ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெரிஞ்சதும் தெரியாததும்

+7
ரா.ரமேஷ்குமார்
Dr.S.Soundarapandian
பழ.முத்துராமலிங்கம்
SK
ayyasamy ram
T.N.Balasubramanian
heezulia
11 posters

Page 23 of 29 Previous  1 ... 13 ... 22, 23, 24 ... 29  Next

Go down

தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 23 Empty தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia Sat Dec 16, 2017 6:47 pm

First topic message reminder :

16.12.2017

'தெரிஞ்சதும் தெரியாததும்' - ஏன் இந்த தலைப்புன்னு நெனச்சாலும் நெனப்பீங்க. நான் சொல்ற விஷயங்கள் எதுவும் எனக்கு தெரியாதது போல ஒரு சிலருக்கு தெரியாம இருக்கலாம். மத்தவங்களுக்கு தெரிஞ்சிருக்கலாம். அதுதான் 'உங்களுக்கு தெரிந்ததும் எனக்கு தெரியாததும்'.

சந்திரபாபு பாட்டுக்களை நாம் எல்லாரும் கேட்டிருக்கோம்ல ? நல்லாவே பாடியிருப்பார். சரி, ஜேசுதாஸ் எப்படி? அவரும் நல்ல ஒரு பாடகர்தான். ஆனா ............. பறக்கும் பாவை படத்துல சந்திரபாபுக்காக ஜேசுதாஸ் ஒரு பாட்டு பாடியிருக்கார்.  அது என்ன பாட்டுன்னு சொல்லுங்க பார்ப்போம். சரி................, ஜேசுதாசுக்கு சந்திரபாபு பாடியிருக்காரா?

எம்.ஜி.ஆருக்கு கலங்கரை விளக்கத்தில பஞ்சு அருணாச்சலம் ஒரு பாட்டு எழுதியிருக்காராம். அது என்ன பா.........................ட்டு?

உரிமைக் குரல் [1974] அப்டீன்னு ஒரு படம் இருக்குல்ல. அதுல "விழியே கதை எழுது" ன்னு ஒரு பாட்டு இருக்குல்ல. இந்த பாட்ட எழுதியது யாருன்னு தெரியும்னு நெனக்கிறேன். கண்ணதாசன்தானாங்க. ஆனா, பாட்டு புத்தகத்துல, ஆடியோ கேசட்டுல, அதுமட்டுமில்லீங்க, படத்தோட டைட்டில்ல கூட வாலின்னு போட்டிருந்ததாமே. அந்த சமயத்தில எம்.ஜி.ஆருக்கும், கண்ணதாசனுக்கும் என்னவோ லடாயாம். அதனால ஸ்ரீதர் [உரிமைக்குரல் எம்.ஜி.ஆர வச்சு எடுத்த முதல் படமாம்] எம்.ஜி.ஆருக்கு தெரியாம கண்ணதாசன்கிட்டே பாட்டை எழுதி வாங்கிட்டு, வாலி பேர போட்டுட்டாராம். இந்த சமாச்சாரம் எப்படியோ எம்.ஜி.ஆருக்கு தெரிய வந்துச்சாம். வருத்தப்பட்டாராம் எம்.ஜி.ஆர்.

Baby Heerajan  மீண்டும் சந்திப்போம்  
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5861
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down


தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 23 Empty Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia Tue Mar 06, 2018 8:12 pm

06.03.2018
by ரா.ரமேஷ்குமார் 
on Tue Mar 06, 2018
பல வருடங்கள் கழித்து சில நாட்களாக  தான் ஈகரையில் தொடந்து இணைந்திருக்கிறேன் ...  தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 23 102564
வாங்க ரமேஷ். ஈகரைல வந்து ரிலா..................க்ஸ் பண்றீங்க போல. நான் எழுதுறத படிக்கிற அந்த ஆயிரக்கணக்கான பேர்கள்ல நீங்களும் ஒருத்தர்னு கேட்க சந்தோஷமா இருக்கு.
உங்களின் பதிவுகளுக்கு முறுமொழி இடவில்லை என்றாலும் உங்களின் பதிவுகளை படிக்கும் ஒருவன்  
பதில் எழுதலேன்னா என்ன, படிக்கிறீங்கல்ல. 

