடுத்த முதல் படமாம்] எம்.ஜி.ஆருக்கு தெரியாம கண்ணதாசன்கிட்டே பாட்டை எழுதி வாங்கிட்டு, வாலி பேர போட்டுட்டாராம். இந்த சமாச்சாரம் எப்படியோ எம்.ஜி.ஆருக்கு தெரிய வந்துச்சாம். வருத்தப்பட்டாராம் எம்.ஜி.ஆர்.
Baby Heerajan
![மீண்டும் சந்திப்போம்](/users/1813/71/41/02/smiles/68516.gif)
heezulia- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4915
இணைந்தது : 03/12/2017
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: தெரிஞ்சதும் தெரியாததும்
05.09.2020
சிவசங்கரி எழுதிய ஒரு சிங்கம் முயலாகிறது நாவல் 1980ல அவன் அவள் அது என்ற படமாக உருவாச்சு.
இந்த படத்தில் டைட்டில்ல இந்த நாவலை புரட்டுறது போல காட்டியிருக்காங்க. டைரக்டர் முக்தா சீனிவாசன் டைரக் ஷன்ல, சிவகுமாருக்கு முதல் படம்.
கண்மணி சுப்பு, கலைவாணன். இவங்க ரெண்டு பேரும் கவிஞர் கண்ணதாசனின் பிள்ளைங்க. கண்மணி சுப்பு அன்புள்ள அத்தான் 1981 படத்துக்கு வசனம் எழுதி டைரக்ட் செஞ்சார். கலைவாணன் நடிச்சார். படம் சரியா ஓடல. கண்ணதாசன் படம் பாத்துட்டு படத்தை சரியா எடுக்கலேன்னு திட்டினாராம்.
இளையராஜாவுக்கு கண்ணதாசன் மொதமொதலா எழுதிய பாட்டு பாலூட்டி வளர்த்த கிளி படத்ல "கண்ணோட கண்ணு ரெண்டு ஒண்ணோடு ஒண்ணு" ங்கற பாட்டு. அந்தப் பாட்டை வாசிச்சு பார்த்ததும் இளையராஜாவுக்கு கையும் ஓடல, காலும் ஓடலியாம்.
எதுக்கு தெரியுமா?
அந்தப் பாட்டின் கடைசில "ராஜா வா ராஜா வா" ன்னு வருதுல்ல, அதுக்குத்தான். திரையுலகத்துக்கு "வா ராஜா வா" ன்னு கூப்ட மாதிரி இருந்துச்சாம்.
பேபி
சிவசங்கரி எழுதிய ஒரு சிங்கம் முயலாகிறது நாவல் 1980ல அவன் அவள் அது என்ற படமாக உருவாச்சு.
இந்த படத்தில் டைட்டில்ல இந்த நாவலை புரட்டுறது போல காட்டியிருக்காங்க. டைரக்டர் முக்தா சீனிவாசன் டைரக் ஷன்ல, சிவகுமாருக்கு முதல் படம்.
கண்மணி சுப்பு, கலைவாணன். இவங்க ரெண்டு பேரும் கவிஞர் கண்ணதாசனின் பிள்ளைங்க. கண்மணி சுப்பு அன்புள்ள அத்தான் 1981 படத்துக்கு வசனம் எழுதி டைரக்ட் செஞ்சார். கலைவாணன் நடிச்சார். படம் சரியா ஓடல. கண்ணதாசன் படம் பாத்துட்டு படத்தை சரியா எடுக்கலேன்னு திட்டினாராம்.
இளையராஜாவுக்கு கண்ணதாசன் மொதமொதலா எழுதிய பாட்டு பாலூட்டி வளர்த்த கிளி படத்ல "கண்ணோட கண்ணு ரெண்டு ஒண்ணோடு ஒண்ணு" ங்கற பாட்டு. அந்தப் பாட்டை வாசிச்சு பார்த்ததும் இளையராஜாவுக்கு கையும் ஓடல, காலும் ஓடலியாம்.
எதுக்கு தெரியுமா?
அந்தப் பாட்டின் கடைசில "ராஜா வா ராஜா வா" ன்னு வருதுல்ல, அதுக்குத்தான். திரையுலகத்துக்கு "வா ராஜா வா" ன்னு கூப்ட மாதிரி இருந்துச்சாம்.
பேபி
heezulia- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4915
இணைந்தது : 03/12/2017
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: தெரிஞ்சதும் தெரியாததும்
05.09.2020
ஆயிரம் ஜென்மங்கள் 1978
நல்லா ஓடின படம். ரஜினிக்கு முதல் திகில் படம், தமிழ்ல முதல் கலர் படம். இந்த படத்தின் ப்ரொட்யூஸர் M முத்துராமன். 2014ல ரிலீஸ் ஆன அரண்மனை, தன்னோட படம் ஆயிரம் ஜென்மங்கள் படத்தின் ரீமேக்னு கேஸ் போட்டாராம்.