அதான் சொன்னேனே ரமேஷ், கொஞ்சநா............ளா எழுதணும்னு யோசிச்சு, இப்பதான் எழுதியிருக்கேன்.  

மற்ற forumsல நான் இங்க சொன்னமாதிரி  இருக்கிறதாலதான் நான் சொன்னேன். அது ஈஸியா இருக்கு. அங்க இங்க தேட வேண்டாம்ல. 

ஈகரைல அப்படியே பழக்கமாயிருச்சு. இருந்துட்டு போவட்டும். இங்க வேற மாதிரி உங்களுக்கெல்லாம் ஈஸியா இருக்கு. சரி, விடுங்க.

நண்பி Heezulia 
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5861
இணைந்தது : 03/12/2017

Back to top Go down

தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 23 Empty Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by Guest Tue Mar 06, 2018 8:21 pm

Heezulia உங்கள் ஆலோசனை சிறப்பாக இருக்கிறது. இப்போது புரிந்து கொண்டேன்.அட்மின் கவனித்தால் சிறிய மாற்றங்களை செய்யலாம். படிப்பதற்கும் இலகுவாக இருக்கும். ஏற்கனவே Index பேஜ் இல் அப்படி செய்திருக்கிறார்கள்.நட்பு - தலைப்பின் கீழ் சிறிய பிரிவுகள் உண்டு.சினிமாவின் கீழ் பாடல் வரிகள் மட்டுமே உண்டு கூடவே நீங்கள் குறிப்பிட்டபடி சில சிறு பிரிவுகளை செய்தால் சுலபமாக இருக்கும்.

உங்கள் ஆலோசனைக்கு எனது ஆதரவும் உண்டு.கவனிப்பார்கள் என எண்ணுகிறேன். கவனித்தால், சிறுதலைப்பிற்கு தீமில் எழுத்துக்களுக்கு வேறு நிறத்தை கொடுத்தால் சிறப்பாக இருக்கும். வேறு forumotion பக்கங்களில் இப்படி செய்திருக்கிறார்கள்.
நன்றி.
avatar
Guest
Guest


Back to top Go down

தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 23 Empty Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia Tue Mar 06, 2018 9:31 pm

06.03.2018

நன்றி மூர்த்தி. வீட்டிலும், ஆஃபிஸிலும் என் ஆலோசனை ஏத்துகிறமாதிரி, நீங்களும் ஆதரவு கொடுக்கிறதுக்கு நன்றி. பெருமையாவும், சந்தோஷமாவும் இருக்கு. 

இன்னொருக்கா நன்றி.

Heezulia
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5861
இணைந்தது : 03/12/2017

Back to top Go down

தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 23 Empty Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia Thu Mar 15, 2018 7:37 pm

15.03.2018

சுந்தரராஜன் கதைக்கு பயணங்கள் முடிவதில்லைன்னு பேர் வச்சு, கோவைத்தம்பி படம் தயாரிக்க ரெடியாயிட்டார். படத்துக்கு முக்கியமானதுல ம்யூசிக்கும் ஒண்ணு. யாரை கூப்பிடலாம்னு கோவை யோசிச்சார். இளையராஜா அவர் ஞாபகத்துக்கு வந்தார். அவரைப் போய் பார்த்தார். கதை சொல்லுங்க, கதை பிடிச்சிருந்தா மட்டும் நான் சம்மதிக்கிறேன். இப்படி இளையராஜா சொல்லிட்டார்.

சுந்தரராஜன் கதையை சொல்ல இளையராஜாட்ட போனார். “எவ்ளோ நேரத்தில கதையை சுருக்கமா சொல்வீங்க”ன்னு  இளையராஜா கேட்டார். அரைமணி நேரத்தில சொல்லிரலாம்”னு சுந்தரராஜன் சொல்லியிருக்கார். ஆனா என்னா ஆச்சுன்னா, கதை சொல்லி முடிக்க ரெண்...........................டு மணி நேரம் ஆயிருச்சு. இளையராஜாவும் நேரம் போறது தெரியாம கதை கேட்டிருக்கார். சரீ..........................ன்னுட்டு, ம்யூசிக் போட OK சொல்லிட்டார்.

இளையராஜாவை பற்றிதான் தெரியுமே. 30 ட்யூன் போட்டார். இதுக்கு எம்புட்டு நேரம் ஆச்சுன்னு தெரியுமா/ பன்...........................னெண்டு மணி நேரம். முப்பது ட்யூனையும் சுந்தரராஜன்ட்ட கொடுத்துட்டு, “இந்தாங்க பிடிங்க. எந்தெந்த ஸீனுக்கு என்னென்ன ட்யூன் வேணும்னு பாத்து எடுத்துக்கோங்க”ன்னுட்டார். ஆனா சுந்தரராஜன் என்ன சொன்னார் தெரியுமோ.................? “ஒவ்வொரு ஸீனையும் நான் வெளாவா.......................ரியா சொல்றேன். நீங்களே ஒரு பத்து ட்யூனை செலெக்ட் செஞ்சிருங்கோ”ன்னு இளையராஜா தலையில பொறுப்பை ஒப்படுச்சுட்டார்.

ஏன், சுந்தரராஜனுக்கு ம்யூஸிக் செலெக்ட் பண்ண தெராதா?

இப்படியாக இளையராஜா ம்யூஸிக் போட்டு பயணங்கள் முடிவதில்லை படம் 1982ல ரிலீஸ் ஆச்சு. இந்தப் படம் எடுக்க 13 லட்சமும், நாலு மாசமும் செலவாச்சாம்.

சரி, நடிக்க யாரை கூப்டலாம்? புதுமுகங்களை வச்சு படத்தை எடுக்கலாம்னு கோவைத்தம்பி  ஆசைப்பட்டார். ஆனா அவர் அரசியல்வாதியாச்சே. சுதரராஜனும் டைரக் ஷனுக்கு புதுசு. அதனால புதுசா யாரும் அந்தப் படத்தில நடிக்க முன்வரல.

நெஞ்சைக் கிள்ளாதே படத்தில நடிச்ச மோகன் பிடிச்சு போயிருந்துச்சு. மோகன் அழகாயிருக்கார், நல்லா நடிக்கிறார்னு கோவைத்தம்பி சொன்னார். அவரை இந்தப் படத்துக்கு புக் பண்ணிட்டார். மஞ்ச விரிச்ச பூக்கள் னு மலையாளப் படம். இந்த படத்தில பூர்ணிமா நடிச்சுட்டு இருந்தார். அவரையும் ஹீரோயினுக்காக புக் பண்ணியாச்சு. அப்டீ...............இப்டீன்னு படத்தை எடுத்து முடிச்சாச்சூன்னு வைங்க.

இது கோவைத்தம்பியின் முதல் படங்கறதால, இந்தப் படத்தை MGR பார்க்கணும்னு கோவை ஆசைப்பட்டார்.  கோவைத்தம்பி MGRஇன் தீ..........................விர ரசிகராச்சே, தலைவராச்சே. ஆண்டாள் ப்ரிவ்யூ தியேட்டர். இது அரங்கண்ணலுக்கு சொந்தமானது. இதுல MGRருக்காக பயணங்கள் முடிவதில்லை படம் ஸ்பெஷல் ஷோவாக ஓட விட்டாங்க. MGR மனைவி ஜானகியுடம் வந்து படத்தை பார்த்தார். பார்த்தாரா........................, அம்புட்டுதான். பார்த்து முடிச்சுட்டு அவர்பா......................ட்டுக்கு எந்திருச்சுட்டார். கார்ல ஏறினார், போயிட்டார். எத்............................துவுமே சொல்லல.

பேசவே இல்லேங்கறேன், அப்புறம் எங்கேயிருந்து சொல்றது.

தலைவர் ஏதாவது நல்ல வார்த்தை சொல்வார்னு, நம்பிக்கையாய் இருந்த கோவைத்தம்பி, ஒடஞ்...........................சு போயிட்டார். இல்ல, நொறுங்..........................கி போயிட்டார்னு சொல்லலாமா? என்னவோ ஆயிட்டார். அவ்ளோதான். அங்க உள்ளவங்க MGRக்கு படம் பிடிக்கல போலியே. இப்டி ஒண்ணும் சொல்லாம போயிட்டாரேன்னு பேசிக்கிட்டாங்க. ஏற்கனவே MGR ஒண்ணும் சொல்லல. இதுல இவங்க வேற பேச ஆரம்பிச்சுட்டாங்க. எப்டி இருக்கும் பாருங்க கொவையோட மனசு!!!