கோர்ட்ல ரெண்டு படத்தையும் போட்டு பாத்துட்டு, ஆயிரம் ஜென்மங்கள் கதையும், நிறைய ஸீனும் அரண்மனை படத்ல இருக்கூனு ரிப்போர்ட் குடுத்துட்டாங்க.
தயாரிப்பாளர் M முத்துராமனும், அரண்மனை படத்தின் இயக்குனர் சுந்தர் C யும் காம்ப்ரமைஸ் செஞ்சுக்கணும்னு கோர்ட்டு உத்தரவு. அதுக்கப்புறம் ஏன்ன ஆச்சூனு தெரீல.
இதுக்கு முன்னால என்ன நடந்துச்சுனு பாருங்க. இல்ல இல்ல படிங்க. முத்துராமன் ஆயிரம் ஜென்மங்கள் 2 னு படம் எடுக்க ரெடியாயிருந்தாராம். அதற்கான ஏற்பாடும் செஞ்சுட்டார். அட்வான்ஸ் குடுக்க வேண்டியவங்களுக்கெல்லாம் கொடுத்துட்டார். இப்படிப்பட்ட நேரத்லதான் அரண்மனை படம் வந்துச்சு. அதுக்கப்புறம் நடந்ததைத்தான் சொல்லிட்டேனே.
இதுல இன்னொண்ணு என்னான்னா, 1976ல மலையாளத்லயும், தெலுங்குலயும் வந்த படங்களின் ரீமேக் இந்த ஆயிரம் ஜென்மங்கள் படம்.
இது எப்டி இருக்கு?
பேபி
ஆயிரம் ஜென்மங்கள் 1978
நல்லா ஓடின படம். ரஜினிக்கு முதல் திகில் படம், தமிழ்ல முதல் கலர் படம். இந்த படத்தின் ப்ரொட்யூஸர் M முத்துராமன். 2014ல ரிலீஸ் ஆன அரண்மனை, தன்னோட படம் ஆயிரம் ஜென்மங்கள் படத்தின் ரீமேக்னு கேஸ் போட்டாராம்.
கோர்ட்ல ரெண்டு படத்தையும் போட்டு பாத்துட்டு, ஆயிரம் ஜென்மங்கள் கதையும், நிறைய ஸீனும் அரண்மனை படத்ல இருக்கூனு ரிப்போர்ட் குடுத்துட்டாங்க.
தயாரிப்பாளர் M முத்துராமனும், அரண்மனை படத்தின் இயக்குனர் சுந்தர் C யும் காம்ப்ரமைஸ் செஞ்சுக்கணும்னு கோர்ட்டு உத்தரவு. அதுக்கப்புறம் ஏன்ன ஆச்சூனு தெரீல.
இதுக்கு முன்னால என்ன நடந்துச்சுனு பாருங்க. இல்ல இல்ல படிங்க. முத்துராமன் ஆயிரம் ஜென்மங்கள் 2 னு படம் எடுக்க ரெடியாயிருந்தாராம். அதற்கான ஏற்பாடும் செஞ்சுட்டார். அட்வான்ஸ் குடுக்க வேண்டியவங்களுக்கெல்லாம் கொடுத்துட்டார். இப்படிப்பட்ட நேரத்லதான் அரண்மனை படம் வந்துச்சு. அதுக்கப்புறம் நடந்ததைத்தான் சொல்லிட்டேனே.
இதுல இன்னொண்ணு என்னான்னா, 1976ல மலையாளத்லயும், தெலுங்குலயும் வந்த படங்களின் ரீமேக் இந்த ஆயிரம் ஜென்மங்கள் படம்.
இது எப்டி இருக்கு?
பேபி
heezulia- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4915
இணைந்தது : 03/12/2017
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: தெரிஞ்சதும் தெரியாததும்
05.09.2020
ஆறிலிருந்து அறுபது வரை 1979
புவனா ஒரு கேள்விக்குறி படத்தில் ரஜினியின் உணர்ச்சிமிக்க நடிப்பைப் பாத்துட்டு, அதே மாதிரி இன்னொரு படத்துல அவரை நடிக்க வைக்கணும்னு SP முத்துராமன் நெனச்சார். அதுதான் இந்தப் படமாம்.
முதல்ல சிவகுமாரை நடிக்க கூப்ட்டார். அவர் ஊஹும்ண்ட்டார். ரஜினிக்கு சந்தேகமாத்தான் இருந்துச்சு, இந்த மாதிரி இந்த மாதிரி நடிச்சா, நம்மள நல்ல படியா நல்ல படியா ஜனங்க ஏத்துக்குவாங்களான்னு. SP முத்துராமன் அவர கன்வின்ஸ் செஞ்சுட்டு, எடுத்த படம் 5000 அடி வரை edit செஞ்சு காட்டினாராம். அதுக்கப்புறமா ரஜினி ரொம்ப impress ஆகி, மீதி படத்தை இன்வா..........................ல்வாகி ஆகி நடிச்சு கொடுத்தார். சென்னை மிட்லன்ட் தியேட்டர்ல 25 வாரம் ஓடுச்சாம். அதுக்கப்புறம் என்ன, ரஜினிக்கு ஏறுமுகம்தான்.