MGR கார் போச்சு. என்ன ஆச்சுன்னு தெரியல, கார் கொஞ்ச தூரம் போயி நின்னுருச்சு. MGR ரோட செக்யூரிட்டி கோவை தம்பியை பார்த்து ஓ....................டி வந்தாங்க. இங்க இருக்கிறவங்க எல்லாரு தெகச்சு பாத்துட்டு நிக்கிறாங்க. செக்யூரிட்டி வந்து கோவையை தலைவர் கூப்ட்றார்னு சொன்னாங்க. சொல்லவா வேணும்? கோவைக்கு தலகால் புரியல. MGR கார் நிக்கிற இடத்துக்கு ஓடினார். 

“படம் ரிலீஸாகி ஒரு வாரத்ல பாரு, நீ எங்கேயோ.................... போக போறே. படம் அவ்ளோ நல்லா இருக்கு. இந்தப் படத்தல உனக்கு கிடைக்கிற பேரை காப்பாத்து வச்சுகிறது உன்னோடு பொறுப்பு”ன்னு MGR சொல்லிட்டார். இப்பதான் கோவையின் மனசு சமாதானமாச்சு.

MGR சொன்ன மாதிரியே...................................தாங்க நடந்துச்சு. முதல் படத்திலேயே கோவைத்தம்பி, R சுந்தரராஜன் ரெண்டு பேரும், கன்னாபின்னான்னு உயர்ந்துட்டாங்க. பாராட்டாதவங்களே இல்லியாம். பூர்ணிமாவும், மோகனும் வேற நல்லா நடிச்சிருந்தாங்களா, ரிலீஸ் ஆனா தியேட்டர்லல்லாம், நூறு நாள் தாண்டி ஓடுச்சு. முக்கிய நகரங்களில் 25 வாரம் ஓடுச்சாம். சென்னை லிட்டில் ஆனந்த் தியேட்டர்ல, 425 நாள் ஓடிய ஒரு சாதனை. வெள்ளி விழா படம் பயணங்கள் முடிவதில்லை.

பயணங்கள் முடிவதில்லை படத்துக்கும், MGRக்கும் சம்பந்தம் இருக்குன்னு அன்னிக்கி சொன்னேன்ல. படிச்சவங்களுக்கு சொன்னது ஞாபகம் இருக்கும். இப்ப சரியா இருக்கா?


- ரமணி

Heezulia  மீண்டும் சந்திப்போம்  
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5861
இணைந்தது : 03/12/2017

Back to top Go down

தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 23 Empty Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by SK Fri Mar 16, 2018 3:02 pm

MGRக்கும் சம்பந்தம் இருக்குன்னு அன்னிக்கி சொன்னேன்ல. படிச்சவங்களுக்கு சொன்னது ஞாபகம் இருக்கும்

இருக்கு இருக்கு


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 23 Empty Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia Fri Mar 16, 2018 3:55 pm

16.03.2018 
இருக்கு இருக்கு
இருந்தா சரிதான். சந்தோஷம்தான். 


Heezulia
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5861
இணைந்தது : 03/12/2017

Back to top Go down

தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 23 Empty Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia Fri Mar 16, 2018 8:03 pm

16.03.2018

மணிரத்தினம் & கோவை சினிமா உறவு போச்சு. அது என்னான்னு வேற சந்தர்ப்பத்தில சொல்றேன்.

இந்த ரெண்டாவது சொல்றேன், சொல்றேன். 

கோவைத்தம்பியின் தயாரிப்பில் மணிரத்னம் டைரக்ட் செஞ்ச படம் இதயக்கோயில். மணிரத்தினத்துக்கு கோவைத்தம்பியுடன் முதல் படம். அம்பிகா, ராதா, மோகன் நடிச்சது. இந்தப் படத்தில கோவைத்தம்பிக்கும், இளையராஜாவுக்கும் லடாய்.