பேபி
ஆறிலிருந்து அறுபது வரை 1979
புவனா ஒரு கேள்விக்குறி படத்தில் ரஜினியின் உணர்ச்சிமிக்க நடிப்பைப் பாத்துட்டு, அதே மாதிரி இன்னொரு படத்துல அவரை நடிக்க வைக்கணும்னு SP முத்துராமன் நெனச்சார். அதுதான் இந்தப் படமாம்.
முதல்ல சிவகுமாரை நடிக்க கூப்ட்டார். அவர் ஊஹும்ண்ட்டார். ரஜினிக்கு சந்தேகமாத்தான் இருந்துச்சு, இந்த மாதிரி இந்த மாதிரி நடிச்சா, நம்மள நல்ல படியா நல்ல படியா ஜனங்க ஏத்துக்குவாங்களான்னு. SP முத்துராமன் அவர கன்வின்ஸ் செஞ்சுட்டு, எடுத்த படம் 5000 அடி வரை edit செஞ்சு காட்டினாராம். அதுக்கப்புறமா ரஜினி ரொம்ப impress ஆகி, மீதி படத்தை இன்வா..........................ல்வாகி ஆகி நடிச்சு கொடுத்தார். சென்னை மிட்லன்ட் தியேட்டர்ல 25 வாரம் ஓடுச்சாம். அதுக்கப்புறம் என்ன, ரஜினிக்கு ஏறுமுகம்தான்.
பேபி
heezulia- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4915
இணைந்தது : 03/12/2017
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: தெரிஞ்சதும் தெரியாததும்
05.09.2020
ரத்த பாசம் 1954
இந்த படத்தின் கதை தெரியுமா ? இதோ தெரிஞ்சுக்கோங்க.
TK பகவதி - அண்ணன்
MS திரௌபதி - அண்ணனின் மனைவி
TS பாலையா - அண்ணனின் மேனேஜர்
வித்யாவதி - அண்ணனை மயக்கியவள்
TK சண்முகம் - தம்பி
அஞ்சலிதேவி - தம்பியோட லவ்வர்
அண்ணனும், தம்பியும் சின்ன வயசுல பிரிஞ்சிர்றாங்க. அண்ணன் கடத்தல் மன்னன். பெரிய பணக்காரன் ஆயிர்றான். தம்பி சந்தர்ப்ப வசத்தால பிக் பாக்கெட்.
அண்ணங்கிட்ட இருக்கும் பணத்தை திருட நினைக்கும் அவனோட மானேஜர். ஒரு பெண்ணை அனுப்பி அண்ணனை மயக்கி வைக்கிறான். அண்ணனும், மனைவியை மறந்துட்டு, அந்த ஆசை நாயகி வீட்லயே கிறங்கி போய் கிடக்கிறான்!
ஒரு நாள் பிக்பாக்கெட் தம்பி, தான் சுட்ட ஒரு மனிபர்ஸ்ல தன்னோட சின்ன வயசு போட்டோவை பாத்துட்டு, அந்த பர்ஸை தன் அண்ணன்கிட்டேயே திருடியதை தெரிஞ்சுகிறான். அப்போலயிருந்து தன் அண்ணனை தேடி அலைறான்.
தெரூல ஆடிப் பாடி பிழைக்கும் ஒரு பெண். அவளை தம்பி லவ்வுறான். தம்பி தன்னுடய லவ்வர்கிட்ட, தன் அண்ணனைப் பற்றி சொல்ல, எப்படியோ ரெண்டு பேரும் சேந்து அண்ணனை தேடி கண்டுபிடிச்சிர்றாங்க.
மானேஜர் சூழ்ச்சியால ஒரு பொண்ணுகிட்ட அண்ணன் மாட்டிட்டு இருக்கிறதை கண்ட தம்பியும், லவ்வரும் தங்களோட திறமைகளால மேனேஜரிடமிருந்தும், ஆசை நாயகியிடமிருந்தும் அவனை காப்பாத்துறாங்க. பிரிந்த அண்ணன் தம்பி ஒண்ணா
சேர்றாங்க.
இந்தக் கதையின் சாயல், ஜெய்சங்கர், கமல் ரெண்டு பேரும், அண்ணன் தம்பியா நடிச்ச சவால் [1981] படத்தின் கதை மாதிரி இல்ல, கொஞ்சம் கொஞ்சம் !!!
பேபி
ரத்த பாசம் 1954
இந்த படத்தின் கதை தெரியுமா ? இதோ தெரிஞ்சுக்கோங்க.
TK பகவதி - அண்ணன்
MS திரௌபதி - அண்ணனின் மனைவி
TS பாலையா - அண்ணனின் மேனேஜர்
வித்யாவதி - அண்ணனை மயக்கியவள்
TK சண்முகம் - தம்பி
அஞ்சலிதேவி - தம்பியோட லவ்வர்
அண்ணனும், தம்பியும் சின்ன வயசுல பிரிஞ்சிர்றாங்க. அண்ணன் கடத்தல் மன்னன். பெரிய பணக்காரன் ஆயிர்றான். தம்பி சந்தர்ப்ப வசத்தால பிக் பாக்கெட்.
அண்ணங்கிட்ட இருக்கும் பணத்தை திருட நினைக்கும் அவனோட மானேஜர். ஒரு பெண்ணை அனுப்பி அண்ணனை மயக்கி வைக்கிறான். அண்ணனும், மனைவியை மறந்துட்டு, அந்த ஆசை நாயகி வீட்லயே கிறங்கி போய் கிடக்கிறான்!
ஒரு நாள் பிக்பாக்கெட் தம்பி, தான் சுட்ட ஒரு மனிபர்ஸ்ல தன்னோட சின்ன வயசு போட்டோவை பாத்துட்டு, அந்த பர்ஸை தன் அண்ணன்கிட்டேயே திருடியதை தெரிஞ்சுகிறான். அப்போலயிருந்து தன் அண்ணனை தேடி அலைறான்.
தெரூல ஆடிப் பாடி பிழைக்கும் ஒரு பெண். அவளை தம்பி லவ்வுறான். தம்பி தன்னுடய லவ்வர்கிட்ட, தன் அண்ணனைப் பற்றி சொல்ல, எப்படியோ ரெண்டு பேரும் சேந்து அண்ணனை தேடி கண்டுபிடிச்சிர்றாங்க.
மானேஜர் சூழ்ச்சியால ஒரு பொண்ணுகிட்ட அண்ணன் மாட்டிட்டு இருக்கிறதை கண்ட தம்பியும், லவ்வரும் தங்களோட திறமைகளால மேனேஜரிடமிருந்தும், ஆசை நாயகியிடமிருந்தும் அவனை காப்பாத்துறாங்க. பிரிந்த அண்ணன் தம்பி ஒண்ணா
சேர்றாங்க.
இந்தக் கதையின் சாயல், ஜெய்சங்கர், கமல் ரெண்டு பேரும், அண்ணன் தம்பியா நடிச்ச சவால் [1981] படத்தின் கதை மாதிரி இல்ல, கொஞ்சம் கொஞ்சம் !!!
பேபி
heezulia- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4915
இணைந்தது : 03/12/2017
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: தெரிஞ்சதும் தெரியாததும்
05.09.2020
மகாநதி 1994
கமல்ஹாசன் இந்த படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதிய படம்.
சிறந்த படம்னு தேசிய திரைப்பட விருது, சிறந்த ஒலியமைப்பிற்காக தேசிய விருது, சிறந்த திரைப்படத்துக்கான தமிழ்நாடு திரைப்பட சிறப்பு விருது, ஆக மூணு விருது இந்தப் படத்துக்கு கெடச்சுது. ஆனா இது ஒரு சோகப் படம். நல்ல படம்னு ஜனங்க பாராட்டினாங்க.
கமல்ஹாசன் மகள்கள் சின்னவங்களா இருந்தபோது, அவர் வீட்ல வேலை செஞ்சுட்டு இருந்தவங்க அவங்களை கடத்தி கமலிடம் பணம் பறிக்க பிளான் செஞ்சாங்களாம். அதற்கான
முயற்சியும் செஞ்சாங்களாம். இதை தெரிஞ்ச கமல் அவங்க பிளானை முறியடிச்சாராம். கடத்த முயற்சி செஞ்சவங்களை கொல்ற அளவுக்கு கூட கமலுக்கு கோவம் வந்துச்சாம். வரும்ல?
அப்புறமா தன்னை கட்டுப்படுத்திகிட்டாராம்.
அந்த சமயத்ல ஒரு திரைக்கதை எழுத வேண்டியதிருந்துச்சாம். என்ன கதை எழுதுறதுன்னு குழம்பிட்டு இருந்த சமயம். இந்த சம்பவம் கமல்ஹாசன் மகாநதி கதை எழுத காரணம் ஆனது. கமல் இதை பேட்டிகளில் சொல்லியிருக்காராம். ஹிந்து பேப்பரில் இது
வந்துச்சு.
ஒரிஸ்ஸா, சட்டீஸ்கர் மாநிலங்களில் மகாநதின்னு ஒரு நதி ஓடுதாம். அந்த நதியின் பேரைத்தான் இந்தப் படத்துக்கு கமல் வச்சார்.
ஆறுகள், நதிகள் பேர்கள் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் இந்தப் படத்தில் இருக்கு.