இந்தப் படத்தின் க்ளைமாக்ஸ் ஸீன். இந்த ஸீனுக்காக ஒரு லட்சம் செலவில ஒரு கல்யாண மண்டபம் செட் போட்டாங்க. 30 வருஷத்துக்கு முன்னால, ஒரு லட்...........சம் ரூபாய்னா எம்.................புட்டு பெருசு. இவ்ளோ................ செலவழிச்சு செட் போட்டும், மணிரத்னம் இங்க க்ளைமாக்ஸ் ஸீனை சுட ஒத்துக்கல. விஜய சேஷ மஹால்னு ஒரு இடமாம். அங்கதான் போகணும்னு சொல்லிட்டார். கோவைத்தம்பி இது கேட்டு வருத்தப்பட்டார். புதுசா வந்திருக்கிற டைரக்டர் இப்படி பிடிவாதம் பிடிக்கிராறேன்னு நெனச்சார். கோவைத்தம்பி வெற்றிப்படங்களை தயாரிச்சவர். ஆனா மணிரத்னம், இப்பதான் புதுசா வந்திருக்கார். கொவைத்தம்பிக்கு கோவம் வந்துச்சு.

முதல் படத்திலேயே ஏன் இப்டி ஒரு பிடிவாதம் மணிரத்னத்துக்கு?

ஆனா மணிரத்னம் நெனச்சபடிதான் ஷூட்டிங் நடந்துச்சு. இந்த க்ளைமாக்ஸின் காரணமாக இதயகோயில் படம் ரிலீஸாக லேட்டாச்சு. அதனால செலவும் அதிகமாச்சு. பின்னணி இசைக்காக இளையராஜாட்ட போனாங்க. அவருக்கு கோவம் வந்துருச்சு.

“நாந்தான் உங்களுக்கு கால்ஷீட் கொடுத்தேன்ல. அதெல்................லாம் போச்சு. நீங்க இப்ப வந்து என்னை disturb பண்ணினா என்ன அர்த்தம்? மத்தவங்கள்ட்ட நான் கமிட் ஆயிருக்கேன். அதைல்லாம் நான் மாத்திட்டு இருக்க முடியாது” ன்னுட்டார்.

கோவைத்தம்பி இளையராஜா கூட சேர்ந்து நல்ல நல்ல படங்களையா.............. குடுத்துட்டு இருந்தார்ல. அதனால அவங்க ரெண்டு பேரையும் பிரிக்க, சில சினிமாகாரங்க நெனச்சாங்களாம்.

பொறாமை பிடிச்சவங்க. எல்லா இடத்திலேயும் இந்த போறாமைங்க்றது இருக்கத்தானே செய்யுது.

இளையராஜாவின் கோவத்தை அவங்கலாம் ஒரு சாக்கா எடுத்துட்டாங்க. ஆனாலும் இளையராஜா அந்த படத்தை முடிச்சு கொடுத்துட்டார். படமும் வெற்றி.

சமீபத்தில் ஒரு வாரப் பத்திரிகையில் மணிரத்னம் பேட்டி கொடுத்திருந்தார். இதயகோயில் ரிலீஸ் ஆகி 28 வருஷம் கழிச்சு, “நான் டைரக்ட் செஞ்ச படங்கள்ல மோசமான படம் இதயகோயில். தெரியாத்தனமா அந்த கதையில நான் சிக்கிட்டேன்” னு சொல்லியிருந்தாராம். இதை கோவைத்தம்பி படிச்சார். மனசு கொதிச்சுது. பின்ன இருக்காதா மனுஷனுக்கு?  

ஆனா, “எனக்கும் இளையராஜாவுக்கும் misunderstanding வந்ததுக்கு காரணமே  மணிரத்னம்தான். அதுக்கான காரணம் அவர் மனசாட்சிக்கு தெரியும். இதுவும் எனக்கு ஒரு இழப்புதான். அந்த படத்துக்கு எனக்கு மூ..................ணு பட செலவை இழுத்து விட்டுட்டார். காட்சிகளை எடுக்க தெரியா...ம எடுத்து, என் பணத்தை எல்லாம் அனாவசியமா விரயமாக்கிட்டார். அவர் ஒரு மோ..........சமான டைரக்டர். கதை பிடிக்கலேன்னா மொதல்லேயே சொல்லியிருக்கலாம்ல. அப்பதான் டைரக் ஷன் கத்துகிட்டு இருந்தார்.  என்னை பொறுத்தவரை இதயகோயில் வெற்றிப் படம்தான். ஆனா அதுக்கு மணிரத்னம் காரணமில்ல.” ன்னு கோவைத்தம்பி சொன்னார். இது மட்டுமில்ல, இன்னும் என்னவெல்லாமோ, வருத்தப்பட்டு............. வருத்தப்பட்டு சொல்லியிருந்தார்.