கமல் - கிருஷ்ணா ; சுகன்யா - யமுனா ; கமலின் மகள் - காவேரி ; மகன் - பரணி.
கமலின் வாழ்க்கை காவேரி நதிக்கரையில ஆரம்பமாகுது. சமுதாயத்தை திருத்தணும்னு இந்த படத்ல கூவம் நதிக்கரையில் சபதம் எடுப்பார். கங்கை நதியோரத்தில் இருக்கிற கொல்கத்தாவில, காணாமல் போன மகளை கண்டுபிடிக்கிறார்.
கமலுக்கு பிடிச்ச 70 படங்களில் இந்த மகாநதியும் ஒண்ணாம். அமெரிக்காவில் திரைப்படங்களில் பயன்படுத்துற Avid டெக்னாலஜி வச்சு இந்தியாவில எடுத்த முதல் படம்.
இயக்குனர் சேரன் இந்தப் படத்துக்கு துணை இயக்குனரா வேலை செஞ்சார். ஆனா கமல் கூட சில கருத்து வேறுபாடு. அதனால பாதியில படத்த விட்டுட்டு போய்ட்டார்.
ஷோபனா, தினேஷ், சங்கர் இவங்க பேர் இந்தப் படத்தின் பேரோடு வருது. மகாநதி ஷோபனா, மகாநதி தினேஷ், மகாநதி சங்கர்.
இது தனக்கு ரொம்ப ரொம்ப முக்கியமான படம்னு கமல் சொன்னாராம். 'Les Miserables' னு 1862ல உள்ள பிரெஞ்சு நாவலாம். இதிலுள்ள ஓர் knot ஐ வச்சு கமல் இந்தப் படத்தை உருவாக்கினார். இந்தப் படம் ரிலீஸ் ஆகி ஆறு வருஷத்துக்கப்புறம், ரோட்டர்டாமில் சர்வதேச திரைப்பட விழாவில் இந்தப் படம் போட்டு காட்டப்பட்டுச்சு.
பேபி
மகாநதி 1994
கமல்ஹாசன் இந்த படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதிய படம்.
சிறந்த படம்னு தேசிய திரைப்பட விருது, சிறந்த ஒலியமைப்பிற்காக தேசிய விருது, சிறந்த திரைப்படத்துக்கான தமிழ்நாடு திரைப்பட சிறப்பு விருது, ஆக மூணு விருது இந்தப் படத்துக்கு கெடச்சுது. ஆனா இது ஒரு சோகப் படம். நல்ல படம்னு ஜனங்க பாராட்டினாங்க.
கமல்ஹாசன் மகள்கள் சின்னவங்களா இருந்தபோது, அவர் வீட்ல வேலை செஞ்சுட்டு இருந்தவங்க அவங்களை கடத்தி கமலிடம் பணம் பறிக்க பிளான் செஞ்சாங்களாம். அதற்கான
முயற்சியும் செஞ்சாங்களாம். இதை தெரிஞ்ச கமல் அவங்க பிளானை முறியடிச்சாராம். கடத்த முயற்சி செஞ்சவங்களை கொல்ற அளவுக்கு கூட கமலுக்கு கோவம் வந்துச்சாம். வரும்ல?
அப்புறமா தன்னை கட்டுப்படுத்திகிட்டாராம்.
அந்த சமயத்ல ஒரு திரைக்கதை எழுத வேண்டியதிருந்துச்சாம். என்ன கதை எழுதுறதுன்னு குழம்பிட்டு இருந்த சமயம். இந்த சம்பவம் கமல்ஹாசன் மகாநதி கதை எழுத காரணம் ஆனது. கமல் இதை பேட்டிகளில் சொல்லியிருக்காராம். ஹிந்து பேப்பரில் இது
வந்துச்சு.
ஒரிஸ்ஸா, சட்டீஸ்கர் மாநிலங்களில் மகாநதின்னு ஒரு நதி ஓடுதாம். அந்த நதியின் பேரைத்தான் இந்தப் படத்துக்கு கமல் வச்சார்.
ஆறுகள், நதிகள் பேர்கள் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் இந்தப் படத்தில் இருக்கு.
கமல் - கிருஷ்ணா ; சுகன்யா - யமுனா ; கமலின் மகள் - காவேரி ; மகன் - பரணி.
கமலின் வாழ்க்கை காவேரி நதிக்கரையில ஆரம்பமாகுது. சமுதாயத்தை திருத்தணும்னு இந்த படத்ல கூவம் நதிக்கரையில் சபதம் எடுப்பார். கங்கை நதியோரத்தில் இருக்கிற கொல்கத்தாவில, காணாமல் போன மகளை கண்டுபிடிக்கிறார்.
கமலுக்கு பிடிச்ச 70 படங்களில் இந்த மகாநதியும் ஒண்ணாம். அமெரிக்காவில் திரைப்படங்களில் பயன்படுத்துற Avid டெக்னாலஜி வச்சு இந்தியாவில எடுத்த முதல் படம்.
இயக்குனர் சேரன் இந்தப் படத்துக்கு துணை இயக்குனரா வேலை செஞ்சார். ஆனா கமல் கூட சில கருத்து வேறுபாடு. அதனால பாதியில படத்த விட்டுட்டு போய்ட்டார்.
ஷோபனா, தினேஷ், சங்கர் இவங்க பேர் இந்தப் படத்தின் பேரோடு வருது. மகாநதி ஷோபனா, மகாநதி தினேஷ், மகாநதி சங்கர்.
இது தனக்கு ரொம்ப ரொம்ப முக்கியமான படம்னு கமல் சொன்னாராம். 'Les Miserables' னு 1862ல உள்ள பிரெஞ்சு நாவலாம். இதிலுள்ள ஓர் knot ஐ வச்சு கமல் இந்தப் படத்தை உருவாக்கினார். இந்தப் படம் ரிலீஸ் ஆகி ஆறு வருஷத்துக்கப்புறம், ரோட்டர்டாமில் சர்வதேச திரைப்பட விழாவில் இந்தப் படம் போட்டு காட்டப்பட்டுச்சு.
பேபி
heezulia- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4915
இணைந்தது : 03/12/2017
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: தெரிஞ்சதும் தெரியாததும்
![தெரிஞ்சதும் தெரியாததும் - Page 29 Maha](https://www.toptamilnews.com/wp-content/uploads/2020/03/maha.jpg)
மகாநதி படத்தின் மூலம் பிரபலமானவர் மகாநதி ஷோபனா. அதன் பிறகு கர்நாடக இசைக் கலைஞராக மாறி கச்சேரிகள் நடத்தி வருகிறார். இந்த நிலையில் 1995ம் ஆண்டு சிம்பொனி என்ற ஆடியோ நிறுவனம் மகாநதி ஷோபனாவை பயன்படுத்தி கந்தசஷ்டி கவசம் பாடலை ஒலிப்பதிவு செய்தது.
மேலும், டுவிங்கிள் டுவிங்களில் லிட்டில் ஸ்டார் என்ற ஆல்பத்தையும் தயாரித்தது. இந்த இரண்டு ஆல்பங்களும் யூடியூபில் வெளியிடப்பட்டுள்ளது. இதை 47 கோடி பேர் பார்த்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், தன்னிடம் உரிய அனுமதி பெறாமல் தான்
பாடிய பாடலை சிம்பொனி நிறுவனம் பயன்படுத்தி வருமானம்
பெற்று வருவதாக மகாநதி ஷோபனா சென்னை
உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இவ்வழக்கில், மகாநதி ஷோபனா பாடிய கந்த சஷ்டி கவசம்,
டுவிங்கிள் டுவிங்கிள் லிட்டில் ஸ்டார் ஆல்பங்களை சிம்பொனி
நிறுவனம் வெளியிட இடைக்கால தடைவிதித்து உத்தரவிடப்பட்டுள்ளது
-
--------------------
Re: தெரிஞ்சதும் தெரியாததும்
17.09.2020
மூடுபனி 1980
ராஜேந்திரகுமார் எழுதிய 'இதுவும் ஒரு விடுதலைதான்' நாவல் இந்தப் படமாக உருவாச்சு. The Collector 1963 னு ஒரு ஆங்கில நாவல். அதுவும் இதே கதைதானாம். மலையாளத்ல dub ஆச்சு. தெலுங்கிலும் ரிலீஸ் ஆச்சு. வணிக ரீதியா தமிழில வெற்றிப்படம். 200 நாள் ஓடுச்சாம்.
பாலுமகேந்திராவுக்கு தமிழ்ல ரெண்டாவது படம். இளையராஜாவுக்கு பாலுமகேந்திராகூட முதல் படம்.
கோகிலானு ஒரு கன்னட படம், மைக் மோகன் அறிமுக படம். அதனால அவருடைய இந்த தமிழ்ல அறிமுக மூடுபனி படத்ல அவருடைய பேர் கோகிலா மோகன்னு போட்டிருக்கு.
பேபி
மூடுபனி 1980
ராஜேந்திரகுமார் எழுதிய 'இதுவும் ஒரு விடுதலைதான்' நாவல் இந்தப் படமாக உருவாச்சு. The Collector 1963 னு ஒரு ஆங்கில நாவல். அதுவும் இதே கதைதானாம். மலையாளத்ல dub ஆச்சு. தெலுங்கிலும் ரிலீஸ் ஆச்சு. வணிக ரீதியா தமிழில வெற்றிப்படம். 200 நாள் ஓடுச்சாம்.
பாலுமகேந்திராவுக்கு தமிழ்ல ரெண்டாவது படம். இளையராஜாவுக்கு பாலுமகேந்திராகூட முதல் படம்.