இன்னொருத்தன் காசுல, ஓசியில மணிரத்னம் டைரக் ஷன் கத்துகிட்டாரோ?

இது பற்றி எழுத நிறையவே இருக்கு. வேண்டாம்னு விட்டுட்டேன். 


- ரமணி, Oneindia தமிழ் & என் வழி

Heezulia  
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5861
இணைந்தது : 03/12/2017

Back to top Go down

தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 23 Empty Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia Fri Mar 16, 2018 11:23 pm

16.03.2018

“மயக்கும் மாலை பொழுதே நீ போ போ
இனிக்கும் இன்ப இரவே நீ வா வா”


இந்தப் பாட்டு  கூண்டுக்கிளி படத்துக்கு விந்தன் எழுதி கொடுத்தார். இந்தப் பாட்டை அப்டியே ராமண்ணா கக்கத்தில வச்சு ஒளிச்சு வச்சுகிட்டார்.  BS சரோஜா & சிவாஜி டூயட்டாக வைக்கலாம்னு நெனச்சாங்களாம். அப்புறமா கதைல மாற்றங்கள் செஞ்சதால, இந்தப் பாட்டை தூக்கி குலேபகாவலி படத்தில போட்டுகிட்டாராம். இதை MSV யே ஒரு பேட்டியில் சொல்லியிருக்கார்.   

- Facebook & இந்து

****************************************

75 நாள் ஓடிய மண்ணுக்குள் வைரம். கோவைத்தம்பி தயாரிச்சதுதான். இதுபத்தியும் அப்புறமா சொல்றேன்.

இது மூணாவது சொல்றேன், சொல்றேன்.

சிவாஜியை வச்சு படம் தயாரிக்கணும்னு கோவைத்தம்பியின் ஆசை. மனோஜ்குமார்னு ஒரு இளம் டைரக்டர். இவர் பாரதிராஜாவின் மைத்துனாராம். மனோஜ்ட்ட ஒரு கதை இருக்கிறதாவும், அதை படமாக தயாரிக்கணும்னும் பாரதிராஜா கோவைத்தம்பியிடம் சொன்னார். கோவையும் சரீன்னுட்டார். மனோஜ் கோவைட்ட மண்ணுக்குள் வைரம் கதை சொன்னார். கதை பிடிச்சிருந்துச்சு. சிவாஜி நடிச்சா நல்லா இருக்கும்னு கோவை feel பண்ணினார்.

அந்த சமயத்தில சிவாஜி, ஒரு தெலுங்கு படத்ல நடிக்க, ஹைதராபாத் போயிருந்தார். கோவை, ஹைதராபாத்துக்கே போயிட்டார். ஷூட்டிங் ஸ்பாட்ல, சிவாஜியை பார்த்து பேசினார். கதை சிவாஜிக்கு பிடிச்சிருந்துச்சு.

“மதர்லாண்ட் பிக்ச்சர்ஸ் படத்துக்காக நடிச்சா, எனக்கு பெருமைதான். அது சரி............., உங்க படத்தில என்னை நடிக்க வைக்கிறதை பற்றி அண்ணன் MGRட்ட சொல்லிட்டீங்களா?” ன்னு சிவாஜி கேட்டார். MGRட்ட பேசிட்டுதான் சிவாஜியை பார்க்க வந்ததாக கோவை சொன்னார். கோவை MGR ரசிகராச்சே. அதனாலதான் சிவாஜி அப்படி கேட்டார்.

மண்ணுக்குள் வைரம் [1986] படத்தில் சிவாஜிக்கு ஜோடியாக சுஜாதா நடிச்சார். தேவேந்திரன் ம்யூசிக். இவருக்கு இது முதல் படம்.