கோகிலானு ஒரு கன்னட படம், மைக் மோகன் அறிமுக படம். அதனால அவருடைய இந்த தமிழ்ல அறிமுக மூடுபனி படத்ல அவருடைய பேர் கோகிலா மோகன்னு போட்டிருக்கு.
பேபி
heezulia- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4915
இணைந்தது : 03/12/2017
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: தெரிஞ்சதும் தெரியாததும்
17.09.2020
ரொம்ப நா ............................... ள் கழிச்சு, காசேதான் கடவுளடா 1972 படத்துக்கப்புறம் AVM தயாரிச்ச படம் முரட்டுக்காளை. SP முத்துராமனும், ரஜினியும் நாலாவது தடவையா சேர்ந்தாங்க. ரஜினிக்கு AVM கூட முதல் படம்.
செட்டியாரின் மகன்கள் குமரன், சரவணன், பாலசுப்பிரமணியன் மூணு பெரும் சேர்ந்து தயாரிச்சாங்க. பொள்ளாச்சி லொக்கேஷனில் எடுக்கப்பட்ட முதல் படமாம். அங்க தங்குறதுக்கு வசதியான ஹோட்டல் இல்லாததால, அந்த ஊர் ஜமீந்தார் வீட்ல ரஜினி தங்கினார். மத்தவங்க பொள்ளாச்சி ஹோட்டல்லயும், அரசினர் விடுதியிலும், கல்யாண மண்டபத்துலயும் தங்கி இருந்தாங்களாம்.
பேபி
ரொம்ப நா ............................... ள் கழிச்சு, காசேதான் கடவுளடா 1972 படத்துக்கப்புறம் AVM தயாரிச்ச படம் முரட்டுக்காளை. SP முத்துராமனும், ரஜினியும் நாலாவது தடவையா சேர்ந்தாங்க. ரஜினிக்கு AVM கூட முதல் படம்.
செட்டியாரின் மகன்கள் குமரன், சரவணன், பாலசுப்பிரமணியன் மூணு பெரும் சேர்ந்து தயாரிச்சாங்க. பொள்ளாச்சி லொக்கேஷனில் எடுக்கப்பட்ட முதல் படமாம். அங்க தங்குறதுக்கு வசதியான ஹோட்டல் இல்லாததால, அந்த ஊர் ஜமீந்தார் வீட்ல ரஜினி தங்கினார். மத்தவங்க பொள்ளாச்சி ஹோட்டல்லயும், அரசினர் விடுதியிலும், கல்யாண மண்டபத்துலயும் தங்கி இருந்தாங்களாம்.
பேபி
heezulia- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4915
இணைந்தது : 03/12/2017
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: தெரிஞ்சதும் தெரியாததும்
18.05.2023
முதல்முதலா சிவாஜி பராசக்தி படத்ல நடிச்சார்ல? அப்டி நடிச்சிக்கிட்ருந்த அதே சமயத்தில 'மனோகரா' படத்தயாரிப்பும் நடந்துகிட்டு இருந்துச்சு. ரெண்டுக்கும் கலைஞர் கருணாநிதி வசனம்ல.
மனோகரால மொதல்ல கே.ஆர்.ராமசாமியத்தான் நடிக்க வைக்கிறதா இருந்துச்சு. என்னவோ, பின்னாடி அது கேன்சல் ஆயிருச்சு. பராசக்தியில சிவாஜியின் நடிப்பையும், வசன உச்சரிப்பையும் பாத்த கலைஞர், மனோகராலயும் அவர நடிக்க வைக்கலாம்னு தயாரிப்பாளர் ஜூப்பிட்டர் சோமுகிட்டே சொன்னார். அவரும் சரீன்ட்டு ஒரு அக்ரிமெண்டும் போட்டார்.
ஆனா, அதான் கொஞ்ச பேர் இருக்காங்களே .............................. எதுக்கு தெரியுங்களா? குழப்புறதுக்கு. அப்டித்தான் அந்த சோமுகிட்டே என்னவெல்லாமோ சொல்லி அவர் மனச கலையோ கலைன்னு கலச்சாங்க.
அந்த சமயத்திலே 1952 தீபாவளி அன்னிக்கி பராசக்தி ரிலீசாச்சு. கலைஞர் கூட சோமுவும் போய் அந்த படத்த பார்த்தாங்க. அதுவும் முதல் நாளே .......... மாட்னி ஷோவு. இவங்க கூட இன்னும் ரெண்டு பேர் போனாங்க. கிருஷ்ணன் பஞ்சுவும்தாங்க.
அந்த படத்த அவங்க எல்லோரும் பாத்தாங்களா? படம் முடிஞ்சுதா ? தியேட்டர விட்டு வெளியே வந்தாங்க. வந்தாங்களா? அம்புட்டுத்தான். ஜூப்பிடர் சோமு இருக்காகளே. அவுக என்னா சொன்னாக தெரியுமா?
"யார் என்னா சொன்னாலும் சொல்லிட்டு போவட்டும். நான் முடிவு செஞ்சுட்டேன். சிவாஜி தான் மனோகராலயும் நடிக்கணும். நடிக்கணும், என்னா நடிக்கணும்? அவர்தான் நடிக்கிறார். மூச்..................... இத மீறி யாரும் ஒண்......................ணும் சொல்லப்படாது. மனுஷன் என்னமா நடிக்கிறார்"ன்னு சொல்லிப்புட்டார். அவருக்கு மெய் சிலிர்த்து போச்சு. அம்புட்டு உணர்ச்சி வசப்பட்டு பேசினாராம் சோமு.
இதை கலைஞரே 21.08.1988 அன்னிக்கி சொன்னதாம்.
பேபி
முதல்முதலா சிவாஜி பராசக்தி படத்ல நடிச்சார்ல? அப்டி நடிச்சிக்கிட்ருந்த அதே சமயத்தில 'மனோகரா' படத்தயாரிப்பும் நடந்துகிட்டு இருந்துச்சு. ரெண்டுக்கும் கலைஞர் கருணாநிதி வசனம்ல.
மனோகரால மொதல்ல கே.ஆர்.ராமசாமியத்தான் நடிக்க வைக்கிறதா இருந்துச்சு. என்னவோ, பின்னாடி அது கேன்சல் ஆயிருச்சு. பராசக்தியில சிவாஜியின் நடிப்பையும், வசன உச்சரிப்பையும் பாத்த கலைஞர், மனோகராலயும் அவர நடிக்க வைக்கலாம்னு தயாரிப்பாளர் ஜூப்பிட்டர் சோமுகிட்டே சொன்னார். அவரும் சரீன்ட்டு ஒரு அக்ரிமெண்டும் போட்டார்.
ஆனா, அதான் கொஞ்ச பேர் இருக்காங்களே .............................. எதுக்கு தெரியுங்களா? குழப்புறதுக்கு. அப்டித்தான் அந்த சோமுகிட்டே என்னவெல்லாமோ சொல்லி அவர் மனச கலையோ கலைன்னு கலச்சாங்க.
அந்த சமயத்திலே 1952 தீபாவளி அன்னிக்கி பராசக்தி ரிலீசாச்சு. கலைஞர் கூட சோமுவும் போய் அந்த படத்த பார்த்தாங்க. அதுவும் முதல் நாளே .......... மாட்னி ஷோவு. இவங்க கூட இன்னும் ரெண்டு பேர் போனாங்க. கிருஷ்ணன் பஞ்சுவும்தாங்க.
அந்த படத்த அவங்க எல்லோரும் பாத்தாங்களா? படம் முடிஞ்சுதா ? தியேட்டர விட்டு வெளியே வந்தாங்க. வந்தாங்களா? அம்புட்டுத்தான். ஜூப்பிடர் சோமு இருக்காகளே. அவுக என்னா சொன்னாக தெரியுமா?
"யார் என்னா சொன்னாலும் சொல்லிட்டு போவட்டும். நான் முடிவு செஞ்சுட்டேன். சிவாஜி தான் மனோகராலயும் நடிக்கணும். நடிக்கணும், என்னா நடிக்கணும்? அவர்தான் நடிக்கிறார். மூச்..................... இத மீறி யாரும் ஒண்......................ணும் சொல்லப்படாது. மனுஷன் என்னமா நடிக்கிறார்"ன்னு சொல்லிப்புட்டார். அவருக்கு மெய் சிலிர்த்து போச்சு. அம்புட்டு உணர்ச்சி வசப்பட்டு பேசினாராம் சோமு.
இதை கலைஞரே 21.08.1988 அன்னிக்கி சொன்னதாம்.
பேபி
heezulia- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4915
இணைந்தது : 03/12/2017
சிவா and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்
Re: தெரிஞ்சதும் தெரியாததும்
மூன்று வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இத்திரியை உயிர்ப்பூட்டியதில் மகிழ்ச்சி @heezulia
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
Page 29 of 29 • 1 ... 16 ... 27, 28, 29
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» புளூடூத் : தெரிந்ததும், தெரியாததும் !
» அக்டோபர் 17-தெரிந்ததும் தெரியாததும்
» நமக்கு தெரிந்ததும் தெரியாததும்..!
» நெய்... தெரிந்ததும்... தெரியாததும்...
» ஐ.வி.எஃப்.: தெரிந்ததும் தெரியாததும்
» அக்டோபர் 17-தெரிந்ததும் தெரியாததும்
» நமக்கு தெரிந்ததும் தெரியாததும்..!
» நெய்... தெரிந்ததும்... தெரியாததும்...
» ஐ.வி.எஃப்.: தெரிந்ததும் தெரியாததும்
Page 29 of 29
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|