“படம் நூறு நாள் ஓடல. 75 நாளே ஓடியிருந்தாலும், இன்னிக்கி வரைக்கும் நான் சிவாஜியை வச்சு படம் எடுத்தேன்ங்கற திருப்தி எனக்கு.” கோவைத்தம்பி சொன்னார்.


- மாலை மலர்

Heezulia  மீண்டும் சந்திப்போம்  
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5861
இணைந்தது : 03/12/2017

Back to top Go down

தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 23 Empty Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by SK Sat Mar 17, 2018 11:07 am

இன்னொருத்தன் காசுல, ஓசியில மணிரத்னம் டைரக் ஷன் கத்துகிட்டாரோ

அவர் பற்றி பல தயாரிப்பாளர்கள் இப்படி தான் சொல்வார்கள் என்று கேள்வி பட்டிருக்கிறேன்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 23 Empty Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia Sat Mar 24, 2018 7:46 pm

24.03.2018

TKS நாடக சபா ‘ராஜராஜ சோழன்’ ங்கற ஒரு நாடகத்தை நடித்துச்சு. அதுல வசந்தா......... வசந்தான்னு ஒரு பொண்ணு நடிச்சுது.

ரெண்டு பொண்ணு இல்ல, ஒரே பொண்ணுதான், வசந்தா.

நடிச்சுதா? ஜோஸஃப் தளியத் நாடகங்களை தயாரிச்சு, டைரக்ட்டும் செஞ்சுட்டு இருந்தார். அவர் வசந்தாவை பார்த்தார். இந்தப் பொண்ண சினிமாவில நடிக்க வச்சா நல்லா இருக்குமேன்னு நெனச்சார். அவர் எடுத்துட்டு இருந்த ‘விளக்கேற்றியவள்’ படத்தில ஹீரோயினா போட்டுகிட்டார். இல்ல, இல்ல. அந்த படத்துக்கு ஒப்பந்தம் செஞ்சார். 


ஆனா அதே............. சமயத்தில ஜெயசங்கர் ஹீரோவா அறிமுகமான இரவும் பகலும் படம் தயாராயிட்டு இருந்துச்சு. தளியத் என்ன செஞ்சார்னா, அந்த படத்திலேயும் வசந்தாவை ஹீரோயினா நடிக்க வச்சுட்டார். இரவும் பகலும் படம் மொதல்ல ரிலீஸ் ஆகி, படம் வெற்றி.

இப்ப, இப்பன்னா இப்ப இல்ல, அப்போ இப்ப, வசந்தா பிஸியான நடிகை ஆகிட்டார். இந்த சமயத்தில பாலசந்தர் பத்தாம் பசலி படம் எடுத்துட்டு இருந்தார். அந்த படத்தில வசந்தாவை நடிக்க வச்சார். அன்னிக்கி ஷூட்டிங். வசந்தா லேட்டா வந்தார். அந்த படத்தில நடிச்சிட்டு இருந்த நாகேஷ், இயக்குனர் கோவமா இருக்கிறதா சொன்னார். ஆனா வசந்தா, இயக்குனர் பக்கத்தில போனபோ, பாலசந்தர் கோவப்படல. கோவம் இருந்துச்சு, ஆனா வசந்தாட்ட காட்டிகல. அவர் நடிக்க வேண்டிய ஸீனை விவரிச்சார். 


அந்த ஸீன் எர..................நூறு அடி நீளம். ஒரே............................. டேக்தான். வசந்தா முடிச்சு குடுத்துட்டார். நாகேஷ் கத்துறார், “நாந்தான் சொன்னேன்ல. அந்த பொண்ணு நாடகத்தில நடிச்சிட்டு இருந்தா. ஒரே டேக்ல முடிச்சுருவான்னு சொன்னேனா இல்லியா. இப்போ கோவம் போயிருச்சா?” இதை கேட்ட KB லேசா சிரிச்சுகிட்டார்.


- ரமணி

Heezulia மீண்டும் சந்திப்போம்
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5861
இணைந்தது : 03/12/2017

Back to top Go down

தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 23 Empty Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 23 of 29 Previous  1 ... 13 ... 22, 23, 24 ... 29  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum